search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 229611"

    • ரூ.57,927 மானியத்தில் நுண்ணீர் பாசனம் அமைக்கப்பட்டுள்ளதை ஆய்வு செய்தார்.
    • உளுந்து பயிர்களுக்கு டிரோன் மூலம் பூச்சிகொல்லி மருந்து தெளிப்பதை ஆய்வு செய்தார்.

    திருவாரூர்:

    திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி வட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் வேளாண் பொறியியல், வேளாண்மை மற்றும் உழவர்நலத்துறை மற்றும் தோட்டக்கலை மற்றும் மலைபயிர்கள் துறையின் கீழ் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் குறித்து கலெக்டர் சாருஸ்ரீ வயல்வெளி ஆய்வு மேற்கொ ண்டு விவசாயிகளுக்கு வேளாண் இடுபொருட்களை வழங்கினார்.

    திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி வட்டம், மழவராயநல்லூர் பகுதியில் வேளாண்மை பொறியியல் துறை சார்பில் பண்ணை குட்டை அமைக்கப்பட்டு ள்ளதையும், நெடுவாக்கோ ட்டை பகுதியில் விதைப்பண்ணை வயல் திட்டத்தின் கீழ் 5 ஏக்கர் (வல்லுநர் விதை) பயிரிடப்பட்டு உள்ளதையும், நீடாமங்கலம் வட்டம், முக்குளம் சாத்தனூர் பகுதியில் தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை சார்பில் தமிழ்நாடு பாசன வேளாண்மை நவீனமயமாக்கல் திட்டத்தின் கீழ் ரூ.57927 மானியத்தில் நுண்ணீர் பாசனம் அமைக்க ப்பட்டு உள்ளதையும், நீடாமங்கலம் வட்டம், செருமங்கலம் பகுதியில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையின் சார்பில் நெல் குறுவை 2023-24 திட்டத்தின் கீழ் 20 சென்ட் பரப்பளவில் (திருப்பதி சாரம் 5 ரகம்) எந்திர நடவு பாய் நாற்றாங்கால் அமைக்கப்பட்டு வருவதையும், எடகீழையூர் பகுதியில் உளுந்து விதைப் பண்ணை வயல் 2023-24 திட்டத்தின் கீழ் 1 ஏக்கர் பரப்பளவில் (வம்பன் 10) பயிரிடப்பட்டுள்ளதையும், உளுந்து பயிர்களுக்கு டிரோன் மூலம் பூச்சிகொல்லி மருந்து தெளிப்பது உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் குறித்து மாவட்ட கலெக்டர் சாரூஸ்ரீ பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    முன்னதாக, மன்னார்குடி வட்டத்தில், வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையின் சார்பில் பேட்டரி தெளிப்பான், தார்பாய், பண்ணைக்கருவிகள் உள்ளிட்ட வேளாண் இடுபொருட்களும், ஒரு பயனாளிக்கு உழவு செய்யும் எந்திரத்தையும் கலெக்டர் வழங்கினார்.

    ஆய்வின்போது, செயற்பொறியாளர், வேளாண்மை பொறியியல் துறை ரேணுகாந்தன், தோட்டக்கலை துறை துணை இயக்குநர் வெங்கட்ராமன், வேளாண்மை துணை இயக்குநர் (மாநில திட்டம்) லெட்சுமிகாந்தன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) ஏழுமலை, தாசில்தார் கார்த்தி, வேளாண்மை உதவி இயக்குநர்கள் (மன்னார்குடி) இளம்பூரணார், விஜயகுமார் (நீடாமங்கலம்) உள்ளிட்ட அரசு அலுவலர்கள் உடன் இருந்தனர்.

    • பிரதம மந்திரி நுண்ணீர் பாசனத்திட்டம் கபிலர்மலை வட்டார தோட்டக்கலைத் துறை மூலம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
    • விவசாயிகளுக்கு நுண்ணீர் பாசன உபகரணங்கள் வழங்கிட 150 ஹெக்டர் பரப்பளவிற்கு இலக்கு வழங்கப்பட்டு விண்ணப்பங்கள் பதிவு செய்யும் பணி நடைபெற்று வருகிறது.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா கபிலர்மலை வட்டாரத்தில் பிரதம மந்திரி நுண்ணீர் பாசனத்திட்டம் கபிலர்மலை வட்டார தோட்டக்கலைத் துறை மூலம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

    நடப்பு ஆண்டில் தோட்டக்கலைப் பயிர் சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு நுண்ணீர் பாசன உபகரணங்கள் வழங்கிட 150 ஹெக்டர் பரப்பளவிற்கு இலக்கு வழங்கப்பட்டு விண்ணப்பங்கள் பதிவு செய்யும் பணி நடைபெற்று வருகிறது.

    அதன்படி சிறு, குறு விவசாயிகளுக்கு 5 ஏக்கர் வரை நுண்ணீர் பாசனம் அமைத்திட 100 சதவீத மானியத்திலும், பெரு விவசாயிகளுக்கு 75 சதவீத மானியத்திலும் அரசால் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்தின் மூலம் அமைத்துக்கொள்ளலாம்.

    ஆதி திராவிடர் மற்றும் பழங்குடி மற்றும் பெண் விவசாயிகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும். பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம், சிட்டா, அடங்கல், நில வரைபடம், குடும்ப அட்டை நகல், ஆதார் அட்டை நகல், வங்கி கணக்கு புத்தக நகல், சிறு,குறு விவசாயி சான்றி தல் ஆகிய ஆவணங்களை கபிலர்மலை வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநர் அலுவலகத்தில் வழங்கி முன்பதிவு செய்து பயன் பெறலாம்.

    மேலும் புதிதாக நுண்ணீர் பாசனம் அமைக்கவுள்ள விவசாயிகளுக்கு துணை நீர் மேலாண்மை திட்டத்தின் கீழ் மெயின் பைப் லைன் அமைக்க அதிகபட்ச மானியமாக ரூ.10 ஆயிரம், புதியதாக பயன்பாட்டிற்கு கொண்டு வரும் கிணறு அல்லது போர்வெல்லில் மின்மோட்டார் பொருத்திக் கொள்ள ரூ.15 ஆயிரம் மற்றும் பாசனத்திற்காக நீர் தேக்கத் தொட்டி 116 கனமீட்டர் அளவில் அமைத்திட மானியமாக ரூ.40 ஆயிரம் வழங்கப்படும் என கபிலர்மலை வட்டார தோட்டக்கலைத்துறை உதவி இயக்குநர் சின்னதுரை தெரிவித்துள்ளார்.

    • தென்னங்கன்று ஒன்றிற்கு ரூ. 40 வீதம் மானியம் பெறலாம்.
    • உழவன் செயலி மூலம் முன்பதிவு செய்து கொள்ளலாம்.

    பேராவூரணி:

    சேதுபாவாசத்திரம் வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் ஜி.சாந்தி ( பொ) வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிப்பதாவது:-

    தென்னை சாகுபடியில் உற்பத்தித்திறன் மற்றும் உற்பத்தியை அதிகரிப்பதே இத்திட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.

    சேதுபாவா சத்திரம் வட்டாரத்தில் 7500 எக்டருக்கு மேல் தென்னை சாகுபடி செய்யப்படுகிறது.

    இதில் ஆங்காங்கே பூச்சி மற்றும் நோயால் பாதிக்கப்பட்ட மரங்கள், காய்க்காத மரங்கள், வயது முதிர்ந்த மரங்கள் காணப்படு கின்றன. இவற்றை வெட்டி அப்பறப்ப டுத்துவதற்கு தென்னை மரம் ஒன்றிற்கு ரூபாய் 1000 வீதம் அதிகபட்சமாக ஒரு எக்டருக்கு 32 மரங்களுக்கு மானியம் பெறலாம்.

    தென்னை மரங்களை அப்புறப்படுத்திய பிறகு அவ்விடத்தில் புதிய தென்னங்கன்றுகள் நடவு செய்வதற்கு தென்னங்கன்று ஒன்றிற்கு ரூபாய் 40 வீதம் மானியமும் அதிகபட்சமாக ஒரு எக்டரில் 100 தென்னங்கன்றுகளுக்கு மானியம் பெறலாம்.

    தென்னந்தோப்புகளில் ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து நிர்வாகத்தை செயல்படுத்திட முதலாம் ஆண்டு ரூ.8,750/ எக்டர், இரண்டாம் ஆண்டு ரூ.8,750 எக்டர் மானியமாக பெறலாம்.

    பாதிக்கப்பட்ட விவசாயிகள் தங்கள் பகுதி உதவி வேளாண்மை அலுவலரை நேரில் அணுகி அல்லது உழவன் செயலி மூலம் முன்பதிவு செய்து கொள்ள கேட்டுக்கொள்ளப்ப டுகிறது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • கடந்த ஆண்டு 1 லட்சத்து 47 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் குறுவை சாகுபடி செய்யப்பட்டது.
    • தங்கு தடையின்றி விவசாயிகளுக்கு மானிய விலையில் இடுபொருட்கள் வழங்க வேண்டும்.

    திருவாரூர்:

    டெல்டா மாவட்ட பாசனத்திற்காக மேட்டூர் அணை ஜூன் மாதம் 12ஆம் தேதி திறக்கப்படும் என தமிழக அரசின் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த அறிவிப்பிற்கு திருவாரூர் மாவட்ட விவசாயிகள் தங்களது வரவேற்பை தெரிவித்துள்ளனர்.

    திருவாரூர் மாவட்டம் முழுவதும் 80 சதவீதம் ஆற்றுப் பாசனத்தை நம்பியும், 20 சதவீதம் ஆழ்துளை கிணறுகளை நம்பியும் விவசாயிகள் சாகுபடி பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

    தற்பொழுது மேட்டூர் அணை திறக்கப்படும் என அறிவிப்பையடுத்து கோடை உழவு பணிகளில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

    திருவாரூர் மாவட்டத்தில் கடந்தாண்டு 1 லட்சத்து 47 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் குறுவை சாகுபடி செய்யப்பட்டது.

    இந்த ஆண்டு அதைவிட கூடுதலாக சாகுபடி பணிகளை விவசாயிகள் மேற்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

    ஆகையால் குருவை சாகுபடி பணிகள் சீராக நடைபெற உதவிடு வகையில் வேளாண் கிடங்குகள் மூலமாக 50 சதவீதம் மானியத்தில் விதை, உரம், பூச்சிக்கொல்லி மருந்து உள்ளிட்ட இடுபொருட்களை தடையின்றி வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

    குறிப்பாக கடந்தாண்டு சம்பா அறுவடை நேரத்தில் மழை பெய்து மிகப் பெரிய அளவில் விவசாயிகள் பொருளாதார நஷ்டத்தை சந்தித்துள்ளனர்.

    ஆகையால் இந்த ஆண்டு குறிப்பிட்ட காலத்திற்குள் சாகுபடி பணிகளை செய்து முடிக்கும் வகையில் தங்கு தடையின்றி மானிய விலையில் இடுபொருட்கள் வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    அதுபோன்று திறந்து விடப்படும் தண்ணீர் ஆறுகளில் மட்டும் சென்று கடலில் கலந்து வீணாகாமல் தடுக்க வேண்டும்.

    ஆறுகளில் இருந்து பாசனத்திற்காக பிரியும் சிறு, குறு வாய்க்கால்களிலும் செல்வதற்கான சூழ்நி லையை ஏற்படுத்த வேண்டும்.

    அவ்வாறு தண்ணீர் சென்றால் மட்டுமே விவசாயத்திற்கு பயன்படும்.

    ஆகையால் சிறு, குறு வாய்க்கால்களை முழுமையாக தூர்வாரிட வேண்டும்.

    மேலும் நிபந்த னை இல்லாமல் வேளாண் கடன்கள் வழங்க வேண்டும்.

    இவைகளை குறையின்றி செய்வதன் மூலம் இந்த ஆண்டு குறுவை சாகுபடி வெற்றிகரமாக செய்து முடிக்க முடியும் என விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

    • 98 பஞ்சாயத்துகளில் வாழ்வாதாரம் மேம்படுத்த திட்டம்
    • விண்ணப்பிக்க விவசாயிகளுக்கு அழைப்பு

    புதுக்கோட்டை,

    புதுக்கோட்டை மாவட்டத்தில் மின் இணைப்புடன் கூடிய ஆழ்துளை கிணறு அமைக்க விவசாயிகளுக்கு மானியம் வழங்கப்படுகிறது. முன்பதிவு செய்து பயன்பெறலாம் என வேளாண்மை இணை இயக்குநர் மா. பெரியசாமி விவசாயிகளுக்கு அழைப்பு விடுத்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு:-

    புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள 98 பஞ்சாயத்துக்களில் விவசாயிகளின் வாழ்வா தாரத்தை மேம்படுத்தும் வகையில் ஒவ்வொரு பஞ்சாயத்துக்கும் அரசு மானியத்துடன் பண்ணை குட்டைகள், உழுவை எந்திரங்கள், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் விவசாயிகளுக்கு மின் இணைப்புடன் கூடிய ஆழ்துளை கிணறு அமைத்தல் போன்ற சேவைகள் வழங்கப்பட உள்ளது. இத்திட்டங்களுக்கான பயனாளிகள் தேர்வு மற்றும் உழவன் செயலி வாயிலாக முன் பதிவு ஆகியவை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    எனவே விவசாயிகள் அனைவரும் தங்களுடைய நில உரிம விவரம் (பட்டா, சிட்டா) ஆதார் அட்டை மற்றும் வங்கி கணக்கு புத்தகம் நகல் போன்ற விவரங்களுடன் தங்கள் பகுதி வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் அல்லது தோட்டக்கலை உதவி இயக்குநரை தொடர்பு கொண்டு பதிவு செய்து கொள்ளலாம்.

    • நோய் தாக்குதல், விலை சரிவு உள்ளிட்ட காரணங்களால் விவசாயிகள் பாதிக்கப்படுகின்றனர்.
    • கோவை வேளாண் பல்கலைகழகம் தென்னை ஊட்டச்சத்து டானிக் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது.

    பல்லடம் :

    பல்லடம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில், ஆயிரக்கணக்கான ஏக்கர்களில் தென்னை விவசாயம் நடைபெற்று வருகிறது. இங்கு நிலவும் விவசாய தொழிலாளர்கள் பற்றாக்குறையால், விவசாயிகள் தென்னை விவசாயத்திற்கு மாறி வருகின்றனர். இந்த நிலையில் தென்னையில் வெள்ளை ஈ தாக்குதல் உள்பட பல்வேறு நோய் தாக்குதல், விலை சரிவு உள்ளிட்ட காரணங்களால் விவசாயிகள் பாதிக்கப்படுகின்றனர். இதற்கிடையே தென்னை மரங்களின் வளர்ச்சி மற்றும் மகசூல் அதிகரிக்கும் வகையில் கோவை வேளாண் பல்கலைகழகம் சார்பில்தென்னை ஊட்டச்சத்து டானிக் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது.

    ஆனால் தென்னை ஊட்டச்சத்து டானிக் எளிதாக விவசாயிகளுக்கு கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது.எனவே தமிழக அரசு தென்னை விவசாயிகளுக்கு ஊட்டச்சத்து டானிக் மானியத்தில் வழங்க விவசாயிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். இது குறித்து விவசாயி சின்னக்காளிபாளையம் ஈஸ்வரன் கூறியதாவது :- தென்னையில் வெள்ளை ஈ தாக்குதல் உள்பட பல்வேறு நோய் தாக்குதல், விலை சரிவு உள்ளிட்ட காரணங்களால் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.இந்தநிலையில் கோவை வேளாண் பல்கலைகழகம் தென்னை ஊட்டச்சத்து டானிக் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது.ஆனால் தென்னை ஊட்டச்சத்து டானிக் விவசாயிகளுக்கு கிடைக்காத நிலை உள்ளது. எனவே தென்னை வளர்ச்சி வாரியம் சார்பில் அதனை கொள்முதல் செய்து தென்னை விவசாயிகளுக்கு மானியத்தில் வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்/ இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • நரிக்குடி யூனியனில் பழ மரக்கன்றுகள் சாகுபடி செய்ய விவசாயிகளுக்கு மானியம் வழங்கப்படுவதாக வேளாண் அதிகாரி தெரிவித்துள்ளார்.
    • பொறுப்பு அலுவலர்களை தொடர்பு கொள்ள வேண்டும்.

    திருச்சுழி

    விருதுநகர் மாவட்டம் திருச்சுழி தாலுகா நரிக்குடி ஒன்றியத்தில் நடப்பாண்டு க்கான கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கி ணைந்த வளர்ச்சி திட்டத்தின் கீழ் அ.முக்குளம், வீரசோழன், அழகாபுரி, மினாக்குளம், நல்லுகுறிச்சி, வேளாநேரி, மேலப்பருத்தியூர், கீழக்கொன்றைக்குளம், நாலூர் ஆகிய 9 ஊராட்சிகள் தேர்ந்தெ டுக்கப் பட்டுள்ளன.

    இந்த திட்டத்தின் கீழ் தேர்ந்தெடுக்கப்பட்ட மேற்கண்ட 9 ஊராட்சிகளை சேர்ந்த விவசாயிகளுக்கு சொந்தமான 10 ஏக்கர் முதல் 15 ஏக்கர் வரையிலான புன்செய் நிலங்களில் போர்வெல் அமைத்து, மின் இணைப்பு அல்லது சூரிய சக்தியுடன் கூடிய மோட்டார் அமைத்து அதில் நுண்ணீர் பாசன திட்டத்தின் கீழ் பழ மரக்கன்றுகள் சாகுபடி செய்வதற்கு மானியம் வழங்கப்பட உள்ளது.

    மேலும் மானிய விலையில் பவர் டிரில்லர் கருவியும், 100 சதவீத மானி யத்தில் விவசாயிகளுக்கு பண்ணைக் குட்டையும் அமைத்து தரப்படும் என்று தெரிவிக்கப் பட்டுள்ளது. மேற்கண்ட 9 ஊராட்சிகளை சேர்ந்த ஆதிதிராவிடர் விவசாயி களுக்கு கலைஞரின் அனை த்து கிராம ஒருங்கிணைந்த வளர்ச்சி திட்டத்தின் கீழ் இலவசமாக ஆழ்துளைக்கி ணறு மற்றும் மின் இணைப்பு அல்லது சூரிய சக்தியுடன் கூடிய மோட்டார் இணைப்பு வழங்கப்பட உள்ளது.

    நரிக்குடி ஒன்றியத்திற்கு உட்பட்ட மேற்கண்ட ஊராட்சிகளை சேர்ந்த தகுதி வாய்ந்த விவசாயிகள் இந்த திட்டத்தின் கீழ் இணைந்து பயனடையலாம். மேலும் விபரங்களுக்கு அந்தந்த ஊராட்சிகளுக்காக நியமிக்கப்பட்டுள்ள பொறுப்பு அலுவலர்களை தொடர்பு கொள்ள வேண்டும்.

    மேற்கண்ட தகவலை நரிக்குடி வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் வீரேசுவரன் தெரிவித்துள்ளார்.

    • விவசாயிகள் மானியம் பெறுவதற்கு பதிவு செய்து பயன்பெறலாம்.
    • மேற்கண்ட தகவலை கலெக்டர் மதுசூதன் ரெட்டி தெரிவித்துள்ளார்.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்டம் தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை சார்பாக 2023-24ம் ஆண்டு தேசிய தோட்டக்கலை இயக்க திட்டத்தின் மூலம் தோட்டக்கலை பயிர்கள் சாகுபடியை ஊக்குவித்து, உற்பத்தியை பெருக்கிட பல்வேறு திட்டங்கள் செயல் படுத்தப்பட்டு வருகிறது.

    தேசிய தோட்டக்கலை இயக்கத்தின் கீழ் நடப்பாண்டிற்கு ரூ.515.534 கோடி நிதி ஒதுக்கீடு முன்மொழிவு பெறப்பட்டு, திட்ட இனங்களில் பயனாளி கள் தேர்வு நடைபெற்று வருகிறது.

    மா பரப்பு விரிவாக்கம், வீரிய ஒட்டு ரக காய்கறிகள் பரப்பு விரிவாக்கம், கொய்யா பரப்பு விரி வாக்கம், பப்பாளி பரப்பு விரிவாக்கம், பலா பரப்பு விரிவாக்கம், நெல்லி பரப்பு விரிவாக்கம், முந்திரி பரப்பு விரிவாக்கம், மல்லிகை மற்றும் கிழங்கு வகை பூக்கள் (சம்பங்கி) பரப்பு விரிவாக்கம், பழைய தோட்டங்கள் புதுப்பித்தல் (மா மற்றும் முந்திரி), பசுமை குடில் மற்றும் நிழல்வலை கூடம் அமைத்தல், தேனீ வளர்ப்பு, பண்ணைக்குட்டை அமைத்தல், சிப்பம் கட்டும் அறை அமைத்தல், வெங்காய சேமிப்பு கிடங்கு அமைத்தல் உள்ளிட்ட திட்டங்களில் பதிவு செய்து பயன் பெறலாம்.

    விவசாயிகள் கணினி சிட்டா, அடங்கல், குடும்ப அட்டை நகல், ஆதார் அட்டை நகல், நில வரைபடம், 3 பாஸ்போர்ட் அளவு புகைப்படங்கள், மண் மற்றும் நீர் பரிசோதனை அட்டை, வங்கி கணக்கு புத்தக நகல் ஆகியவற்றை கொண்டு வந்து tnhorticulture.tn.gov.in/thnortinet/registration-new.php என்ற இணையதளத்தில் பதிவு செய்து கொள்ளலாம் அல்லது சிவகங்கை மாவட்டத்தில் உள்ள அந்தந்த வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநர் அலுவலகத்தில் சமர்ப்பித்து சொட்டு நீர் பாசனம் அமைக்க பெயரை பதிவு செய்து பயன்பெற லாம்.

    மேற்கண்ட தகவலை கலெக்டர் மதுசூதன் ரெட்டி தெரிவித்துள்ளார்.

    • ரூ. 87 ஆயிரத்து 500 விவசாயிகளின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும்.
    • நீர் இழப்பை குறைக்கவும் மல்சிங் சீட் வழங்கப்பட உள்ளது.

    பல்லடம் :

    பல்லடம் அருகே உள்ள பொங்கலூர் வட்டார தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் ஷர்மிளா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: - வெங்காய பட்டறை அமைக்க பொங்கலூர் வட்டாரத்தில் உள்ள விவசாயிகளுக்கு 50 சதவீதம் பின்னேற்பு மானியமாக ரூ. 87 ஆயிரத்து 500 விவசாயிகளின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும். அதுபோல் குழித்தட்டு காய்கறி நாற்றுகளான தக்காளி, மிளகாய், சுரை மற்றும் பழ வகைகளான கொய்யா, எலுமிச்சை, பப்பாளி ஆகியவை இலவசமாக 100 சதவீதம் மானியத்தில் வழங்கப்பட உள்ளது.

    விவசாய நிலங்களில் களை வராமல் தடுக்கவும், நீர் இழப்பை குறைக்கவும் மல்சிங் சீட் வழங்கப்பட உள்ளது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

    • கொரானாவால் வேலையிழந்து நாடு திரும்பியோருக்கு தொழில் தொடங்க மானியத்துடன் கடனுதவி பெற விண்ணப்பிக்கலாம் என விருதுநகர் கலெக்டர் தெரிவித்துள்ளார்.
    • ரூ.5 லட்சம் வரையிலும் கடனுதவி பெற்றுக்கொள்ளலாம்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்ட கலெக்டர் ஜெயசீலன் விடுத்துள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்ப தாவது:-

    கொரோனா பரவலால் வெளிநாட்டில் வேலை இழந்து தாயகம் திரும்பிய தமிழர்களின் வாழ்வா தாரத்தை மேம்படுத்தும் நோக்கத்துடன் தமிழக அரசு புலம்பெயர்ந்தோர் வேலை வாய்ப்பு உருவாக்கும் திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளது. வெளிநாடுகளில் வேலை வாய்ப்பு விசாவுடன் குறைந்தது 2 ஆண்டுகள் பணிபுரிந்து கொரோனா பரவலால் வேலையிழந்து 1.1.2020 அன்று அல்லது அதற்கு பிந்தைய நாட்களில் நாடு திரும்பிய தமிழர்கள் இந்த திட்டத்தின் கீழ் சுயதொழில் தொடங்க மானியத்துடன் கடனுதவி பெற விண்ணப்பிக்கலாம்.

    இந்த திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க விண்ணப்ப தாரர் குறைந்தபட்சம் 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். குறைந்தபட்ச வயது 18-க்கு மேலாகவும், அதிகபட்ச வயது 55-க்கு மிகாமலும் இருக்க வேண்டும். இந்த திட்டத்தின் கீழ் உற்பத்தி தொழில் திட்டங்க ளுக்கு அதிகபட்சமாக ரூ.15 லட்சம் வரையிலும், வியாபார மற்றும் சேவை தொழில் திட்டங்களுக்கு அதிகபட்சமாக ரூ.5 லட்சம் வரையிலும் கடனுதவி பெற்றுக்கொள்ளலாம்.

    திட்ட தொகையில் பொதுப் பிரிவு பயனாளர்கள் 10 சதவீதம் மற்றும் சிறப்பு பிரிவினர் 5 சதவீதம் தமது பங்களிப்பாக செலுத்த வேண்டும். மீதமுள்ள தொகை வங்கிக்கடனாக வழங்கப்படும். இந்த திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்புவோர் கடவுசீட்டு, விசா நகல், கல்வித்தகுதி சான்றிதழ், இருப்பிட சான்றிதழ், சாதி சான்றிதழ், மாற்றுத்திற னாளிகளாக இருந்தால் அதற்கான அடையாள அட்டை மற்றும் திட்ட விவரங்கள் ஆகியவற்றுடன் விண்ணப்பிக்க வேண்டும்.

    அரசு மானியமாக திட்ட தொகையில் 25 சதவீதம் அல்லது அதிகபட்சமாக ரூ.2.50 லட்சம் வரை வழங்கப்படும். மானியத் தொகை 3 ஆண்டுகளுக்கு வைப்பு நிதியாக வைக்கப்பட்டு பின்னர் கடன்தொகையில் ஈடு செய்யப்படும். திட்டத்தின் சிறப்பு அம்சமாக கடன் வழங்கப்பட்ட பின் 6 மாதங்கள் கழித்து முதல் தவணைத் தொகையை வங்கியில் செலுத்த வழி வகை செய்யப்பட்டுள்ளது. 5 ஆண்டுகளுக்குள் கடன் தவணையை திரும்ப செலுத்த வேண்டும்.

    கொரோனா பரவலால் வேலையிழந்து தாயகம் திரும்பிய விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த தகுதியும், ஆர்வமும் உள்ளவர்கள் வாழ்வா தாரத்தை மேம்படுத்த, இந்த திட்டத்தின் கீழ் தொழில் தொடங்கி பயன்பெற பொது மேலாளர், மாவட்ட தொழில் மையம், மாவட்ட பெருந்திட்ட வளாகம், விருதுநகர் அலுவலகத்தை நேரிலோ அல்லது 89255 34036 என்ற எண்ணிலோ தொடர்பு கொள்ளலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • மத்திய அரசின் அனைவருக்கும் வீடு திட்டத்தில், கிராமப்புற மக்கள் வீடு கட்ட மானியம் வழங்கப்பட்டது.
    • கிராமப்புற மக்களின் வாழ்வாதாரம் மேம்படும் வகையில் மானியத்துடன் கூடிய வீடு கட்டும் திட்டங்கள் அமலில் உள்ளன.

    தாராபுரம்:

    கிராமப்புற மக்களின் வாழ்வாதாரம் மேம்படும் வகையில் மானியத்துடன் கூடிய வீடு கட்டும் திட்டங்கள் அமலில் உள்ளன. குடிசைகளை ஓட்டுவீடாக மாற்ற 12 ஆயிரம் ரூபாய் மானியத்துடன் கச்சா வீடுகள் கட்டப்பட்டது.60 ஆயிரம் ரூபாய் மானியத்துடன் கான்கிரீட் தொகுப்பு வீடு கட்டும் திட்டமும் இருந்தது.

    தி.மு.க., - அ.தி.மு.க., ஆட்சிகளில் வீடு கட்டும் திட்டம் தொடர்ந்தது. கடந்த 2011 முதல் பசுமை வீடு கட்டும் திட்டம் செயல்படுத்தப்பட்டது. நடுத்தர மற்றும் ஏழை மக்கள் அரசு மானியத்துடன் கான்கிரீட் வீடு கட்டினர். மத்திய அரசின் அனைவருக்கும் வீடு திட்டத்தில், கிராமப்புற மக்கள் வீடு கட்ட மானியம் வழங்கப்பட்டது.

    தி.மு.க., ஆட்சிக்கு வந்த பிறகு வீடு கட்டும் திட்டம் அறிவிக்கப்பட்டது. இதுநாள் வரை பயன்பாட்டுக்கு வரவே இல்லை. பயனாளிகள் கணக்கெடுப்பு பணியே முடியவில்லை. கட்டுமான பொருட்கள் விலை கடுமையாக உயர்ந்ததால் அரசு மானியம் உயர்த்தப்படுமென எதிர்பார்த்தனர். மாறாக கடந்த ஆண்டு வீடு கட்டும் திட்டம் அடியோடு நிறுத்தப்பட்டது.

    நகர்ப்புறத்தை ஒட்டியுள்ள ஊராட்சி மக்களுக்காக, குடிசைமாற்று வாரியம் மூலமாகவும் கான்கிரீட் வீடு கட்ட 2.10 லட்சம் ரூபாய் மானியம் வழங்கும் திட்டம் நடைமுறையில் இருந்தது.இத்திட்டங்கள் 2021-22க்கு பிறகு செயல்பாட்டில் இல்லை. கிராமப்புறத்தில் வசிக்கும் ஏழை, எளிய மக்கள் அரசு மானியத்தில் கான்கிரீட் வீடு கட்டலாம் என்ற ஆர்வத்தில் இருந்தனர். அனைவரும், இதுவரை ஏமாற்றத்துடன் காத்திருக்கின்றனர்.

    பொதுமக்கள் கூறுகையில், பசுமை வீடு திட்டம் நிறுத்தப்பட்ட பிறகு மாற்று திட்டம் வரவே இல்லை. மாநில அரசின் வீடு கட்டும் திட்டம் அறிவிப்புடன் நிற்கிறது.மத்திய அரசு திட்ட வீடு கட்ட, பல்வேறு நிபந்தனைகள் விதிக்கப்படுகிறது. கடந்த நிதியாண்டில் அத்திட்டமும் வரவில்லை. குறிப்பாக கிராமப்புற மக்களுக்கான திட்டம் நிறுத்தப்பட்டது கவலை அளிக்கிறது.

    வறுமைக்கோட்டுக்கு கீழ் வசிக்கும் கிராமப்புற மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் மானியத்துடன் கான்கிரீட் வீடு கட்டும் திட்டத்தை மீண்டும் செயல்படுத்த மத்திய, மாநில அரசுகள் முன்வர வேண்டும் என்றனர். 

    • 0.50 ஹெக்டர் தர்பூசணி சாகுபடி செய்வதற்கு மானியம் வழங்கப்பட்டது.
    • மணல் திடல்களில் தர்பூசணி அதிகளவில் பயிரிடுவது குறித்து ஆய்வு செய்தனர்.

    தரங்கம்பாடி:

    உலக வங்கி நிதியின் கீழ் தமிழ்நாடு பாசன வேளாண்மை நவீன மயமாக்கல் திட்டம், மயிலா டுதுறை மாவ ட்டத்தில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

    தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறையின் கீழ் தர்பூசணி சாகுபடியை மேம்படுத்தும் வகையில் தரங்கம்பாடி தாலுக்கா, செம்பனார்கோயில் ஒன்றிய பகுதிகளில் திருக்கடையூர் ஊராட்சிக்கு உட்பட்ட சிங்கனோடை கிராமத்தைச் சேர்ந்த விவசாயிக்கு 0.50 ஹெக்டர் தர்பூசணி சாகுபடி செய்வதற்கு மானியம் வழங்கப்பட்டது.

    மேலும் இந்த பகுதியில் மணல் திடல்களில் தர்பூசணி அதிகளவில் பயிரிடுவது குறித்து ஆய்வு செய்தனர்.

    இந்த நிலையில் தர்பூசணி சாகுபடி செய்யப்பட்ட வயலை உலக வங்கியின் சார்பாக தோட்டக்கலை நிபுணர் (உணவு மற்றும் விவசாய அமைப்பு) சாஜன் கொரியன், தோட்டக்கலை நிபுணர் டாக்டர் வித்யா சாகர் மற்றும் அதிகாரிகள் ஆய்வு செய்து பார்வை யிட்டனர்.

    ஆய்வின்போது தோட்டக்கலை துணை இயக்குனர் (பொறுப்பு) ரமேஷ், தோட்டக்கலை அலுவலர் கவிராகவி, சீர்காழி தோட்டக்கலை அலுவலர் பார்கவி, உதவி தோட்டக்கலை அலுவ லர்கள் மற்றும் விவசாயிகள் உடன் இருந்தனர்.

    ×