என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "கடலுக்கு"
கடலூர்:
தமிழகத்தின் வங்காள விரிகுடா, மன்னார் வளைகுடா மற்றும் பாக். ஜலசந்தி கடற்பகுதிகளில் ஏப்ரல், மே மற்றும் ஜூன் மாதங்களை மீன் உள்ளிட்ட கடல்வாழ் உயிரிகளின் இனப்பெருக்க காலமாக, மத்திய அமைச்சகம் மீன்வளத்துறை கண்டறிந்துள்ளது.
இந்த நாட்களில் மீன் வளத்தை பெருக்கும் நோக்கில் இந்த கால கட்டத்தில் ஆண்டுதோறும் 61 விசைப்படகுகளில் மீன்பிடிக்க தடை விதிக்கப்படுகிறது. தமிழகம், புதுச்சேரியில் மீன்பிடித் தடைக்காலம் கடந்த ஏப்ரல் 15-ல் தொடங்கியது.
தமிழகத்தில் கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம், தஞ்சாவூர், நாகப்பட்டினம், கடலூர், விழுப்புரம், சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட14 கடற்கரை மாவட்டங்களைச் சேர்ந்த 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விசைப்படகுகள் மற்று ம்இழுவை ப்படகுகள்கடற்கரை பகுதிகளில் நங்கூரமிடப்பட்டு நிறுத்தப்பட்டுள்ளன.
இந்நிலையில், மீன்பிடி தடைக்காலம் வருகிற 14-ந் தேதியுடன் முடிகிறது. எனவே கடலூர் மாவட்ட த்தை சேர்ந்த மீனவர்கள் தங்களது படகு களை பழுது நீக்கும் பணியில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். படகுகளை துறைமுகத்தின் கரை பகுதிக்கு கொண்டு வந்து வெல்டிங் செய்வது, படகுமுழுவதும் வர்ணம் பூசுவது, புதிய வலைகளை நெய்தல், பழைய வலைகளை சீரமைத்தல்போன்ற பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் படகுகளின் இயக்கம் சீராக உள்ளதா? என துறைமுக பகுதிகளில்வெள்ளோட்டம் பார்த்து வருகின்றனர்.
மீன்பிடி துறைமுகத்தின் கரை பகுதிக்கு கொண்டு வந்து வெல்டிங் செய்தல், படகு முழுவதும் வர்ணம் பூசுதல், புதிய வலைகள் நெய்தல், பழைய வலைகளை சீரமைத்தல் போன்ற பணிகளை மேற்கொண்டுவருகின்றனர். மேலும் சீரமைத்த படகுகள் நன்றாக இயங்குகிறதா? என்று துறைமுகம் பகுதியில் வெள்ளோட்டமும் பார்த்து வருகிறார்கள்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்