search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பிரேமலதா"

    • பிறந்தநாளையொட்டி நடைபெற்ற ரத்த தான முகாமில் கட்சி தொண்டர்கள், நிர்வாகிகள் பங்கேற்று ரத்த தானம் செய்தனர்.
    • தொண்டர்கள், நிர்வாகிகளிடம் ரத்த வகையை கேட்டு தெரிந்து கொண்ட பிரேமலதா தனது பேச்சின் போது அதனை மறக்காமல் குறிப்பிட்டார்.

    தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்தின் 70-வது பிறந்தநாள் விழா கோயம்பேட்டில் உள்ள கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் விஜயகாந்தின் மனைவியும், தே.மு.தி.க. பொருளாளருமான பிரேமலதா பங்கேற்று பேசியபோது தொண்டர்களுக்கும் கேப்டனுக்கும் இடையேயான உறவு ரத்த உறவு என்றும், இதனை யாராலும் பிரிக்க முடியாது என்றும், பெருமை பொங்க குறிப்பிட்டார்.

    பிறந்தநாளையொட்டி நடைபெற்ற ரத்த தான முகாமில் கட்சி தொண்டர்கள், நிர்வாகிகள் பங்கேற்று ரத்த தானம் செய்தனர். அப்போது அவர்களிடம் ரத்த வகையை கேட்டு தெரிந்து கொண்ட பிரேமலதா தனது பேச்சின் போது அதனை மறக்காமல் குறிப்பிட்டார். இங்கு ரத்த தானம் செய்த தே.மு.தி.க. தொண்டர்கள் பலரது ரத்தவகை ஓ பாசிட்டிவாகவும், பி. பாசிட்டிவாகவும் இருக்கு. கேப்டனின் ரத்த வகை ஓ பாசிட்டிவ். எனது ரத்த வகை பி. பாசிட்டிவ் இப்படி நாம் ஒரே ரத்தத்தை சேர்ந்தவர்கள். இது ரத்தத்தில் கலந்த உறவு. யாராலும் பிரிக்க முடியாது என்று குறிப்பிட்டார்.

    பிரேமலதாவின் இந்த "ரத்த பாச பேச்சு" கட்சி தொண்டர்களுக்கு பூஸ்டாக மாறி இருப்பது என்னவோ உண்மைதான். அது கட்சிக்கு புது ரத்தத்தை பாய்ச்சுமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • தே.மு.தி.க. பொருளாளரும் விஜயகாந்தின் மனைவியுமான பிரேமலதா பிறந்தநாள் விழாவில் கலந்துகொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
    • தே.மு.தி.க.வின் வெற்றிக்காக தொண்டர்கள் அயராது பாடுபட வேண்டும்.

    சென்னை:

    தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்தின் 70-வது பிறந்தநாள் விழாவை இன்று தே.மு.தி.க.வினர் கொண்டாடி வருகின்றனர்.

    கோயம்பேட்டில் உள்ள தே.மு.தி.க. அலுவலகத்தில் விஜயகாந்த் பிறந்தநாள் விழாவையொட்டி நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

    ஆண்டுதோறும் வறுமை ஒழிப்பு தினமாக அவரது பிறந்தநாளை கட்சியினர் கொண்டாடி வருகிறார்கள். அந்த வகையில் இன்று பள்ளி மாணவ-மாணவிகளுக்கு நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட்டன.

    தே.மு.தி.க. பொருளாளரும் விஜயகாந்தின் மனைவியுமான பிரேமலதா பிறந்தநாள் விழாவில் கலந்துகொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். கட்சி அலுவலகத்தில் மருத்துவ முகாமும் நடைபெற்றது.

    இந்த முகாமில் பங்கேற்று பலர் பரிசோதனைகளை மேற்கொண்டனர். இவர்களுக்கு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

    எந்த நோக்கத்துக்காக தே.மு.தி.க. தொடங்கப்பட்டதோ அதனை அடைந்தே தீருவோம். தே.மு.தி.க.வின் வெற்றிக்காக தொண்டர்கள் அயராது பாடுபட வேண்டும். நல்லவர் லட்சியம் வெல்வது நிச்சயம். கேப்டன் நலமுடன் உள்ளார். வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம்.

    கேப்டனுக்கு ஏற்பட்டிருப்பது உடல் சோர்வுதான். 75-வது சுதந்திர தின நாள் அன்று தேசிய கொடியை ஏற்ற வேண்டும் என்று கேப்டனே விரும்பினார்.

    70-வது பிறந்த நாளான நாளை கேப்டனை நீங்களே சந்திக்கலாம். கேப்டன் பிறந்தநாளையொட்டி 70 வகையான நலத்திட்ட உதவிகளை தே.மு.தி.க.வினர் வழங்கி வருகிறார்கள். எதிர்காலத்தில் நாம் நிச்சயம் வெற்றி பெறுவோம்.

    இவ்வாறு பிரேமலதா பேசினார்.

    இந்த விழாவில் தே.மு.தி.க. துணை செயலாளர்கள் எல்.கே.சுதீஷ், பார்த்தசாரதி, மாவட்ட செயலாளர்கள் வக்கீல் வி.சி.ஆனந்தன், செந்தில், கிருஷ்ணமூர்த்தி, ஆர்.எஸ். பிரபாகரன் உள்பட பலர் கலந்து கொண்டனர். ஏராளமான தொண்டர்களும் திரண்டிருந்தனர்.

    • மாணவிகள் மரண செய்தி வருவது வருத்தம் அளிக்கிறது. முதலில் மாணவிகளின் மரணம் கொலையா? தற்கொலையா? என்பதனை கண்டுபிடிக்க வேண்டும்.
    • சி.பி.சி.ஐ.டி. விசாரணை செய்வதை விட ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் குழு அமைத்து விசாரணை நடத்த வேண்டும்.

    அவனியாபுரம்:

    தமிழக அரசின் மின்சார கட்டண உயர்வை கண்டித்து மதுரையில் இன்று தே.மு.தி.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. அதில் பங்கேற்பதற்காக சென்னையில் இருந்து மதுரை வந்த பிரேமலதா விஜயகாந்த் நிருபர்களிடம் கூறியதாவது:-

    அரசு என்பது மக்களுக்கானது தான் என்பதை உணர்ந்து வரி விதிக்க வேண்டும். தொடர்ந்து வரி உயர்வால் மக்கள் மிகவும் கஷ்டப்படுகிறார்கள். அதுவும் கொரோனா காலத்திற்கு பின்பு மக்கள் மிகவும் கஷ்டத்தில் உள்ளனர்.

    இந்த நிலையில் ஜி.எஸ்.டி. வரி உயர்வு அதுவும் பேக் செய்யப்பட்ட பொருள்களுக்கு ஜி.எஸ்.டி.வரி என்பது மக்களை கடுமையாக பாதிக்கும். ஒரு அரசு என்பது மக்களுக்கான அரசு என்பதை உணரவேண்டும்.

    மாணவி ஸ்ரீமதி இறந்து புதைத்த இடத்தின் ஈரம் கூட காயவில்லை. அதற்குள் தொடர்ந்து மாணவிகள் மரண செய்தி வருவது வருத்தம் அளிக்கிறது. முதலில் மாணவிகளின் மரணம் கொலையா? தற்கொலையா? என்பதனை கண்டுபிடிக்க வேண்டும். இதற்காக சி.பி.சி.ஐ.டி. விசாரணை செய்வதை விட ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் குழு அமைத்து விசாரணை நடத்த வேண்டும்.

    மாணவிகள் கொலை செய்யப்பட்டனரா? அல்லது தற்கொலை செய்தார்களா? அப்படி தற்கொலை செய்தால் அதற்கான காரணம் என்ன என்பதனை அறிய தமிழக அரசு உடனடியாக கவனம் செலுத்த வேண்டும்.

    காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருந்த போது பல ஊழல் வழக்குகளை நடத்தியது. அதேபோல் தற்போது பா.ஜ.க. ஊழல் வழக்குகளை நடத்தி வருகிறது. நாடு முழுவதும் ஆளும் கட்சி ஆண்ட கட்சிகளில் இருந்து ஊழல் வழக்குகளை நடத்துகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பேட்டியின் போது தே.மு.தி.க. நிர்வாகிகள் அழகர், கணபதி, பாலச்சந்தர், மணிகண்டன் உள்பட பலர் இருந்தனர்.

    • தமிழ்நாட்டுக்கும் பழங்குடியினருக்கும் நீண்ட தொடர்பு உண்டு.
    • அ.தி.மு.க. உட்கட்சி விவகாரம் குறித்த கேள்விக்கு கருத்து சொல்ல விருப்பமில்லை

    சென்னை:

    தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் நீண்ட காலமாகவே உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வருகிறார்.

    கடந்த சட்டமன்ற தேர்தலில் உடல்நிலை சரியில்லாத நிலையிலும் சில இடங்களில் விஜயகாந்தை பிரசாரத்தில் ஈடுபட வைத்தனர்.

    தொடர்ந்து டாக்டர்களின் பரிந்துரையின்பேரில் விஜயகாந்துக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டிருந்த விஜயகாந்த்துக்கு பல்வேறு பாதிப்புகளும் ஏற்பட்டுள்ளன. அந்த வகையில் அவருக்கு நரம்புகளில் பாதிப்பு ஏற்பட்டு நிற்க முடியாத நிலைக்கு சென்றுள்ளார். பேசும் திறனும் குறைந்துள்ளது. இந்த குறைபாடுகளை போக்குவதற்காக விஜயகாந்த்துக்கு தொடர் சிகிக்சை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    சென்னையில் நேற்று நடைபெற்ற ஜனாதிபதி வேட்பாளரான திரவுபதி முர்மு ஆதரவு நிகழ்ச்சியில் பங்கேற்ற பிரேமலதாவிடம், விஜயகாந்தின் உடல்நிலை குறித்து நிருபர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதில் அளித்து பிரேமலதா கூறியதாவது:-

    விஜயகாந்தின் உடல் நிலையில் சற்று தொய்வு ஏற்பட்டுள்ளது உண்மை தான். அவ்வப்போது ஆஸ்பத்திரிக்கு அழைத்துச்சென்று டாக்டர்களிடம் பரிசோதனை செய்து சிகிச்சை அளிக்க வேண்டியது உள்ளது. இருப்பினும் விரைவில் அவர் பழைய நிலைக்கு திருப்புவார் என்கிற நம்பிக்கை உள்ளது. அவரது உடல்நிலையை பெரிதுபடுத்த வேண்டாம். எங்கள் நிலைமையை புரிந்து கொள்ளுங்கள்.

    இவ்வாறு பிரேமலதா கூறியுள்ளார்.

    மேலும் அவர் கூறும்போது, ஒரு பெண் வேட்பாளராக திரவுபதி முர்முவுக்கு பெண் சமுதாயத்தின் சார்பாக வாழ்த்துகள். நல்ல வேட்பாளரை தேர்வு செய்த பிரதமருக்கு வாழ்த்துகள். அவர் வெற்றி பெறுவது உறுதி.

    தமிழ்நாட்டுக்கும் பழங்குடியினருக்கும் நீண்ட தொடர்பு உண்டு. தமிழ் கடவுள் முருகனின் மனைவி வள்ளியும் பழங்குடியினத்தை சேர்ந்தவர் தான்.

    வெற்றி பெற்று தமிழ்நாட்டில் உள்ள பழங்குடி மக்களுக்கும் ஏழை மக்களுக்கும் சேவை செய்வேன் என திரவுபதி என்னிடம் தெரிவித்தார் என்றார்.

    அதிமுக உட்கட்சி விவகாரம் குறித்த கேள்விக்கு கருத்து சொல்ல விருப்பமில்லை என்றும் இருவரில் யார் வெற்றி பெற போகிறார், என்ன முடிவு ஆக போகிறது என்பதை காண காத்திருக்கிறோம் என்றும் தெரிவித்தார்.

    • ஏ.குச்சிபாளையம் கிராமத்தில் கெடிலம் ஆற்றில் குளித்த 7 பேர் தண்ணீரில் மூழ்கி பலியானார்கள்.
    • அரசு சார்பில் அமைச்சர்கள் நேரில் சென்று ஆறுதல் தெரிவித்து நிவாரண உதவி வழங்கினர்.

    கடலூர்:

    கடலூர்அருகே ஏ. குச்சிபாளையம் கிராமத்தில் கெடிலம் ஆற்றில் குளித்த 7 பேர் தண்ணீரில் மூழ்கி பலியானார்கள். இந்த சம்பவம் இந்தியாவையே உலுக்கி உள்ளது. இதனை தொடர்ந்து ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்தனர்.

    மேலும் அரசு சார்பில் அமைச்சர்கள் நேரில் சென்று ஆறுதல் தெரிவித்து நிவாரண உதவி வழங்கினர். அ.தி.மு.க. சார்பில் ஆறுதல் தெரிவிக்கப்பட்டது.

    இதனை தொடர்ந்து தே.மு.தி.க. பொருளாளர் பிரேமலதா விஜயாகாந்த கடலூர் மாவட்டத்துக்கு வந்தார்.முதல் கட்டமாக அயன் குறிஞ்சிப்பாடிக்கு சென்று அவர் ஆறுதல் கூறினார். அதன்பினனர் ஏ.குச்சிபாளையத்துக்கு வந்தார். அங்கு ஆற்றில் மூழ்கி பலியானவர்களுக்கு குடும்பத்துக்கு பிரேமலதா ஆறுதல் தெரிவித்தார். அப்போது அவர்கள்பிரேமலதா கண்ணீருடன் தங்களது குடும்ப நிலவரங்களை தெரிவித்தனர். பின்னர் பிரேமலதா நிவாரண நிதி மற்றும் பொருட்களை வழங்கினார்.

    அவருடன் மாவட்ட செயலாளர் சிவகொழுந்து, அவைதலைவர் ராஜாராம், ஒன்றிய குழு துணை தலைவர் அய்யனார், நகர செயலாளர்கள் சரவணன், கஜேந்திரன் மற்றும் பலர் சென்றனர்.

    ×