search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மேற்கூரை"

    • சேதம் அடைந்த பள்ளிக்கட்டிடத்தின் மேற்கூரையை முழுவதுமாக சீரமைத்து தருவதற்கும் முன்வர வேண்டும்.
    • முறையாக கண்காணித்து இருந்தால் பணிகளும் தரமான முறையில் நடைபெற்று இருக்கும்.

     உடுமலை : 

    உடுமலையை அடுத்த கல்லாபுரம் ஊராட்சி கொம்பேகவுண்டன்புதூரில் தொடக்கப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் 56 குழந்தைகள் படித்து வருகின்றனர். சம்பவத்தன்று இரவு பள்ளி வளாகத்தில் உள்ள ஒரு கட்டிடத்தின் மேற்கூரை திடீரென இடிந்து விழுந்தது. இரவு நேரத்தில் சம்பவம் நடந்ததால் பெரும் அசம்பாவிதம் தடுக்கப்பட்டது.

    இதுவே பகல் நேரத்தில் நடந்திருந்தால் குழந்தைகள் பாதிக்கப்பட்டு இருப்பார்கள். இந்த சம்பவத்தால் பெற்றோர்கள் அதிர்ச்சி அடைந்தனர். மேலும் மாணவர்கள் அச்சமடைந்து உள்ளதால் பள்ளிக்கூடம் செல்வதற்கு தயக்கம் காட்டி வருகின்றனர்.

    இது குறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:- இந்த பள்ளியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு 2021-2022ம் ஆண்டிற்கான பள்ளி சீரமைப்பு திட்டத்தின் கீழ் ரூ. 1 லட்சத்து 85 ஆயிரம் செலவில் பழுதுபார்ப்பு, வர்ணம் பூசுதல் உள்ளிட்ட பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டது.

    பணிகள் தரமாக மேற்கொள்ளப்படாததே இந்த விபத்திற்கு முக்கிய காரணமாகும். எனவே இது குறித்து மாவட்ட நிர்வாகம் விசாரணை மேற்கொண்டு தரமான முறையில் புனரமைப்பு பணிகளை செய்யாத நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அத்துடன் சேதம் அடைந்த பள்ளிக்கட்டிடத்தின் மேற்கூரையை முழுவதுமாக சீரமைத்து தருவதற்கும் முன்வர வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

    புனரமைப்பு பணிகள் நடைபெறும் போது பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகளோ அல்லது பள்ளி நிர்வாகமோ முறையாக கண்காணித்து இருந்தால் பணிகளும் தரமான முறையில் நடைபெற்று இருக்கும். பொது மக்களின் வரிப்பணம் வீணாகி இருக்காது.

    அதிகாரிகளின் பொறுப்பற்ற தனத்தால் அரசுக்கு பொதுமக்கள் மத்தியில் அவப்பெயர் ஏற்பட்டு உள்ளது. எனவே பள்ளிக் கட்டிடத்தின் மேற்கூரை இடிந்த விவகாரத்தில் உரிய விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்பது பொதுமக்களின் வேண்டுகோளாக உள்ளது.

    • மழை நேரத்தில் தண்ணீர் கசியாமல் தவிர்க்க தார்ப்பாய் கொண்டு மேற்கூரைகளை முடியும், அருகில் கீற்று கொட்டகைகளை கட்டியும் பொதுமக்கள் அதில் வசித்து வருகின்றனர்.
    • பிரதம மந்திரியின் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் பதினோராயிரம் வீடுகள் இந்த ஆண்டு மயிலாடுதுறை மாவட்டத்தில் கட்டப்பட உள்ளன.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை மாவட்டத்தில் 25 வருடங்கள் பழமை வாய்ந்த சுமார் 30,000 தொகுப்பு வீடுகள் இடிந்து விடும் நிலையில் உள்ளது. பல்வேறு பகுதிகள் மிகவும் ஏழ்மையான மக்கள் வசிக்கும் காலணி பகுதிகளாக உள்ளன. மேற்கூரைகளில் சிமெண்ட் காரைகள் பெயர்ந்து கம்பிகள் வெளியே தெரிகின்றன.

    பலத்த மழை பெய்யும் போது இந்த வீடுகளில் மேற்கூரை காரைகள் பெயர்ந்து விழுந்து வசிக்கும் மக்கள் மீது காயங்கள் ஏற்படுகின்றன. மழை நேரத்தில் தண்ணீர் கசியாமல் தவிர்க்க தார்ப்பாய் கொண்டு மேற்கூரைகளை முடியும், அருகில் கீற்று கொட்டகைகளை கட்டியும் பொதுமக்கள் அதில் வசித்து வருகின்றனர்.

    கன மழை பெய்யும் பொழுது உயிரை கையில் பிடித்தபடி அச்சத்துடனே பொதுமக்கள் தொகுப்பு வீடுகளில் வசித்து வருகின்றனர். சில நேரங்களில் உறவினர் வீடுகள், கோயில்கள், பள்ளிகள் ஆகியவற்றில் தங்கி வருகின்றனர்.

    கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு மயிலாடுதுறை அருகே மாப்படுகை கிராமத்தில் கன்னித்தோப்பு தெரு என்ற இடத்தில் சுப்பையன் என்ற முதியவரது வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்தது.

    மழைச்சாரல் ஏற்பட்டதால் வீட்டுக்கு பின்புறம் உள்ள கொட்டகையில் அவர் படுத்து இருந்ததால் அதிர்ஷ்ட வசமாக
    உயிர்த்தப்பினார்.

    மாவட்ட நிர்வாகத்தின் கணக்கெடுப்பின்படி 30 ஆயிரம் வீடுகள் இவ்வாறு இடிந்த நிலையில் உள்ளதாக தெரிகிறது.பிரதம மந்திரியின் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் பதினோராயிரம் வீடுகள் இந்த ஆண்டு மயிலாடுதுறை மாவட்டத்தில் கட்டப்பட உள்ளன.

    உடனடியாக முன்னுரிமை அடிப்ப டையில் புதிய வீடுகள் கட்டும் முன்பு பழுதடைந்த பழைய வீடுகளை இடித்துவிட்டு அங்கு வசிப்பவர்களுக்கு புதிய வீடு கட்டி தரவேண்டும்.

    பெரும் விபத்து ஏற்படும் முன் தமிழக அரசு வீடுகளை கட்டித்தந்து பொதுமக்கள் உயிரை காப்பாற்றி தர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

    • கடந்த சில நாட்க ளுக்கு முன் மாணவர்கள் இடமாற்றம் செய்து வகுப்பு கள் நடைபெற்று வந்ததாக கூறப்படுகிறது.
    • பெற்றோர்களுக்கு எந்த தகவலும் அளிக்காமல் மாணவர்களை வீட்டுக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

    புதுச்சேரி:

    காரைக்காலை அருகே திரு.பட்டினம், கருட பாளையம் பகுதியில், அரசு தொடக்கப்பள்ளி 1-ம் வகுப்புமுதல் 5-ம் வகுப்பு வரை இயங்கி வருகிறது. இங்கு நூற்றுக்கு மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். இப்பள்ளியில் போதிய இடவசதி இல்லாத கார ணத்தால், அருகில் உள்ள பல ஆண்டுகள் பரா மரிப்பு இல்லாத அரசு நடுநிலைப்பள்ளியில், மூடிகிடந்த சில வகுப்பறை களில், கடந்த சில நாட்க ளுக்கு முன் மாணவர்கள் இடமாற்றம் செய்து வகுப்பு கள் நடைபெற்று வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், நேற்று முன்தினம் மாலை, அந்த வகுப்புகளில் மாணவர்கள் கல்வி பயின்றுவந்த நேரத்தில், வகுப்பறை கட்டிடத்தின் மேற்கூரை காரை சில இடங்களில் திடீரென இடிந்து விழுந்த தால், அதிர்ச்சி அடைந்த மாணவர்கள், பதறியவாறு வகுப்பறையை விட்டு வெளியே ஓடினர். மாண வர்கள் சுதாரிப்பால் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

    இது குறித்து, பள்ளி நிர்வாகம், முதன்மை கல்வி அலுவலகம் மற்றும் மாணவர்களின் பெற்றோர்களுக்கு எந்த தகவலும் அளிக்காமல் மாணவர்களை வீட்டுக்கு அனுப்பி வைத்துள்ளனர். இது குறித்து மாணவர்கள் பெற்றோர்களிடம் புகார் கூறியதை அடுத்து, நூற்றுக்கு மேற்பட்ட பெற்றோர்கள், மாணவர்களுடன் சம்பந்த ப்பட்ட பள்ளியை மூடி, முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து வந்த பள்ளி நிர்வாகத்திடம், பராமரிப்பு இல்லாத பள்ளிக்கு, யாருடைய அனு மதியும் பெறாமல் வகுப்பு கள் நடத்தியதையும், கட்டிட மேற்கூரை காரை இடிந்து விழுந்ததை பெற்றோ–ர்களுக்கு தெரிவிக்காமல் மூடி மறைத்ததற்கும் கடும் கண்டனம் தெரிவித்தனர். விபரம் அறிந்த காரைக்கால் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி ராஜ சேகரன், திரு.பட்டினம் போலீஸ் இன்ஸ்பெக்டர் லெனின்பாரதி மற்றும் அரசுத்துறை அதிகாரிகள் பெற்றோர்களுடன் பேசு வார்த்தை நடத்தினர். பேச்சு வார்த்தையின் முடிவில், தற்போதுள்ள பள்ளியில் போதிய இடவசதிகள் ஏற்படுத்தி தரும்வரை மாணவர்களை பள்ளிக்கு அனுப்ப மாட்டோம் என கூறி, மாணவர்களை பள்ளிக்கு அனுப்பாமல் வீட்டு அழைத்துசென்றனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    • பள்ளி கட்டிட மேற்கூரை இடிந்து விழுந்ததால் மாணவர்கள் அச்சம் அடைந்துள்ளனர்.
    • இதுகுறித்து பலமுறை மனு கொடுத்தும் எந்த அதிகாரிகளும் நடவடிக்கை எடுக்கவில்லை.

    சிவகங்கை 

    சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே உள்ள வேங்கைபட்டியில் அரசு நடுநிலைப்பள்ளி உள்ளது. இங்கு 1-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை 142 மாணவர்கள் படித்து வருகிறார்கள். இந்த பள்ளி வளாகத்தில் உள்ள 3 கட்டிங்களில் ஒன்று பழுதடைந்துள்ளது. அங்கு யாரும் உள்ளே செல்லாதபடி எச்ச ரிக்கை நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ளது.

    இதற்கிடையில் அருகே உள்ள மற்ற 2 கட்டிடங்களிலும் 8-ம் வகுப்பு மற்றும் மற்ற வகுப்பு மாணவர்களுக்கு பாடங்கள் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் காலண்டு விடுமுறைகள் முடிந்து பள்ளிகள் தொடங்கிய நிலையில் பள்ளியை சுத்தம் செய்ய தூய்மை பணியாளர் அந்த கட்டிட அறைகளை திறந்தபோது ஆசிரியர் இருக்கைக்கு மேலே இருந்த மேற்கூரை இடிந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    இது குறித்து தகவல் அறிந்த மாவட்ட ஊரக வளர்ச்சித்துறை செயற்பொறியாளர் சிவராணி, வட்டார வளர்ச்சி அலுவலர் பாலசுப்பிரமணியன், கிராம ஊராட்சி வட்டார வளர்ச்சி அலுவலர் லட்சுமண ராஜூ ஆகி யோர் நேரில் வந்து ஆய்வு மேற்கொண்டனர்.

    இதுகுறித்து அந்தப்ப குதியைச் சேர்ந்த பொதுமக்கள் கூறுகையில், பள்ளி கட்டிடம் கட்டி சில ஆண்டுகள் தான் ஆகிறது. ஆனால் அதற்குள் மேற்கூரை இடிந்து விழுந்துள்ளது. தரமற்ற முறையில் கட்டிடங்களை கட்டியுள்ளனர். இதுகுறித்து பலமுறை மனு கொடுத்தும் எந்த அதிகாரிகளும் நடவடிக்கை எடுக்கவில்லை. தரமில்லாமல் பள்ளி கட்டிடம், அங்கன்வாடி கட்டிடம் போன்ற அனைத்தும் கட்டிடங்களும் உள்ளது.

    இது போன்ற சம்பவங்கள் நடைபெறுவதை பார்க்கும் போது பள்ளிகளுக்கு குழந்தைகளை அனுப்ப அச்சமாக உள்ளது. எனவே வரும் காலங்களில் தரமான கட்டிடங்களை கட்ட தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் என தெரிவித்தனர். பள்ளி கட்டிடத்தின் நிலைமை மோசமாக இருப்பதால் 1 முதல் 5-ம் வகுப்பு படிக்கும் மாணவ-மாணவிகள் பள்ளிக்கு வர தயக்கம் காட்டி வருகின்றனர்.

    • சாமிக்கவுண்டம்பாளையம் அரசு துவக்கப் பள்ளியில் சுமார் 60க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர்.
    • சுவர்களில் செடிகள் முளைத்தும், கட்டடத்தில் பல இடங்களில் விரிசல்கள் ஏற்பட்டுள்ளது.

    பல்லடம் :

    பல்லடம் வட்டாரம் செம்மிபாளையம் ஊராட்சி, சாமிக்கவுண்டம்பாளையம் அரசு துவக்கப் பள்ளியில் சுமார் 60க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர்.

    சுமார் 40 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட இந்த பள்ளி கட்டடம் சுவர்களில் செடிகள் முளைத்தும், கட்டடத்தில் பல இடங்களில் விரிசல்கள் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் கடந்த புதன்கிழமை பள்ளி நடைபெற்றுக்கொண்டிருக்கும்போது திடீரென பள்ளி கட்டட மேற்கூரையில் இருந்து சிமென்ட் பூச்சுகள் பெயர்ந்து ஆசிரியரின் மேஜை மீது விழுந்தது.இதில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை.

    இது குறித்து அதிகாரிகள் கூறுகையில், மேற்கூரை சிமெண்ட் பூச்சு சிறிது விழுந்துள்ளது. அப்போது மாணவர்கள் யாரும் வகுப்பறையில் இல்லை. ஆகவே யாருக்கும் பாதிப்பு எதுவும் ஏற்படவில்லை.பழுதான கட்டடத்தின் பட்டியலில் இந்த கட்டடம் உள்ளது. 6 மாதத்துக்குள் புதிய கட்டடம் கட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதுவரை மாணவர்களை தற்காலிகமாக அருகிலுள்ள உயர்நிலை பள்ளி கட்டடத்துக்கு மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றனர். இந்த சம்பவத்தால் பெற்றோர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

    • இடைவிடாது விடிய விடிய வெளுத்து வாங்கிய மழையால் சாலையில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது.
    • மரம் சாலையின் குறுக்கே விழுந்ததுடன் எதிரே இருந்த கட்டிடத்தின் மீது விழுந்தது.

    தஞ்சாவூர்:

    தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பல்வேறு மாவட்டங்களில் விட்டுவிட்டு மழை பெய்து வருகிறது.

    தஞ்சை மாவட்டத்திலும் மாலை, இரவு நேரங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது.

    நேற்று பகலில் வெயில் சுட்டெரித்தது.‌

    இரவு 8 மணி வரை வெப்பத்தின் தாக்கம் இருந்தது. பின்னர் குளிர்ந்த காற்று வீசத் தொடங்கியது.

    பின்னர் 10 மணி அளவில் சாரல் பெய்தது. நேரம் செல்ல செல்ல மழையின் அளவு அதிகரி த்தது. கன மழையாக கொட்டி பெய்ய தொடங்கி யது.

    தொடர்ந்து 2 மணி நேரத்துக்கு மேலாக இடைவிடாது மழை பெய்தது.

    அதனைத் தொடர்ந்து இடி - மின்னல் அடித்து கொண்டே இருந்தது.

    பின்னர் சில மணி நேரம் மழை தெறித்தது. மீண்டும் அதிகாலையில் லேசான மழை பெய்தது.

    இடைவிடாது விடிய விடிய வெளுத்து வாங்கிய மழையால் சாலையில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது.

    கனமழை காரணமாக எம்.கே. மூப்பனார் சாலையில் உள்ள தனியார் பள்ளி அருகே பழமை வாய்ந்த மரம் வேரோடு சாய்ந்து விழுந்தது.

    இரவு நேரம் என்ப தால் அந்த வழியாக யாரும் செல்லாததால் அதிர்ஷ்டவசமாக அச ம்பாவித சம்பவம் ஏதும் நடைபெறவில்லை.

    இருந்தாலும் மரம் சாலையின் குறுக்கே விழுந்ததுடன் எதிரே இருந்த கட்டிடத்தின் மீது விழுந்தது.

    அதில் பெட்டிகடையின் முன்பு தகரத்தால் போடப்பட்ட மேற்கூரை சேதம டைந்தது.

    இது குறித்து தகவல் அறிந்த தீயணைப்பு துறை வீரர்கள் விரைந்து வந்து அந்த மரத்தை வெட்டி அகற்றினர்.

    இதேபோல் பூதலூர் ,வல்லம், திருவையாறு ,மதுக்கூர், ஒரத்தநாடு உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு இடங்களிலும் கன மழை பெய்தது.

    இன்று காலை முதல் வெயில் சுட்டெரித்து வருகிறது.

    இருந்தாலும் மாலை அல்லது இரவு நேரங்களில் மழை பெய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

    தஞ்சை மாவட்டத்தில் இன்று காலை 8 மணியுடன் முடிவடைந்த மழையின் அளவு வருமாறு (மி.மீ) :-

    தஞ்சாவூர் -31, வல்லம்-31, குருங்குளம்-21, மதுக்கூர்-17.20, நெய்வாசல் தென்பாதி-12.80, பூதலூர்-8.40.

    • மேற்கூரை பெயர்ந்து விழுந்து மருத்துவ கருவிகள் சேதம் அடைந்தது.
    • அந்த வார்டின் வெளிப்புற ஜன்னலின் மேற்கூரை பூச்சும் பெயர்ந்து விழுந்தது.

    மதுரை

    மதுரை கோரிப்பாளையத்தில் அரசு  மருத்துவமனை இயங்கி வருகிறது. இங்குள்ள கட்டிடங்கள் பழமையானவை ஆகும்.

    மதுரையில் சில நாட்களாக மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக ஆஸ்பத்திரி வளாகத்தில் உள்ள சில கட்டிடங்களில் கீறல் விழுந்துள்ளது. அவற்றை பராமரிக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்தனர்.

    இருந்தபோதிலும் அந்த கட்டிடங்கள் புனரமைக்கப்படவில்லை. மதுரை அரசு ஆஸ்பத்திரி 3-வது தளத்தில் உள்ள 90-வது வார்டு பகுதியில் புற்றுநோய் அறுவை சிகிச்சை பிரிவு இயங்கி வருகிறது. அங்கு மேற்கூரை பெயர்ந்து விழுந்தது. இதில் லேப்ரோஸ்கோப் உள்ளிட்ட மருத்துவ கருவிகள் சேதம் அடைந்தன.

    மேலும் அந்த வார்டின் வெளிப்புற ஜன்னலின் மேற்கூரை பூச்சும் பெயர்ந்து விழுந்தது. இதில் அங்கு பொருத்தப்பட்டிருந்த குடிநீர் பைப் உடைந்து தண்ணீர் வெளியேறியது. இதே போல குழந்தைகள் வார்டிலும் மேற்கூரை பூச்சுகள் பெயர்ந்து விழும் நிலையில் உள்ளன.

    இந்த விபத்துக்களால் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை. இது குறித்து ஆஸ்பத்திரி நிர்வாகத்திடம் கேட்டபோது, இட நெருக்கடி காரணமாக வார்டுகளை மாற்றி அமைப்பதில் சிரமங்கள் உள்ளது. புனரமைப்பு செய்வதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறோம்என்று தெரிவித்தனர்.

    தென் தமிழகத்தில் எளிய மக்களின் மருத்துவ தேவையை பூர்த்தி செய்யும் மதுரை அரசு மருத்துவமனையின் கட்டிடங்களை முறையாக பராமரித்து, நோயாளிகள் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

    • பள்ளி ஆசிரியர்கள் தங்களது சொந்த செலவில் பள்ளி வளாகத்தில் இரும்பிலான செட் அமைத்து அதில் மாணவ, மாணவிகளுக்கு பாடம் நடத்தி வருகின்றனர்.
    • இந்தப் பள்ளியில் படிக்கும் மாணவ, மாணவிகளின் பெற்றோர்கள் பலர் தினக் கூலி வேலை செய்து வருகின்றனர்.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறையை அடுத்த தலைஞாயிறு ஊராட்சிக்கு உட்பட்ட மன்னிப்பள்ளம் கிராமத்தில் அரசு ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி உள்ளது. இந்தப் பள்ளியில் 100-க்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் பயின்று வந்தனர்.

    இந்தப் பள்ளி கட்டப்பட்டு 50 வருடங்களுக்கு மேலாகி விட்டது. இதனை சரிவர பராமரிக்காததால் அதன் மேற்கூரை பள்ளியில் மாணவ- மாணவிகள் வகுப்பில் இருக்கும்போதே இடிந்து விழுந்து வருவது வாடிக்கையாகி விட்டது. இதனால் மாணவ, மாணவிகள் அச்சமடைந்து தங்களது பெற்றோரிடம் சென்று கூறியதால் தங்களது குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புவதை நிறுத்தி விட்டனர்.

    இதையறிந்த பள்ளி ஆசிரியர்கள் தங்களது சொந்த செலவில் பள்ளி வளாகத்தில் இரும்பிலான செட் அமைத்து அதில் மாணவ, மாணவிகளுக்கு பாடம் நடத்தி வருகின்றனர். பள்ளி மேற்கூரை இடிந்து விழுந்து வருவதால் சில பெற்றோர் தங்கள் குழந்தைகளை அருகிலுள்ள தனியார் மற்றும் அரசு பள்ளிகளில் சேர்த்து விட்டனர்.

    இந்தப் பள்ளியில் படிக்கும் மாணவ, மாணவிகளின் பெற்றோர்கள் பலர் தினக் கூலி வேலை செய்து வருகின்றனர்.

    ஏழை குடும்பத்தை சேர்ந்தவர்கள் தங்களது வருமானத்திற்கு அதிகமாக செலவு செய்து பிள்ளைகளை படிக்க வைக்க முடியவில்லை. அவர்களால் நீண்ட தூரம் சென்று குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புவது மிகவும் சிரமமாக உள்ளதாகவும் வேதனை தெரிவித்தனர். இந்த பள்ளி கட்டிடத்தை புதியதாக கட்டித்தர சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பலமுறை கோரிக்கை விடுத்தும், கிராம மக்கள் சாலை மறியலிலும் செய்துள்ளனர்.

    ஆனால் எந்த நடவடிக்கையும் இல்லை. இதுகுறித்து மாவட்ட கலெக்டர் பள்ளியை ஆய்வு செய்து புதிய கட்டிடம் நடவடிக்கை எடுக்க வேண்டும் மாணவ-மாணவிகளின் பெற்றோர் மற்றும் கிராமக்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் இப்பள்ளியில் நூலகம் அமைத்து தரவும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

    • மேற்கூரை, ஸ்லாப் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் காரைகள் பெயர்ந்து விழும் அபாய நிலையில் உள்ளது.
    • குழந்தைகளின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி உள்ள நிலையில் உடனடியாக நடவடிக்கை எடுத்து கட்டிடத்தை சீரமைக்க வேண்டும்.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம் வெளி ப்பாளையம் அருகே காடம்பாடியில் நகராட்சி நடுநிலைப்பள்ளி உள்ளது. இங்குள்ள குழந்தைகள் அங்கன்வாடி கட்டிடம் கடந்த 2010-11 ஆம் ஆண்டு எம்.எல்.ஏ. மேம்பாட்டு நிதியில் கட்டப்பட்டது. ஒப்பந்தக்காரர் மூலம் கட்டப்பட்ட இக்கட்டிடம் தரமாக கட்டப்பட்டதா? என்ற கேள்வி எழுந்து உள்ள நிலையில் இக்கட்டிடம் மேற்கூரை மற்றும் ஸ்லாப் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் காரைகள் பெயர்ந்து விழும் அபாய நிலையில் உள்ளது.

    இங்கு 5 வயதுக்குட்பட்ட 37 குழந்தைகள்படித்து வருகின்றனர். குழந்தை களின் பாதுகாப்பு கேள்வி க்குறியாகி உள்ள நிலையில் மாவட்ட நிர்வாகம் அரசும் உடனடி யாக நடவடிக்கை எடுத்து விபத்து நடக்கும் முன்பாக கட்டிடத்தை சீரமைக்க வேண்டும் என பெற்றோர் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

    • ரவி காம்ப்ளக்சில் மளிகை கடை, செல்போன் கடை, சலூன் மற்றும் சிப்ஸ் தயாரிக்கும் கடைகள் உள்ளது.
    • ஒரே பகுதியில் நான்கு கடைகளில் நடைபெற்றுள்ள திருட்டு சம்பவத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    பல்லடம் :

    பல்லடம் அருகே உள்ள பொங்கலூர் அவினாசிபாளையம் பகுதியில் பழனிசாமி என்பவருக்கு சொந்தமான ரவி காம்ப்ளக்ஸ் உள்ளது. இந்த காம்ப்ளக்சில் மளிகை கடை, செல்போன் கடை, சலூன் மற்றும் சிப்ஸ் தயாரிக்கும் கடைகள் உள்ளது.

    நேற்று முன்தினம் இரவு இந்த கடைகளின் மேற்பகுதியில் உள்ள சிமெண்ட் சீட்டுகளை உடைத்து உள்ளே இறங்கிய மர்ம நபர்கள் செல்போன் கடையில் இருந்து ரூ. 1 லட்சம் ரொக்கம், மளிகை கடையில் இருந்து ரூ. 4 ஆயிரம் மதிப்புள்ள சிகரெட் மற்றும் சோப்பு ஆகியவற்றையும், சிப்ஸ் தயாரிக்கும் கடையிலிருந்து ரூ. 1500 ஆகியவற்றை திருடி சென்றனர். இது குறித்து செல்போன் கடை உரிமையாளர் பாலசுப்பிரமணி(33) கொடுத்த புகாரியின் பேரில் அவினாசிபாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து மேற்கொண்டு விசாரணை செய்து வருகிறார்கள்.

    ஒரே பகுதியில் தொடர்ந்து நான்கு கடைகளில் நடைபெற்றுள்ள திருட்டு சம்பவத்தால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    • வீட்டின் உள்ளே இருவரும் தூங்கிக் கொண்டிருந்த போது அதிகாலையில் திடீரென மேற்கூரை இடிந்து விழுந்தது.
    • அன்பழகிக்கு கையில் பலத்த காயம் மற்றும் அவரது மகள் விஜயகுமாரிக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.

    திருத்துறைப்பூண்டி:

    திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே வேளூர் கிராமத்தில் மேலத் தெருவில் வசித்து வருபவர் அன்பழகி(வயது48). இவர் கணவனை இழந்து தனது மாற்றுத்திறனாளி பெண் விஜயகுமாரியுடன் வசித்து வருகிறார் .இவர்கள் 1990-ம் ஆண்டு கட்டப்பட்ட இந்திரா நினைவு குடியிருப்பு காலனியில் உள்ள தொகுப்பு வீட்டில் வசித்து வருகின்றனர். இந்நிலையில் வீட்டின் உள்ளே இருவரும் இரவு தூங்கிக் கொண்டிருந்தனர். அப்போது அதிகாலையில் திடீரென வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்துள்ளது.

    இதில் அன்பழகிக்கு கையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதேபோல் மகள் விஜயகுமாரிக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.இது குறித்து அறிந்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக அங்கு திரண்டு தாய், மகள் இருவரையும் மீட்டு உடனடியாக திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி த்தனர்.

    மேலும் இந்த விபத்து குறித்து தகவலறிந்த திருத்துறைப்பூண்டி போலீசார், வருவாய் துறையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதில் வீடு சேதமடைந்த நிலையில் மேற்கூரையின் காரை பெயர்ந்து விழுந்தது தெரியவந்தது.இந்திரா நினைவு குடியிருப்பு காலனியில் உள்ள தொகுப்பு வீடுகள் சேதமடைந்து உள்ளதாக அங்கு வசிப்பவர்கள் கூறினர். எனவே அரசு சேதமடைந்த வீடுகளை சீரமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • காவிரி டெல்டா பகுதிக்கு தேவையானவிதைநெல் உற்பத்தி திருப்பூரில் நடக்கிறது.
    • 20 இடங்களில், நெல் கொள்முதல் மையம் திறக்கப்பட்டது.

    குடிமங்கலம்,

    திருப்பூர் மாவட்டத்தில் நுகர்பொருள் வாணிப கழகம் மூலமாக நேரடி நெல் கொள்முதல் மையங்கள் திறக்கப்பட்டன. முதல் கட்டமாக பிப்ரவரி மாதம் முத்தூர், வெள்ளகோவில், குட்டப்பாளையம், கீரனூர், குடிமங்கலம், மடத்துக்குளம், ருத்ராபாளையம் பகுதிகளில் திறக்கப்பட்டன.அதற்கு பிறகு அலங்கியம் உட்பட தாராபுரம் தாலுகாவில் கொள்முதல் மையங்கள் திறக்கப்பட்டன.

    காவிரி டெல்டா பகுதிக்கு தேவையானவிதைநெல் உற்பத்தி திருப்பூரில் நடக்கிறது. விதை நிறுவனங்கள், விவசாயிகளிடம் இருந்து நெல்லை நேரடியாக கொள்முதல் செய்கின்றன. மற்ற நெல்லை நுகர்வோர் வாணிப கழகம் கொள்முதல் செய்கிறது.இந்தாண்டு சன்ன ரகம் நெல் கிலோ 21.65 ரூபாய், மோட்டா ரகம் 21.15 ரூபாய் என விலை நிர்ணயிக்கப்பட்டது .ஆன்லைன்பதிவில் சுணக்கம் ஏற்பட்டதால்விவசாயிகள்தனியார் வியாபாரிகளுக்கு கிலோ 13 முதல் 15 ரூபாய்க்கு நெல்லை வழங்கினர். ஆன்லைன் பதிவில் சுணக்கம் ஏற்பட்டதால் சில நாட்கள் காத்திருந்த பிறகே நெல் மூட்டைகளை வழங்க முடிந்தது.

    திருப்பூர் மாவட்டத்தில் நேரடி நெல் கொள்முதல் மையங்களில் போதிய மேற்கூரை வசதியில்லை. மாறாக திறந்தவெளி களத்தில் மூட்டைகள் அடுக்கப்பட்டிருந்தன. பாலிதீன் சாக்குகளால் மூடி வைத்து பாதுகாத்தனர்.அப்படியிருந்தும் எதிர்பாராத திடீர் மழையால் நெல்மூட்டைகள் நனைந்து சேதமாகின. எனவே நிரந்தரமான மேற்கூரையுடன் கூடிய கிடங்குகளை அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

    இது குறித்து நுகர்பொருள் வாணிப கழக மண்டல மேலாளர் குணசேகரனிடம் கேட்டபோது, திருப்பூர் மாவட்டத்தில் விவசாயிகள் வசதிக்கு தகுந்தபடி 20 இடங்களில், நெல் கொள்முதல் மையம் திறக்கப்பட்டது. இறுதியாக ருத்ராபாளையத்தில் இன்னும் கொள்முதல் நடந்து வருகிறது.இதுவரை21 ஆயிரத்து 102 மெட்ரிக் டன் அளவுக்கு நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. போதிய பாலிதீன் சாக்குகளால் மூடப்பட்டிருந்ததால் மழையால் பெரிய சேதம் எதுவும் ஏற்படவில்லை என்றார்.

    உழவர் உழைப்பாளர் கட்சியின் மாவட்ட தலைவர் ஈஸ்வரமூர்த்தி கூறுகையில், திருப்பூர் மாவட்டத்தில், எதிர்பார்த்த அளவை காட்டிலும் நெல் கொள்முதல் செய்யப்படுகிறது. ஆன்லைன் பதிவால் காலதாமதம் ஏற்பட்டது. நெல் கொள்முதல் மையங்களில் மழையால் நெல் மூட்டைகள் சேதமாகின்றன. வேலை உறுதி திட்டம், தேசிய உணவு பாதுகாப்பு திட்டங்களில் கூடுதலாகநெல் மூட்டைகள் அடுக்கும் மேற்கூரையுடன் கூடிய கிடங்குகள் அமைக்கலாம். கிடங்குகள் விரைவில் நிரம்பிவிட்டால் வெட்ட வெளியில் மூட்டைகள் அடுக்கப்படுகின்றன. இந்நிலை மாற வேண்டும். ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்களில் நெல் இருப்பு மையங்களை படிப்படியாக அமைத்து வைக்க வேண்டும்என்றார்.

    ×