search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பாவூர்சத்திரம்"

    • போட்டியில் மாவட்டம் முழுவதிலும் இருந்து 200-க்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர்
    • தட்சணமாற நாடார் சங்க மாநில தலைவர் ஆர்.கே.காளிதாசன் தொடங்கி வைத்தார்.

    வீ.கே.புதூர்:

    உலக சிலம்பம் விளையாட்டுச் சங்கம் சார்பில் தென்காசி மாவட்ட அளவிலான சிலம்பப் போட்டி பாவூர்சத்திரம் செயின்ட் அசிசி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. இப்போட்டியில் மாவட்டம் முழுவதிலும் இருந்து 200-க்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர்.

    தென்காசி மாவட்ட தலைவர் சத்தியசீலன் வரவேற்றுப் பேசினார். இப்போட்டியை தட்சணமாற நாடார் சங்க மாநில தலைவர் ஆர்.கே.காளிதாசன் தொடங்கி வைத்தார்.

    சுரண்டை நகராட்சி சேர்மன் வள்ளிமுருகன், சுரேஷ்,செல்வராஜ், சட்ட ஆலோசகர் ஆலங்குளத்தை சேர்ந்த சாந்தகுமார் உள்ளிட்டோரும் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர்.

    உலக சிலம்பம் விளையாட்டு சங்க நிறுவனர் மற்றும் தலைவர் டாக்டர் சுதாகரன் தலைமையேற்றார்.மேலும் கழக அமைப்பு பேச்சாளர் ராமச்சந்திரன், எம்.எம். ஜவுளிக்கடை அதிபர் முருகன் ஆகியோரும் கலந்து கொண்டனர். தென்காசி மாவட்ட செயலாளர் சுதர்சன் நன்றி கூறினார்.

    தகுதி திறன் போட்டியில் முருகேஷ், புவணிகா,கவுதமி ஆகியோரும், தொடுதிறன் போட்டியில் சிவதீபக், பாலாராமகிருஷ்ணன், அருள்ரீகன் ஆகியோரும், இரட்டை கம்பு பிரிவில் ருத்ரன், தமிழமுதன், பவித்ரன் ஆகியோரும் வெற்றி பெற்றனர்.

    வெற்றி பெற்ற அனைத்து மாணவ-மாணவிகளுக்கும் பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

    ×