என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கலெக்டர் உத்தரவு"

    • எக்ககுடி ஊராட்சியில் வரத்து கால்வாய்களை சீரமைக்க கலெக்டர் உத்தரவிட்டார்.
    • ஊராட்சிகள் தூய்மையாக இருப்பதற்கு திடக்கழிவு மேலாண்மைத் திட்டத்தை முழுமையாக பயன்படுத்த வேண்டும் என்று கலெக்டர் தெரிவித்தார்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை வட்டம், எக்ககுடி ஊராட்சியில் பாசன கண்மாயை கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    இந்த ஆய்வின்போது எக்ககுடி ஊராட்சி பொதுமக்கள் தங்கள் பகுதியில் உள்ள பாசன கண்மாய்க்கு வைகை ஆற்றில் இருந்து தண்ணீர் வரக்கூடிய கால்வாய் சேதமடைந்தும், ஆக்கிரமிப்பு களாலும் தண்ணீர் வராமல் விளை நிலங்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.

    இதையடுத்து பாசன கண்மாயை கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் புதுக்குளம், கொத்தங்குளம் பாசன கண்வாய்களுக்கு எட்டிவயல் கால்வாய் மற்றும் ரகுநாதபுரம் கால்வாய் வழியாக வைகை ஆற்றில் இருந்து இந்த பகுதிகளுக்கு பாசன பயன்பாட்டிற்கு தண்ணீர் வந்தது. தற்போது 2 கால்வாய்களும் ஆக்கிர மிப்புகள் மற்றும் சீரமைப்பு பணிகள் இல்லாமல் இருந்து வரும் நிலையை பார்வை யிட்டதுடன் உடனடியாக பொதுப்பணித்துறை மற்றும் வருவாய்த்துறை அலுவலர்கள் ஒருங்கி ணைந்து கள ஆய்வு செய்து, ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.

    பின்னர் கொத்தங்குளம், எக்ககுடி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிகளுக்கு சென்று மாணவ, மாணவி களிடம் கல்வி திறன் குறித்து ஆய்வு செய்தார். பள்ளியில் சுகாதார வளாகம் தூய்மையாக உள்ளதா? என பார்வையிட்டார்.

    தூய்மை பணியா ளர்களிடம் குழந்தைகள் பயன்பாட்டிற்குள்ள சுகாதார வளாகங்கள் தூய்மையாக இருக்கும் வகையில் தினமும் நன்றாக பராமரிக்க வேண்டும் என்று கலெக்டர் அறிவுறுத்தினார்.தொடர்ந்து எட்டிவயல் பெரிய கண்மாயின் கழுங்கு பகுதிகளை பார்வையிட்டு அங்கிருந்து தண்ணீர் செல்லும் கால்வாய் பகுதிகளை சீரமைக்க அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். எட்டிவயல் ஊராட்சியில் உள்ள கிளை நூலகத்தை பார்வையிட்டு அதிகளவு பொதுமக்கள் பயன்படுத்தும் வகையில் தேவையான புத்தகங்கள் இருப்பு வைக்க வேண்டும்.

    ஊராட்சிகளில் நாள்தோறும் சேரிக்கக் கூடிய குப்பைகளை திடக்கழிவு மேலாண்மைத் திட்டத்தில் தரம் பிரித்து அதற்கேற்ப பணிகளை மேற்கொள்ள வேண்டும். மற்ற ஊராட்சிகளில் ஆய்வின்போது திடக்கழிவு மேலாண்மைத்திட்டம் செயல்படாமல் இருப்பது கண்டறிந்தால் அந்த ஊராட்சியில் அபராதம் வசூல் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். எனவே ஊராட்சிகள் தூய்மையாக இருப்பதற்கு திடக்கழிவு மேலாண்மைத் திட்டத்தை முழுமையாக பயன்படுத்த வேண்டும் என்று கலெக்டர் தெரிவித்தார்.

    இந்த ஆய்வின்போது, பொதுப்பணித்துறை உதவி பொறியாளர் ராமர், கீழக்கரை வட்டாட்சியர் சரவணன் மற்றும் விவ சாயிகள், பொதுமக்கள் பங்கேற்றனர்.

    • மறுவாழ்வு இல்லத்தில் ஒப்படைக்க அதிகாரிகளுக்கு அறிவுரை
    • பொதுமக்கள் பாராட்டு

    திருப்பத்தூர்:

    திருப்பத்தூர் தபேல்தார் முத்துசாமி தெருவில் பல ஆண்டுக ளாக மனநலம் பாதிக்கப்பட்ட குண்டுபாய் என்ற பெண் உள்ளார். இவர் கடந்த ஒரு மாதமாக பஸ்நிலையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சாலையில் அங்கும், இங்கும் சுற்றி திரிந்து வந்தார்.

    இதனை கலெக்டர் அமர்குஷ்வாஹா அலு வலகத்திற்கு வரும்போதெல்லாம் பார்த்துள்ளார். அதைத் தொடர்ந்து நேற்று அந்தப்பெண்ணை மீட்டு மனநலம் பாதிக் கப்பட்டவர்களுக்கான மறுவாழ்வு இல்லத்தில் ஒப்படைக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

    அதன்படி நேற்று பஸ்நி லைய பகுதியில் சுற்றிதிரிந்த அந்தப்பெண்ணை மீட்டு கலெக் டர் அலுவலகத்திற்கு அழைத்து சென்றனர். அங்கு கலெக்டர் முன்னிலையில் உதவும் உள்ளங்கள் மனநலம் பாதிக்கப்பட்ட வர்களுக்கான மறுவாழ்வு இல்ல நிர்வாகி ரமேஷிடம் ஒப்ப டைத்து, அந்தப்பெண்ணுக்கு தகுந்த சிகிச்சை அளிக்க உத்தர விட்டார்.

    அப்போது கிராம நிர்வாக அலுவலர் ஜெயசூர்யா மற்றும் உதவும் உள்ளங்கள் சமூகப் பணியாளர்கள் உடன் இருந்தனர். கலெக்டரின் மனிதநேயத்தை பொதுமக்கள் பாராட்டினர்.

    • மாவட்ட அளவிலான ஆலோசனைக் குழு கூட்டம் மாவட்ட கலெக்டர் கி.சாந்தி தலைமையில் நடைபெற்றது.
    • விழிப்புணர்வு நிகழ்ச்சி மேற்கொள்ள மாவட்ட கலெக்டர் சாந்தி அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

    தருமபுரி,-

    தருமபுரி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை சார்பில் மாவட்ட அளவிலான ஆலோசனைக் குழு கூட்டம் மாவட்ட கலெக்டர் கி.சாந்தி தலைமையில் நடைபெற்றது.

    தருமபுரி மாவட்டத்தில் உணவு பாதுகாப்புத்துறையின் செயல்பாடுகள் குறித்து கலந்தாலோசிக்கப்பட்டது. ஒரு முறை பயன்படுத்திய எண்ணெய்களை அதிகளவு சேகரித்து பயோடீசலாக மாற்ற அறிவுறுத்தப்பட்டது. தடைசெய்யப்பட்ட நெகிழிப்பைகள் உபயோகம், பான்மசாலா குட்கா விற்பனை மற்றும் தரமற்ற பொருட்கள் விற்பனை ஆகியவற்றுக்கு உடனடி அபராதம் விதிக்குமாறு அறிவுறுத்தினார்.

    தருமபுரி மாவட்டத்தில் அனைத்து ஐஸ் தயாரிக்கும் கம்பெனிகளும் ஆய்வு செய்யப்பட்டு உரிமம் வழங்க அறிவுறுத்தப்பட்டது. மேலும் அசைவ உணவு தயாரிக்கும் அனைத்து உணவகங்கள் மற்றும் ஓட்டல்கள் ஆய்வு மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டது. பள்ளி மற்றும் கல்லூரிகளில் அயோடின் சார்ந்த விழிப்புணர்வு நிகழ்ச்சி மேற்கொள்ள மாவட்ட கலெக்டர் சாந்தி அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

    இக்கூட்டத்தில் மாவட்ட நியமன அலுவலர் பானுசுஜாதா, காரிமங்கலம்- பாலக்கோடு ஒன்றிய உணவு பாதுகாப்பு அலுவலர் நந்தகோபால் மற்றும் பென்னாகரம் ஒன்றிய உணவு பாதுகாப்பு அலுவலர் கந்தசாமி ஆகியோர் கலந்துகொண்டனர்.

    • விவசாயிகள் எழுப்பிய கேள்விகளுக்கு தொடர்புடைய துறை சார்ந்த அலுவலர்கள் பதில் அளித்தனர்.
    • தேவையில்லாத சான்றுகளைக் கேட்டு அவர்களை அலைக்கழிக்க கூடாது என்றார்.

    தருமபுரி,

    தருமபுரி கலெக்டர் சாந்தி தலைமையில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் விவசாயிகள் எழுப்பிய கேள்விகளுக்கு தொடர்புடைய துறை சார்ந்த அலுவலர்கள் பதில் அளித்தனர்.

    தமிழக விவசாயிகள் சங்க மாநில தலைவர் பேராசிரியர் சின்னசாமி பேசும்போது கடந்த நான்கு நாட்களாக பாலக்கோடு வட்டத்துக்கு உட்பட்ட சோமனஅள்ளி கிராமத்தில் யானை முகாமிட்டு நெல், கரும்பு, காய்கறிகள் மற்றும் விலை நிலங்களில் விவசாய பயன்பாட்டுக்காக நிறுவப்பட்டுள்ள ஆழ்துளை கிணறுகளை சேதப்படுத்தி வருவதாகவும் உடனடியாக யானையை காட்டுக்குள் விரட்ட வேண்டும் என்றும், யானைகளால் சேதமான பகுதிகளுக்கு விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்.

    கலெக்டர் சாந்தி வனத்துறை அலுவலரை அழைத்து உடனடியாக யானைகளை பிடித்து வனப்பகுதியில் விட அறிவுறுத்தினார். இதுகுறித்து பேசிய வனத்துறை அதிகாரிகள் யானைகளை விரட்டும் பணியில் 15-க்கும் மேற்பட்ட வனத்துறை ஊழியர்கள் ஈடுபட்டு வருவதாகவும் மயக்க ஊசி செலுத்தி இரண்டு யானைகளை பிடித்து காட்டுப் பகுதியில் விட சென்னையில் அனுமதி பெற்றுள்ளதாகவும், அடுத்த வாரத்திற்குள் யானைகளைப் பிடித்து வனத்துக்குள் விடுவதற்கான பணிகள் நடைபெறும் என்றும் தெரிவித்தார்.

    இதன் மூலம் கடந்த ஒரு மாதமாக பென்னாகரம் மற்றும் பாலக்கோடுகளில் அட்டகாசம் செய்யும் காட்டு யானைகளின் அட்டகாசம் நிறைவுக்கு வரவுள்ளது. சோலை கோட்டை பகுதியை சேர்ந்த விவசாயி தனது மின் இணைப்பு வேறு ஒருவர் நபரின் பெயரில் உள்ளதாகவும், கடந்த இரண்டு வருடங்களாக அலைக்கழிக்கப்பட்டு வருவதாகவும் வலியுறுத்தினார்.

    கலெக்டர் சாந்தி பேசும் போது விவசாயிகளை அலைக்கழிக்காமல் உரிய ஆவணங்களை சரி பார்த்து மின் இணைப்பு பெயர் மாற்றி வழங்க வேண்டும் என்றும் குறிப்பிட்ட காலத்திற்குள் ஆய்வு செய்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். தேவையில்லாத சான்றுகளைக் கேட்டு அவர்களை அலைக்கழிக்க கூடாது என்றார்.

    தருமபுரி மாவட்டத்தில் முதல்முறையாக விவசாயிகளிடமிருந்து கேழ்வரகு கொள்முதல் செய்வதற்கு விவசாயிகள் தமிழக அரசுக்கும், மாவட்ட நிர்வாகத்திற்கும் நன்றி தெரிவித்தனர்.

    • வளர்ச்சி திட்ட பணிகளையும் மாவட்ட கலெக்டர் கிராந்திகுமார் பாடி நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
    • ரூ.41.88 கோடி மதிப்பீட்டில் மேம்பாலம் கட்டப்பட்டு வருகின்றது.

    கோவை,

    கோவை மாவட்டம், பெரியநாயக்க ன்பாளையம் மற்றும் ஜி.என்.மில்ஸ் சந்திப்பு பகுதியில் தேசிய நெடுஞ்சாலை துறையின் மூலம் நடைபெற்று வரும் மேம்பாலப் பணியினையும் மற்றும் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளையும் மாவட்ட கலெக்டர் கிராந்திகுமார் பாடி நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

    மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகத்தின் ஆண்டு திட்டத்தின் கீழ் பெரியநாய க்கன்பாளையம் சந்திப்பு வழியாக மேம்பாலம் ரூ.115.24 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வருகின்றது. இந்த பாலம் 1,850 மீ நீளத்தில் அமைக்கப்பட்டு வருகின்றது.

    தேசிய நெடுஞ்சாலை எண் 67-ல் கட்டப்படும் நான்கு வழி மேம்பாலம் ராமகிருஷ்ணா பாலிடெக்னிக் கல்லூரியில் ஆரம்பித்து எல்.எம்.டபியூ. சந்திப்பு, பெரியநாயக்க ன்பாளையம் சந்திப்பு, வண்ணான்கோவில் சந்திப்பில் முடிகிறது. இந்த பாலத்தினால் 3 சந்திப்புகளில் போக்குவரத்து நெரிசல் குறைக்கப்படும். கோவை - மேட்டுப்பாளையம் செல்லும் வாகனங்கள் எளிதாக செல்ல முடியும். பாலத்தின் 84 சதவீதம் பணிகள் முடிவுற்று உள்ளன.

    மேலும், ஜி.என்.மில்ஸ் சந்திப்பு பகுதியில் மத்திய சாலை நிதி திட்டத்தின் கீழ் ரூ.41.88 கோடி மதிப்பீட்டில் மேம்பாலம் கட்டப்பட்டு வருகின்றது. தேசிய நெடுஞ்சாலை எண் .67 ல் கட்டப்படும் நான்கு வழி மேம்பாலம் ஜான் பாஸ்கோ சர்ச்சில் ஆரம்பித்து ஜி.என்.மில்ஸ் சந்திப்பு, கோவை வெள்ளக்கிணறு பிரிவில் முடிவடைகிறது. இந்த பாலத்தினால் மேட்டுப்பாளையம் செல்லும் சாலையில் ஜி.என்.மில்ஸ் சந்திப்பில் போக்குவரத்து நெரிசல் குறைந்து, வாகனங்கள் எளிதாக செல்ல முடியும். பாலத்தின் 75 சதவீதம் பணிகள் முடிவுற்று உள்ளன.

    பெரியநாய க்கன்பாளையம் பாலம், ஜி.என்.மில்ஸ் சந்திப்பு பாலம் ஆகிய பாலங்களின் பணிகளை விரைந்து முடித்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவர, தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும் என மாவட்ட கலெக்டர் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

    இதனை தொடர்ந்து நம்பர் 4 வீரபாண்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் பயிலும் மாணவ- மாணவியர்களின் கல்வி கற்றல் திறன் குறித்து பார்வையிட்டார்.

    மேலும், வளம் மீட்பு பூங்காவில் வேளாண் சார்ந்த கழிவு பொருட்கள் தரம் பிரிக்கும் பணியினையும், நாயக்கன்பாளையத்தில் தனியார் தோட்டத்தில் மகாத்மா காந்தி தேசிய வேலை உறுதி திட்டத்தின் கீழ் வரப்பு அமைக்கும் பணியும் மற்றும் நாயக்கன் பாளையத்தில் அமைக்கப்பட்டுள்ள கழிவு நீர் சுத்திகரிப்பு தொட்டியினையும் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

    பின்னர் பெரியநா யக்கன்பாளையம் டவுன் கூட்டுறவு நுகர் பொருள் அங்காடியில் குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்படும் உணவுப் பொருட்களின் இருப்பு மற்றும் தரம் குறித்து ஆய்வு மேற்கொண்டார். குச்சி பாளையத்தில் கரிசல் மகளிர் அங்கக வேளாண் குழுவினர் அமிர்த கரைசல், ஜீவாமிர்தம், பஞ்சகாவ்யம், மீன் அமிலம் உள்ளிட்ட இயற்கை உரங்களை தானாகவே தயாரித்து வருகின்றனர்.

    இயற்கை வேளாண்மை ஊக்குவிக்கும் விதமாக மாநில வேளாண்மை வளர்ச்சி திட்டத்தின் கீழ் இயற்கை இடுபொருள் உற்பத்தி மையம் அமைக்க ரூ.1 லட்சம் வழங்கப்படுகின்றது. மேலும் இப்பகுதியிலுள்ள பயிரிட்டுள்ள தென்னை, பாக்கு, வாழை, வெண்டை, கத்திரி, தக்காளி, முள்ளங்கி, மிளகாய் உள்ளிட்ட சாகுபடிகளை பார்வையிட்டார்.

    இந்த ஆய்வின் போது தேசிய நெடுஞ்சாலை, கோட்டப்பொறியாளர் ரமேஷ், உதவி கோட்டப்பொறியாளர் முரளிகுமார், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(வேளாண்மை) எம்.சபி அகமது உள்பட வட்டார வளர்ச்சி அலுவலர்கள், உடனிருந்தனர்.

    • கிருஷ்ணகிரி தலைமையிடத்து துணை தாசில்தாராகவும் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
    • மாவட்ட கலெக்டர் அலுவலக தலைமை உதவியாளராகவும் (ஜே பிரிவு) நியமிக்கப்பட்டுள்ளனர்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்ட வருவாய் அலகில் துணை தாசில்தார் நிலையில் உள்ள 23 துணை தாசில்தார்கள் பணியிடமாற்றம் செய்து கலெக்டர் தீபக் ஜேக்கப் உத்தரவிட்டுள்ளார்.

    அதன்படி, பர்கூர் துணை தாசில்தார் (தேர்தல்) செல்வராஜ், பர்கூர் வட்ட வழங்கல் அலுவலராகவும், பர்கூர் வட்ட வழங்கல் அலுவலர் அல்லா பகஷ் பாஷா, கிருஷ்ணகிரி கலெக்டர் அலுவலகம், தலைமை உதவியாளர் (க்யூ பிரிவு), கூடுதல் பொறுப்பு (தலைமை உதவியாளர் ஜி பிரிவு) ஆகவும், அஞ்செட்டி துணை தாசில்தார் (தேர்தல்) கணேசன், மாவட்ட கலெக்டர் அலுவலக தலைமை உதவியாளராகவும் (ஜே பிரிவு) நியமிக்கப்பட்டுள்ளனர்.

    போச்சம்பள்ளி வட்ட வழங்கல் அலுவலர் அண்ணாதுரை, மாவட்ட கலெக்டர் அலுவலகம் தலைமை உதவியாளராகவும் (சுத்த நகல் பிரிவு), ஓசூர் துணை தாசில்தார் -2 செட்டில்மெண்ட் பிரிவு சுபாஷினி, தேன்கனிக்கோட்டை துணை தாசில்தாராகவும் (தேர்தல்), தேன்கனிக்கோட்டை வட்ட வழங்கல் அலுவலர் சக்திவேல், கிருஷ்ணகிரி துணை தாசில்தாராகவும் (முத்திரைத்தாள்), ஊத்தங்கரை தலைமையிடத்து துணை தாசில்தார் ஜெயராமன், ஊத்தங்கரை மண்டல துணை தாசில்தாராகவும் -2 (சிங்காரப்பேட்டை, சாமல்பட்டி) நியமிக்கப்பட்டுள்ளனர்.

    மேலும் போச்சம்பள்ளி துணை தாசில்தார் (தேர்தல்) முருகன், கிருஷ்ணகிரி கலெக்டர் அலுவலக தலைமை உதவியாளராகவும் (ஐ பிரிவு) பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதே போல், மாவட்ட கலெக்டர் அலுவலகம் தலைமை உதவியாளர் (சுத்த நகல் பிரிவு) அமுதா, மாவட்ட கலெக்டர் அலுவலக துணை தாசில்தாராகவும் (தேர்தல்), மாவட்ட கலெக்டர் அலுவலக துணை தாசில்தார் (கனிமம்) சுரேந்திரன், போச்சம்பள்ளி வட்ட வழங்கல் அலுவலராகவும், கிருஷ்ணகிரி தலைமையிடத்து துணை தாசில்தார் விஜயன், மாவட்ட கலெக்டர் அலுவலக துணை தாசில்தாராகவும் (கனிமம்), ஓசூர் துணை தாசில்தார் வெற்றிவேல், ஓசூர் துணை தாசில்தாராகவம் (தேர்தல்), மாவட்ட கலெக்டர் அலுவலக தலைமை உதவியாளர் இ பிரிவு பாரதி, போச்சம்பள்ளி துணை தாசில்தாராகவும் (தேர்தல்), மாவட்ட கலெக்டர் அலுவலக தலைமை உதவியாளர் (ஐ பிரிவு) சகாதேவன், போச்சம்பள்ளி தலைமையிடத்து துணை தாசில்தாரகவும், மாவட்ட கலெக்டர் அலுவலக தலைமை உதவியாளர் பி பிரிவு ஜெயபால், ஊத்தங்கரை தலைமையிடத்து துணை தாசில்தாராகவும், அஞ்செட்டி மண்டல துணை தாசில்தார் சந்திரன், கிருஷ்ணகிரி தலைமையிடத்து துணை தாசில்தாராகவும் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

    மேலும், கலெக்டர் அலுவலக துணை தாசில்தார் (தேர்தல்) மணிகண்டன், அஞ்செட்டி துணை தாசில்தாராகவும் (தேர்தல்), போச்சம்பள்ளி தலைமையிடத்து துணை தாசில்தார் சீனிவாசன், பர்கூர் துணை தாசில்தாராகவும் (தேர்தல்), சூளகிரி தலைமையிடத்து துணை தாசில்தார் சகுந்தலா, கலெக்டர் அலுவலக தலைமை உதவியாளராகவும் (இ பிரிவு), சூளகிரி துணை தாசில்தார் (தேர்தல்) அருள்மொழி, சூளகிரி தலைமையிடத்து தாசில்தாராகவும், தேன்கனிக்கோட்டை மண்டல துணை தாசில்தார் ராஜாக்கண்ணு, தேன்கனிக்கோட்டை வட்ட வழங்கல் அலுவலராகவும், கலெக்டர் அலுவலக தலைமை உதவியாளர் (ஆர் பிரிவு) அரவிந்த், கலெக்டர் அலுவலக துலைமை உதவியாளராகவும் ( பி பிரிவு), ஓசூர் துணை தாசில்தார் -1 செட்டில்மெண்ட் ஆனந்த், ஓசூர் துணை தாசில்தார் -2 செட்டில்மெண்ட் ஆகவும் பணியிட மாற்றம் செய்து உத்தரவிடப்பட்டுள்ளார்.

    • கடலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு டாஸ்மாக் கடைகள், அரசு மதுபானக்கூடங்கள், பார்கள் மூடப்பட வேண்டும்.
    • டாஸ்மாக் கடை உரிமையாளர்கள் மீது கடுமையான குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

    கடலூர்:

    கடலூர் கலெக்டர் பாலசுப்ரமணியம் விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது - 

    மே தினத்தை முன்னிட்டு ஒரு நாள், கடலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு டாஸ்மாக் கடைகள், அரசு மதுபானக்கூடங்கள், பார்கள் மூடப்பட வேண்டும். மே 1-ந் தேதி (திங்கட்கிழமை ) மதுபானக் கடைகளை திறந்து மதுபானங்கள் விற்றாலோ, அரசு மதுபானக்கூடங்கள் மற்றும் மதுபானக்கூடங்களில் மதுபானங்கள் விற்றாலோ சம்பந்தப்பட்ட டாஸ்மாக் கடை மேற்பார்வையாளர்கள் மற்றும் உரிமையாளர்கள் மீது கடுமையான குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 

    • (மே 1ம் தேதி) மதுபானம் விற்பனை இல்லா தினமாக கடைபிடிக்கப்படுகிறது.
    • மதுக்கூடங்களுக்கான உரிமம் பெற்றுள்ள அரசு மற்றும் தனியார் ஓட்டல்கள் அனைத்தும் நாளை மூடப்படும்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மே தினத்தையொட்டி நாளை (1ம் தேதி) திங்கட்கிழமை மதுபானக் கடைகள் மூடப்படும் என கலெக்டர் தீபக் ஜேக்கப் உத்தரவிட்டுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

    தமிழ்நாடு மதுபான சில்லரை விற்பனை விதிகள் 2003&12வது விதியின் படி, உலக தொழிலாளர் தினமான மே தினத்தையொட்டி நாளை (மே 1ம் தேதி) மதுபானம் விற்பனை இல்லா தினமாக கடைபிடிக்கப்படுகிறது. எனவே, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள அரசு மதுபான சில்லரை விற்பனைக் கடைகள், மதுக்கூடங்கள் மற்றும் மதுக்கூடங்களுக்கான உரிமம் பெற்றுள்ள அரசு மற்றும் தனியார் ஓட்டல்கள் அனைத்தும் நாளை மூடப்படும். இந்த உத்தரவை மீறி விற்பனையாளர்கள் மதுக்கடைகளை திறந்தாலும், விற்றாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு தனது செய்திக்குறிப்பில் கலெக்டர் தீபக் ஜேக்கப் தெரிவித்துள்ளார். 

    • நரிக்குடி ஊராட்சி ஒன்றியத்தில் வளர்ச்சி திட்டப்பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.
    • கலெக்டர் நேரில் பார்வையிட்டார்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டம் திருச்சுழி தாலுகா நரிக்குடி ஊராட்சி பகுதியில் மாவட்ட கலெக்டர் ஜெயசீலன் அதிரடி ஆய்வு மேற் கொண்டார்.

    இலுப்பையூர், அகத்தாகுளம், பூமாலை ப்பட்டி, மறையூர் ஆகிய பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்டப்பணிகளை கலெக்டர் ஆய்வு செய்தார். தொடர்ந்து பனைக்குடியில் பிரதம மந்திரியின் வீடு கட்டும் திட்டம் மற்றும் அய்யனார் கோவில் ஊரணி ஆழப்படுத்தும் பணிகளையும் கலெக்டர் நேரில் பார்வையிட்டார்.

    இசலி ஊராட்சியில் மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தின் கீழ் கட்டப்பட்டு வரும் புதிய ஊராட்சி மன்ற அலுவலகம், நிர்வாக அலுவலக கட்டிடம் மற்றும் புதிதாக கட்டப்படும் அங்கன்வாடி நிலைய கட்டிடத்தையும் கலெக்டர் ஆய்வு செய்தார்.

    இவ்வாறு நரிக்குடி ஊராட்சியில் ரூ.3 கோடி மதிப்பில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகளையும் ஆய்வு செய்த கலெக்டர் அதனை விரைந்து முடித்து அதனை மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வருமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

    • திருவாடானை யூனியனில் வளர்ச்சி திட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன.
    • உரிய காலத்திற்குள் முடிக்கக்கோரி அலுவலர்களுக்கு, கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை ஊராட்சி ஒன்றியத்தில் ஊரக வளர்ச்சித்துறையின் மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி திட்டப்பணிகளை கலெக்டர் விஷ்ணுசந்திரன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    திருவாடனை யூனியன் பெரியகீரமங்கலம் ஊராட்சியில் கிராம சாலை சீரமைக்கும் திட்டத்தில் ரூ.7.98 லட்சம் மதிப்பீட்டில் தார்சாலை அமைக்கும் பணி நடைபெற்றதை பார்வையிட்டு சாலையின் இருபுறமும் மழைக் காலங்களில் மண்அரிப்பு ஏற்படாத வகையில் பக்கவாட்டு பகுதிகள் உறுதி தன்மையுடன் இருக்கும் வகையில் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

    அதே பகுதியில் பசுமை வீடு திட்டத்தில் பயனாளி ரூ.1.70லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட வீட்டை பார்வையிட்டு உரிய காலத்திற்குள் பணிகளை முடிக்க அறிவுறுத்தினார்.

    கல்லூர் ஊராட்சி பாரதிநகர் பகுதியில் ரூ.10லட்சம் மதிப்பீட்டில் மழைநீர் வடிகால் கட்டப்பட்டு வருவதை பார்வையிட்ட கலெக்டர், பொதுமக்களின் பயன்பாட்டிற்கேற்ப பணிகளை மேற்கொள்வதுடன் மழைக்காலங்களில் குடியிருப்பு பகுதிகளில் தண்ணீர் தேங்காமல் கால்வாய்களில் செல்லும் வகையில் பணியை உரிய முறையில் அமைக்க வேண்டும் என அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

    அதே பகுதியில் தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் மூலம் ரூ.14.23லட்சம் மதிப்பீட்டில் ஊரணி சீரமைத்து கரைகள் பலப்படுத்தும் பணியை பார்வையிட்டார். அரும்பூர் மற்றும் பாண்டுகுடி ஊராட்சிகளில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிகளில் தலா ரூ.57.55 லட்சம் மதிப்பீட்டில் 2 கூடுதல் வகுப்பறை கட்டிடங்கள் கட்டப்பட்டு வருவதை பார்வையிட்டு வரும் கல்வியாண்டில் மாணவர்களின் பயன்பாட்டிற்கு பயன்படுத்த ஏதுவாக பணிகளை மேற்கொள்ள வேண்டுமென அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

    அதே பகுதியில் ரூ.9.85லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள அங்கன்வாடி மையம் கட்டிடத்தையும் கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு செய்தார். தளிர்மருங்கூர் ஊராட்சியில் தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் மூலம் ரூ.3.24 லட்சம் மதிப்பீட்டில் பசுமை குடில் அமைத்து மரக்கன்றுகள் வளர்க்கப்பட்டு வருவதை பார்வையிட்டு அதிகளவு கிராம பகுதிகளில் மரங்கள் வளர்த்து பாதுகாத்திட வேண்டும் என கலெக்டர் விஷ்ணு சந்திரன் தெரிவித்தார்.

    இந்த ஆய்வில் உதவி ஆட்சியர் (பயிற்சி) நாராயண சர்மா, வட்டாட்சியர் கார்த்திகேயன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ராஜேஸ்வரி, ராஜேந்திரன், பொறியாளர்கள் பாலகுமார், திலீப்குமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • ரூ.2 கோடி மதிப்பில் ஒருங்கினைந்த வேளாண்மை விரிவாக்க அலுவலகம் கட்டப்பட்டது.
    • 3 ஆண்டுகளாக அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை.

     சூளகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி தாலுகா, ஒசூர் கிருஷ்ணகிரி சாலையில் வட்டார வளர்ச்சி அலுவலக வளாகத்தில் வேளாண் அலுவலகம் இயங்கி வந்தது.

    அங்கு போதுமான வசதிகள் இல்லாததால் சூளகிரி உத்தனப்பள்ளி சாலையில் 3 ஆண்டுகளுக்கு முன்பாக கடந்த அ.தி.மு.க ஆட்சியில் அரசுக்கு சொந்தமான நிலத்தில் 7 அடி ஆழ பள்ளத்தில் ரூ.2 கோடி மதிப்பில் ஒருங்கினைந்த வேளாண்மை விரிவாக்க அலுவலகம் கட்டப்பட்டது.

    இந்நிலையில் வேளாண் அலுவலகம் தாழ்வான பகுதியில் கட்டபட்டதால் சூளகிரி, மருதான்டப்பள்ளி, தியாகரனபள்ளி ஆகிய ஊராட்சியில் இருந்து வெளியாகும் கழிவு நீர் செல்வதற்கு வழியில்லாமல் வேளாண்மை அலுவலக வளாகத்தல் தேங்கி நிற்கிறது.

    இந்நிலையில் கடந்த 3 ஆண்டுகளாக அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை. இதனால் அப்பகுதியில் புட்கள் வளர்ந்து அசுத்தமடைந்து காணப்படுகிறது.

    தற்போது கட்டிடம் கழிவு நீர்க்குள் அமைந்து உள்ளதால் விதை கிடங்கில் கழிவு நீர் மழை நீர் புகுந்து சேதமாகும் நிலை ஏற்பட்டு உள்ளது.

    இது குறித்து கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் சரயு பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் கழிவு நீர் செல்ல புதிய சிமெண்ட் கால்வாயை கட்ட அதிரடியாக உத்தரவு வழங்கினார்.

    இந்த ஆய்வின் போது தோட்டகலை இயக்குனர் பூபதி, தாசில்தார் பண்ணீர் செல்வி, வேளான்மை பொறியாளர் மாது, தோட்டகலை உதவி இயக்குனர் சிவசங்கரி, வேளான் உதவி இயக்குனர் ஜான்லுது சேவியர் பி,டி, ஒ,க்கள் சிவக்குமார், கோபா லகிருஷ்ணன், சூளகிரி ஒன்றிய பொறியாளர்கள் சுமதி, சியாமலா சூளகிரி வருவாய் அலுவலர் ரமேஷ், கிராம அலுவலர் அகிழன் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    • நாட்டு நலப்பணித் திட்டம் சார்பாக, சர்வசே பிளாஸ்டிக் ஒழிப்பு தினம் நடைபெற்றது.
    • பிளாஸ்டிக் பையை பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகளையும், துணிப்பை பயன்படுத்துவதன் முக்கியத்துவத்தையும் எடுத்து ரைத்தார்.

    புதுச்சேரி:

    காரைக்காலில் மாணவர் களுக்கான மத்திய சமையல் கூடத்தை, மிகவும் தூய்மையாக பராமரிக்கவேண்டும். என, மாவட்ட கலெக்டர் குலோத் துங்கன் உத்தரவிட்டுள்ளார். காரைக்கால் அரசு மேல் நிலைப் பள்ளியில், நாட்டு நலப்பணித் திட்டம் சார்பாக, சர்வசே பிளாஸ்டிக் ஒழிப்பு தினம் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு, காரைக்கால் மாவட்ட கலெக்டர் குலோத் துங்கன் தலைமை தாங்கினார். துணை கலெக்டர் பாஸ்கரன், மாவட்ட கல்வித்துறை துணை இயக்குனர் ராஜேஸ்வரி, பள்ளி துணை முதல்வர் ஜெயா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    கலெக்டர் குலோத்துங்கன் பேசுகையில், பிளாஸ்டிக் பையை பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகளையும், துணிப்பை பயன்படுத்துவதன் முக்கியத்துவத்தையும் எடுத்து ரைத்தார். மேலும் பள்ளி மாணவர்கள் பிளாஸ்டிக் பைகளை அறவே ஒதுக்கிவிட்டு, துணிப்பையை பயன்படுத்த வேண்டும். உங்களுடைய பெற்றோர்களுக்கும், உங்கள் நண்பர்களுக்கும் நீங்கள் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்றார். தொடர்ந்து, கலெக்டர் தலைமையில், மாணவர்கள் அனைவரும் பிளாஸ்டிக் பையை பயன்படுத்த மாட்டோம் என்று உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். மாணவர்கள் அனைவருக்கும் துணிப்பை களை கலெக்டர் வழங்கினார். முடிவில் உடற்கல்வி ஆசிரி யரும் பள்ளி நாட்டு நலப் பணித் திட்ட அலுவலருமான விசுவேஸ்வரமூர்த்தி நன்றி கூறினார்.

    மேலும் பள்ளி அருகில் உள்ள, மாணவர்களுக்கான மத்திய சமையல் கூடத்தை, கலெக்டர் குலோத்துங்கன் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது, மாணவர்களுக்கு சமைக்கும் இடங்களை பார்வை யிட்ட கலெக்டர், அங்குள்ள அரிசி, மளிகை, காய்கறி பொருட்களின் தரத்தை ஆய்வு செய்தார். பின்னர், மாண வர்களுக்கான மத்திய சமையல் கூடத்தை, தூய்மையாக பரா மரிக்கவேண்டும். தினசரி சரியான நேரத்தில், சரியான எடையுடன் காய்கறிகள், மளிகை பொருட்கள் வருகிறதா என்பதை சரிபார்க்கவேண்டும். மாணவர்களுக்கு சுத்தமான உணவை, சத்தாக சமைத்து வழங்கவேண்டும். மேலும் சமைத்த உணவுகளை வண்டி யில் ஏற்றி பள்ளிகளுக்கு எடுத்து செல்லும் போது, சுத்த மாக மூடி எடுத்துச் செல்ல வேண்டும் என்றார். இந்நிகழ்வில் மேல்நிலைக் கல்வி துணை இயக்குனர் ராஜேஸ்வரி, முதன்மை கல்வி அதிகாரி ராஜசேகரன் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.

    ×