என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "ஆத்திக்காட்டுவிளை"
- கொடை விழாவிற்கான ஏற்பாடுகளை ஆத்திக் காட்டுவிளை ஸ்ரீ நீலசுவாமி இசக்கியம்மன் திருக்கோவில் குடும்பத்தினர் செய்து வருகின்றனர்.
- என். ஜி.ஓ. காலனி அருகே உள்ள ஆத்திக்காட்டு விளை அருள்மிகு ஸ்ரீ நீல சுவாமி இசக்கியம்மன் குடும்ப திருக்கோவில் கொடை விழா நாளை 9-ந் தேதி வியாழக்கிழமை தொடங்கி 11-ந் தேதி சனிக்கிழமை வரை 3 நாட்கள் நடைபெற உள்ளது.
கன்னியாகுமரி:
என். ஜி.ஓ. காலனி அருகே உள்ள ஆத்திக்காட்டு விளை அருள்மிகு ஸ்ரீ நீல சுவாமி இசக்கியம்மன் குடும்ப திருக்கோவில் கொடை விழா நாளை 9-ந் தேதி வியாழக்கிழமை தொடங்கி 11-ந் தேதி சனிக்கிழமை வரை 3 நாட்கள் நடைபெற உள்ளது.
கொடை விழா நிகழ்ச்சியில் நாளை 9-ந் தேதி வியாழக்கிழமை காலை 5 மணிக்கு பக்திகானமும், 7.30 மணிக்கு விக்னேஸ்வர பூஜையும், தீப லெஷ்மி பூஜையும், புண்ணியாக வாசனம் பூஜையும், பஞ்கவ்ய பூஜையும், பகல் 12 மணிக்கு தீபாராதனையும், 12.30 மணிக்கு பிரசாதம் வழங்குதல் நிகழ்ச்சியும்,
மாலை 6 மணிக்கு திருவிளக்கு பூஜையும், இரவு 8 மணிக்கு மஞ்சள் காப்பு மற்றும் மாகாப்பு பூஜையும், 8. 15 மணிக்கு பிரசாதம் வழங்குதல் நிகழ்ச்சியும், 8.30 மணிக்கு வில்லிசையும், இரவு 12 மணிக்கு குடியழைப்பு பூஜையும் நடைபெறுகிறது.
நாளை மறுநாள் 10-ந் தேதி வெள்ளிக்கிழமை காலை 5 மணிக்கு பக்தி கானமும், 8.30 மணிக்கு வில்லிசையும், பகல் 12 மணிக்கு நீல சுவாமி இசக்கியம்மன் சுவாமிகளுக்கு அலங்கார தீபாராதனையும், பகல் 2 மணிக்கு அன்னதானமும்,
மாலை 6 மணிக்கு வில்லிசையும், இரவு 8.30 மணிக்கு பிரம்மசக்தி அம்மனுக்கு பூஜையும், 9 மணிக்கு வில்லிசையும், 12 மணிக்கு நீல சுவாமி இசக்கியம்மன் சுவாமிகளுக்கு சிறப்பு தீபாராதனையும் நடைபெறுகிறது.
11-ந் தேதி சனிக்கிழமை அதிகாலை 4 மணிக்கு வில்லிசையும், காலை 6 மணிக்கு வன்னியடி மறவர் சுவாமிக்கு அலங்கார தீபாராதனையும் நடைபெறுகிறது.
கொடை விழாவிற்கான ஏற்பாடுகளை ஆத்திக் காட்டுவிளை ஸ்ரீ நீலசுவாமி இசக்கியம்மன் திருக்கோவில் குடும்பத்தினர் செய்து வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்