search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "என்எல்சி"

    • நிலம் கையகப்படுத்தப்பட்டால் வீட்டுக்கு ஒருவருக்கு வேலை வழங்கவேண்டும்.
    • ஏக்கருக்கு ரூ.1 கோடி இழப்பீடு வழங்க வேண்டும் என வலியுறுத்தி வந்தனர்.

    சேத்தியாதோப்பு:

    கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே வளையமாதேவி, கீழ் வளையமாதேவி, அம்மன் குப்பம், கரிவெட்டி உள்ளிட்ட பகுதியைச் சேர்ந்த விவசாய பெருங்குடிமக்கள் என்.எல்.சி. நிர்வாகம் நிலம் கையகப்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் செய்தனர்.

    அப்படியே நிலம் கையகப்படுத்தப்பட்டால் வீட்டுக்கு ஒருவருக்கு வேலை வழங்கவேண்டும். ஏக்கருக்கு ரூ.1 கோடி இழப்பீடு வழங்க வேண்டும் என வலியுறுத்தி வந்தனர். ஆனால் இதற்கு மாவட்ட நிர்வாகம் சம்மதிக்கவில்லை. இதுகுறித்து பல்வேறு கட்ட பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.

    எனினும் என்.எல்.சி. அதிகாரிகள் பாதிக்கப்பட்ட விவசாயிகளிடம் முத்தரவு பேச்சுவார்த்தை நடத்தி விவசாயிகளின் குறைகளை கேட்டு தீர்வு காண வேண்டுமென இன்று வளையமாதேவி பஸ் நிறுத்தம் அருகே விவசாயிகள் ஒன்று திரண்டு ஒரு நாள் அடையாள உண்ணாவிரத போராட்டம் நடத்தி வருகின்றனர்.

    தகவல் அறிந்த சேத்தியாத்தோப்பு போலீஸ் டி.எஸ்பி. ரூபன்குமார், இன்ஸ்பெக்டர் மைக்கேல் இருதயராஜ் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று எந்தவித அசம்பாவிதமும் ஏற்படாத வகையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் அந்த பகுதி பரபரப்பாக உள்ளது.

    • என்.எல்.சிக்காக 25 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் கையகப்படுத்தப்பட்டால், அவற்றை வாழ்வாதாரமாகக் கொண்டிருக்கும் சுமார் 17 ஆயிரம் குடும்பங்கள் பாதிக்கப்படும்.
    • கையகப்படுத்தப்படவுள்ள நிலங்கள் சாதாரணமானவை அல்ல. அவை முப்போகம் விளையக்கூடிய வளமான நிலங்கள் ஆகும்.

    சென்னை:

    பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    என்.எல்.சி நிறுவனம் அதன் முதல் சுரங்கத்தை விரிவாக்கம் செய்வதற்காக 9 கிராமங்களில் இருந்து 3 ஆயிரத்துக்கும் அதிகமான ஏக்கர் நிலங்களையும், இரண்டாவது சுரங்க விரிவாக்கத்திற்காக 25 கிராமங்களில் இருந்து 10 ஆயிரம் ஏக்கர் நிலங்களையும் கையகப்படுத்த உள்ளது.

    இவை தவிர மூன்றாவது சுரங்கத்திற்காக 26 கிராமங்களில் உள்ள 12 ஆயிரத்து 125 ஏக்கர் நிலங்களை பறிக்க உள்ளது. இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து பாட்டாளி மக்கள் கட்சியும், பொதுமக்களும் தொடர் போராட்டங்களை நடத்தி வரும் போதிலும் என்.எல்.சி நிறுவனம் அதன் முயற்சிகளை கைவிடவில்லை. கடலூர் மாவட்ட நிர்வாகத்தின் உதவியுடன் நிலங்களை கையகப்படுத்தும் பணிகளை என்.எல்.சி தீவிரப்படுத்தி வருகிறது.

    என்.எல்.சிக்காக 25 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் கையகப்படுத்தப்பட்டால், அவற்றை வாழ்வாதாரமாகக் கொண்டிருக்கும் சுமார் 17 ஆயிரம் குடும்பங்கள் பாதிக்கப்படும். கையகப்படுத்தப்படவுள்ள நிலங்கள் சாதாரணமானவை அல்ல. அவை முப்போகம் விளையக்கூடிய வளமான நிலங்கள் ஆகும்.

    ஒரு ஏக்கரில் ஆண்டுக்கு ரூ.10 லட்சம் வருவாய் ஈட்டித் தரக்கூடிய வளமான நிலங்களை நிலக்கரி சுரங்கத்திற்காகப் பறித்து விட்டு, அவற்றின் உரிமையாளர்களை சொந்த மண்ணிலேயே அகதிகளாக்க என்.எல்.சி நிறுவனமும், கடலூர் மாவட்ட நிர்வாகமும் துடிப்பதை பாட்டாளி மக்கள் கட்சி அனுமதிக்காது.

    விவசாயத்தை அழித்து, மூன்றாவது நிலக்கரி சுரங்கம் அமைப்பதற்கு எந்தத் தேவையும் இல்லை. ஏனெனில், இரண்டாவது சுரங்கம் அமைப்பதற்காக 1985-ம் ஆண்டில் கையகப்படுத்தப்பட்ட நிலங்களில் 10,000 ஏக்கர் நிலங்கள் 37 ஆண்டுகளுக்கும் மேலாக பயன்படுத்தபடவில்லை. ஆனாலும், இன்னும் 25 ஆயிரம் ஏக்கர் நிலங்களை கையகப்படுத்த என்.எல்.சி துடிப்பதற்கு பின்னால் வேறு காரணங்கள் உள்ளன. தனியாருக்கு தாரை வார்க்கப்பட உள்ள என்.எல்.சி, அதற்கு முன்பாக 25,000 ஏக்கர் விளைநிலங்களை கையகப்படுத்தி அதையும் தனியாரிடம் ஒப்படைப்பதற்கு திட்டமிட்டிருக்கிறது.

    விவசாயத்தை அழித்து, மூன்றாவது நிலக்கரி சுரங்கம் அமைப்பதற்கு எந்தத் தேவையும் இல்லை.

    கடலூர் மாவட்ட மக்களின் வாழ்வாதாரமாக திகழும் விளைநிலங்களை பறிக்கும் முயற்சியை வீழ்த்த வேண்டும். கடலூர் மாவட்டத்தின் சுற்றுச்சூழலையும், பொதுமக்களின் வாழ்வாதாரத்தையும் சீரழிக்கும் என்.எல்.சி நிறுவனம் வெளியேற வேண்டும் என்று வலியுறுத்தி நாளை ஜனவரி 7 மற்றும் நாளை மறுநாள் 8 ஆகிய தேதிகளில் கடலூர் மாவட்டத்தில் என்.எல்.சியால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் எழுச்சி நடைபயணம் மேற்கொள்ள இருக்கிறேன். நாளை காலை வானதிராயபுரத்தில் தொடங்கும் பிரச்சார எழுச்சி நடைபயணம், தென்குத்து, கங்கை கொண்டான், வடக்கு வெள்ளூர், அம்மேரி, தொப்பிலிக்குப்பம், ஆதண்டார்கொல்லை, மும்முடிச்சோழன், கத்தாழை, வளையமாதேவி வழியாக நாளை மறுநாள் ஜனவரி 8-ந்தேதி மாலை கரிவெட்டி கிராமத்தில் நிறைவடையும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • நெய்வேலி மக்களுக்கு சொந்தமான நிலங்களில் இருந்து நிலக்கரி எடுத்து பல்லாயிரம் கோடி வருவாய் ஈட்டி வரும் என்.எல்.சி, அவர்களுக்கு வேலை வழங்க மறுத்து வருகிறது.
    • நிலம் கொடுத்தவர்களுக்கு வேலை, கையகப்படுத்தப்பட்ட நிலங்களுக்கு கட்டுபடியாகும் விலை வழங்காமல் புதிதாக நிலம் எடுக்க அனுமதிக்க இயலாது

    சென்னை:

    பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    நெய்வேலி மக்களுக்கு சொந்தமான நிலங்களில் இருந்து நிலக்கரி எடுத்து பல்லாயிரம் கோடி வருவாய் ஈட்டி வரும் என்.எல்.சி, அவர்களுக்கு வேலை வழங்க மறுத்து வருகிறது.

    ஏற்கனவே நிலம் கொடுத்தவர்களுக்கு வேலை, கையகப்படுத்தப்பட்ட நிலங்களுக்கு கட்டுபடியாகும் விலை வழங்காமல் புதிதாக நிலம் எடுக்க அனுமதிக்க இயலாது. மண்ணின் மைந்தர்களின் உரிமைகளை பாதுகாக்க எத்தகைய போராட்டத்தையும் நடத்துவதற்கு பா.ம.க. தயங்காது.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • கேட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் பயிற்சி பட்டதாரி பொறியாளர்களை நியமிக்கக்கூடாது
    • பிரதமர் சாதகமான முடிவை எடுக்க வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் கேட்டுக்கொண்டார்.

    சென்னை:

    என்.எல்.சி. பணி நியமனம் தொடர்பாக பிரதமர் மோடிக்கு, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதி உள்ளார்.

    அதில், என்.எல்.சி.பயிற்சி பட்டதாரி பொறியாளர் பணிக்கான தேர்வில் தமிழக விண்ணப்பதாரர்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்றும், என்.எல்.சி. திட்டங்களுக்கு நிலம் வழங்கிய குடும்பத்தின் விண்ணப்பதாரர்களை சிறப்பு தேர்வின் மூலம் நியமிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்.

    கேட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் பயிற்சி பட்டதாரி பொறியாளர்களை நியமிக்கக்கூடாது என்று வலியுறுத்தி உள்ளார்.

    இந்த விஷயத்தில் பிரதமர் சாதகமான முடிவை எடுக்க வேண்டும் என்றும் முதல்வர் ஸ்டாலின் கேட்டுக்கொண்டார்.

    • 3 சுரங்கத்தில் ஒப்பந்த அடிப்படையில் 150- க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை செய்து வருகிறோம்.
    • நிரந்தர தொழிலாளர்கள் செய்யும் வேலையை விட நாங்கள் கூடுதலாக செய்கிறோம்.

    கடலூர்:

    கடலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இன்று திங்கட்கிழமை மக்கள் குறைதீர்ப்பு கூட்டம் கலெக்டர் அலுவலக வளாகத்தில் நடந்தது.

    இதனை தொடர்ந்து கடலூர் மாவட்ட முழுவதும் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பொதுமக்கள் தங்கள் கோரிக்கைகள் தொடர்பாக மனு அளித்து நிறைவேற்ற வேண்டுமென அதிகாரியிடம் மனு அளித்தனர்.

    இன்று காலை 20-க்கும் மேற்பட்ட பேர் திரண்டு கடலூர் கலெக்டர் அலுவலகம் முன்பு திடீரென்று தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

    அப்போது அவர்கள் கூறுகையில், நெய்வேலி என்.எல்.சி நிறுவனத்தில் 3 சுரங்கத்தில் ஒப்பந்த அடிப்படையில் 150- க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை செய்து வருகிறோம். நாங்கள் அனைவரும் என்.எல்.சி நிறுவனத்திற்கு நிலங்கள் மற்றும் குடியிருப்பு வழங்கி பாதிப்படைந்துள்ளோம்.

    இந்த நிலையில் எங்களுடைய வேலைநேரத்தை விட கூடுதலாக 2 மணி நேரம் வேலை பார்க்க சொல்கிறார்கள். அதற்கு எந்த சம்பளமும் வழங்க வில்லை. கூடுதலாக வேலை செய்ய நிர்பந்தம் விதித்து வரும் நிலையில் எங்களுக்கு சம்பள உயர்வு தரவில்லை . மேலும் நிரந்தர தொழிலாளர்கள் செய்யும் வேலையை விட நாங்கள் கூடுதலாக செய்கிறோம்.

    ஆகையால் எங்களுடைய வேலையை நிரந்தர படுத்தி சம்பளம் உயர்த்தி தர வேண்டும். இந்த விவகாரத்தில் மாவட்ட நிர்வாகம் நேரடியாக தலையிட்டு எங்கள் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என தெரிவித்தனர்.

    அப்போது போலீசார் உரிய முறையில் மனு அளித்து உங்கள் கோரிக்கைகள் தொடர்பாக நடவடிக்கை மேற்கொள்ளுங்கள் என தெரிவித்ததை தொடர்ந்து அங்கிருந்து கலைந்து சென்றனர். இதன் காரணமாக அப்பகுதியில் பரபரப்பாக காணப்பட்டது.

    ×