search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆத்திக்காட்டுவிளை"

    • கொடை விழாவிற்கான ஏற்பாடுகளை ஆத்திக் காட்டுவிளை ஸ்ரீ நீலசுவாமி இசக்கியம்மன் திருக்கோவில் குடும்பத்தினர் செய்து வருகின்றனர்.
    • என். ஜி.ஓ. காலனி அருகே உள்ள ஆத்திக்காட்டு விளை அருள்மிகு ஸ்ரீ நீல சுவாமி இசக்கியம்மன் குடும்ப திருக்கோவில் கொடை விழா நாளை 9-ந் தேதி வியாழக்கிழமை தொடங்கி 11-ந் தேதி சனிக்கிழமை வரை 3 நாட்கள் நடைபெற உள்ளது.

    கன்னியாகுமரி:

    என். ஜி.ஓ. காலனி அருகே உள்ள ஆத்திக்காட்டு விளை அருள்மிகு ஸ்ரீ நீல சுவாமி இசக்கியம்மன் குடும்ப திருக்கோவில் கொடை விழா நாளை 9-ந் தேதி வியாழக்கிழமை தொடங்கி 11-ந் தேதி சனிக்கிழமை வரை 3 நாட்கள் நடைபெற உள்ளது.

    கொடை விழா நிகழ்ச்சியில் நாளை 9-ந் தேதி வியாழக்கிழமை காலை 5 மணிக்கு பக்திகானமும், 7.30 மணிக்கு விக்னேஸ்வர பூஜையும், தீப லெஷ்மி பூஜையும், புண்ணியாக வாசனம் பூஜையும், பஞ்கவ்ய பூஜையும், பகல் 12 மணிக்கு தீபாராதனையும், 12.30 மணிக்கு பிரசாதம் வழங்குதல் நிகழ்ச்சியும்,

    மாலை 6 மணிக்கு திருவிளக்கு பூஜையும், இரவு 8 மணிக்கு மஞ்சள் காப்பு மற்றும் மாகாப்பு பூஜையும், 8. 15 மணிக்கு பிரசாதம் வழங்குதல் நிகழ்ச்சியும், 8.30 மணிக்கு வில்லிசையும், இரவு 12 மணிக்கு குடியழைப்பு பூஜையும் நடைபெறுகிறது.

    நாளை மறுநாள் 10-ந் தேதி வெள்ளிக்கிழமை காலை 5 மணிக்கு பக்தி கானமும், 8.30 மணிக்கு வில்லிசையும், பகல் 12 மணிக்கு நீல சுவாமி இசக்கியம்மன் சுவாமிகளுக்கு அலங்கார தீபாராதனையும், பகல் 2 மணிக்கு அன்னதானமும்,

    மாலை 6 மணிக்கு வில்லிசையும், இரவு 8.30 மணிக்கு பிரம்மசக்தி அம்மனுக்கு பூஜையும், 9 மணிக்கு வில்லிசையும், 12 மணிக்கு நீல சுவாமி இசக்கியம்மன் சுவாமிகளுக்கு சிறப்பு தீபாராதனையும் நடைபெறுகிறது.

    11-ந் தேதி சனிக்கிழமை அதிகாலை 4 மணிக்கு வில்லிசையும், காலை 6 மணிக்கு வன்னியடி மறவர் சுவாமிக்கு அலங்கார தீபாராதனையும் நடைபெறுகிறது.

    கொடை விழாவிற்கான ஏற்பாடுகளை ஆத்திக் காட்டுவிளை ஸ்ரீ நீலசுவாமி இசக்கியம்மன் திருக்கோவில் குடும்பத்தினர் செய்து வருகின்றனர்.

    ×