என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "slug 229974"
- மணிரத்னம் இயக்கத்தில் வெளியான பொன்னியின் செல்வன் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
- இதில் அருண்மொழி வர்மன் என்ற கதாப்பாத்திரத்தில் ஜெயம் ரவி நடித்துள்ளார்.
கல்கி எழுதிய நாவலை தழுவி, மணிரத்னம் இயக்கியுள்ள 'பொன்னியின் செல்வன்-1' திரைப்படம் சில தினங்களுக்கு முன்பு திரையரங்குகளில் வெளியானது. இதில் நடிகர்கள் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, ஜெயராம், பார்த்திபன், சரத்குமார், நடிகைகள் ஐஸ்வர்யா ராய், திரிஷா, ஐஸ்வர்யா லட்சுமி உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என 5 மொழிகளில் நேரடியாக இந்த படம் வெளியானது.
இந்நிலையில் இப்படத்தில் அருண்மொழி வர்மன் என்ற கதாப்பாத்திரத்தில் நடித்திருந்த ஜெயம் ரவியை நடிகர் ரஜினிகாந்த் பாராட்டியுள்ளார். இதுகுறித்து ஜெயம் ரவி பதிவிட்டது, அந்த 1 நிமிட உரையாடல் எனது நாளை, எனது இந்த வருடத்தை என் வாழ்க்கைக்கு ஒரு புதிய அர்த்தத்தை சேர்த்தது. உங்கள் அன்பான வார்த்தைகளுக்கும் குழந்தைத்தனமான உற்சாகத்திற்கும் நன்றி தலைவா. நீங்கள் திரைப்படத்தையும் எனது நடிப்பையும் விரும்பினீர்கள் என்பதை அறிந்து நான் மிகவும் மகிழ்ச்சியும் ஆசீர்வாதமும் அடைகிறேன் என்று பதிவிட்டுள்ளார். இவரின் இந்த பதிவு சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
- மணிரத்னம் இயக்கத்தில் வெளியான பொன்னியின் செல்வன் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
- இதில் நடிகர்கள் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, ஜெயராம், பார்த்திபன், சரத்குமார், நடிகைகள் ஐஸ்வர்யா ராய், திரிஷா, ஐஸ்வர்யா லட்சுமி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
கல்கி எழுதிய நாவலை தழுவி, மணிரத்னம் இயக்கியுள்ள 'பொன்னியின் செல்வன்-1' திரைப்படம் சில தினங்களுக்கு முன்பு திரையரங்குகளில் வெளியானது. இதில் நடிகர்கள் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, ஜெயராம், பார்த்திபன், சரத்குமார், நடிகைகள் ஐஸ்வர்யா ராய், திரிஷா, ஐஸ்வர்யா லட்சுமி உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என 5 மொழிகளில் நேரடியாக இந்த படம் வெளியானது.
இந்நிலையில் இப்படத்தில் நடித்த பார்த்திபன் இயக்குனர் மணிரத்னம் குறித்து சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில், டிராப்டு புரொஜெக்ட் (Dropped project) என்ற தலைப்பில் இன்று பார்த்தேன். உண்மையில் அவர் இந்தக் கனவுத் திட்டத்திற்காக (சினிமா) துறையில் ஒரு விதையை விதைத்தவர்! பொன்மனச் செம்மலின் பொன்னியின் செல்வன்' எண்ணங்களில் உயர்ந்தவர், என்றோ முதல்வராகி விட்டார் இக்காவியம் படைக்க.' நினைத்ததை முடிப்பவன்'-அவர் நினைத்ததை எல்லாம் அவர் நினைத்ததை எல்லாம் முடிப்பவர் சிஎம் (CM) உட்பட! அப்படிப்பட்ட மனிதர் நினைத்ததை மணிரத்னம் முடித்துள்ளார். விதைச்சது எம்ஜிஆர் விளைச்சது எம்ஆர். நமக்கது பெருமை! என்று பதிவிட்டுள்ளார்.
Dropped project என்ற தலைப்பில் இன்று பார்த்தேன்.Actually HE just dropped a seed in (cine)field for this dream project!பொன்மனச் செம்மலின்பொன்னியின் செல்வன்'எண்ணங்களில் உயர்ந்தவர்,என்றோ முதல்வராகி விட்டார் இக்காவியம் படைக்க.'நினைத்ததை முடிப்பவன்'-அவர் நினைத்ததை எல்லாம் pic.twitter.com/sxSO8LBwZO
— Radhakrishnan Parthiban (@rparthiepan) October 4, 2022
- மணிரத்னம் இயக்கத்தில் வெளியான 'பொன்னியின் செல்வன்' திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
- இப்படம் வெளியான 3 நாட்களில் பல கோடி வசூல் குவித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
மணிரத்னம் இயக்கத்தில் விக்ரம், ஐஸ்வர்யா ராய் பச்சன், ஜெயம் ரவி, கார்த்தி, திரிஷா, ஐஸ்வர்யா லட்சுமி, சோபிதா துலிபாலா, பிரகாஷ் ராஜ், பிரபு, ஆர்.சரத்குமார், விக்ரம் பிரபு உள்ளிட்ட பலர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்த படம் பொன்னியின் செல்வன்.
இப்படத்தின் முதல் பாகம் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய 5 மொழிகளில் செப்டம்பர் 30-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகி விமர்சன ரீதியாகவும் வருமான ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்திருந்தார்.
இந்நிலையில் பொன்னியின் செல்வன் திரைப்படம் வெளியான 3 நாட்களில் உலகம் முழுவதும் 230 கோடி ரூபாய் வசூல் செய்திருப்பதாக கூறப்படுகிறது. முன்பதிவு செய்யப்பட்ட நாட்களையும் தாண்டி இந்த படத்திற்கு ரசிகர்கள் ஆதரவு இருக்கும் என்பதால் எதிராபாராத அளவுக்கு வசூலை எட்டும் என்று சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
- மணிரத்னம் இயக்கத்தில் வெளியான பொன்னியின் செல்வன் படத்தில் ஆதித்த கரிகாலன் கதாப்பாத்திரத்தில் விக்ரம் நடித்திருந்தார்.
- நடிகர் விக்ரம் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்து வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார்.
மறைந்த எழுத்தாளர் கல்கி எழுதி புகழ்பெற்ற வரலாற்றுப் புனைவு நாவலான பொன்னியின் செல்வனை பல ஆண்டுகால முயற்சிக்கு பின் படமாக எடுத்துள்ளார் மணிரத்னம். இந்த படத்தில் விக்ரம், கார்த்தி, திரிஷா, ஐஸ்வர்யா ராய், ஜெயம்ரவி, ஜெயராம் உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். இரண்டு பாகங்களாக உருவாகியுள்ள பொன்னியின் செல்வன் முதல் பாகம் நேற்று முன்தினம் உலகம் முழுவதும் வெளியாகியுள்ளது.
பொன்னியின் செல்வனில் ஆதித்ய கரிகாலனாக வரும் விக்ரம் படத்தின் மிக சரியான தேர்வு என்றும் தனது திறமையான நடிப்பால் கதாபாத்திரத்துக்கு உயிர் கொடுத்திருக்கிறார் என்றும் ரசிகர்கள் பலரும் அவர்களின் விமர்சனங்களை தெரிவித்தனர்.
இந்நிலையில் நடிகர் விக்ரம் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்து வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில், ''நன்றி.. தேங்க்ஸ்.. சுக்ரியா.. நன்னி.. தன்யவாத்.. இப்படி எந்த மொழியில் சொன்னாலும், கேட்பதற்கும் உணர்வதற்கும் நன்றாக உள்ளது. பொன்னியின் செல்வன் படத்திற்கு கிடைத்த வரவேற்பு ஆதித்த கரிகலானுக்கு கிடைத்த அந்த ஆக்ரோஷமான பின்னூட்டம் ரொம்ப நன்றி.
நான் நிறைய படங்களில் நடித்திருக்கேன்; நிறைய நல்ல கதாபாத்திரங்களில் நடித்திருக்கேன். எப்போதும் எல்லா படங்களையும், என் படம், என்னுடைய கதாபாத்திரம் என பெருமைப்படுவேன். எல்லோரும் இது எங்களுடைய படம் என கொண்டாடுவது எனக்கு பெரிய மகிழ்ச்சி. படக்குழு உள்ளிட்டவர்களுக்கும் இயக்குநர் மணிரத்னத்துக்கும் நன்றி'' என தெரிவித்துள்ளார்.
- மணிரத்னம் இயக்கத்தில் வெளியான பொன்னியின் செல்வன் படத்தின் சரத்குமார் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார்.
- இப்படத்தை நெல்லை மாவட்டம் காவல்கிணறு பகுதியில் உள்ள திரையரங்கில் ரசிகர்களுடன் சரத்குமார் படம் பார்த்தார்.
இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் வெளியான பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் சரத்குமார், விக்ரம், ஐஸ்வர்யாராய், திரிஷா, ஜெயம் ரவி, கார்த்தி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இத்திரைப்படத்தை நெல்லை மாவட்டம் காவல்கிணறு பகுதியில் உள்ள திரையரங்கில் நடிகர் சரத்குமார் ரசிகர்களுடன் பொன்னியின் செல்வன் படத்தை கண்டுகளித்தார். அதனை தொடர்ந்து ரசிகர், ரசிகைகள் அவருடன் செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.
அதன்பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது, வரலாற்று எழுத்தாளர் பொன்னியின் செல்வன் நாவலை திரைப்படமாக காண்பது சிறப்பு. கல்கியின் கதை தெரிந்தவர்கள் இத்திரைப்படத்தை எளிதாக அறிந்து கொள்வர். சோழர்கள் ஆட்சி காலத்தை நினைவுபடுத்தும் விதமாக திரைப்படம் அமைந்திருப்பது சிறப்பு. வெளிநாட்டவர்களுக்கு தாஜ்மஹாலை காட்டுவதை விட, சோழ நாடு எப்படி இருந்தது என்பதற்கு திரைப்படம் உதாரணம். பொருளாதார பெருக்கம், நீர்வளப்பெருக்கம், வெளிநாடு வணிகம், போரிடுவது எவ்வாறு என்பதற்கு சோழர்கள் ஆட்சி காலமே சான்று.
இத்திரைப்படத்தில் உலக அழகி ஐஸ்வர்யா ராயுடன் ஜோடியாக நடித்த நான் மிஸ்டர் மெட்ராஸ் என்பது பெருமை. ஆசையை தூண்டும் விதமாக மிக பிரம்மாண்டமாக இத்திரைப்படம் வடிவமைக்கப்பட்டுள்ளது. அரசியல் ரீதியாக மக்களுக்கு என்ன செய்ய வேண்டும் என்ற திட்டத்தை வகுத்து வருகிறேன். மக்கள் சிறப்பாக வாழ எது இருக்க வேண்டும், நீக்க வேண்டும், சேர்க்க வேண்டும், கோர்க்க வேண்டும் என்பதை அறிந்து தெளிவாக விரைவில் அறிவிப்பேன். இவ்வாறு அவர் கூறினார்.
- மணிரத்னம் இயக்கத்தில் உருவான 'பொன்னியின் செல்வன்' திரைப்படம் நேற்று முன்தினம் திரையரங்குகளில் வெளியானது.
- இப்படத்தின் முதல் நாள் வசூல் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது.
மணிரத்னம் இயக்கத்தில் விக்ரம், ஐஸ்வர்யா ராய் பச்சன், ஜெயம் ரவி, கார்த்தி, திரிஷா, ஐஸ்வர்யா லட்சுமி, சோபிதா துலிபாலா, பிரகாஷ் ராஜ், பிரபு, ஆர்.சரத்குமார், விக்ரம் பிரபு உள்ளிட்ட பலர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்த படம் பொன்னியின் செல்வன்.
இப்படத்தின் முதல் பாகம் நேற்று முன்தினம் திரையரங்குகளில் வெளியாகி விமர்சன ரீதியாகவும் வருமான ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ள இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய 5 மொழிகளில் பிரம்மாண்டமாக வெளியானது.
இப்படம் வெளியான முதல் நாளிலே நல்ல வசூலை அள்ளியுள்ளது. இதனை அதிகாரப்பூர்வமாக படத்தின் தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது. உலகம் முழுவதும் 5000க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியான பொன்னியின் செல்வன் திரைப்படம் முதல் நாளில் மட்டும் ரூ.80 கோடிக்கு மேல் வசூலித்து உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை ரசிகர்கள் வலைத்தளங்களில் கொண்டாடி வருகின்றனர்.
- பொன்னியின் செல்வன் -1 திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
- இப்படம் குறித்து நடிகர் துல்கர் சல்மான் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார்.
கல்கியின் புகழ் பெற்ற "பொன்னியின் செல்வன்" நாவலை அடிப்படையாகக் கொண்டு மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் "பொன்னியின் செல்வன்". இதன் முதல் பாகம் செப்டம்பர் 30-ஆம் தேதி வெளியானது.
பொன்னியின் செல்வன்
ஜெயம்ரவி, விக்ரம், கார்த்தி, சரத்குமார், பார்த்திபன், ஜெயராமன், ஜஸ்வர்யா ராய், திரிஷா உள்ளிட்ட பல முன்னணி திரைப்பிரபலங்கள் நடித்துள்ள இப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.
துல்கர் சல்மான்
இதையடுத்து இப்படம் குறித்து நடிகர் துல்கர் சல்மான் தனது சமூக வலைதளப் பக்கத்தில், "பொன்னியின் செல்வன் பாகம் ஒன்றில் பல நண்பர்கள் ஒரு குடும்பம் போல நடித்துள்ளனர். இதை தனிப்பட்ட வெற்றியைப் போல் உணர்கிறேன். மேலும், படக்குழுவிற்கு தலை வணங்குகிறேன்" என்று பதிவிட்டுள்ளார்.
- இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் பொன்னியின் செல்வன் திரைப்படம் உருவாகியுள்ளது.
- இப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
இந்திய சினிமாவின் முன்னணி இயக்குனரான மணிரத்னம் இயக்கத்தில் முன்னணி நட்சத்திரங்களின் நடிப்பில் உருவாகியிருக்கும் பொன்னியின் செல்வன் திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.
மீனா
இந்நிலையில், இப்படம் குறித்து நடிகை மீனா தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ள பதிவு வைரலாகி வருகிறது. அதில், ''இனிமேலும் என்னால் இதை ரகசியமாக வைத்திருக்க முடியாது. இது என்னை திணறடிக்கிறது; மனதை விட்டு சொல்லியே ஆக வேண்டும். எனக்குப் பொறாமையாக உள்ளது.
மீனா
பொன்னியின் செல்வன் படத்தில் என்னுடைய கனவுக் கதாபாத்திரமான நந்தினியாக நடித்துள்ள ஐஸ்வர்யா ராய் மீது வாழ்க்கையில் முதல்முறையாக பொறாமை கொள்கிறேன். படக்குழுவினர் அனைவருக்கும் வாழ்த்துகள்'' என்று பதிவிட்டுள்ளார்.
- பொன்னியின் செல்வன் -1 திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியானது.
- இந்த படத்தை நடிகர் பார்த்திபன் தஞ்சையில் உள்ள ஒரு திரையரங்கில் பார்த்துள்ளார்.
இந்திய சினிமாவின் முன்னணி இயக்குனரான மணிரத்னம் இயக்கத்தில் முன்னணி நட்சத்திரங்களின் நடிப்பில் உருவாகியிருக்கும் பொன்னியின் செல்வன் திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.
பொன்னியின் செல்வன்
இதைத்தொடர்ந்து நடிகர் பார்த்திபன் தஞ்சையில் உள்ள ஒரு திரையரங்கில் இன்று அதிகாலை ரசிகர்களுடன் படம் பார்த்துள்ளார். பின்னர் தஞ்சை பெரிய கோவிலுக்கு சென்று வழிபட்ட அவர் பத்திரிகையாளர்களை சந்தித்தார்.
பொன்னியின் செல்வன்
அதில் பார்த்திபன் கூறியதாவது, "ஆயிரத்தில் ஒருவன் இரண்டாம் பாகத்தில் தனுஷ் நடிக்கவுள்ளார் என்பது இயக்குனர் செல்வராகவன் கூறியது. அந்த படத்தின் முதல் பாகத்தில் தனுஷ் நடிக்க இருப்பதாக இருந்தது. ஆனால் தனுஷிற்கு பதிலாக நான் நடித்தேன். இப்பொழுது என் கதாபாத்திரத்தில் தனுஷ் நடிக்கவுள்ளார். அவர் நடித்தால் மிகவும் சிறப்பாகவே இருக்கும்" என்று கூறினார்.
- மணிரத்னம் இயக்கியுள்ள பொன்னியின் செல்வன் திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகி உள்ளது.
- இதில் நடித்துள்ள பார்த்திபன் சோழ தேசத்தில் சென்று படம் பார்த்திருக்கிறார்.
மணிரத்னம் இயக்கியுள்ள பொன்னியின் செல்வன் திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியான நிலையில் இத்திரைப்படத்தை தஞ்சைக்கு சென்று ஒரு திரையரங்கில் நடிகர் பார்த்திபன் ரசிகர்களுடன் அமர்ந்து இன்று காலை படம் பார்த்தார். முன்னதாக செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், தஞ்சை மண்ணுக்கும், ராஜராஜ சோழனுக்கும் வணக்கம். 1973-ம் ஆண்டு மார்ச் 31ம் தேதி ராஜராஜ சோழன் திரைப்படத்தை இதே மண்ணில் நான் பார்த்தேன். அதே மகிழ்ச்சியுடன் இந்த படத்தை பார்க்க இன்று வந்துள்ளேன்.
நான் பேசும் சில வார்த்தைகள் மாறிப் போய்விடுகிறது. நான் சினிமாவின் தீவிர ரசிகன். பொன்னியின் செல்வனை வெற்றி பெற செய்வோம். பொன்னியின் செல்வனில் நடித்து, அதனை சோழ தேசத்தில் வந்து பார்ப்பதை பெருமையாக பார்க்கிறேன். கல்கிக்கு ரசிகைகள் அதிகமாக இருந்துள்ளார்கள். ஆண்களை விட பெண்கள் புத்திசாலிகள்.
அதனால் தான் கல்கிக்கு பெண் ரசிகர்கள் அதிகளவில் இருந்துள்ளனர். 70 வருஷத்துக்கு முன்னால் எழுதப்பட்ட நாவலுக்கு இன்றளவும் மிகப்பெரிய வரவேற்பு இருக்கிறது என்பது முதல் வெற்றி. கல்கியின் எழுத்துக்களுக்குத்தான் தான் முதல் வெற்றி. அடுத்தது மணிரத்தனம் இயக்கத்திற்கு. இந்த திரைப்படத்தில் என்னுடைய கதாபாத்திரம் சிறிய வேடம் தான். ஆனால் இவ்வளவு பெரிய திரைப்படத்தில் நான் நடித்திருப்பது பெருமையாக உள்ளது. நான் படத்தை பார்க்க வந்தேன் என்பதை விட இந்த படத்தை ரசிகர்கள் எவ்வாறு வரவேற்கிறார்கள் என்று பார்ப்பதற்காக வந்துள்ளேன். இவ்வாறு அவர் கூறினார்.
- மணிரத்னம் இயக்கியுள்ள பொன்னியின் செல்வன்-1 திரைப்படம் நாளை திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
- இப்படத்திற்காக சென்னை உயர்நீதிமன்றம் தற்போது அதிரடி திர்ப்பு வழங்கியுள்ளது.
கல்கியின் புகழ் பெற்ற "பொன்னியின் செல்வன்" நாவலை அடிப்படையாகக் கொண்டு மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் "பொன்னியின் செல்வன்". இரண்டு பாகங்களாக வெளிவரும் இப்படத்தின் முதல் பாகம் நாளை செப்டம்பர் 30-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
'பொன்னியின் செல்வன்' திரைப்படம் நாளை வெளியாகவுள்ள நிலையில் இப்படத்தை சட்ட விரோதமாக இணையதளங்களில் வெளியிடக் கூடாது என லைகா நிறுவனம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்நிலையில் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எம்.சுந்தர் இப்படம் சுமார் 2,045-க்கும் மேற்பட்ட இணையதளங்களில் சட்ட விரோதமாக வெளியிட தடை விதித்து உத்தரவிட்டார்.
- மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள பொன்னியின் செல்வன் திரைப்படம் நாளை வெளியாகவுள்ளது.
- இப்படத்தில் ஆதித்த கரிகாலனாக நடித்த அனுபவம் குறித்து விக்ரம் பேசியுள்ளார்.
இந்திய சினிமாவின் பிரமாண்ட இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரங்களின் நடிப்பில் உருவாகியிருக்கும் பொன்னியின் செல்வன் திரைப்படம் நாளை உலகமெங்கும் வெளியாகிறது. பெரும் எதிர்ப்பார்ப்பில் உருவாகியுள்ள பொன்னியின் செல்வன் திரைப்படம் நாளை வெளியாவதை தொடர்ந்து படக்குழுவினர் நிருபர்களை சந்தித்தனர்.
இந்நிகழ்ச்சியில் நடிகர் விக்ரம் கூறியதாவது, இந்தியா முழுவதும் நிறைய வரலாற்று கதைகள் இருக்கிறது, இது போன்ற கதைகளில் நான் நடிக்க மாட்டேனா என்ற கனவுகளும் இருந்தது; எனக்கு பிடித்த ஆதித்த கரிகாலன் கதாபாத்திரம் அமைந்தது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. ஆதித்த கரிகாலனின் காதல் எனக்குள் நெருப்பாக எரிந்து கொண்டிருக்கிறது; அவனுடைய காதலுக்காக அவன் என்ன வேண்டுமானாலும் செய்வான். அதை உணர்ந்து தான் நான் நடித்தேன். பொன்னியின் செல்வனில் இது சிறந்த காதல் காவியமாக அமையும் என கூறினார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்