என் மலர்
நீங்கள் தேடியது "கண்டக்டர்"
- 6 அடி உயரம் கொண்ட பஸ்சில் அமீன் அகமது அன்சாரிக்கு கண்டக்டர் வேலை வழங்கப்பட்டதால் பெரும் சிரமத்திற்கு உள்ளானார்.
- கழுத்து வலியால் மிகவும் அவதிப்படுவதாக அமீன் அகமது அன்சாரி பஸ் பயணிகளிடம் புலம்பி உள்ளார்.
தெலுங்கானா மாநிலம் சந்திரயாங் பேட்டையை சேர்ந்தவர் அமீன் அகமது அன்சாரி. இவரது தந்தை கச்சேகுடா போக்குவரத்து பணிமனையில் காவலாளியாக வேலை செய்து வந்தார்.
கடந்த 2021-ம் ஆண்டு அவரது தந்தை உயிரிழந்ததையடுத்து கருணை அடிப்படையில் அமீன் அகமது அன்சாரிக்கு கண்டக்டர் வேலை வழங்கப்பட்டது.
அமீன் அகமது அன்சாரி 7 அடி உயரம் உள்ளார். 6 அடி உயரம் கொண்ட பஸ்சில் அமீன் அகமது அன்சாரிக்கு கண்டக்டர் வேலை வழங்கப்பட்டதால் தினமும் சுமார் 10 மணி நேரம் தலைகுனிந்தபடி வேலை செய்ததால் பெரும் சிரமத்திற்கு உள்ளானார். இதனால் அவருக்கு கழுத்து, முதுகு வலி மற்றும் தூக்கமின்மை உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகள் ஏற்பட்டது. இதற்கு அவர் சிகிச்சையும் பெற்று வந்தார்.
கழுத்து வலியால் மிகவும் அவதிப்படுவதாக அவர் பஸ் பயணிகளிடம் புலம்பி உள்ளார். மேலும் அவர் தனக்கு வேறு வேலை வழங்குமாறு போக்குவரத்துக் கழகத்திடம் கோரிக்கையும் வைத்துள்ளார்.
10 மணி நேர கண்டக்டர் பணியில் அமீன் அகமது அன்சாரி டிக்கெட் வழங்க குனிந்து போராடுவது தொடர்பாக புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலானது. இந்த புகைப்படம் பொதுமக்களின் கவனத்தை ஈர்த்தது.
இதையடுத்து போக்குவரத்து அமைச்சர் பொன்னம் பிரபாகர் அமீன் அகமது அன்சாரியை பொருத்தமான பணியில் நியமிக்க உத்தரவிட்டுள்ளார். தெலுங்கானா போக்குவரத்து தலையகத்தில் அவரை பணியமர்த்த திட்டமிட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.
- பெங்களூருவில் இருந்து இயக்கப்பட்ட அரசு பஸ் நள்ளிரவு வந்தவாசிக்கு வந்தது.
- கண்டக்டர் பயணியை பிடித்து பஸ்சில் இருந்து கீழே தள்ளியுள்ளார்.
விழுப்புரம் :
தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தின் விழுப்புரம் கோட்டம் சார்பில் வெளிமாநிலங்கள் மற்றும் பல்வேறு மாவட்டங்களுக்கு பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
அந்தவகையில் பெங்களூருவில் இருந்து இயக்கப்பட்ட அரசு பஸ் கடந்த 17-ந் தேதி நள்ளிரவு வந்தவாசிக்கு வந்தது. வந்தவாசி பழைய பஸ் நிலையம் முன்பு நிறுத்தப்பட்ட பஸ்சில் இருந்து பயணிகள் அனைவரும் இறங்கினர். ஆனால் மதுபோதையில் இருந்த ஒரு வாலிபர் மட்டும் இறங்காமல் இருந்தார். கண்டக்டர் பிரகாஷ் அவரை சிரமப்பட்டு இறக்க முயன்றார். ஆனால் அவர் இறங்காமல் பஸ் படிக்கட்டில் தள்ளாடியபடி நின்றார். அப்போது கண்டக்டர் பிரகாஷ் பயணியை பிடித்து பஸ்சில் இருந்து கீழே தள்ளியுள்ளார். இதில் அவர் சாலையில் விழுந்தார். பின்னர் அந்த பஸ், வந்தவாசி போக்குவரத்து பணிமனைக்கு சென்றது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானதால் பரபரப்பு ஏற்பட்டது.
இதுகுறித்து டெப்போ உதவி பொறியாளர் துரை கூறுகையில், அவலூர்பேட்டையில் ஏறிய அந்த பயணி பஸ்சிலேயே மது அருந்தியும், பஸ்சிலேயே சிறுநீர் கழித்தும் பிற பயணிகளுக்கு தொந்தரவு அளித்துள்ளார். மேலும் அந்த பயணி கீழே தள்ளப்பட்ட விவகாரம் தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
இதுபற்றி அறிந்த தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக விழுப்புரம் கோட்ட அதிகாரி விசாரணை மேற்கொண்டு, பஸ்சில் இருந்து பயணியை வலுக்கட்டாயமாக கீழே தள்ளிவிட்டதாக கண்டக்டர் பிரகாஷை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார்.
- ரூ.10 மற்றும் ரூ.20 நாணயங்களை வாங்கவே கண்டக்டர்கள் தயங்குகிறார்கள்.
- சென்னை மாநகர போக்குவரத்து கழகம் ஒரு அவசர உத்தரவை பிறப்பித்துள்ளது.
சென்னை :
சென்னையில் பஸ் பயணத்தின்போது, டிக்கெட் வாங்க வரும் பயணிகளிடம் 'சில்லரையா கொடுங்கப்பா..' என்று கூவி கூவி கண்டக்டர்கள் கேட்டு வாங்கிய காலம் போய், இன்றைக்கு சில்லரைகளை கொடுத்தாலே கண்டக்டர்கள் கடுப்பாகும் நிலையே நிலவுகிறது. குறிப்பாக ரூ.10 மற்றும் ரூ.20 நாணயங்களை வாங்கவே கண்டக்டர்கள் தயங்குகிறார்கள். பலர் 'நோட்டே இல்லையா?' என்று கேட்கிறார்கள். சிலர் முணுமுணுத்தபடியும், திட்டிக்கொண்டும் வாங்குகிறார்கள். இன்னும் சிலர் 'இது செல்லாது' என்று கூறி அந்த நாணயங்களை திருப்பி கொடுத்து விடுகிறார்கள்.
ஏற்கனவே கடைகளில் ஒதுக்கப்படும் இந்த ரூ.10 மற்றும் ரூ.20 நாணயங்கள் தற்போது பஸ்களிலும் புறக்கணிக்கப்படுவதால் மக்கள் சிரமத்துக்கு உள்ளாகிறார்கள். இதனால் தொடக்கத்தில் இந்த நாணயங்கள் அறிமுகமான போது ஆசையுடன் வாங்கிய மக்கள், இப்போது அதை கையில் வைத்திருக்கவே தயங்குகிறார்கள்.
கண்டக்டர்கள் தரும் கெடுபிடியால் கொதித்து போன மக்கள் போக்குவரத்து துறையிடம் தொடர்ந்து இதுகுறித்த புகார்களை அளித்து வருகிறார்கள்.
பொதுமக்களின் புகாரை தொடர்ந்து சென்னை மாநகர போக்குவரத்து கழகம் நேற்று ஒரு அவசர உத்தரவை பிறப்பித்துள்ளது. இதுகுறித்து கண்டக்டர்கள், மண்டல-கிளை-உதவி மற்றும் பொதுப்பிரிவு மேலாளர்களுக்கு, சென்னை மாநகர் போக்குவரத்து கழக மேலாண்மை இயக்குனர் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:-
மாநகர பஸ்களில் பயணிகள் டிக்கெட் வாங்க ரூ.10 மற்றும் ரூ.20 நாணயங்களை கொடுக்கும்போது, அதனை மறுக்காமல் ஏற்றுக்கொண்டு கண்டக்டர்கள் உரிய டிக்கெட்டுகளை பயணிகளுக்கு வழங்க வேண்டும் என ஏற்கனவே உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த சுற்றறிக்கையின் மூலம் மீண்டும் அது அறிவுறுத்தப்படுகிறது.
எக்காரணம் கொண்டும் பயணிகள் அளிக்கும் ரூ.10 மற்றும் ரூ.20 நாணயங்களை பெற்றுக்கொள்ள கண்டக்டர்கள் மறுக்கக்கூடாது. இதனை மீறி ரூ.10 மற்றும் ரூ.20 நாணயங்களை வாங்க மறுப்பதாக புகார்கள் எழுந்தால், சம்பந்தப்பட்ட கண்டக்டரின் மீது உரிய ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்.
அனைத்து கிளை, உதவி கிளை மேலாளர்கள் மற்றும் அனைத்து நேர காப்பாளர்கள் ஆகியோர் இதுகுறித்து கண்டக்டர்களுக்கு தெளிவாக எடுத்துக்கூறி அவர்களிடம் கையெழுத்து பெற்று எதிர்காலத்தில் இத்தகைய புகார் எதுவும் வராமல் பணிபுரிய அறிவுறுத்த வேண்டும்.
இவ்வாறு அந்த சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
- வீட்டின் முன்பு நிறுத்தி இருந்த மோட்டார் சைக்கிளையும் காணவில்லை.
- வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார்.
தஞ்சாவூர்:
தஞ்சை நாஞ்சிக்கோட்டை சாலை சீதா நகரை சேர்ந்தவர் யுவராஜ் (வயது 65). ஓய்வு பெற்ற அரசு பஸ் கண்டக்டர். இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னையில் உள்ள தன் மகளை பார்ப்பதற்காக வீட்டை பூட்டி விட்டு சென்றார்.
இந்த நிலையில் சென்னையில் இருந்து தஞ்சைக்கு வந்த யுவராஜ் வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். உள்ளே சென்று பார்த்த போது பொருட்கள் சிதறி கிடந்தன.
அப்போது பீரோ உடைக்கப்பட்டு அதிலிருந்து 600 கிராம் வெள்ளிப் பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டு இருந்தது. மேலும் வீட்டின் முன்பு நிறுத்தி இருந்த மோட்டார் சைக்கிளையும் காணவில்லை. ஆளில்லா ததை நோட்டமிட்ட மர்ம நபர்கள் பொருட்கள் மற்றும் மோட்டார் சைக்கிளை திருடி சென்றது தெரிய வந்தது.
இது குறித்து அவர் தஞ்சை தமிழ் பல்கலைக்கழகம் போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.
இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
- சேரன்மகாதேவி, காமராஜர் தெருவை சேர்ந்தவர் பிரபாகரன் . தனியார் பஸ் டிரைவர்.
- முத்துவேல், முத்துமாரியப்பன் ஆகிய இருவரும் பிரபாகரனை தகாத வார்த்தையால் பேசி, பஸ்சின் முன்பக்க கண்ணாடியை சேதப்படுத்தியதாக கூறப்படுகிறது.
நெல்லை:
சேரன்மகாதேவி, காமராஜர் தெருவை சேர்ந்தவர் பிரபாகரன் (வயது 29). தனியார் பஸ் டிரைவர்.
தகராறு
இவர் நேற்று இரவு பாளை சமாதானபுரம் பஸ் நிறுத்தம் பகுதியில் பயணி களை ஏற்றிக் கொண்டிருந்தார்.
அப்போது அங்கு மற்றொரு தனியார் பஸ் டிரைவரான சேரன்மகா தேவி பட்டன்காடு பகுதியை சேர்ந்த முத்துவேல்(34) மற்றும் அதே பஸ் கண்டக்டரான மேலசெவலை சேர்ந்த முத்துமாரியப்பன்(34) ஆகியோருக்கும் இடையே பயணிகளை ஏற்றுவதில் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் முத்துவேல், முத்துமாரியப்பன் ஆகிய இருவரும் பிரபாகரனை தகாத வார்த்தையால் பேசி, பஸ்சின் முன்பக்க கண்ணாடியை சேதப்படுத்தி யதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து பிரபாகரன் கொடுத்த புகாரின் பேரில் முத்துவேல், முத்துமாரியப்பன் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்த பாளை சப்-இன்ஸ்பெக்டர் சண்முக மூர்த்தி மற்றும் போலீசார் இருவரையும் கைது செய்தனர்.
- மோட்டார் சைக்கிளில் வேலைக்கு சென்று விட்டு திரும்பியபோது பரிதாபம்
- இந்துராணி தக்கலை போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு
கன்னியாகுமரி :
தக்கலை அருகே மருவூர் கோணம் பகுதியைச் சேர்ந்த வர் அஜிஸ் (வயது 26), மினி பஸ் கண்டக்டர்.
இவர் கடந்த 3 ஆண்டு களுக்கு முன்பு இந்துராணி என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது.அஜிஸ் நேற்று காலை வழக்கம்போல் வேலைக்கு செல்வதற்காக மோட்டார் சைக்கிளில் தனது வீட்டி லிருந்து புறப்பட்டார்.திக்கணங்கோடு பகுதியில் மோட்டார் சைக்கிள் நிறுத்தி விட்டு மினி பஸ்சில் வேலைக்கு சென்றார்.நேற்று இரவு வேலை முடிந்து அஜிஸ்வீட்டிற்கு செல்ல தயாரானார். தனது மோட்டார் சைக்கிளில் அங்கிருந்து புறப்பட்டு முளகு மூடு பகுதியில் வந்து கொண்டிருந்தார். அப்போது எதிரே வந்த டிப்பர் லாரி அஜிஸ் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. தூக்கி வீசப் பட்ட அஜிஸ் படுகாயம் அடைந்தார்.
உடனே அவரை சிகிச்சைக் காக தக்கலை அரசு ஆஸ்பத் திரியில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக் காக அஜிஸ் ஆசாரிப் பள்ளம் அரசு ஆஸ்பத்தி ரியில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.எனினும் சிகிச்சை பலன்இன்றி இன்று காலை அஜிஸ் பரிதாபமாக இறந் தார்.
இது குறித்து அவரது மனைவி இந்துராணி தக்கலை போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற் கொண்டனர்.
லாரி டிரைவர் திருவ னந்தபுரம் பகுதியைச் சேர்ந்த ராஜேஷ் (36) என்பவர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். பலியான அஜிசின் உடல் பிரேத பரிசோதனை இன்று ஆசாரிப்பள் ளம் அரசு ஆஸ்பத்திரியில் நடக்கிறது. இதையடுத்து அவரது நண்பர்கள் மற்றும் உறவினர்கள் ஏராளமானோர் அங்கு திரண்டு உள்ளனர்.
- பஸ்சிலேயே மயங்கி விழுந்தார்.
- பஸ்சை ஓட்டுநர் பல்லடம் அரசு மருத்துவ மனைக்குகொண்டு சென்றார்.
பல்லடம் :
கோவையில் இருந்து 25 பயணிகளுடன் மதுரை நோக்கி சென்ற அரசு பஸ் பல்லடம் பஸ் நிலைய த்திற்குள் பயணிக ளை இறக்கிவிட்டு மேலும் சில பயணிகளை ஏற்றி கொண்டு புறப்பட்டது.
மதுரையைச் சேர்ந்த ராமராஜ் என்பவர் ஓட்டினார். இந்தநிலையில் பஸ்ஸின் நடத்துனர் சீனி (வயது 51) என்பவருக்கு, திடீரென உடல் நலக் குறைவு ஏற்பட்டு பஸ்சி லேயே மயங்கி விழுந்தார்.
அருகில் இருந்த பயணிகள் அவரை தாங்கி பிடித்து தண்ணீர் கொடுத்து, அவரை உட்கார வைத்தனர். இதற்குள் பஸ்சை ஓட்டுநர் பல்லடம் அரசு மருத்துவ மனைக்கு கொண்டு சென்றார். அங்கு அவருக்கு டாக்டர்கள் முதலுதவி சிகிச்சை அளித்து, மேல் சிகிச்சைக்காக அவரை கோவை அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து, அந்த பஸ் மீண்டும் மதுரை நோக்கி புறப்பட்டது. பல்லடத்தில் ஓடும் பஸ்ஸில் நடத்துனர் மயங்கி விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்ப டுத்தி உள்ளது.
- கண்டக்டரை தாக்கிய அகதிகள் கைது செய்யப்பட்டனர்.
- சந்திரன் டிக்கெட் எடுக்கும்படி கேட்டார்.
மதுரை
தேனி பாரஸ்ட் ரோட்டை சேர்ந்தவர் சந்திரன் (53). அரசு போக்குவரத்து கழகத்தில் கண்டக்டராக உள்ளார். நேற்று இரவு இவர் பணியில் இருந்த பஸ் பழங்காநத்தத்திற்கு வந்தது. அங்கு 2 பேர் ஏறினர். அவர்களிடம் சந்திரன் டிக்கெட் எடுக்கும்படி கேட்டார். அவர்கள் மறுத்தனர். இரு தரப்புக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.
ஆத்திரமடைந்த இருவரும் கண்டக்டரை தாக்கினர். இது குறித்த புகாரின்பேரில் சுப்பிரமணியபுரம் போலீசார் வழக்குப் பதிவு செய்து கூத்தியார்குண்டு இலங்கை அகதிகள் முகாமை சேர்ந்த துரைராஜ் மகன் அரவிந்தன் (22), திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் இலங்கை அகதிகள் முகாமை சேர்ந்த சைந்தன் (31) ஆகியோரை கைது செய்தனர்.
- பஸ் சென்று கொண்டிருந்த போது வறுவேல்ராஜ் கண்டக்டர் பொன்னப்பனிடம் தகராறில் ஈடுபட்டார்.
- தகாத வார்த்தைகளால் பேசியதுடன் கையால் தாக்கினார்.
நாகர்கோவில் :
கட்டிமாங்கோடு வர்த்தக நாடார் குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் பொன்னப்பன் (வயது 51). இவர் அரசு பஸ் கண்டக்டராக பணிபுரிந்து வருகிறார். சம்பவத்தன்று நாகர்கோவிலில் இருந்து திங்கள்நகர் சென்ற பஸ்சில் பணியில் இருந்தார். அப்போது சரல் பகுதியை சேர்ந்த வறுவேல்ராஜ் (50) என்பவர் பஸ்சில் ஏறினார்.
ஆசாரிப்பள்ளம் பகுதியில் பஸ் சென்று கொண்டிருந்த போது வறுவேல்ராஜ் கண்டக்டர் பொன்னப்பனிடம் தகராறில் ஈடுபட்டார். பஸ்சை வேகமாக இயக்குமாறு கூறி தகராறு செய்தார். இதில் ஆத்திரமடைந்த வறுவேல்ராஜ் கண்டக்டர் பொன்னப்பனை தகாத வார்த்தைகளால் பேசியதுடன் கையால் தாக்கினார். இதுகுறித்து பொன்னப்பன் ஆசாரிப்பள்ளம் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். வறுவேல்ராஜ் மீது அரசு பணி செய்ய விடாமல் தடுத்தல் உட்பட 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
- அரசு பஸ் கண்டக்டர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- போக்குவரத்து அதிகாரியிடம் எம்.எல்.ஏ வலியுறுத்தினார்.
ஸ்ரீவில்லிபுத்தூர்
ஸ்ரீவில்லிபுத்தூரில் இருந்து கலிங்கபட்டிக்கு செல்லும் அரசு பஸ் வன்னியம்பட்டி, பெருமாள் தேவன்பட்டி, அட்டைமில், கீழராஜகுலராமன், வடகரை, கொருக்காம்பட்டி வழியாக தினசரி மகளிர் கட்டணமில்லா பஸ்சாக இயக்கப்படுகிறது. இந்த பஸ் ஸ்ரீவில்லி புத்தூர், ராஜபாளையம், வெம்பக்கோட்டை, சங்கரன்கோவில் ஆகிய 4 தாலுகாக்களில் உள்ள கிராமப்பகுதி மக்கள் பயனடைந்து வருகின்றனர்.
ஸ்ரீவில்லிபுத்தூர்- கலிங்கபட்டி பஸ் சரியாக இயக்கப்படாதது குறித்து ஸ்ரீவில்லிபுத்தூர் போக்குவரத்து கழகத்தில் சிலர் புகார் அளித்தனர்.
இந்நிலையில் நேற்று ஸ்ரீவில்லிபுத்தூரில் இருந்து கலிங்கபட்டிக்கு காலை 10.30 மணிக்கு அந்த பஸ் புறப்பட்டது. பஸ்சில் கொருக்கும்பட்டியில் கல்லூரி மாணவி ஒருவர் ஏறி உள்ளார்.
அப்போது அவரிடம் நடத்துநர் தங்கவேலு, பஸ் சரியாக வர வில்லை என உங்கள் ஊரில் இருந்து புகார் அளித்துள்ள தாக கூறி மாணவியை அவதூறாக பேசி உள்ளார். இதுகுறித்து மாணவியின் பெற்றோர், ரகுராமன் எம்.எல்.ஏ.விடம் தெரிவித்தனர்.
இதையடுத்து ஸ்ரீவில்லி புத்தூர் போக்குவரத்து கழகத்திற்கு வந்த ரகுராமன் எம்.எல்.ஏ. சம்பந்தப்பட்ட கண்டக்டர், மாணவியிடம் மன்னிப்பு கேட்க வேண்டும், மேலும் அவர் மீது துறை ரீதியிலான நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார். 15 நாட்களில் கண்டக்டர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்து பணிமனை மேலாளர் உறுதி அளித்திருப்பதாக கூறப்படுகிறது.
- பஸ் தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.
- தாக்குதலில் ஈடுபட்டவர்களை உடனடியாக கைது செய்வோம் என்று போலீசார் உறுதி அளித்தனர்.
தஞ்சாவூர்:
பெரம்பலூர் மாவட்டம் பாடலூரை சேர்ந்தவர் அழகுதுரை (வயது 39 ) அரசு பஸ் டிரைவர். திருச்சி மண்ணச்சநல்லூரை சேர்ந்தவர் ஆறுமுகம் (44) அரசு பஸ் கண்டக்டர். இவர்கள் தஞ்சாவூர்- பட்டுக்கோட்டை வழித்தட பஸ்சில் பணிபுரிகின்றனர்.
நேற்று தஞ்சை- பட்டுக்கோட்டை வழித்தட பஸ்சை இயக்கினர். இரவில் கடைசி நடையாக பட்டுக்கோட்டையில் இருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு தஞ்சை புதிய பஸ் நிலையத்திற்கு வந்தனர். அங்கு பயணிகளை இறக்கிவிட்டு பஸ்சை தஞ்சை ஜெபமாலைபுரம் பணிமனைக்கு கொண்டு வந்தனர்.
பின்னர் பயணிகளிடம் வசூலித்த டிக்கெட் கட்டணம் உள்ளிட்ட விவரங்களை பணிமனை அலுவலர்களிடம் சமர்பித்தனர். இதையடுத்து அதிகாலை 2 மணியளவில் இருவரும் வீட்டுக்கு செல்வதற்காக அருகே உள்ள பஸ் நிறுத்தம் சென்று அந்த வழியாக வரும் அரசு பஸ்சில் ஏறி புதிய பஸ் நிலையம் செல்ல முடிவு செய்தனர். அதன்படி இருவரும் பஸ் நிறுத்தத்துக்கு நடந்து சென்று கொண்டிருந்தனர்.
சீனிவாசபுரம் செக்கடி பகுதியில் வந்தபோது மோட்டார் சைக்கிளில்களில் வந்த 8 பேர் கொண்ட கும்பல் திடீரென வழிமறித்து நிறுத்தி பணம் கொடுக்குமாறு மிரட்டினர். இதற்கு அழகுத்துரை, ஆறுமுகம் மறுத்தனர். இதனால் ஆத்திரம் அடைந்த அந்த கும்பல் சரமாரியாக இருவரையும் தாக்கி ரூ.3500 ரொக்கம், வெள்ளி செயின், வாட்ஜ் ஆகியவற்றை பறித்து கொண்டு மோட்டார் சைக்கிள்களில் ஏறி தப்பி சென்றனர்.
இந்த தாக்குதலில் காயமடைந்த அழகுத்துரை, ஆறுமுகத்தை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக தஞ்சை அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் இந்த சம்பவத்தை கண்டித்து இன்று அதிகாலை 4 மணியளவில் ஜெபமாலைபுரம் பணிமனையில் இருந்து 50-க்கும் மேற்ப்பட்ட பஸ்களை இயக்காமல் ஏராளமான டிரைவர், கண்டக்டர்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தாக்குதலில் ஈடுபட்டவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும். பஸ் தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். சுமார் 1 மணி நேரத்திற்கும் நேரமாக இந்த போராட்டம் நீடித்தது.
தகவல் அறிந்து போக்குவரத்து அதிகாரிகள், மேற்கு போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். தாக்குதலில் ஈடுபட்டவர்களை உடனடியாக கைது செய்வோம் என்று போலீசார் உறுதி அளித்தனர். இதனை ஏற்று தொழிலாளர்கள் போராட்டத்தை கைவிட்டனர். தொடர்ந்து பஸ்களை இயக்கினர். இந்த சம்பவம் தஞ்சையில் பரபரப்பை ஏற்படுத்தியது.
- பஸ்சில் கூட்டம் அதிகமானதால் மாணவிகள் இருவரையும் கீழே இறங்குமாறு கண்டக்டர் கூறி உள்ளார்.
- மாணவிகளை நடுவழியில் இறக்கி விட்ட டிரைவர், கண்டக்டர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து உள்ளனர்.
திருப்போரூர்:
கோடை விடுமுறைக்கு பின்னர் பள்ளிகள் திறக்கப்பட்டு உள்ளன. மாணவ-மாணவிகள் சீருடையில் வந்தால் அவர்களை இலவசமாக பயணம் செய்ய அனுமதிக்க வேண்டும் என்று அரசு பஸ் டிரைவர், கண்டக்டர்களுக்கு ஏற்கனவே அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
இந்த நிலையில் பயணிகள் கூட்டம் அதிகமாக இருந்ததால் மாணவிகள் 2 பேரை கண்டக்டர் கீழே இறக்கிவிட்ட சம்பவம் அதிர்ச்சி அடைய செய்து உள்ளது.
திருப்போரூர் பகுதியை சேர்ந்த ஏராளமான மாணவ-மாணவிகள் கேளம்பாக்கத்தில் உள்ள பள்ளியில் படித்து வருகிறார்கள். இந்த நிலையில் நேற்று காலை பிளஸ்-1 படிக்கும் மாணவி ஒருவர் 7-ம் வகுப்பு படிக்கும் தனது சகோதரியுடன் திருப்போரூர் கோவில் குளம் பஸ் நிறுத்தத்தில் இருந்து தாம்பரம் செல்லும் (எண்515) பஸ்சில் பள்ளிக்குச் செல்ல ஏறினர்.
அடுத்த பஸ் நிறுத்தத்தில் பஸ்சில் கூட்டம் அதிகமானதால் மாணவிகள் இருவரையும் கீழே இறங்குமாறு கண்டக்டர் கூறி உள்ளார். இதனால் செய்வது அறியாமல் மாணவிகள் இருவரும் கீழே இறங்கியதும் அவர்களை மீண்டும் பஸ்சில் ஏற்றாமல் அடுத்த பஸ்சில் வருமாறு கூறினார். பின்னர் பஸ் அங்கிருந்து சென்று விட்டது.
இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவிகள் இதுபற்றி அவ்வழியே சென்ற ஒருவரின் செல்போன் மூலம் தங்களது பெற்றோருக்கு தகவல் தெரிவித்தனர். பின்னர் அவர்கள் வேறு பஸ்சில் பள்ளிக்கு புறப்பட்டு சென்றனர். இதைத்தொடர்ந்து மாணவிகளின் பெற்றோர் மற்றும் பொதுமக்கள் ஏராளமனோர் திருப்போரூரில் உள்ள நேரக்காப்பாளர் அறைக்கு சென்று டிரைவர், கண்டக்டர் நடந்தவிதம் குறித்து கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. மாணவிகளை நடுவழியில் இறக்கி விட்ட டிரைவர், கண்டக்டர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து உள்ளனர்.