search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அறிவுறுத்தல்"

    • கூட்டத்தில் போலீசார் விநாயகர் சிலை வைப்பது தொடர்பாக பல்வேறு ஆலோசனைகளையும், அறிவுரைகளையும் வழங்கினார்.
    • கடந்த ஆண்டு எந்தெந்த இடத்தில் சிலை வைக்கப்பட்டதோ, அதே இடத்தில் தான் வைக்க வேண்டும். மற்ற இடங்களில் வைக்ககூடாது.

    வடவள்ளி,

    நாடு முழுவதும் ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்தி விழா வெகு விமரிசயைாக கொண்டாடப்படுவது வழக்கம்.

    இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி 18-ந் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதனையொட்டி தற்போதே விநாயர் சதுர்த்திக்கான ஏற்பாடுகள் தொடங்கி விட்டன.

    கோவையிலும் விநாயகர் சதுர்த்தியன்று இந்து அமைப்பினர், பொது மக்கள், விநாயகர் சிலையை வைத்து வழிபடுவார்கள்.

    கோவையில் பல்வேறு இடங்களில் இந்து முன்னணியினர் மற்றும் இந்து அமைப்பினர் சார்பில் விநாயகர் சிலைகள் வைத்து வழிபாடு நடத்துவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டும் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பொது இடத்தில் விநாயகர் சிலை வைத்து வழிபடுவதற்கான ஏற்பாடுகளை தற்போதே தொடங்கி விட்டனர். விநாயகர் சிலை தயாரிப்பு பணியும் இறுதி கட்டத்தை நெருங்கி உள்ளது.

    கோவை வடவள்ளி போலீஸ் நிலையத்திற்குட்பட்ட பகதிகளில் விநாயகர் சதுர்த்தியையொட்டி விநாயகர் சிலை வைப்பது தொடர்பான ஆலோசனை கூட்டம் நடந்தது.

    கூட்டத்திற்கு மாநகர போலீஸ் துணை கமிஷனர் ரவிக்குமார் தலைமை தாங்கினார். வடவள்ளி போலீஸ் இன்ஸ்பெக்டர் கண்ணையன் முன்னிலை வகித்தார். இந்த கூட்டத்தில் இந்து முன்னணியினர் மற்றும் பல்வேறு இந்து அமைப்புகளை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில் இந்து அமைப்பினருக்கு போலீசார் விநாயகர் சிலை வைப்பது தொடர்பாக பல்வேறு ஆலோசனைகளையும், அறிவுரைகளையும் வழங்கினார்.

    வடவள்ளி போலீஸ் நிலையத்திற்குட்பட்ட பகுதிகளில் கடந்த ஆண்டு எந்தெந்த இடத்தில் சிலை வைக்கப்பட்டதோ, அதே இடத்தில் தான் வைக்க வேண்டும். மற்ற இடங்களில் வைக்ககூடாது.

    மேலும் தாங்கள் வைக்க கூடிய சிலைகளை மிகவும் பாதுகாப்புடன் பார்த்து கொள்ள வேண்டும். சிலை வைத்திருக்கும் இடத்ைத சுற்றிலும் தகரம் வைத்து அடைத்து விட வேண்டும். அங்கு எளிதில் தீப்பற்றக்கூ டிய பொருட்களை வைக்க கூடாது. அங்கு தீயணைப்பு கருவியையும் வைத்திருக்க வேண்டும்.

    இதுதவிர விநாயகர் சிலை வைத்திருக்கும் இடத்தை சுற்றிலும் கண்காணிப்பு காமிராக்களும் பொருத்த வேண்டும். 3 நாட்களுக்கு மேல் சிலைகளை வைக்க கூடாது. 3 நாட்களுக்குள் எடுத்து சென்று கரைத்து விட வேண்டும் என்பன உள்பட பல்வேறு ஆலோசனைகள் வழங்கப்பட்டன.

    • குழந்தைகளுக்கு சிறந்த நோய் எதிா்ப்பு சக்தியாகவும், புத்திக்கூா்மையை வளா்ப்பதிலும் முக்கியப் பங்கு வகிக்கிறது.
    • தாய்ப்பால் கொடுப்பதன் மூலம் பெண்களுக்கு மாா்பகம், கா்ப்பப்பை புற்றுநோய் ஏற்படுவதை தடுக்கிறது என்றனா்.

    திருப்பூர்:

    திருப்பூா் சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரியில் உலக தாய்ப்பால் வார விழா விழிப்புணா்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

    நாட்டு நலப்பணித் திட்டம் அலகு -2 சாா்பில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வா் கிருஷ்ணன் தலைமை வகித்தாா். நாட்டு நலப்பணித் திட்டம் அலகு-2 இன் ஒருங்கிணைப்பாளா் மோகன்குமாா் முன்னிலை வகித்தாா். பேராசிரியா் விநாயகமூா்த்தி வரவேற்றாா்.

    குழந்தைகள் வளா்ச்சி திட்ட அலுவலா் சௌமியா, அரசு மருத்துவா் கலைச்செல்வன் ஆகியோா் பேசியதாவது:-

    குழந்தைகளின் முக்கிய உணவுப்பொருள் தாய்ப்பால். இது, குழந்தைகளுக்கு சிறந்த நோய் எதிா்ப்பு சக்தியாகவும், புத்திக்கூா்மையை வளா்ப்பதிலும் முக்கியப் பங்கு வகிக்கிறது. எனவே, குழந்தைகளுக்கு 6 மாதங்கள் வரை கண்டிப்பாக தாய்ப்பால் கொடுக்க வேண்டும்.

    குழந்தைகளுக்கு வயிறு, குடல் நோய்கள் வராமல் தடுக்கிறது. குழந்தைகளின் ஜீரண உறுப்புகளில் நோய் எதிா்ப்புத் தன்மையை பெருக்குகிறது.பிறந்த குழந்தைகளுக்கு ஆஸ்துமா, காது சம்பந்தப்பட்ட நோய்கள் ஏற்படுவதையும் தடுக்கிறது. தாய்ப்பால் கொடுப்பதன் மூலம் பெண்களுக்கு மாா்பகம், கா்ப்பப்பை புற்றுநோய் ஏற்படுவதை தடுக்கிறது என்றனா்.

    நிகழ்ச்சியில் கல்லூரி பேராசிரியா்கள், மாணவா்கள் கலந்து கொண்டனா். 

    • கடைசியில் ஏற்றப்படும் இடைநிறுத்த ஊா்களின் பயணிகள் பல மணி நேரம் நின்று கொண்டே செல்ல வேண்டியுள்ளது.
    • அனைத்து நிலைப் பயணிகளையும் ஏற்றி, இறக்கிச் செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது

    காங்கயம்:

    கோவை காந்திபுரம், சிங்காநல்லூா் பேருந்து நிலையங்களில் இருந்து கரூா், திருச்சி, நாகப்பட்டினத்துக்கு அரசுப் போக்குவரத்துக் கழகப் பேருந்துகள் அதிக அளவில் இயக்கப்படுகின்றன. இந்த வழித் தடத்தில் சூலூா், பல்லடம், அவிநாசிபாளையம், காங்கயம், வெள்ளக்கோவில், தென்னிலை, பரமத்தி ஆகிய ஊா்கள் உள்ளன.

    இந்த ஊா்களுக்குச் செல்லும் பயணிகளை கோவையில் பேருந்து நடத்துநா்கள் முதலில் ஏற்றுவதில்லை. தொலைதூரங்களுக்குச் செல்லும் பயணிகளையே முதலில் ஏற்றுகின்றனா். இதனால் கடைசியில் ஏற்றப்படும் இடைநிறுத்த ஊா்களின் பயணிகள் பல மணி நேரம் நின்று கொண்டே செல்ல வேண்டியுள்ளது.

    இது குறித்து கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வெள்ளக்கோவிலைச் சோ்ந்த ஆசிரியா் வடிவேல் என்பவா் புகாா் தெரிவித்திருந்தாா். அதனடிப்படையில் கோவை மண்டல தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகப்பொது மேலாளா் வெளியிட்ட செய்திக் குறிப்பில், கோவையிலிருந்து குறிப்பிட்ட வழியாகச் செல்லும் பேருந்துகளில் பேருந்து நிலையப் பொறுப்பாளா்கள் மூலம் அனைத்து நிலைப் பயணிகளையும் ஏற்றி, இறக்கிச் செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • பயிற்சிகளை மாணவ, மாணவிகள் முறையாக பயன்படுத்திக்கொண்டு எதிர் காலங்களில் நல்ல வேலை வாய்ப்பை பெற்று பயன்பெறலாம்.
    • நீங்கள் முடிவெடுக்கும் இடத்திற்கு வந்துவிடுவீர்கள் அதன் மூலம் மக்களுக்கு உதவி செய்ய வேண்டும்

    தாராபுரம்,ஜூலை. 5-

    திருப்பூர் மாவட்டம் தாராபுரம் என்.சின்னசாமி நகரவை மேல்நிலைப்ப ள்ளியில் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் உயர்வுக்கு படி உயர் கல்வி வழிகாட்டல் முகாம் நடைபெற்றது. முகாமை கலெக்டர் கிறிஸ்துராஜ் தொடங்கி வைத்தார். பின்னர் அவர் கூறியதாவது:-

    அரசு பள்ளி மாணவர்களுக்கு உயர்கல்வி மற்றும் வேலை வாய்ப்பு குறித்து விழிப்புணர்வையும், வழிகாட்டு தலையும் அளிப்பது தான் நான் முதல்வன் திட்டத்தின் முக்கிய நோக்கம் ஆகும். இதில் மாணவர்களுக்கான உதவித்தொகை, நுழைவு த்தேர்வு, கல்விக்கடன் அதற்கு தேவையான ஆவணங்கள், படிப்பு முடித்த பின்னர் அரசால் நடத்தப்படும் போட்டித்தேர்வு களும் அதற்கான அணுகுமுறைகளும், இலவச பயிற்சி மையங்கள் போன்றவை குறித்த விபரங்கள் உள்ளிட்ட பிற தகவல்களை தெரிந்து கொள்ளும் வகையில் இது போன்ற முகாம்கள் நடத்தப்படுகிறது. அனைவரும் கட்டாயம் கல்லூரி படிப்பில் சேர வேண்டும். அதற்கு உங்களுக்கு ஏதாவது தடை இருப்பின் உடனடியாக எங்களிடம் தெரிவித்து தீர்வு காணலாம். பயிற்சிகளை மாணவ, மாணவிகள் முறையாக பயன்படுத்திக்கொண்டு எதிர் காலங்களில் நல்ல வேலை வாய்ப்பை பெற்று பயன்பெறலாம். கல்லூரி காலங்களில் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும். அனைவரும் உயர்ந்த பொறுப்பிற்கு வரவேண்டும். கல்லூரி படிப்பை முடித்துவிட்டு மிகப்பெரிய பொறுப்புகளை அடைய வேண்டும். இன்னும் நான்கு ஐந்து ஆண்டுகளில் மாணவ,மாணவிகளாகிய நீங்கள் முடிவெடுக்கும் இடத்திற்கு வந்துவிடுவீர்கள் அதன் மூலம் மக்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்றார்.

    நிகழ்ச்சியில் நான் முதல்வன் திட்டத்தின் விழிப்புணர்வு கையேடுகள் மற்றும் புதுமைப்பெண் திட்டத்தின் கீழ் கையேடுகள் மாணவ, மாணவிகளுக்கு வழங்கினர். மேலும் தென்மேற்கு பருவமழை மாதிரி ஒத்திகை மற்றும் விழிப்புணர்வு பயிற்சி கொடுத்த கையேடுகளை வெளியிட்டனர். அதனைத்ெதாடர்ந்து தாராபுரம் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் கலெக்டர் ஆய்வு மேற்கொண்டார். முன்னதாக தாராபுரம் வட்டம், சித்தாரவுத்த ன்பாளையம் ஊராட்சியில் பழங்குடியினர் நலம் - நரிக்குறவர் இன மக்களுக்கான கோட்ட அளவிலான குறைதீர்க்கும் சிறப்பு முகாம் நடைபெற்றது. இக்குறைதீர்க்கும் சிறப்பு முகாமில் பல்வேறு துறை சார்ந்த அரசு அலுவலர்கள் கலந்து கொண்டு சம்பந்தப்பட்ட துறையின் சார்பில் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் குறித்து அப்பகுதி மக்களுக்கு எடுத்துரைத்து நரிக்குறவர் இன மக்களிடம் பல்வேறு கோரிக்கை மனுக்க ளை பெற்றுக் கொண்டு உரிய நடவடிக்கை மேற்கொள்ள துறை சார்ந்த அலுவலர்களுக்கு கலெக்டர் அறிவுறுத்தினார்.

    இந்நிகழ்ச்சியில் தாராபுரம் வருவாய் கோட்டாட்சியர் செந்தில் அரசு, உயர்கல்வி வழிகாட்டி சிறப்பு ஆலோசகர் (பாராதியார் பல்கலைக்கழகம்) மீனாட்சி, உதவி ஆணையர் (கலால்) ராம்குமார், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பாலமுரளி, மாவட்ட சமூக நலஅலுவலர் ரஞ்சிதாதேவி, முன்னோடி வங்கி மேலாளர் ரவி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • முதல்-அமைச்சர் தனிப்பிரிவு மனுக்கள் மீது கவனம் செலுத்த வேண்டும் என அதிகாரிகளுக்கு கலெக்டர் அறிவுறுத்தியுள்ளார்.
    • மனுக்கள் பெறப்பட்டது.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்ட கலெக்டர் அலுவலக வளர்ச்சி மன்ற கூட்ட ரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் ஜெயசீலன் தலைமையில் நடைபெற்றது. இதில் இலவச வீட்டுமனை பட்டா மற்றும் பட்டா மாறுதல், குடும்ப அட்டை, வேலைவாய்ப்பு, முதியோர், விபத்து நிவாரணம், மாற்றுத்திறனாளிகள், நலிந்தோர் நலத்திட்டம் மற்றும் விதவை உதவித்தொகை, திருமண உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக மனுக்கள் பெறப்பட்டது.

    இந்த மனுக்களை சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் ஒப்படைத்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு கலெக்டர் உத்தரவிட்டார். மேலும் முதல்-அமைச்சர் தனிப்பிரிவு மனுக்கள் மீது தனிக்கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்குமாறும் அறிவுறுத்தினார்.

    தையல் எந்திரம் வேண்டி மனு அளித்த மனுதாரர்களின் மனுவை உடனடியாக பரிசீலனை செய்து 2 பயனாளிகளுக்கு மாவட்ட சமூல நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை மூலம் இலவச தையல் எந்திரங் களை கலெக்டர் வழங்கினார்.

    கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ரவிகுமார், தனித்துணை ஆட்சியர் அனிதா, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (நிலம்) முத்துக் கழுவன், ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலர் வித்யா உள்பட பலர் கலந்துகொண்டனர்.

    • பள்ளி வாகனங்களை கவனத்தோடு இயக்க வேண்டும் என டிரைவர்களுக்கு கலெக்டர் அறிவுறுத்தினார்.
    • மேலும் ஓட்டுநர்கள் தீயணைப்பது குறித்த பயிற்சியும், முதலுதவி குறித்த பயிற்சியும் பெற்றிருக்க வேண்டும் என்றார்.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள விளையாட்டு மைதானத்தில் நிறுத்தப்பட்டிருந்த பள்ளி வாகனங்களை கலெக்டர் ஆஷா அஜித் ஆய்வு செய்தார். பின்னர் பள்ளிக்கல்வித்துறை, போக்குவரத்துத்துறை அலுவலர்களின் ஆய்வுக்கூட்டத்தில் பங்கேற்று கலெக்டர் பேசியதாவது:-

    சிவகங்கை மாவட்டத்தில் 388 பள்ளி வாகனங்கள் உள்ளன. அதில் இன்றைய தினம் 298 வாகனங்கள் ஆய்வு செய்யப்பட்டுள்ளது. மீதமுள்ள வாகனங்கள் விரைவில் ஆய்வு செய்யப்பட்டு சான்று வழங்கப்படும். பள்ளி குழந்தைகள் செல்லும் வாகனத்தின் டிரைவர்கள் அதனை இயக்குவதற்கு முன்பு உரிய பரிசோதனை செய்ய வேண்டும்.

    ஓட்டுனர்கள் வாகனத்தை கவனத்துடனும், அனுமதிக் கப்பட்ட வேகத்துடன் மட்டுமே இயக்க வேண்டும். வாகனம் இயக்கும் போது மது அருந்துதல், கைப்பேசி பயன்படுத்துதல் போன்ற செயல்முறைகள் இருக்கக்கூடாது. குறிப்பிட்ட அளவு குழந்தைகளை மட்டுமே வாகனங்களில் ஏற்ற வேண்டும். மேலும் ஓட்டுநர்கள் தீயணைப்பது குறித்த பயிற்சியும், முதலுதவி குறித்த பயிற்சியும் பெற்றிருக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ஆய்வுக்கூட்டத்தில் போலீஸ் சூப்பிரண்டு செல்வராஜ், வட்டார போக்குவரத்து அலுவலர் மூக்கன், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சுவாமி நாதன், போக்குவரத்து ஆய்வாளர் மாணிக்கம் மற்றும் பள்ளி வாகன ஓட்டுநகர் கலந்து கொண்டனர்.

    • தரம் பிரித்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என மாநகராட்சி மேயர் சுந்தரி ராஜா அறிவுறுத்தினர்.
    • நடவடிக்கையில் ஈடுபடாததால் பல்வேறு குறைபாடுகள் இருந்து வந்தது.

    கடலூர்:

    கடலூர் மாநகராட்சிக்குட்பட்ட துறைமுகம் பகுதியில் இருந்து வரும் துப்புரவு ஊழியர்கள் குப்பைகளை அகற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் இன்று காலை கடலூர் மாநகராட்சி மேயர் சுந்தரி ராஜா துறைமுகம் பகுதியில் குப்பைகள் சரியான முறையில் அகற்றப்படுகிறதா? கால்வாய் சுத்தம் செய்யும் பணி நடைபெறுகிறதா? பொதுமக்களுக்கு அடிப்படை தேவையான குடிநீர் கிடைக்கிறதா? என்பதனை திடீரென்று நேரில் சென்று ஆய்வு செய்தார். அப்போது துப்புரவு ஊழியர்கள் குப்பை களை அகற்றியபோது அதனை பாதுகாப்பாக எடுத்துச் சென்று மக்கும் குப்பை, மக்காத குப்பை என தரம் பிரித்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என மாநகராட்சி மேயர் சுந்தரி ராஜா அறிவுறுத்தினர். இதனை தொடர்ந்து கடலூர் திருப்பாதிரிப்புலியூர் வண்டி பாளையம் சாலை, தங்கராஜ் நகர் மற்றும் பல்வேறு பகுதிகளில் பொதுக் குழாயில் குடிநீர் வருகிறதா? என்பதனை மாநகராட்சி மேயர் சுந்தரி ராஜா நேரில் ஆய்வு செய்தார். அப்போது பொதுமக்கள் பயன்படுத்தக்கூடிய குடிநீரை குடித்து ஆய்வு செய்தார். இதில் பொதுமக்கள் குடிப்பதற்கு ஏதுவாக குடிநீர் இருந்தது தெரிய வந்தது.

    மேலும் மாநகராட்சி மேயர் சுந்தரி ராஜா பொதுமக்களிடம் கூறுகையில், தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவின் படி நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என்.நேரு, வேளாண்மை துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் அறிவுறுத்தலின் பேரில் தற்போது ஒரு கோடியே 36 லட்சம் மதிப்பீட்டில் அயன் பில்டர் பெட் என்பதனை பொருத்தி பொதுமக்களுக்கு சுகாதாரமான குடிநீர் கிடைப்பதற்கு நடவடிக்கை மேற்கொ ள்ளப்பட்டுள்ளது. மேலும் 10 ஆண்டு கால ஆட்சி காலத்தில் இது போன்ற நடவடிக்கையில் ஈடுபடாததால் பல்வேறு குறைபாடுகள் இருந்து வந்தது. தற்போது அந்த குறைபாடுகளை நீக்கி பொது மக்களுக்கு தரமான குடிநீர் வழங்கப்பட்டு வருகின்றது. மேலும் குடிநீர் கிடைக்க பெறாத பகுதிகளில் அந்தந்த கவுன்சிலர்கள் மற்றும் அதிகாரிகள் மூலமாக வாகனங்கள் மூலம் இலவச குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகின்றது. ஆகையால் பொதுமக்கள் இந்த குடிநீரை முறையாக பயன்படுத்த வேண்டும். காசு கொடுத்து குடிநீர் வாங்க வேண்டிய சூழ்நிலை ஏற்பாடாது என தெரிவித்தார். அப்போது மாநகர திமுக செயலாளர் ராஜா, மாணவரணி துணை அமைப்பாளர் பாலாஜி, மாநகராட்சி கவுன்சிலர்கள் பாலசுந்தர், விஜயலட்சுமி செந்தில், கவிதா ரகுராம், மாநகராட்சி அலுவலர்கள் நாகராஜன், தாமோதரன், கார்த்திக் மற்றும் பலர் உடன் இருந்தனர்.

    • சம்பல் செயலியை பதிவிறக்கம் செய்ய ஓய்வூதியர்களுக்கு அறிவுறுத்தபட்டன
    • தேசிய சமூக உதவித் திட்டம் இந்தியாவில் உள்ள முதியோர், விதவை மற்றும் ஊனமுற்றோர் போன்ற ஏழைக் குடும்பங்களுக்கு சமூக உதவிப் பலன்களை வழங்குகிறது

    அரியலூர்:

    அரியலூர் மாவட்ட கலெக்டர் பெ.ரமணசரஸ்வதி விடுத்துள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளதாவது: தேசிய சமூக உதவித் திட்டம் என்பது, இந்திய கிராமப்புற மேம்பாட்டு அமைச்சகத்தால் நிர்வகிக்கப்படும் ஒரு நலத்திட்டம் ஆகும். இந்த திட்டம் கிராமப்புறங்களிலும், நகரப்புறங்களிலும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. தேசிய சமூக உதவித் திட்டம் இந்தியாவில் உள்ள முதியோர், விதவை மற்றும் ஊனமுற்றோர் போன்ற ஏழைக் குடும்பங்களுக்கு சமூக உதவிப் பலன்களை வழங்குகிறது.

    'சம்பல்' செயலியானது, தேசிய தகவலியல் மையத்தால் உருவாக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் குடிமக்கள் ஓய்வூதியம் பெற பதிவு செய்திடவும், ஓய்வூதியம் பெறுவதற்கான தகுதிகள் குறித்தும் மற்றும் நலத்திட்ட உதவிகள் பெறுவதற்கான வழிமுறைகள் குறித்தும் அறிந்து கொள்ள உதவுகிறது. ஓய்வூதியம் பெறுபவர்களின் பட்டியல், நேரடிப் பயன் பரிமாற்றம் குறித்த விவரம் மற்றும் தங்களுக்கு அருகில் உள்ள வங்கி மற்றும் அஞ்சல் நிலையங்கள் குறித்த விவரங்களை அறிய உதவியாக உள்ளது. எனவே, கூகுள் பிளே ஸ்டோரில், சம்பல் செயலியினை ஓய்வூதியர்கள் தங்களது கைப்பேசியில் பதிவிறக்கம் செய்து கொண்டு பயன்பெற வேண்டும் என தெரிவித்துள்ளார்.





    • இடைத்தரகர்களை நம்பி விவசாயிகள் ஏமாற வேண்டாம் என கலெக்டர் அறிவுறுத்தினார்.
    • விவசாயிகளின் தேவைக்கேற்ப கூடுதலாக அரசு நேரடி கொள்முதல் நிலையங்கள் தொடங்க உள்ளன.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    ராமநாதபுரம் மாவட்டத்தில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் மூலம் அரசின் நேரடி நெல்கொள்முதல் நிலையம் முதற்கட்டமாக 50 மையங்கள் தொடங்கப்பட்டு செயல்பட்டு வருகின்றன. இந்த மையங்கள் மூலம் தொடங்கப்பட்ட ஒரு வார காலத்தில் இதுவரை 759 மெட்ரிக்டன் நெல் விவசாயிகளிடம் இருந்து நேரடியாக பெறப்பட்டு ள்ளது.

    இதுவரை 126 விவசாயிகள் நேரடியாக அரசு நேரடி கொள்முதல் நிலையத்தில் விற்பனை செய்து பயன்பெற்று உள்ளனர். இதேபோல் மற்ற விவசாயிகளும் விளைநிலத்தில் விளைந்த நெல்லை அரசு நேரடி கொள்முதல் நிலையத்தில் விற்பனை செய்து உரிய லாபத்தை பெற்று பயன்பெற வேண்டும். இடைத்தரகர்களை நம்பி ஏமாற வேண்டாம்.

    அரசு நேரடி கொள்முதல் நிலையம் விவசாயிகளுக்கா கவே செயல்பட்டு வருகிறது. ஒவ்வொரு மையத்திலும் விவசாயிகள் நேரடியாக வந்து நெல் விற்பனை செய்து அதற்குறிய பணத்தை வங்கிக்கணக்கில் வரவு வைத்துக்கொண்டு செல்லலாம்.

    கொள்முதல் நிலை யத்தில் எந்த வகை கட்டணமும் செலுத்த வேண்டியதில்லை. விவசாயிகளின் தேவைக்கேற்ப கூடுதலாக அரசு நேரடி கொள்முதல் நிலையங்கள் தொடங்க உள்ளன.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • நெல் அறுவடை எந்திரங்கள் வாடகைக்கு உழவன் செயலியை பயன்படுத்த வேண்டும் என கலெக்டர் அறிவுறுத்தினார்
    • விவசாயிகள் உழவன் செயலிக்குள் சென்று நேரடியாக உரிமையாளரை தொடர்பு கொண்டு இடைத்தரகர் இன்றி நெல் அறுவடை எந்திரங்களை பெற்று பயனடைய வேண்டும்

    அரியலூர்:

    அரியலூர் மாவட்டத்தில் நெல் அறுவடை எந்திரங்களை வாடகைக்கு உழவன் செயலியை பயன்படுத்த வேண்டும் கலெக்டர் ரமணசரஸ்வதி தெரிவித்துள்ளார். வேளாண்மை பொறியியல் துறை மூலம் அறுவடை எந்திரங்களை நேரடியாக உரிமையாளர்களிடம் இருந்து பெற உரிமையாளர் பெயர், விலாசம், கைப்பேசி எண்ணுடன் மாவட்ட வாரியாக, வட்டார வாரியாக உழவன் செயலியின் மூலம் வேளாண் எந்திரங்கள் வாடகைக்கு என்ற முகப்பை தேர்வு செய்து அறுவடை எந்திரங்கள் பற்றி அறிய என்ற துணை முகப்பின் மூலம் அரியலூர் மாவட்டத்தில் அதன் தொடர்புடைய வட்டாரத்தை உள்ளீடு செய்து தெரிந்து கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. விவசாயிகள் உழவன் செயலிக்குள் சென்று நேரடியாக உரிமையாளரை தொடர்பு கொண்டு இடைத்தரகர் இன்றி நெல் அறுவடை எந்திரங்களை பெற்று பயனடைய வேண்டும் கலெக்டர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.

    • ஆப்பிரிக்க பன்றி காய்ச்சல் குறித்து பொதுமக்கள் பீதி அடைய தேவையில்லை என்று விருதுநகர் கலெக்டர் அறிவுறுத்தி உள்ளார்.
    • ஒரு பன்றியில் இருந்தே மற்றொரு பன்றிக்கு மட்டும் பரவக்கூடிய நோய் ஆகும்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்ட கலெக்டர் மேகநாதரெட்டி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    நீலகிரி மாவட்டம் உதக மண்டலத்தில் உள்ள தேசிய வன காப்பகத்தில் கடந்த வாரம் 19 காட்டுப்பன்றிகள் இறப்பு ஏற்பட்டு அதன் உடல்களை பரிசோனை செய்து ஆய்வுக்கு அனுப்பி யதில் அவை அனைத்தும் ஆப்பிரிக்க பன்றி காய்ச்சல் நோய் மூலம் இறந்ததாக உறுதி செய்யப்பட்டுள்ளது.

    விருதுநகர் மாவட்ட வனத்துறையினரிடம் இது தொடர்பாக தொடர்பு கொள்ளப்பட்டு வனக்காப்பக எல்கைப் பகுதியில் சாகுபடி செய்யப்படும் பயிர்களை சாப்பிட வரும் காட்டு பன்றிகளை கண்கா ணிக்கவும், ஏதேனும் இறப்பு நேர்ந்தால் தகவல் தெரிவிக்கவும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

    விருதுநகர் மாவட்டத்தில் இதுவரை எவ்வித காட்டுப் பன்றிகளும் நோய் தாக்கப்பட்டு இறந்ததாக தகவல் இல்லை. அதனைத் தொடர்ந்து விருதுநகர் மாவட்டத்தில் கேரள மாநில எல்லையில் ஏதேனும் நோய் தாக்கம் குறித்த விவரங்கள் சேகரிக்கப்பட்டதில் விருதுநகர் மாவட்டத்தில் எவ்வித தாக்கமும் இல்லை என்பது தெரிய வந்துள்ளது.

    மேலும் விருதுநகர் மாவட்டத்தின் வழியாக பன்றிகள் வாகனங்களில் ஏற்றிச் செல்லும்பொழுது அதுகுறித்து தீவிர விசாரணை செய்யவும், நடவடிக்கை மேற்கொ ள்ளவும் காவல்துறை மற்றும் போக்குவரத்து துறையினருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த நோயானது பன்றிகளில் இருந்து பன்றி களுக்கும், நோய் தாக்கப்பட்ட பகுதிகளிலிருந்து வரும் வாகனங்கள், தீவன சாக்குப்பைகள் மூலம் பிற பன்றிகளுக்கும் மட்டுமே பரவக்கூடியதாகும். இது ஒரு வைரஸ் கிருமியால் ஏற்படும் நோயாதலால் தகுந்த உயிர் பாதுகாப்பு நடவடிக்கைகளான சுத்தமாக பண்ணையை பராமரித்தல், ரசாயன கலவை கொண்ட நடை பாதை அமைத்தல், நீர் மற்றும் கழிவுகள் தேங்காமல் பராமரித்தல், ஓட்டல் மற்றும் விடுதிகளில் இருந்து பெறப்படும் கழிவுகளை பன்றிக்கு தீவனமாக வழங்காமல் இருப்பது மற்றும் அந்நி யர்கள் பண்ணையில் நுழைவது தடுப்பது ஆகிய நடவடிக்கைகள் மூலம் இந்த நோயை கட்டுப்படுத்தலாம்.

    இந்த நோயானது பன்றிகளில் இருந்து மனிதர்களுக்கோ, மாடு, ஆடு போன்ற வளர்ப்பு கால்நடைகளுக்கோ பரவாது. ஒரு பன்றியில் இருந்தே மற்றொரு பன்றிக்கு மட்டும் பரவக்கூடிய நோய் ஆகும்.

    எனவே விவசாயிகள் பண்ணையாளர்கள், கால்நடை வளர்ப்போர் மற்றும் பொதுமக்கள் இதுகுறித்து எவ்வித பீதியும் அடையத் தேவையில்லை. சுகாதாரமான முறையில் கிடைக்கப்பெறும் பன்றி இறைச்சியை நன்றாக வேக வைத்து சாப்பிடுவது அவசியம். கால்நடை பராமரிப்புத்துறையினர் பன்றி ப்பண்ணை யாளர்களுக்கு தொடர்ந்து தகுந்த தொழில்நுட்ப ஆலோசனைகளை வழங்கு வதோடு பண்ணைகளை ஆய்வு செய்தும் வருகின்றனர்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • தொழு உரத்தை சூப்பர் பாஸ்பேட் கலந்து விதைக்க வேண்டும் என ேவளாண் அதிகாரி அறிவுறுத்தியுள்ளார்.
    • முதுகுளத்தூர் தாலுகாவில் வேளாண்மை-உழவர் நலத்துறை மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் பணிகளை உதவி இயக்குநர் பாஸ்கரமணியன் ஆய்வு செய்தார்.

    முதுகுளத்தூர்

    முதுகுளத்தூர் தாலுகாவில் வேளாண்மை-உழவர் நலத்துறை மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் பணிகளை உதவி இயக்குநர் பாஸ்கரமணியன் ஆய்வு செய்தார்.

    கலைஞர் திட்டத்தில் இந்தாண்டு தேர்வு செய்யப்பட்டுள்ள முதுகுளத்தூர் அருகே வளநாடு கிராமத்தில் பயிரிடப்பட்டுள்ள 60ம் குறுவை சாகுபடி பயிர்களை பார்வையிட்டார்.

    பின்னர் வயல்வரப்புகளில் விதைப்பதற்காக துவரை விதைகளை விநியோகம் செய்தார். வயல் வரப்புகளில் பயறு வகைகள் பயிரிடு வதால் பூச்சிகள் கட்டுப்படுத்தப்படுவதுடன், விவசாயிகளுக்கு கூடுதல் வருவாய் கிடைக்கும் என்றார்.

    அட்மா திட்டத்தில் தொழு உரம் தயாரிக்கப்படுவதை பார்வையிட்ட உதவி இயக்குநர் தொழு உரத்தை அப்படியே விதைக்காமல் சூப்பர் பாஸ்பேட் கலந்து விதைக்க வேண்டும். அதனால் மண் வளம் காக்கப்படும். வேர்கள் செழித்து வளரும் என்றார்.

    பின்னர் வளநாடு கிராமத்தில் பிரதம மந்திரி யின் நிதி திட்டத்தில் நடை பெற்று வரும் கே.ஒய்.சி. பணிகளை ஆய்வு செய்தார். பயனாளிகள் தங்கள் கைபேசியுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணிகளை பார்வையிட்டார்.

    விவசாயிகள் கே.ஒய்.சி. செய்தால் மட்டுமே அதன் பயன்கள் தங்குதடையின்றி கிடைக்கும் என அறிவுறுத்தினார். இந்த ஆய்வின்போது முதுகுளத்தூர்வேளாண்மை உதவி இயக்குநர் கேசவ ராமன், உதவி வேளாண்மை அலுவலர் தனதுரை, உதவி வேளாண்மை அலுவலர் முத்துராஜ் ஆகியோர் உடன் இருந்தனர்.

    ×