என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சாக்லேட்"

    • "ஸ்ட்ராபெர்ரி குயிக்" எனப்படும் புதிய போதைப்பொருள்.
    • மாணவர்கள் சாப்பிட்டு விட்டால் அதில் இருந்து மீள முடியாது.

    தமிழகத்தில் பள்ளிக் கூடங்கள் இருக்கும் பகுதிகளில் சாக்லேட் வடிவில் புதுவகை போதைப் பொருள் விற்பனை செய்யப்படுவதாக பரபரப்பான தகவல்கள் வெளியாகி உள்ளன.


    "ஸ்ட்ராபெர்ரி குயிக்" எனப்படும் ஒரு புதிய போதைப்பொருள். பள்ளி கூடங்களின் அருகில் விற்பனை செய்யப்பட்டு வருவதாக எச்சரிக்கை தகவல் கொடுக்கப்பட்டு அது வேகமாக பரவி வருகிறது.

    வாயில் போட்டால் வெடித்து சிதறுவது போன்ற உணர்வை ஏற்படுத்தும் இந்த போதைப் பொருளில் மெத்த பெட்டமின் போதைப் பொருள் கலந்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

    ஸ்ட்ராபெரி வாசனையுடன் கூடிய இந்த வகை சாக்லேட் போதைப் பொருள் மாணவப் பருவத்தில் இருந்தே மாணவர்களை போதைப் பொருட்களுக்கு அடிமையாக்கி விடும் அபாயம் ஏற்பட்டுள்ளதால் தமிழகம் முழுவதும் போலீசார் பள்ளிக்கூடங்களில் அருகில் உஷார் படுத்தப்பட்டு கண்காணித்து வருகிறார்கள்.

    இந்த போதைப் பொருளை மிட்டாய் என்று நினைத்து மாணவர்கள் சாப்பிட்டு விட்டால் அதில் இருந்து அவர்கள் மீள முடியாது என்கிற எச்சரிக்கை தகவலும் வெளியாகி உள்ளது.

    இது சாக்லேட், வேர்க்கடலை வெண்ணெய், கோலா, திராட்சை மற்றும் ஆரஞ்சு சுவைகளிலும் இந்த போதைப் பொருட்கள் கிடைப்பதாக கூறப்படுகிறது. எனவே பள்ளிகளுக்கு குழந்தைகளை அனுப்பும் பெற்றோர்கள் பள்ளிக்கூடங்களில் அருகில் அறிமுகமில்லாத நபர்கள் எந்தவித சாக்லேட்டுகளை கொடுத்தாலும் வாங்கி சாப்பிட வேண்டாம் என்று அறிவுறுத்தி அனுப்ப வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டு இருக்கிறது.

    எனவே உஷாராக செயல்பட்டு போதைப் பழக்கத்தில் இருந்து மாணவர்களை காக்க வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் விருப்பமாக உள்ளது.

    • இந்த ஸ்நாக்ஸ் குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும்.
    • சத்தானது சுவையானது இந்த ஸ்நாக்ஸ்.

    தேவையான பொருட்கள் :

    பேரீச்சம்பழம் - 1/4 கிலோ

    சாக்லேட் - 100 கிராம் அல்லது சாக்லேட் சிறப்பு - 100 மில்லி

    தேங்காய் - 1/2 மூடி

    செய்முறை :

    பேரீச்சம்பழத்தின் கொட்டைகளை நீக்கி மிக்சியில் போட்டு கொரகொரப்பாக அரைத்து கொள்ளவும்.

    தேங்காயை துருவி கொள்ளவும்.

    சாக்லேட்டை உருக்கி கொள்ளவும்.

    உருக்கிய சாக்லேட்டில் பேரீச்சம்பழ விழுது, தேங்காய் துருவல் சேர்த்து நன்றாக கலந்து உருண்டைகளாக பிடித்து வைக்கவும்.

    இப்போது சத்தான சுவையான சாக்லேட் பேரீச்சம் பழ லட்டு ரெடி.

    • 7 முதலைகளின் 3-வது பிறந்தநாள் விழாவை கிண்டி பூங்காவில் கொண்டாட அதிகாரிகள் ஏற்பாடுகள் செய்து இருந்தனர்.
    • முதலைகள் குறித்தும் பார்வையாளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

    கிண்டி சிறுவர் பூங்காவில் உள்ள முதலை பண்ணையில் 13 முதலைகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. இதில் 7 முதலை குட்டிகள் கடந்த 2020-ம் ஆண்டு கொரோனா கால கட்டத்தில் பிறந்தவை ஆகும்.

    இந்த 7 முதலைகளின் 3-வது பிறந்தநாள் விழாவை கிண்டி பூங்காவில் கொண்டாட அதிகாரிகள் ஏற்பாடுகள் செய்து இருந்தனர். இதையொட்டி முதலைகைள பார்வையிட வந்த பார்வையாளர்களுக்கு சாக்லேட் கொடுத்து விருந்து அளிக்கப்பட்டது. மேலும் முதலைகள் குறித்தும் பார்வையாளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

    இது குறித்து கிண்டி பூங்கா அதிகாரி அறிவழகன் கூறும்போது, கடந்த 1993-ம் ஆண்டு ஒடிசாவில் இருந்து விலங்குகள் பரிமாற்ற திட்டத்தின் கீழ் 6 முதலகைள் கொண்டு விடப்பட்டது. ஆனால் அவை எதிர்பார்த்த இன பெருக்கம் செய்யவில்லை.

    கடந்த 2020-ம் ஆண்டில் கொரோனா காலக்கட்டத்தில் 24 முட்டைகளில் இருந்து முதலைக்குட்டிகள் பொறித்தன. இதில் பலவீனமாக இருந்த முதலைக்குட்டிகள் ஒவ்வொன்றாக இறந்தன. தற்போது 7 முதலைக் குட்டிகள் உள்ளன. இதன் 3-வது பிறந்த நாளையொட்டி பார்வையாளர்களுக்கு சாக்லேட் கொடுத்து கொண்டாடினோம். முதலைகளுக்கு மீன்கள் வழங்கப்பட்டன. பார்வையாளர்களுக்கு முதலைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

    • குழந்தைகளுக்கு இந்த ஸ்வீட் மிகவும் பிடிக்கும்.
    • இந்த ரெசிபி செய்ய அதிக நேரம் ஆகாது.

    தேவையான பொருட்கள்

    தேங்காய்த் துருவல், இனிப்பில்லாத கோவா - தலா 1/2 கப்,

    கேரட் துருவல் - 1 கப்,

    சர்க்கரை - 2 கப்,

    ஏலக்காய்த்தூள் - 1 சிட்டிகை,

    நெய் - 1 டேபிள்ஸ்பூன்,

    அலங்கரிக்க :

    பிஸ்தா, பாதாம் - சிறிது.

    செய்முறை

    கடாயில் நெய் ஊற்றி கேரட் சேர்த்து மிதமான தீயில் வைத்து பச்சை வாசனை போக வதக்கி, ஒரு பாத்திரத்தில் கொட்டவும்.

    பிஸ்தா, பாதாமை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    மீண்டும் அதே கடாயில் தேங்காய்த் துருவல் சேர்த்து வதக்கி சர்க்கரை சேர்த்து வதக்கவும்.

    சர்க்கரை கரைந்து வரும்போது கேரட் துருவல் போட்டு வதக்கி சுருண்டு வரும்போது கோவா துருவல், ஏலக்காய்த்தூள் சேர்த்து நன்கு கிளறி பர்ஃபி பதத்திற்கு வந்ததும் நெய் தடவிய தட்டில் கொட்டி அதன் மேல் பொடியாக நறுக்கிய பாதாம், பிஸ்தாவை கொட்டி நன்றாக அழுத்தி விடவும். ஆறியதும் துண்டுகள் போட்டு அலங்கரித்து பரிமாறவும்.

    இப்போது ராஜஸ்தான் ஸ்பெஷல் கேரட் கோவா பர்ஃபி ரெடி.

    குறிப்பு: நெய் தேவையானால் 1 டீஸ்பூன் கடைசியாக சேர்க்கலாம்.

    லைஃப்ஸ்டைல் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health

    • குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமான சாக்லேட் பான்கேக்
    • விடுமுறை நாட்களில் உங்கள் குழந்தைகளிடம் செய்து அசத்துங்கள்.

    தேவையான பொருட்கள்:

    கோதுமை மாவு- கால் கப்

    நாட்டு சர்க்கரை கால் கப்

    கோகோபவுடர்- 3 ஸ்பூன்

    பேக்கிங் சோடா- கால் ஸ்பூன்

    பேக்கிங் பவுடர்-அரை ஸ்பூன்

    உப்பு - ஒரு சிட்டிகை

    வெண்ணிலா எசன்ஸ்- கால் டீஸ்பூன்

    பால்- 100 கிராம்

    முட்டை-1

    சாக்லேட் சிரப்- ஒரு ஸ்பூன்

    செய்முறை:

    ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவு, நாட்டுசர்க்கரை, கோகோ பவுடர், பேக்கிங் பவுடர், பேக்கிங் சோடா சேர்த்து நன்றாக கலந்து எடுத்துக்கொள்ள வேண்டும். பின்னர் மற்றொரு பவுளில் முட்டையை உடைத்து ஊற்றி அதில் பால் மற்றும் வெண்ணிலா எசன்ஸ், சாக்லேட் சிரப், உப்பு ஒரு சிட்டிகை ஆகியவற்றை சேர்த்து நன்றாக அடித்து கலக்கி எடுத்துக்கொள்ளவும்.

    இந்த கலவையை மாவுக்கலவையுடன் சேர்த்து கெட்டி இல்லாமல் தோசை மாவு பதத்திற்கு கலந்து எடுக்கவும். கட்டியாக இருந்தால் சிறிதளவு பால் சேர்த்துக்கொள்ளவும். சாக்லேட் சிப்ஸ் (விரும்பினால்) இருந்தால் சேர்த்துக்கொள்ளவும்.

    பின்னர் இந்த கலவையை தோசை தவாவில் வெண்ணெய் அல்லது நெய் தடவி பான் கேக் ஊற்றி 2 நிமிடத்திற்கு பிறகு திருப்பி போட்டு எடுக்கவும். நீங்கள் விரும்பினால் பான் கேக் மீது சாக்லேட் சிரப்பை ஊற்றி பரிமாறலாம். குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். ஸ்கூலுக்கு ஸ்நாக் பாக்சை நிறப்புவதற்கும், ஈவ்னிங் ஸ்நாக்காக கொடுப்பதற்கும் ஏற்றது.

    சாக்லேட் என்றாலே குழந்தைகள் விரும்பி சாப்பிடுவர். அதிலும் சாக்லேட் பான் கேக் என்றால் விடவா போகிறார்கள். வித்தியாசமாக செய்து அசத்துங்கள்.

    • நூதன திட்டத்தை இந்தியாவின் மிகப்பெரிய வங்கியான பாரத ஸ்டேட் வங்கி (எஸ்.பி.ஐ.) அமல்படுத்தத் தொடங்கி உள்ளது.
    • வாடிக்கையாளர்களுக்கு தொலைபேசி மூலம் வங்கி அழைப்பு விடுத்து வருகிறது.

    மும்பை:

    கடன் தவணையை உரிய தேதியில் திருப்பித் தராத வாடிக்கையாளர்களின் இல்லத்துக்கு சென்று 'சாக்லேட்' அளிக்கும் நூதன திட்டத்தை இந்தியாவின் மிகப்பெரிய வங்கியான பாரத ஸ்டேட் வங்கி (எஸ்.பி.ஐ.) அமல்படுத்தத் தொடங்கி உள்ளது.

    இதுகுறித்து வங்கி வட்டாரங்கள் தெரிவித்ததாவது:-

    கடனைத் திருப்பிச் செலுத்துவதற்கான மாதாந்திர தவணைக் காலம் கடந்த பிறகும், அதற்கான தொகையைச் செலுத்தாத வாடிக்கையாளர்களுக்கு தொலைபேசி மூலம் வங்கி அழைப்பு விடுத்து வருகிறது.

    அத்தகைய அழைப்புகளை வாடிக்கையாளர்கள் தொடர்ந்து ஏற்காமல் இருப்பது, அவர்களுக்கு கடனைத் திருப்பி செலுத்தும் எண்ணம் இல்லை என்பதற்கான அறிகுறிகளாகக் கருதப்படுகிறது.

    அதுபோன்ற வாடிக்கையாளர்களிடம் இருந்து கடன் தவணையை வசூலிப்பதற்கு, அவர்களது இல்லத்துக்கோ, அலுவலகத்துக்கோ முன்னறிவிப்பின்றி நேரில் செல்வதே சிறந்த வழியாகும். அதற்காக, சாக்லேட்டுகளுடன் வாடிக்கையாளர்களின் இல்லத்துக்கு வசூல் அதிகாரிகளை அனுப்பும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது என்று வங்கி வட்டாரங்கள் தெரிவித்தன.

    கடந்த ஜூன் மாதத்துடன் நிறைவடைந்த நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் எஸ்.பி.ஐ.யின் சில்லரை கடன் அளிப்பு ரூ.12,04,279 கோடியாக உள்ளது. இது, முந்தைய 2022-23-ம் நிதியாண்டின் இதே காலாண்டோடு ஒப்பிடுகையில் 16.46 சதவீதம் அதிகம் ஆகும். அப்போது வங்கியின் சில்லரைக் கடன் அளிப்பு ரூ.10,34,111 கோடியாக இருந்தது.

    • சுற்றுலாப் பயணிகள் ஹோம் மேட் சாக்லேட்டை விரும்பி வாங்கி செல்கின்றனர்.
    • அந்தந்த மாநிலத்தில் விளையும் பொருட்களைக் கொண்டு சிறப்பு ஹோம் மேட் சாக்லேட் தயாரித்து விற்பனை செய்து வருகிறோம்.

    ஊட்டி:

    நீலகிரி மாவட்டத்தில் தயாரிக்கப்படும் ஊட்டி வா்க்கி, யூகலிப்டஸ் தைலம் ஆகியவை பிரபலம் மிகுந்தவை. அதேபோல ஊட்டியில் தயாராகும் ஹோம் மேட் சாக்லேட் உலகஅளவில் பிரசித்தி பெற்றது. இங்கு வரும் சுற்றுலாப் பயணிகள் ஹோம் மேட் சாக்லேட்டை விரும்பி வாங்கி செல்கின்றனர். மேலும் நீலகிரியில் தயாரிக்கப்படும் ஹோம் மேட் சாக்லேட்டுகள், வெளி மாநிலங்களுக்கு விற்பனைக்காக அனுப்பி வைக்கப்படுகின்றன. மேலும் வெளிநாடுகளுக்கும் சாக்லெட்டுகள் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகின்றன.

    இந்நிலையில் புத்தாண்டை முன்னிட்டு நீலகிரி மாவட்டத்தில் இந்தியாவில் உள்ள 28 மாநிலங்களின் ஒற்றுமையை பறைசாற்றும் வகையில் தேசிய சாக்லேட் திருவிழா தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் 28 மாநிலங்களில் விளையும் பொருட்களைக் கொண்டு விதம்-விதமாக ஹோம் மேட் சாக்லெட் தயாரித்து விற்பனைக்காக வைக்கப்பட்டு உள்ளன.

    நீலகிரி போன்ற குளிர் பிரதேசங்களில் மட்டும் தயாராகும் இந்த வகை சாக்லெட்டுகள், சீசன் அல்லாத நேரங்களில் மாதந்தோறும் ஒரு லட்சம் கிலோ என்ற அளவில் விற்பனையாகும். அதுவே சீசன் கால த்தில் 5 லட்சம் கிலோ வரை விற்பனை களைகட்டும்.

    தேசிய சாக்லெட் திருவிழாவில் கால் கிலோ சாக்லெட் ரூ.120 முதல் ரூ. 400 வரையும், பிரத்யேகமாக தயாராகும் சாக்லெட்டுகள், ஒரு கிலோ ரூ.2500 முதல் ரூ.5 ஆயிரம் வரையிலும் விற்பளை செய்யப்பட்டு வருகின்றன.இதுகுறித்து ஹோம் மேட் சாக்லெட் தயாரித்து வரும் ஊட்டியை சோ்ந்த பஸ்ருல் ரஹ்மான் என்பவர் கூறியதாவது:

    கிறிஸ்துமஸ், புத்தாண்டை முன்னிட்டு, இந்தியாவில் உள்ள 28 மாநிலங்களின் ஒற்றுமையை பறைசாற்றும் விதமாக, அந்தந்த மாநிலத்தில் விளையும் பொருட்களைக் கொண்டு சிறப்பு ஹோம் மேட் சாக்லேட் தயாரித்து விற்பனை செய்து வருகிறோம். மேலும், பெண்கள் கழுத்தில் அணியும் டாலா், கம்மல் வடிவ ங்களில் சாக்லெட் இடம் பெற்றிருப்பது புத்தாண்டுக்கு புது வரவாக உள்ளது.

    நீலகிரியின் பொருளாதாரத்தில் முக்கிய பங்காற்றும் ஹோம் மேட் சாக்லேட்டுகளில் ஒவ்வோா் ஆண் டும் புதுமைகளை புகுத்தி வருகிறோம். இதனால் சாக்லெட்டுகளுக்கான கிராக்கி இன்னும் குறையாமல் உள்ளது. மேலும் இங்கு தயாராகும் சாக்லெட்டுகளில் சுவையும், தரமும் மாறாமல் இருக்கும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • துபாய் செல்லும் பயணிகளிடம் அவர்கள் அதிரடி சோதனை நடத்தினர்.
    • எங்கிருந்து யாருக்கு வைரங்கள் கடத்தி செல்கிறார்கள் என விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து துபாய்க்கு வைரங்கள் கடத்தப்படுவதாக வருவாய் புலனாய்வு இயக்குனரக அதிகாரிகளுக்கு தகவல் வந்தது.

    துபாய் செல்லும் பயணிகளிடம் அவர்கள் அதிரடி சோதனை நடத்தினர். சந்தேகத்திற்கு இடமாக பதிலளித்த 2 பயணிகளின் உடமைகளை சோதனையிட்டனர். அவர்கள் வைத்திருந்த ஒரு பையில் சாக்லேட் கவர்களால் சுற்றி மறைத்து வைக்கப்பட்டிருந்த வைரங்கள் இருந்தன.

    மொத்தம் 5 ஆயிரத்து 569.64 காரட் வைரங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதன் மதிப்பு 6.03 கோடி ஆகும். மேலும் அவர்களிடம் இருந்து 9.8 லட்சம் வெளிநாட்டு கரன்சி ரூ.1 லட்சம் இந்திய பணம் ஆகியவற்றையும் பறிமுதல் செய்தனர்.

    இவர்கள் எங்கிருந்து யாருக்கு வைரங்கள் கடத்தி செல்கிறார்கள் என விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ஹனுமான் நாயக் சேக் பேட்டையில் உள்ள ஒரு சூப்பர் மார்க்கெட் கடைக்குச் சென்றார்.
    • இதனைக் கண்டு சூப்பர் மார்க்கெட் மேலாளர் அதிர்ச்சி அடைந்தார்.

    தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் அருகே உள்ள சேக் பேட்டையை சேர்ந்தவர் ஹனுமான் நாயக் (வயது 22). இவர் இன்ஸ்டாகிராமில் அடிக்கடி வீடியோக்களை வெளியிட்டு பிரபலமாகி வருகிறார்.

    இந்த நிலையில் ஹனுமான் நாயக் சேக் பேட்டையில் உள்ள ஒரு சூப்பர் மார்க்கெட் கடைக்குச் சென்றார்.

    அங்கிருந்து மாட்டிக்கொள்ளாமல் சாக்லேட் திருடி சாப்பிடுவது எப்படி என்று பேசியபடி ஒரு சாக்லேட்டை நைசாக திருடி சாப்பிட்டார். இதனை அவரது நண்பர் ஒருவர் வீடியோ எடுத்தார்.

    அந்த வீடியோவை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டனர். இதனைக் கண்டு சூப்பர் மார்க்கெட் மேலாளர் அதிர்ச்சி அடைந்தார்.

    இதுகுறித்து அந்த பகுதியில் உள்ள போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் சாக்லேட் திருடியது தொடர்பாக வழக்கு பதிவு செய்து அனுமான் நாயக் மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த நண்பரை கைது செய்தனர்.

    இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • சாக்லேட்டுகள் வாங்கிய கடையில் இருந்து மாதிரிகள் சேகரிக்கப்பட்டு பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது.
    • கார்கோனில் உள்ள மாவட்ட உணவு பாதுகாப்பு துறை அலுவலகத்தில் புகார் செய்தார்.

    உணவு பொருட்களில் புழுக்கள், பூச்சிகள் கிடந்ததாக புகார்கள் அவ்வப்போது வீடியோவுடன் சமூகவலைதளங்களில் வைரலாகும். இந்நிலையில், மத்திய பிரதேசத்தை சேர்ந்த பெண் ஒருவருக்கு, ஒரு குழந்தையின் பிறந்த நாள் கொண்டாட்டத்தில் கிடைத்த சாக்லேட்டில் செயற்கை பற்கள் கிடந்துள்ளது.

    மத்தியபிரதேசத்தின் கர்கோன் பகுதியில் உள்ள ஓய்வுபெற்ற பள்ளி முதல்வர் மாயாதேவி. இவர் ஒரு அரசு சாரா நிறுவனத்தில் தன்னார்வத் தொண்டு செய்து வருகிறார். அங்குள்ள ஒரு மாணவியின் பிறந்த நாள் கொண்டாட்டத்தை முன்னிட்டு இவருக்கு ஒரு பெரிய சாக்லேட் கிடைத்துள்ளது. அதில் தான் 4 செயற்கை பற்கள் கிடந்துள்ளது.

    இதுகுறித்து மாயாதேவி கூறுகையில், எனக்கு ஒரு பிரபலமான நிறுவனத்தின் காபி சுவையுடைய சாக்லேட் கிடைத்தது. அந்த சாக்லேட்டை சாப்பிட்டதும், ஏதோ ஒரு மொறுமொறுப்பான சாக்லேட் போல உணர்ந்தேன். ஆனால் மீண்டும் ஒரு முறை மென்று சாப்பிட முயற்சித்த போது அது மிகவும் கடினமாக இருப்பதாக உணர்ந்தேன். இதனால் சாக்லேட்டை வெளியே எடுத்து பார்த்த போது அதில் 4 செயற்கை பற்களின் தொகுப்பு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தேன் என்றார்.

    இதுகுறித்து அவர் கார்கோனில் உள்ள மாவட்ட உணவு பாதுகாப்பு துறை அலுவலகத்தில் புகார் செய்தார். அதன்பேரில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். அந்த சாக்லேட்டுகள் வாங்கிய கடையில் இருந்து மாதிரிகள் சேகரிக்கப்பட்டு பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது.

    • சிறுவனின் தொண்டையில் சாக்லேட் சிக்கியதை அறிந்த அவரது தாய், பதட்டமடைந்துள்ளார்.
    • தீபாவளியை முன்னிட்டு மருத்துவர்கள் விடுப்பில் சென்றதால் சிறுவனுக்கு போதிய சிகிச்சை கிடைக்கவில்லை.

    உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூரில் தொண்டையில் சாக்லேட் சிக்கியதால் 4 வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    நவம்பர் 3 அன்று ப்ரூடோலா என்ற சாக்லேட்டை 4 வயது சிறுவன் சாப்பிட்டு கொண்டிருந்தான். கொஞ்சம் பெரிதாக உள்ள சாக்லேட் சிறுவனின் தொண்டையில் சிக்கியுள்ளது.

    சிறுவனின் தொண்டையில் சாக்லேட் சிக்கியதை அறிந்த அவரது தாய், பதட்டத்தில் சிறுவனுக்கு குடிக்கத் தண்ணீர் கொடுத்துள்ளார். தண்ணீர் குடித்த பின்பு சிறுவனுக்கு மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.

    உடனே அருகில் உள்ள மருத்துவமனைக்கு அந்த சிறுவனை குடும்பத்தினர் கொண்டு சென்றுள்ளனர். ஆனால் அங்கிருந்த மருத்துவர்களால் சிறுவனின் தொண்டையில் சிக்கியிருந்த சாக்லேட்டை அகற்ற முடியவில்லை என்று கூறப்படுகிறது.

    இதனையடுத்து அவர்கள் அந்த சிறுவனை மேலும் பல மருத்துவமனைகளுக்கு கொண்டு சென்றுள்ளனர். தீபாவளியை முன்னிட்டு மருத்துவர்கள் விடுப்பில் சென்றதால் சிறுவனுக்கு போதிய சிகிச்சை கிடைக்கவில்லை.

    இறுதியில் தொண்டையில் சாக்லேட் சிக்கி 3 மணி நேரமாக மூச்சுத் திணறித் துடிதுடித்து சிறுவன் உயிரிழந்தான்.

    சிறுவனுக்கு சாக்லேட் கொடுத்த கடைக்காரர் கடையை மூடிவிட்டு தப்பிச் சென்றதாக கூறப்படுகிறது. கடைக்காரரை பிடிக்க போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். இருப்பினும், இந்த வழக்கை விசாரித்து, அந்த சாக்லேட் தயாரிப்பு நிறுவனம் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என சிறுவனின் குடும்பத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • குறிப்பிட்ட வகை பட்டாசுகளின் பேக்கேஜ் பால் மிட்டாய் போலவே இருக்கும்.
    • பெண் ஒருவர் சாக்லேட் என நினைத்து பட்டாசை சாப்பிட்டுள்ளார்.

    பீஜிங்:

    சீனாவின் சிச்சுவான் மாகாணத்தின் செங்டு பகுதியில் வு என்ற பெண்மணி வசித்து வருகிறார். அவர் பால் சாக்லேட் என நினைத்து பட்டாசை சாப்பிட்டதாக தெரிவித்தார்.

    ஷுவாங் பாவோ என அழைக்கப்படும் குறிப்பிட்ட வகை பட்டாசுகளின் பேக்கேஜிங் பால் மிட்டாய்களைப் போலவே இருக்கும்.

    ஒருநாள் அவரது உறவினர் பட்டாசைக் கொண்டு வந்து வீட்டில் வைத்துள்ளார். அதை வூ மிட்டாய் என நினைத்துச் சாப்பிட்டுள்ளார்.

    ஸ்மாஷ் பட்டாசு என பொருள்படும் ஷுவாங் பாவோ நெருப்பை பயன்படுத்தாமல் பற்றவைக்க முடியும். தரையில் விழும்போது அல்லது அழுத்தத்தைப் பயன்படுத்துவதன் மூலம் அது உரத்த சத்தத்துடன் வெடிக்கும். இது சீன நாட்டில் பிரபலமாக உள்ளது. பெரும்பாலும் திருமணங்கள், விருந்துகள் மற்றும் பெரிய விழாக்களின்போது பயன்படுத்தப்படுவது வழக்கம்.

    இந்நிலையில், பால் சாக்லேட் என நினைத்து வூ வெடியை பல்லைப் பயன்படுத்தி கடித்தபோது வெடித்தது. இதனால் அந்தப் பெண்ணின் வாயில் ரத்தக் காயம் ஏற்பட்டது.

    இதுதொடர்பாக அவர் கூறுகையில், நான் வீட்டின் ஹாலில் விளக்கை அணைத்துவிட்டு டி.வி. பார்த்துக் கொண்டிருந்தேன். அப்போது அங்கு பாக்கெட் ஒன்று இருந்தது. அது பார்ப்பதற்கு சிறுவயதில் நான் ரசித்த டாரோ பால் மிட்டாய்போல இருந்தது. எனவே அதில் ஒன்றை எடுத்து வாயில் வைத்தபோது அது திடீரென வெடித்தது என தெரிவித்தார்.

    ×