search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 228866"

    • விழாவில் முதல்நாள் காலை 6.30 மணிக்கு கலசபூஜை, சுத்தி கலசபூஜை
    • மாலை 5.30 மணிக்கு பஜனை, 6.45 மணிக்கு குரு அற்புத ராகவேந்திரா திருப்பாதம் ரத வீதியில் பவனி வருதல் ஆகியவை நடக்கிறது

    நாகர்கோவில் :

    நாகர்கோவில் வடிவீஸ்வரத்தில் அமைந்துள்ள குரு அற்புத ராகவேந்திரர் ஆலயத்தில் ஆராதனை விழா வருகிற 12-ந்தேதி தொடங்கி 3 நாட்கள் நடக்கிறது.

    விழாவில் முதல்நாள் காலை 6.30 மணிக்கு கலசபூஜை, சுத்தி கலசபூஜை, 8 மணிக்கு பால் குடபவனி, பால் அபிஷேகம், பஜனை, தீபாராதனை, மாலை 6 மணிக்கு பட்டிமன்றம், பிரசாதம் வழங்குதல், 13-ந்தேதி காலை 8.15 மணிக்கு அபிஷேகம், 10.30 மணிக்கு தேர் வடம் பிடித்து இழுத்தல், 11.30 மணிக்கு தீபாராதனை, தொடர்ந்து அன்னதானம், மாலை 6 மணிக்கு சமய சொற்பொழிவு, 14 ந்தேதி காலை 6 மணிக்கு கலச பூஜை, 8 மணிக்கு பஜனை, தீபாராதனை,8.30 மணிக்கு அபிஷேகம், பிரசாதம் வழங்குதல், மாலை 5.30 மணிக்கு பஜனை, 6.45 மணிக்கு குரு அற்புத ராகவேந்திரா திருப்பாதம் ரத வீதியில் பவனி வருதல் ஆகியவை நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை குரு அற்புத ராகவேந்திரா அறக்கட்டளை நிறுவனத்தலைவர் அய்யப்பன் மற்றும் நிர்வாகிகள் செய்து வருகின்றனர். 

    • பரமத்திவேலூர் பகுதிகளில் அம்மன் கோவில்களில் சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது.
    • சிறப்பு அலங்கா ரத்தில் அம்மன் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

    பரமத்தி வேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா கோப்பணம் பாளையத்தில் உள்ள பரமேஸ்வரர் ஆலயத்தில் மாசி மாத கடைசி பவுர்ணமியை முன்னிட்டு அங்காள பரமேஸ்வரி அம்மன், மாசாணி அம்மன், அரசாயி அம்மன் ஆகியோர்களுக்கு பால், தயிர் ,பன்னீர், இளநீர், சந்தானம், மஞ்சள், திருமஞ்சனம், பஞ்சாமிர்தம், விபூதி, தேன் உள்ளிட்ட பல்வேறு வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. அதனை தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது.

    பின்னர் சிறப்பு அலங்கா ரத்தில் அம்மன் பக்தர்களுக்கு காட்சியளித்தார். இதில் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்து அருள் பெற்றனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. அதேபோல் நன்செய் இடையாறு மகா மாரியம்மன், பேட்டை மகா மாரியம்மன், செல்லாண்டி அம்மன், பாண்டமங்கலம் மாரியம்மன், பகவதி அம்மன், கொந்தளம் மாரியம்மன், சேளூர் மாரியம்மன், ஆனங்கூர் மாரியம்மன், வடகரையாத்தூர் மாரியம்மன், பரமத்தி அங்காள பரமேஸ்வரி அம்மன் மற்றும் பரமத்தி வேலூர் சுற்றுவட்டார பகுதியில் உள்ள அம்மன் கோவில்களில் சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது.

    இதில் அந்தந்த பகுதி களைச் சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்து அருள் பெற்றனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

    • பரமத்தி வேலூர் சுற்றுவட்டார பகுதிகளில் சஷ்டியை முன்னிட்டு முருகன் கோவில்களில் அபிஷேக நடந்தது.
    • அதைத் தொடர்ந்து வள்ளி தெய்வானை கல்யாண சுப்பிரமணிய சுவாமி சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

    பரமத்தி வேலூர்:

    ஆனி மாத வளர்பிறை சஷ்டியினை முன்னிட்டு நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் பேட்டை பகவதி அம்மன் கோவிலில் உள்ள முருகன், பரமத்தி வேலூர் தேரடி வீதியில் உள்ள 450 ஆண்டுகள் பழமையான வல்லப விநாயகர் ஆலயத்தில் உள்ள வள்ளி தெய்வானை உடனாகிய கல்யாண சுப்பிரமணிய சுவாமிக்கு பால் ,தயிர், பன்னீர், இளநீர், சந்தனம், மஞ்சள், திருமஞ்சனம், பஞ்சாமிர்தம் ,தேன், விபூதி உள்ளிட்ட 18 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது.

    அதை தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு அலங்காரத்துடன் மகாதீப ஆராதனை காண்பிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து வள்ளி தெய்வானை கல்யாண சுப்பிரமணிய சுவாமி சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சிய ளித்தார். இதில் சுற்றுவ ட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு முருக பெருமானை தரிசனம் செய்து அருள் பெற்றனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

    அதேபோல் கோப்பணம் பாளையத்தில் உள்ள பாலமுருகன், நன்செய் இடையாறு காவிரி ஆற்றங்கரையில் உள்ள மூங்கில் வனத்து சங்கிலி கருப்பணசாமி கோவிலில் உள்ள வள்ளி தெய்வானை சமேத பாலமுருகன், திரு வேலீஸ்வரர் கோவில் உள்ள முருகன், அணிச்சம் பாளையத்தில் வேல்வடியில் உள்ள முருகன், பிலிக்கல் பாளையம் அருகே கரட்டூரில் உள்ள விஜயகிரி பழனியாண்டவர் கோவில் ,அய்யம்பாளையம் முருகன் கோவில்,ஆனங்கூர் மாரியம்மன் கோவில் உள்ள முருகன், பொத்த னூர் பச்சைமலை முருகன்,

    கபிலர்மலை பாலசுப்பிர மணியசுவாமி கோவில், பாலப்பட்டி முருகன் கோவில், மோகனூர் பாலசு ப்பிரமணிய சுவாமி கோவில், சுள்ளிப்பாளையம் அருகே அருணகிரி மலையில் உள்ள அருணகிரிநாதர் மற்றும் பரமத்தி வேலூர்

    சுற்றுவட்டார பகுதியில் உள்ள முருகன் கோவில்க ளில் ஆனி மாத வளர்பிறை சஷ்டியை முன்னிட்டு முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. இதில் அந்தந்த பகுதியை சேர்ந்த பக்தர்கள் கலந்துகொண்டு முருகப்பெருமானை தரிசனம் செய்து அருள் பெற்றனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

    • பரமத்திவேலூர் பகுதிகளில் அமாவாசையை முன்னிட்டு கோவில்களில் சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது.
    • திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா பிலிக்கல்பாளையம் அருகே கரட்டூரில் உள்ள விஜயகிரி பழனியாண்டவர் கோவிலில் ஆனி மாத அமாவாசையை முன்னிட்டு விஜயகிரிபழனி ஆண்டவருக்கு பால், தயிர், பன்னீர், இளநீர், சந்தனம், மஞ்சள், திருமஞ்சனம், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட 18 வகையான வாசனைத் திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது.

    அதனைத் தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. பின்னர் சிறப்பு அலங்காரத்தில் விஜயகிரி பழனி ஆண்டவர் பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

    இதில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு விஜயகிரி பழனி ஆண்டவர் மற்றும் பரிவார தெய்வங்களை தரிசனம் செய்து அருள் பெற்றனர். பக்தர்களுக்கு பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.

    கோப்பணம்பாளையம் பரமேஸ்வரர் ஆலயத்தில் அமாவாசையை முன்னிட்டு அங்காள பரமேஸ்வரி அம்மன், மாசாணி அம்மன், அரசாயிஅம்மன் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

    அதேபோல் நன்செய் இடையாறு காவிரி ஆற்றங்கரை இதில் உள்ள மூங்கில் வனத்து சங்கிலி கருப்பண்ணசாமி கோவில், மகா மாரியம்மன் கோவில், திருவேலீஸ்வரர் கோவில், ராஜா கோவில், பரமத்தி வேலூர் மகா மாரியம்மன் கோவில், பகவதி அம்மன் கோவில் ,செல்லாண்டி அம்மன் கோவில், பாண்டமங்கலம் பகவதி அம்மன் கோவில், மாரியம்மன் கோவில், சேளூர்மாரியம்மன் கோவில், கொந்தளம் மாரியம்மன் கோவில், ஆனங்கூர் மாரியம்மன், செல்லாண்டியம்மன் கோவில் வடகரையாத்தூர் மாரியம்மன் கோவில், பொன்னாச்சிஅம்மன் கோவில் மற்றும் பரமத்தி வேலூர் சுற்றுவட்டார பகுதியில் உள்ள கோவில்களில் ஆனி மாத அமாவாசையை முன்னிட்டு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. இதில் அந்தந்த பகுதிகளைச் சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    வைகாசி மாத பிரதோஷத்தை முன்னிட்டு பரமத்திவேலூரில் நந்தி பெருமானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் கோப்பணம்பாளையம் பரமேஸ்வரர் ஆலயத்தில் உள்ள நந்தி பெருமானுக்கு வைகாசி மாத வளர்பிறை பிரதோஷத்தை முன்னிட்டு பால், தயிர், பன்னீர், இளநீர், சந்தனம், மஞ்சள், திருமஞ்சனம், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட 18 வகையான வாசனைத் திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது.

    அதை தொடர்ந்து சுவாமி ரிஷப வாகனத்தில் கோவிலை 3 முறை வலம் வந்தார். பின்னர் பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

    இதில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு நந்திபெருமான், பரமேஸ்வரர், மாசாணியம்மன், அரசாயி அம்மன், அங்காள பரமேஸ்வரி அம்மன் மற்றும் பரிவார தெய்வங்களை தரிசனம் செய்து வழிபட்டனர்.

    பரமத்திவேலூர் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள பாண்டமங்கலம் புதிய காசி விஸ்வநாதர், நன்செய் இடையாறு திருவேலீஸ்வரர், மாவுரெட்டி பீமேஷ்வரர், பில்லூர் வீரட்டீஸ்வரர், பொத்தனூர் காசிவிஸ்வநாதர்,பேட்டை மீனாட்சி சுந்தரேஸ்வரர், மற்றும் வேலூர் எல்லையம்மன் கோவிலில் உள்ள ஏகாம்பரேஸ்வரர்கோவில், பிலிக்கல்பாளையம் அருகே கரட்டூரில் உள்ள விஜயகிரி பழனியாண்டவர் கோவிலில் உள்ள சிவன் கோவில் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள சிவன் கோவில்களில் வளர்பிறை பிரதோஷத்தை முன்னிட்டு சிவபெருமான் மற்றும் நந்திகேஷ்வரருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகளும்,சிறப்பு அலங்காரமும் நடைபெற்றது.

    இதில் அந்தந்த பகுதிகளைச் சேர்ந்த பக்தர்களும்,பொதுமக்களும் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

    • குலசேகரம் ஷீரடி சாய் கிருஷ்ணா பஜனை மண்டலியின் 8-ம் ஆண்டு தொடக்க விழா மற்றும் சிறப்பு ஆராதனை திருவிழா குலசேகரம் எஸ்.ஆர்.கே.பி.வி பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.
    • விழா ஏற்பாடுகளை ஷீரடி சாய் கிருஷ்ணா பஜனை குழுவினர் செய்து இருந்தனர்.

    கன்னியாகுமரி:

    குலசேகரம் ஷீரடி சாய் கிருஷ்ணா பஜனை மண்டலியின் 8-ம் ஆண்டு தொடக்க விழா மற்றும் சிறப்பு ஆராதனை திருவிழா குலசேகரம் எஸ்.ஆர்.கே.பி.வி பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. காலையில் 501 லிட்டர் பால் அபிஷேகமும் அதை தொடர்ந்து பஜனை, ஆரத்தி, அருளுரை, கூட்டு பிரார்த்தனை, தியானம், புஷ்பாபிஷேகம் நடந்தது.

    பாலபிஷேகம், ஆரத்தி, புஷ்பாபிஷேகம் பக்தர்கள் தங்களாகவே பாபாவிற்கு அபிஷேகம் செய்தனர், தொடர்ந்து சிறப்பு அன்ன தானம் நடந்தது தரிசன நிகழ்ச்சியில் சுவாமி பத்மேந்திரா மற்றும் ஆயிரக் கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.விழா ஏற்பாடுகளை ஷீரடி சாய் கிருஷ்ணா பஜனை குழுவினர் செய்து இருந்தனர்.

    ×