search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 229679"

    • தொகுப்பு வீடுகள் பராமரிப்பு சாத்தூர் எம்.எல்.ஏ. நிதி உதவி வழங்கினார்.
    • தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.50 ஆயிரம் வழங்கினார்.

    ராஜபாளையம்

    விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள கோபாலபுரம், குறிச்சியார்பட்டி பகுதிகள் சாத்தூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதியாகும். இந்தப்பகுதியில் சுமார் 35 தொகுப்பு வீடுகள் சேதம் அடைந்து இடிந்து விழும் நிலையில் உள்ளதாக சாத்தூர் சட்டமன்ற உறுப்பினருக்கு அந்தப்பகுதி மக்கள் மனு கொடுத்தனர்.

    அதன் அடிப்படையில் ஆய்வு செய்த சாத்தூர் சட்டமன்ற உறுப்பினர் ரகுராமன், குறிச்சியார்பட்டி பஞ்சாயத்தில் 4 வீடுகளுக்கும், கோபாலபுரம் பஞ்சாயத்தில் 21 வீடுகளுக்கும் சேதமடைந்த வீடுகளை பழுது பார்க்க சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.50 ஆயிரம் வழங்கினார்.

    மேலும் பழுதடைந்த வீடுகளை பார்வையிட்டு வீடுகளை சரி செய்யவும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இந்த நிகழ்ச்சியில் வட்டார வளர்ச்சி அலுவலர் வசந்தகுமார், கோபாலபுரம் ஊராட்சி மன்ற தலைவர் சுதா ஜெயக்குமார், குறிச்சியார்பட்டி ஊராட்சி மன்றத்தலைவர் முத்துராஜ், ஒன்றிய பணி குழு மேற்பார்வளர்கள் கண்ணன், மாரியப்பன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை (வெள்ளிக்கிழமை) காலை 8 மணி முதல் பிற்பகல் 3 மணிவரை மின் விநியோகம் இருக்காது.
    • மின்பாதைகளில் மின்கம்பங்களுக்கும் மின் பாதைகளுக்கும் இடை யூறாக இருக்கும் மரக்கிளைகள் அகற்றும் பணி

    கன்னியாகுமரி :

    குழித்துறை துணை மின் நிலைய அலுவலகம் சார்பில் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

    குழித்துறை துணை மின் நிலைய பகுதியில் நடைபெறும் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக ஆலுவிளை, மேல்புறம், மருதங் கோடு, கோட்ட விளை, செம்மங்காலை, இடைக்கோடு, மாலைக் கோடு, புலியூர்சாலை, மேல்பாலை, பனச்சமூடு, அருமனை, பளுகல், களியக்காவிளை, மடிச்சல், பாலவிளை, பெருந்தெரு, பழவார், விளவங்கோடு, கழுவன்திட்டை, குழித் துறை, இடைத்தெரு ஆகிய பகுதிகளுக்கும் அதைச்சார்ந்த துணை கிராமங்களுக்கும் நாளை (வெள்ளிக்கிழமை) காலை 8 மணி முதல் பிற்பகல் 3 மணிவரை மின் விநியோகம் இருக்காது.

    இந்த நேரத்தில் மின்பாதைகளில் மின்கம்பங்களுக்கும் மின் பாதைகளுக்கும் இடை யூறாக இருக்கும் மரக்கிளைகள் அகற்றும் பணியும் நடைபெறுவதால் பொதுமக்கள் ஒத்துழைப்பு தர வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • மேற்கண்ட தகவலை சாலியமங்கலம் மின்வாரிய உதவி செயற்பொறியாளர் நல்லையன் தெரிவித்துள்ளார்.
    • பூண்டி மற்றும் ராகவமாள்புரம் துணை மின் நிலையத்தில் நாளை (செவ்வாய்க்கிழமை ) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.

    தஞ்சாவூர்:

    தஞ்சை அருகே உள்ள பூண்டி மற்றும் ராகவமாள்புரம் துணை மின் நிலையத்தில் நாளை (செவ்வாய்க்கிழமை ) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.

    எனவே பூண்டி, சாலியமங்கலம், திருபுவனம், மலையர் நத்தம், குடிகாடு, செண்பகபுரம், பள்ளியூர், களஞ்சேரி, இரும்பு தலை, ரங்கநாதபுரம், சூழியகோட்டை, கம்பர் நத்தம், அருந்தவப்புரம், வாளமார்கோட்டை, ஆர்சுத்திப்பட்டு, அருமலைக்கோட்டை, சின்னபுலிக்காடு, நார்த்தேவன் குடிகாடு, அரசப்பட்டு, வடக்கு நத்தம், மூத்திமம்மாள்புரம், பனையக்கோட்டை, சடையார் கோவில், துறையுண்டார்கோட்டை ஆகிய இடங்களில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்விநியோகம் இருக்காது.

    மேற்கண்ட தகவலை சாலியமங்கலம் மின்வாரிய உதவி செயற்பொறியாளர் நல்லையன் தெரிவித்துள்ளார்.

    • பசுமைப்பரப்பை அதிகரிக்க பல்வேறு திட்டங்களின் கீழ் மரக்கன்றுகள் நடப்படுகிறது.
    • மரக்கன்றுகளுக்கு தண்ணீர் ஊற்றும் பணியை கூட ஊராட்சி நிர்வாகத்தினர் தவிர்த்து விடுகின்றனர்.

    குடிமங்கலம் :

    குடிமங்கலம் ஒன்றியத்தில் 23 ஊராட்சிகள் உள்ளன. அங்குள்ள கிராமங்களில் பசுமைப்பரப்பை அதிகரிக்க பல்வேறு திட்டங்களின் கீழ் மரக்கன்றுகள் நடப்படுகிறது.குறிப்பாக தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தின் கீழ், மரக்கன்றுகள் நடவு, பராமரிப்புக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.மேலும் திருப்பூர் மாவட்ட நிர்வாகம் சார்பில் கடந்தாண்டு நீர்நிலை கரைகளில் பனை விதை நடவு செய்ய வழிகாட்டுதல் வழங்கப்பட்டது.

    இவ்வாறு பல்வேறு திட்டங்களின் கீழ் மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டாலும் தொடர் பராமரிப்பில், அக்கறை காட்டுவதில்லை.வேலை உறுதியளிப்பு திட்டத்தில் நிதி ஒதுக்கீடு செய்யாத போது மரக்கன்றுகளுக்கு தண்ணீர் ஊற்றும் பணியை கூட ஊராட்சி நிர்வாகத்தினர் தவிர்த்து விடுகின்றனர். இதனால் மரக்கன்றுகள் குறுகிய காலத்தில் தண்ணீரின்றி கருகி விடுகிறது.இவ்வாறு, ஆயிரக்கணக்கான மரக்கன்றுகள் கிராமங்களில் கருகும் அவல நிலையில் காணப்படுகிறது.

    சில கிராமங்களில் மட்டும் மரக்கன்றுகளை பாதுகாக்க பசுமை வலை அமைத்து தன்னார்வலர்கள் உதவியுடன், தண்ணீர் ஊற்றி பராமரிக்கின்றனர்.இயற்கை ஆர்வலர்கள் கூறுகையில், மரம் வளர்ப்புக்கு அரசு செயல்படுத்தும் திட்டங்கள் அனைத்தும் தொடர்ந்து கண்காணிக்கப்படுவதில்லை. இதனால் திட்டத்தின் நோக்கமும், ஒதுக்கப்படும் நிதியும் வீணாகிறது. இது குறித்து மாவட்ட நிர்வாகம் உரிய ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

    • ஈரோடு ரெயில் நிலையம் அருகே பராமரிப்பு பணி நேற்று தொடங்கியது. வரும் ஆகஸ்ட் 13-ந் தேதி வரை 21 நாட்கள் இந்த பராமரிப்பு பணி நடைபெறுகிறது.
    • அதன்படி சேலத்தில் இருந்து ஈரோடு ரெயில் நிலையம் வராமல் நாமக்கல் வழியாக கரூர் செல்லும் வகையில் மாற்று வழி பாதையில் ரெயில்கள் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மைசூர்- மயிலாடுதுறை (16232) செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் பராமரிப்பு பணிகள் நடைபெறும் நாட்களில் ஈரோடு ரெயில் நிலையம் வராமல் நாமக்கல் வழியாக கரூருக்கு செல்லும்.

    ஈரோடு,ஜூலை. 25-

    ஈரோடு ரெயில் நிலையம் அருகே பராமரிப்பு பணி நேற்று தொடங்கியது. வரும் ஆகஸ்ட் 13-ந் தேதி வரை 21 நாட்கள் இந்த பராமரிப்பு பணி நடைபெறுகிறது. இதன் காரணமாக ஈரோடு வழியாக செல்லும் ரயில்கள் மாற்று வழி பாதையில் செல்ல ரெயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.

    அதன்படி சேலத்தில் இருந்து ஈரோடு ரெயில் நிலையம் வராமல் நாமக்கல் வழியாக கரூர் செல்லும் வகையில் மாற்று வழி பாதையில் ரெயில்கள் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மைசூர்- மயிலாடுதுறை (16232) செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் பராமரிப்பு பணிகள் நடைபெறும் நாட்களில் ஈரோடு ரெயில் நிலையம் வராமல் நாமக்கல் வழியாக கரூருக்கு செல்லும்.

    இதேப்போல் மைசூர்- தூத்துக்குடி (16236) எக்ஸ்பிரஸ் ரெயில், வாஸ்கோடகாமா -நாகப்பட்டினம்(17315) எக்ஸ்பிரஸ் ரெயில், ஸ்ரீமதா வைஷ்னோதேவி கற்றா- திருநெல்வேலி (16788) எக்ஸ்பிரஸ் ெரயில், சண்டிகர்- மதுரை (12688) எக்ஸ்பிரஸ் ரயில், ஒக்கா-தூத்துக்குடி (19568) எக்ஸ்பிரஸ் ரயில், காச்சகுடா - மதுரை (17615) எக்ஸ்பிரஸ் ெரயில், தூத்துக்குடி- மைசூர் (16235) எக்ஸ்பிரஸ் ரயில், திருநெல்வேலி- ஸ்ரீ மதா வைஷ்னோ தேவி கற்றா (16787) எக்ஸ்பிரஸ் ரயில், மதுரை- சண்டிகர் (12687), எக்ஸ்பிரஸ் ெரயில், தூத்துக்குடி -ஒக்கா (19567) எக்ஸ்பிரஸ் ெரயில், நாகப்பட்டினம்-வாஸ்கோடகாமா (17316) எக்ஸ்பிரஸ் ெரயில், மதுரை- காச்சகுடா (17616) எக்ஸ்பிரஸ் ெரயில், மயிலாடுதுறை-மைசூர் (16231) எக்ஸ்பிரஸ் ெரயில் ஆகிய ரயில்கள் பராமரிப்பு நாட்களான 24.7.2022 முதல் 13.8.2022 வரை 21 நாட்கள் சேலத்தில் இருந்து நாமக்கல் வழியாக கரூருக்கு மாற்று பாதையில் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதே போல் ஈரோட்டில் இருந்து ஜோலார்பேட்டைக்கு (06846) இயக்கப்படும் சிறப்பு ெரயில் வரும் ஆகஸ்ட் 14-ந் தேதி வரை 22 நாட்களுக்கு ரத்து செய்யப்பட்டுள்ளது. இதே போல் ஜோலார்பேட்டையில் இருந்து ஈரோடுக்கு (06845) இயக்கப்படும் சிறப்பு ெரயில் இன்று முதல் வரும் ஆகஸ்ட் 15-ந் தேதி வரை 22 நாட்களுக்கு ரத்து செய்யப்படுகிறது. இதைப்போல் ஈரோட்டிலிருந்து மேட்டூர் அணைக்கு (06407) இயக்கப்படும் சிறப்பு ெரயில் இன்று முதல் வரும் ஆகஸ்ட் 14-ந் தேதி வரை 21 நாட்களுக்கு ரத்து செய்யப்படுகிறது. இதேபோல் மேட்டூர் அணையில் இருந்து ஈரோட்டுக்கு (06408) இயக்கப்படும் சிறப்பு ெரயில்கள் இன்று முதல் வரும் ஆகஸ்ட் 14-ந் தேதி வரை 21 நாட்களுக்கு முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது. இதுகுறித்து மேலும் விவரங்களுக்கு 0424 - 2284812 என்ற உதவி எண்ணை அழைத்து கூடுதல் விவரங்களை தெரிந்து கொள்ளலாம் என ெரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

    • ஈரோடு முதல் பழனி வரையுள்ள மாநில நெடுஞ்சாலை மிக முக்கியமான சாலையாகும்.
    • சாலை விரிவாக்கப் பணிகள் நடைபெற்று வருகிறது.

    திருப்பூர்:

    திருப்பூர் மாவட்டத்தின் வழியாக பழைய கோட்டை முதல் தாராபுரம் வரை செல்லும் ஈரோடு பழனி சாலை அகலப்படுத்தும் பணிகள் சுறுசுறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்தச்சாலை அகலப்படுத்தும் பணிக்காக 50 ஆண்டுகள் கடந்த வேம்பு, புளி, வாகை, புங்கன், நொச்சி, வெள்ளவேல மரங்கள் பலவும் வெட்டி அகற்றப்பட்டு, சாலை விரிவாக்கம் செய்யப்பட்டு வருகிறது. இதில் வெட்டப்பட்ட மரங்களுக்கு ஈடாக சாலை ஓரத்தில் நெடுஞ்சாலைத் துறையினர் மரக்கன்றுகளை நட்டு பராமரித்து வருகின்றனர்.

    ஈரோடு முதல் பழனி வரையுள்ள மாநில நெடுஞ்சாலை மிக முக்கியமான சாலையாகும். ஆறுபடை வீடுகளில் தமிழ் கடவுள் முருகனின் முக்கிய வீடாக பழனி விளங்குகிறது‌. வட மாவட்டங்களில் இருந்து பழனிக்கு பாத யாத்திரையாக வரும் லட்சக்கணக்கான முருகபக்தர்கள் பயன்படுத்தும் சாலையாகவும், ஆந்திரா தெலுங்கானா உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த ஐயப்ப பக்தர்கள் சபரி மலைக்குச் செல்ல பயன்படுத்தும் முக்கிய சாலையாக இது அமைந்துள்ளது.

    மேலும் திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில் உற்பத்தி செய்யப்படும் உணவு தானியம், எண்ணெய் வித்து பொருட்களை வேறு மாநிலங்களுக்கு கொண்டு செல்ல இரு தேசிய நெடுஞ் சாலைகளை இணைக்கும் முக்கிய மாநில நெடுஞ்சாலை யாக இது உள்ளது.

    ஈரோடு முதல் 112 கிலோ மீட்டர் தூரத்துக்கு சாலையை அகலப்படுத்தும் பணிகள் தற்போது சுறுசுறுப்பாக நடைபெற்று வருகிறது. சில இடங்களில் சாலையை அகலப்படுத்த அருகில் இருந்த 50 ஆண்டுகள் கடந்த பழமையான மரங்களை வெட்டி அகற்ற வேண்டிய நிலை ஏற்பட்டது.

    இதனை அடுத்து வேப்பமரம்,புளிய மரம் என பல நூறு மரங்கள் வெட்டப்பட்டு சாலை விரிவாக்கப் பணிகள் நடைபெற்று வருகிறது. இதற்காக வெட்டப்பட்ட மரங்களை ஈடு செய்யும் வகையில்,காங்கயம் நெடுஞ்சாலைத்துறை சாலைப் பணியாளர்கள், விரிவாக்கம் செய்த சாலை ஓரத்தில் புதிதாக வேம்பு புங்கன், நாவல், வாகை,புளி உள்ளிட்ட மரக்கன்றுகளை நட்டு சுற்றிலும் பாதுகாப்பு வேலிகள் அமைத்து மரக் கன்றுகளை பராமரித்து வருகின்றனர்.

    மழை காலம் இல்லாத சமயங்களில் சாலைப்பணியாளர்கள் அவ்வப்போது தண்ணீர் ஊற்றி கண்காணித்தும் வருவதால்,ஒரு சிலவற்றை தவிர மற்ற மரங்கள் நன்கு துளிர்த்து வளர்ந்து உள்ளது.வெட்டபட்ட மரங்களுக்கு பதில் உடனடியாக மரக்கன்று வைத்து பராமரித்து வரும் நெடுஞ்சாலைத் துறையின் செயலை பொது மக்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.

    • உலர் களமும், இருப்பு வைக்க குடோன்களும், பல்வேறு திட்டத்தின் கீழ் கட்டப்பட்டன.
    • வேளாண் விற்பனை மற்றும் வணிகத்துறை சார்பில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    மடத்துக்குளம்:

    உடுமலை, குடிமங்கலம், மடத்துக்குளம் பகுதிகளில் விவசாயம் பிரதானமாக மேற்கொள்ளப்படுகிறது. விவசாயிகள் தாங்கள் விளைவித்த விளைபொருட்களை உலர வைக்க உலர்களங்களையும், இருப்பு வைக்க குடோன்களை பயன்படுத்தி வருகின்றனர்.

    குடிமங்கலம் ஒன்றியம் புதுப்பாளையம் ஊராட்சியில் உலர்களங்கள் சிதிலடைந்தும், குடோன் பராமரிப்பு இல்லாமலும் உள்ளன.இது குறித்து ஏ.நாகூர் கிராம நீரினை பயன்படுத்துவோர் சங்கம் சார்பில் நாகூர் திருப்பூர் கலெக்டருக்கு அனுப்பியுள்ள மனுவில், குடிமங்கலம் ஒன்றியத்தில், பி.ஏ.பி., பாசனத்தில், ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.அறுவடைக்கு பிறகு, விளைபொருட்களை காய வைக்க, உலர் களமும், இருப்பு வைக்க குடோன்களும், பல்வேறு திட்டத்தின் கீழ் கட்டப்பட்டன. தொடர் பயன்பாடு மற்றும் பராமரிப்பு இல்லாததால், பெரும்பாலான உலர்களங்கள் சிதிலமடைந்துள்ளன.

    புதுப்பாளையம் ஊராட்சி அடிவள்ளி கிராமத்திலுள்ள, இரண்டு உலர்களங்களும் பயன்படுத்த முடியாத நிலைக்கு மாறி வருகின்றன. மக்காச்சோளம், கொண்டைக்கடலை உள்ளிட்ட விளைபொருட்கள் இருப்பு வைக்கும் குடோனும் பராமரிப்பு இல்லாமல் உள்ளது.எனவே, கிராமங்களிலுள்ள, உலர்களம், குடோனை புதுப்பிக்கவும், கூடுதல் களங்கள் கட்டவும், வேளாண் விற்பனை மற்றும் வணிகத்துறை சார்பில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு, மனுவில், தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • அனுமதி வழங்காததால் தொழிலாளர்கள் கஷ்டப்பட்டும், மனவேதனையுடனும் போதிய வருமானம் இல்லாமல் வறுமையில் இருந்து கொண்டிருக்கிறோம்.
    • மாடுகளுக்கு பருத்தி தீவனம் புண்ணாக்கு வாங்க கூட பணம் இல்லாமல் பராமரிப்பு இன்றி கால்நடைகள் சிரமப்பட்டு கொண்டிருக்கிறது.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறைஅடுத்து மணல்மேடு பகுதி திருவா ளப்புத்தூர் மாட்டு வண்டி ஓட்டுனர் சங்கத்தினர் கொள்ளிடம் ஆற்றில் மாட்டு வண்டிகளில் மணல் எடுக்க அனுமதி வழங்க வேண்டி மாவட்ட கலெக்டர் லலிதாவிடம் மனு கொடுத்துள்ளனர்.

    அந்த மனுவில், நாங்கள் தொடர்ந்து ஒவ்வொரு வாரமும் மாட்டு வண்டிகளில் மணல் எடுக்க மனு கொடுத்து வருகிறோம். அனுமதி வழங்காததால் தொழிலாளர்கள் கஷ்ட ப்பட்டும், மனவேதனையு டனும் போதிய வருமா னம் இல்லாமல்வறுமை யில் இருந்து கொண்டிரு க்கிறோம். மாடுகளுக்கு பருத்தி தீவனம் புண்ணா க்கு வாங்கி கூட பணம் இல்லா மல் பராமரிப்பு இன்றி கால்ந டைகள் சிரமப்பட்டு கொ ண்டிருக்கிறது. எங்களுடைய வாழ்வா தாரமே கேள்வி க்குறியாகி உள்ளது. எனவே மாட்டு வண்டிகளில் மணல் எடுக்க அனுமதி வழங்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

    • மதுரையில் நாளை மின்தடை செய்யப்படுகிறது
    • விராட்டிபத்து உயர் அழுத்த மின்பாதையில் பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது.

    மதுரை

    விராட்டிபத்து உயர் அழுத்த மின்பாதையில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் சம்மட்டிபுரம்மெயின்ரோடு, ஸ்ரீராம் நகர், எம்.எம்.நகர், எச்.எம்.எஸ். காலனி, டோக்நகர் 7- வது தெரு முதல் 15-வது தெரு வரை, கோ-ஆப்டெக்ஸ் காலனி, ஜெய் நகர், ராஜராஜேஸ்வரி நகர், இருளாண்டி காலனி, கிருதுமால் நகர், ஜானகி நகர், ஆனந்தா நகர்,தேவகி ஸ்கேன், வெள்ளக்கண்னு தியேட்டர் ரோடு, பிக்பஜார், பொன்மேனிபுதூர், அமிர்தா நகர், தேனி மெயின்ரோடு முதல் ஈத்கா பில்டிங் வரை, பாண்டியன்நகர் ஆகிய பகுதிகளில் நாளை (4-ந் தேதி) காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை ஏற்படும்.

    மதுரை தெப்பக்குளம் துணை மின்நிலையம் கேட்லாக் பீடரில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் புது மீனாட்சி நகர், கேட்லாக் ரோடு, மேல அனுப்பானடி, சின்ன கண்மாய், ஜோசப் பார்க், சி.எம்.ஆர்.ரோட்டின் ஒரு பகுதி, சண்முகா நகர் ஆகிய பகுதிகளில் நாளை (4-ந் தேதி) காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை ஏற்படும்.

    சமயநல்லூர் துணைமின்நிலையம் வைரவநத்தம் பீடரில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் சித்தாலங்குடி, ஆணைக்குளம், வைரவநத்தம், வயலூர், சித்தன்குளம் ஆகிய பகுதிகளில் நாளை (4-ந் தேதி) காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை ஏற்படும்.

    • தலைமை மின்பொறியாளர் செல்வகுமார், நெல்லை மின் பகிர்மான வட்ட மேற்பார்வை மின் பொறியாளர் ராஜன்ராஜ் ஆகியோர் பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கினர்.
    • பாராட்டு விழா ஏற்பாடுகளை தொழில்நுட்ப பயிற்சி மேம்பாட்டு மைய முதன்மை மேலாளர் ராகவன் மற்றும் அலுவலர்கள் செய்திருந்தனர்.

    நெல்லை:

    தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் சார்பில் பழுது இல்லாமல் மின்மாற்றிகளை பராமரிப்பு செய்த நெல்லை மண்டல பிரிவு அலுவலர்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது.

    நெல்லை மின் பகிர்மான வட்டத்தில் கடந்த 2020-21 ஆம் ஆண்டில் 26 பிரிவு அலுவலகம் மற்றும் 2021-22 ஆம் ஆண்டில் 31 பிரிவு அலுவலகத்திலும் மின்மாற்றிகளை பராமரிப்பு செய்து பழுது இல்லாமல் பணிகள் மேற்கொண்ட அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கு நெல்லை மண்டல தலைமை அலுவலக வளாகத்தில் பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது. இதில் மண்டல தலைமை மின்பொறியாளர் செல்வகுமார், நெல்லை மின் பகிர்மான வட்ட மேற்பார்வை மின் பொறியாளர் ராஜன்ராஜ் ஆகியோர் கலந்து கொண்டு பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கினர். இந்த விழாவில் செயற்பொறியாளர் (பொது) வெங்கடேஷ் மணி, செயற்பொறியாளர் (நகர்ப்புறம் )முத்துக்குட்டி, செயற்பொறியாளர் (கல்லிடைக்குறிச்சி) சுடலையாடும்பெருமாள் மற்றும் உதவி செயற்பொறியாளர்கள், பணியாளர்கள் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை தொழில்நுட்ப பயிற்சி மேம்பாட்டு மைய முதன்மை மேலாளர் ராகவன் மற்றும் அலுவலர்கள் செய்திருந்தனர்.

    • நாமக்கலில் சாலையோர மரக்கன்றுகளை நெடுஞ்சா–லைத்துறையினர் பராமரித்து வருகின்றனர்.
    • இருமுறைதண்ணீர் விட்டு, இயற்கை உரம் போட்டு, பூச்சிக்கொல்லி மருந்து விட்டு பாதுகாக்கின்றனர்.

    நாமக்கல்:

    நாமக்கல் திருச்சி சாலையில் நெடுஞ்சாலைத்துறை சார்பில் நாமக்கல் முதல் திருச்செங்கோடு சாலை குமரமங்கலம் வரை நெடுஞ்சாவைத்துறை சார்பில் நாவல், புங்கன், பூவரசு, நீர் மருது, வாகை மயில் கொண்டை, மகாகனி, பாதான் உள்ளிட்ட மரக்கன்றுகள் 1582 செடிகள் நடப்பட்டன.

    மரக்கன்று நடப்பட்டு வாரம் இருமுறைதண்ணீர் விட்டு, இயற்கை உரம் போட்டு, பூச்சிக்கொல்லி மருந்து விட்டு செடிகளை பராமரிக்கப்பட்டு வருகின்றன. நெடுஞ்சாலைத்துறையினர் பாது–காப்புடன் தொடர்ந்து பராமரிப்பு பணி மேற்கொண்டு வருவதால் சுமார் சுமார் 15 அடி உயரத்திற்கு செடிகள் வளர்ந்துள்ளது. நெடுஞ்சாலை துறையின் தீவிர பராமரிப்பால் சாலையோரம் செடிகள் வளர்ந்து ரம்மியமாக காட்சி அளிக்கிறது.

    • துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
    • நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் இருக்காது.

    தஞ்சாவூர்:

    தஞ்சை நகர உதவி செயற்பொறியாளர் கருப்பையா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தஞ்சை மணிமண்டபம் துணை மின் நிலையத்தில் நாளை (செவ்வாய்க்கிழமை ) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.

    எனவே யாகப்பா நகர், அருளானந்த நகர், அருளானந்த அம்மாள் நகர், பிலோமினா நகர், காத்தூண் நகர், சிட்கோ, அண்ணா நகர், காமராஜர் நகர், பாத்திமா நகர் , மேரீஸ் கார்னர், திருச்சி ரோடு, ராமகிருஷ்ணபுரம், மங்களபுரம், கணபதி நகர், ராஜப்பா நகர், மகேஸ்வரி நகர், திருப்பதி நகர், செல்வம் நகர், அண்ணாமலை நகர், ஜெ.ஜெ.நகர், டி.பி.எஸ். நகர், சுந்தரம் நகர் , பாண்டியன் நகர், எஸ்.இ. அலுவலகம், கலெக்டர் பங்களா சாலை, டேனியல் தாமஸ் நகர், காவேரி நகர், நிர்மலா நகர், என்.எஸ்.போஸ் நகர், தென்றல் நகர், துளசியாபுரம், தேவன் நகர் , பெரியார் நகர், இந்திரா நகர், கூட்டுறவு காலனி ஆகிய இடங்களில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் இருக்காது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ×