என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "ஐன்ஸ்டீன்"
- போட்டிகளை அம்பாசமுத்திரம் டி.எஸ்.பி. பிரான்சிஸ் கொடியசைத்து தொடங்கி வைத்தார்
- முக்கூடல் முத்துமாலை அம்மன் கோவில் வளாகத்தில் பரிசளிப்பு விழா நடைபெற்றது.
ஆலங்குளம்:
ஆலங்குளம் அருகே கல்வி விழிப்புணர்வு மாரத்தான் போட்டி நடைபெற்றது.
சீதபற்பநல்லூர் ஐன்ஸ்டீன் பொறியியல் கல்லூரி மற்றும் இடைகால் ஸ்டஅக் ஹைடெக் பள்ளி இணைந்து நடத்திய இந்த போட்டியானது ஆலங்குளத்தை அடுத்த பனையங்குறிச்சி கிராமத்தில் தொடங்கி கபாலிபாறை கிராமம் வரை 5 கிலோ மீட்டர் தொலைவிற்கும்,
முக்கூடல் வரை 10 கிலோ மீட்டர் தொலைவிற்கும் தனித்தனியாக நடத்தப்பட்டது.
இதனை அம்பாசமுத்திரம் டி.எஸ்.பி. பிரான்சிஸ் கொடியசைத்து தொடங்கி வைத்தார். மாணவர்கள், இளைஞர்கள் என ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் போட்டியில் கலந்து கொண்டனர்.
முக்கூடல் முத்துமாலை அம்மன் கோவில் வளாகத்தில் பரிசளிப்பு விழா நடைபெற்றது. முதல் மூன்று இடங்களை பிடித்த வீரர், வீராங்கனைகளுக்கு தென்காசி மாவட்ட ஊராட்சித் தலைவர் தமிழ்செல்வி போஸ், ஸ்டஅக் பள்ளி தாளாளர் புனிதா செல்வி, ஐன்ஸ்டீன் கல்லூரி தலைவர் மதிவாணன் ஆகியோர் பரிசு வழங்கினர்.
ஏற்பாடுகளை கல்லூரி நிர்வாகத்தினர், பள்ளித் தலைவர் முருகன் ஆகியோர் செய்திருந்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்