search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 230466"

    • க்தர்கள் காணிக்கை செலுத்துவதற்காக வைக்கப்பட்டிருந்த 9 நிரந்தர உண்டியல், 7 குடங்கள்
    • ரூ.14,29,759 ரொக்கமாகவும், 82 கிராம் தங்கம், 196 கிராம் வெள்ளி மற்றும் வெளிநாட்டு நாணயங்களும் கிடைக்கப்பெற்றன.

    கன்னியாகுமரி :

    மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் பக்தர்கள் காணிக்கை செலுத்துவதற்காக வைக்கப்பட்டிருந்த 9 நிரந்தர உண்டியல், 7 குடங்கள் ஆகியன நேற்று குமரி மாவட்ட கோவில்களின் இணை ஆணையர் ஞானசேகர், உதவி ஆணையர் தங்கம், பத்மனாபபுரம் தேவஸ்வம் தொகுதி கண்காணிப்பாளர் ஆனந்த், ஆய்வாளர் செல்வி, கோவில் ஸ்ரீகாரியம் செந்தில்குமார் மற்றும் கோயில் பணியாளர்கள், சுயஉதவிகுழு பெண்கள், பொதுமக்கள் முன்னிலையில் திறந்து எண்ணப்பட்டது.

    அதில் ரூ.14,29,759 ரொக்கமாகவும், 82 கிராம் தங்கம், 196 கிராம் வெள்ளி மற்றும் வெளிநாட்டு நாணயங்களும் கிடைக்கப்பெற்றன.

    • மதுரை- ராமேசுவரம் சிறப்பு ரெயில் மூலம் ரூ.2 லட்சம் வசூல் கிைடத்தது.
    • ஆடி அமாவாசையை முன்னிட்டு மதுரையில் இருந்து ராமேசுவரத்துக்கு முன்பதிவு இல்லாத சிறப்பு ரெயில் இயக்கப்பட்டது.

    மதுரை

    ஆடி அமாவாசையை முன்னிட்டு மதுரையில் இருந்து ராமேசுவரத்துக்கு நேற்று முன்பதிவு இல்லாத சிறப்பு ரெயில் இயக்கப்பட்டது. இது மதுரையில் இருந்து அதிகாலை 5.45 மணிக்கு புறப்பட்டு, காலை 9.15 மணிக்கு ராமேசுவரம் சென்றது.

    கீழ்மதுரை, சிலைமான், திருப்புவனம், திருப்பாச்சி, மானாமதுரை, பரமக்குடி, ராமநாதபுரம், உச்சிப்புளி வழியாக சென்ற ரெயிலில் 1140 பேர் பயணம் செய்தனர். இதன் மூலம் 72 ஆயிரத்து 700 ரூபாய் கட்டணம் வசூல் ஆனது.

    மறுமார்க்கத்தில் ராமேசுவரத்தில் இருந்து மதியம் 1.30 மணிக்கு புறப்பட்ட ரெயில், மாலை 5.15 மணிக்கு மதுரை வந்தது. இதில் 1853 பேர் பயணம் செய்தனர். இதன் மூலம் 1 லட்சத்து 28 ஆயிரத்து 575 ரூபாய் கட்டணம் வசூல் ஆனது.

    மதுரை- ராமேசுவரம் ஆடி அமாவாசை சிறப்பு ரெயிலில் 2993 பேர் பயணம் செய்தனர். இதன் மூலம் ரெயில்வே துறைக்கு ஒரே நாளில் ரூ.2 லட்சம் வருமானம் கிடைத்தது.

    • உண்டியல் மாதந்தோறும் பொதுமக்கள் முன்னிலையில் திறந்து எண்ணப்படுவது வழக்கம்
    • வருமானமாக ரூ.44 ஆயிரத்து 244 வசூல் ஆகி இருந்தது

    கன்னியாகுமரி :

    தாணுமாலயசாமி கோவிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து விட்டு செல்கின்றனர்.

    அவ்வாறு வருகின்ற பக்தர்கள் மதிய வேளையில் அன்னதானம் வழங்கும் வகையில் தமிழக அரசு ஏற்பாடு செய்துள்ளது. இதற்காக கோவில் நிர்வாகம் சார்பில் அன்னதான உண்டியல் ஒன்றை வைத்துள்ளனர். இந்த உண்டியல் மாதந்தோறும் பொதுமக்கள் முன்னிலையில் திறந்து எண்ணப்படுவது வழக்கம். அதேபோல் நேற்று கண்காணிப்பாளர் சிவக்குமார், மேலாளர் ஆறுமுகதரன், ஆய்வர் ராம லெட்சுமி, கணக்கர் கண்ணன் ஆகியோர் முன்னிலையில் உண்டியல் திறந்து எண்ணப்பட்டது.

    அதில் வருமானமாக ரூ.44 ஆயிரத்து 244 வசூல் ஆகி இருந்தது. இந்த தகவலை திருக்கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

    • கப்பலூர் சுங்கச்சாவடியை அகற்றாவிடில் மிகப்பெரிய போராட்டம் நடத்தப்படும் என எதிர்ப்பு ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
    • பதட்டமான சூழல் உருவாகும் சமயத்தில் மட்டும் மாவட்ட கலெக்டர் மூலம் பேச்சுவார்த்தை நடத்தி உள்ளூர் மக்களிடம் சுங்க கட்டணம் வசூலிக்கப்பட மாட்டாது என சுங்கச்சாவடி உறுதி கூறும்.

    திருமங்கலம்

    மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே கப்பலூரில் சுங்கச்சாவடி அமைந்து உள்ளது. திருமங்கலம் நகராட்சியில் இருந்து ஒரு கிலோமீட்டர் தொலைவில் இந்த சுங்கச்சாவடி உள்ளதால் உள்ளூர் வாகனங்களுக்கு சுங்க கட்டணம் வசூலிக்க கூடாது என வலியுறுத்தி கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக அப்பகுதி மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

    ஆனால் உள்ளூர் மக்களிடம் ஊழியர்கள் சுங்க கட்டணம் கேட்பதால் இங்கு அடிக்கடி மோதல் ஏற்படும் சூழல்களும் உருவாகி வருகின்றன. பதட்டமான சூழல் உருவாகும் சமயத்தில் மட்டும் மாவட்ட கலெக்டர் மூலம் பேச்சுவார்த்தை நடத்தி உள்ளூர் மக்களிடம் சுங்க கட்டணம் வசூலிக்கப்பட மாட்டாது என சுங்கச்சாவடி உறுதி கூறும்.

    ஆனால் சில நாட்களிலேயே அந்த உறுதி மொழியை காற்றில் பறக்கவிட்டு மீண்டும் சுங்க கட்டணம் கேட்பார்கள்.தி.மு.க., அ.தி.மு.க. உள்ளிட்ட கட்சிகள் சுங்கச்சாவடியை வேறு இடத்திற்கு அமைக்க வேண்டும் என வலியுறுத்தி வருகிறது.

    இந்த நிலையில் திருமங்கலம் மற்றும் கப்பலூர் பகுதியில் உள்ள வாகன ஓட்டிகள் 2 ஆண்டுகளுக்குரிய சுங்க கட்டணத்தை செலுத்த வேண்டுமென வக்கீல் மூலம் நூற்றுக்கும் மேற்பட்டவர்களுக்கு சுங்க நிர்வாகம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

    ஒவ்வொருவருக்கும் ரூ. 30 ஆயிரத்திலிருந்து, ரூ. 3 லட்சம் வரையிலும், கப்பலூர் தொழிற் பேட்டை வாகனங்களுக்கு ரூ. 1கோடி வரையிலும், தமிழ்நாடு அரசு போக்கு வரத்து துறைக்கு ரூ‌.28கோடி கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இந்த விவகாரம் வாகன ஓட்டிகளிடையே கடும் அதிர்ச்சியை உண்டாக்கி யுள்ளது.

    இதையடுத்து சட்ட விரோதமாக அமைக்க ப்பட்ட கப்பலூர் சுங்கச்சாவடியை அகற்ற வலியுறுத்தி திருமங்கலம் உசிலம்பட்டி சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் சுங்கச்சாவடி எதிர்ப்பு ஒருங்கிணைப்பு குழு கூட்டம் நடைபெற்றது.இதில் திருமங்கலம், டி.கல்லுப்பட்டி, பேரையூர் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த நூற்றுக்கணக்கான வாகன உரிமையாளர்கள் கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில் தேர்தல் வாக்குறுதியின் போது கப்பலூர் சுங்கச்சாவடியை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்த தமிழக முதல்வர் உடனடியாக சுங்கச்சாவடியை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிடில் கப்பலூர் சுங்கச்சாவடியை அகற்றும் வரை திருமங்கலம், கப்பலூர், டி.கல்லுப்பட்டி, பேரையூர் பகுதி மக்களை திரட்டி மிகப்பெரிய அளவில் போராட்டம் நடத்தப்படும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    • முகக்கவசம் அணியாத 115 பேரிடம் அபராதம் வசூலிக்கப்பட்டது.
    • விதிமுறைகளை கடைபிடிக்க தவறியதாக 53 நிறுவனங்களை சேர்ந்தவர்களுக்கு ரூ.8 ஆயிரத்து 700 அபராதம் விதிக்கப்பட்டது.

    மதுரை

    மதுரை மாவட்டத்தில் தற்போது கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு வரை தினமும் 10 பேர் வீதம் பாதிக்கப்பட்டு வந்தனர்.இந்த நிலையில் கொரோனா பாதிப்பு நேற்று மட்டும் ஒரே நாளில் 49 ஆக அதிகரித்து உள்ளது.

    இதன் காரணமாக மதுரை மாவட்டத்தில் 182 பேர் நோய் தொற்று பாதிப்புக்கு ஆளாகி உள்ளனர். அவர்களுக்கு மதுரை தனியார் மற்றும் அரசு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ஒரு சிலர் வீட்டு தனிமையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    மதுரை மாவட்டத்தில் கொரோனா பாதிப்புக்கு உட்பட்ட நோயாளிகளில் 26 பேர் நேற்று நோய் குணமாகி வீடு திரும்பினர் .

    மதுரையில் கொரோனா பரவல் அதிகரித்ததை தொடர்ந்து, பொதுமக்கள் அனைவரும் முகக்கவசம் அணிய வேண்டும். இல்லை யெனில் சம்பந்தப்பட்ட நபர்களுக்கு தலா ரூ.500 வீதம் அபராதம் விதிக்கப்படும் என்று கலெக்டர் அனீஷ் சேகர் ஏற்கனவே எச்சரிக்கை விடுத்து இருந்தார். ஆனாலும் பொதுமக்களில் சிலர் அலட்சியம் காட்டி வந்தனர்.

    இந்த நிலையில் மதுரை மாவட்டத்தில் முகக்கவசம் அணியாதவர்களை கண்காணித்து, அபராதம் விதிக்கும் வகையில், வருவாய் துறையினர் அடங்கிய 15 குழுக்கள் ஏற்படுத்தப்பட்டு உள்ளன. அவர்கள் மதுரையின் 5 மண்டலங்களிலும் தீவிர கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

    மதுரை மாவட்டத்தில் ஜூன் மாதம் 30-ம் தேதி முதல் முகக்கவசம் அணியாதவரிடம் அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது.முதல் நாளில் மட்டும் 62 பேரிடம் ரூ.24 ஆயிரத்து 400 அபராதம் வசூலிக்கப்பட்டது.

    இந்த நிலையில் மதுரை மாவட்ட வருவாய்துறை கண்காணிப்பு குழுவினர் நேற்று முகக்கவசம் அணியாதவரிடம் அபராதம் வசூலித்தனர். அப்போது பொதுமக்களில் 23 பேர் முகக்கவசம் அணியாதது தெரியவந்தது. இதையடுத்து அவர்களுக்கு ரூ.7000 அபராதம் விதிக்கப்பட்டது.

    அடுத்தபடியாக தனியார் நிறுவனத்தில் முகக்கவசம் மற்றும் கொரோனா பாதுகாப்பு விதிமுறைகளை கடைபிடிக்க தவறியதாக 53 நிறுவனங்களை சேர்ந்தவர்களுக்கு ரூ.8 ஆயிரத்து 700 அபராதம் விதிக்கப்பட்டது. மதுரை மாவட்டத்தில் நேற்று மட்டும் 53 பேரிடம் ரூ.15 ஆயிரத்து 700 அபராதம் வசூலிக்கப்பட்டது.

    மதுரை மாவட்டத்தை பொறுத்தவரை கடந்த 2 நாட்களில் மட்டும் முக கவசம் அணியாத 115 பேரிடம் இருந்து ரூ.40 ஆயிரத்து 100 அபராதம் வசூலிக்கப்பட்டு உள்ளது.

    • 3 சன்னதிகள் முன்பு 3 பெரிய உண்டியல்கள் வைக்கப்பட்டு உள்ளன.
    • ரூ.8 லட்சத்து 69 ஆயிரத்து 133 வசூல்

    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரி விவேகானந்தபுரத்தில் உள்ள விவேகானந்த கேந்திர கடற்கரை வளாகத்தில் திருமலை திருப்பதி தேவஸ்தானம் சார்பில் திருப்பதி வெங்கடாஜலபதி கோவில் கட்டப்பட்டு உள்ளது. இந்த கோவில் கடந்த 2019-ம் ஆண்டு ஜனவரி மாதம் 27-ந் தேதி பிரதிஷ்டை செய்யப்பட்டு கும்பாபிஷேகம் நடந்தது. கோவிலுக்கு வரும் பக்தர்கள் தங்களது நேர்ச்சை நிறைவேறுவதற்காக வேண்டி கோவிலில் உள்ள உண்டியலில் பணம், காசு தங்கம், வெள்ளி மற்றும் வெளிநாட்டு பணங்களை காணிக்கையாக செலுத்துவது வழக்கம்.

    இதற்காக வெங்கடாஜலபதி சன்னதி, பத்மாவதி தாயார் சன்னதி, ஆண்டாள் சன்னதி ஆகிய 3 சன்னதிகள் முன்பு 3 பெரிய உண்டியல்கள் வைக்கப்பட்டு உள்ளன. இந்த உண்டியலில் உள்ள காணிக்கை எண்ணும்பணி கோவில் ஆய்வாளர் சாய் கிருஷ்ணா, சென்னையில் உள்ள திருமலை திருப்பதி தேவஸ்தான துணை செயல் அலுவலர் விஜயகுமார் விஜிலென்ஸ் அதிகாரி நாயுடு மற்றும் திருமலை திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள் முன்னிலையில் நடந்தது. இதில் வருமானமாக ரூ.8 லட்சத்து 69 ஆயிரத்து 133 வசூல் ஆகி இருந்தது.

    • சென்னிமலை முருகன் கோவிலில் உள்ள உண்டியல்கள் திறந்து எண்ணும் பணி நடைபெற்றது.
    • உண்டியல்கள் எண்ணும் பணியில் ஈரோடு மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி பணியாளர்கள் கூட்டுறவு சங்கப் பணியாளர்கள், கோவில் பணியாளர்கள் மற்றும் நந்தா கல்லூரி, மாணவ, மாணவிகள் தன்னார்வலர்கள் ஈடுபட்ட–னர்.

    சென்னிமலை:

    சென்னிமலை முருகன் கோவிலில் உள்ள உண்டியல்கள் திறந்து எண்ணும் பணி நடைபெற்றது. திருச்செ–ங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோவில் உதவி ஆணையர் ரமணி காந்தன் தலைமையில், கோவில் தக்கார் பிரதிநிதி குகன், கோவில் செயல் அலுவலர் அருள்குமார், பெருந்துறை சரக ஆய்வாளர் ரவிக்குமார் முன்னிலையில் உண்டியல்கள் திறந்து எண்ணப்பட்டது.

    இதில், நிரந்தர உண்டியலில் 20 லட்சத்து 72 ஆயிரத்து 546 ரூபாய் பணமும், 34 கிராம் தங்கம் மற்றும் ஆயிரத்து 953 கிராம் வெள்ளியும் பக்தர்களின் காணிக்கையாக செலுத்தி இருந்தனர்.

    அதேபோல் திருப்பணி உண்டியலில் ஒரு லட்சத்து 60 ஆயிரத்து 627 ரூபாய் பணம் காணிக்கையாக இருந்தது. இரு உண்டியல் களிலும் சேர்த்து மொத்தம் ரூ.22 லட்சத்து 33 ஆயிரத்து 173 ரூபாயினை பக்தர்களின் காணிக்கையாக செலுத்தி இருந்தனர்.

    உண்டியல்கள் எண்ணும் பணியில் ஈரோடு மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி பணியாளர்கள் கூட்டுறவு சங்கப் பணியாளர்கள், கோவில் பணியாளர்கள் மற்றும் நந்தா கல்லூரி, மாணவ, மாணவிகள் தன்னார்வலர்கள் ஈடுபட்ட–னர்.

    • சோழவந்தான் பேரூராட்சி சார்பில் தினசரி சந்தையில் நேரடி வசூல் செய்யப்படுகிறது.
    • தினசரி காய்கறி சந்தை, கடை வியாபாரிகளிடம் வரி வசூல் செய்யப்படுகிறது.

    சோழவந்தான்

    சோழவந்தான் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதியில் தினசரி காய்கறி வாரச்சந்தை செயல்படுகிறது. இதனை தண்டல் வசூல் செய்ய வெளிநபருக்கு டெண்டர் மூலம் உரிமம் விடப்பட்டது. கடந்த 6-ந்தேயுடன் முடிவுற்ற நிலையில் நேற்று முன்தினம் (செவ்வாய்கிழமை) முதல் பேரூராட்சி நிர்வாகம் சார்பில் தினசரி காய்கறி சந்தை, கடை வியாபாரிகளிடம் வரி வசூல் செய்யப்படுகிறது.

    இதையடுத்து பேரூராட்சி செயல் அலுவலர் சுதர்சன் முன்னிலையில் சந்தை வியாபாரிகளிடம் இனி வரும் காலத்திற்கு டெண்டர் ஏலம் விடும்வரை நிர்வாகமே நேரடியாக வரி வசூல் செய்யும் என அறிவிக்க படுகிறது என தெரிவித்தார். தற்போது திருவிழா நடைபெறுவதால் பக்தர்கள், சாலையோர வியாபாரிகள், பொதுமக்கள், குப்பைகளை கண்ட இடங்களில் கொட்டாமல், பேரூராட்சி பகுதிகளை சுகாதாரத்துடன் பராமரிப்பு, துப்புரவு பணிகள் மேற்கொள்ள பேரூராட்சி நிர்வாகத்திற்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.

    அப்போது சுகாதார ஆய்வாளர் முருகானந்தம், கணக்கர் கல்யாணசுந்தரம், கண்ணம்மா, சந்தோஷ், வினோத், அசோக் ஆகியோர் உடனிருந்தனர்.

    ×