search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 231320"

    • கல்லூரி மாணவா்களுக்கு கல்லூரிகளுக்கே சென்று பூஸ்டர் தடுப்பூசி செலுத்தப்படும்.
    • முதல் 2 தவணை தடுப்பூசிகளை ஒப்பிடும்போது பூஸ்டர் தடுப்பூசி குறைந்த அளவு பயனாளிகளே செலுத்திக் கொண்டுள்ளனா்.

    கோவை:

    கொரோனா நோய்த் தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்துவதில் தடுப்பூசி முக்கிய பங்காற்றி வருகிறது. ெகாரோனா நோய்த் தொற்று தொடா்ந்து உருமாறிக் கொண்டே இருப்பதால் பூஸ்டர் தடுப்பூசி செலுத்த மருத்துவ வல்லுனர்கள் அறிவுறுத்தி உள்ளனர்.

    இதனைத் தொடா்ந்து, கடந்த ஜனவரி முதல் பூஸ்டர் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. பொது மக்களிடையே முதல் 2 தவணை தடுப்பூசிகள் செலுத்திக் கொள்வதற்கு இருந்த ஆா்வம் பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக் கொள்வதில் இல்லை. முதல் 2 தவணை தடுப்பூசிகளை ஒப்பிடும்போது பூஸ்டர் தடுப்பூசி குறைந்த அளவு பயனாளிகளே செலுத்திக் கொண்டுள்ளனா்.

    இந்நிலையில் கல்லூரி மாணவா்களுக்கு கல்லூரிகளுக்கே சென்று பூஸ்டர் தடுப்பூசி செலுத்தப்படும் என்று சுகாதாரத் துறை அமைச்சா் தெரிவித்திருந்தாா். இதனைத் தொடா்ந்து, கோவை மாவட்டத்தில் கல்லூரிகளுக்கே சென்று பூஸ்டர் தடுப்பூசி செலுத்தும் பணியினை சுகாதாரத் துறையினா் தொடங்கியுள்ளனா்.

    இதுகுறித்து சுகாதாரத் துறை அதிகாரிகள் கூறியதாவது:-

    கோவை மாவட்டத்தில் முதல் தவணை தடுப்பூசி 32 லட்சத்து 33 ஆயிரத்து 171 போ், 2-வது தவணை தடுப்பூசி 27 லட்சத்து 77 ஆயிரத்து 7 போ் செலுத்திக் கொண்டுள்ளனா். ஆனால், பூஸ்டர் தடுப்பூசியை 2 லட்சத்து 11 ஆயிரத்து 561 போ் மட்டுமே செலுத்திக் கொண்டுள்ளனா்.

    தொடக்கத்தில் கட்டணம் செலுத்த வேண்டியிருந்ததால் மக்கள் போதிய அளவில் ஆா்வம் காட்டாமல் இருந்தனா். தற்போது அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு ஆஸ்பத்திரிகளில் பூஸ்டர் தடுப்பூசி இலவசமாக செலுத்தப்படுகிறது.

    இருந்தும் பூஸ்டர் தடுப்பூசி செலுத்துவதில் போதிய இலக்கை எட்ட முடியவில்லை. இதனால் கல்லூரி மாணவா்களுக்கு கல்லூரிகளுக்கே சென்று தடுப்பூசி செலுத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தவிர தொழிற்சாலைகளிலும் சிறப்பு முகாம் நடத்தப்பட்டு தொழிலாளா்களுக்கு தடுப்பூசி செலுத்தப்படுகிறது.

    இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

    • இந்த பேரூராட்சியில் 10 ஆயிரம் பேருக்கு மேல் தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
    • 3-ம் தவணை தடுப்பூசி அனைவருக்கும் இலவசமாக வழங்க வேண்டும் என்ற இலக்கோடும் வீடு வீடாக சென்று பொதுமக்களுக்கு தடுப்பூசி செலுத்தி வருகின்றனர்.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம், திட்டச்சேரி பேரூராட்சியில் கடந்த சில மாதங்களாக அரசு மருத்துவமனை சுகாதார துறையினர் மூலம் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இதுவரை இந்த பேரூராட்சியில் 10 ஆயிரம் பேருக்கு மேல் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இந்நிலையில் 100 சதவீத தடுப்பூசி என்ற இலக்கோடும், 3-ம் தவணை தடுப்பூசி அனைவருக்கும் இலவசமாக வழங்க வேண்டும் என்ற இலக்கோடும் பேரூராட்சி செயல் அலுவலர் கண்ணன், இளநிலை உதவியாளர் கோவிந்தராஜ், கிராம சுகாதார செவிலியர் மரகதம், கிராம நிர்வாக அலுவலர் குமரேசன் மற்றும் சுகாதார பணியாளர்கள் வீடு வீடாக சென்று பொதுமக்களுக்கு தடுப்பூசி செலுத்தி வருகின்றனர். நடமாடும் மருத்துவ குழுவினர் புறப்பட்டு பொதுமக்கள் கூடும் இடங்களுக்கு சென்று தடுப்பூசி செலுத்துகின்றனர். நேற்று சுமார் 200 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. இதன்மூலம் பேரூராட்சி பகுதியில் 80 சதவீத தடுப்பூசி போடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    • சேலம் மாவட்டத்தில் காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை 33-வது கொரோனா தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டது.
    • ஊரகப் பகுதியில் 2,315, சேலம் மாநகராட்சிப் பகுதியில் 375 என மொத்தம் 2,690 தடுப்பூசி மையங்கள் அமைக்கப்பட்டது.

    சேலம்:

    சேலம் மாவட்டத்தில் 33-வது கொரோனா தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டது. இந்த முகாம் காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை நடைபெற்றது. ஊரகப் பகுதியில் 2,315, சேலம் மாநகராட்சிப் பகுதியில் 375 என மொத்தம் 2,690 தடுப்பூசி மையங்கள் அமைக்கப்பட்டது.

    இந்த முகாமில் சேலம் மாநகராட்சி பகுதியில் 9 ஆயிரத்து 894 பேருக்கும், சேலம் புறநகர் பகுதியில் 60 ஆயிரத்து 980 பேருக்கும், ஆத்தூர் பகுதியில் 17 ஆயிரத்து 963 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. பொதுமக்கள் அனைவரும் முகக் கவசம் அணிந்து சமூக இடை வெளியைக் கடைப்பிடித்து தடுப்பூசி செலுத்திக் கொண்டனர். இதில் 15,500-க்கு மேற்பட்ட அலுவலர்கள், பணியாளர்கள் ஈடுபட்டனர்.

    இதுவரை 8,19,784 பேருக்கு முதல் தவணையும், 12,81,701 பேருக்கு இரண்டாம் தவணையும், 56,514 பேருக்கு முன்னெச்சரிக்கைபூஸ்டர் டோஸ் தடுப்பூசிஎன மொத்தம்21,57,999 பேருக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது.

    • தமிழகத்திலும் குறைந்த தொற்று தற்போது ஆயிரத்தை நெருங்கி உள்ளது.
    • 60 வயதுக்கு மேற்பட்டவா்களுக்கு மட்டுமே இலவசமாக பூஸ்டர் தடுப்பூசி வழங்கப்பட்டு வந்தது.

    கோவை 

    இந்தியாவில் குறைந்து வந்த கொரோனா தொற்று தற்போது மீண்டும் அதிகரித்து வருகிறது. தமிழகத்திலும் குறைந்த தொற்று தற்போது ஆயிரத்தை நெருங்கி உள்ளது.

    இதையடுத்து ெகாரோனா நோய்த் தொற்று பரவலைத் தடுக்கும் விதமாக அரசு சாா்பில் தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன.இரண்டாம் தவணை பெற்று 9 மாதங்கள் நிறைவடைந்த முன்களப் பணியாளா்கள், சுகாதாரப் பணியாளா்கள், 60 வயதுக்கு மேற்பட்டவா்களுக்கு மட்டுமே இலவசமாக பூஸ்டர் தடுப்பூசி வழங்கப்பட்டு வந்தது.இந்த நிலையில், 75-வது சுதந்திர தின விழாவையொட்டி ஜூலை 15 முதல் 75 நாட்களுக்கு 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் பூஸ்டர் தவணை தடுப்பூசியை இலவசமாக வழங்க அரசு முடிவு செய்துள்ளது.

    இதையடுத்து தமிழகம் முழுவதும் 33 -வது மெகா ெகாரோனா தடுப்பூசி முகாம் 50 ஆயிரம் இடங்களில் இன்று நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாக கோவை மாவட்டத்தில் ஊரகப் பகுதிகளில் 1,081 மையங்கள், மாநகராட்சியில் 340 மையங்கள், நகராட்சிகளில் 109 மையங்கள் என மொத்தம் 1,530 இடங்களில் ெகாரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது.

    முதல் தவணை, இரண்டாம் தவணை மற்றும் பூஸ்டர் தவணை தடுப்பூசி செலுத்தி கொள்ளாதவா்கள் சிறப்பு முகாமில் பங்கேற்று தடுப்பூசி செலுத்திகொண்டு நோய்த் தொற்றில் இருந்து பாதுகாத்து கொள்ள வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டது.அதன்படி இந்த முகாம்களை பயன்படுத்திக் கொண்டு 18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக் கொண்டனர். முகாமிற்கு வந்த மக்கள் வரிசையில் காத்திருந்து ஆர்வமாக கொரோனா தடுப்பூசியை செலுத்திக் கொண்டனர்.

    • ஈரோடு மாவட்டத்தில் இன்று 1,597 மையங்களில் காலை தடுப்பூசி முகாம் தொடங்கியது.
    • இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு தடுப்பூசி செலுத்தி கொண்டனர்.

    ஈரோடு:

    தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்கும் வகையில் மெகா தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் தமிழகத்தில் 4 -ம் அலையை தடுக்கும் வகையில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) மாபெரும் கொரோனா தடுப்பூசி முகாம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    அதன்படி இன்று ஈரோடு மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனைகள் , அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், நகர்ப்புற சுகாதார மையங்கள் மற்றும் பள்ளிகள் உள்பட 1,597 மையங்களில் காலை 7 மணிக்கு தடுப்பூசி முகாம் தொடங்கியது.

    12 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் முதல் மற்றும் இரண்டாம் தவணை தடுப்பூசிகள் செலுத்தப்பட்டன. இதே போல் 18 வயதுக்கு மேற்பட்ட இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்தி 6 மாதம் கடந்தவர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி இலவசமாக போடப்பட்டது.

    இன்று மட்டும் மாவட்டத்தில் 1.50 லட்சம் பேருக்கு தடுப்பூசி போட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. தடுப்பூசி செலுத்தும் பணியில் மாவட்டம் முழுவதும் 3,196 பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். 70 வாகனங்கள் முகாமிற்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது.

    பொதுமக்கள் சிரமம் இன்றி தடுப்பூசி செலுத்தி கொள்ள பொதுமக்கள் அதிக கூடும் இடங்களான ஈரோடு பஸ் நிலையம், ரெயில் நிலையம் உள்ளிட்ட இடங்களில் தடுப்பூசி முகாம் அமைக்கப்பட்டிருந்தன.

    இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு தடுப்பூசி செலுத்தி கொண்டனர். குறிப்பாக தற்போது 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் பூஸ்டர் தடுப்பூசி இலவசமாக போடப்பட்டு வருகிறது.

    இதனால் இன்று பூஸ்டர் தடுப்பூசியை ஏராளமானோர் ஆர்வத்துடன் போட்டுக்கொண்டனர். 

    • கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் இன்று நடந்தது.
    • மதுரை மாவட்டத்தில் கொரோனா சிறப்பு முகாம்களில் பொதுமக்கள் கூட்டம் குறைந்த அளவே இருந்தது.

    மதுரை

    தமிழகம் முழுவதும் கொரோனா மீண்டும் பரவி வருகிறது. மதுரையில் நேற்று மட்டும் 17 பேருக்கு நோய் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. மதுரை மாவட்டத்தில் அரசு ஆஸ்பத்திரி மற்றும் தனியார் மருத்துவமனைகளில் நோய்த் தொற்று பாதிப்புடன் உள்ள 154 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் மதுரை மாவட்டத்தில் நோய் தொற்றை தடுக்கும் வகையில், கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்களை தமிழக அரசு நடத்தி வருகிறது. அதன்படி இன்று காலை 7 மணிக்கு தடுப்பூசி முகாம் தொடங்கி நடந்து வருகிறது.

    இது தொடர்பாக மதுரை மாவட்ட சுகாதாரத்துறை துணை இயக்குனர் செந்தில்குமார் கூறுகையில், "மதுரை மாவட்டத்தில் 1500 இடங்களில் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்கள் நடந்து வருகின்றன. இங்கு 1600 ஊழியர்கள் வேலை பார்த்து வருகின்றனர். இரவு 7 மணி வரை சிறப்பு முகாம் நடக்கும். எனவே தடுப்பூசி போட்டுக் கொள்ளாதவர்கள், சிறப்பு முகாமில் கலந்து கொண்டு பயன் அடையலாம்.

    மதுரை மாவட்டத்தை பொருத்தவரை முதல் டோஸ்- 87 சதவீதம், 2-வது டோஸ்- 75 சதவீதம் போடப்பட்டு உள்ளது. பூஸ்டர் டோஸ் 3 லட்சம் பேருக்கு செலுத்தப்பட்டு உள்ளன" என தெரிவித்தார்.

    மதுரை மாவட்டத்தில் கொரோனா சிறப்பு முகாம்களில் பொதுமக்கள் கூட்டம் குறைந்த அளவே இருந்தது. ஒரு சில பகுதிகளில் 50-க்கும் மேற்பட்டோர் வரிசையாக வந்திருந்து, தடுப்பூசி போட்டு செல்வதை பார்க்க முடிந்தது.

    • ஈரோடு மாவட்டத்தில் நாளை 1,597 மையங்களில் கொரோனா தடுப்பூசி முகாம் தொடங்க உள்ளது.
    • பொதுமக்கள் அனைவரும் தடுப்பூசி முகாமில் கலந்து கொண்டு அச்சமின்றியும், தயக்கமின்றியும் தடுப்பூசியை செலுத்திக் கொண்டு கொரோனா 4-ம் அலையை தடுத்து சமூகத்தையும் பாதுகாத்துக் கொள்ளுமாறு கலெக்டர் கிருஷ்ணனுண்ணி கேட்டுக்கொண்டுள்ளார்.

    ஈரோடு:

    தமிழகத்தில் கொரோனா 4-ம் அலை பரவுதலை கட்டுப்படுத்த தமிழகம் முழுவதும் 50 ஆயிரம் மையங்களில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) மாபெரும் சிறப்பு கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளது.

    இதில் 12 வயதிற்கு மேற்பட்ட மற்றும் 18 வயதிற்கு உட்பட்ட மாணவர்கள், 18 வயதிற்கு மேற்பட்ட பொதுமக்கள் அனைவருக்கும் முதல் தவணை மற்றும் 2-ம் தவணை, இரு தவணை தடுப்பூசி செலுத்தி கொண்ட 18 வயது மேற்பட்ட வர்களுக்கு 2-வது தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டு 6 மாதங்கள் கடந்தவர்கள் அனைவருக்கும் பூஸ்டர் தடுப்பூசி இலவசமாக அனைத்து அரசு மருத்து வமனைகள், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், நகர்புற சுகாதார மையங்களில் செலுத்தப்பட உள்ளது.

    ஈரோடு மாவட்டத்தில் இந்த மாபெரும் தடுப்பூசி முகாமையொட்டி நாளை அரசு மருத்துவமனைகள், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், நகர்புற சுகாதார மையங்கள் மற்றும் பள்ளிகள் உள்பட 1597 மையங்களில் காலை 7 மணி முதல் மாலை 7 மணி வரை 12 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் முதல் மற்றும் 2-ம் தவணையாகவும், 18 வயதுக்கு மேற்பட்ட 2-ம் தவணை செலுத்தி 6 மாதம் கடந்தவர்கள் அனைவருக்கும் பூஸ்டர் தடுப்பூசி என 1.50 லட்சம் பேருக்கு இலவசமாக செலுத்தப்பட உள்ளது.

    மேலும் இந்த மாபெரும் தடுப்பூசி முகாமில் ஈரோடு மாவட்டம் முழுவதும் 3196 பணியாளர்கள் தடுப்பூசி செலுத்தும் பணி செய்திடவும், 70 வாகனங்கள் முகாமிற்காக பயன்படுத்தப்பட உள்ளது. தற்போது மிக வேகமாக பரவி வரும் ஒமைக்ரான் வகை கொரோனா பாதிப்பி லிருந்து பாதுகாத்துக் கொள்ள தடுப்பூசி மிகவும் அவசியம்.

    ஈரோடு மாவட்ட பொது மக்கள் அனைவரும் மாபெரும் கொரோனா தடுப்பூசி முகாமில் கலந்து கொண்டு அச்சமின்றியும், தயக்கமின்றியும் தடுப்பூசியை செலுத்திக் கொண்டு கொரோனா 4-ம் அலையை தடுத்து சமூகத்தையும் பாதுகாத்துக் கொள்ளுமாறு கலெக்டர் கிருஷ்ணனுண்ணி கேட்டுக்கொண்டுள்ளார்.

    • 3-வது தவணை முன்னெச்சரிக்கை தடுப்பூசி செலுத்துவதற்கு ஏதுவாக நாளை (ஞாயிற்றுக்கிழமை) மதுரை மாவட்டத்தில் 33-வது மெகா தடுப்பூசி முகாம் நடக்கிறது.
    • மதுரை மாவட்டத்தில் மெகா தடுப்பூசி முகாம் நாளை நடக்கிறது.

    மதுரை

    மதுரை மாவட்ட கலெக்டர் அனீஷ்சேகர் விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்ப தாவது-

    நாடு முழுவதும் தற்போது கொரோனா நோய் தொற்று அதிகரித்து வரும் நிலையில் தொற்று பரவலை கட்டுப்படுத்தும் வகையில் 12 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் 33-வது மெகா தடுப்பூசி முகாம் மூலமாக கொரோனா தடுப்பூசி செலுத்த தீர்மா னிக்கப்பட்டுள்ளது.

    இதன் அடிப்படையில் முதல் தவணை மற்றும் 2-வது தவணை கொரோனா தடுப்பூசி இதுவரை போடாத வர்களுக்கும், 2-ம் தவணை தடுப்பூசி செலுத்தி 6 மாதங்கள் நிறைவு பெற்ற 18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும், 3-வது தவணை முன்னெச்சரிக்கை தடுப்பூசி செலுத்துவதற்கு ஏதுவாக நாளை (ஞாயிற்றுக்கிழமை) மதுரை மாவட்டத்தில் 33-வது மெகா தடுப்பூசி முகாம் நடக்கிறது.

    மதுரை ஊரக பகுதிகளில் 909 மையங்களில் 909 தடுப்பூசி செலுத்தும் பணி யாளர்களை கொண்டும், நகர் பகுதிகளில் 550 மைய ங்களில் 550 தடுப்பூசி செலுத்தும் பணி யாளர்களை கொண்டும் மொத்தம் 1,459 மையங்களில் 1,459 தடுப்பூசி செலுத்தும் பணியாளர்களை கொண்டு சிறப்பு தடுப்பூசி முகாம் காலை 7 முதல் மாலை 7 மணி வரை தடுப்பூசி ேபாடப்படுகிறது.

    அனைத்து வாக்குசாவடி மையங்கள், அரசு மருத்துவ மனைகள், அரசு ஆரம்ப சுகாதார மையங்கள், நகர்புற ஆரம்ப சுகாதார மையங்கள் மற்றும் துணை சுகாதார நிலையங்கள், அங்கன்வாடி மையங்களிலும் தடுப்பூசி முகாம் நடைபெறும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • அனைவரும் பூஸ்டர் தடுப்பூசி செலுத்தி கொள்ள வேண்டும் என சுகாதாரத்துறை துணை இயக்குனர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
    • கீழக்கரை நகராட்சி பகுதியில் 95 சதவீதம் மக்கள் கொரோனா தடுப்பூசி செலுத்தி கொண்டனர்.

    கீழக்கரை

    கொரோனா பரவல் தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கொரானா பூஸ்டர் தடுப்பூசி இலவசமாக செலுத்தப்பட்டு வருகிறது. கீழக்கரை நகராட்சி மற்றும் தனியார் கல்லூரி முகாமில் நேற்று 300-க்கும் மேற்பட்ட மக்கள் பூஸ்டர் தடுப்பூசி போட்டுக் கொண்டனர்.

    ஆய்வு பணி மேற்கொள்ள வந்த சுகாதார துறை துணை இயக்குனர் அஜீத் பிரபு குமார் நிருபர்களிடம் கூறிய தாவது:-

    கீழக்கரை நகராட்சி பகுதியில் 95 சதவீதம் மக்கள் கொரோனா தடுப்பூசி செலுத்தி கொண்டனர். கொரோனா பாதிப்பில் இருந்து தப்பிக்க தடுப்பூசி மட்டுமே ஆயுதம் என்று அரசு அறிவித்துள்ளது. உருமாறிய ஒமைக்ரான் கொரோனாவுக்கு எதிராக பூஸ்டர் டோஸ் 85 சதவீதம் சிறப்பாக செயல்படுவது ஆய்வில் தெரிய வந்துள்ளது.

    இதையடுத்து 2 டோஸ் தடுப்பூசி போட்டவர்களுக்கு மூன்றாவதாக பூஸ்டர் டோஸ் போடப்படுகிறது. தற்போது கொரானா பூஸ்டர் தடுப்பூசி போடும் பணி நடைபெறுகிறது. மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது, இதைத் தொடர்ந்து நாளை (7-ந்தேதி) ஞாயிற்றுக்கிழமை கீழக்கரை அரசு மருத்துவமனை, நகராட்சி அலுவலக வளாகம், ஆரம்ப சுகாதார நிலையம், நாடார் பள்ளி, பி.எஸ்.எம் மருத்துவமனை உள்பட பல்வேறு இடங்களில் இலவச பூஸ்டர் தடுப்பூசி சிறப்பு முகாம் நடைபெறும். பொதுமக்கள் அனை வரும் பூஸ்டர் தடுப்பூசி செலுத்த முன்வர வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    வட்டார மருத்துவர் செய்யது ராசிக்தீன், வட்டார சுகாதார துறை மேற்பார்வையாளர் பக்கீர் முகமது, கவுன்சிலர் மீரான் அலி, நகராட்சி துப்புரவு மேற்பார்வையாளர் சக்தி உள்பட நகராட்சி அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    • கலெக்டர் அலுவலக ஊழியர்களுக்கு கொரோனா பூஸ்டர் தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டு வருகிறது.
    • இந்த தகவலை ராமநாதபுரம் சுகாதாரப் பணிகள் துணை இயக்குனர் அஜித்குமார் தெரிவித்தார்.

    ராமநாதபுரம்

    கொரோனா பாதிப்பில் இருந்து தப்பிக்க தடுப்பூசி மட்டுமே ஆயுதம் என்று அரசு அறிவித்துள்ளது. உருமாறிய ஒமைக்ரான் கொரோனாவுக்கு எதிராக பூஸ்டர் தடுப்பூசி 85 சதவீதம் சிறப்பாக செயல்படுவது ஆய்வில் தெரியவந்துள்ளது.

    இதையடுத்து, 2 டோஸ் கொரோனா தடுப்பூசி போட்டவர்களுக்கு மூன்றாவதாக பூஸ்டர் தடுப்பூசி போடப்படுகிறது.

    ராமநாதபுரம் கலெக்டர் அலுவலக பணியாளர்களுக்கு கொரோனா பூஸ்டர் டோஸ் போடுவதற்கான சிறப்பு முகாமை கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் தொடங்கி வைத்தார்.

    ஏற்கனவே 2 டோஸ் கொரோனா தடுப்பூசி போட்டவர்கள் அனைவரும் பூஸ்டர் டோஸ் போட்டனர். அனைத்து அலுவலகங்களில் இருந்தும் அதிகாரிகள் முதல் அனைத்து பணியாளர்களும் ஆர்வமுடன் பூஸ்டர் டோஸ் போட்டுக்கொண்டனர்.

    மாலை வரை நடந்த சிறப்பு முகாமில் 300-க்கும் அதிகமானோர் தடுப்பூசி செலுத்திக் கொண்டனர். விடுபட்டவர்கள் உடனடியாக தடுப்பூசி செலுத்த வேண்டும்.

    செப்டம்பர்30-ந்தேதி வரை 18 வயது முதல் 59 வயதிற்கு உள்பட்ட அனைவரும் அனைத்து அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் இலவசமாக பூஸ்டர் தடுப்பூசி போடலாம் என்று ராமநாதபுரம் சுகாதாரப் பணிகள் துணை இயக்குனர் அஜித்குமார் தெரிவித்தார்.

    • ஒலிபெருக்கி மூலம் பொதுமக்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
    • முகாமில் வட்டார சுகாதார மேற்பார்வையாளர், சமுதாய சுகாதார செவிலியர்கள், பகுதி சுகாதார செவிலியர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    மதுக்கூர்:

    மதுக்கூர் பேரூராட்சியில் இன்று கொரோனா தவணை தடுப்பூசி சிறப்பு முகாம் நடைபெற்றது. இதனையடுத்து ஒலிபெருக்கி மூலம் பொதுமக்களுக்கு சுகாதார மேற்பார்வையாளர் ரவி மூலம் தகவல் தெரிவிக்கப்பட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.இந்த சிறப்பு ஊக்கு ஊக்குவிப்பு முகாமை பேரூராட்சி தலைவர் வகிதா பேகம் ஹாஜா தலைமையில் செயல் அலுவலர் ராம்பிரசாத் மற்றும் மருத்துவ அலுவலர் ராஜ்குமார் முன்னிலையில் தொடங்கி வைக்கப்பட்டு நடைபெற்றது.

    இந்த முகாமில் வட்டார சுகாதார மேற்பார்வையாளர் சீனிவாசன், சுகாதார ஆய்வாளர்கள் ரவி ,நெடுஞ்செழியன் சமுதாய சுகாதார செவிலியர்கள், பகுதி சுகாதார செவிலியர்கள் என பலர் கலந்து கொண்டனர். இதை எடுத்து பொதுமக்கள் பலர் ஆர்வத்துடன் வந்து தடுப்பூசியினை போட்டு செல்கின்றனர்.

    • தடுப்பூசி செலுத்துவதில் மதுரை பின்தங்கியுள்ளது என அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி அளித்தார்.
    • மதுரை மாவட்டத்தில் முதல் தவணை 86.20 சதவீதமும், 2-ம் தவணை 75.02 சதவீதமுமாக உள்ளது.

    மதுரை

    சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் இன்று மதுரை விமான நிலையத்தில் குரங்கம்மை பரிசோதனை தொடர்பாக ஆய்வு செய்தார். பின்னர் சேடபட்டி ஊராட்சி ஒன்றியம் பெருங்காமநல்லூர், இ.கோட்டைப்பட்டி, மள்ளப்புரம், உத்தப்புரம் ஆகிய கிராமங்களில் அமைக்கப்பட்டுள்ள அரசு துணை சுகாதார நிலையங்களை திறந்து வைத்தார்.

    இதனைத் தொடர்ந்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு வந்தார். அங்கு எலும்பு மாற்று அறுவை சிகிச்சை செய்த நோயாளியை சந்தித்து நலம் விசாரித்தார்.பின்னர் அமைச்சர் நிருபர்களிடம் கூறியதாவது;-

    மதுரை மாவட்டத்தில் தலா ரூ.25 லட்சம் மதிப்பு உடைய 4 துணை சுகாதார நிலையங்கள் திறந்து வைக்கப்பட்டு உள்ளன. முதல்வராக மு.க. ஸ்டாலின் பதவி ஏற்ற நாள் முதல், மதுரை அரசு ஆஸ்பத்திரியில் புதிய, புதிய வசதிகள் செய்து தரப்பட்டு வருகின்றன. அமைச்சர்கள் பழனிவேல் தியாகராஜன், மூர்த்தி ஆகியோர் மதுரை மாவட்டத்திற்கான மருத்துவ கட்டமைப்பை மேம்படுத்துவதற்கான வசதிகளை கேட்டு பெற்று வருகின்றனர்.

    மதுரை கிழக்கு தொகுதியில் 3 துணை சுகாதார நிலையங்கள் அமைப்பது தொடர்பாக அமைச்சர் மூர்த்தி கோரிக்கை விடுத்து உள்ளார். மதுரை அரசு மருத்துவமனையில் கடந்த டிசம்பர் மாதம் 21-ந் தேதி ரூ.40 லட்சம் செலவில் எலும்பு வங்கி திறக்கப்பட்டது. அரசு ஆஸ்பத்திரிகளில் எலும்பு வங்கியின் தேவை, அத்தியாவசியம் ஆகும்.

    தமிழகத்தில் கோவை தனியார் ஆஸ்பத்திரி மற்றும் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை ஆகியவற்றில் மட்டுமே எலும்பு மாற்று அறுவை சிகிச்சை நடத்தப்பட்டு வந்தது. இந்த நிலையில் மதுரை அரசு ஆஸ்பத்திரி, எலும்பு மாற்று அறுவை சிகிச்சை செய்து மகத்தான சாதனை படைத்து உள்ளது. மதுரை அரசு ஆஸ்பத்திரியில் இறந்த 2 பேரிடம் இருந்து 36 எலும்புகள் மற்றும் ஜவ்வுகள் பெறப்பட்டு பத்திரமாக சேமிக்கப்பட்டு வருகிறது. அவற்றின் வாயிலாக 7 பேருக்கு எலும்பு மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டு உள்ளது.

    தமிழகத்தில் தொடங்கப்பட்ட இன்னுயிர் காப்போம் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதில், மதுரை அரசு மருத்துவமனை முதலிடத்தில் உள்ளது .

    தமிழகம் முழுவதும் இன்னுயிர் காப்போம் திட்டம் வாயிலாக 96,807 பேர் சிகிச்சை பெற்று உள்ளனர். மதுரை அரசு மருத்துவமனையில் மட்டும் இதுவரை 3185 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு உள்ளது.

    தமிழகத்தில் இதுவரை முதல் தவணையாக 95.95 சதவீதமும், 2-ம் தவணையாக 88.52 சதவீதம் பேருக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளது. மதுரை மாவட்டத்தில் முதல் தவணை 86.20 சதவீதமும், 2-ம் தவணை 75.02 சதவீதமுமாக உள்ளது.

    தடுப்பூசி செலுத்தி கொள்ளும் பெரு நகரங்களில் மதுரை பின்தங்கிய நிலையில் உள்ளது. இங்கு தடுப்பூசி சதவீத குறைப்பாட்டை நீக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. வருகிற 7-ந் தேதி 50 ஆயிரம் இடங்களில் தடுப்பூசி முகாம் நடக்கிறது.

    மதுரை எய்ம்ஸ் கட்டிட வடிவமைப்பிற்கான டெண்டர் விடும் பணிகள் நடந்து வருகிறது. விரைவில் வரைபடம் தயாரித்து எய்ம்ஸ் அமைய உள்ள இடத்தில் காட்சிப்படுத்தப்பட நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×