search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "உரிமம்"

    • ஐஸ் கிரீமை சாப்பிட துவங்கியதும் அதில் மனித விரல் இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.
    • அந்த விரல் யாருடையது என்ற கேள்வி பெரும் மர்மமாகவே இருந்து வரும் நிலையில் தற்போது அதற்கான விடை கிடைத்துள்ளது.

    மும்பையைச் சேர்ந்த பெண் ஒருவர் கடந்த வாரம் ஆன்லைனில் யுமோ பிராண்டு ஐஸ் கிரீமை ஆர்டர் செய்திருந்தார். ஆர்டர் செய்த ஐஸ் கிரீமை சாப்பிட துவங்கியதும் அதில் மனித விரல் இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். அதை மருத்துவரான அவரது சகோதரர்  வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் வெளியிடவே விஷயம் பூதாகரமாக மாறியது. இந்த சம்பவம் தொடர்பாக புனேவை சேர்ந்த சம்பந்தப்பட்ட ஐஸ் கிரீம் நிறுவனத்தின் மீது காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்திருந்தனர்.

    ஐஸ் கிரீம் உற்பத்தியாளரின் தயாரிப்பு ஆலைக்கு சீல் வைத்து உரிமத்தை ரத்து செய்தனர். ஐஸ் கிரீமில் கிடந்த மனித விரல் தடயவியல் சோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அந்த விரல் யாருடையது என்ற கேள்வி பெரும் மர்மமாகவே இருந்து வரும் நிலையில் தற்போது அதற்கான விடை ஓரளவு கிடைத்துள்ளது.

     

    அதாவது ஐஸ் கிரீம் ஆலையில் வேலை பார்த்து வந்த ஒருவர் சமீபத்தில் ஆலையில் நடந்த விபத்தில் தனது விரலை இழந்துள்ளார் என்று போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. அந்த நபரின் டி.என்.ஏ மாதிரிகள் சேகரிக்கப்பட்டு பரிசோதனைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. பரிசோதனையில் விரலில் உள்ள டி.என்.ஏ.வும் அந்த நபரின் டி.என்.ஏவும் ஒத்துபோகும் பட்சத்தில் இந்த மர்மத்துக்கு முழுமையான விடை கிடைக்கக்கூடும்.  

    • இதுவரையில் 1500 நாய்களுக்கு உரிமம் வழங்கப்பட்டுள்ளது.
    • தினமும் 300-க்கும் மேற்பட்டவர்கள் இணைய தளம் வழியாக விண்ணப்பிக்க ஆர்வம் காட்டுவதால் சர்வர் செயல்பாடு வேகம் குறைந்தது.

    சென்னை:

    சென்னையில் செல்லப் பிராணிகளை வீடுகளில் வளர்க்க மாநகராட்சியில் உரிமம் பெற வேண்டும். ஆனால் யாரும் அதனை பொருட்படுத்துவது இல்லை. கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆயிரம் விளக்கு பூங்கா ஒன்றில் சிறுமியை நாய் கடித்து குதறியதில் அந்த சிறுமி தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவளுக்கு தலையில் அறுவை சிகிச்சை நடந்துள்ளது.

    சிறுமியை கடித்த அந்த நாய் வீட்டில் வளர்க்கப்பட்ட ஒருவரின் நாய் ஆகும். அதனால் அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த சம்பவத்தை தொடர்ந்து சென்னையில் நாய், பூனைகள் வளர்ப்பவர்கள் கட்டாயம் உரிமம் பெற வேண்டும். இல்லையென்றால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டது. அதனை தொடர்ந்து ஆன்லைன் வழியாக உரிமம் பெற்று வருகின்றனர்.

    இதுவரையில் 1500 நாய்களுக்கு உரிமம் வழங்கப்பட்டுள்ளது. தினமும் 300-க்கும் மேற்பட்டவர்கள் இணைய தளம் வழியாக விண்ணப்பிக்க ஆர்வம் காட்டுவதால் சர்வர் செயல்பாடு வேகம் குறைந்தது. இதனால் அதனை மேம்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது.

    இதுகுறித்து மாநகராட்சி கால்நடை மருத்துவர் கமால்பாஷா கூறியதாவது:-

    ஒரே நேரத்தில் விண்ணப்பிப்பதால் இணைய தளத்தின் வேகம் குறைகிறது. இதனால் விண்ணப்பிக்க முடியாமல் சிரமம் ஏற்பட்டது. இதனை தொடர்ந்து அதனை சரி செய்யும் பணி நடக்கிறது. இன்று மாலைக்குள் சரியாகி விடும்.

    1200 நாய்களுக்கு உரிமம் கொடுக்கப்பட்டுள்ளது. 2500 நாய்களுக்கு உரிமம் வழங்குவது நடைமுறையில் உள்ளது. மேலும் முறையான ஆவணங்கள் இல்லாததால் 3,500 விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளது என்றார்.

    • சென்னையில் நாய், பூனை உள்ளிட்ட செல்லப்பிராணிகளுக்கு உரிமம் பெறுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
    • கடந்த 10 மாதத்தில் வெறும் 272 பேர் மட்டுமே உரிமம் பெற விண்ணப்பித்திருந்தனர்.

    சென்னை:

    சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள மாநகராட்சி பூங்காவில் கடந்த 5-ந்தேதி இரவு விளையாடிக்கொண்டிருந்த சிறுமி சுரக்ஷாவை 2 ராட்விலர் இன வளர்ப்பு நாய்கள் கடித்து குதறியது. இதில், சிறுமி பலத்த காயமடைந்து ஆயிரம் விளக்கில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். தலையில் படுகாயம் அடைந்த அந்த சிறுமிக்கு சமீபத்தில் வெற்றிகரமாக அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இந்த சம்பவத்தை தொடர்ந்து, சூளைமேட்டில் நடைபயிற்சி சென்ற தம்பதியை நாய் கடித்து குதறியது.

    சென்னையில் தொடர்ச்சியாக நடைபெற்ற இந்த சம்பவங்கள் பொதுமக்களிடம் அச்சத்தை ஏற்படுத்தியது. எனவே, சென்னையில், நாய், பூனை உள்ளிட்ட செல்லப்பிராணிகளை வளர்ப்பவர்கள் கட்டாயம் உரிமம் பெற்றிருக்க வேண்டும் என சென்னை மாநகராட்சி அறிவித்தது. உரிமம் பெறாத உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை மாநகராட்சி தெரிவித்தது.

    மாநகராட்சியின் அறிவிப்பை தொடர்ந்து, செல்லப் பிராணிகளுக்கு உரிமம் பெறாத பலரும் ஆன்லைன் மூலம் உரிமம் பெற ஆர்வம் காட்டி வருகின்றனர். அந்த வகையில், கடந்த ஒரே வாரத்தில் சென்னையில் 6 ஆயிரத்து 713 பேர் செல்லப்பிராணிகளுக்கு உரிமம் பெற விண்ணப்பித்துள்ளனர்.

    இதுகுறித்து, சென்னை மாநகராட்சி கால்நடைத்துறை அலுவலர் ஒருவர் கூறியதாவது:-

    சென்னையில் நாய், பூனை உள்ளிட்ட செல்லப்பிராணிகளுக்கு உரிமம் பெறுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அதன்படி, கடந்த ஒரே வாரத்தில் செல்லப் பிராணிகளுக்கு உரிமம் பெற 6 ஆயிரத்து 713 பேர் விண்ணப்பித்துள்ளனர். இதில், உரிய ஆவணங்களை சமர்பிக்காத 3 ஆயிரத்து 337 பேரின் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது. 2 ஆயிரத்து 376 பேரின் விண்ணப்பங்கள் பரிசீலனையில் உள்ளது. கடந்த 5-ந்தேதியில் இருந்து இதுவரை ஆயிரம் பேருக்கு புதிதாக உரிமம் வழங்கியுள்ளோம். குறிப்பாக, கடந்த 3 நாட்களில் மட்டும் 2 ஆயிரத்து 300 பேர் விண்ணப்பித்துள்ளனர்.

    கடந்த 10 மாதத்தில் வெறும் 272 பேர் மட்டுமே உரிமம் பெற விண்ணப்பித்திருந்தனர். ஆனால், உரிமம் பெறுவது கட்டாயமாக்கப்பட்ட பின்னர் ஏராளமானோர் உரிமம் பெற விண்ணப்பித்து வருகின்றனர். இந்த மாத இறுதிக்குள் 10 ஆயிரம் பேர் வரையில் புதிய உரிமம் பெற விண்ணப்பிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்த மாதத்திற்குள் 20 ஆயிரம் பேருக்கு புதிதாக உரிமம் வழங்குவதை இலக்காக நிர்ணயம் செய்துள்ளோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • சென்னை மாநகராட்சியின் www.chennaicorporation.gov.in என்ற இணையதளத்துக்கு சென்று இணையதள சேவைகள் என்பதை 'க்ளிக்' செய்ய வேண்டும்
    • உரிமையாளர்கள் தங்களது சென்னை மாநகராட்சி இணையதள பக்கத்தில் உள்ள முகப்பு பக்கத்துக்கு சென்று இணைய வழியில் ரூ.50 பணம் செலுத்த வேண்டும்.

    சென்னை:

    சென்னை நுங்கம்பாக்கத்தில் 5 வயது சிறுமியை நாய் கடித்து குதறிய சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தைத் தொடர்ந்து வீட்டில் நாய் உள்ளிட்ட செல்லப்பிராணிகளை வளர்ப்பவர்கள் கட்டாயம் உரிமம் பெற வேண்டுமென சென்னை மாநகராட்சி அறிவுறுத்தியுள்ளது. இந்த அறிவிப்பை தொடர்ந்து செல்லப்பிராணிகளுக்கு உரிமம் பெற பலரும் ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்த நிலையில், இணைய வழியில் செல்லப்பிராணிகளுக்கு உரிமம் பெறுவது குறித்த வழிமுறைகளை சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு:-

    சென்னை மாநகராட்சியின் www.chennaicorporation.gov.in என்ற இணையதளத்துக்கு சென்று இணையதள சேவைகள் என்பதை 'க்ளிக்' செய்ய வேண்டும். அதில் உள்ள பல சேவைகளில் செல்லப் பிராணிகளின் உரிமம் என்பதனை தேர்வு செய்ய வேண்டும். 'நியூ யூசர்' என்பதனை தேர்வு செய்து அதில் தங்களது விவரங்களை உள்ளீடு செய்து 4 இலக்க எண்ணை உள்ளீடு செய்ய வேண்டும்.

    பின்னர், தங்களது செல்போன் எண்ணையும், 4 இலக்க எண்ணையும் பயன்படுத்தி உள்நுழைய வேண்டும். புதிய செல்லப்பிராணிகளின் உரிமம் என்பதை தேர்வு செய்யவும்.

    செல்லப் பிராணிகளின் அனைத்து விவரங்களையும் பூர்த்தி செய்து உரிமையாளர் புகைப்படம், முகவரி சான்றின் புகைப்படம், செல்லப் பிராணிகளின் புகைப்படம், ஒரு வருடத்துக்கு வெறிநாய்க்கடி நோய் தடுப்பூசி செலுத்தியதற்கான சான்றின் புகைப்படம் ஆகியவற்றை பதிவேற்றம் செய்து உறுதிமொழி அளித்து பின்னர் சமர்ப்பிக்க வேண்டும்.

    இந்த விவரங்களை சம்பந்தப்பட்ட மண்டல கால்நடை உதவி டாக்டர் சரிபார்த்து அங்கீகரித்த பின்னர் பதிவு செய்யப்பட்ட தொலைபேசி எண்ணுக்கு பணம் செலுத்துவதற்கான குறுஞ்செய்தி அனுப்பப்படும். அதன் பின்னர், உரிமையாளர்கள் தங்களது சென்னை மாநகராட்சி இணையதள பக்கத்தில் உள்ள முகப்பு பக்கத்துக்கு சென்று இணைய வழியில் ரூ.50 பணம் செலுத்த வேண்டும்.

    இதையடுத்து, செல்லப் பிராணிகளின் உரிமம் பதிவிறக்கம் செய்வதற்கான இணைப்பு ('லிங்க்') உருவாகும். அதைக்கொண்டு செல்லப்பிராணிகளின் உரிமத்தை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். எனவே, சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் செல்லப் பிராணிகளை வளர்ப்போர் ஆண்டு தோறும் தங்களது செல்லப்பிராணிகளின் உரிமத்தை இணையவழியில் பெற்றுக்கொள்ள வேண்டும். தவறும் பட்சத்தில் உரிமையாளர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • மாநகராட்சியில் விண்ணப்பித்து உரிய உரிமத்தை பெற வேண்டும்.
    • மூன்றே நாளில் 1000 பேர் விண்ணப்பித்துள்ளனர்.

    சென்னை:

    சென்னை நுங்கம்பாக்கத்தில் 2 வளர்ப்பு நாய்கள் சுரக்ஷா என்ற சிறுமியை கடித்து குதறிய சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    தலையின் மேல்பகுதி சதையுடன் பிய்ந்து தொங்கிய நிலையில் சிறுமிக்கு சென்னை அப்பல்லோ ஆஸ்பத்திரியில் ஆபரேஷன் செய்யப்பட உள்ளது. இதன் தொடர்ச்சியாக மேலும் 2 இடங்களிலும் நாய்கள் கடித்ததில் சிறுவர்கள் காயம் அடைந்துள்ளனர்.

    சென்னை மாநகரில் வெளிநாட்டு நாய்களை வீடுகளில் வளர்ப்பவர்கள் தற்போது அதனை தெரு நாய்களை போல வெளியில் சுற்றவிட்டு வருகிறார்கள்.

    இது பல்வேறு இடங்க ளில் பொதுமக்களுக்கு அச்சுறுத்தலாக இருந்த நிலையில் நுங்கம்பாக்கத்தில் சிறுமியை வளர்ப்பு நாய்கள் கடித்து குதறின.

     இதை தொடர்ந்து நாய்களை வீடுகளில் வளர்ப்பவர்கள் அதற்கான உரிய விதிமுறை களை முறையாக கடைபிடிக்க வேண்டும் என்று சென்னை மாநகராட்சி அதிகாரிகள் உத்தரவிட்டு உள்ளனர். இது தொடர்பாக அவர்கள் அதிரடி நடவ டிக்கைகளை மேற்கொள்ள தொடங்கி இருக்கிறார்கள்.

    சென்னையில் வீடுகளில் நாய்களை வளர்ப்பவர்கள் மாநகராட்சியில் விண்ணப்பித்து உரிய உரிமத்தை பெற வேண்டும். இல்லையென்றால் அவர்களுக்கு ரூ.1000 அபராதம் விதிக்க சட்டத்தில் இடம் உள்ளது.

    இதனை முழுமையாக கடைபிடிக்க மாநகராட்சி அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.

    இதுதொடர்பாக சென்னை மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறும் போது, சென்னையில் நாய்களை வளர்க்கும் அனைவரும் உரிய உரிமம் பெற வேண்டும். இல்லையென்றால் ரூ.1000 அபராதம் விதிக்கப்படும். நாய் வளர்ப்பவர்களில் பெரும்பாலானவர்கள் உரிய உரிமத்தை பெறுவதில்லை. கடந்த ஆண்டு 1500 பேர் மட்டுமே உரிமம் பெற்றுள்ளனர்.

    இந்த ஆண்டு இதுவரை 300 பேர் மட்டுமே உரிமம் கேட்டு முதலில் விண்ணப்பித்து இருந்தனர். நுங்கம்பாக்கத்தில் சிறுமியை நாய் கடித்த சம்பவத்துக்கு பிறகு மூன்றே நாட்களில் 1000 பேர் விண்ணப்பித்துள்ளனர் என்றார்.

    சென்னை மாநகராட்சியின் அதிரடி நடவடிக்கை யால் சிறுமியை நாய்கள் கடித்த சம்பவம் ஏற்படுத்திய பரபரப்பு காரணமாகவும் வீடுகளில் நாய்களை வளர்ப்போர் அச்சம் அடைந்துள்ளனர். வளர்ப்பு நாய்களை முறையாக பரா மரிக்கவும், விதிமுறைகளை முறையாக கடைபிடிக்கவும் தொடங்கி இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

    • விவசாயிகளுக்கு விற்பனை செய்யப்படும் விதைகளுக்கு நிறுவனங்கள் முறையான இருப்பு பதிவேடு பராமரிக்க வேண்டும்.
    • உரிமம் பெறாமல் விதைகள் மற்றும் காய்கறி நாற்றுகள் விற்பனை செய்வது சட்டப்படி குற்றமாகும்.

    முத்தூர்:

    முத்தூர் பகுதிகளில் உரிமம் பெறாமல் விதைகள் விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று துணை இயக்குனர் அறிவுறுத்தி உள்ளார்.

    இது குறித்து ஈரோடு மாவட்ட விதை ஆய்வு துணை இயக்குனர் பி.சுமதி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

    ஈரோடு, திருப்பூர், கரூர் மாவட்ட கீழ்பவானி பாசன விவசாயிகளின் வாழ்வாதாரமாக உள்ள பவானிசாகர் அணையில் இருந்து ஆண்டுதோறும் இரு பிரிவுகளாக ஜனவரி, ஆகஸ்டு மாதங்களில் தண்ணீர் திறந்து விடப்படுகிறது. இந்த தண்ணீரை கொண்டு எண்ணெய் வித்து மற்றும் நஞ்சை சம்பா நெல் பயிர் சாகுபடி செய்யப்படுகிறது.

    விவசாயிகளுக்கு விற்பனை செய்யப்படும் விதைகளுக்கு நிறுவனங்கள் முறையான இருப்பு பதிவேடு பராமரிக்க வேண்டும். கொள்முதல் செய்யப்பட்ட விதைகள் பட்டியல், விற்பனை பட்டியல், முளைப்பு திறன் சான்று, பதிவு சான்றிதழ் உட்பட பல்வேறு உரிய ஆவணங்களை முறையாக பராமரிக்க வேண்டும். மேலும் விதை விற்பனை நிலையங்கள் தங்கள் நிறுவனத்தின் முன்பு கட்டாயம் தகவல் பலகை வைத்து விவசாயிகள் படித்து தெரிந்து கொள்ளும் வகையில் அனைத்து விதைகளின் விலை பட்டியல் எழுதி வைக்க வேண்டும். விவசாயிகள் வாங்கும் விதை குவியல் காலாவதி எண், விற்பனை செய்த நாள், வாங்குபவர் மற்றும் விற்பனை செய்பவரின் கையொப்பம் போன்ற விவரங்கள் சரியாக உள்ளதா? என்று சரி பார்த்து வாங்க வேண்டும்.

    உரிமம் பெறாத தானிய மண்டிகளில் விவசாயிகள் விதைகளை வாங்க வேண்டாம். உரிமம் பெறாமல் விதைகள் மற்றும் காய்கறி நாற்றுகள் விற்பனை செய்வது சட்டப்படி குற்றமாகும். இவ்வாறு உரிமம் இல்லாமல் விதைகள் மற்றும் நாற்றுகள் விற்பனை செய்யும் நிறுவனத்தின் மீது ஈரோடு மாவட்ட விதை ஆய்வு துறை மூலம் விதைகள் சட்டம் 1966-ன் படி கடும் சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • பயன்படுத்திய எண்ணெயை ஆர்.யு.சி.ஓ. திட்டத்தின் கீழ் அங்கீகரிக்கப்பட்ட முகவரிடம் வழங்க வேண்டும்.
    • உணவுப்பொருட்களை ஈக்கள், பூச்சிகள் மற்றும் கிருமி தொற்று இல்லாத சுகாதாரமான சூழலில் வைத்து பொதுமக்களுக்கு விற்பனை செய்ய வேண்டும்.

     திருப்பூர்:

    திருப்பூர் மாவட்டத்தில் ஆயுதபூஜை, தீபாவளி, கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு இனிப்பு, கார வகை பலகாரங்கள் உற்பத்தியாளர்கள், விற்பனையாளர்களுக்கும், பொதுமக்களுக்கும் கலெக்டர் கிறிஸ்துராஜ் அறிவுரை வழங்கி கூறியிருப்பதாவது:-

    பண்டிகை காலங்களில் விதவிதமான இனிப்பு பலகாரங்கள், காரவகைகள் மற்றும் கேக் போன்ற பேக்கரி உணவு பொருட்களை மக்கள் விரும்பி வாங்குவதும், சொந்தபந்தங்களுக்கு அன்பளிப்பாக கொடுப்பதும் நடந்து வருகிறது. தீபாவளி பண்டிகை காரணமான இனிப்பு மற்றும் கார வகைகளுக்கு சீட்டு நடத்துபவர்கள் உள்பட அனைத்து தயாரிப்பாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் உணவு பாதுகாப்பு துறையில் பதிவு செய்து உரிமம் பெற்று பொதுமக்களுக்கு வினியோகம் செய்வது கட்டாயம்.

    இனிப்பு கார வகைகள் மற்றும் பேக்கரி பொருட்கள் தயாரிப்பவர்கள் தரமான மூலப்பொருட்களை கொண்டு சுகாதாரமான முறையில் தயாரித்து பாதுகாப்பான உணவு பொருட்களை மக்களுக்கு வழங்க வேண்டும். உணவு தயாரிப்பில் கலப்படமான பொருட்களையோ, அனுமதிக்கப்பட்ட அளவுக்கு அதிகமான நிறமிகளை உபயோகிக்கக்கூடாது. மேலும் ஒருமுறை பயன்படுத்திய சமையல் எண்ணெயை மறுபடியும் சூடுபடுத்தி உணவு தயாரிக்கக்கூடாது. பயன்படுத்திய எண்ணெயை ஆர்.யு.சி.ஓ. திட்டத்தின் கீழ் அங்கீகரிக்கப்பட்ட முகவரிடம் வழங்க வேண்டும்.

    பேக்கிங் செய்யப்பட்ட உணவுப்பொருட்களுக்கு விவரம் சீட்டு இடும்போது அதில் தயாரிப்பாளரின் முழுமுகவரி, உணவுப்பொருட்களின் பெயர், தயாரிப்பு, பேக்கிங் செய்யப்பட்ட தேதி, காலாவதியாகும் காலம், சைவ மற்றும் அசைவ குறியீடு ஆகியவற்றை அவசியம் குறிப்பிட வேண்டும்.

    உணவுப்பொருட்களை ஈக்கள், பூச்சிகள் மற்றும் கிருமி தொற்று இல்லாத சுகாதாரமான சூழலில் வைத்து பொதுமக்களுக்கு விற்பனை செய்ய வேண்டும். பண்டிகை காலத்தில் மட்டும் பலகாரங்கள் தயாரிப்பவர்கள் உள்பட அனைத்து தயாரிப்பாளர்கள் மற்றும் விற்பனையாளர்களும் உடனடியாக உரிமம் அல்லது பதிவு சான்று பெற்றுக்கொள்ள வேண்டும். பொதுமக்களும் பண்டிகை காலங்களில் பலகாரங்கள் வாங்கும்போது உணவு பாதுகாப்புத்துறையில் பதிவு பெற்ற நிறுவனங்களில் மட்டும் வாங்க வேண்டும். உணவு தயாரிப்பு விவர சீட்டு இருந்தால் மட்டுமே வாங்க வேண்டும். உணவு தொடர்பான புகார்களை 94440 42322 என்ற வாட்ஸ்அப் எண்ணில் புகார் தெரிவிக்கலாம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • நாளை (திங்கட்கிழமை) முதல் அடுத்த மாதம் 22-ந் தேதி மாலை 5 மணி வரை திருப்பூர் மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம்.
    • காவல்துறை மற்றும் தீயணைப்புத்துறையினர் திருப்தியடையும் பட்சத்தில் மட்டுமே தற்காலிக உரிமம் வழங்கப்படும்

    திருப்பூர்:

    தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திருப்பூர் மாநகர போலீஸ் எல்லைக்குட்பட்ட பகுதியில் தற்காலிக பட்டாசு கடை உரிமம் பெற விண்ணப்பங்கள் நாளை (திங்கட்கிழமை) முதல் அடுத்த மாதம் 22-ந் தேதி மாலை 5 மணி வரை திருப்பூர் மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம்.

    விண்ணப்ப படிவம் ஏ.இ.5-ல் ரூ.2 மதிப்புள்ள நீதிமன்ற வில்லை ஒட்டப்பட்டு இருக்க வேண்டும். உரிம கட்டணம் ரூ.1,200 ஆன்லைனில் செலுத்தியதற்கான சலான் இணைக்க வேண்டும். பட்டாசு இருப்பு வைத்து விற்கப்பட உள்ள இடத்தின் வரைபடம் 6 நகல்கள், வரைபடத்தில் சம்பந்தப்பட்ட இடத்தின் முகவரி முழுமையாக குறிப்பிட வேண்டும். அதில் மனுதாரர் தனது கையொப்பம் இட வேண்டும். பட்டாசு விற்பனை செய்யும் இடம் சொந்த கட்டிடமாக இருந்தால் 2023-24-ம் ஆண்டுக்குரிய சொத்துவரி ரசீது இணைக்க வேண்டும்.

    வாடகை கட்டிடமாக இருந்தால் 2023-24-ம் ஆண்டுக்குரிய சொத்துவரி ரசீது மற்றும் சாட்சிகள் முன்னிலையில் கட்டிட உரிமையாளருடன் ரூ.20 மதிப்புக்கு குறையாத முத்திரைத்தாளில் ஏற்படுத்திக்கொண்ட வாடகை ஒப்பந்தம் ஆவணம் இணைக்க வேண்டும். மாநகராட்சி, பொதுப்பணித்துறை மற்ற துறை கட்டிடமாக இருந்தால் அந்த துறை சார்ந்த அலுவலரின் மறுப்பின்மை கடிதம் இணைக்க வேண்டும்.

    பட்டாசு உரிமம் பெறுவதற்கான மாநகராட்சிக்கு கட்டிய கட்டிட உரிம கட்டணம் செலுத்திய ரசீது இணைக்க வேண்டும். இந்த ஆவணங்களுடன் அடுத்த மாதம் 22-ந்தேதி மாலை 5 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். சம்பந்தப்பட்ட இடங்களை பார்வையிட்டு விசாரணைக்கு பின் காவல்துறை மற்றும் தீயணைப்புத்துறையினர் திருப்தியடையும் பட்சத்தில் மட்டுமே தற்காலிக உரிமம் வழங்கப்படும். குறித்த காலக்கெடுவுக்குள் பெறாத விண்ணப்பங்கள் முன்னறிவிப்பு இன்றி தள்ளுபடி செய்யப்படும்.

    இந்த தகவலை திருப்பூர் மாநகர போலீஸ் கமிஷனர் பிரவீன்குமார் அபினபு தெரிவித்துள்ளார்.

    • சீனாவிலிருந்து விலகிட பல பன்னாட்டு நிறுவனங்கள் முயல்கின்றன
    • உற்பத்தியாளர்கள் விண்ணப்பிக்க இம்மாதம் 30 தான் கடைசி தேதி என்பது குறிப்பிடத்தக்கது

    இனி இந்தியாவில் டேப்லெட், மடிக்கணினி, மற்றும் அனைத்து வகை கணினிகளையும் இறக்குமதி செய்ய உரிமங்கள் (license) வேண்டும்.

    வெளிநாட்டு வர்த்தக இயக்குநரகத்தின் அறிவிப்பின்படி மடிக்கணி, டேப்லெட், ஆல்-இன்-ஒன் பெர்சனல் கம்ப்யூட்டர் மற்றும் அல்ட்ரா ஸ்மால் கம்ப்யூட்டர் மற்றும் சர்வர் ஆகியவற்றை இறக்குமதி செய்ய இனிமேல் உரிமம் வாங்க வேண்டும். இந்த உத்தரவு உடனடியாக அமலுக்கு வருகிறது. சில சிறப்பு சேவைகளை செயல்படுத்த அவசியமான ஒரு சில கணினிகளுக்கு மட்டும் விலக்கு அளிக்கப்படலாம்.

    பல ஆண்டுகளாக நடைமுறையில் உள்ள வெளிநாட்டு மின்னணு பொருட்களின் இறக்குமதியை குறைப்பதற்காக வடிவமைக்கப்பட்ட கொள்கைகளின் தொடர்ச்சியாக இந்த கட்டுப்பாடு வருகிறது.

    சீனாவிலிருந்து விலகி வேறு சில நாடுகளில் தங்கள் உயர்ரக மின்னணு பொருட்களை தயாரிக்க பல பன்னாட்டு நிறுவனங்கள் முயல்கின்றன. இந்த வாய்ப்பை இந்தியா பயன்படுத்தி கொள்ள வேண்டுமென்பதில் பிரதமர் நரேந்திர மோடி தீவிரமாக இருக்கிறார். அதன்படி அரசாங்கத்தின் பல துறைகளுக்கு கொள்கைகளை வகுக்க அறிவுறுத்தப்பட்டிருக்கிறது.

    அதன்படி, மடிக்கணினிகள், டேப்லெட்டுகள் மற்றும் பிற ஹார்டுவேர் தயாரிப்பாளர்களை இந்தியாவிற்கு ஈர்க்கும் வகையில் ரூ.170 பில்லியன் மதிப்பிலான ஊக்கத்தொகை திட்டத்தை அரசாங்கம் வெளியிட்டது.

    அரசாங்கத்தின் உற்பத்தியுடன் இணைக்கப்பட்ட ஊக்கத்தொகைகளை பெற விரும்பும் உற்பத்தியாளர்கள் விண்ணப்பிக்க இம்மாதம் 30 தான் கடைசி தேதி என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்தியாவின் வருடாந்திர மின்னணு இறக்குமதியில் மடிக்கணினிகள் மற்றும் டேப்லெட்டுகளின் இறக்குமதி $60 பில்லியனுக்கும் அதிகமாக உள்ளது.

    ஆப்பிள் நிறுவனம், அதன் ஐபேட் மற்றும் மேக்புக் கணினி வகைகளை இன்னமும் இந்தியாவில் தயாரிக்க தொடங்கவில்லை. இந்த ஊக்கத்தொகைகள் மற்றும் இறக்குமதி கட்டுப்பாடுகள் அந்நிறுவனத்தை இந்தியாவிலேயே உற்பத்தியை தொடங்க ஊக்குவிக்கலாம் என கருதப்படுகிறது.

    டெல் டெக்னாலஜிஸ், ஹெச்பி மற்றும் அஸஸ்டெக் போன்ற நிறுவனங்களும் இதனை பயன்படுத்தி தங்கள் கணிணி வகைகளை இங்கு உற்பத்தி செய்யும் நடவடிக்கைகளை எடுக்கலாம் என கணினி வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர்.

    இது போன்ற முயற்சிகளின் விளைவாக உள்நாட்டில் வேலைவாய்ப்பு அதிகரிக்கும் என பொருளாதார வல்லுனர்கள் தெரிவிக்கிறார்கள்.

    அரசாங்கத்தின் இந்த அறிவிப்புக்கு பிறகு, இன்று பங்கு வர்த்தகத்தில், பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்ட உள்ளூர் மின்னணு உற்பத்தி நிறுவனங்களின் பங்குகள் 2% - 5% வரை உயர்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

    • விதைகளை விற்பனை செய்யும் நிறுவனங்களின் உரிமையாளர்கள் தங்கள் விற்பனை நிலையத்தில் இருப்பு வைக்கப்பட்டு உள்ள விதைகளுக்கு முறையான பதிவேடு பராமரிக்க வேண்டும்.
    • விதை விற்பனை உரிமம் பெறாத தானிய மண்டிகளில் விவசாயிகள் விதைகளை வாங்க வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறது

    காங்கயம்

    முத்தூர் பகுதிகளில் விதை விற்பனை நிலையங்கள் உரிமம் பெறாமல் விதைகள், காய்கறி நாற்றுக்களை விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஈரோடு மாவட்ட விதை ஆய்வு துணை இயக்குனர் அறிவுறுத்தி உள்ளார். இது குறித்து ஈரோடு மாவட்ட விதை ஆய்வு துணை இயக்குனர் சுமதி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

    விதைகளை விற்பனை செய்யும் நிறுவனங்களின் உரிமையாளர்கள் தங்கள் விற்பனை நிலையத்தில் இருப்பு வைக்கப்பட்டு உள்ள விதைகளுக்கு முறையான பதிவேடு பராமரிக்க வேண்டும். கொள்முதல் செய்யப்பட்ட விதைகள் பட்டியல், விற்பனை பட்டியல், முளைப்பு திறன் சான்று, பதிவு சான்றிதழ் உட்பட பல்வேறு உரிய ஆவணங்கள் இருக்க வேண்டும். நிறுவனத்தின் முன்பு கட்டாயம் தகவல் பலகை வைத்து விவசாயிகள் படித்து தெரிந்து கொள்ளும் வகையில் விலை பட்டியல் விவரம் ஆகியவற்றை தெளிவாக எழுதி வைக்க வேண்டும்.

    மேலும் விவசாயிகள் விதைகளை விதை விற்பனை உரிமம் பெற்ற விற்பனை நிலையங்களில் வாங்கும் போது தவறாமல் அதற்கான விற்பனை பட்டியலை கேட்டு வாங்க வேண்டும். இதில் வாங்கும் விதை குவியல் காலாவதி எண், விற்பனை செய்த நாள், வாங்குபவர் மற்றும் விற்பனை செய்பவரின் கையொப்பம் போன்ற விவரங்கள் சரியாக உள்ளதா? என்று சரி பார்த்து வாங்க வேண்டும். இதுபோன்ற அரசு விதிமுறைகளை விதை விற்பனை நிலையங்கள் தவறாமல் கடைபிடிக்க வேண்டும்.

    விதை விற்பனை உரிமம் பெறாத தானிய மண்டிகளில் விவசாயிகள் விதைகளை வாங்க வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறது. ஆனால் ஒரு சில தானிய மண்டிகளில் திறந்த நிலையில் சாக்குகளில் வைத்து விற்பனை செய்யும் விதைகளை விவசாயிகள் கட்டாயம் வாங்கக்கூடாது. மேலும் இப்பகுதிகளில் உரிமம் பெறாமல் விதைகள் மற்றும் காய்கறி நாற்றுகள் விற்பனை செய்வது சட்டப்படி குற்றமாகும்.

    உரிமம் இல்லாமல் விதைகள் மற்றும் நாற்றுகள் விற்பனை செய்யும் நிறுவனத்தின் மீது கடும் சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • பாலக்கோடு பேருராட்சியில் கவுன்சிலர்கள் கூட்டம் பேரூராட்சி தலைவர் முரளி தலைமையில் நடைப்பெற்றது.
    • 100 சதவீதம் குப்பைகளை பிரித்து வழங்க மன்ற உறுப்பினர்களின் அன்றாட நடவடிக்கைகளில் தலையாய கடமையாக செய்ய வலியுறுத்தப்பட்டது.

    பாலக்கோடு,

    தருமபுரி மாவட்டம் பாலக்கோடு பேருராட்சியில் கவுன்சிலர்கள் கூட்டம் பேரூராட்சி தலைவர் முரளி தலைமையில் நடைப்பெற்றது.

    செயல் அலுவலர் டார்த்தி முன்னிலை வகித்து வரவேற்புரை ஆற்றினார்.

    கவுன்சிலர்கள் ஆலோசனை கூட்டத்தில் பாலக்கோடு பேரூராட்சியில் நடைப்பெற்று வரும் அம்ருத் 2.0 திட்டத்தின் கீழ் அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் இணைப்பு 24 மணி நேரத்திற்க்கும் குடிநீர் வழங்கும் திட்டம் குறித்து ஆலோசிக்கப்பட்டது.

    புதிதாக தமிழக அரசால் தொடங்கப்பட்ட செழிப்பு என்ற பெயரில் பசுமை உரம் தயாரிப்பிற்கு உரிமம் பெறபட்டது குறித்து பாராட்டு தெரிவிக்க ப்பட்டது.

    திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் மூலம் வீடுகள் தோறும் 100 சதவீதம் குப்பைகளை பிரித்து வழங்க மன்ற உறுப்பினர்களின் அன்றாட நடவடிக்கைகளில் தலையாய கடமையாக செய்ய வலியுறுத்தப்பட்டது.

    குடிநீர் குழாய் பதிக்கும் பணிகளை விரைவில் முடித்து தண்ணீர் விநியோகம் செய்யவும், மத்திய மாநில நிதியை பெற்று வளர்ச்சி பணிகள் செய்யவும், நீண்ட நாட்களாக தீர்க்கப்படாமல் உள்ள சாக்கடை கால்வாய் பிரச்சனை, தெருக்களில் பழுதாகி உள்ள மின் விளக்குகளை மாற்றுதல் உள்ளிட்ட அடிப்படை பிரச்சனைகளை உடனடியாக தீர்க்க ஆலோசிக்கப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    இந்நிகழ்ச்சியில் பேரூராட்சி கவுன்சிலர்கள், சுகாதார ஆய்வாளர் ரவீந்திரன், டெக்னிசியன், அலுவலர்கள், தூய்மை காவலர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    நிகழ்ச்சி முடிவில் துணைத் தலைவர் தஹசீனா இதாயத்துல்லா நன்றி தெரிவித்தார்.

    • மாற்றுத்திறனாளி ஆப்ரேட்டர்கள் 12 ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
    • விண்ணப்பிக்கும் மாற்றுத்திறனாளிக்கு உரிமம் வழங்கப்பட்டு பயிற்சி அளிக்கப்படும்.

    திருவாரூர்:

    திருவாரூர் மாவட்ட கலெக்டர் சாருஸ்ரீ வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிப்பதாவது:-

    தமிழ்நாடு அரசு கிராமந்தோறும் தனியார் இ சேவை மையம் அமைக்க உரிமம் வழங்கும் திட்டத்தின்கீழ் மாற்றுத்திறனாளிகளுக்கு முனனுரிமை வழங்கி அவர்களின் வாழ்வாதாரம் பெருக்கி கொள்ள உதவிடும் வகையில் மாற்றுத்திறனாளிகளுக்கு தனியார் இ-சேவை மையம் உரிமம் இயக்குவதற்கு வழங்கப்படவுள்ளது.

    அரசு விதிகளின்படி திருவாரூர் மாவட்டத்திலுள்ள மாற்றுத்திறனாளிகள் ; https://tnesevai.in.gov.in மற்றும் http://tnega.tn.gov.in. என்ற இணையதளங்களில் விண்ணப்பிக்குமாறு கோரப்படுகிறது.

    விண்ணப்பிக்க விரும்பும் மாற்றுத்திற னாளி ஆப்ரேட்டர்கள் 12 ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும், கணிணியில் நல்ல அறிவும் தமிழ் மற்றும் ஆங்கிலம் மொழியை படிக்கவும் எழுதவும் தெரிந்திருக்கவேண்டும்.

    இ-சேவை மைய கட்டிடம் 100 சதுர மீட்டருக்குள் இருக்கவும், மையத்தில் கணிணி, பிரிண்டர், ஸ்கேனர் மற்றும் பயோமெட்ரிக் உள்ளிட்ட கட்டமைப்பு வசதிகள் இருத்தல் அவசியமாகும்.

    குறைந்த பட்சம் 2 எம்பிபிஎஸ் அலைவரி சையுடன் தொடர்ச்சியான மற்றும் தடையற்ற இணைய இணைப்பை உறுதி செய்யவேண்டும், தமிழ்நாடு மின்ஆளுமை முகமையால் ஏற்றுக்கொள்ளப்பட்ட இடத்தில் மையம் அமைக்க வேண்டும்.

    விண்ணப்பிக்கும் மாற்றுத்திறனாளிகள் தமிழ்நாடு மின் ஆளுமை முகமை வருவாய் பகிர்வு முறையின் விதிகளின்படி இயக்குதல் வேண்டும் என தகுதிகளாக தெரிவிக்கப்ப டுகிறது.

    தேர்வு செய்யப்பட்டு உரிமம் வழங்கப்படும் மாற்று த்திறனாளி ஆபரேட்டர்க ளுக்கு ஐனு எண் வழங்கப்பட்டு பயிற்சி அளிக்கப்பட்டு மையம் அமைக்க உரிமம் வழங்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது.

    படித்த கணிணி பயிற்சி பெற்றுள்ள மாற்றுத்திறனாளிகள் தனியார் இ-சேவை மையம் வைத்து வருமானம் ஈட்டிக்கொள்ள https://tnesevai.in.gov.in மற்றும் http://tnega.tn.gov.in என்ற இணையதளங்களில் விண்ணப்பிக்கலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ×