என் மலர்
நீங்கள் தேடியது "குடும்ப அட்டை"
- 2023-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் புதிய குடும்ப அட்டை கோரி விண்ணப்பித்தவர்களுக்கு ஓராண்டாகியும் இன்னும் வழங்கப்படவில்லை.
- உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை தேவையற்ற காலதாமதம் செய்வது கண்டிக்கத்தக்கது.
தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் 2023-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் புதிய குடும்ப அட்டை கோரி விண்ணப்பித்தவர்களுக்கு ஓராண்டாகியும் இன்னும் வழங்கப்படவில்லை. குடும்ப அட்டை மிக மிக அவசியமானது என்பது மட்டுமின்றி, அது தான் அரசின் நலத்திட்ட உதவிகளை வழங்குவதற்கான அடிப்படை ஆவணம் ஆகும். அத்தகைய அத்தியாவசிய ஆவணத்தை பொது மக்களுக்கு வழங்குவதில் உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை தேவையற்ற காலதாமதம் செய்வது கண்டிக்கத்தக்கது.
குடும்பத் தலைவிகளுக்கான மாத உரிமைத் தொகைக்கு அதிக எண்ணிக்கையிலானவர்கள் விண்ணப்பம் செய்வதை தவிர்க்கவே புதிய குடும்ப அட்டைகள் வினியோகத்தை தமிழக அரசு தாமதிப்பதாகக் கூறப்படுகிறது. அது தான் உண்மை என்றால் தமிழக அரசின் அணுகுமுறை தவறானது. குடும்ப அட்டைகள் அனைவரின் உரிமை. அதை அரசு மறுக்கக் கூடாது. எனவே, புதிய குடும்ப அட்டைகளுக்காக விண்ணப்பித்த அனைவருக்கும் உடனடியாக புதிய மின்னணு குடும்ப அட்டைகளை வழங்க தமிழக அரசு முன்வர வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- குடும்பத்தலைவிக்கு மாதம் ரூ. 1000-ம் வழங்கும் திட்டம் கடந்த செப்டம்பர் 15-ந் தேதி தொடங்கப்பட்டது.
- குடும்ப அட்டை விண்ணப்பித்து 4 மாதங்களாகியும் கிடைக்காமல் இருப்பதாக புகார்கள் எழுந்துள்ளன.
திருப்பூர்:
கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தால் தமிழ்நாடு முழுவதும் புதிய குடும்ப அட்டைகள் அச்சிடும் பணி கடந்த 4 மாதங்களாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் குடும்பத்தலைவிக்கு மாதம் ரூ. 1000-ம் வழங்கும் திட்டத்தை கடந்த செப்டம்பர் 15-ந் தேதி அண்ணா பிறந்தநாளன்று, தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
இதில் தமிழ்நாடு முழுவதும் ஒரு கோடி பெண்களுக்கு மேல் இந்த உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளது. தற்போது இந்த திட்டத்தில் பலரும் பயன்பெறவே புதியதாக குடும்ப அட்டைகளை பலரும் விண்ணப்பிக்க தொடங்கி உள்ளதாகவும், அதேசமயம் உரிய தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்களுக்கும், குடும்ப அட்டை விண்ணப்பித்து 4 மாதங்களாகியும் கிடைக்காமல் இருப்பதாக புகார்கள் எழுந்துள்ளன.
இதுகுறித்து வட்ட வழங்கல்துறை அலுவலர்களிடம் கேட்டபோது அவர்கள் கூறியதாவது: -
கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டப்பணிகள் கடந்த ஜூலை மாதம் தொடங்கப்பட்டன. அப்போது தொடங்கி தற்போது அக்டோபர் மாதம் வரை புதிய குடும்ப அட்டைகள் யாருக்கும் வழங்கப்படவில்லை. ஒவ்வொரு மாவட்டத்திலும் புதிய குடும்ப அட்டைக்கு பல ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளனர். கடந்த 4 மாதங்களாக குடும்ப அட்டை அச்சிடப்படவில்லை.
கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்துக்கு பலர் இனி வரும் நாட்களில் விண்ணப்பிக்க இருப்பதால், ஒரே கதவு எண்ணில் பலர் புதியதாக விண்ணப்பிப்பதையும் பார்க்க முடிகிறது. ஆனாலும் உரிய விசாரணைகள் முடிந்த பின்னர்தான், உரியவர்களுக்கு குடும்ப அட்டைகள் வழங்க இயலும். ஒவ்வொரு மாவட்டத்திலும் சுமார் 1500 முதல் 2000 குடும்ப அட்டைகள் புதியதாக விண்ணப்பித்து காத்துக்கொண்டிருக்கின்றனர்.
சென்னையில் இது பல மடங்கு அதிகமாக இருக்கும். கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் தொடங்கப்பட்ட நிலையில், தற்போது கடந்த ஒரு வார காலமாக தான் பெயர் மாற்றம், முகவரி மாற்றம் ஆகிய பணிகளை தொடங்கி வழங்கி வருகிறோம். இன்னும் புதிய குடும்ப அட்டை அச்சிட்டு வழங்கும் பணி தொடங்கவில்லை. தமிழ்நாடு முழுவதும் இது நிலுவையில் இருப்பதால், விரைவில் அரசு இது தொடர்பாக தெளிவான முடிவை அறிவிக்கும் என எதிர்பார்க்கிறோம்". இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
- உச்சநீதிமன்ற உத்தரவின்படி குடும்ப அட்டை இல்லாத பதிவு செய்த புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கு குடும்ப அட்டை வழங்கிட தெரிவிக்கப்பட்டுள்ளன.
- புலம் பெயர்ந்த தொழிலாளர்களில் இ-ஷ்ராம் போர்டலில் பதிவு செய்துள்ள நபர்களில் சிலர் நீண்ட காலமாக குடும்பத்துடன் நிரந்தரமாக வசித்து வருகிறார்கள்.
நாமக்கல்:
நாமக்கல் மாவட்ட கலெக்டர் டாக்டர் உமா வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்ப தாவது:-
உச்சநீதிமன்ற உத்தரவின்படி குடும்ப அட்டை இல்லாத பதிவு செய்த புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கு குடும்ப அட்டை வழங்கிட தெரிவிக்கப்பட்டுள்ளன.
அதன் அடிப்படையில், நாமக்கல் மாவட்டத்தில் அனைத்து வட்டங்களிலும் பல்வேறு மாநிலங்களில் இருந்து வந்த புலம் பெயர்ந்த தொழிலாளர்களில் இ-ஷ்ராம் போர்டலில் பதிவு செய்துள்ள நபர்களில் சிலர் நீண்ட காலமாக குடும்பத்துடன் நிரந்தரமாக வசித்து வருகிறார்கள்.
ஒரே குடும்பத்தில் உள்ள ஒரு சிலர் இங்கேயும் தான் சார்ந்த மாநிலத்திலும் ஒரு சிலர் வசித்து வருகிறார்கள். இதில் நீண்ட காலமாக தமிழ்நாட்டில் குடும்பத்துடன் வசித்து வரும் இ-ஷ்ராம் போர்டலில் பதிவு செய்துள்ள புலம் பெயர்ந்த தொழிலாளர்களில் எந்த மாநிலத்திலும் குடும்ப அட்டை இல்லாதவர்களுக்கு தகுதியின் அடிப்படையில் குடும்ப அட்டை வழங்கிடவும், தற்காலிகமாக பணிபுரிந்து கொண்டிருப்பவர்களுக்கு அவர்களது விவரங்களை முழுமையாகப் பெற்று அவர்களுக்கு குடும்ப அட்டை வழங்கிட அவர் சார்ந்த மாநிலத்திற்கு அனுப்பி வைக்க தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே இ-ஷ்ராம் போர்டலில் பதிவு செய்துள்ள புலம் பெயர்ந்த தொழிலாளர்களில் நீண்ட காலமாக தமிழ்நாட்டில் வசித்து வருபவர்கள் உரிய படிவத்தினைப் பூர்த்தி செய்து தொடர்புடைய தாசில்தார் அலுவலகங்களில் இயங்கி வரும் வட்ட வழங்கல் அலுவலகங்களில் சமர்ப்பிக்கலாம்.
இவ்வாறு அவர் அதில் தெரிவித்துள்ளார்.
- புதிய குடும்ப அட்டை பெறும் பொருட்டு eShram என்ற இணையத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம்.
- மனுதாரர் உரிய படிவத்தில் பூர்த்தி செய்து தொடர்புடைய வட்ட வழங்கல் அலுவலகத்தில் அளிக்கலாம்.
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி மோகன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-
வெளி மாநிலங்களில் இருந்து நிரந்தரமாக தமிழ் நாட்டிற்கு புலம் பெயர்ந்த தொழிலாளர்களில் வேறு எந்த மாநிலத்திலும் குடும்ப அட்டை இல்லாதவர்கள்.
புதிய குடும்ப அட்டை பெறும் பொருட்டு eShram என்ற இணையத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம் என்றும், மேலும் மனுதாரர் உரிய படிவத்தில் பூர்த்தி செய்து சம்பந்தப்பட்ட வட்ட வழங்கல் அலுவலகத்தில் அளிக்கவும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
அதன் அடிப்படையில் சம்பந்தப்பட்ட வட்ட வழங்கல் அலுவலரால் மேற்கண்ட மனுக்களின் மீது விசாரணை செய்து நிரந்தரமாக தமிழ்நாட்டில் தங்கியுள்ளவர்களுக்கு புதிய குடும்ப அட்டை வழங்கப்படும்.
தற்காலிகமாகவோ அல்லது குறுகிய காலத்திற்கு புலம் பெயர்ந்து அவர்களது சொந்த மாநிலத்தில் குடும்ப அட்டை இல்லாதவர்கள் eShram மூலம் விண்ணப்பிக்கலாம். மேலும் மனுதாரர் உரிய படிவத்தில் பூர்த்தி செய்து தொடர்புடைய வட்ட வழங்கல் அலுவலகத்தில் அளிக்கலாம்.
மனுவினை சம்பந்தப்பட்ட வட்ட வழங்கல் அலுவலர்களின் மூலம் மனுதாரர்களின் சொந்த மாநிலத்திற்கு அனுப்பி வைத்து புதிய குடும்ப அட்டை பெற்றவுடன் தமிழ்நாட்டில் ஒரே நாடு ஒரே குடும்ப அட்டை திட்டத்தின் கீழ் நியாய விலைக்கடைகளில் அத்தியாவசியப் பொருட்கள் பெற்று பயன்பெறலாம்.
எனவே, வெளிமாநிலத்தில் இருந்து புலம்பெயர்ந்து காஞ்சிபுரம் மாவட்டத்தில் வசித்து வரும் குடும்ப அட்டை இல்லாத தொழிலாளர்கள் புதிய குடும்ப அட்டை வேண்டி விண்ணப்பித்து பயன் பெறலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
- சிவகங்கையில் மக்கள் குறைதீர் கூட்டம் கலெக்டர் தலைமையில் நடந்தது.
- மாவட்ட வருவாய் அலுவலர் மோகனச்சந்திரன் உள்ளிட்ட அனைத்துதுறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
சிவகங்கை
சிவகங்கை மாவட்டம் கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட கலெக்டர் ஆஷாஅஜித் தலைமையில் நடந்தது.
இந்த கூட்டத்தில் இலவச வீட்டுமனை பட்டா, சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் உதவித் தொகை, மாவட்ட ஊனமுற்றோர் மற்றும் மறுவாழ்வுத்துறை உதவித் தொகை, மாற்றுத்திறனா ளிகளுக்கான உபகர ணங்கள், புதிய மின்னணு குடும்ப அட்டை போன்ற பல்வேறு கோரிக்கை களை வலியுறுத்தி, பொது மக்களிட மிருந்து 577 மனுக்கள் பெறப்பட்டு தகுதியுடைய மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு மாவட்ட கலெக்டர் அறிவுறுத்தினார்.
இக்கூட்டத்தில், வேளாண்மைத்துறையின் சார்பில் மானாமதுரை, திருப்புவனம் வட்டத்திற்குட் பட்ட 4 பயனாளிகளுக்கு ரூ.10,084 மதிப்பீட்டிலான மானியத்தொகையுடன் கூடிய வேளாண் இடுபொ ருட்களையும், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் சார்பில் மதகுபட்டி பைரவர் சுய உதவிக்குழுவிற்கு ரூ.2 லட்சம் மதிப்புள்ள கடனுதவி வழங்கப்பட்டது.
இதில் மாவட்ட வருவாய் அலுவலர் மோகனச்சந்திரன் உள்ளிட்ட அனைத்துதுறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
- 79 சதவீத குடும்ப அட்டைதாரர்கள் கலைஞர் உரிமைத்தொகைக்கு விண்ணப்பிக்கலாம்.
- இந்த விண்ணப்பங்கள் தமிழ்நாடு மின் ஆளுமை மூலம் சரி பார்க்கப்பட உள்ளது.
ராமநாதபுரம்
தமிழகம் முழுவதும் கலைஞர் மகளிர் உரிமைத்தொகைக்கு விண்ணப்பிக்க, கடந்த 18 -ந்தேதி முதல் 20-ந் தேதி வரை இரண்டாம் கட்டமாக வாய்ப்பு அளிக்கப்பட்டது. அதன்படி விடுபட்டுப் போனவர்கள், அரசு அறிவிப்பின்படி முதியோர் உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை பெறுபவர்கள் உள்ளிட்டோரும் விண்ணப்பித்தனர்.
இதன் அடிப்படையில் இதுவரை ராமநாதபுரம் மாவட்டத்தில் மொத்தமுள்ள 4,02,617 குடும்ப அட்டைகளில், 3,18,045 குடும்ப அட்டைதார்கள் கலைஞர் உரிமைத் தொகைக்கு விண்ணப்பித்துள்ளனர். அதாவது 79 சதவீதம் குடும்ப அட்டைதாரர்கள் விண்ணப்பம் செய்துள்ளனர்.
இந்த விண்ணப்பங்கள் தமிழ்நாடு மின் ஆளுமை மூலம் சரி பார்க்கப்பட உள்ளது. அதன்பின் தேவைப்படும் விண்ணப் பங்கள் மட்டும் அரசு அலுவலர்களால் கள ஆய்வு செய்யப்பட உள்ளன.
கிராமப் பகுதிகளில் கிராம நிர்வாக அலுவ லர்கள், கிராம வருவாய் உதவியாளர்கள், ஊராட்சி செயலாளர்களும், நகர் பகுதிகளில் பில் கலெக்டர்களும் கள ஆய்வில் ஈடுபட உள்ளனர். மாவட்டத்தில் உள்ள ராமநாதபுரம், பரமக்குடி, கமுதி, முதுகுளத்தூர், கடலாடி, திருவாடானை, ராமேசுவரம், கீழக்கரை, ஆர்.எஸ்.மங்கலம் ஆகிய 9 தாலுகாக்களில் கள ஆய்வில் ஈடுபடும் அலுவலர்களுக்கு பயிற்சி நடைபெற்றது.
மாவட்டத்தில் உள்ள 775 ரேஷன் கடைகளுக்கு தலா ஒருவர் வீதம் 775 கள ஆய்வு அலுவலர்கள் நியமிக்கப் பட்டுள்ளனர் என்று வருவாய்த்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
- குடும்ப அட்டைகள் எண்ணிக்கைக்கு ஏற்ப புதிய ரேசன் கடைகள் திறக்கப்படும் என்று அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் கூறினார்.
- ஒன்றியக்குழுத்தலைவர் ஆறுமுகம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
விருதுநகர்
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் மாதாநகர் பகுதியில் தமிழ்நாடு நுகர் பொருள் வாணிபக் கழகம் மூலம் பகுதி நேர நியாய விலை கடை திறப்பு விழா நடந்தது. மாவட்ட கலெக்டர் ஜெயசீலன் தலைமை தாங்கினார். தனுஷ்குமார் எம்.பி., தங்கப்பாண்டியன் எம்.எல்.ஏ. ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
விழாவில் அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் கலந்து கொண்டு நியாய விலை கடையினை திறந்து வைத்தார். பின்னர் அவர் கூறியதாவது:-
விருதுநகர் மாவட்டத்தில் கூட்டுறவுத்துறை மூலம் மொத்தம் 995 நியாய விலைக்கடைகள் இயங்கி வருகின்றன. அதில் 725 முழு நேர நியாய விலை கடைகளும், 270 பகுதி நேர நியாய விலைக் கடைகளும் இயங்கி வருகின்றன. மேலும், 65 நடமாடும் நியாய விலை கடைகளும் உள்ளன.
விருதுநகர் மாவட்டத்தில் 6,10,845 குடும்ப அட்டைதாரர்கள் பயன்பெற்று வருகின்றனர். இதில் 6,00,248 அரிசி குடும்ப அட்டைதாரர்கள் உள்ளனர். மேலும் மாவட்டத்தில் பொது மக்களின் கோரிக்கை மற்றும் குடும்ப அட்டை தாரர்களின் எண்ணிக் கைக்கு ஏற்ப புதிய, பகுதி நேர நியாய விலை கடைகளும் திறந்து வைக்கப்பட்டு வருகின்றன.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த நிகழ்ச்சியில் ஸ்ரீவில்லிபுத்தூர் நகர்மன்றத்தலைவர் ரவிக்கண்ணன், ஊராட்சி ஒன்றியக்குழுத்தலைவர் ஆறுமுகம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- பொது விநியோகத்திட்டம் தொடர்பான தங்களது குறைகளை வட்ட வழங்கல் அலுவலரிடம் நேரில் தெரிவித்து தீர்வு
- பொது விநியோக கடைகளின் செயல்பாடுகள் மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் தரம் குறித்த புகார்கள் இருப்பின் அதன்பேரில் உரிய நடவ டிக்கை மேற்கொள்ளப்ப டும்.
சேலம்:
சேலம் மாவட்டத்தில் பொது விநியோகத் திட்டத்தின் சேவைகளை அனைத்து தரப்பு மக்கள் பயன் பெறும் பொருட்டு, ஒவ்வொரு மாதமும் 2-வது சனிக்கிழமையன்று அனைத்து தாலுகாக்களிலும் பொது விநியோகத்திட்ட மக்கள் குறைதீர் முகாம் நடத்தப்பட்டு வருகிறது.
அதன்படி இந்த மாதம் 2-வது சனிக்கிழமையான வருகிற 8-ந்தேதி ஒவ்வொரு தாலுகா அலுவலகத்திலும் நடைபெறும் பொது விநியோகத்திட்ட குறைதீர் முகாமில் பொதுமக்கள் பொது விநியோகத்திட்டம் தொடர்பான தங்களது குறைகளை வட்ட வழங்கல் அலுவலரிடம் நேரில் தெரிவித்து தீர்வு செய்து கொள்ளலாம்.
முகாமில், குடும்ப அட்டைகளில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கம், முகவரி மாற்றம் மற்றும் புதிய குடும்ப அட்டை, நகல் அட்டை கோரும் மனுக்கள் பெற்று உடனடி நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மேலும், செல்போன் எண் பதிவு மற்றும் மாற்றம் செய்தலுக்கான மனு பெற்று உடன் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
பொது விநியோக கடைகளின் செயல்பாடுகள் மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் தரம் குறித்த புகார்கள் இருப்பின் அதன்பேரில் உரிய நடவ டிக்கை மேற்கொள்ளப்ப டும். தனியார் சந்தையில் விற்கப்படும் பொருட்கள் மற்றும் சேவைகள் தொடர்பான குறைபாடுகள் குறித்த புகார்கள் இருப்பின் அவற்றை நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம்-2019-ன் கீழ் உரிய நடவடிக்கை மேற்கொள்வதற்குரிய மனுக்களை அளித்து பயன டையலாம் என்று கலெக்டர் கார்மேகம் தெரிவித்துள்ளார்.
- ரூ.57 லட்சம் நலத்திட்ட உதவிகள் வழங்கினர்
- பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்
செய்யாறு:
திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு தாலுகாவில் ஜமாபந்தி நிறைவு விழா மற்றும் விவசாயிகள் மாநாடு நேற்று நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு ஜமாபந்தி அலுவலர் சிப்காட் நில எடுப்பு மாவட்ட வருவாய் அலுவலர் எம்.லியாகத் தலைமை வகித்தார். தாசில்தார் கி.வெங்கடேசன் வரவேற்றார்.
மாவட்ட ஊராட்சி குழு தலைவர் பார்வதி சீனிவாசன், நகர மன்ற தலைவர் மோகனவேல், நகர மன்ற உறுப்பினர் விஸ்வநாதன், விவசாய சங்க பிரிதிநிதிகள் புருஷோத்தமன், கிரண் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக ஒ.ஜோதி எம்.எல்.ஏ கலந்துகொண்டு 109 நபர்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா, 16 பேருக்கு பட்டா மாறுதல் சான்று, 31 பேருக்கு உட்பிரிவு பட்டா மாறுதல் சான்று, 23 பேருக்கு சமூக பாதுகாப்பு திட்ட ஓய்வூதியம், 10 பேருக்கு புதிய குடும்ப அட்டை வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில் 15 பேர் உள்ளிட்ட 204 பேருக்கு ரூபாய் 57 லட்சத்தில் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
நிகழ்ச்சியில் வருவாய்த்துறை சங்கப் பிரதிநிதிகள் பாஸ்கரன், ஸ்ரீதர், ரமேஷ் மற்றும் திமுக ஒன்றிய செயலாளர்கள் தினகரன், ஞானவேல் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் எஸ். ராஜலட்சுமி நன்றி கூறினார்.
- குடும்ப அட்டைதாரர்களுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி விநியோகத்தை விருதுநகர் கலெக்டர் தொடங்கி வைத்தார்.
- இந்த அரிசி போலிக் அமிலம், கருவளர்ச்சிக்கும், ரத்த உற்பத்திக்கும் பயன்படுகிறது.
விருதுநகர்
விருதுநகர் வட்டம், கட்டையாபுரம் நுகர்ப்பொருள் வாணிப கழக நியாயவிலை கடையில் குடும்ப அட்டைதாரர்களுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி விநியோகத்தை கலெக்டர் மேக நாதரெட்டி தொடங்கி வைத்தார்.
பின்னர் அவர் பேசியதாவது:-
முதல்-அமைச்சர் குடும்ப அட்டைதாரர்களுக்கு, செறிவூட்டப்பட்ட அரிசியை குழந்தைகள் வளர்ச்சி திட்டம் மற்றும் மதிய உணவு திட்டங்களுக்கு வழங்க அறிவுறுத்திருந்தார். அதனடிப்படையில், இன்று தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழக கட்டையா புரம் நியாயவிலை கடையில் குடும்ப அட்டை தாரர்களுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி விநியோகம் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.
விருதுநகர் மாவட்டத்தில் 992 நியாயவிலை கடைகள் செயல்பட்டு வருகிறது. அதில் 48,575 ஏ.ஏ.ஒய். குடும்ப அட்டைத்தாரர்கள் மற்றும் 2,44,128 பி.எச்.எச். குடும்ப அட்டைதாரர்களுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி மாதத்திற்கு 6582.685 மெட்ரிக் டன் தேவைப்படுகிறது. இந்த செறிவூட்டப்பட்ட அரிசியானது 1:100 என்ற விகிதத்தில் கலக்கப்பட்டு (அதாவது ஒரு டன் செறிவூட்டப்பட்ட அரிசி குருணைகள் 100 மெ.டன் அரிசியுடன் கலக்கப்பட்டு) சமமான செறிவூட்டப்பட்ட அரிசியாக தயாரிக்கப்பட்டு பொதுமக்களுக்கு பொது விநியோகத்திட்ட அங்காடிகள் மூலம் விலையின்றி வழங்கப்பட்டு வருகிறது.
செறிவூட்டப்பட்ட அரிசியானது ரத்தசோகையை தடுக்கிறது. போலிக் அமிலம், கருவளர்ச்சிக்கும், இரத்த உற்பத்திக்கும் பயன்படுகிறது. வைட்டமின் பி12 நரம்பு மண்டலத்தில் இயல்பான செயல்பாட்டிற்கும் உதவுகிறது.
எனவே மாவட்டத்தில் இன்று முதல் அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் செறி வூட்டப்பட்ட அரிசியானது வழங்கப்பட்டு வருகிறது.
இவ்வாறு அவர் பேசினார்.
இந்த நிகழ்ச்சியில் மண்டல மேலாளர் விஜயகுமார், இணைப்பதிவாளர் (கூட்டுறவு சங்கங்கள்) செந்தில்குமார், துணை மேலாளர் கண்ணன், துணை மேலாளர் (கணக்கு) பழநி, உதவி மேலாளர் (வாணிபம்) அழகர்சாமி, உதவி மேலாளர் (தரக்கட்டுப்பாடு) மணிபாரதி மற்றும் அரசு அலுவலர்கள், பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
- அமைச்சர் ஆர்.காந்தி திறந்துவைத்தார்
- கலெக்டர் தலைமை தாங்கினார்
வாலாஜா:
ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா அடுத்த அனந்தலை ஊராட்சியில் திருமலை நகரில் பகுதி நேர ரேசன் கடை திறப்பு விழா இன்று நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தலைமை தாங்கினார்.கூட்டுறவு சங்கங்களின் மேலாண்மை இயக்குனர் நந்தகோபால், மாவட்ட வட்ட வழங்கல் அலுவலர் மணிமேகலை ஆகியோர் முன்னிலை வகித்தனர்.கூட்டுறவு சங்கங்களின் துணை பதிவாளர் சந்திரன் வரவேற்றார்.நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி கலந்து கொண்டு பகுதி நேர ரேசன் விலைக் கடையை குத்துவிளக்கு ஏற்றி ரிப்பன் வெட்டி திறந்து வைத்து சிறப்புரையாற்றினார்.
இதனைதொடர்ந்து குடும்ப அட்டைதாரர்களுக்கு ரேஷன் பொருட்களை வழங்கினார்.
நிகழ்ச்சியில் மாவட்ட ஊராட்சி குழு தலைவர் ஜெயந்தி திருமூர்த்தி, ஒன்றியக்குழு தலைவர் வெங்கட்ரமணன், வாலாஜா கிழக்கு ஒன்றிய செயலாளர் சண்முகம், கோட்டாட்சியர் பூங்கொடி, வட்டாட்சியர் ஆனந்தன், வட்ட வழங்கல் அலுவலர் ராஜலஷ்மி, ஊராட்சிமன்ற தலைவர் தேவகி மகாதேவன், துணை தலைவர் மீனா பெருமாள், நகரமன்ற தலைவர் ஹரிணி தில்லை, துணை தலைவர் கமலராகவன், வட்டார வளர்ச்சி அலுவலர் ரவி, பாஸ்கரன் உள்பட நகரமன்ற உறுப்பினர்கள், திமுக நிர்வாகிகள் பொதுமக்கள் அரசு அலுவலர்கள் கூட்டுறவு கடன் சங்க இயக்குனர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சி முடிவில் வாலாஜா கிழக்கு ஒன்றிய மகளிரணி தலைவர் லாவண்யா நன்றி கூறினார்.
- பொது விநியோக திட்டத்திற்காக வழங்கப்படும் குடும்ப அட்டைகளை வகைப்படுத்தி சீரமைத்து தர வேண்டும்.
- அரசு ஊழியர்களுக்கு இணையான வகையில் கூட்டுறவு ஊழியர்களுக்கு மருத்துவ காப்பீடு திட்டத்தை அமல்படுத்த வேண்டும்.
திருவாரூர்:
திருவாரூரில் கூட்டுறவு ஊழியர் சங்க மாவட்ட பேரவை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு சி.ஐ.டி.யு மாவட்டத் தலைவர் முருகையன் தலைமை வகித்தார். கூட்டத்தில் தமிழ்நாடு அரசு கூட்டுறவுத்துறை ஊழியர் சங்க மாநில தலைவர் சௌந்தரராஜன் தொடக்க உரையாற்றினார். தமிழ்நாடு கூட்டுறவு ஊழியர் சம்மேளனத்தின் மாநிலத் தலைவர் கிருஷ்ணமூர்த்தி நிறைவு உரையாற்றினார்.
கூட்டத்தில் தமிழகத்தில் பொது வினியோகத் திட்டம் கூட்டுறவு துறை மற்றும் உணவு மற்றும் நுகர்வோர் பொருள் வழங்கு துறை ஆகிய இரண்டு துறைகளின் கீழ் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதனால் நிர்வாக குளறுபடிகள் ஏற்படுவதால் பொது விநியோகத் திட்டத்தை ஒரே துறையின் கீழ் கொண்டு வரவேண்டும். பொது விநியோகத் திட்டத்திற்காக வழங்கப்படும் குடும்ப அட்டைகளை வகைப்படுத்தி சீரமைத்து தர வேண்டும்.
பொருள்களின் எடை குறைகளை தவிர்க்கும் வகையில் பொது விநியோகத் திட்டத்திற்கு வழங்கப்படும் அனைத்து பொருட்களும் உறைகளில் அடைத்து தரவேண்டும். பொதுவிநியோகத் திட்ட ஊழியர்களுக்கு முழு ஊதிய நிர்ணயம் செய்து வழங்க வேண்டும். நியாய விலைக் கடை ஊழியர்களுக்கு தேர்வுநிலை, சிறப்புநிலை வழங்குவதில் உள்ள சிக்க ல்களை நீக்கிட வேண்டும். கூட்டுறவு நிறுவன ங்களில் பணியாற்றும் ஊழிய ர்களுக்கு கருணை ஓய்வூதிய திட்டத்தை உருவாக்கி செயல்படுத்திட வேண்டும். அரசு ஊழியர்களுக்கு இணையான வகையில் கூட்டுறவு ஊழியர்களுக்கு மருத்துவ காப்பீடு திட்டத்தை அமல்படுத்த வேண்டும்.கூட்டுறவு ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி பராமரிக்கும் முறையினை வருங்கால வைப்பு நிதி ஆணையத்தின் மூலம் செயல்படுத்திட வேண்டும்.
இவைகள் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் மாநில இணை செயலாளர் சித்ரா, சிஐடியு மாவட்டத் தலைவர் மாலதி, மாவட்டப் பொருளாளர் வைத்தியநாதன், கூட்டுறவு ஊழியர் சங்க செயலாளர் சாந்தகுமாரி, கூட்டுறவுத்துறை ஊழியர் சங்க மாவட்டச் செயலாளர் முருகானந்தம், மாவட்டப் பொருளாளர் செல்வராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். முன்னதாக வரவேற்புக் குழுத் தலைவர் விஜயன் வரவேற்றார். இறுதியில் மாநில குழு உறுப்பினர் செல்வம் நன்றி கூறினார்.