என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மாணவர்கள் பலி"

    • மாணவர்களுக்கு நீச்சல் தெரியாததால் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருவள்ளூர் மாவட்டம் வீரராகவ பெருமாள் கோவில் குளத்தில் தவறி விழுந்ததில் 3 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    சந்தியாவந்தனம் செய்யும் போது மாணவர்கள் 3 பேரும் படிக்கட்டில் இருந்து தவறி குளத்தில் விழுந்துள்ளனர். மாணவர்களுக்கு நீச்சல் தெரியாததால் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.

    சேலையூர் மடத்தில் பயின்றுவந்த ஹரிஹரன், வெங்கடரமணன், வீரராகவன் ஆகியோர் உயிரிழந்தது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

    • ராட்சத அலை மிதுன், மகாவிஷ்ணு ஆகிய 2 பேரை இழுத்து சென்றது.
    • தந்திராயன் குப்பம் கடற்கரையில் 2 பேர் உடல் கரை ஒதுங்கியது. இ

    வானூர்:

    கோவை அருகே உள்ள வேலாண்டிபாளையத்தை சேர்ந்தவர் விஜயகுமார். அவரது மகன் மிதுன் (வயது 20). அதே பகுதியை சேர்ந்த பழனிச்சாமி மகன் மகா விஷ்ணு (20). இவர்கள் 2 பேரும் வேலாண்டி பாளையத்தில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வந்தனர்.

    நேற்று கல்லூரி மாணவர்கள் 15 பேர் புதுவைக்கு சுற்றுலா வந்தனர். அதன் பின்னர் கோட்டக்குப்பம் அருகே பெரிய முதலியார் சாடியில் உள்ள தங்கும் விடுதியில் அறை எடுத்து தங்கினர். பின்னர் அங்கிருந்து பல்வேறு பகுதிகளை சுற்றி பார்த்து விட்டு நேற்று மதியம் பெரிய முதலியார் சாவடியில் உள்ள கடற்கரையில் குளித்தனர்.

    அப்போது ராட்சத அலை மிதுன், மகாவிஷ்ணு ஆகிய 2 பேரை இழுத்து சென்றது. அதிர்ச்சியடைந்த 2 பேரும் அபய குரலிட்டனர். உடனடியாக மற்றவர்கள் 2 பேரையும் மீட்க முயற்சித்தனர். ஆனால் 2 மாணவர்களும் தண்ணீரில் மூழ்கினர். இதுகுறித்து கோட்டக்குப்பம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்து விரைந்த போலீசார் அந்த பகுதியை சேர்ந்த மீனவர்களிடன் இணைந்து கடலில் இறங்கி தேடினர். ஆனால் அவர்கள் கதி என்ன என்று தெரியவில்லை.

    இன்று காலை தந்திராயன் குப்பம் கடற்கரையில் 2 பேர் உடல் கரை ஒதுங்கியது. இதுகுறித்து அந்த பகுதியை சேர்ந்த மீனவர்கள் கோட்டக்குப்பம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக போலீசார் அங்கு விரைந்தனர். அப்போது கடலில் மூழ்கிய மாணவர்கள் மிதுன், மகா விஷ்ணு ஆகியோர் என தெரியவந்தது.

    இவர்கள் கடலில் மூழ்கி இறந்துள்ளனர். இதுபற்றி அறிந்த மாணவர்களின் பெற்றோர் பெரியமுதலியார் சாவடி வந்தனர். இறந்துபோன தங்களது மகன்களின் உடலை பார்த்து கதறி துடித்தனர்.

    கடலில் மூழ்கி பலியான 2 பேரின் உடல்கள் பிரேத பரிசோதனைக்காக புதுவையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டது. இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • அதிவேகத்தில் வந்ததால் கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிளோடு பிரவீனும், ஹரியும் கீழே விழுந்தனர்.
    • மோட்டார் சைக்கிளை ஓட்டிய பிரவீனுக்கு லைசன்சு உரிமம் இல்லை என்று போலீசார் தெரிவித்து உள்ளனர்.

    வேளச்சேரி:

    சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மோட்டார் சைக்கிள்களில் வாலிபர்கள் அதிவேகத்தில் பயணம் செய்து விபத்துக்களில் சிக்குவது அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் மோட்டார் சைக்கிளை அதிவேகத்தில் ஓட்டிசென்று அதனை செல்போனில் படம்பிடித்த மாணவர்கள் 2 பேர் விபத்தில் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    தரமணி, தந்தை பெரியார் நகர், கருணாநிதி 3-வது தெருவை சேர்ந்தவர் பிரவீன்(வயது19). தனியார் கல்லூரியில் பி.காம். 2-ம் ஆண்டு படித்து வந்தார். இவர் அதேபகுதியை சேர்ந்த நண்பரான பிளஸ்-2 மாணவர் ஹரியுடன்(17) விலை உயர்ந்த மோட்டார் சைக்கிளில் சென்றார். பிரவீன்மோட்டார் சைக்கிளை ஓட்டினார்.

    அவர்கள் தரமணி 100 அடி சாலையில் சென்றபோது அதிவேகத்தில் செல்ல வேண்டும் என்று ஆசை ஏற்பட்டது. இதையடுத்து மோட்டார் சைக்கிளை அதிவேகமாக 114 கிலோ மீட்டர் வேகம் வரை ஓட்டிச் சென்றனர்.

    இதனை பின்னால் அமர்ந்து இருந்த ஹரி தனது செல்போனில் எவ்வளவு வேகத்தில் செல்கிறோம் என்பதை வீடியோவாக பதிவு செய்து கொண்டு இருந்தார்.

    தரமணி சந்திப்பு அருகே எஸ்.ஆர்.பி.டூல்ஸ் பகுதியில் இருந்து வந்த சரக்கு வாகனம் ஒன்று திரும்ப முயன்றது. இதனை எதிர்பார்க்காமல் வந்த பிரவீன் மோட்டார் சைக்கிளை திருப்ப முயன்றார்.

    அதிவேகத்தில் வந்ததால் கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிளோடு பிரவீனும், ஹரியும் கீழே விழுந்தனர். இருவரும் மோட்டார்சைக்கிளில் சறுக்கியபடி பல அடி தூரத்துக்கு இழுத்து செல்லப்பட்டனர்.

    இதில் பிரவீனும், ஹரியும் படுகாயம் அடைந்தனர். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவ்வழியே சென்றவர்கள் உயிருக்கு போராடிய 2 பேரையும் மீட்டு ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பிரவீன் உயிரிழந்தார்.

    ஹரிக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் இன்று காலை சிகிச்சை பலனின்றி ஹரியும் பரிதாபமாக இறந்தார். மோட்டார் சைக்கிளை ஓட்டிய பிரவீனுக்கு லைசன்சு உரிமம் இல்லை என்று போலீசார் தெரிவித்து உள்ளனர்.

    இந்த விபத்து தொடர்பாக கிண்டி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். அதிவேகத்தில் மோட்டார் சைக்கிளில் செல்ல ஆசைப்பட்டு மாணவர்கள் 2 பேர் பலியான சம்பவம் நண்பர்கள் மற்றும் உறவினர்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. மாணவர்கள் அதிவேகமாக மோட்டார் சைக்கிளை ஓட்டிச்சென்ற வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

    • நண்பர்களான கோபிசந்தும், நகுலும் நேற்று மாலை வெளியே சென்றனர். பின்னர் அவர்கள் திரும்பி வரவில்லை.
    • 2 மாணவர்கள் கிணற்றில் மூழ்கி பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    கும்மிடிப்பூண்டி:

    கும்மிடிப்பூண்டி அருகே உள்ள குருராஜா கண்டிகை பகுதியை சேர்ந்தவர் கோபிசந்த் (வயது 13). அரசு பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தார். அதே பகுதியை சேர்ந்த நகுல் (12) என்பவர் புதுராஜா கண்டிகை அரசு பள்ளியில் 5-ம் வகுப்பு படித்தார். நண்பர்களான கோபிசந்தும், நகுலும் நேற்று மாலை வெளியே சென்றனர். பின்னர் அவர்கள் திரும்பி வரவில்லை. அவர்களை பெற்றோர் தேடி வந்தனர்.

    இந்த நிலையில் இன்று காலை அப்பகுதியில் உள்ள கிணற்றில் கோபிசந்தும், நகுலும் பிணமாக மிதந்தனர். இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த மக்கள் கவரப்பேட்டை போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.

    போலீசார் மற்றும் தேர்வாய் கண்டிகை தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

    பலியான 2 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக பொன்னேரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். கிணற்றின் அருகே அவர்களது உடைகள் கழற்றி வைக்கப்பட்டு இருந்தது. எனவே நண்பர்கள் இருவரும் கிணற்றில் குதித்து குளித்தபோது தண்ணீரில் மூழ்கி இறந்து இருப்பது தெரியவந்தது.

    2 மாணவர்கள் கிணற்றில் மூழ்கி பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    இதுகுறித்து கவர ப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • மாணவர்கள் இறந்த பகுதியில் கடந்த மாதம்தான் உள்ளூரை சேர்ந்த ஒருவர் நீரில் மூழ்கி இறந்தார்.
    • குட்டி யானை ஒன்றும் தண்ணீரில் மூழ்கி இறந்தது.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் இடுக்கியில் இருந்து மூணாறு செல்லும் வழியில் வலியபாறக்குட்டி ஆறு உள்ளது.

    இங்கு பள்ளி, கல்லூரி மாணவர்கள் பலரும் சுற்றுலா வருவது வழக்கம். இதுபோல மாங்குளம் பகுதியை சேர்ந்த பள்ளி மாணவர்கள் 30 பேர் சுற்றுலா சென்றனர்.

    அவர்களில் சிலர் வலியகுட்டி ஆற்றில் குளித்தனர். அப்போது 9-ம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் திடீரென ஆற்றில் மூழ்கி அலறினர். அவர்களை அருகில் இருந்தவர்கள் மீட்டனர்.

    என்றாலும் 3 மாணவர்களும் நீரில் மூழ்கி மயங்கினர். அவர்களை உடனடியாக அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர்களை பரிசோதித்த டாக்டர்கள், 3 மாணவர்களும் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    மாணவர்கள் இறந்த பகுதியில் கடந்த மாதம்தான் உள்ளூரை சேர்ந்த ஒருவர் நீரில் மூழ்கி இறந்தார். இதுபோல குட்டி யானை ஒன்றும் இதே பகுதியில் தண்ணீரில் மூழ்கி இறந்தது.

    இந்த பகுதியில் ஆற்றுக்குள் ஆழமான குழிகள் இருப்பதாகவும், இதில் தெரியாமல் இறங்கி விடுவோர் நீரில் மூழ்கி இறக்கும் சம்பவங்கள் நடப்பதாக உள்ளூர் மக்கள் தெரிவித்தனர்.

    இங்கு சுற்றுலா வருவோர் இந்த குழிகள் பற்றி தெரியாமல் அதில் இறங்கி உயிரை இழப்பதாகவும், இதனை தடுக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

    • குளிக்க சென்றபோது பரிதாபம்
    • போலீசார் விசாரணை

    ஆற்காடு:

    ராணிப்பேட்டை மாவட் டம் மேல்விஷாரம் புதுப் பேட்டை பகுதியை சேர்ந்த வர் சாதிக் பாஷா. இவரது மகன் ரியாஸ் ரகுமான் (வயது 16). ஆற்காடு தண்டு பஜார் திருவள்ளுவர் தெருவை சேர்ந்த இஷாத் அகமது மகன் முபாரக் ஷரீப் (16).

    இவர்களின் நண்பர்கள் வேலூர் கொணவட்டம் பகுதியை சேர்ந்த அன்சர் பாஷா மகன் முகமது ஷகில் (16), கலிமுல்லா மகன் வசீம் (16).

    இவர்கள் நான்கு பேரும் ஆற்காடு அடுத்த மேல்விஷா ரம் இஸ்லாமிய மேல்நிலைப் பள்ளியில் பிளஸ்-1 வகுப்பு படித்து வந்தனர்.

    நேற்று மதி யம் பள்ளி முடிந்ததும் மேல் விஷாரத்தை அடுத்த நந்தியா லம் பகுதியில் உள்ள 100 அடி ஆழம் கொண்ட செயல்ப டாத கல் குவாரி குட்டையில் தேங்கி இருந்த தண்ணீரில் குளிக்க சென்றுள்ளனர்.

    ரியாஸ் ரகுமான், முபாரக் ஷரீப் ஆகிய இருவரும் முதலில் மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளனர். அவர்கள் பள்ளிக்கு எடுத்துச் சென்ற புத்தகபை மற்றும் சட்டையை கரையில் வைத்து விட்டு தண் ணீரில் இறங்கியுள்ளனர். அப் போது இரண்டு பேரும் நீரில் மூழ்கியுள்ளனர். முகமது சகில் மற்றும் வசீம் ஆகிய இருவரும் பின்னால் மற் றொரு மோட்டார்சைக்கி ளில் வந்துள்ளனர்.

    அப்போது எதிரே மோட் டார்சைக்கிளில் வந்த ஒருவர், உங்களுக்கு முன்னால் வந்த பள்ளி மாணவர்கள் கல்கு வாரி குட்டையில் நீரில் தத்த ளிக்கின்றனர் என முகமது சகில், வசீம் ஆகியோரிடம் தெரிவித்துள்ளார்.

    உடனே அவர்கள் இருவரும் கல்குவாரி குட்டைக்கு விரைந்து சென்றனர். அதற்குள் மாண வர்கள் இருவரும் தண்ணீரில் மூழ்கி விட்டனர்.

    இதனால் என்ன செய்வ தென்று தெரியாமல் பயந்து கரையில் வைக்கப்பட்டிருந்த புத்தகபையின் அருகே இருந்த செல்போனை எடுத்துக் கொண்டு மேல்விஷாரத்தில் உள்ள ரியாஸ் ரகுமான் வீட் டிற்கு சென்று தகவல் தெரிவித் துள்ளனர். மேலும் இது குறித்து ஆற்காடு தீயணைப்பு துறை யினருக்கும் தகவல் தெரிவிக் கப்பட்டது.

    உடனடியாக தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு 'விரைந்து சென்று நீரில் மூழ்கிய பள்ளி மாணவர்களான ரியாஸ் ரகுமான் மற்றும் முபாரக் ஷரீப் ஆகியோரை தேடும் பணியில் ஈடுபட்டனர். நீண்ட நேர தேடுதலுக்கு பிறகுரியாஸ் ரகுமானை பிணமாக மீட்ட னர். தொடர்ந்து அரக்கோ ணம் ராஜாளி மீட்புபடையின ரும் வரவழைக்கப்பட்டனர். அவர்களின் நீண்டநேர தேடுத லுக்கு பிறகு முபாரக் ஷரீப் உடலும் மீட்கப்பட்டது.

    இருவரது உடல்களையும் பார்த்து பெற்றோரும், உறவி னர்களும் கதறி அழுதது பார்க்க பரிதாபமாக இருந்தது. தொடர்ந்து இருவரது உடல் களும் ஆற்காடு அரசு ஆஸ்பத் திரிக்கு பிரேத பரிசோத னைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த சம்பவம் குறித்து ரத் தினகிரி போலீசார் விசா ரணை நடத்தி வருகின்றனர்.

    • காவிரி ஆற்றில் குளிக்க சென்ற 4 மாணவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.
    • காவிரியில் மூழ்கி பலியானோர் குடும்பங்களுக்கு முதல்வர் ஸ்டாலின் நிதியுதவி அறிவித்துள்ளார்.

    சென்னை:

    சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே கல்வடங்கம் காவிரி ஆற்றில் குளிக்கச் சென்ற அரசு கலைக்கல்லூரி மாணவர்கள் 4 பேர் ஆற்றில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.

    கல்லூரி மாணவர்கள் 10 பேர் கல்வடங்கம் காவிரி ஆற்றில் குளிக்க சென்ற போது 4 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். நீச்சல் தெரியாத பாண்டியராஜன், மணிகண்டன், மற்றொரு மணிகண்டன், முத்துசாமி ஆகியோர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    இந்நிலையில், காவிரி ஆற்றில் மூழ்கி பலியான 4 பேரின் குடும்பங்களுக்கு இரங்கல் தெரிவித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அவர்களது குடும்பத்துக்கு தலா 2 லட்சம் ரூபாய் நிதியுதவி அளித்து உத்தரவிட்டுள்ளார்.

    • கண்மாய் கரையோரம் சிறுவர்களின் சைக்கிள் நிற்பதை பார்த்த சிலர், உடனடியாக ஊருக்குள் சென்று தகவல் கூறினர்.
    • ஒரே கிராமத்தை சேர்ந்த அண்ணன், தம்பி உள்ளிட்ட 3 மாணவர்கள் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அந்த கிராமத்தையே சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.

    விளாத்திகுளம்:

    தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே சிவலார்பட்டி வடக்கு தெருவை சேர்ந்தவர் முருகன். இவரது மகன் மகேஷ்குமார் (வயது11) அப்பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வந்தான். இவனது தம்பி அருண்குமார் (7).

    நேற்று மாலை அண்ணன், தம்பி இருவரும் அதே பகுதியை சேர்ந்த தங்களது நண்பனான கார்த்திகேயன் மகன் சுதனுடன் (7) அங்குள்ள கண்மாய் பகுதியில் விளையாட சென்றனர். இவர்கள் நீண்ட நேரமாகியும் வீடு திரும்பாததால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் அப்பகுதியில் தேடினர்.

    இந்நிலையில் கண்மாய் கரையோரம் சிறுவர்களின் சைக்கிள் நிற்பதை பார்த்த சிலர், உடனடியாக ஊருக்குள் சென்று தகவல் கூறினர். இதையடுத்து கிராமமக்கள் அங்கு வந்து பார்த்தபோது கண்மாய் நீரில் மாணவர் அருண்குமார் உடல் மிதந்தது. இதைத்தொடர்ந்து கிராமமக்கள் கண்மாய் தண்ணீரில் இறங்கி தேடினர். இதில், மகேஷ் மற்றும் சுதன் ஆகியோரின் உடல்களும் மீட்கப்பட்டன.

    தகவல் அறிந்து அங்கு சென்ற புதூர் போலீசார் 3 மாணவர்களின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    கடந்த சில நாட்களாக பெய்த கோடை மலையில் கண்மாயில் நீர்வரத்து ஏற்பட்டு தண்ணீர் இருந்துள்ளது. இதில், கண்மாய் அருகே விளையாட சென்ற மாணவர்கள், குளிப்பதற்காக இறங்கி உள்ளனர். அப்போது அருண்குமார் நீரில் மூழ்கி உள்ளான். இதனை பார்த்த மகேஷ்குமார் மற்றும் சுதன் ஆகியோர், சிறுவனை அருண்குமாரை காப்பாற்ற சென்றுள்ளனர். ஆனால் தண்ணீர் அதிகளவில் இருந்ததால் அவர்களும் நீரில் மூழ்கி இறந்திருக்கலாம் என போலீசார் தெரிவித்தனர்.

    இது தொடர்பாக புதூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஒரே கிராமத்தை சேர்ந்த அண்ணன், தம்பி உள்ளிட்ட 3 மாணவர்கள் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அந்த கிராமத்தையே சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.

    • நீரில் மூழ்கி மயங்கி கிடந்த 2 பேரை மீட்டு சென்னை ஸ்டான்லி ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.
    • கடலில் மூழ்கி பலியான 2 மாணவர்கள் சம்பவம் குறித்து திருவொற்றியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பெரம்பூர்:

    திருவொற்றியூர் சதானந்தபுரம் தாங்கல் பகுதியைச் சேர்ந்தவர் ராஜேஷ். இவரது மகன் ஹரிஷ் (வயது 16). இவர் அங்குள்ள அரசு பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து உள்ளார். அதே பகுதியைச் சேர்ந்தவர் மாரி என்பவரின் மகன் ஸ்ரீகாந்த் (20) ஆவார். இவர் பொன்னேரியில் உள்ள கல்லூரியில் பி.காம். 3-ம் ஆண்டு படித்து வந்தார். இவர்கள் 2 பேரும் திருவொற்றியூரில் உள்ள சுந்தரபுரம் கடற்கரையில் குளிப்பதற்காக சென்றுள்ளனர். அங்கு மாணவர்கள் 2 பேரும், குளித்துக் கொண்டு இருந்தபோது, திடீரென எழுந்து வந்த ராட்சத அலையில் சிக்கி அடித்துச் செல்லப்பட்டனர்.

    இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்து அங்கு குளித்துக்கொண்டு இருந்த அக்கம்பக்கத்தினர் உடனே தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இதையறிந்து திருவொற்றியூர் தீயணைப்பு துறை வீரர்கள் கடலோர காவல் படை வீரர்கள் மற்றும் திருவொற்றியூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அலையில் அடித்துச் செல்லப்பட்ட 2 பேரை தேடும் பணியில் ஈடுபட்டனர்.

    அப்போது அங்கு நீரில் மூழ்கி மயங்கி கிடந்த 2 பேரை மீட்டு சென்னை ஸ்டான்லி ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு மாணவர்களை பரிசோதித்த டாக்டர்கள் இருவரும் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இதையடுத்து பலியான இருவரின் உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த நிலையில் நண்பர்களுடன் குளித்தபோது, கடலில் மூழ்கி மாயமான மற்றொரு கல்லூரி மாணவரான சந்துரு(20) என்பவரை கடலோர காவல் படை மற்றும் தீயணைப்பு வீரர்கள் தேடி வருகின்றனர். கடலில் மூழ்கி பலியான 2 மாணவர்கள் சம்பவம் குறித்து திருவொற்றியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • தேனி கண்ணாத்தாள் கோவில் தெருவை சேர்ந்தவர் ரமேஷ். இவர், தேனியில் பழக்கடை நடத்தி வருகிறார்.
    • இருவரும் தேனி ரெயில் நிலைய குட்செட் வளாகத்தில் உள்ள குட்டைக்குள் பிணமாக கிடப்பது தெரியவந்தது.

    தேனி:

    தேனி சமதர்மபுரத்தைச் சேர்ந்தவர் சிவராஜ். விவசாயி. அவருடைய மகன் சிவசாந்தன் (வயது 12). இவர், தேனியில் உள்ள ஒரு பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து முடித்துவிட்டு 8-ம் வகுப்பு செல்ல இருந்தார்.

    தேனி கண்ணாத்தாள் கோவில் தெருவை சேர்ந்தவர் ரமேஷ். இவர், தேனியில் பழக்கடை நடத்தி வருகிறார். அவருடைய மகன் வீரராகவன் (12). இவரும், சிவசாந்தனுடன் 7-ம் வகுப்பு முடித்து 8-ம் வகுப்பு செல்ல இருந்தார்.

    நண்பர்களான இவர்கள் 2 பேரும் நேற்று முன்தினம் மாலை வீட்டில் இருந்து சைக்கிளில் வெளியே சென்றனர். இரவு வரை அவர்கள் வீடு திரும்ப வரவில்லை. இதனால் இருவரின் குடும்பத்தினரும் அவர்களை தேடினர்.

    இந்தநிலையில், இருவரும் தேனி ரெயில் நிலைய குட்செட் வளாகத்தில் உள்ள குட்டைக்குள் பிணமாக கிடப்பது தெரியவந்தது. தீயணைப்பு படையினர் வந்து மாணவர்களின் உடல்களை மீட்டனர்.

    இதுதொடர்பாக தேனி போலீசார் நடத்திய விசாரணையில், வீரராகவன், சிவசாந்தன் ஆகியோர் கொக்கு பிடித்து விளையாடப் போவதாக சிலரிடம் கூறிக் கொண்டு அந்த பகுதிக்கு வந்ததாகவும், கொக்கு பிடிக்க முயன்றபோது தண்ணீருக்குள் தவறி விழுந்து பலியாகி இருக்கலாம் என்றும் தெரியவந்தது.

    • திடீரென அந்த மாடி படிக்கட்டு இடிந்து, மழைக்காக ஒதுங்கி நின்ற கல்லூரி மாணவர்கள் மீது விழுந்தது.
    • அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள், பொக்லைன் எந்திரம் மூலம் கட்டிட இடிபாடுகளை அகற்றி 4 பேரையும் வெளியே மீட்டனர்.

    தாம்பரம்:

    காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத் அடுத்த தென்னேரி பகுதியை சேர்ந்தவர் பிரென்ச் ஜெபரி தவமணி (வயது 23), சென்னை மீனம்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் திமோ மில்கி (19), பூந்தமல்லி பகுதியை சேர்ந்தவர் அஸ்வின் (19), சிட்லபாக்கம் பகுதியை சேர்ந்தவர் சாய் கவுசிகன் (19). இவர்கள் 4 பேரும் சென்னையை அடுத்த தாம்பரத்தில் உள்ள மெட்ராஸ் கிறிஸ்தவ கல்லூரியில் பி.எஸ்சி 3-ம் ஆண்டு படித்து வந்தனர்.

    நேற்று மாலை கல்லூரி முடிந்ததும் இவர்கள் உள்பட 6 பேர் 3 இருசக்கர வாகனங்களில் சேலையூர் போலீஸ் நிலையம் எதிரே உள்ள ஏரிக்கரை தெருவில் சென்று கொண்டிருந்தனர்.

    அப்போது திடீரென மழை பெய்ததால் அவர்கள் அங்கிருந்த பழைய கட்டிடத்தின் மாடி படிக்கட்டுக்கு கீழே சென்று மழைக்காக ஒதுங்கி நின்றனர். திடீரென அந்த மாடி படிக்கட்டு இடிந்து, மழைக்காக ஒதுங்கி நின்ற கல்லூரி மாணவர்கள் மீது விழுந்தது.

    இதில் பிரென்ச் ஜெபரி தவமணி, திமோ மில்கி, அஸ்வின், சாய் கவுசிகன் ஆகிய 4 பேரும் கட்டிட இடுபாடுக்குள் சிக்கி கொண்டனர். இதனால் அதிர்ச்சி அடைந்த மற்ற 2 மாணவர்களும் ஓடிச்சென்று அங்கிருந்த பொதுமக்கள், தாம்பரம் தீயணைப்பு படையினர் மற்றும் சேலையூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    அதற்குள் அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள், பொக்லைன் எந்திரம் மூலம் கட்டிட இடிபாடுகளை அகற்றி 4 பேரையும் வெளியே மீட்டனர். பின்னர் மீட்கப்பட்ட 4 பேரும் 108 ஆம்புலன்ஸ் மூலம் குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர்.

    ஆனால் மாணவர்கள் பிரென்ச் ஜெபரி தவமணி, திமோ மில்கி ஆகியோர் ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். அஸ்வின், சாய் கவுசிகன் ஆகியோர் படுகாயங்களுடன் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    சம்பவம் குறித்து சேலையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து பலியான 2 பேரின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுபற்றி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    பலியான மாணவர்களின் உடல்களை பார்த்து அவர்களின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் கதறி அழுதது நெஞ்சை உருக்குவதாக இருந்தது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

    சேலையூர் போலீஸ் நிலையம் எதிரில் உள்ள சேலையூர் ஏரிக்கரை பகுதியில் இருசக்கர வாகனங்களில் வரும் இளைஞர்கள் மது அருந்துவது, கஞ்சா புகைப்பது உள்ளிட்ட சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு வருவதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். இந்த நிலையில் தான் கல்லூரி மாணவர்கள் கல்லூரிக்கு சம்பந்தமே இல்லாத இந்த ஏரிக்கரை பகுதியில் வந்து மழைக்கு ஒதுங்கியபோது பலியாகி உள்ளனர். அவர்கள் மது அருந்த வந்தார்களா? என்பது குறித்தும் சேலையூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    • முகேசின் அண்ணன் முத்துகிருஷ்ணன், சிறுவர்கள் 3 பேரையும் அப்பகுதியில் தேடிப் பார்த்தார்.
    • போலீசார் 3 பேரின் உடல்களையும் மீட்டு நாகர்கோவில் ஆசாரிபள்ளம் ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

    திசையன்விளை:

    நெல்லை மாவட்டம் உவரி அருகே உள்ள நவ்வலடி ரைஸ்மில் தெருவை சேர்ந்தவர் இசக்கிமுத்து. இவரது மகன் ராகுல் (வயது 14). அதே பகுதியை சேர்ந்தவர்கள் மகாலிங்கம் மகன் முகேஷ் (13), ரேஷன் கடை தெருவை சேர்ந்த செல்வராஜ் மகன் ஆகாஷ் (14).

    இவர்கள் 3 பேரும் நவ்வலடி பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் படித்து வந்தனர். ராகுல், ஆகாஷ் ஆகியோர் 9-ம் வகுப்பும், முகேஷ் 8-ம் வகுப்பும் படித்து வந்தனர். நேற்று மாலை 5.30 மணி அளவில் இவர்கள் 3 பேரும் நவ்வலடி கடலில் குளிக்க சென்றனர். பின்னர் நீண்ட நேரம் ஆகியும் அவர்கள் வீடு திரும்பவில்லை. இதனால் மாணவர்களின் பெற்றோர் பதற்றம் அடைந்தனர்.

    இதையடுத்து முகேசின் அண்ணன் முத்துகிருஷ்ணன், சிறுவர்கள் 3 பேரையும் அப்பகுதியில் தேடிப் பார்த்தார். அப்போது நவ்வலடி கடற்கரையில் அவர்கள் 3 பேரும் அணிந்திருந்த உடைகள், செருப்புகள் உள்ளிட்டவை கிடந்தது. அவர்கள் 3 பேரையும் காணவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த முத்துகிருஷ்ணன் தனது பெற்றோருக்கு போன் செய்து தகவலை தெரிவித்தார்.

    உடனே 3 சிறுவர்களின் பெற்றோர், உறவினர்கள் கடற்கரையில் திரண்டனர். தகவல் அறிந்து உவரி போலீசார் கடற்கரைக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். சிறுவர்கள் கடலில் குளிக்கும்போது கடல் அலையில் சிக்கியதை அறிந்த போலீசார், உவரி கடலோர போலீஸ் மற்றும் திசையன்விளை தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

    உடனடியாக கடலோர போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் கிங்ஸ்லி, சுகுமாரன் மற்றும் தீயணைப்பு போலீசார் படகு மூலம் காணாமல் போன மாணவர்களை தேடி கடலுக்குள் சென்றனர். அவர்கள் இரவு முழுவதும் தேடுதல் வேட்டையை தீவிரப்படுத்திய நிலையில் இன்று அதிகாலை 3 மணியளவில் சிறுவர்கள் ஆகாஷ் மற்றும் ராகுல் ஆகிய 2 பேரின் உடல்களும் உவரி அருகே கோடாவிளை கடற்கரையில் கரை ஒதுங்கியது.

    தகவல் அறிந்து அவர்களது பெற்றோர் அங்கு சென்று மாணவர்களின் உடல்களை பார்த்து கதறி அழுதனர். காலை 6.30 மணியளவில் கடலில் மாயமான மற்றொரு சிறுவன் முகேசின் உடலும் அதே கோடாவிளை பகுதியில் கரை ஒதுங்கியது. இதையடுத்து போலீசார் 3 பேரின் உடல்களையும் மீட்டு நாகர்கோவில் ஆசாரிபள்ளம் ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    ×