search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வியாபாரி"

    • 2 தனிப்படைகள் அமைத்து போலீசார் விசாரணை
    • கைரேகை நிபுணர்கள் வரவழைக்கபட்டு தடயங்களை சேகரித்தனர்.

    தக்கலை:

    தக்கலை அருகே உள்ள ஈத்தவிளையை அடுத்த செக்கடிவிளை பகுதியை சேர்ந்தவர் சோமன் (வயது55), வாழைக்காய் வியாபாரி.

    இவர் நேற்று காலை மனைவி மற்றும் மகளு டன் அருகில் உள்ள ஆலயத்திற்கு சென்றார். இதனை அறிந்த மர்ம நபர்கள் வீட்டின் பின்பக்க கதவை உடைத்து வீட்டுக்குள் புகுந்துள்ளனர்.அவர்கள் வீட்டின் பீரோ வையும் உடைத்து அதில் இருந்த 65 பவுன் தங்க நகைகள் மற்றும் ரூ.2 லட்சத்து 47 ஆயிரத்தை கொள்ளையடித்து சென்று விட்டனர்.

    ஆலயத்தில் இருந்து வீடு திரும்பிய சோமன் மற்றும் குடும்பத்தினர் நகை - பணம் கொள்ளை போனதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். பட்டப்பகலில் நடைபெற்ற இந்தக் கொள்ளை சம்பவம் அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இதுகுறித்து கொற்றி கோடு போலீஸ் நிலையத்தில் சோமன் புகார் செய்தார். போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர். கைரேகை நிபுணர்கள் வரவழைக்கபட்டு தடய ங்களை சேகரித்தனர். மோப்ப நாய் கொண்டு வரப்பட்டும் விசாரணை நடத்தப்பட்டது.

    தக்கலை போலீஸ் துணை சூப்பிரண்டு கணே சன் சம்பவ இடத்தை பார்வை யிட்டு விசாரணை நடத்தி னார். வீட்டில் யாரும் இல்லை என்பதை நோட்டமிட்ட பின்னரே கொள்ளை சம்பவம் நடைபெற்று இருப்பதால், தெரிந்த நபர்கள் யாரும் இதில் ஈடுபட்டு இருக்க லாம் என போலீசார் சந்தேகிக்கி ன்றனர்.

    இதனைத் தொடர்ந்து கொள்ளையர்களை பிடிக்க 2 தனிப்படை அமைக்கப்பட்டது. சப்-இன்ஸ்பெக்டர்கள் அருள ப்பன் மற்றும் ரசல்ராஜ் தலைமையில் அமைக்கபட்டுள்ள தனிப்படையினர் அந்தப் பகுதியில் உள்ள சி.சி.டி.வி. காட்சிகளை கைப்பற்றி ஆய்வு செய்து வருகின்றனர்.

    கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது உள்ளூர் கொள்ளையர்களா? வட மாநில கொள்ளை யர்களா? என விசாரணை நடைபெற்று வருகிறது. கொள்ளையர்கள் கேரளா தப்பி செல்ல முயற்சிக்காத வகையில் போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

    • மதுரையில் வியாபாரி வீட்டில் 11 பவுன் நகை திருடியவர் கைது செய்யப்பட்டார்.
    • மதுரை சிந்தாமணி இந்திரா காலனியை சேர்ந்தவர் ஆவார்.

    மதுரை

    மதுரை சிந்தாமணி இந்திரா காலனிைய சேர்ந்தவர் மணீஸ்வரன் (வயது 32). இவர் அதே பகுதியில் வெல்டிங்பட்டறை நடத்தி வருகிறார்.

    சம்பவத்தன்று இவரது வீட்டில் இருந்த 11 பவுன் நகை திருடுபோனது. இதுதொடர்பாக போலீசில் புகார் செய்யப்பட்டது. குற்றவாளியை கைது செய்ய போலீஸ் கமிஷனர் செந்தில்குமார் உத்தரவிட்டார்.

    அதன்பேரில் தெற்கு துணை கமிஷனர் சீனிவாச பெருமாள் மேற்பார்வை யில், தெற்குவாசல் உதவி கமிஷனர் சண்முகம் ஆலோசனையில் கீரைத்துறை இன்ஸ்பெக்டர் ஸ்டெல்லாபாய் தலை மையில் தனிப்படை அமைக்கப்பட்டது.

    போலீசார் திருடுபோன பீரோவில் பதிவான கைரேகையை வைத்து விசா ரித்தபோது மணீஸ்வரன் வெட்டிங் பட்டறையில் வேலை பார்க்கும் இந்திரா நகரை சேர்ந்த ராமச்சந்திரன் மகன் நல்லுசாமி (22) என்பவர் நகையை திருடியது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்து செய்தனர். திருட்டு நடந்த 6 மணி நேரத்தில் போலீசார் குற்ற வாளியை கைது செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • வியாபாரியை கும்பல் பழிதீர்த்ததா? போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    • 6 பேர் கொண்ட கும்பல் கண் இமைக்கும் நேரத்தில் சக்திவேலை சரமாரியாக வெட்டியது.

    மதுரை

    மதுரை மாவட்டம் திருமங்கலம் சந்தைப்பேட்டையைச் சேர்ந்தவர் குண்டார் என்ற சக்திவேல் (வயது 37). இவர் மீது பல்வேறு வழக்குகள் உள்ளன.

    கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திண்டுக்கல் மாவட்டம் அனுமந்தராயன் கோட்டையைச் சேர்ந்த ஜவுளி வியாபாரி ஸ்டீபன் என்பவர் கொடூரமாக கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான சக்திவேலை போலீசார் கைது செய்து மதுரை மத்திய சிறையில் அடைத்திருந்தனர்.

    இந்த வழக்கில் ஜாமீன் பெற்ற சக்திவேல் நேற்று காலை ஜெயிலில் இருந்து வெளியே வந்தார். மதுரையில் உள்ள சில நண்பர்களை சந்தித்து பேசிய சக்திவேல் பின்னர் மோட்டார் சைக்கிளில் திருமங்கலத்துக்கு புறப்பட்டார். செக்கானூரணி-மேலக்கால் மெயின்ரோட்டில் சென்று கொண்டிருந்தபோது திடீரென ஒரு கார் அவரை வழிமறித்தது. அதில் இருந்து பயங்கர ஆயுதங்களுடன் இயங்கிய 6 பேர் கொண்ட கும்பல் கண் இமைக்கும் நேரத்தில் சக்திவேலை சரமாரியாக வெட்டியது. இதில் ரத்த வெள்ளத்தில் சாய்ந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து தகவல் அறிந்த சமயநல்லூர் டி.எஸ்.பி. பாலசுந்தரம் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து உடலை மீட்டு விசாரணை நடத்தினர். கொலையாளிகளை பிடிக்க இன்ஸ்பெக்டர்கள் சிவபாலன் (சோழவந்தான்), சங்கர் கண்ணன் (அலங்காநல்லூர்) ஆகியோர் தலைமையில் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டது.

    ஜாமீனில் வெளிவந்த சக்திவேல், ஜவுளி வியாபாரி ஸ்டீபன் கொலைக்கு பழிக்கு பழியாக கொலை செய்யப்பட்டாரா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணையை தொடங்கினர்.

    கொலையான சக்திவேல் கடந்த 2020-ம் ஆண்டு மேல உரப்பனூரைச் சேர்ந்த பால் வியாபாரி மணிகண்டன் என்பவரையும் கொலை செய்த வழக்கில் முக்கிய குற்றவாளியாக இருந்துள்ளார். இந்த வழக்கில் ஏற்கனவே தொடர்புடைய அட்டாக் பிரகாஷ் என்ற ரவுடியை மர்ம கும்பல் கழுத்தறுத்து கொலை செய்தது. எனவே அதே கும்பல் தான் சக்திவேலையும் கொலை செய்ததா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர்.

    பழிக்கு பழியாக ரவுடி கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • ஜெய்ஹிந்துபுரத்தில் வியாபாரி, டிரைவர் வீடுகளில் நகை-பணம் திருட்டு நடந்துள்ளது.
    • ஜெய்ஹிந்த்புரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மதுரை

    ஜெய்ஹிந்த்புரம், பாரதியார் ரோடு, நேதாஜி தெருவை சேர்ந்தவர் சுகன்யா (வயது 28). இவரது கணவர் சுகந்த், அதே பகுதியில் பர்னிச்சர் கடை நடத்தி வருகிறார்.

    நேற்று காலை சுகன்யா வீட்டை பூட்டிவிட்டு வெளியே சென்றார். அப்போது மர்மநபர்கள் முன் கதவு பூட்டை உடைத்து, வீட்டுக்குள் புகுந்து, பீரோவில் இருந்த 3 பவுன் நகை, ரூ. 70 ஆயிரம் ஆகியவற்றை திருடிச்சென்று விட்டனர்.

    ஜெய்ஹிந்த்புரம், நேதாஜி தெருவை சேர்ந்தவர் மாரியப்பன் (வயது 52), ஷேர் ஆட்டோ டிரைவர். நேற்று காலை இவர் வீட்டை பூட்டிவிட்டு சவாரிக்கு புறப்பட்டுச் சென்றார். அப்போது மர்ம நபர்கள் வீடு புகுந்து பீரோவில் இருந்த 5 பவுன் தங்க நகை மற்றும் ரூ. 22 ஆயிரத்தை திருடிச்சென்று விட்டனர்.

    மேற்கண்ட இரு திருட்டு சம்பவங்கள் தொடர்பாக ஜெய்ஹிந்த்புரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பண்ருட்டி அருகே முந்திரி பயறுடன் காரில் சென்ற வியாபாரியை வழிமறித்து மர்ம கும்பல் தாக்கினார்கள்.
    • தடுக்க வந்த தவசியை தாக்கி காரையும், மோட்டார்சைக்கிளையும் ஓட்டி சென்றனர்.

    கடலூர்:

    பண்ருட்டி அருகே வீரசிங்கன்குப்பம் கிராமத்தைச்சேர்ந்தவர் கிருஷ்ணகுமார். இவரது உறவினர் தவசி. இவருக்கும் அதே பகுதியைசேர்ந்தசங்கர், சரத்குமார் என்பவருக்கும் முந்திரி பணம் கொடுக்கல்-வாங்கலில் முன்விரோதம் உள்ளது. சம்பவத்தன்று கிருஷ்ணகுமார், முத்துவேல்என்பவரிடம் 500 கிலோ முந்திரி பயறு எடைபோட்டு வாங்கிக் கொண்டு காரில்சென்று கொண்டிருந்தார். அப்போது சங்கர் வீட்டு முன்பு சென்று கொண்டிருந்த போது சங்கர், சரத்குமார், ஆனந்தகுமார்உள்ளிட்ட 6 பேர்காரை வழிமறித்து கிருஷ்ணகுமாரை உருட்டு கட்டையால் தாக்கினர். இதனை தடுக்க வந்த தவசியை தாக்கி காரையும், முந்திரி பயிரையும், தவசி ஓட்டி வந்த மோட்டார்சைக்கிளையும் ஓட்டி சென்றனர். இதுபற்றி தகவல் அறிந்ததும் முத்தாண்டிக்குப்பம் போலீஸ்சப்இன்ஸ்பெக்டர் ராஜாராமன்இதுகுறித்து வழக்குப்பதிவுசெய்து 6பேரையும் வலைவீசி தேடி வருகின்றனர்.

    தீவட்டிபட்டி அருகே மாட்டு வியாபாரி விபத்தில் பலியானார்.

    காடையாம்பட்டி:

    காடையாம்பட்டி அருகே சிங்கார ஹள்ளி பகுதியை சேர்ந்தவர் லட்சுமணன் (வயது 50). இவர் மாட்டு வியாபாரம் செய்து வந்தார். சம்பவத்தன்று இவர் தர்மபுரியில் இருந்து தீவட்டிப்பட்டி அடுத்த காருவள்ளி சனி சந்தைக்கு மாடு வாங்க காரில் வந்தார்.

    இவருடன் அதே பகுதியை சேர்ந்த 3 வியாபாரிகளும் காரில் வந்தனர். கார் தீவட்டிப்பட்டியை அடுத்த அக்ரகாரம் போலீஸ் நிலையம் எதிரில் திரும்பும் போது எதிர்பாராவிதமாக பின்னால் வந்த லாரி காரின் பின்புறத்தில் பலமாக மோதியது.

    இதில் காரில் இருந்த லட்சுமணன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் தீவட்டிப்பட்டி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஓமலூர் அரசு மருத்துமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    காரில் வந்த மற்ற 3 பேரும் லேசான காயத்துடன் உயிர் தப்பினர்.

    • இரும்பு கடை வியாபாரி நடுரோட்டில் மர்மமான முறையில் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தார்.
    • அண்ணாமலை புதூர் கிராமத்துக்கு சேர்மன் குடும்பத்துடன் சென்றிருந்தார்.

    திருமங்கலம்

    திருவள்ளூர் மாவட்டம் முகப்பேர் கிழக்கு பகுதியை சேர்ந்த சேர்மன் (வயது 48). இவர் சென்னையில் இரும்பு கடை நடத்தி வந்தார். இவரது மனைவி சரவணகாந்திமதி. இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார்.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு மனைவியின் சொந்த ஊரான தென்காசி அருகே உள்ள அண்ணாமலை புதூர் கிராமத்துக்கு சேர்மன் குடும்பத்துடன் சென்றிருந்தார். அங்கு நடந்த விழாவில் பங்கேற்று விட்டு சம்பவத்தன்று அவர் மட்டும் பஸ்சில் இரவு சென்னைக்கு புறப்பட்டார்.இந்த நிலையில் மதுரை மாவட்டம் திருமங்கலம் சுற்றுச்சாலையில் உள்ள கருவேலம்பட்டி பகுதியில் சேர்மன் ரத்த வெள்ளத்தில் நடுரோட்டில் உயிருக்கு போராடி கொண்டிருந்தார்.

    அந்த வழியாக வந்தவர்கள் அவரை மீட்டு மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

    பஸ்சில் செல்லும்போது சேர்மன் தவறி விழுந்து இறந்தாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என ஆஸ்டின்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×