search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தேர்பவனி"

    • இடைக்காட்டூரில் திருஇருதய ஆண்டவர் ஆலய தேர்பவனி திருவிழா நடந்து வருகிறது.
    • தமிழகம் மற்றும் பல்வேறு மாநிலங்களில் இருந்து ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொள்வார்கள்.

    மானாமதுரை

    சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே 140 ஆண்டுகள் பழமை வாய்ந்த இடைக்காட்டூரில் திரு இருதய ஆண்டவர் ஆலயம் உள்ளது. இங்கு 128 -ம் ஆண்டு திருஇருதய ஆண்டவர் ஆலய தேர்பவனி திருவிழா கடந்த

    23-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடந்து வருகிறது.

    தமிழக அரசால் சுற்றுலா தலமாக அறிவிக்கப்பட்ட இங்கு மாதந்தோறும் முதல் வெள்ளிக்கிழமை அன்று சிறப்பு திருப்பலி நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. இதில் தமிழகம் மற்றும் பல்வேறு மாநிலங்களில் இருந்து ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொள்வார்கள்.

    இந்த ஆலயத்தில் ஆண்டுதோறும் திருஇருதய பெருவிழா சிறப்பாக 10 நாட்கள் நடைபெறும்.

    இந்த விழாவில் சிவகங்கை, ராமநாதபுரம், மதுரை, தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த பங்குத்தந்தைகள் கலந்து கொண்டு ஏசு நாதரின் வாழ்வின் அற்புதங்களை எடுத்துரைப்பார்கள்.

    இன்று முக்கிய நிகழ்ச்சியாக திருவிழா சிறப்பு திருப்பலியும், மாலை 6மணிக்கு திருஇருதய சொரூபம் தாங்கிய திரு தேர்பவனியும் நடைபெறுகிறது. நாளை (2-ந்ேததி) நற்பவனி விழாவுடன் திருவிழா நிறைவு பெறுகிறது.

    விழாவிற்கான ஏற்பாடுகளை திருத்தல பணியாளர் இம்மானுவேல் தாசன், இடைக்காட்டூர் சமூக முன்னேற்ற சங்கம், செசல்ஸ் பேரவையினர் செய்து வருகின்றனர்.

    திருவிழாவை முன்னிட்டு மதுரை மத்திய பஸ்நிலையம், எம்ஜிஆர் பேருந்து நிலையத்தில் இருந்து இடைக்காட்டூர் ஆலயத்துக்கு சிறப்பு பஸ் வசதி செய்யப்பட்டு உள்ளது.

    தமிழகத்திலேயே ஏசுநாதர் தனது இடதுபக்க இருதயத்தை காண்பித்தப்படி உள்ள ஒரே ஆலயம் இதுதான். பிரான்ஸ் நாட்டு கட்டிட கலையான "கோதிக்'' கட்டிட கலை நுட்பத்துடன தமிழகத்தில் முதன் முதலில் கட்டப்பட்டது இந்த தேவாலயம் ஆகும்.

    • நூற்றாண்டு பழமைவாய்ந்த இந்த ஆலய தேர் திருவிழா நேற்று வெகு விமரிசையாக நடைபெற்றது.
    • அந்தோணியாரை கட்டுமரக் கப்பலில் வைத்து பக்தர்கள் ஊர்வலமாக அழைத்து சென்றனர்,

    ஊட்டி:

    நீலகிரி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற புனித அந்தோணியார் தேர் பவனி ஆண்டு தோறும் ஜூன் மாதம் நடைபெறுவது வழக்கம்.

    இந்த ஆலயம் ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்டது. நூற்றாண்டு பழமைவாய்ந்த இந்த ஆலய தேர் திருவிழா நேற்று வெகு விமரிசையாக நடைபெற்றது. காலை 6 மணிக்கு ஆங்கில வழிமுறை திருப்பலி நடைப்பெற்றது. பின்னர் மலையாள வழிமுறை திருப்பலியும், அதனை தொடர்ந்து தமிழ் வழிமுறையில் திருப்பலியும் நடைப்பெற்றது.

    பின்னர் 1000த்திற்கும் மேற்பட்டவர்கள் அன்பில் விருந்தில் கலந்து கொண்டனர். அதனை தொடர்ந்து அந்தோணியாரை கட்டுமரக் கப்பலில் வைத்து பக்தர்கள் ஊர்வலமாக அழைத்து சென்றனர்,

    குன்னூர் மவுண்ட் ரோடு வழியாக மார்கெட், பஸ் நிலையம், வி.பி. தெரு வழியாக நடைபெற்ற இந்த ஊர்வலத்தில் பாடல்கள் பாடியும், உப்புக்கல்லை இறைத்தும் பொது மக்கள் தங்கள் வேண்டுதல்களை நிறைவேற்றினர், இதனைத் தொடர்ந்து மீண்டும் அந்தோணியர் ஊர்வலம் மீண்டும் ஆலயத்தை வந்தடைந்தது. இந்த ஊர்வலத்தில் ஆயிரக்கணக்கானவர்கள் கலந்து கொண்டனர்.

    • புனிதஅந்தோணியார் தேவாலயம் அமைந்துள்ளது. இந்த ஆலயத்தின்ஆண்டுப் பெருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
    • கொடி புனிதம் செய்யப்பட்டு, கொடிமரத்தில் கொடியேற்றம் நடைபெற்றது.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம் கீழ்வேளுரை அடுத்த கோகூரில் புனிதஅந்தோணியார் தேவாலயம் அமைந்துள்ளது. இந்த ஆலயத்தின்ஆண்டுப் பெருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    முன்னதாக கொடி ஊர்வலம் தேவாலயத்தின் வளாகத்தில் இருந்து தொடங்கி, முக்கியவீதிகள் வழியாக வந்து மீண்டும் தேவாலயத்தை வந்தடை ந்தது.

    நாகை மறை மாவட்ட அதிபர் வின்சென்ட் தேவராஜ் தலைமையில் சிறப்புத் திருப்பலி செய்து வைத்தார். தொடர்ந்து கொடி புனிதம் செய்யப்பட்டு, கொடிமரத்தில் கொடியேற்றம் நடைபெற்றது.

    திரளான பக்தர்கள் பங்கேற்று வழிபாடு செய்தனர். அதனை தொடர்ந்து வாணவேடிக்கை நிகழ்ச்சி நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான மின் அலங்கார பெரிய தேர்பவனி வரும் 18-ம் தேதி நடைபெறுகிறது.

    • நாகர்கோவில் மேலத்தெரு கரை புனித அந்தோணியார் மலங்கரை கத்தோலிக்க ஆலய திருவிழா நேற்று தொடங்கி 14-ந் தேதி வரை 10 நாட்கள் நடக்கிறது.
    • திருவிழா ஏற்பாடுகளை பங்குபேரவை பெருமக்கள் செய்து வருகிறார்கள்.

    நாகர்கோவில்:

    நாகர்கோவில் மேலத்தெரு கரை புனித அந்தோணியார் மலங்கரை கத்தோலிக்க ஆலயம் புகழ்பெற்ற ஆலயம் ஆகும். இக்கோவிலில் 791 ஆண்டுகளுக்கு முந்தைய புனித அந்தோணியாரின் அழியாத தோல் (திருப்பண்டம்) வைக்கப்பட்டுள்ளது.

    இக்கோவிலின் திருவிழா நேற்று 5 ஆம் தேதி தொடங்கியது. வருகிற   முதல் நாள் நிகழ்ச்சியாக மங்கல இசை இசைக்கப்பட்டு ஜெபமாலை நடத்தப்பட்டது. பிறகு பங்குத்தந்தை அருட்தந்தை மரிய ஜான் கொடியேற்ற விழாவை தொடங்கி வைத்தார் இரவில் அன்பின் விருந்து நிகழ்ச்சி நடைபெற்றது இதில் ஏராளமான மக்கள் கலந்து கொண்டனர்.

    இன்று 2வது நாள் நிகழ்ச்சி நடக்கிறது மாலை 5 மணிக்கு புனித அந்தோனியார் நவநாள் நற்செய்திப் பெருவிழா நடைபெறுகிறது. தொடர்ந்து ஒவ்வொரு நாளும் சிறப்பு நிகழ்வுகள் நடைபெறுகின்றன. வருகிற 13-ஆம் தேதி 9வது நாள் முதல் திருவிருந்து வழங்குதல், நலத்திட்ட உதவி வழங்குதல் நடைபெறுகிறது.

    மாலை 5 மணிக்கு வாத்தியார்விளை சந்திப்பு போலீஸ் குடியிருப்பு டவுன் ரயில்வே நகர் மாதா குடியிருப்பு வழியாக தேர்பவனி நடைபெறுகிறது.

    அதன் பிறகு புனித அந்தோ னியார் நவநாள் திருப்பண்டம் முத்தம் செய்தல் நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொள்கிறார்கள்.

    14ந் தேதி 10-ம் நாள் நிகழ்ச்சியாக நாகர்கோவில் மறைமாவட்ட குருக்கள் பங்குபெறும் திருப்பலி நடைபெறுகிறது பிறகு திருக்கொடி இறக்கும் நிகழ்ச்சி தொடர்ந்து அன்பின் விருந்து வழங்கப்படுகிறது.

    திருவிழா ஏற்பாடுகளை பங்குத்தந்தை மரிய ஜாண் செயலாளர் சேவியர் பொருளாளர் தாசன் செய்தித்தொடர்பாளர் அருள் குமரேசன் மற்றும் பங்கு அருட்கன்னியர்கள் பங்குபேரவை பெருமக்கள் செய்து வருகிறார்கள்.

    ×