search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மீனவர்"

    • ஒருவர் படுகாயம்
    • கடற்கொள்ளையர்கள் அட்டூழியம்

    நாகர்கோவில்:

    கன்னியாகுமரி மாவட்டம் ராஜாக்கமங்கலம் துறையைச் சேர்ந்தவர் ஜெஸ்லின். இவரது மகன் ராஜேஷ் குமார் (வயது 37).

    இவர், சின்னமுட்டம் கிராமத்தைச் சேர்ந்த பிரிட்டோ, செபாஸ்டின், பெரியக்காடு மீனவ கிராமத்தைச் ேசர்ந்த கபிலன், நெல்லை மாவட்டம் பெருமணல் பகுதியை சேர்ந்த துரைராஜ் ஆகியோருடன் சவுதி அரேபியா நாட்டில் இருந்து விசைப்படகில் சென்று மீன்பிடி தொழில் செய்து வந்தார்.

    கத்திப் என்ற பகுதியில் இருந்து சவுதி அரேபியா நாட்டின் காலம் ஹஸ்ஸான் என்ற அரேபிய முதலா ளிக்கு சொந்தமான "ரஸ்மா அல் அவள்" என்ற விசைப்படகில் அவர்கள் ஆழ்கடலுக்கு மீன் பிடிக்க சென்றார்கள். கடந்த 22-ந் தேதி 5 மீனவர்களும் ஆழ் கடலிலே தங்கி மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு ஈரான் கடல் கொள்ளையர்கள் திடீரென வந்தனர்.

    அவர்கள் ஆழ்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த இந்திய மீனவர்கள் மீது சர மாரியாக துப்பாக்கியால் சுட்டு உள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்த மீன வர்கள் படகுகளுக்குள் பதுங்கினார்கள்.

    அப்போது கடல் கொள்ளையர்கள், மீனவர்களின் படகில் இருந்த மீன் பிடிப்பதற்கு பயன்படுத்தக்கூடிய ஜி.பி.எஸ். எக்கோ சவுன்டர், வயர்லெஸ் மற்றும் மீனவர்களின் செல்போ ன்கள், அவர்கள் பிடித்து வைத்திருந்த மீன்கள் அனைத்தையும் கொள்ளை யடித்து சென்று உள்ளனர்.

    அவர்கள் சென்ற பிறகு, பதுங்கியிருந்த மீனவர்கள் வெளியே வந்து பார்த்தனர். அப்போது தான் தங்களது உடமைகள் கொள்ளை போயிருப்பது தெரிய வந்தது. மேலும் மீனவர் ராஜேஷ் குமார் இடது கண்ணில் குண்டடி பட்டும், முகத்தின் காது, தொண்டை பகுதிகளில் காயங்களுடன் மயங்கி கிடப்பதையும் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

    கடல் கொள்ளையர்கள் தாக்குதல் குறித்து சவுதி அரேபியா கடலோர காவல் படையினருக்கு வயர்லெஸ் மூலம் தகவல் கொடுத்துள்ளனர். துப்பாக்கிச் சூட்டிலே அவர்கள் விரைந்து வந்து உயிருக்கு போராடிய ராஜேஷ் குமாரை மீட்டு சவுதி அரேபியா நாட்டின் மவுசட் அரசு மருத்து வமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளார்.

    இந்த சம்பவம் அறிந்து சவுதி அரேபியா நாட்டில் தரின், கத்திப், ஜிபைல் போன்ற இடங்களிலே மீன்பிடி தொழில் செய்து கொண்டிருக்கக் கூடிய சுமார் 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தமிழ்நாடு, கேரளாவை சார்ந்த இந்திய மீனவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

    அவர்கள் கடந்த 9 நாட்களாக கடலில் மீன்பிடிக்க செல்லாமல் தங்கள் உயிருக்கான பாது காப்பை சவுதி அரேபியா அரசு உறுதி செய்யும் வரை நாங்கள் மீன்பிடிக்க செல்ல மாட்டோம் என்று போராடிக் கொண்டி ருக்கின்றார்கள்.

    இதற்கு முன்பும் கடற்கொள்ளையர்கள் சவுதி அரேபியா கடலுக்குள் வந்து மீனவர் மீது துப்பாக்கி சூடு நடத்தியதில் 2000-மாவது ஆண்டு மகிமை என்ற குமரி மீனவரும், 2007 -ம் ஆண்டு மணக்குடியை சார்ந்த பணி அடிமை என்ற மீனவரும் 2010 -ம் ஆண்டு குறும்பனையை சேர்ந்த குமார் என்ற மீனவரும் கொல்லப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

    • கலெக்டரிடம் உறவினர்கள் மனு
    • அவர்கள் குடும்பத்தினர் பெரும் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளார்கள்

    நாகர்கோவில்:

    கன்னியாகுமரி மாவட்டம் தேங்காய் பட்டி னம் மீன்பிடித்துறை முகத்தில் இருந்து கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 29-ந்தேதி ஆழ்கடலுக்கு மீன்பிடிப்பதற்காக 20 மீனவர்கள் சென்றனர்.

    21-ந்தேதி இவர்கள் 20 பேரையும் போதைப் பொருள் கடத்தியதாக காவல்துறையினர் கைது செய்து எர்ணாகுளம் மட்டன் சேரி சிறையில் விசாரணை கைதிகளாக வைத்திருந்தார்கள் விசாரணை அடிப்படையில் 16 பேர்கள் தாங்கள் மீன் பிடிப்பதற்காக தான் சென்றோம் என்று கூறிய நிலையில் அவர்களை உணவு பொருள் கொண்டு வருவதாக கூறி சிலர் ஏமாற்றி சிக்கலில் மாட்டி விட்டு விட்டதாக தெரிவித்துள்ளனர்.

    இது தொடர்பான குற்ற பத்திரிக்கை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையிலும் கடந்த பல மாதங்களாக சிறையில் உள்ள அவர்கள் நீதிமன்றத்தால் இதுவரையிலும் விசாரிக்கப் படவில்லை. 16 மீனவர்களுக்கும் குற்ற வாளிகளுடன் தொடர்பு இல்லை என்று தெரி விக்கப்பட்ட பின்னரும் தற்போது 16 மீனவர்களும் சாட்சி கைதிகளாக சிறையில் வைக்கப்பட்டுள்ளனர்.

    இதனால் அவர்கள் குடும்பத்தினர் பெரும் பாதிப்புக்கு உள்ளாகி உள் ளார்கள் எனவே 16 மீன வர்களையும் விடு விப்பதற்கான நடவடிக்கை களை மேற்கொள்ள வேண் டும் என்று அவர்க ளது உறவினர்கள் நாகர்கோ விலில் மாவட்ட ஆட்சியரை சந்தித்து வலியுறுத்தினார்.

    • குறும்பனையில் உள்ள அவரது உறவினர்கள் சோகம்
    • பலியான குமரி மீனவரின் உடலை சொந்த ஊருக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும்

    நாகர்கோவில்:

    குளச்சல் அருகே குறும் பனை பகுதியை சேர்ந்தவர் சகாயரோஜஸ் (வயது 44). இவர் சவுதி அரேபியாவில் தங்கி மீன்பிடி தொழில் செய்து வந்தார். நேற்று மாலை சகாயரோஜன் சவுதி அரேபியாவில் உள்ள ஜெட்டா பகுதியில் இருந்து கடலுக்கு மீன் பிடிக்க செல்ல தயாரானார். அப்போது திடீரென சகாயரோஜஸ் மயங்கி விழுந்தார்.

    இதையடுத்து சக மீனவர்கள் அவரை மீட்டு பக்கத்தில் உள்ள ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அப்போது அவர் இறந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். சகாயரோஜஸ் இறந்த தகவல் குறும்பனையில் உள்ள அவரது உறவினர்களுக்கு தெரிவிக்கப்பட்டது. இதைக் கேட்டு அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். பலி யான சகாயரோஜஸுக்கு சகாயமெல்பா என்ற மனைவியும் 2 குழந்தைகளும் உள்ளனர்.

    கடந்த 1½ மாதங்களுக்கு முன்பு தான் சகாயரோஜஸின் தாயார் இறந்தார். இதையடுத்து அவர் ஊருக்கு வந்தி ருந்தார். பின்னர் கடந்த 15 நாட்களுக்கு முன்புதான் இங்கிருந்து சவுதி அரேபியாவிற்கு சென்றார்.

    இந்த நிலையில் அவர் பலியாகி இருப்பது அவரது உறவினர்கள் இடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பலி யான சகாயரோஜஸின் உடலை சொந்த ஊருக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவரது உறவினர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

    • ஆழ்கடல் பகுதிக்கு முதலில் தொழிலுக்கு செல்லும் விசைப்படகுகள் மீன் பாடு குறித்து கரையில் உள்ள மீனவர்களுக்கு தகவல் கூறுவது வழக்கம்.
    • தற்போது முதலில் சென்ற விசைப்படகுகளிலிருந்து நல்ல தகவல் வரவில்லை.

    கன்னியாகுமரி:

    குளச்சல் கடல் பகுதியில் சுமார் 300- க்கும் மேற்பட்ட விசைப்படகுகளும், 1000- க்கும் மேற்பட்ட பைபர் வள்ளங்களும் மீன் பிடி தொழில் செய்து வரு கின்றன.

    இதில் விசைப்படகுகள் ஆழ்கடல் பகுதி சென்று 10 நாட்கள் வரை தங்கி மீன் பிடித்துவிட்டு கரை திரும்பும். ஆழ்கடல் பகுதியில் தான் சுறா, கேரை, இறால், புல்லன், கணவாய், கிளி போன்ற உயர் ரக மீன்கள் கிடைக்கும்.

    பைபர் வள்ளங்கள் காலையில் கடலுக்குச் சென்று அருகில் மீன்பிடித்து விட்டு மதியம் கரை திரும்பி விடும். இவற்றுள் நெத்திலி, சாளை போன்ற சிறிய ரக மீன்கள் கிடைக்கும். கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு கரை திரும்பிய விசைப்படகுகள் நேற்று முன்தினம் முதல் மீண்டும் ஆழ்கடல் பகுதிக்கு மீன் பிடிக்கச் சென்று உள்ளன.

    முதல் கட்டமாக குளச்சல் கடல் பகுதியில் இருந்து சுமார் 50 விசைப்படகுகளே மீன் பிடிக்க சென்றுள்ளன.மீதி படகுகள் துறைமுகத்தில் நங்கூரம் பாய்ச்சி நிறுத்தப்பட்டுள்ளது.அவை மீன்பிடிக்க செல்ல தயாராகி வருகிறது.

    ஆழ்கடல் பகுதிக்கு முதலில் தொழிலுக்கு செல்லும் விசைப்படகுகள் மீன் பாடு குறித்து கரையில் உள்ள மீனவர்களுக்கு தகவல் கூறுவது வழக்கம். இதன் அடிப்படையில் மற்ற விசைப்படகுகள் மீன் பிடிக்க செல்லும்.அந்த வகையில் தற்போது முதலில் சென்ற விசைப்படகுகளிலிருந்து நல்ல தகவல் வரவில்லை.

    இதனால் குளச்சல் கடல் பகுதியில் இருந்து மீதி விசைப்படகுகள் மீன் பிடிக்க செல்லவில்லை. இதற்கிடையே பைபர் வள்ளம், கட்டுமரங்களிலும் போதிய மீன்கள் கிடைக்க வில்லை. இதனால் வியா பாரிகள் ஏமாற்றம் அடைந்து உள்ளனர். இது குறித்து மீனவர் ஒருவர் கூறுகையில்கிறிஸ்துமஸ் பண்டிகை முடிந்து மீண்டும் ஆழ்கடல் பகுதிக்கு செல்லும் விசைப்படகுகளில் இந்த சீசனில் 'கேரை'மீன்கள் பிடிபடும். ஆனால் தற்போது கேரை மீன்கள் கிடைக்க வில்லை.ஓரளவு கிளி மீன்களே கிடைக்கிறது.பிடிபடும் இந்த மீன்களும் விசைப்படகின் டீசல் செலவுக்கு கூட பற்றாக்குறையாக உள்ளது என்றனர்.

    • மீனவர்கள் சமுதாய கூடங்களில் அமர்ந்து வலைகளை பழுது பார்த்து, புதிய வலைகளை மீன்பிடிக்க தயார் செய்து வருகின்றனர்.
    • மேல்மருவத்தூர் கோயிலுக்கு செல்லும் வெளிமாநில செவ்வாடை பக்தர்கள் மழையால் சிரமப்பட்டனர்.

    மாமல்லபுரம்:

    மாமல்லபுரத்தில் இன்று அதிகாலை முதல் சாரல் மழை பெய்தது. இதனால் கடலோர பகுதிகளான வெண்புருஷம், கொக்கிலமேடு, தேவநேரி, சூலேரிக்காடு பகுதி மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை. இதனால் அப்பகுதி சமுதாய கூடங்களில் அமர்ந்து வலைகளை பழுது பார்த்து, புதிய வலைகளை மீன்பிடிக்க தயார் செய்து வருகின்றனர்.

    மேல்மருவத்தூர் கோயிலுக்கு செல்லும் வெளிமாநில செவ்வாடை பக்தர்கள் மாமல்லபுரம் வந்து கடலில் குளித்து விட்டு கோயிலுக்கு செல்லும் வழக்கம் உள்ளது. இன்று அதிகாலை மாமல்லபுரம் வந்த அவர்களும் சாரல் மழையால் திறந்த வெளியில் சமைத்து சாப்பிட சிரமப்பட்டனர்.

    • பாராளுமன்றத்தில் விஜய்வசந்த் எம்.பி. வலியுறுத்தல்
    • கன்னியாகுமரி மாவட்டத்தில் 72 கிலோ மீட்டர் நீளமுள்ள கடற்கரையில் உள்ள 42 மீனவ கிராமங்களில் ஏறத்தாழ 4 லட்சம் மீனவ மக்கள் வாழ்ந்து வருகின்றனர்.

    நாகர்கோவில்:

    பாராளுமன்ற கூட்டத்தில் கன்னியாகுமரி தொகுதி எம்.பி. விஜய்வசந்த் பேசும் போது கூறியதாவது:-

    குமரி மாவட்டத்தில் மீனவர்கள் மற்றும் மீனவர் கிராமங்களை மத்திய அரசு தகுந்த நடவடிக்கைகளை எடுத்து பாதுகாக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். புயல் மற்றும் இயற்கை சீற்றங்களின் போது கடலில் மீன் பிடிக்க செல்லும் மீனவர்களை பாதுகாக்க புதிய தொழில்நுட்ப கருவிகள் மூலம் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற் கொள்ள வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.

    மேலும் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள 42 மீனவ கிராமங்களில் ஏறத்தாழ 4 லட்சம் மீனவ மக்கள் வாழ்ந்து வருவதை சுட்டிக்காட்டிய எம்.பி. விஜய் வசந்த் 72 கிலோ மீட்டர் நீளமுள்ள கடற்கரையில் கடல் அரிப்பினால் மீனவ கிராமங்கள் பாதிக்கப்படு வதை தடுக்க நிரந்தரமாக கடல் சுவர் எழுப்ப வேண் டும் என அவர் கோரிக்கை விடுத்தார்.

    மேலும் கடலில் சிக்கித் தவிக்கும் மீனவர்களை பத்திரமாக மீட்டு வருவ தற்காக கன்னியாகுமரி மாவட்டத்தில் ஹெலிகாப் டர் இறங்குதளம் மற்றும் அதிவேக படகுகள் ஆகியவற்றை கொண்ட கடலோர பாதுகாப்பு காவல் நிலையத்தை அமைத்து குமரி மாவட்ட மீனவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • நேற்று மாலை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தற்கொலை
    • சுசீந்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கன்னியாகுமரி:

    மேலகிருஷ்ணன்புதூர் அருகே உள்ள பள்ளம் அன்னை நகர் பகுதியை சேர்ந்தவர் ஜாண் (வயது 44). கடலில் மீன் பிடி தொழில் செய்து வந்தார்.

    இவருக்கு விஜி என்ற மனைவியும், 2 மகனும், 2 மகள்களும் உள்ளனர். ஜாணுக்கு மது அருந்தும் பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது. ஜாணை மது குடிக்க கூடாது என விஜி கூறியுள்ளார்.

    இதனால் மனமுடைந்த ஜாண் நேற்று மாலை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த விஜி சுசீந்திரம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

    இது தொடர்பாக சுசீந்திரம் இன்ஸ்பெக்டர் சாயிலெட்சுமி, சப்-இன்ஸ்பெக்டர் முத்துசாமி ஆகியோர் வழக்குப்பதிவு செய்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • 10-க்கும் மேற்பட்ட படகுகளில் காரைக்கால் மீனவர்கள் அவரை தேடும் பணியில் ஈடுபட்டனர்.
    • கடல் சீற்றமாக இருந்ததால் தேடும் பணி நிறுத்தி வைக்கப்பட்டது.

    வேதாரண்யம்:

    காரைக்கால் பகுதியில் இருந்து ஆறுமுகம் என்பவருக்கு சொந்தமான பைபர் படகில் அவரும், அதே பகுதியை சேர்ந்த சிவா (வயது 28) என்பவரும் கடந்த 4-ந்தேதி மீன்பிடிக்க கடலுக்கு சென்று ள்ளனர்.

    இவர்கள் மீன்களை பிடித்து கொண்டு 5-ந்தேதி அதிகாலையில் கரை திரும்பிக்கொண்டிருந்த போது மீனவர் சிவா படகில் இருந்து தவறி கடலில் விழுந்து மூழ்கி மாயமானார்.

    இதைத்தொடர்ந்து 10-க்கும் மேற்பட்ட படகுகளில் காரைக்கால் மீனவர்கள் அவரை தேடும் பணியில் ஈடுபட்டனர். இந்த நிலையில் கடந்த 2 நாட்களாக மாண்டஸ் புயல் காரணமாக கடல் சீற்றமாக இருந்ததால் தேடும் பணி நிறுத்தி வைக்கப்பட்டது.

    புயல் கரையை கடந்ததால் நேற்று காரைக்கால் மீனவர்கள் 10 படகுகளில் கோடியக்கரை கடற்பகுதிக்கு வந்து மாயமான மீனவர் சிவாவை தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர். இன்னும் தேடும் பணி நடந்து வருகிறது.

    • நவம்பர் 30 ம் தேதி ஏற்பட்ட ஓகி புயல் தாக்குதலில் குமரி மாவட்டம் மற்றும் வெளி மாநில, மாவட்ட மீன் பிடித்தொழிலாளர்கள் 224 பேர் பலியாயினர்.
    • 5 ம் ஆண்டு நினைவு நாள் தெற்காசிய மீனவ தோழமை கூட்டமைப்பு சார்பாக குளச்சல் மீன்பிடித்துறை முகத்தில் விசைப்படகில் கடைப்பிடிக்கப்பட்டது.

    கன்னியாகுமரி :

    குமரி மாவட்டத்தில் கடந்த 2017 நவம்பர் 30 ம் தேதி ஏற்பட்ட ஓகி புயல் தாக்குதலில் குமரி மாவட்டம் மற்றும் வெளி மாநில, மாவட்ட மீன் பிடித்தொழிலாளர்கள் 224 பேர் பலியாயினர்.

    இதில் குமரி மாவட்ட மீனவர்கள் 177 பேர் ஆவர்.ஓகி புயல் தாக்கி கடலில் பலியான மீனவர்களுக்கு 5 ம் ஆண்டு நினைவு நாள் தெற்காசிய மீனவ தோழமை கூட்டமைப்பு சார்பாக குளச்சல் மீன்பிடித்துறை முகத்தில் விசைப்படகில் கடைப்பிடிக்கப்பட்டது.

    விசைப்படகில் அமைக்கப்பட்டிருந்த பலியான மீனவர்களின் உருவ படத்திற்கு உறவினர்கள் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.இதில் தெற்காசிய மீனவ தோழமை கூட்டமைப்பு பொதுச்செயலாளர் சர்ச்சில், செயலாளர் ரீகன் உள்பட மீனவர்கள் கலந்து கொண்டனர்.

    • கடலில் காணாமல் போன மீனவர் குடும்பத்திற்கு உதவித்தொகையை கலெக்டர் வழங்கினார்.
    • தமிழ்நாடு மீனவர் நலத்துறை ஆணையத்தின் மூலம் வழங்கப்பட்டது.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் அலு வலக கூட்டரங்கில் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை யின் சார்பில் மீனவர் குறை தீர்க்கும் கூட்டம் மாவட்ட கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் தலைமையில் நடை பெற்றது.

    இதில் மாவட்ட கலெக்டர் மீனவர்களிடம் கோரிக்கைகள் குறித்த மனுக்கள் பெற்றுக் கொண்டு கடந்த மாதம் மீனவர்களிடம் கோரிக்கைகள் தொடர்பாக பெறப்பட்ட மனுக்களு க்கான தீர்வுகளை துறை அலுவலர்கள் மூலமாக தெரிவித்தார்.

    பின்னர் அவர் பேசிய தாவது:-

    மீனவர்கள் தொழில் மேம்பாட்டிற்காக அரசு பல்வேறு நலத்திட்டங்களை வழங்கி வருகின்றன. ரோச்மா நகர் மீனவர்கள் கிராமத்தில் கடலில் கல் நிரப்பும் பணி ரூ.10 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வருகிறது. இதற்கான பணி விரைவில் நிறைவடையும். மீனவர்களுக்கான மீன்பிடி அடையாள அட்டை வழங்கு வதில் ஏற்படும் தாமதத்தை தவிர்க்க இனி அந்தந்த பகுதி உதவி இயக்கு னர்கள் மூலம் வழங்கிட அறிவுறுத்தப்பட்டு உள்ளது. அதே போல் மீன்பிடி தடைக்கால நிவாரண தொகை புதிய பயனாளிகளுக்கு அவர்க ளுடைய வங்கி கணக்கில் தமிழ்நாடு மீனவர் நலத்துறை ஆணையத்தின் மூலம் வழங்கப்படும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    தொடர்ந்து ராமேசுவரம் பகுதியை சேர்ந்த மகாத்மா என்ற கார்த்திக் என்ற மீனவர் 7 ஆண்டுகளுக்கு முன்பு கடலில் மீன்பிடிக்க சென்றபோது காணாமல் போய்விட்டார். அவரது தாயார் கலைய ரசிக்கு தமிழ்நாடு மீனவர் நல வாரியம் மூலம் வழங்க ப்பட்ட ரூ.1 லட்சத்திற்கான நிவாரண உதவித் தொகைக் கான ஆணை யினை வழங்கி னார்.

    இந்நிகழ்ச்சியில் உதவி ஆட்சியர் (பயிற்சி) நாராயண சர்மா, மீன்வளத் துறை துணை இயக்குநர் காத்தவராயன் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு முதுகு வலி காரணமாக அறுவை சிகிச்சை செய்து கொண்டார்.
    • கன்னியாகுமரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை

    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரி அருகே உள்ள கோவளத்தைச் சேர்ந்தவர் சகாயம் (வயது 34). மீன்பிடி தொழிலாளி.

    இவர் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு முதுகு வலி காரணமாக அறுவை சிகிச்சை செய்து கொண்டார். அதன் பிறகு அவர் கடலுக்கு மீன் பிடிக்க செல்லாமல் இருந்து வந்தார்.

    இதனால் மனம் உடைந்த சகாயம் நேற்று தனது வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது பற்றி தகவல் அறிந்ததும் கன்னியாகுமரி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளத்தில்உள்ள அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரது உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது.

    இது குறித்து கன்னியா குமரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • குளச்சல் கடல் பகுதியில் சுமார் 300-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளும், 1000- க்கும் மேற்பட்ட பைபர் வள்ளங்களும் மீன் பிடித்தொழிலில் ஈடுபட்டு வருகிறது.
    • விசைப்படகுகள் ஆழ்கடல் பகுதிவரை சென்று 7 முதல் 10 நாட்கள் தங்கி மீன் பிடித்து கரை திரும்பும்.

    கன்னியாகுமரி:

    குளச்சல் கடல் பகுதியில் சுமார் 300-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளும், 1000- க்கும் மேற்பட்ட பைபர் வள்ளங்களும் மீன் பிடித்தொழிலில் ஈடுபட்டு வருகிறது.

    விசைப்படகுகள் ஆழ்கடல் பகுதிவரை சென்று 7 முதல் 10 நாட்கள் தங்கி மீன் பிடித்து கரை திரும்பும். ஆழ்கடல் பகுதியில்தான் கணவாய், இறால், புல்லன், கேரை, சுறா போன்ற உயர் ரக மீன்கள் கிடைக்கும். தற்போது குளச்சல் கடல் பகுதியில் கணவாய், கிளி மீன்கள், நாக்கம் மீன்கள் கிடைத்து வருகின்றன.ஆழ்கடல் பகுதிக்கு மீன் பிடிக்க சென்ற விசைப்படகுகளில் 45 படகுகள் நேற்று கரை திரும்பின.இவற்றுள் நாள் ஒன்றுக்கு 20 டோக்கன்கள் முறையில் விசைப்படகுகளில் இருந்த மீன்கள் இறக்கப்பட்டன. அவற்றுள் கிளி மீன்கள், நாக்கண்டம் மற்றும் கணவாய் மீன்கள் கிடைத்தன.

    மீனவர்கள் அவற்றை மீன் ஏலக்கூடத்தில் குவித்து வைத்து விற்பனை செய்தனர். ஒரு கிலோ கிளி மீன்கள் தலா ரூ.105 விலை போனது.கடந்த நாட்களை விடவும் ரூ.25 அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.சின்ன கிளி மீன் தலா கிலோ ஒன்றுக்கு ரூ.80 முதல் ரூ.85 வரை விலை போனது. நாக்கண்டம் தலா கிலோ வழக்கமாக ரூ.40 க்கு விலை போனது. தோட்டு கணவாய் தலா கிலோ ஒன்றுக்கு ரூ.385 விலையும், ஓலக்கணவாய் வழக்கமாய் ரூ.240-க்கும், ஸ்குட் கணவாய் ரூ.415 க்கும், நிப்புள் கணவாய் ரூ.180-க்கும் விலைபோனது.

    கிளி மீன்கள் பற்பசை தயாரிப்பதற்கும், நாக்கண் டம் மீன்கள் மீன் எண்ணை மற்றும் கோழி தீவனம் தயாரிப்பதற்கும் வியாபாரிகள் போட்டிப் போட்டு ஏலம் கேட்டு வாங்கி சென்றனர்.

    ×