என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 229611"

    • நிலமற்ற ஆதிதிராவிட மற்றும் பழங்குடியின விவசாய தொழிலாளர்கள் விவசாயநிலம் வாங்க மானியம்” வழங்கப்படுகிறது.
    • விவசாய நிலம் வாங்க ரூ.10 கோடி மானியம் வழங்கப்படுகிறது.

    திருப்பூர் :

    2022-23 ஆம் நிதியாண்டிற்கு தாட்கோ திட்டம் மூலம் "நிலமற்ற ஆதிதிராவிட மற்றும் பழங்குடியின விவசாய தொழிலாளர்கள் விவசாயநிலம் வாங்க மானியம்" வழங்கப்படுகிறது. இது குறித்து திருப்பூர் மாவட்ட கலெக்டர் வினீத் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    ஆதிதிராவிடர் - பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் புதிய அறிவிப்பின்படி, தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் வீட்டுவசதி மேம்பாட்டுக் கழகம், (தாட்கோ) 2022-23ம் நிதியாண்டிற்கு தாட்கோ திட்டம் மூலம் "200 நிலமற்ற ஆதிதிராவிட மற்றும் பழங்குடியின விவசாய தொழிலாளர்கள் விவசாய நிலம் வாங்க ரூ.10 கோடி மானியம்" வழங்கப்படுகிறது.

    திருப்பூர் மாவட்டத்தில் உள்ள ஆதிதிராவிடர் இனத்தை சார்ந்த 4 நபர்களுக்கு ரூ.20லட்சம் மானியமும், பழங்குடியின இனத்தை சார்ந்த 1 நபருக்கு ரூ.5 லட்சம் மானியமும் ஆக மொத்தம் 5 நபர்களுக்கு ரூ.25 லட்சம் மானியம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இத்திட்டத்திற்கான வழிகாட்டு நெறிமுறைகள்: ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இனத்தைச் சார்ந்த மகளிருக்குமுன்னுரிமை அளிக்கப்படும். மகளிர் இல்லாத குடும்பங்களில் கணவர்அல்லது மகன்களுக்கு வழங்கப்படும். வயது 18 முதல் 65 வயதிற்குள்ளாக இருக்க வேண்டும். விண்ணப்பதாரர் விவசாயத்தை தொழிலாக கொண்டவராக இருக்க வேண்டும்.

    விவசாய கூலி வேலை செய்பவராகவும் இருக்கலாம். விண்ணப்பதாரர் மற்றும் அவர் குடும்பத்தினர் தாட்கோ திட்டத்தின் கீழ்இதுவரை மானியம் எதுவும் பெற்றிருக்க கூடாது.

    ஒருவர் ஒரு முறை மட்டுமே மானியம் பெற தகுதியுடையவர். ஒரு திட்டத்தின் கீழ் ஒரு முறை மானிய உதவி பெற்றால், பின்னர் அவர் தாட்கோ செயல்படுத்தும் சிறப்பு மைய உதவியுடனான பெற பொருளாதார மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் பயன் தகுதியற்றவராகிறார்.

    மேற்கண்ட இத்திட்டம் தொடர்பான www.application.tahdco.com என்ற இணையதளத்தில் பதிவேற்றம் செய்யுமாறும் கூடுதல் தகவல்களை தெரிந்து கொள்ள கீழ்க்கண்ட முகவரியில் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. மாவட்ட மேலாளர் அலுவலகம், தாட்கோ , அறை எண்: 501 (ம) 503, 5-வது தளம், மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகம், பல்லடம் ரோடு, திருப்பூர் 641604. தொடர்புக்கு : செல்போன் எண்: 94450 29552, தொலைபேசி : 0421-2971112 என்ற முகவரி , தொலைபேசி எண்ணை அணுகலாம். திருப்பூர் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி கொள்ளுமாறு கலெக்டர் தெரிவித்துள்ளார். 

    • அலங்காநல்லூரில் பட்டதாரி இளைஞர்களுக்கு தொழில் தொடங்க மானியம் வழங்கப்படுகிறது.
    • இந்த தகவலை வேளாண்மை துறை தெரிவித்துள்ளார்.

    அலங்காநல்லூர்

    மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் வட்டாரத்தில் மாநில வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் பட்டதாரி இளைஞர்களை ஊக்கப்படுத்தும் வகையில் வேளாண் சார்ந்த தொழில் தொடங்குவதற்கு 25 சதவீதம் மானியமாக அதிகபட்சம் ரூ. ஒரு லட்சம் வரை மானியம் வழங்கப்படுகிறது.

    பயனாளிகள் இளங்கலை வேளாண்மை, தோட்டக்கலை அல்லது வேளாண் பொறியியல் படிப்பு படித்தவராக இருக்க வேண்டும். இத்திட்டத்தில் 21 வயது முதல் 48 வயது வரை உள்ளவராகவும், அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணியில் இல்லாதவராகவும் இருக்க வேண்டும். பயனாளிகள் தனது சொந்த மூலதனத்தில் வேளான் சார்ந்த தொழில் செய்ய வேண்டும். நிலம் மற்றும் தளவாடங்கள் போன்ற உள்கட்டமைப்புக்கான செலவுகள் திட்ட மதிப்பீட்டில் சேர்க்கக் கூடாது.

    கலைஞர் திட்ட கிராமங்களான பண்ணைகுடி, அச்சம்பட்டி, மணியஞ்சி, பெரியஇலந்தைகுளம், வடுகபட்டி, தெத்தூர், எரம்பட்டி, சத்திர வெள்ளாளப்பட்டி வலையபட்டி, அய்யூர், முடுவார்பட்டி ஆகிய ஊர்களை சேர்ந்தவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

    மேற்கண்ட தகவலை வேளாண் உதவி இயக்குனர் ராமசாமி தெரிவித்துள்ளார்.

    • விதை, உரம் உள்ளிட்ட இடு பொருட்கள் குடிமங்கலம் வேளாண் விரிவாக்க மையத்தில் மானிய விலையில் வழங்கப்படுகிறது.
    • நுண்ணுாட்ட சத்துக்கள் மற்றும் பயிர் பாதுகாப்பு மருந்துகள் மானிய விலையில் வழங்கப்பட்டு வருகிறது.

    குடிமங்கலம் :

    குடிமங்கலம் பகுதிகளில் பருவ மழை துவங்கியுள்ள நிலையில் விவசாயிகள் உழவுப்பணியை துவக்கியுள்ளனர்.பயிர் சாகுபடிக்கு தேவையான, விதை, உரம் உள்ளிட்ட இடு பொருட்கள் குடிமங்கலம் வேளாண் விரிவாக்க மையத்தில் மானிய விலையில் வழங்கப்படுகிறது.

    இது குறித்து குடிமங்கலம் வட்டார வேளாண் உதவி இயக்குனர் வசந்தா கூறியதாவது:-

    உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பு இயக்கம், தமிழக முதல்வரின் மானாவாரி மேம்பாட்டு இயக்கம் மற்றும்விதை கிராமத்திட்டத்தின் வாயிலாக வேளாண் இடுபொருட்களான, விதைகள், நுண்ணுயிர் உரங்கள், நுண்ணுாட்ட சத்துக்கள் மற்றும் பயிர் பாதுகாப்பு மருந்துகள் மானிய விலையில் வழங்கப்பட்டு வருகிறது.

    குடிமங்கலம் வட்டாரத்திலுள்ள வேளாண் விரிவாக்க மைய கிடங்குகளில், மக்காச்சோளம் கோ.எச்.எம்.,8, சோளம், கோ-32, கம்பு, கோ-10, உளுந்து, வம்பன் 8,9, பாசிபயறு, கோ-8, கொண்டைக்கடலை என்.பி.ஜி., -119, 47, நிலக்கடலை - தரணி ரக விதைகள் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. இவை விவசாயிகளுக்கு மானிய விலையில் வழங்கப்படுகிறது.

    மேலும் நுண்ணுயிர் உரங்களான, அசோஸ்பைரில்லம் மற்றும் பாஸ்போ பாக்டீரியம், திட வடிவத்திலும், திரவ நிலையிலும் இருப்புள்ளது.நுண்Èட்ட உரங்களான தானிய வகை, பயறு வகை,பருத்தி வகைநுண்ணுாட்டங்களும் தேவையான அளவு இருப்பு உள்ளது.தேவைப்படும் விவசாயிகள், சிட்டா, ஆதார் அட்டை நகலுடன் வந்து, மானிய விலையில், விதை,உரங்களை பெற்றுபயனடையலாம்.

    மேலும் தென்னை மரத்திற்குநுண்Èட்டச்சத்து பற்றாக்குறையால் குரும்பை உதிர்வதை தடுக்க நுண்Èட்ட உரம் இடுவதற்கு சரியான தருணமாகும்.ஒரு தென்னை மரத்திற்கு, 6 மாதத்திற்கு ஒரு முறை அரைக்கிலோ இட வேண்டும். குடிமங்கலம் வட்டார வேளாண் விரிவாக்க மையங்களில், விவசாயிகளுக்கு தேவையான தென்னை நுண்ணுாட்ட உரமும், போதிய அளவு இருப்பு உள்ளது. இதனையும்,தென்னை விவசாயிகள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.

    இவ்வாறு குடிமங்கலம் வட்டார வேளாண் உதவி இயக்குனர் தெரிவித்தார்.

    • மத்திய அரசு நிதியுதவியுடன் கூடிய தேசிய கால்நடை இயக்க திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
    • செம்மறியாடுகள் இனவிருத்திக்காக தொழில் முனைவோரை உருவாக்க 50 சதவீதம் மானியம் வழங்கப்படுகிறது.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

    தொழில் முனைவோர் மத்திய அரசு நிதியுதவியுடன் கூடிய தேசிய கால்நடை இயக்க திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தில் தொழில் முனைவோரை உருவாக்கு வதற்கு 50 சதவீதம் மானியம் வழங்கப்படுகிறது.

    இந்த திட்டத்தில் சேர்ந்து தொழில் முனைவோராக விரும்புவோர் தனிநபர், சுய உதவிக்குழுக்கள், உழவர் உற்பத்தியாளர் அமைப்புகளை தொழில் முனைவோராக உருவாக்க மானியம் வழங்கப்படும்.

    மானியம் கிராமப்புற கோழிகள் இன மேம்பாட்டுக்கு தொழில் முனைவோரை உருவாக்க 50 சதவீதம் மானியம் அல்லது ரூ.25 லட்சம் மானியம், வெள்ளாடுகள் அல்லது செம்மறியாடுகள் இனவிருத்திக்காக தொழில் முனைவோரை உருவாக்க 50 சதவீதம் மானியம் அல்லது அதிகபட்சம் ரூ.50 லட்சம் மானியம், பன்றி வளர்ப்பில் தொழில் முனைவோரை உருவாக்க 50 சதவீதம் மானியம் அல்லது அதிகபட்சமாக ரூ.30 லட்சம் மானியமாகவும், தீவன உற்பத்தியை பெருக்கவும், சேமிப்பு பிரிவு அமைக்கவும் 50 சதவீதம் மானியம் அல்லது அதிகபட்சமாக ரூ.50 லட்சம் மானியம் வழங்கப்படுகிறது.

    இந்த திட்டத்தில் சேர்ந்து பயன்பெற விருப்பம் உள்ள பயனாளிகள் பொதுத்துறை வங்கிகள் மூலமாகவோ அல்லது சுயநிதி நிறுவனத்திடம் இருந்து கடன் பெற்று திட்டத்தை செயல்படுத்தலாம். உரிய ஆவணங்கள் மற்றும் விரிவான திட்ட அறிக்கைகளுடன் உதயமித்ரா போர்ட்டலில் பதிவேற்றம் செய்யலாம்.

    இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    • ஏக்கருக்கு ரூ.300 மானியத்தில் டிரோன் மூலம் மருந்து தெளித்து வாய்ப்பை வழங்கியுள்ளது.
    • முன்னோடி விவசாயி முருகேசன் உள்பட ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டனர்.

    மெலட்டூர்:

    தஞ்சை மாவட்டம், சாலியமங்கலம் அருகே உள்ள வாளமரக்கோட்டை கிராமத்தில் சின்ஜென்டா நிறுவனம் சார்பில் டிரோன் மூலம் பூச்சி மருந்து தெளிக்கும் அறிமுக நிகழ்ச்சி நடைபெற்றது.

    நிகழ்ச்சிக்கு ஊராட்சி மன்ற தலைவர் ரமேஷ் தலைமை வகித்தார். வேளாண்மைதுறை அலுவல ர்கள் கண்ணன், தூயவன், பசுபதி, மௌலி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    சின்ஜென்டா வணிக மேலாளர் ராஜகோபால் கொடியசைத்து டிரோன் மூலம் பூச்சி மருத்து தெளிக்கும் நிகழ்ச்சியை தொடங்கி வைத்து பேசு ம்போது,விவசாயிகளின் நலன் கருதி சின்ஜென்டா நிறுவனம் உதவியுடன் ஏக்கருக்கு ரூ.300 மானியத்தில் டிரோன் மூலம் மருந்து தெளித்து வாய்ப்பை வழங்கியுள்ளது.

    விவசாயிகள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி பயனடையலாம் என்றார்.

    இந்த நிகழ்ச்சியில் முன்னோடி விவசாயி முருகேசன் உள்பட ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டனர்.

    இறுதியில் சின்ஜென்டா சரக மேலாளார் மணிவேல் நன்றி கூறினார்.

    ஏற்பாடுகளை சின்ஜென்டா களப்பணியாளர்கள் மற்றும் வேளாண்மைத் துறையினர் செய்திருந்தனர்.

    • எண்ணெய் பனை நாற்றுகளை 2.5 அடி நீளம், அகலம் மற்றும் ஆழம் அளவுள்ள குழிகள் தோண்டப்பட்டு குறைந்தது.
    • ஆதார், ரேஷன் நகல், சிட்டா நகல்களை அலுவலகத்தில் சமர்ப்பித்து மானியம் பெற்று பயன்பெறலாம்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்ட தோட்டக்கலை துணை இயக்குனர் கலைச்செல்வன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தமிழகத்தில் பாமாயில் உற்பத்தியை அதிகரித்து விவசாயிகளுக்கு நிரந்தர வருவாய் கிடைப்பதை உறுதிப்படுத்தும் வகையில் எண்ணெய் பனை சாகுபடியை உயர்த்துவதற்கு மாநில அளவில் ரூ.5.65 கோடி நிதி ஒதுக்கி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

    அந்த வகையில் தஞ்சாவூர் மாவட்டத்தில் தஞ்சாவூர், பட்டுக்கோட்டை, பாபநாசம், ஒரத்தநாடு வட்டாரங்களில் உள்ள கிராமங்களில் எண்ணெய் பனை சாகுபடிக்குஏற்ற மண் வகையும், தட்பவெ ப்பநிலையும் உள்ளது.

    இதன் காரணமாக தோட்டக்கலை துறையின் மூலம் செயல்படுத்தப்படும் தேசிய எண்ணெய் பனை இயக்கம் 2022-23 திட்டத்தின் கீழ் மேற்கண்ட வட்டாரங்களில் புதிய எண்ணெய் பனை பரப்பு விரிவாக்கத்திற்கு 300 எக்டர் இலக்கு நிர்ணயிக்கப்பட்டு அதற்காக ரூ.60 லட்சம் நிதியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    எண்ணெய் பனையானது மற்ற தோட்டக்கலைப் பயிர்களை ஒப்பிடும் போது அதிக மகசூல் தரக்கூடியது. எண்ணெய் பனை நாற்றுகளை 2.5 அடி நீளம், அகலம் மற்றும் ஆழம் அளவுள்ள குழிகள் தோண்டப்பட்டு குறைந்தது 10 நாட்கள் கழித்து நடவு செய்தல் வேண்டும். நடவின்போது 9 மீட்டர் நீளம் மற்றும் 9 மீட்டர் அகலம் இடைவெளி விட்டு நடவு செய்தல் வேண்டும்.

    அறுவடை செய்யப்படும் எண்ணெய் பனை காய்கள் ஒரு வருடத்திற்கு சராசரியாக 13 டன் மகசூல் தர வல்லவை. தமிழக அரசால் அங்கீகரிக்கப்பட்ட தனியார் நிறுவனமான கோத்ரெட்ஜ் அக்ரோவேட் மூலம் எண்ணெய் பனை காய்கள் குளங்கள் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    ஒரு ஆண்டிற்கான வருமானம் 1.8 லட்சம் முதல் 2 லட்சம் வரை ஒரு எக்டர் நிலத்திலிருந்து விவசாயிகள் வருமானம் ஈட்டலாம்.

    புதிதாக எண்ணெய் பனை சாகுபடி செய்ய ஆர்வம் உள்ள விவசாயிகளுக்கு ஒரு எக்டருக்கு ரூ.20 ஆயிரம் மதிப்பில் உள்ள எண்ணெய் பனை நாற்றுகள் 143 எண்கள் மற்றும் இடுபொருட்கள் முதல் கட்டமாக வழங்கப்பட உள்ளது.

    இதனைத் தொடர்ந்து இரண்டாம் கட்டமாக இந்த திட்டத்தில் புதிதாக பயனடையுள்ள பயனாளிகளுக்கு குறைந்த பட்சம் ஒரு லட்சத்தில் இருந்து அதிகபட்சம் 2.5 லட்சம் மதிப்பிலான போர்வெல் மானியம், மோட்டார் மானியம், அறுவடை முன்சார் மற்றும் பின் சார் எந்திரக் கருவிகள் மானியத்தில் வழங்கப்பட உள்ளது.

    ஆர்வமுள்ள விவசாயிகள் தஞ்சாவூர், பட்டுக்கோட்டை, பாபநாசம், ஒரத்தநாடு வட்டாரங்களில் உள்ள வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனர் அலுவலகத்தை தொடர்பு கொண்டு மானியம் வர தேவையான ஆவணங்களான பாஸ்போ ர்ட் அளவு புகைப்படம் இரண்டு, ஆதார் நகல், ரேஷன் கார்டு நகல், சிட்டா மற்றும் அடங்கல் ஆகியவை அலுவலகத்தில் சமர்ப்பித்து மானியம் பெற்று பயன்பெறலாம்.

    நிறை தொடர்புக்கு தஞ்சாவூர் வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனர் செல்வி 9943422198, ஒரத்தநாடு வட்டார தோ ட்டக்கலை உதவி இயக்குனர் சாந்தி பிரியா 9488945801, பாபநாசம் வட்டார தோ ட்டக்கலை உதவி இயக்குனர் பரிமேலழகன் 9445257303, பட்டுக்கோட்டை வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனர் ராகினி 9597059469 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அவர் கூறினார்.

    • அரசினால் கிலோவிற்கு ரூ.30 மானியம் வழங்கப்படுகிறது.
    • 105 முதல் 110 நாட்கள் வயது உள்ளது.

    வெள்ளகோவில் :

    வெள்ளகோவில் வேளாண்மை உதவி இயக்குனர் ஆர்.பொன்னுசாமி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது :- திருப்பூர் மாவட்டம், வெள்ளகோவில் வட்டாரத்தில் உள்ள வெள்ளகோவில் வேளாண்மை விரிவாக்க மையத்தில் வரும் ராபி பருவத்தில் விதைப்பதற்கு ஏற்ற தானியம் மற்றும் தீவன பயிருக்கு ஏற்ற கோ 32 சோளம் தேவையான அளவு இருப்பில் வைக்கப்பட்டுள்ளது.

    இந்த ரகத்திற்கு அரசினால் கிலோவிற்கு ரூ.30 மானியம் வழங்கப்படுகிறது. இந்த ரகமானது 105 முதல் 110 நாட்கள் வயது உள்ளது. இது இறவை மற்றும் மானாவாரிக்கு ஏற்றது. தானியத்திற்கு விதைப்பு செய்தால் எக்டருக்கு 2 ஆயிரத்து 445 கிலோவும், தீவனம் பயிரிட்டால் எக்டருக்கு 6 ஆயிரத்து 490 கிலோவும் மகசூல் தரக்கூடியது.

    ஆகவே விவசாயிகள் தங்களுக்கு தேவையான கோ 32 சோளத்தினை மானிய விலையில் பெற்று பயிர் செய்து உயர் விளைச்சல் பெற்று பயன்பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் செயல்திறனுக்கும் இடையேயான தொடா்பு வலுவாக இருந்ததில்லை.
    • புதிய வகை தொழில்களில் ஈடுபட உதவும் விதமாக மாவட்ட வாரியாக தொழில்நுட்பப் பொருளாதார ஆய்வு நடத்தப்படும்.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூா் வல்லம் பெரியாா் மணியம்மை நிகா்நிலைப் பல்கலைக்கழகத்தில் மத்திய அரசின் குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் துறை அமைச்சகம் சாா்பில் நடைபெற்ற தொழில்முனைவோரை ஊக்குவிப்பதற்கான தேசிய பட்டியல் இனத்தவா் மற்றும் பட்டியல் பழங்குடியினா் மைய மாநாடு நடைபெற்றது.

    இந்த மாநாட்டில் மத்திய அரசின் குறு, சிறு, நடுத்தர நிறுவனங்கள் துறை இணை மந்திரி பானு பிரதாப்சிங் வா்மா பேசியதாவது:

    நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் ஏறத்தாழ 30 சதவீத பங்களிப்பை வழங்குகின்றன.

    இந்தியப் பொருளாதாரத்துக்கான பாதையாக குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் உள்ளன. வலுவான மற்றும் தன்னிறைவு கொண்ட இந்தியாவை உருவாக்குவதில் 6 கோடிக்கும் அதிகமான குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் முக்கியப் பங்கு வகிக்கின்றன.

    இந்திய பொருளாதாரத்துக்கும், குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் செயல்திறனுக்கும் இடையேயான தொடா்பு வலுவாக இருந்ததில்லை.

    வரும் ஆண்டுகளில் இந்த உறவு இன்னும் நெருக்கமாக மாறும்.

    தற்போது, 1.09 கோடி குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் இணையதளத்தில் பதிவு செய்துள்ளன.

    இவற்றில் 11.46 லட்சம் நிறுவனங்கள் தமிழ்நாட்டைச் சாா்ந்தவை.

    நாடு முழுவதும் உள்ள நிறுவனங்கள் அனைத்தையும் உள்ளடக்கிய வளா்ச்சிக்கான பல்வேறு முயற்சிகளை இந்த அமைச்சகம் முன்னெடுத்துள்ளது.

    வலுவான இந்தியாவை உருவாக்குவதில் குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் முக்கியப் பங்கு வகிக்கின்றன .

    இவ்வாறு அவர் பேசினார்.

    தமிழக அரசின் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சா் தா.மோ. அன்பரசன் பேசும்போது:

    தமிழக அரசின் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் துறை மூலம் பட்டியல் இனத்தவா் மற்றும் பழங்குடியின இளைஞா்களுக்கு புதிய தொழில்முனைவோா் மற்றும் தொழில் நிறுவனங்கள் மேம்பாட்டுத் திட்டம், வேலைவாய்ப்பற்ற இளைஞா்களுக்கான வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம், பிரதமரின் வேலைவாய்ப்புத் திட்டம் ஆகிய திட்டங்கள் மூலம் பட்டியல் இனத்தவா், பழங்குடியின இளைஞா்களுக்கு ரூ. 37 கோடி மானியத்துடன் ரூ. 148 கோடி கடனுதவி அளிக்கப்பட்டு, 1,535 படித்த இளைஞா்கள் புதிய தொழில்முனைவோா்களாக உருவாக்கப்பட்டுள்ளனா்.தி.மு.க அரசு பொறுப்பேற்ற குறுகிய காலத்தில் இந்த 3 வகையான திட்டங்களின் கீழ் ரூ. 399 கோடி மானியத்துடன் ரூ. 1,596 கோடி வங்கிக் கடனுதவி வழங்கப்பட்டு, 11,330 படித்த இளைஞா்கள் புதிய தொழில்முனைவோா்களாக உருவாக்கப்பட்டுள்ளனா் என்றாா்.

    பொருளாதார ஆய்வு

    ஆதிதிராவிடா் நலத் துறை அமைச்சா் கயல்விழி செல்வராஜ் பேசும்போது:

    ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் தொழில்மு னைவோருக்காகத் தொழில்நுட்பப் பொருளாதார ஆய்வு மூலம் ரூ. 100 கோடி செலவில் திட்ட அறிக்கை வங்கி ஏற்படுத்தப்படும். தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் தொழில் தொடங்குவதற்குச் சாதகமாக உள்ள தொழில் திட்டங்களைக் கண்டறிந்து, ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியின இளைஞா்கள் புதிய வகை தொழில்களில் ஈடுபட உதவும் விதமாக மாவட்ட வாரியாக தொழில்நுட்பப் பொருளாதார ஆய்வு நடத்தப்படும் என்றாா் .

    மாநாட்டில், வெற்றிகரமாகத் தொழில் செய்யும் தொழில் முனைவோா்களைப் பாராட்டி பரிசு வழங்கப்பட்டது.

    இவ்விழாவில் பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, தமிழக அரசின் தலைமைக் கொறடா கோவி. செழியன், மத்திய அரசின் குறு, சிறு நிறுவனங்கள் துறை இணைச் செயலா் மொ்சி, ஆதிதிராவிடா் நலத் துறை அரசுக் கூடுதல் தலைமைச் செயலா் டி.எஸ். ஜவஹா், தஞ்சை மாவட்ட கூடுதல் கலெக்டர் சுகபுத்ரா, தொழில் வணிகத் துறை ஆணையா் சிஜி தாமஸ், தாட்கோ மேலாண் இயக்குநா் கந்தசாமி, தாட்கோ தலைவா் மதிவாணன், மாநிலங்களவை உறுப்பினா் கல்யாணசுந்தரம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனா்.

    • நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா பரமத்தி வட்டார தோட்டக்கலைத் துறை சார்பாக காய்கறிகள், வாழை ஊடுபயிராக பயிரிட மானியம் வழங்கப்படுகிறது.
    • பயிர் செய்ய மானியமாக எக்டருக்கு ரூ.26,250, நடவுப்பொருட்கள் மற்றும் இடுபொருட்கள் வழங்கப்படுகிறது.

    பரமத்தி வேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா பரமத்தி வட்டார தோட்டக்க லைத் துறை சார்பாக, வாழையில் ஊடுபயிராக காய்கறிகளை வளர்க்க மானியமாக எக்டருக்கு ரூ.10 ஆயிரம் நடவுப்பொருட்கள் மற்றும் இடுபொருட்கள் வழங்கப்படுகிறது. அடுத்ததாக, தென்னை யில் ஊடுபயிராக வாழை பயிர் செய்ய மானியமாக எக்டருக்கு ரூ.26,250, நடவுப்பொருட்கள் மற்றும் இடுபொருட்கள் வழங்கப்படுகிறது.

    இத்திட்டத்தில் பயன் பெற பரமத்தி வட்டார தோட்டக்கலைத் துறை அலுவலரை அணுகுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டு உள்ளது.

    • பழுதடைந்த நிலையில் உள்ள பழைய ஆரம்ப சுகாதார கட்டிடத்தினை புதிதாக கட்டுவதற்கு உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.
    • சுமார் 10 கிலோ மீட்டர் வரை கிராமங்களில் உள்ள பொதுமக்கள் பயன்பெறுவார்கள்.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம் திட்டச்சேரி பேரூராட்சியில் 15-வது நிதிகுழு சுகாதார மானியத்தின் கீழ் புதிய அரசு ஆரம்ப சுகாதார நிலைய கட்டிடம் கட்டும் பணிக்கான பூமி பூஜையினை மாவட்ட கலெக்டர் அருண்தம்புராஜ் தொடங்கி வைத்தார். தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழக தலைவர் கவுதமன், முகமது ஷாநவாஸ் எம்.எல்.ஏ. முன்னிலை வகித்தனர்.

    அப்போது கலெக்டர் அருண்தம்புராஜ் கூறும்போது:-

    திட்டச்சேரி பேரூராட்சியில் பழுதடைந்த நிலையில் உள்ள பழைய ஆரம்ப சுகாதார கட்டிடத்தினை புதிதாக கட்டுவதற்கு உத்தரவு வழங்கப்பட்டுள்ளது. அதன்படி 15-வது நிதிகுழு மானியம் (சுகாதார மானியம்) கீழ் ரூ.60 லட்சம் மதிப்பீட்டில் புதிய அரசு ஆரம்ப சுகாதார நிலைய கட்டிடம் கட்டும் பணிக்கான பூமி பூஜை தொடங்கி வைக்கப்பட்டு கட்டிடம் கட்டும் பணிகள் நடைபெறும். இந்த புதிய சுகாதார கட்டிடத்தின் மூலம் திட்டச்சேரியை சுற்றி சுமார் 10 கிலோ மீட்டர் வரை உள்ள கிராமங்களில் உள்ள பொதுமக்களுக்கு பயன்பெறுவார்கள் என்றார்.

    இந்நிகழ்ச்சியில் துணை இயக்குநர் சுகாதார பணிகள் விஜயகுமார், பேரூராட்சி தலைவர் ஆயிஷா சித்திகா, பேரூராட்சி செயல் அலுவலர் கண்ணன், திட்டச்சேரி திமுக நகர செயலாளர் முகமது சுல்தான், பேரூராட்சி துணைத் தலைவர், பேரூராட்சி உறுப்பினர்கள், சுகாதாரத் துறையினர் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    • டீசல் விலை குறைப்பு, நீட் தேர்வு ரத்து, பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்துேவாம் என மு.க.ஸ்டாலின் கூறினார்.
    • தி.மு.க.வுக்கு துணை போய் அ.தி.மு.க.வை அழிக்க நினைக்கிறவர்கள் தனித்து விடப்பட்டுள்ளனர்.

    தஞ்சாவூர்:

    தமிழகத்தில் மின் கட்டண உயர்வை உடனடியாக திரும்ப பெற வேண்டும் என்பதை வலியுறுத்தியும், தி.மு.க. அரசை கண்டித்தும் தஞ்சை ரெயில் நிலையம் முன்பு அ.தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    இந்த ஆர்ப்பாட்டத்துக்கு முன்னாள் அமைச்சர் ஆர்.காமராஜ் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். மாவட்ட அவை தலைவர் திருஞானசம்பந்தம், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் சி.வி.சேகர், மா.கோவிந்தராசு, ராமசந்திரன், மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் துரை திருஞானம், அம்மா பேரவை இணை செயலாளரும் பால்வளத் தலைவருமான காந்தி , எம்.ஜி.ஆர். மன்ற இணை செயலாளர் ராஜமாணிக்கம், முன்னாள் பகுதி செயலாளரும் கூட்டுறவு அச்சகத் தலைவருமான புண்ணியமூர்த்தி, திராவிட கூட்டுறவு வங்கி தலைவர் கரந்தை பஞ்சு ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னாள் பகுதி செயலாளரும் நிக்கல்சன் கூட்டுறவு வங்கி தலைவருமான சரவணன் வரவேற்றார்.

    ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர் ஆர்.காமராஜ் எம்.எல்.ஏ. பேசியதாவது:-

    தி.மு.க. ஆட்சிக்கு வந்து 15 மாதங்கள் ஆகிறது. இந்த காலத்தில் அவர்கள் ஒரு சாதனை கூட செய்யவில்லை. 15 மாதத்தில் என்ன செய்தது என்று வெள்ளை அறிக்கை வெளியிட முடியுமா? .ஆட்சிக்கு வந்தால் இல்லதரசிகளுக்கு மாதம் ரூ.1000, சிலிண்டருக்கு மானியம், பெட்ரோல், டீசல் விலை குறைப்பு, நீட் தேர்வு ரத்து, பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்துேவாம் என மு.க.ஸ்டாலின் கூறினார். ஆனால் இவைகளில் ஒன்றை கூட நிறைவேற்றவில்லை. தி.மு.க.வுக்கு துணை போய் அ.தி.மு.க.வை அழிக்க நினைக்கிறவர்கள் தனித்து விடப்பட்டுள்ளனர். அ.தி.மு.க.வை யாராலும் அழிக்க முடியாது. இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த ஆர்ப்பாட்டத்தில், முன்னாள் மேயர் சாவித்ரி, அமைப்பு சாரா ஓட்டுநர்கள் அணி மாவட்ட செயலாளர் நாகராஜன், மாவட்ட பிரதிநிதி பூபதி, அமைப்புசாரா ஓட்டுனர் அணி வாஞ்சிநாதன், அ.தி.மு.க மாவட்ட பிரதிநிதி கோட்டை பகுதி மோகன், அண்ணா தொழிற்சங்க மண்டல செயலாளர் திருநீலகண்டன், கிளை செயலாளர் கார்த்திகேயன், கவுன்சிலர்கள் கோபால், தட்சிணாமூர்த்தி , கேசவன், காந்திமதி, விளார் ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் தம்பி என்ற சோம ரத்தினசுந்தரம், 51-வது வட்ட செயலாளர் மனோகரன், மாவட்ட அம்மா பேரவை துணைத் தலைவர் பாலை ரவி, ஒன்றிய செயலாளர் நாகத்தி கலியமூர்த்தி, மாணவரணி முருகேசன், மாவட்ட பொருளாளர் தம்பிதுரை , மாவட்ட சிறுபான்மை பிரிவு தலைவர் ஜாபர், முன்னாள் மாவட்ட செயலாளர் கார்த்திகேயன், மாவட்ட எம்.ஜி.ஆர்.மன்ற செயலாளர் மலைஅய்யன், மாவட்ட பொருளாளர் மகாலிங்கம், மதுக்கூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் துரைசெந்தில், மாவட்ட துணை செயலாளர் தவமணி மலையப்பன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • மாப்பிள்ளை சம்பா, கருப்புகவுனி போன்ற நெல்விதை மூட்டைகளை மானிய விலையில் விவசாயிகளுக்கு வழங்கினார்.
    • கடவாசல், எருக்கூர் ஆகிய பகுதிகளில் புதிதாக கட்டப்பட்ட வேளாண் கட்டிடங்களையும் எம்.எல்.ஏ திறந்து வைத்தார்.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அடுத்த வைத்தீஸ்வரன் கோவிலில் புதிதாக ரூ.40 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட துணை வேளாண்மை விரிவாக்க மைய கட்டிட திறப்பு விழா வேளாண்மைஇணை இயக்குனர் சேகர் தலைமையில் நடைபெற்றது. வேளாண்மை உதவி இயக்குனர் ராஜராஜன், பேரூராட்சி மன்ற தலைவர் பூங்கொடி அலெக்சாண்டர், துணை தலைவர் அன்புசெழியன், தி.மு.க. மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் மகா.அலெக்சாண்டர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    பன்னீர்செல்வம் எம்.எல்.ஏ. கலந்துக்கொண்டு புதிய கட்டிடத்தை திறந்து வைத்து நெல்ஜெயராமன் மரபுசார் பாரம்பரிய விதை ரகங்களான மாப்பிள்ளை சம்பா, கருப்புகவுனி போன்ற நெல்விதை மூட்டைகள் மானிய விலையில் சுமார் 10-க்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு முதல்கட்டமாக வழங்கினார். தொடர்ந்து அப்பகுதியில் மரக்கன்றுகளை நட்டுவைத்தார்.

    இதில் வேளாண் அலுவலர் சுப்பராயன், உதவிஅலுவலர்கள் ராமலிங்கம் மற்றும் தி.மு.க. இளைஞரணி ஒன்றியஅமைப்பாளர் ராஜ்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இதேபோல் கடவாசல், எருக்கூர் ஆகிய பகுதிகளில் புதிதாக கட்டப்பட்ட வேளாண் கட்டிடங்களையும் பன்னீர்செல்வம் எம்.எல்.ஏ திறந்து வைத்தார்.

    ×