search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 230783"

    • இதய பிரச்சனை காரணமாக முதியவர் மரத்தில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    • இச்சம்பவம் குறித்து பர்கூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் எண்ணமங்கலம் செல்லாம்பாளையம் மேலூரை சேர்ந்தவர் கந்தசாமி(80). இவருக்கு இதய பிரச்சனை இருந்து வந்துள்ளது. இதனால் கந்தசாமி தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பார்த்து வந்துள்ளார்.

    சம்பவதன்று வீட்டில் இருந்து வெளியேறி வரட்டுப்பள்ளம் செக்போஸ்ட் அருகே உள்ள வனப்பகுதிக்கு சென்றார். அங்கு அவரது லுங்கியால் மரத்தில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இது குறித்து தகவல் அறிந்து பர்கூர் போலீசார் விரைந்து வந்து கந்தசாமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இச்சம்பவம் குறித்து பர்கூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • உடல்நலம் பாதிக்கப்பட்டு அவதி அடைந்து வந்த மிஷின் ஆப்பரேட்டர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்
    • இதுகுறித்து கொடுமுடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் கொடுமுடி அடுத்த காசிபாளையம் பகுதியை சேர்ந்தவர் நிர்மல் (38). தனியார் நிறுவனத்தில் மிஷின் ஆப்பரேட்டராக வேலை பார்த்து வந்தார். இவருக்கு திருமணமாகி குழந்தைகள் உள்ளனர்.

    இந்நிலையில் நிர்மலுக்கு குடிப்பழக்கம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதன் காரணமாக அவர் உடல்நலம் பாதிக்கப்பட்டு அவதி அடைந்து வந்தார். சம்பவத்தன்று நிர்மலின் மனைவி குழந்தைகளை அழைத்துக்கொண்டு காட்டுப்புதூர் திருமண விழாவிற்கு சென்று விட்டார்.

    பின்னர் மீண்டும் வீட்டுக்கு வந்தபோது நிர்மல் வீட்டில் உள்ள அறையில் தூக்குபோட்டு தொங்கிக் கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனே அக்கம் பக்கத்தினர் உதவியுடன் அவரை மீட்டு சிகிச்சைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

    அவரை பரிசோதித்த டாக்டர்கள் நிர்மல் வரும் வழியிலேயே இறந்து–விட்டதாக தெரிவித்தனர்.

    இதுகுறித்து கொடுமுடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கடனை திருப்பி செலுத்த முடியாததால் டிரைவர் தூக்குபோட்டு தற்கொலை
    • இதுகுறித்து வீரப்பன் சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து வேறு எதுவும் காரணம் உள்ளதா? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஈரோடு:

    ஈரோடு வில்லரசம்பட்டி பொன்னி நகர், முதல் வீதியை சேர்ந்தவர் அசோக் (30). ஆக்டிக் டிரைவர். இவரது மனைவி லலிதா (27). கடந்த 2 வருடங்களுக்கு முன்பு சொந்த வீடு கட்டுவதற்காக அசோக் வங்கி ஒன்றில் கடன் பெற்றிருந்தார்.

    அதற்கு முறையாக லோன் கட்டி வந்து இருந்த போது கடந்த சில மாதங்களாக சரியாக வேலை இல்லாததால் அவரால் வங்கியில் லோனை குறிப்பிட்ட நேரத்திற்கு கட்ட முடியவில்லை. இதனால் அவர் கடந்த சில நாட்களாக மன விரக்தியில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

    இந்நிலையில் ஊருக்கு சென்றிருந்த லலிதா தனது அம்மாவுடன் வீட்டிற்கு வந்தார். அப்போது வீட்டின் உள் அறையில் அசோக் தூக்கில் தொங்கி கொண்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

    உடனே அக்கம் பக்கத்தினர் உதவியுடன் அசோக்கை மீட்டு சிகிச்சை க்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே அசோக் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    வாங்கிய கடனை திருப்பி செலுத்த முடியாததால் மன விரக்தியில் அவர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

    இதுகுறித்து வீரப்பன் சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து வேறு எதுவும் காரணம் உள்ளதா? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • நம்பியூர் அருகே குடிபோதையில் அடிக்கடி தகராறு செய்து வந்த வாலிபர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    • இது குறித்து நம்பியூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் நிர்மலா வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    நம்பியூர்:

    நம்பியூர் அருகே உள்ள இருகாலூர் பகுதியை சேர்ந்தவர் கார்த்திக் (21). அதே பகுதியில் தனது பாட்டியின் வீட்டில் தங்கி மரம் ஏறும் கூலி வேலை செய்து வந்தார்.

    இந்நிலையில் தனது தாயார் ராசாத்தியுடன் அடிக்கடி குடிபோதையில் தகராறு செய்து வந்துள்ளார். சம்பவத்தன்று மதியம் வேலைக்கு சென்று விட்டு வந்து இரவு நீண்ட நேரமாக சாப்பிட வராததால் பாட்டி ராமாத்தாள் கார்த்திக்கை சாப்பிட கூப்பிட சென்று பார்த்த பொழுது கார்த்திக் வீட்டின் விட்டத்தில் சேலையால் தூக்கு மாட்டி கொண்டிருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.

    இதனையடுத்து ராமாத்தாள் உடனடியாக அக்கம்பக்கத்தினரிடம் தகவல் சொல்லி கார்த்திகை மீட்டு கோபி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே கார்த்திக் இறந்து விட்டதாக கூறினர்.

    அதைத் தொடர்ந்து பிரேத பரிசோதனை செய்து கார்த்திக்கின் உடலை உறவினர்களிடம் ஒப்படைத்தனர்.

    இது குறித்து நம்பியூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் நிர்மலா வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    ×