search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆண்டாள்"

    • 29-ந் தேதி காலை 9.30 மணி முதல் 10:30 மணிக்குள் கொடியேற்றம் நிகழ்ச்சி நடக்கிறது.
    • 3-ந்தேதி கருட சேவை நிகழ்ச்சி நடைபெறுகிறது.

    ஆண்டாள் பிறந்த புண்ணிய பூமி ஸ்ரீவில்லிபுத்தூர் ஆகும். ஆழ்வார்கள் மொத்தம் 12 பேர். அதில் விஷ்ணு சித்தர் என அழைக்கப்படும் பெரிய ஆழ்வார் மற்றும் ஆண்டாள் ஸ்ரீவில்லிபுத்தூரில் பிறந்தவர்கள். விஷ்ணு சித்தர் என அழைக்கப்படும் பெரிய ஆழ்வார் பிறந்த நட்சத்திரமான ஆனி சுவாதி உற்சவம் ஸ்ரீவில்லிபுத்தூரில் சிறப்பாக கொண்டாடப்படும். இந்த ஆண்டு இன்று (திங்கட்கிழமை) தொடங்குகிறது. தொடர்ந்து தேங்காய் தொடும் நிகழ்ச்சி, சேனைத்தலைவர் புறப்பாடு உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது.

    வருகிற 29-ந் தேதி காலை 9.30 மணி முதல் 10:30 மணிக்குள் கொடியேற்றம் நிகழ்ச்சி நடக்கிறது. தினமும் பெரியாழ்வார் வீதி உற்சவம் நடைபெறுகிறது. 3-ந் தேதி கருட சேவை நிகழ்ச்சி நடைபெறுகிறது. 7-ந்தேதி செப்பு தேரில் காலை 7 மணி முதல் 8 மணிக்குள் வீதிஉலா வரும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் தக்கார் ரவிச்சந்திரன், நிர்வாக அதிகாரி முத்துராஜா மற்றும் ஊழியர்கள் செய்து வருகின்றனர்.

    • வசந்த உற்சவம் 14-ந் தேதி வரை நடைபெறுகிறது.
    • ஆண்டாள், ரெங்கமன்னாருக்கு திருமேனியில் சந்தனம் பூசப்பட்டு மலர் ஆடை, மலர் கொண்டை அணிவிக்கப்படுகிறது.

    ஸ்ரீவில்லிபுத்தூரில் ஆண்டாள் கோவில் உள்ளது. வரலாற்று சிறப்பு மிக்க இந்த கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் வைகாசி மாதம் வசந்த உற்சவம் நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டுக்குரிய வசந்த உற்சவம் நேற்று தொடங்கியது. இந்த உற்சவம் 14-ந் தேதி வரை நடைபெறுகிறது. வசந்த உற்சவத்தை முன்னிட்டு தினமும் ஆண்டாள், ரெங்கமன்னார் மேளதாளம் முழங்க முக்கிய வீதிகள் வழியாக வந்து நாடகசாலை தெருவில் உள்ள வசந்த மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளிக்கின்றனர்.

    கோடைகாலம் என்பதால் ஆண்டாள், ரெங்கமன்னாருக்கு திருமேனியில் சந்தனம் பூசப்பட்டு மலர் ஆடை மற்றும் மலர் கொண்டை அணிவிக்கப்படுகிறது. மலர் ஆடை மற்றும் மலர் கொண்டை அணிந்து வசந்த மண்டபத்தில் காட்சி அளிக்கும் ஆண்டாள், ரெங்கமன்னாரை ஸ்ரீவில்லிபுத்தூர் மட்டுமன்றி அதன் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். வசந்த உற்சவத்திற்கான ஏற்பாடுகளை ஆண்டாள் கோவில் தக்கார் ரவிச்சந்திரன், நிர்வாக அதிகாரி முத்துராஜா, கோவில் பணியாளர்கள் ஆகியோர் செய்து வருகின்றனர்.

    ×