search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 229611"

    • ரூ.5 ஆயிரம் மதிப்பிலான இயற்கை சார்ந்த இடுபொருட்கள் மானியமாக வழங்கப்பட உள்ளது.
    • வெள்ளகோவில் வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனர் அலுவலகத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.

    வெள்ளகோவில் :

    முத்தூர் பகுதிகளில் இயற்கை முறையில் காய்கறி பயிர்கள் சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு மானியம் வழங்கப்படும் என்று தோட்டக்கலைத்துறை சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இது குறித்து வெள்ளகோவில் வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனர் பொ.சந்திர கவிதா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது :- முத்தூர் சுற்றுவட்டார கீழ்பவானி பாசன பகுதிகளில் நஞ்சை சம்பா நெல், எண்ணெய் வித்து, தோட்டக்கலை பயிர், காய்கறிகள், கீரை வகைகள் சாகுபடி செய்து வருகின்றனர். தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை சார்பில் தோட்டக்கலை வளர்ச்சி இயக்கம் மற்றும் தேசிய வேளாண் அபிவிருத்தி திட்டங்களின் கீழ் இந்த 2022-2023-ம் ஆண்டில் காய்கறி பயிர்கள் சாகுபடி செய்யும் விவசாயிகளுக்காக பல்வேறு மானிய திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

    இதன்படி கிணறுகள், ஆழ்குழாய் கிணறுகளில் உள்ள நீரினை பயன்படுத்தி மரவள்ளிக்கிழங்கு, முருங்கைக்காய், தக்காளி, கத்தரிக்காய் உள்பட அனைத்து காய்கறி பயிர்களையும் இயற்கை முறையில் சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு மொத்தம் 65 எக்டேர் அளவில் ரூ.5 ஆயிரம் மதிப்பிலான இயற்கை சார்ந்த இடுபொருட்கள்மானியமாக வழங்கப்பட உள்ளது.

    மேலும் இயற்கை வழியில் விவசாயம் செய்பவர்கள் மற்றும் புதிதாக இயற்கை சாகுபடி முறையை பின்பற்றுபவர்கள் இந்த திட்டத்தில் சேர்ந்து பயன் பெற அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. எனவே இந்த திட்டத்தில் பயன்பெற விவசாயிகள் தங்கள் தோட்டத்தில் சாகுபடி செய்துள்ள மற்றும் செய்ய விரும்பும் தோட்டக்கலை பயிர்கள், காய்கறி பெயர்கள் ஆகியவற்றை குறிப்பிட்டு உரிமைச் சான்று, சிட்டா, அடங்கல், ஆதார் அட்டை நகல், குடும்ப அட்டை நகல், பாஸ்போர்ட் சைஸ் போட்டோ 2 ஆகியவற்றுடன் வெள்ளகோவில் வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனர் அலுவலகத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

    • எங்களுக்கு வீடு, நிலமும் இல்லை, வாடகைக்கும் வீடு எதுவும் கிடைக்கவில்லை.
    • எங்களின் வாழ்வாதாரம் உயர அரசு வழங்கும் ரூ.50 ஆயிரம் லோன் மானியம் வழங்க வேண்டும்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இன்று வாராந்திர குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது.

    இதற்கு கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமை தாங்கினார்.

    மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் இருந்து வந்திருந்த பொதுமக்கள் தங்களது கோரிக்கை மனுக்களை அளித்தனர்.

    அப்போது தஞ்சை மாவட்ட த்தை சேர்ந்த திருநங்கைகள் அளித்துள்ள மனுவில் கூறி இருப்பதாவது:-

    நாங்கள் 100 நபர்கள் உள்ளோம். எங்களுக்கு வீடு, நிலம் இல்லை. வாடகைக்கும் வீடு எதுவும் கிடைக்கவில்லை.

    இருக்க இடம் இல்லாமல் தவித்து வருகிறோம்.

    எனவே திருநங்கைகள் அனைவருக்கும் அரசு வழங்கும் இலவச மனை வழங்க வேண்டும்.

    இதே போல் எங்களின் வாழ்வாதாரம் உயர அரசு வழங்கும் ரூ.50 ஆயிரம் லோன் மானியம் வழங்கிட வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 

    • பயனாளிகள் குறித்த மறு கணக்கெடுப்பு கடந்த ஆண்டு இறுதியில் தொடங்கியது.
    • அரசு மானிய திட்டத்துக்காக பொதுமக்கள் காத்திருக்கிறார்கள்.

    குடிமங்கலம்:

    மத்திய, மாநில அரசு சார்பில் கிராமப்புறங்களில் வீடு இல்லாதவர்களுக்கு பல்வேறு திட்டங்களின் கீழ் சொந்த வீடு கட்ட மானியம் வழங்கப்படுகிறது.தி.மு.க., அரசு பொறுப்பேற்றதும் கலைஞர் வீட்டு வசதி திட்டம் செயல்படுத்தப்படும். மானியம் 2.76 லட்சம் ரூபாயாக உயர்த்தப்படும் என அறிவிக்கப்பட்டது.இத்திட்டத்துக்காக கடந்த 2010ல் பெறப்பட்ட விண்ணப்பங்கள் அடிப்படையில் பயனாளிகள் குறித்த மறு கணக்கெடுப்பு கடந்த ஆண்டு இறுதியில் தொடங்கியது.

    உடுமலை, குடிமங்கலம், மடத்துக்குளம் ஒன்றியங்களில் கணக்கெடுப்பு விபரங்கள் சில மாதங்களுக்கு முன் 'செல்போன் செயலி'யில் பதிவு செய்யப்பட்டது.இப்பணிகள் நிறைவு பெற்றதும் பயனாளிகள் பட்டியல் வெளியிடப்பட்டு வீடு கட்டும் பணிகளை துவக்கலாம் என ஆயிரக்கணக்கான மக்கள் எதிர்பார்ப்புடன் இருந்தனர். கடந்த சுதந்திர தினத்தன்று ஊராட்சிகளில் நடந்த கிராமசபையில் பயனாளிகள் பட்டியல் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் பட்டியல் வெளியாகவில்லை.

    இத்திட்டத்துக்காக விண்ணப்பித்த மக்கள் கூறியதாவது:-

    அரசு மானிய திட்டத்துக்காக இரண்டு ஆண்டுகளாக காத்திருக்கிறோம். கட்டுமான பொருட்கள் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் வீடு கட்டுவதற்கான செலவு பல மடங்கு உயர்ந்துள்ளது.அரசு திட்டத்துக்காக விண்ணப்பித்துள்ளதால் கட்டுமான பணிகளையும் துவக்காமல் காத்திருக்கிறோம். கலைஞர் வீட்டு வசதி திட்ட வழிமுறைகள் குறித்து தெளிவாக ஒன்றிய அதிகாரிகள் விளக்கமளித்து உடனடியாக பயனாளிகள் பட்டியலை வெளியிட வேண்டும். மானியம் ஒதுக்கீடு செய்தால் கட்டுமான பணிகளை துவக்க உதவியாக இருக்கும் என்றனர்.   

    • பண்ணை குடும்பங்களுக்கு 43,800 தென்னங்கன்றுகள் முழு மானியத்தில் வழங்கப்பட்டுள்ளது.
    • விவசாயிகளின் வருமானத்தை பெருக்க பல வகையான செடிகள் மற்றும் மரக்கன்றுகள் வழங்கப்பட்டுள்ளன.

    தஞ்சாவூர்:

    வேளாண்மை- உழவர் நலத்துறை சார்பில் 1997 கிராம பஞ்சாயத்துக்களில் உள்ள 9 லட்சம் விவசாய குடும்பங்கள் பயன்பெறும் வகையில் ரூ.227 கோடி மதிப்பிலான கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தை தொடங்கி வைத்தார்.

    பத்தாண்டு தொலைநோக்கு திட்டமான 11.75 லட்சம் எக்டேர் நிலங்களை கூடுதலாக சாகுபடிக்கு கொண்டு வருதல், இருபோக சாகுபடி பரப்பினை 20 லட்சம் எக்டராக உயர்த்துதல், உணவு தானியங்கள் மற்றும் தேங்காய், பருத்தி, சூரியகாந்தி, நிலக்கடலை பயிர்களின் ஆக்கதிறனில் தேசிய அளவில் முதல் மூன்று இடங்களை பிடித்தல் ஆகிய தொலைநோக்கு திட்டங்களை அடைந்திடும் வகையில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

    இந்த திட்டம் குறித்து தஞ்சை மாவட்ட கலெக்டர் தினேஷ்பொன்ராஜ் ஆலிவர் கூறியதாவது:-

    தஞ்சை மாவட்டத்தில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டமானது முதல்கட்டமாக 2021-22ஆம் ஆண்டு 73 கிராம பஞ்சாயத்துக்களில் சிறப்பாக செயல்பட்டு வருகிறது.

    ஒட்டுமொத்த வேளாண் வளர்ச்சியை ஊக்குவிக்க அனைத்து துறைகளின் ஒருங்கிணைப்புடன் செயல்படும் மாபெரும் திட்டமாகும்.

    இந்த திட்டத்தின் கீழ் அனைத்து கிராமங்களும் வளர்ச்சி அடைந்து தன்னிறைவு பெற்ற கிராமமாக மாற வேண்டும் என்பதே இத்திட்டத்தின் முக்கிய நோக்கம். இத்திட்டத்தின் கீழ் தரிசு நிலங்கள் கண்டறியப்பட்டு சாகுபடி நிலமாக மாற்றப்படுகிறது.

    தஞ்சாவூர் மாவட்டத்தில் முதற்கட்டமாக 310.5 ஏக்கர் நிலங்களில் 14 தரிசு தொகுப்புகள் கண்டறியபட்டு அதில் உள்ள முட்புதர்களை அகற்றி, திருத்தம் செய்து வேளாண் பொறியியல் துறையுடன் ஆழ்துளைகிணறுகள் அமைக்கப்பட்டு வருகிறது.

    அது மட்டுமின்றி இத்திட்டத்தின் கீழ் ஒரு பண்ணை குடும்பத்திற்கு மூன்று தென்னை மரக்கன்றுகள் வீதம் ஒரு கிராமத்திற்கு 200 பண்ணை குடும்பங்களுக்கு 43,800 தென்னை கன்றுகள் முழு மானியத்தில் வழங்கப்பட்டுள்ளது.

    வரப்பு பயிரை ஊக்குவிக்கும் வகையில் கிராமங்களில் ஒரு எக்டருக்கு 5 கிலோ உளுந்து விதைகள் மானியத்தில் கொடுக்கப்பட்டு ஒரு கிராமத்திற்கு 15 எக்டர் வீதம் வரப்பு பயிர்களில் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.

    விவசாயிகளுக்கு கைத்தறிப்பான்கள் மற்றும் விசைத்தெளிப்பான்கள் ஒரு கிராமத்திற்கு ஐந்து வீதம் கொடுக்கப்பட்டு மொத்தம் 730 தெளிப்பான்கள் 50 சதவீதத்தில் மானியத்தில் கொடுக்கப்பட்டுள்ளன.

    மேலும் தோட்டக்கலை துறையினரால் வீட்டு தோட்டம் அமைவதற்கான நெகிழி க்கூடைகள் பிளாஸ்டிக் ட்ரம் மற்றும் விவசாயிகளின் வருமானத்தை பெருக்க வரப்பு ஓரங்களில் பல வகையான செடிகள் மற்றும் மரக்கன்றுகள் வழங்கப்பட்டுள்ளன.

    வேளாண் பொறியியல் துறை மூலம் ஆழ்துளை கிணறுகள், பண்ணை குட்டைகள், தூர்வாருதல் போன்ற பணிகள் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

    கால்நடைகளின் நலம் காத்து பால் உற்பத்தினை பெறுகிற கால்நடை துறையின் மூலம் கால்நடை மருத்துவ முகாம்கள் மற்றும் புதிய பால் சொசைட்டிகள் உருவாக்குதல் போன்ற பணிகள் நடைபெற்று வருகின்றன.

    கூடுதலாக 80 சதவீத இதர திட்டங்கள் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்ட கிராம பஞ்சாயத்துகளில் மேற்கொள்ளப்படுகிறது.

    ஒரு கிராம பஞ்சாயத்தில் உள்ள அனைத்து விவசாயிகளும் பயன்பெறும் வகையில் திட்டமானது சிறப்பாக வடிவமைக்கபட்டு செயல்படுத்தபட்டு வருகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    தஞ்சை மாவட்டம் திருவோணம் வட்டாரம் தோப்புவிடுதி கிராமத்தை சேர்ந்த விவசாயி பிரதாபாஸ் கூறும்போது ;-

    முதல்-அமைச்சரால் அறிவிக்கப்பட்ட கலைஞரின் திட்டத்தின் கீழ் தரிசு தொகுப்பு குழு 22 ஏக்கர் தரிசு உள்ளது.

    நீர் அளவாரம் இல்லாததால் நீண்ட நாள் தரிசாக இருந்த நிலையில் தரிசு தொகுப்பு குழு அரசு திட்டத்திற்கு தேர்வு செய்த அரசு ஒதுக்கி ஆழ்துளை அமைப்பதற்கு விவசாயி 1 சென்ட் நிலம் வேளாண்மை உதவி இயக்குனருக்கு தான பத்திரம் எழுதி கொடுத்ததினால் தோப்பு விடுதி தரிசுதொகுப்பு குழுவுக்கு அலுவலர் கிணறு 620 அடி அமைத்து கொடுக்கப்பட்டது.

    இதனால் நீண்ட நாள் பரிசாக கிடந்த இடத்தை விவசாய நிலமாக கொண்டு வர முடியும்.

    இந்த திட்டத்தை அறிமுகம் செய்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு மனதார நன்றியை தெரிவித்து கொள்கிறேன் என்றார்.

    இதேப்போல் தஞ்சை மாவட்ட விவசாயிகள் பலர் முதல்-அமைச்சருக்கு நன்றியை தெரிவித்து கொண்டனர்.

    • கன்னியாகுமரி மாவட்ட கலெக்டர் அரவிந்த் தகவல்
    • விண்ணப்பங்கள் மூப்பு நிலை மற்றும் முன்னுரிமை அடிப்படையில் பயனாளிகள் தேர்வு செய்யப்படுகிறார்கள்.

    நாகர்கோவில்:

    குமரி மாவட்ட கலெக்டர் அரவிந்த் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறி இருப்பதாவது:-

    பிரதம மந்திரி மீன்வள மேம்பாட்டு திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டில் மீன் வளர்ப்பினை மேம்படுத் திட 2021-22ம் ஆண்டிற்கு ரூ.186.35 கோடி மதிப்பி லான திட்டங்களுக்கு மத்திய அரசால் நிர்வாக ஒப்புதல் அளிக்கப் பட்டுள்ளது. தற்போது கன்னியாகுமரி மாவட் டத்திற்கு கீழ்காணும் திட்டங்களுக்கு இலக்கு நிர்ணயம் செய்து ஆணை வழங்கப்பட்டுள்ளது.

    கொல்லைப்புற அலங் கார மீன் வளர்ப்பு அலகு (கடல் நீர் மற்றும் நன்னீர்) ரூ.3 லட்சம் மதிப்பீட்டில் அமைத்தல் திட்டத்தில் ஒரு அலகிற்கு பொதுப் பிரிவினருக்கு 40 சதவீத மானியமும் (ரூ.1.20 லட் சம்) ஆதி திராவிடர், பழங்குடியினர் மற்றும் மகளிருக்கு 60 சதவீத மானியமும் (ரூ.1.80 லட் சம்) வழங்கப்பட உள்ளது.

    அலங்கார மீன் வளர்ப்பு நடுத்தர அலகு கடல் நீர் மற்றும் நன்னீர் ரூ.8 லட் சம் மதிப்பீட்டில் அமைத் தல் திட்டத்தில் பொதுப் பிரிவினருக்கு 40 சதவீத மானியமாக ரூ.3.20 லட்ச மும். ஆதி திராவிடர் மற் றும் பழங்குடியினருக்கு 60 சதவீத மானியமாக ரூ.4.80 லட்சமும் பின்னேற்பு மானியமாக வழங்கப்பட உள்ளது.

    எனவே இத்திட்டங் களில் விண்ணப்பிக்க விரும்பும் பயனாளிகள் நாகர்கோவில் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குநர் அலுவல கம், டிஸ்டிலரி ரோடு வடசேரி-629001, தொலை பேசி 04652 227460 ஐ தொடர்பு கொண்டு விண்ணப்பங்கள் பெற்று உரிய ஆவணங்களுடன் வருகிற 30-ந் தேதிக்குள் விண் ணப்பிக்க வேண்டும். விண்ணப்பங்கள் மூப்பு நிலை மற்றும் முன்னு ரிமை அடிப்படையில் பயனாளிகள் தேர்வு செய் யப்படுகிறார்கள்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

    • மீன் வளர்ப்பை ஊக்குவிக்க மானியம் வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
    • விண்ணப்பத்தினை வருகிற 31-ந்தேதிக்குள் கொடுக்க வேண்டும்

    பெரம்பலூர்:

    தமிழ்நாட்டில் மீன் வளர்ப்பினை ஊக்குவித்திட மானியம் வழங்குதல் திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது. அதனடிப்படையில் பெரம்பலூர் மாவட்டத்தில் கலெக்டரை தலைவராக கொண்டு செயல்பட்டு வரும் மாவட்ட மீன்வளர்ப்போர் மேம்பாட்டு முகமையில் பதிவு பெற்ற மீனவ விவசாயிகள், சொந்த நிலத்தில் 250 முதல் 1,000 ச.மீ. அளவிலுள்ள பல்நோக்கு பண்ணைக்குட்டைகளில் மீன் வளர்ப்பினை மேற்கொள்ள ஏதுவாக மீன்குஞ்சு, மீன்தீவனம், உரங்கள் ஆகிய மீன் வளர்ப்பிற்கான உள்ளீட்டு பொருள்கள் மற்றும் பறவை வேலி அமைத்தல் ஆகியவற்றிற்கு ஒரு அலகிற்கு ஆகும் செலவினமான ரூ.36 ஆயிரத்தில் இருந்து 50 சதவீதம் மானியத்தில் ஒரு பண்ணைக்குட்டைக்கு ரூ.18 ஆயிரம் மானியமாக வழங்கப்படும். மேற்கண்ட மானியத்தொகையானது பின்னேற்பு மானியமாக வழங்கப்படும். முதலில் வரும் விண்ணப்பத்திற்கு முன்னுரிமை அளித்து மூப்புநிலை அடிப்படையில் மானியம் பெறுவதற்கு தேர்ந்தெடுக்கப்படுவார்கள். எனவே, மேற்படி திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க விரும்பும் பெரம்பலூர் மாவட்ட பயனாளிகள் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குனர் அலுவலகத்தை நேரில் தொடர்பு கொண்டு விண்ணப்பங்களை பெறலாம். பூர்த்தி செய்து உரிய ஆவணங்களுடன் விண்ணப்பத்தினை வருகிற 31-ந்தேதிக்குள் பெரம்பலூர் எஸ்.கே.சி. காம்பளக்சில் மேல்தளத்தில் உள்ள மீன்வள ஆய்வாளர், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அலுவலகத்திலும் சமர்பிக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு 04329-228699 என்ற தொலைபேசி எண்ணையும், 6381344399 என்ற செல்போன் எண்ணையும் தொடர்பு கொள்ளலாம் என பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் ஸ்ரீவெங்கடபிரியா தெரிவித்துள்ளார்.

    • வண்ண மீன் வளர்க்க மானியம் வழங்கும் திட்டம் உள்ளது.
    • பயனாளிகள் பெயரில் சொந்த நிலம்

    கரூர்:

    பிரதம மந்திரி மத்திய மீன்வள மேம்பாட்டு திட்டத்தின் கீழ் சிறிய, நடுத்தர அளவிலான அலங்கார மீன் வளர்க்கும் திட்டத்தில் ஒரு அலகிற்கு நடுத்தர அளவிலான தொட்டிகள் அமைத்து அலங்கார மீன் வளர்ப்பிற்கு ஆகும் செலவு ரூ.8 லட்சம். பொது பிரிவினருக்கு 40 சதவீதம் என ரூ.3.20 லட்சம், பட்டியல், பழங்குடியினர், பெண்களுக்கு 60 சதவீதம் என ரூ.4.80 லட்சம் மானியமாக வழங்கப்படும்.

    இத்திட்டத்தின்படி தமிழகத்தில் திருச்சி, கரூர் மாவட்டங்களில் வண்ண மீன் வளர்ப்பினை ஊக்குவித்திட மானியம் வழங்குதல் திட்டம் செயல்படுத்தபட உள்ளது. இத்திட்டத்தின் கீழ் பயன்பெறுவதற்கு பயனாளிகள் பெயரில் சொந்த நிலம் இருத்தல் வேண்டும் அல்லது குத்தகை நிலம் என்றால் குறைந்தது 7 ஆண்டுகள் குத்தகை காலம் இருத்தல் வேண்டும். குத்தகை விவரம் பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்திருக்க வேண்டும்.

    கடந்த 2018 -19-லிருந்து 2020 -21 ஆண்டு வரை உள்ள கால கட்டத்தில் மத்திய, மாநில அரசிடமிருந்து உள்ளீட்டு மானியம் பெற்ற மீன் வளர்ப்பு விவசாயிகள் இம்மானியம் பெறுவதற்கு தகுதியற்றவர்கள் என தெரிவிக்கப்படுகிறது. மேற்கண்ட மானியமானது பின்னேற்பு மானியமாக வழங்கப்படும்.

    முதலில் வரும் விண்ணப்பத்திற்கு முன்னுரிமை அளித்து மூப்புநிலை அடிப்படையில் மானியம் பெறுவதற்கு தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்படுகிறது. மேற்படி திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க விரும்பும் பயனாளிகள் திருச்சி, கரூர் மீன்வளம், மீனவர் நலத்துறை உதவி இயக்குநர் அலுவலகத்தை நேரில் தொடர்பு கொண்டு விண்ணப்பங்களை பெற்று, பூர்த்தி செய்து உரிய ஆவணங்களுடன் விண்ணப்பத்தினை வரும் 20-ந் தேதிக்குள் திருச்சி, கரூர் மீன்வளம், மீனவர் நலத்துறை உதவி இயக்குநர் அலுவலகம் எண்: 4, காயிதே மில்லத் தெரு, காஜா நகர், மன்னார்புரம், திருச்சி 620 020 என்ற முகவரியில் ஒப்படைக்கவேண்டும் என மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.

    • பிரதமர் மீன்வள மேம்பாட்டு திட்டத்தின் கீழ் மீன் வளர்ப்பு செய்து பயனடையலாம்.
    • உயிர்மீன் விற்பனை மையங்கள் அமைக்க 40 சதவீத மானியம் வழங்கப்படும்.

    திருப்பூர் :

    பிரதமர் மீன்வள மேம்பாட்டு திட்டத்தின் கீழ் மீன் வளர்ப்பு செய்து பயனடையலாம் என்று கலெக்டர் வினீத் தெரிவித்துள்ளார். இதுகுறித்து கலெக்டர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- பிரதமர் மீன்வள மேம்பாட்டு திட்டத்தின் கீழ் பல்நோக்கு பண்ணைக்குட்டையில் மீன் வளர்ப்பினை ஊக்குவித்திட உள்ளீட்டு மானியம் வழங்கும் திட்டத்தின் கீழ் 250 ச.மீ. முதல் 1000 ச.மீ. வரையிலான பண்ணைக்குட்டையில் மீன்குஞ்சு இருப்பு செய்து மீன் தீவனம் உள்ளீட்டு செலவினம் மேற்கொள்ள ஒரு அலகிற்கு ரூ.36 ஆயிரம் மற்றும் செலவினத்திற்கு 50 சதவீத மானியத்தொகை ரூ.18 ஆயிரம் வழங்கப்படும்.

    ரூ.3 லட்சத்தில் புறக்கடையில் அலங்கார மீன் வளர்ப்பு அலகுகள் அமைக்க பொது பிரிவிற்கு 40 சதவீத மானியமாக அதிகபட்சம் ரூ.1 லட்சத்து 20 ஆயிரமும், பெண்கள், தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினருக்கு 60 சதவீத மானியமாக அதிகபட்சம் ரூ.1 லட்சத்து 80 ஆயிரமும், ரூ.8 லட்சத்தில் நடுத்தர அளவிலான அலங்கார மீன் வளர்ப்பு அலகுகள் அமைக்க பொது பிரிவிற்கு 40 சதவீத மானியமாக அதிக பட்சம் ரூ.3 லட்சத்து 20 ஆயிரமும், பெண்களுக்கு 60 சதவீத மானியமாக அதிகபட்சம் ரூ.4 லட்சத்து 80 ஆயிரமும் வழங்கப்படும்.

    மேலும் ரூ.20 லட்சத்தில் உயிர்மீன் விற்பனை மையங்கள் அமைக்க 40 சதவீத மானியம் அதிகபட்சம் ரூ.8 லட்சம் வழங்கவும், ரூ.20லட்சத்தில் குளிர்காப்பிடப்பட்ட வாகனங்கள் வழங்கிட பொதுபிரிவிற்கு 40 சதவீத மானியமாக அதிகபட்சம் ரூ.8 லட்சமும், ரூ.10 லட்சத்தில் அலங்கார மீன்களின் மீன்விற்பனையக கட்டுமானத்திற்கு அதிகபட்சமாக பொது பிரிவிற்கு ரூ.4 லட்சமும்,1 ஹெக்டேர் பரப்பளவில் புதியமீன்குஞ்சு, வளர்ப்பு அலகு அமைக்க பொதுபிரிவிற்கு 40 சதவீத மானியமாக அதிகபட்சம் ரூ.2 லட்சத்து 80 ஆயிரமும், பெண்களுக்கு 60 சதவீத மானியமாக அதிகபட்சம் ரூ.4லட்சத்து 20ஆயிரமும் வழங்கப்படும்.

    இதேபோல்1 ஹெக்டேரில்புதிய மீன்வளர்ப்பு அலகு அமைத்து உள்ளீட்டு மானியம் வழங்கும் திட்டத்தில் பொதுபிரிவிற்கு 40 சதவீத மானியமாக அதிகபட்சம் ரூ.4 லட்சத்து40 ஆயிரமும், பெண்கள், தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினருக்கு 60 சதவீத மானியமாக அதிகபட்சம் ரூ.6லட்சத்து 60 ஆயிரமும், சிறிய அளவிலான பயோபிளாக் குளங்கள் 1 அலகு அமைக்க பொதுபிரிவிற்கு 40 சதவீத மானியமாக அதிகபட்சம் ரூ.3 லட்சமும், பெண்களுக்கு 60 சதவீத மானியமாக அதிகபட்சம் ரூ.4½ லட்சம் வழங்கப்பட உள்ளது. இந்த மீன்வளர்ப்பு திட்டங்களில் ஏதேனும் ஒன்றில் விவசாயிகள் மீன்வளர்ப்பு செய்து பயன்பெறலாம்.

    எனவே விருப்பமுள்ளவர்கள் தாராபுரத்தில் இயங்கி வரும் மீன்வள ஆய்வாளர் (தொலைபேசி எண்.89037 46476) அலுவலகத்தினை தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • அதிகபட்சமாக ரூ.10 ஆயிரம் மானியமாக வழங்கப்படுகிறது.
    • 3 ஏக்கர் நிலம் வைத்துள்ள விவசாயிகளுக்கு மானியம் வழங்கப்படுகிறது.

    திருப்பூர் :

    திருப்பூர் மாவட்டத்தில் 3 ஏக்கர் நிலம் வைத்துள்ள விவசாயிகள், மானியம் பெற்று புதிய மின்மோட்டார் பம்ப் அமைக்க விண்ணப்பிக்க முடியும். திறன் குறைந்த பழைய மின்மோட்டார் பம்ப் செட்டுகளை மாற்றி புதியதாக பொருத்தவும் அதிகபட்சமாக ரூ.10 ஆயிரம் மானியமாக வழங்கப்படுகிறது.

    இந்த திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்பும் 3 ஏக்கர் வரை விளைநிலம் வைத்துள்ள விவசாயிகள், சிறு, குறு விவசாய சான்றிதழ், அடங்கல், கிணறு அமைந்துள்ள வரைபடம், மின்சார இணைப்பு அட்டை விவரம், வங்கி புத்கத்தின் நகல் ஆகியவற்றுடன் விண்ணப்பிக்க வேண்டும். திருப்பூர், தாராபுரம், உடுமலை உட்கோட்ட பகுதி விவசாயிகள் இந்த திட்டத்தில் பயன்பெற முடியும்.மேலும் விவரங்களுக்கு திருப்பூர் கோட்ட செயற்பொறியாளர் (வேளாண் பொறியியல் துறை) ஜெயக்குமாரை 94432 43495 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். மேலும் திருப்பூர், தாராபுரம், உடுமலை உட்கோட்ட உதவி செயற்பொறியாளர் அலுவலகத்தையும் தொடர்பு கொள்ளலாம்.

    இந்த தகவலை கலெக்டர் வினீத் தெரிவித்துள்ளார்.

    • தார்ப்பாலின் ஜிப்சம் சிங்சல்பேட் வரப்பு உளுந்து விதைகள் மானிய விலையில் வழங்கப்பட்டு வருகிறது.
    • வேளாண்மை விரிவாக்க மையத்தை அணுகி பதிவு செய்து கொள்ளும் விவசாயிகளுக்கு முன்னுரிமை அடிப்படையில் இடுபொருட்கள் வழங்கப்படும்.

    வேதாரண்யம்:

    வேதாரணயம் ஒன்றியத்தில்கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்ட செயல்படுத்தப்படும் ஊராட்சிகளான வாய்மேடு, பஞ்சநதிகுளம்கிழக்கு, பிராந்தியங்கரை, தகடூர் ,தேத்தாக்குடிதெற்கு ஆகிய கிராமங்களில் வேளாண்மை இடுபொருள்கள் சிறப்பு திட்டங்களாக வேளாண் கருவிகள் தொகுப்பு தார்ப்பாலின் ஜிப்சம் சிங்சல்பேட் வரப்பு உளுந்து விதைகள் மானிய விலையில் வழங்கப்பட்டு வருகிறது.

    இந்தத் திட்டத்தில் பயனடைய விரும்பும் விவசாயிகள் வேளாண்மை உதவி இயக்குனர் அலுவலகம் மற்றும் வேளாண்மை விரிவாக்க மையத்தை அணுகவும் பதிவு செய்து கொள்ளும் விவசாயிகளுக்கு முன்னுரிமை அடிப்படையில் இடுபொருட்கள் வழங்கப்படும். மேற்கண்ட தகவலை வேளாண்மை உதவி இயக்குனர் கருப்பையா தெரிவித்தார். உடன் வேளாண்மை அலுவலர்கள் அனிஷ், நவீன்குமார் இருந்தனர்.

    • மத்திய, மாநில அரசுகள் தோட்டக்கலைத்துறை வாயிலாக பல்வேறு மானியத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
    • பூச்சி நோய் மேலாண்மை திட்டத்தில் ஒரு ஹெக்டருக்கு ரூ. 1,200 வழங்கப்படுகிறது.

    மடத்துக்குளம் :

    மடத்துக்குளம் வட்டாரம் தோட்டக்கலைத்துறைக்கு தேசிய தோட்டக்கலை இயக்கம் வாயிலாக, 2022--23 நிதியாண்டில் ரூ.50 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.இது குறித்து மடத்துக்குளம் வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனர் சுரேஷ்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    மத்திய, மாநில அரசுகள் தோட்டக்கலைத்துறை வாயிலாக பல்வேறு மானியத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. மடத்துக்குளம் வட்டாரத்திலுள்ள விவசாயிகளுக்கு மானியம் வழங்க 2022 -23 ம் நிதியாண்டில் ரூ. 50 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    தக்காளி, கத்திரி, மிளகாய், பாகல், பீர்க்கன், சுரைக்காய் மற்றும் தர்பூசணி புதிதாக பயிரிடும் விவசாயிகளுக்கு நாற்றுக்கள் மற்றும் இடுபொருட்கள் மானியத்தில் வழங்கப்படுகிறது.வெங்காயம் பயிரிட, வெங்காய விதைகள் மற்றும் இடுபொருட்கள், ஒரு விவசாயிக்கு, 2 ஹெக்டர் வரை மானியம் பெறலாம்.கொய்யா, பப்பாளி பயிரிடும் விவசாயிகளுக்கு அரசு தோட்டக்கலை பண்ணைகளில் இருந்து நாற்றுக்கள் வழங்கப்படும். ஒரு விவசாயி 4 ஹெக்டர் வரை மானியம் பெறலாம்.

    தோட்டங்களில் நீர் சேமிப்பு கட்டமைப்பு அமைக்க, ரூ.75 ஆயிரம் மானியம் வழங்கப்படுகிறது. 20 மீட்டர் நீளம், 20 மீட்டர் அகலம், 3 மீட்டர் உயரம் அளவில் கட்டமைப்பை ஏற்படுத்தி அதில் 300 மைக்ரான் அளவில் தார்ப்பாய் அமைத்து நீரை சேமித்து சாகுபடிக்கு பயன்படுத்தலாம். இது பின்னேற்பு மானியமாக விவசாயிகளின் வங்கிக்கணக்கில் செலுத்தப்படும்.அயல் மகரந்த சேர்க்கையை அதிகரிக்க தேனீ வளர்ப்பு ஊக்குவிக்கப்படுகிறது. தேனீப்பெட்டிகள், தேனீக்கள், தேன் எடுப்பதற்கான உபகரணங்கள் வாங்குவதற்காக, ஒரு யூனிட்டிற்கு ரூ.24 ஆயிரம் மானியம் வழங்கப்படும்.பவர் ஸ்பிரேயர் வாங்க 2,500 ரூபாயும், 8 எச்.பி., க்கு மேல் குதிரைத்திறன் கொண்ட பவர் டில்லர் மானியத்தில் பெற ஒன்றுக்கு 60,000 வழங்கப்படுகிறது.விவசாயிகள் 600 சதுர அடி அளவில் சிப்பம் கட்டும் அறை தோட்டங்களில் அமைத்து கொள்ள ரூ. 2 லட்சம் மானியம் வழங்கப்படுகிறது.

    சின்ன வெங்காயம் இருப்பு வைத்து விலை கிடைக்கும் போது விற்பனை செய்யும் வகையில் ஒரு யூனிட் வெங்காய பட்டறை அமைக்க பின்னேற்பு மானியமாக ரூ.87,500 மானியம் வழங்கப்படுகிறது.நீர் அதிகம் ஆவியாகாமல் தடுக்கவும், களைகளை கட்டுப்படுத்தவும் நிலப்போர்வை பயன்படுகிறது. தக்காளி, மிளகாய், கத்திரி, தர்பூசணி பயிரிடும் விவசாயிகள் இத்திட்டத்தில் இணைந்து பயன் பெறலாம்.

    விவசாயிகள் விளை பொருட்களை நேரடியாக நுகர்வோருக்கு விற்பனை செய்யும் வகையில் நகரும் காய்கறி வண்டிகள் ரூ.15 ஆயிரம் மானியத்தில் வழங்கப்படுகிறது. இதில் ஏழை வியாபாரிகளும் பயன்பெறலாம்.இயற்கை விவசாயம் செய்ய விரும்பும் விவசாயிகள் அல்லது ஏற்கனவே செய்து வரும் விவசாயிகளுக்கு 3 ஆண்டுகளுக்கு ஒரு ஹெக்டருக்கு ரூ.10 ஆயிரம் மானியமும், ஒருங்கிணைந்த உரம் மற்றும் பூச்சி நோய் மேலாண்மை திட்டத்தில் ஒரு ஹெக்டருக்கு, ரூ. 1,200 ரூபாயும் வழங்கப்படுகிறது.

    திட்டத்தில் பயன் பெற விரும்பும் விவசாயிகள் சிட்டா, அடங்கல், உரிமை சான்று, ரேஷன் கார்டு, ஆதார், பேங்க் பாஸ் புக், பாஸ்போர்ட் சைஸ் போட்டோ-, 2 ஆகியவற்றுடன் மடத்துக்குளம் தோட்டக்கலை உதவி இயக்குனர் அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம்.மைவாடி, துங்காவி, தாந்தோணி, மெட்ராத்தி, காரத்தொழுவு, ஜோத்தம்பட்டி விவசாயிகள் உதவி தோட்டக்கலை அலுவலர் தாமோதரன் 96598 38787 என்ற எண்ணிலும், பாப்பான்குளம், கண்ணாடிப்புதூர், கடத்தூர், வேடபட்டி, கணியூர் விவசாயிகள் விமல்குமார் 99438 38146, சங்கராமநல்லூர், கொழுமம், கொமரலிங்கம், சோழமாதேவி விவசாயிகள் நித்யராஜ், 84890 95995 என்ற எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம்.கூடுதல் விபரங்களுக்கு தோட்டக்கலை உதவி இயக்குனர், சுரேஷ்குமார் 97905 82010, தோட்டக்கலை அலுவலர் காவ்ய தீப்தினி 99524 47266 என்ற எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம்.இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    • மத்திய அரசு சமீபத்தில் பொதுபயன்பாட்டு மையம் அமைக்கும் திட்ட விதிமுறைகளில் மாற்றம் கொண்டு வந்துள்ளது.
    • மொத்த திட்ட மதிப்பீடு உச்சவரம்பு 30 கோடி ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.

    திருப்பூர் :

    மத்திய குறு, சிறு, நடுத்தர நிறுவனங்கள் துறை சார்பில் பொது பயன்பாட்டு மையம் அமைக்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. ஒரே தொழில் சார்ந்த 20 மற்றும் அதற்கு மேற்பட்ட குறு, சிறு, நடுத்தர தொழில்முனைவோர் இணைந்து அரசு மானியத்துடன், நவீன தொழில்நுட்பங்களுடன் தங்கள் தொழில் சார்ந்த பொது பயன்பாட்டு மையம் அமைக்க இந்த திட்டம் கைகொடுத்து வருகிறது.

    திருப்பூர் தொழில்பாதுகாப்புக்குழு, நிட்டிங், பிரின்டிங், டிசைனிங் பொது பயன்பாட்டு மையங்கள், பல்லடத்தில் விசைத்தறிக்கான பொது பயன்பாட்டு மையங்களை இந்த திட்டத்தை பயன்படுத்தி உருவாக்கியுள்ளது.மத்திய அரசு சமீபத்தில் பொதுபயன்பாட்டு மையம் அமைக்கும் திட்ட விதிமுறைகளில் மாற்றம் கொண்டு வந்துள்ளது. இந்த திட்டத்தில் மொத்த மதிப்பு 20 கோடி ரூபாய் வரை பொது பயன்பாட்டு மையம் அமைக்க அனுமதிக்கப்பட்டது.

    மொத்த திட்ட மதிப்பீடு உச்சவரம்பு 30 கோடி ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. இது குறித்து தொழில் பாதுகாப்புக்குழு ஒருங்கிணைப்பாளர் அண்ணாதுரை கூறியதாவது:-

    இந்த திட்டத்தில் பொது பயன்பாட்டு மையம் அமைப்பதற்கான உச்சவரம்பு தொகை 30 கோடியாக உயர்த்தப்பட்டிருப்பது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. அதிக மதிப்பீட்டில் மையங்களை உருவாக்குவதற்கான வாய்ப்பு உருவாகியுள்ளது. 10 கோடி ரூபாய்க்கும் குறைவான மதிப்பீட்டில் மையம் அமைத்தால் மத்திய அரசு 70 சதவீதம், மாநில அரசு 20 சதவீதம் என மொத்தம் 90 சதவீதம் மானியம் என்கிற அம்சமும் புதிதாக சேர்க்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

    இந்த திட்டத்தில் திட்ட அறிக்கை சமர்ப்பிக்கப்பட்ட 18 மாதங்களுக்குள் அரசு அனுமதி கிடைக்கும் எனவும் வழிகாட்டு நெறிமுறைகளில் தெரிவிக்கப்பட்டுள்ளன.இதன்மூலம் குறு, சிறு நிறுவனங்கள் ஒருங்கிணைந்து, குறைந்த முதலீட்டில் திறன் மிக்க பொது பயன்பாட்டு சேவை மையங்களை மிக எளிதாக அமைத்துக்கொள்ளமுடியும்.திருப்பூரில் பின்னலாடை துறையினரை இணைத்து சேம்பிளிங், மறுசுழற்சி ஆடை, தொழில்நுட்ப ஜவுளி, பினிஷிங், ஆப்செட் பிரின்டிங் என இந்த திட்டம் மூலம் பல்வேறு புதிய பொதுபயன்பாட்டு மையங்களை உருவாக்க திட்டமிட்டுள்ளோம். ஆடை உற்பத்தி மட்டுமின்றி வேளாண் பொருட்கள் உற்பத்திக்கான பொது பயன்பாட்டு மையங்களும் அமைக்க முடியும். இவ்வாறு அவர் கூறினார்.

    ×