என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சிகரெட்"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • மது விற்பனை 12 சதவீதம் அதிகரித்துள்ளது. இதில் விஸ்கி, பிராந்தி, ரம், ஜின் மற்றும் ஓட்கா வகைகள் அடங்கும்.
    • கடந்த 10 ஆண்களில் ஒரு தட்டையான வளர்ச்சி விகிதத்துடன் ஒப்பிடுகையில் கடந்த 4 ஆண்டுகளில் சிகரெட் விற்பனையில் கூட்டு வருடாந்திர வளர்ச்சி விகிதம் சுமார் 5 சதவீதமாக இருந்தது.

    மும்பை:

    இந்தியாவில் சில்லரை பணவீக்கம் கடந்த ஜனவரி மாதத்தில் 6.52 சதவீதமாக உயர்ந்துள்ளது என புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. உணவு பொருட்களின் விலை உயர்வே இதற்கு காரணம் என கூறப்படுகின்றது. பணவீக்கத்தை கட்டுப்படுத்த ரிசர்வ் வங்கி பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

    இது ஒருபுறம் இருக்க வேகமாக விற்பனையாகும் நுகர்வு பொருட்கள் சந்தையில் கடந்த ஆண்டு சிகரெட் மற்றும் மது விற்பனை அதிகரித்திருப்பது புள்ளி விபரங்களில் தெரியவந்துள்ளது.

    சமீபத்திய ஆராய்ச்சி அறிக்கைகள் மற்றும் தொழில்துறை மதிப்பீடுகளின்படி டிசம்பர் 2022 வரை கடந்த 4 காலாண்டுகளில் சிகரெட் விற்பனை அளவு தொடர்ந்து 10 சதவீதத்திற்கும் அதிகமாக உள்ளது. இதே போல மது விற்பனையும் 12 சதவீதம் அதிகரித்துள்ளது. இதில் விஸ்கி, பிராந்தி, ரம், ஜின் மற்றும் ஓட்கா வகைகள் அடங்கும்.

    கடந்த 10 ஆண்களில் ஒரு தட்டையான வளர்ச்சி விகிதத்துடன் ஒப்பிடுகையில் கடந்த 4 ஆண்டுகளில் சிகரெட் விற்பனையில் கூட்டு வருடாந்திர வளர்ச்சி விகிதம் சுமார் 5 சதவீதமாக இருந்தது.

    இதுகுறித்து மதுபான விற்பனை நிறுவனமான டியாஜியோவுக்கு சொந்தமான யுனைடெட் ஸ்பிரிட்ஸின் நிர்வாக இயக்குனர் ஹினா நாகராஜன் கூறுகையில், பணவீக்கம் மற்றும் பெரிய அளவிலான மேக்ரோ பொருளாதார பிரச்சினை சற்று இழுபறியாக இருக்கலாம். ஆனால் நுகர்வோர் தேவை தொடர்ந்து வழுவாக இருக்கலாம் என்று நாங்கள் நம்புகிறோம் என்றார்.

    அதிக வரி விதிப்பு, சட்ட விரோத மற்றும் கடத்தப்பட்ட சிகரெட்டுகள் மீது கடும் நடவடிக்கை ஆகியவை சிகரெட் சந்தையில் அதன் விற்பனை அளவை அதிகரிக்க செய்துள்ளதாக கூறப்படுகிறது.

    • பள்ளி அருகே சிகரெட் விற்றவர் கைது செய்யப்பட்டார்.
    • ரூ.16 ஆயிரத்து 540 பறிமுதல் செய்யப்பட்டது.

    மதுரை

    தத்தனேரி கொன்னவாயன் சாலையில் பள்ளி அருகே சிகரெட் விற்பனை நடைபெறுவதாக செல்லூர் போலீசுக்கு தகவல் கிடைத்தது. சப்-இன்ஸ்பெக்டர் ரஞ்சித் சம்பவ இடத்திற்கு சென்று கண்காணித்தார். அங்கு தத்தனேரி பள்ளிவாசல் தெரு காஜா மைதீன் மகன் சுல்தான் ரியாஸ்(35) சிகரெட் விற்றது தெரிய வந்தது. அவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 30-க்கும் மேற்பட்ட சிகரெட் பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.

    வில்லாபுரம் மீனாட்சி நகர் முதல் தெருவில் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்யப்படுவதாக அவனியாபுரம் போலீசுக்கு தகவல் கிடைத்தது. போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று லாட்டரி சீட்டு விற்பனை செய்த 3 பேரை பிடித்தனர். விசாரணையில் அவர்கள் வில்லாபுரம் சக்தி நகர் விசுவநாதன் (60), மீனாட்சி நகர் சோனையா பிள்ளை சந்துகுமார்(48), அதேபகுதியை சேர்ந்த சிவகுமார் (45) என்பது தெரியவந்தது. 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து லாட்டரி சீட்டுகள், ரூ.16 ஆயிரத்து 540 பறிமுதல் செய்யப்பட்டது. 

    • உலகம் முழுவதும் ஆண்டுக்கு 60 லட்சம் பேர் புகையிலை பொருட்களை பயன்படுத்துவதால் உயிரிழக்கின்றனர்.
    • புகையிலை பழக்கத்தால் உடல் நலிவுற்று பணித்திறன் பாதிக்கப்படுவதால் நாட்டின் பொருளாதாரத்தில் 1.6 லட்சம் கோடி உற்பத்தி இழப்பும் ஏற்படுகிறது.

    சென்னை:

    புற்றுநோய்களுக்கு புகையிலை பொருட்களே முக்கிய காரணம் ஆகும். எனவே புகையிலை பொருட்கள் பயன்படுத்துவதை தடுப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் உலக சுகாதார நிறுவனத்தின் உறுப்பு நாடுகள் சார்பில் 1987-ம் ஆண்டு முதல் ஆண்டு தோறும் மே 31-ந்தேதி உலக புகையிலை எதிர்ப்பு தினமாக அனுசரிக்கப்படுகிறது. அதன் படி இன்று உலக புகையிலை எதிர்ப்பு நாள் கடைபிடிக்கப்படுகிறது.

    இந்த ஆண்டு 'நமக்கு தேவை உணவு, புகையிலை அல்ல' என்ற பொருளில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. இதையொட்டி மத்திய- மாநில அரசுகள் மற்றும் பல்வேறு தன்னார்வ அமைப்புகள் புகையிலை பொருட்களால் ஏற்படும் தீமைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றன.

    உலகம் முழுவதும் ஆண்டுக்கு 60 லட்சம் பேர் புகையிலை பொருட்களை பயன்படுத்துவதால் உயிரிழக்கின்றனர். புகையிலை பொருட்களை பயன்படுத்துபவர்கள் புற்றுநோய், மாரடைப்பு, மூளை பக்கவாதம், வாய்ப்புற்று நோய், நாள்பட்ட நுரையீரல் நோய் உள்ளிட்ட நோய்களால் உயிரிழக்கிறார்கள். அவர்களில் 15 லட்சம் பேர் இந்தியர்கள் ஆவர்.

    உலக அளவில் சீனாவுக்கு அடுத்தபடியாக இந்தியாவில் தான் பீடி, சிகரெட் உள்ளிட்ட புகையிலை பொருட்கள் அதிகமாக உற்பத்தி செய்யப்படுகின்றன. அதன் விளைவாக இந்தியாவில் 20 கோடிக்கும் அதிகமானோர் புகையிலை பழக்கத்துக்கு அடிமையாகி உள்ளதாக சுகாதார ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இந்த நிலை தொடர்ந்தால் அடுத்த 10 ஆண்டுகளில் நாட்டின் மொத்த இறப்பு விகிதத்தில் 13 சதவீதம் புகையிலை பாதிப்பே காரணமாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

    புகையிலை பழக்கத்தால் உடல் நலிவுற்று பணித்திறன் பாதிக்கப்படுவதால் நாட்டின் பொருளாதாரத்தில் 1.6 லட்சம் கோடி உற்பத்தி இழப்பும் ஏற்படுகிறது.

    எனவே புகையிலை பொருட்களின் பயன்பாட்டை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை மத்திய- மாநில அரசுகள் எடுத்து வருகின்றன. இது தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய அரசு ஏற்கெனவே வெளியிட்டுள்ளது. அதை ஏற்று உத்தரபிரதேசம், மத்திய பிரதேசம், ஜார்க்கண்ட் உள்ளிட்ட சில மாநிலங்கள் பீடி, சிகரெட் விற்பனைக்கு மட்டும் தனி உரிமத்தை வழங்கியுள்ளன.

    இந்த நிலையில் தமிழகத்திலும் புகையிலை பயன்பாட்டை கட்டுப்படுத்த அது போன்ற நடவடிக்கைகளை எடுக்க திட்டமிடப்பட்டுள்ளது. அதற்கான வரைவு திட்டம் சில ஆண்டுகளுக்கு முன்பே வகுக்கப்பட்டது. ஆனால் கொரோனா பரவல் காரணமாக அதை அப்போது நடைமுறைப்படுத்த முடியவில்லை. தற்போது அதை செயல்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    இது தொடர்பாக சுகாதாரத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

    தமிழகத்தில் பல லட்சம் பெட்டிக்கடைகள், டீக்கடைகள் மற்றும் சிறிய மளிகை கடைகளில் பீடி, சிகரெட் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 18 வயதுக்கு கீழ் உள்ள சிறுவர்களுக்கு பீடி, சிகரெட் விற்பனை செய்யக்கூடாது. அது தொடர்பாக அறிவிப்பு பலகைகள் கடைகளில் வைத்திருக்க வேண்டும் என பல்வேறு விதிமுறைகள் உள்ளன. ஆனால் அவற்றை மீறி எல்லோருக்குமே புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    எனவே இதை கருத்தில் கொண்டு புதிய நடைமுறையை அமல்படுத்த திட்டமிட்டுள்ளோம். அதன்படி பீடி, சிகரெட் உள்ளிட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்வதற்கு தனி உரிமம் பெறும் நடைமுறை விரைவில் அமல்படுத்தப்பட உள்ளது. புதிய நடைமுறைகள் அமல்படுத்தப்பட்ட பிறகு பெட்டிக்கடை, டீக்கடைகளில் தற்போது உள்ளதை போல் இனிவரும் நாட்களில் இஷ்டத்துக்கு பீடி, சிகரெட் விற்க முடியாது. லைசென்ஸ் பெற்ற கடைகளில் மட்டுமே இனி பீடி, சிகரெட் விற்க அனுமதிக்கப்படும். மேலும் அந்த கடைகளில் பீடி, சிகரெட்டை தவிர வேறு எந்த பொருட்களையும் விற்க முடியாது.

    இந்த விதிகளை மீறும் பட்சத்தில் கடைகளுக்கான உரிமத்தை ரத்து செய்யவும், சட்ட நடவடிக்கை எடுக்கவும் வரைவு திட்டத்தில் விதிகள் வகுக்கப்பட்டுள்ளன. அதன் மூலம் பீடி, சிகரெட் விற்பனையை குறைக்க முடியும். சிறுவர்களிடையே புகைப்பழக்கம் பரவாமல் இருப்பதை ஓரளவு தடுக்க முடியும். அதற்கான வரைவு திட்டம் இறுதி செய்யப்பட்டு உள்ளாட்சி அமைப்புகளுக்கு அனுப்பப்பட்டு வருகிறது. அதன் பின்னர் சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகள் அதற்கான உரிமங்களை வழங்கலாம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • ரெயிலில் சென்ற பயணி ஒருவர் ரெயிலின் கழிவறைக்குள் புகுந்து உள்ளே பூட்டிக்கொண்டார்.
    • பயணியின் அலப்பறையால் வந்தே பாரத் ரெயில் சிறிது நேரம் கழித்து அங்கிருந்து புறப்பட்டு சென்றது.

    திருப்பதியில் இருந்து செகந்திராபாத்துக்கு வந்தே பாரத் ரெயில் புறப்பட்டு சென்றது. இந்த ரெயிலில் சென்ற பயணி ஒருவர் ரெயிலின் கழிவறைக்குள் புகுந்து உள்ளே பூட்டிக்கொண்டார். பின்னர் தான் வைத்திருந்த சிகரெட்டை பற்ற வைத்தார். அப்போது அங்கு பொருத்தப்பட்டு இருந்த தீப்பிடித்ததற்கான அலாரம் ஒலித்தது.

    இதனால் பயணிகள் மத்தியில் தீ பிடித்ததாக பீதி ஏற்பட்டது. இது பற்றி அறிந்ததும் மானுபாலு என்ற ரெயில் நிலையம் அருகே ரெயில் நிறுத்தப்பட்டது. உடனே ரெயில்வே பாதுகாப்பு அதிகாரிகள், அங்கு விரைந்து சென்றனர். அலாரம் ஒலித்த கழிவறையின் ஜன்னல் வழியாக பார்த்த போது உள்ளே ஒருவர் கையில் சிகரெட்டுடன் இருந்ததை பார்த்தனர். உடனே அவரை பிடித்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் அவர் டிக்கெட் இல்லாமல் பயணம் செய்தது தெரிய வந்தது. அவர் நெல்லூர் ரெயில்வே போலீசில் ஒப்படைக்கப்பட்டார். அவரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். பயணியின் அலப்பறையால் வந்தே பாரத் ரெயில் சிறிது நேரம் கழித்து அங்கிருந்து புறப்பட்டு சென்றது.

    • இங்கிலாந்தில் 2030-ம் ஆண்டுக்குள் புகைபிடிக்காதவர்களாக இருக்க வேண்டும்.
    • புகை பிடிப்பவர்களின் சதவீதத்தை குறைக்க ஏற்கனவே நடவடிக்கை எடுத்து வருகிறோம்.

    லண்டன்:

    இங்கிலாந்து பிரதமராக இந்திய வம்சாவளியை சேர்ந்த ரிஷிசுனக் இருந்து வருகிறார். இவர் பதவியேற்ற நாளில் இருந்து நாட்டை முன்னேற்ற பாதையில் கொண்டு செல்ல பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.

    இதன் ஒரு பகுதியாக அவர் அடுத்த தலைமுறையினர் புகை பழக்கத்துக்கு அடிமையாகி விடக்கூடாது என்பதற்காக புகையிலை எதிர்ப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளார். இதையடுத்து இங்கிலாந்தில் சிகரெட்டுக்கு தடை விதிப்பது குறித்து ரிஷி சுனக் ஆலோசித்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

    2009-ம் ஆண்டு ஜனவரி 1-ந்தேதி மற்றும் அதற்கு பிறகு பிறந்தவர்களுக்கு புகையிலையை விற்க தடை விதிக்கப்பட இருப்பதாக தெரியவந்துள்ளது.

    இது தொடர்பாக இங்கிலாந்து அரசின் செய்தி தொடர்பாளர் இ-மெயிலில் அனுப்பிய செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:-

    இங்கிலாந்தில் 2030-ம் ஆண்டுக்குள் புகைபிடிக்காதவர்களாக இருக்க வேண்டும் என்பது தான் எங்களது லட்சியம். புகைப்பழக்கத்தில் இருந்து விடுபடுமாறு பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளோம். புகை பிடிப்பவர்களின் சதவீதத்தை குறைக்க ஏற்கனவே நடவடிக்கை எடுத்து வருகிறோம்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • சிகரெட் பிடிப்பதை கைவிட்டால் 3 மடங்கு இறப்பு அபாயத்தை தவிர்க்கலாம்.
    • 3 ஆண்டுகளுக்கு குறைவாக சிகரெட் பிடிப்பவர்கள் ஆயுட்காலம் அதிகரித்து உள்ளது.

    திருப்பதி:

    டொரண்டோ பல்கலைக்கழகத்தை சேர்ந்த டல்லா லானா பொது சுகாதார மையத்தை சேர்ந்த பேராசிரியர் பிரபாத் ஜா ஆராய்ச்சி கட்டுரை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

    40 வயதிற்குள் சிகரெட் பிடிப்பதை நிறுத்திவிட்டால், புகை பிடிக்காதவர்கள் போலவே நீண்ட நாள் வாழ முடியும். இவர் கடந்த 15 ஆண்டுகளாக அமெரிக்கா, இங்கிலாந்து, கன்னடா, மற்றும் நார்வே நாட்டை சேர்ந்த 40 வயது முதல் 79 வயது வரை உடைய1.5 மில்லியன் சிகரெட் பிடிப்பவர்கள் மற்றும் பிடிக்காதவர்களிடம் ஆய்வு நடத்தினார்.

    சிகரெட் பிடிப்பதை கைவிட்டால் 3 மடங்கு இறப்பு அபாயத்தை தவிர்க்கலாம்.

    மேலும் 12 முதல் 13 ஆண்டுகள் நோய் நொடி இன்றி வாழலாம். 3 ஆண்டுகளுக்கு குறைவாக சிகரெட் பிடிப்பவர்கள் ஆயுட்காலம் அதிகரித்து உள்ளது.

    இதனால் பெரிய நோய்களிலிருந்து அபாயத்தை குறைக்கலாம் சிகரெட் பிடிப்பதன் மூலம் வாஸ்குலர் மற்றும் புற்றுநோயால் இறக்கும் ஆபத்தை குறைக்கலாம். மேலும் நுரையீரல் நோய்களிலிருந்து விடுபடலாம்.

    இவ்வாறு அவர் ஆய்வு கட்டுரையில் தெரிவித்துள்ளார்.

    • ஹூக்கா பார்களை தடை செய்யும் மசோதாவை கர்நாடக அரசு இன்று நிறைவேற்றியது.
    • கல்வி நிறுவனங்களில் இருந்து 100 மீட்டர் சுற்றளவில் சிகரெட் மற்றும் இதர புகையிலை பொருட்களை விற்பனை செய்யவும் தடை விதித்துள்ளது.

    கர்நாடகா மாநிலத்தில் சிகரெட் விற்பனைக்கான குறைந்தபட்ச வயது வரம்பை 18ல் இருந்து 21 ஆக உயர்த்தும் மசோதா சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது.

    மாநிலம் முழுவதும் ஹூக்கா பார்களை தடை செய்யும் மசோதாவை கர்நாடக அரசு இன்று நிறைவேற்றியது. தடையை மீறும் குற்றவாளிகளுக்கு ஓராண்டு முதல் மூன்று ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை மற்றும் ரூ.1 லட்சம் வரை அபராதம் உட்பட கடுமையான தண்டனைகள் விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ஏற்கனவே இயற்றப்பட்ட சிகரெட் மற்றும் பிற புகையிலை பொருட்கள் சட்டத்தில் (COTPA) திருத்தம் செய்யப்பட்டு இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது.பொதுமக்களின் ஆரோக்கியத்தைப் பாதுகாப்பதற்காகவும், புகையிலை தொடர்பான நோய்களைத் தடுப்பதற்காகவும் இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

    மேலும், புகை இல்லாத சூழலை உருவாக்குவதற்காக இந்த திருத்தப்பட்ட மசோதா பொது இடங்களில் புகையிலை பொருட்களைப் பயன்படுத்துவதற்கும் தடை விதித்துள்ளது.

    சித்தராமையா தலைமையிலான கர்நாடகா அரசு, கல்வி நிறுவனங்களில் இருந்து 100 மீட்டர் சுற்றளவில் சிகரெட் மற்றும் இதர புகையிலை பொருட்களை விற்பனை செய்யவும் தடை விதித்துள்ளது. இந்த விதியை மீறினால், 1,000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும்.

    இம்மாதம், தெலுங்கானா அரசாங்கம் மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து ஹூக்கா பார்களையும் தடை செய்ய இதேபோன்ற மசோதாவை நிறைவேற்றியது. கடந்த ஆண்டு, ஹரியானா மாநிலம் முழுவதும் உள்ள ஹோட்டல்கள், உணவகங்கள், பார்கள் மற்றும் வணிக நிறுவனங்களில் வாடிக்கையாளர்களுக்கு ஹூக்காவை வழங்க அம்மாநில அரசு தடை விதித்தது குறிப்பிடத்தக்கது.

    • கணவரின் கை கால்களை கட்டிப்போட்டு அடித்து துன்புறுத்தியுள்ளார் அவரது மனைவி மெஹர் ஜஹான்
    • சிசிடிவி காட்சிகளை காட்டி காவல்நிலையத்தில் புகார் அளிக்க மனைவி தற்போது கைது செய்யப்பட்டுள்ளார்

    உத்தரபிரதேச மாநிலம் பிஜ்னோர் மாவட்டத்தில், கணவரின் கை கால்களை கட்டிப்போட்டு அடித்து துன்புறுத்திய அவரது மனைவி மெஹர் ஜஹானை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

    கணவனுக்கு போதைப்பொருள் கொடுத்து மயக்கத்தை ஏற்படுத்திய பிறகு அவரை கட்டிப்போட்டு அவரது ஆண் உறுப்பை சிகரெட்டால் சுட்டு காயப்படுத்தி கொடுமைப் படுத்தியுள்ளார்.

    மனைவி தன்னை கட்டி வைத்து தாக்குவது சிகரெட்டால் சுடுவது போன்ற காட்சிகளை சிசிடிவி காட்சிகள் மூலம் கணவன் பதிவு செய்துள்ளார். இதனை ஆதாரமாக கொண்டு கடந்த 5-ம் தேதி காவல்நிலையத்தில் அவர் புகார் கொடுத்துள்ளார்.

    இதனையடுத்து, மெஹர் ஜஹான் மீது கொலை முயற்சி, சித்திரவதை செய்தல் உள்ளிட்ட பல பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்த காவல்துறை அவரை கைது செய்து சிறையில் அடைத்தது.

    • வரி விகிதங்களை மாற்றுவதற்கான திட்டம் தயாரிக்கப்பட்டு வருகிறது.
    • மருந்து விலை குறையும்- மின்சார வாகனங்கள் மீதான வரி அதிகரிக்கிறது.

    புதுடெல்லி:

    ஜி.எஸ்.டி. விகிதங்களில் சீர்திருத்தங்கள் கொண்டு வருவது குறித்து மந்திரிகள் குழு தீவிர முயற்சி எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக மந்திரிகள் குழுவினர் பங்கேற்ற கூட்டம் சமீபத்தில் நடைபெற்றது.

    இந்த கூட்டத்தில் சாமானிய மக்களுக்கு பலன் கிடைக்கும் வகையில் ஜி.எஸ்.டி. வரி விகிதத்தில் மாற்றங்கள் செய்வது குறித்து ஆலோசிக்கப்பட்டது. குறிப்பாக பொது மக்கள் பயன்படுத்தும் 100-க்கும் மேற்பட்ட பொருட்களின் வரி விகிதங்களை மாற்றுவதற்கான திட்டம் தயாரிக்கப்பட்டு வருகிறது.

    இதில் உணவு பொருட்களுக்கு விதிக்கப்படும் 12 சதவீத ஜி.எஸ்.டி. வரியை 5 சதவீதமாக குறைப்பது, மருந்து மற்றும் மருத்துவ உபகரணங்கள், விவசாயிகள் அதிகம் பயன்படுத்தும் டிராக்டர்கள் உள்ளிட்டவற்றிற்கான ஜி.எஸ்.டி. வரியை குறைப்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.

    வரி குறைக்கப்படும் பட்சத்தில் ஜி.எஸ்.டி. வருவாய் பாதிக்கப்படும் என்பதால் அதை ஈடுகட்ட சில பொருட்கள் மீதான வரியை உயர்த்துவது குறித்தும் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.

    இதன்படி சில டிராக்டர்களின் விலை 5 சதவீதம் வரை குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் மருந்துகளுக்கான வரி 5 சதவீதம் வரை குறைய உள்ளது. அதே நேரம் மின் வாகனங்களின் மீதான ஜி.எஸ்.டி. வரி அதிகரிக்கப்பட உள்ளது. இதனால் அந்த வாகனங்களின் விலை உயரும்.

    தற்போது மருத்துவ மற்றும் ஆயுள் காப்பீடு திட்டங்களுக்கு ஜி.எஸ்.டி. வரி 18 சதவீதமாக உள்ளது. இது 12 சதவீதமாக குறையும் என தெரிகிறது. சிமென்ட் மீதான வரியில் மாற்றம் இருக்காது. அதே நேரம் அழகுசாதன பொருட்கள், குளிர்பானங்கள், சிகரெட், புகையிலை மீதான ஜி.எஸ்.டி. வரி உயர உள்ளது.

    இதுதொடர்பாக வருகிற 19-ந் தேதி நடைபெற உள்ள கூட்டத்தில் முடிவுகள் எடுக்கப்படுகிறது. இந்த முடிவுகள் ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டத்தில் சமர்ப்பிக்கப்படும். அதைத்தொடர்ந்து வரி விகிதங்களில் மாற்றம் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    • டெல்லி சுற்றுவட்டாரப் பகுதிகளில் அடர் பனிமூட்டம் போல மாசு புகை சூழ்ந்துள்ளது
    • தமிழ்நாட்டில் காற்றின் தரக் குறியீடு சராசரியாக 164 ஆக உள்ளது

    டெல்லியில் மக்களை இயல்பு வாழக்கையை முடக்கிப்போடும் அளவுக்கு காற்று மாசு கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு அதிகரித்து வருகிறது. அரியானா, உத்தரப் பிரதேசம், பாகிஸ்தான் பஞ்சாப் மாகாணம் ஆகியவற்றில் கடந்த சில வாரங்களாக காற்றின் தரம் அதலபாதாளத்துக்குச் சென்றுள்ளது.

    டெல்லி சுற்றுவட்டாரப் பகுதிகளில் அடர் பனிமூட்டம் போல மாசு புகை சூழ்ந்துள்ளது. இதனால் விபத்துகளும் அரங்கேறி வருகிறது. இவை மட்டுமின்றி சென்னை உட்பட இந்தியாவின் பெரு நகரங்களில் காற்றின் தரம் தாறுமாறாக குறைந்து வருகிறது. இதற்கிடையே மாசுபட்ட காற்றை சுவாசிப்பதால் ஆரோக்கியமாக உள்ளவர்களுக்கும் உடல்ரீதியான பலவித நோய்களும் தாக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

    அந்த வகையில் சிகெரெட் புகைப்பதால் ஏற்படும் அபாயங்களான புற்று நோய் உள்ளிட்ட  தீங்குகள் மாசுபட்ட காற்றை சுவாசிப்பதாலும் ஏற்படுகிறது என்ற ஒப்பீடு வெளியாகி அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது.

    இந்தியாவிலேயே டெல்லி காற்றின் தரம் 978 என்ற மோசமான நிலையில் உள்ளது. டெல்லியில் இருப்பது ஒரு நாளைக்கு சுமார் 40 சிகரெட்டுகளை புகைப்பதற்கு சமம் என்று தெரியவந்துள்ளது. அரியானாவில் இருப்பது ஒரு நாளைக்கு 29 சிகெரெட்டுகளை சுவாசிப்பதற்கு சமமாகும்.

    தமிழ்நாட்டில் காற்றின் தரக் குறியீடு சராசரியாக 164 ஆக உள்ள நிலையில் தமிழ்நாட்டில் இருப்பது ஒரு நாளைக்கு 2 சிகெரெட்டுகளை புகைப்பதால் ஏற்படும் தீங்குகளை விளைவிக்கும். இதேபோல், ஆந்திர தெலுங்கானாவில் தினம் 2 சிகெரெட்டுகள், கேரளா, கர்நாடகாவில் தினம் 1 சிகெரெட்டுகள் புகைப்பதற்கு ஈடாக காற்றின் தரம் உள்ளது என்று தெரியவந்துள்ளது.

    • துண்டுகளில் இருந்து பஞ்சுகளை மட்டும் தனியாக பிரித்தெடுக்கிறார்கள்.
    • வீடியோ வைரலான நிலையில் பயனர்கள் சிலர், இந்த பொம்மைகள் குழந்தைகளுக்கு தீங்கு விளைவிக்கும் என பதிவிட்டனர்.

    புகைபிடிப்பது உடல்நலத்திற்கு கேடு என்பதால் புகைப்பழக்கத்திற்கு எதிராக பல்வேறு விழிப்புணர்வு பிரசாரங்கள் செய்யப்பட்டு வருகின்றன. இந்நிலையில் நொய்டாவை சேர்ந்த நபன்குப்தா என்பவர் சிகரெட் துண்டுகளை மறுசுழற்சி செய்து அதன் மூலம் பொம்மைகள் தயாரிக்கும் வீடியோ இணையத்தில் பகிரப்பட்டுள்ளது.

    இன்ஸ்டாகிராமில் பகிரப்பட்ட அந்த வீடியோ 60 வினாடிகள் உள்ளது. அதில், ஏராளமான சிகரெட் துண்டுகளை ஒரு சாக்கு பையில் அடைக்கப்பட்டுள்ளது. அந்த துண்டுகளில் இருந்து பஞ்சுகளை மட்டும் தனியாக பிரித்தெடுக்கிறார்கள். பின்னர் அந்த பஞ்சுகளை மறுசுழற்சி செய்வது குறித்த விளக்கத்தை குப்தா விளக்குகிறார்.

    தொடர்ந்து மறுசுழற்சி செய்யப்பட்ட பஞ்சுகளை பொம்மைகளுக்குள் அடைத்து விதவிதமான வண்ணங்களில் பொம்மைகள் தயாரிப்பது போன்ற காட்சிகள் உள்ளன. இந்த வீடியோ வைரலான நிலையில் பயனர்கள் சிலர், இந்த பொம்மைகள் குழந்தைகளுக்கு தீங்கு விளைவிக்கும் என பதிவிட்டனர். அதே நேரம் சில பயனர்கள், மறுசுழற்சி செய்யப்பட்டு தான் அவை பயன்படுத்தப்படுகின்றன. எனவே குப்தாவின் முயற்சியை கேலி செய்ய வேண்டாம் என பதிவிட்டு வருகின்றனர். 



    • ஒருவர் புகைபிடிப்பதை நிறுத்தும் போது அவரின் வாழ்க்கை தரம் மேம்படுகிறது.
    • புகைப்பிடிப்பதை கைவிட்டால் முடிந்த வரை உடல் ஆரோக்கியத்தை மீட்டெடுக்கலாம் என்றார்.

    பெங்களுர்:

    ஒவ்வொரு முறை சிகரெட் புகைக்கும் போது வாழ்வில் 19.5 நிமிடம் குறைவதாக புதிய ஆய்வில் தெரிய வந்துள்ளது. ஆண்களின் வாழ்வில் 17 நிமிடம் குறைவதாகவும், பெண்களின் வாழ்வில் 22 நிமிடம் குறைவதாகவும் அந்த ஆய்வில் தகவல் வெளியாகி உள்ளது.

    ஒவ்வொரு முறை சிகரெட் பிடிக்கும் போதும் ஒருவர் வாழ்வில் 11 நிமிடம் குறைவதாக பழைய ஆய்வுகள் தெரிவித்து இருந்தன.

    தற்போது லண்டன் பல்கலைக்கழகம் வெளி யிட்டுள்ள புதிய ஆய்வில் ஒருவர் 20 சிகரெட்கள் கொண்ட முழு பாக்கெட்டை பிடித்தால் அவர் வாழ்வில் முழுதாக 7 மணி நேரம் குறைகிறது.

    ஒருவர் ஒரு நாளைக்கு 10 முறை சிகரெட் பிடிப்பதை நிறுத்தி விட்டால் ஒரு வாரத்தில் உள்ள 7 நாட்களில் ஒரு முழு நாளை சேமிக்கிறார். அப்படி பார்க்கும்போது ஒரு ஆண்டில் 50 நாளை முழுதாக சேமித்தவர் ஆவார்.

    ஆனால் சிகரெட் பிடிப்பதை நிறுத்தி விட்டால் இழந்த நேரத்தை மீட்டு விடலாம் என்று லண்டன் பல்கலைக்கழகம் சமீபத்தில் புதிய ஆய்வறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

    இதுகுறித்து பெங்களூர் மருத்துவ மனையின் நுரையீரல் மற்றும் மருத்துவத் துறைத் தலைவரும், ஆலோசகருமான டாக்டர் பிரகதி ராவ் கூறியதாவது:-

    ஒருவர் புகைபிடிப்பதை நிறுத்தும் போது அவரின் வாழ்க்கை தரம் மேம்படுகிறது. மூச்சுத் திணறல் குறைகிறது. நுரையீரலில் ஏற்படும் தொற்று குறைவதால் அவர் மருத்துவமனையில் சேர்க்கப்படும் அபாயமும் குறைகிறது. இதை அவர்களின் நுரையீரல் செயல்பாடு சோதனையின் மூலம் கண்டறியலாம். அது ஒரு நொடியில் ஒருவர் எவ்வளவு காற்றை வெளியேற்ற முடியும் என்பதை மதிப்பிட்டு சொல்லும்.

    10 ஆண்டுகளுக்கும் மேலாக ஒரு நாளைக்கு ஒரு பாக்கெட் சிகரெட் பிடிப்பவர்களாக இருந்தாலும் சிகரெட் பிடிப்பதை நிறுத்தி விட்டால் உடலில் நல்ல முன்னேற்றத்தைக் காணலாம். புகைபிடிக்கும் போது நுரையீரலின் செயல்பாடு 60 சதவீதமாக இருந்தால் புகைப்பிடிப்பதை நிறுத்தும்போது நுரையீரலின் தரம் 70 சதவீதமாக உயரும். ஆனால் 80 சதவீதமாக உயராது. புகைப்பிடிப்பதை கைவிட்டால் முடிந்த வரை உடல் ஆரோக்கியத்தை மீட்டெடுக்கலாம் என்றார்.

    ×