search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 231346"

    • ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.வான அமர்கர்க் ஜஸ்வந்த் சிங் வீடுகளில் அமலாக்கத் துறை அதிகாரிகள் இன்று சோதனை நடத்தினர்.
    • அமர்கர்க் ஜஸ்வந்த் சிங் பணத்தை மோசடி செய்ததாக சி.பி.ஐ. வழக்கு பதிவு செய்தது.

    பஞ்சாப் மாநிலத்தில் ஆம் ஆத்மி ஆட்சி நடந்து வருகிறது. அக்கட்சி எம்.எல்.ஏ.வான அமர்கர்க் ஜஸ்வந்த் சிங் வீடுகளில் அமலாக்கத் துறை அதிகாரிகள் இன்று சோதனை நடத்தினர்.

    அமர்கர்க் ஜஸ்வந்த் சிங் மற்றும் அவரது நண்பர்கள், வங்கியில் ரூ.40.92 கோடி கடன் வாங்கி, அதை வணிகத்துக்கு பயன்படுத்துவதாக கூறி, பணத்தை மோசடி செய்ததாக சி.பி.ஐ. வழக்கு பதிவு செய்தது.

    இந்த வழக்கு தொடர்பாக அமலாக்கத்துறையினர் இன்று சோதனை நடத்தினர். மலேர்கோட்லாவில் உள்ள எம்.எல்.ஏ.வின் வீடு மற்றும் வணிக வளாகங்களில் சோதனை நடந்தது. மேலும் அவரது கூட்டாளிகள் சிலரின் வீடுகளில் சோதனை நடத்தப்பட்டது.

    வங்கி மோசடி தொடர்பாக கடந்த மே மாதம் அமர்கர்க் ஜஸ்வந்த் சிங் மற்றும் சிலரின் வீடுகளில் சி.பி.ஐ. சோதனை நடத்தி இருந்தது குறிப்பிடத்தக்கது.

    ஆம் ஆத்மி ஆட்சி நடந்து வரும் டெல்லியில் கலால் வரி ஊழல் வழக்கு தொடர்பாக பஞ்சாபில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு அரசு அதிகாரிகள் மற்றும் ஒப்பந்ததாரர்களின் வீடுகளில் அமலாக்கத் துறை சோதனை நடத்தி இருந்தது.

    • அசைவ உணவு 9 கிலோ கண்டறியப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது.
    • 3 கிலோ தகாத முறையில் சேமித்து வைக்கப்பட்டிருந்தது பறிமுதல் செய்யப்பட்டது.

    திருப்பூர் :

    திருப்பூர் மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் விஜய லலிதாம்பிகை தலைமையில் அதிகாரிகள் அவிநாசி சுற்றுவட்டார பகுதியில் செயல்படும் அசைவ ஓட்டல்கள் மற்றும் பேக்கரிகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.

    அப்போது அசைவஓட்டல்களில் சேமித்து வைக்கப்படும் குளிர்சாதன பெட்டிகள் முறையாக பராமரிக்கப்படுகிறதா? காலாவதியான உணவு பொருட்கள் கொண்டு சமைக்கப்படுகிறதா? என்று ஆய்வு மேற்கொண்டனர்.

    அப்போது குளிர்சாதன பெட்டியில் சமைத்த அசைவ உணவு 9 கிலோ கண்டறியப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் சமைத்த சுண்டல் மற்றும் சன்னா 3 கிலோ தகாத முறையில் சேமித்து வைக்கப்பட்டிருந்தது பறிமுதல் செய்யப்பட்டது. மற்றும் அதிக நிறங்கள் சேர்த்து விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த சிக்கன் 22 கிலோ பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் காலாவதியான காளான் பாக்கெட்டுகள் 4 கிலோவும் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் சம்பந்தப்பட்ட கடைகளுக்கு அபராதமும் விதிக்கப்பட்டது. அதேபோல் பேக்கரிகளில் உணவு பொருட்களை சுத்தமாகவும் சுகாதாரமாகவும் பாதுகாக்க அறிவுறுத்தப்பட்டது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • தான் போதை பொருளை பயன்படுத்த வில்லை என்றும் சட்டத்துக்கு புறம்பாக எதையும் செய்யவில்லை என்றும் பிரதமர் தெரிவித்தார்.
    • பிரதமர் சன்னா மரினுக்கு கடந்த 19-ந் தேதி போதை மருந்து சோதனை நடத்தப்பட்டது.

    ஷெல்சின்கி:

    பின்லாந்து நாட்டின் பெண் பிரதமர் சன்னா மரின். இவர் கடந்த 2019-ம் ஆண்டு தனது 34 வயதில் பின்லாந்தின் பிரதமராக பதவியேற்றதன் மூலம் உலகின் இளம் வயது பிரதமர் என்ற சிறப்பை பெற்றார்.

    இதற்கிடையே சன்னா மரின் சர்ச்சை ஒன்றில் சிக்கினார். தனது வீட்டில் நண்பர்களுடன் சேர்ந்து சன்னா மரின் உற்சாகமாக பாடி, நடனமாடிய வீடியோ சமூக வலைதளங்களில் பரவியது.

    இதில் அவர் போதை பொருளை உட்கொண்டு குத்தாட்டம் போட்டதாக விமர்சனம் எழுந்தது. அவருக்கு கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து எதிர்க் கட்சியினர் பதவி விலக வலியுறுத்தினர். இதற்கு விளக்கமளித்த சன்னா மரின், தான் எந்த போதை பொருளையும் பயன்படுத்த வில்லை என்றும் சட்டத்துக்கு புறம்பாக எதையும் செய்யவில்லை என்றும் தெரிவித்தார்.

    மேலும், போதை பொருள் தொடர்பான சோதனைக்கு தயார் என்றும் அறிவித்தார். இதையடுத்து சன்னா மரினுக்கு கடந்த 19-ந் தேதி போதை மருந்து சோதனை நடத்தப்பட்டது.

    இந்த நிலையில் போதை மருந்து சோதனைகள் முடிவுகள் வெளியிடப்பட்டது. அதில் சன்னா மரின் போதை மருந்து உட்கொள்ளவில்லை என்று தெரியவந்தது.

    இது தொடர்பாக பிரதமர் அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில், பிரதமர் சன்னா மரினிடம் இருந்து எடுக்கப்பட்ட மாதிரிகளை பரிசோதனை செய்ததில் அவர் போதைப் பொருள் பயன்படுத்தவில்லை என்பது தெரிய வந்துள்ளது என்று கூறப்பட்டுள்ளது.

    இதன் மூலம் சன்னா மரினின் பிரதமர் பதவி தப்பியது. கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கொரோனா தொற்று விதிமுறைகளை மீறி சன்னா மரின் இரவு நேர கேளிக்கை விடுதிக்கு சென்றதால் சர்ச்சையில் சிக்கினார். இதற்கு அவர் மன்னிப்பு கேட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • சுதந்திர தின விழா நாளை கொண்டாடப்படுகிறது. இதையடுத்து அசம்பாவித சம்பவங்கள் எதுவும் நடைபெறாமல் இருக்க போலீசார் உஷார்படுத்த ப்பட்டு பல்வேறு தடுப்பு நடவடி க்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
    • இதேபோல் ஈரோடு அருகே உள்ள காவிரி ரெயில் இரும்பு பாலத்தில் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.

    ஈரோடு:

    இந்தியாவின் 75-வது சுதந்திர தின விழா நாளை கொண்டாடப்படுகிறது. இதையடுத்து அசம்பாவித சம்பவங்கள் எதுவும் நடைபெறாமல் இருக்க போலீசார் உஷார்படுத்த ப்பட்டு பல்வேறு தடுப்பு நடவடி க்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

    ஈரோடு மாவட்டத்தில் சுதந்திர தின விழா அமைதியாக நடைபெறும் வகையில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன் உத்தரவின் பேரில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. ஈரோடு மாநகர் பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட தனியார் தங்கும் விடுதிகள் செயல்பட்டு வருகின்றன.

    டவுன் டி.எஸ்.பி.ஆனந்தகுமார் தலைமையில் போலீசார் ஒவ்வொரு தங்கும் விடுதியாக சென்று சோதனை செய்தனர். விடுதியில் தங்கியுள்ள–வர்களின் விவரங்கள் குறித்து கேட்டறிந்தனர். சமீபத்தில் யாரெல்லாம் புதிதாக விடுதியில் தங்கி உள்ளனர் என்ற விபரமும் கேட்டறிந்தனர். விடுதியில் யாரேனும் சந்தேகம் படும்படி இருந்தால் அது குறித்து உடனடியாக காவல்துறைக்கு காவல் தெரிவிக்க வேண்டும் என அறிவுறுத்தினர்.

    இதேபோல் மாவட்டம் முழுவதும் செயல்பட்டு வரும் விடுதிகளில் போலீசார் சோதனை செய்தனர். ஈரோடு மாவட்டத்தில் எல்லை பகுதியில் அமைந்துள்ள சத்தியமங்கலம் பண்ணாரி சோதனை சாவடி, தமிழக- கர்நாடக எல்லை பகுதியில் அமைந்துள்ள காரப்பள்ளம் சோதனை சாவடிகளில் கூடுதல் போலீசார் நியமிக்கப்பட்ட 24 மணி நேரமும் வாகனங்களை தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

    வாகனங்கள் தீவிர சோதனைக்கு பிறகே மாவட்டத்திற்குள் அனுமதிக்கப்படுகின்றன. இதுபோல் மாவட்டத்தில் 12 இடங்களில் உள்ள சோதனை சாவடிகளிலும் போலீசார் உஷார் படுத்தப்ப ட்டு தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இதேபோல் தேசிய நெடுஞ்சாலைகளில் போலீசார் 24 மணி நேரமும் வாகனங்களில் ரோந்து சுற்றி வருகின்றனர். ரெயில் நிலையங்களிலும் போலீஸ் பாதுகாப்பு தீவிரப்படுத்த ப்பட்டு பயணிகள் உடைமை தீவிர பரிசோதனைக்கு பிறகே உள்ளே அனுமதி க்கப்படுகிறது.

    இதேபோல் ஈரோடு அருகே உள்ள காவிரி ரெயில் இரும்பு பாலத்தில் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. சுதந்திர தினத்தை வரவேற்கும் வகையில் ஈரோட்டில் பெரும்பாலும் வீடுகள், கடைகள், வணிக நிறுவனங்கள் முன்பு தேசியக் கொடி ஏற்றப்பட்டு ள்ளது. ஈரோடு மாநகர் பகுதியில் முறை இல்லாமல் கீழ் நோக்கி தேசிய கொடி பலர் கட்டி வைத்திருந்தனர்.

    அதனை போலீசார் பார்த்து சரிசெய்து முறையாக கட்ட சொல்லி வலியுறுத்தினர்.

    • போலீசார் வாகன தணிக்கை மற்றும் கடைகளில் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்
    • பெட்டிக்கடை அருகே சிலர் குட்காவை பதுக்கி விற்பதாக ரேஸ்கோர்ஸ் போலீசாருக்கு தகவல் வந்தது.

    கோவை:

    கோவையில் போலீசார் வாகன தணிக்கை மற்றும் கடைகளில் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். சோதனையின் போது கடைகளில் குட்கா பதுக்கி விற்பது தெரிந்தால் அவர்களை கைது செய்து கடும் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

    சத்தி மெயின் ரோடு ஆம்னி பஸ் நிறுத்தம் அருகே ரத்தினபுரி போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த ஆம்னி வேனை மடக்கி சோதனை செய்தனர். இதில், குட்காவை விற்பனை செய்ய கொண்டு சென்றது தெரியவந்தது.

    இதையடுத்து போலீசார் குட்கா வியாபாரிகளான கணபதி லட்சுமி நகரை சேர்ந்த சந்திரசேகர்(44), பிரதீப்குமார்(21), அழகுபாண்டி (44) ஆகிய 3 பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.1 லட்சத்து 85 ஆயிரம் மதிப்பிலான 190 கிலோ குட்கா மற்றும் ஆம்னி வேன் பறிமுதல் செய்யப்பட்டன.

    இதேபோல், பாப்பநாயக் கன்பாளையம் காய்கடை பஸ் நிறுத்தம் அருகே உள்ள ஒரு பெட்டிக்கடை அருகே சிலர் குட்காவை பதுக்கி விற்பதாக ரேஸ்கோர்ஸ் போலீசாருக்கு தகவல் வந்தது.

    அதன்பேரில், போலீசார் அப்பகுதிக்கு சென்று சோதனை செய்தனர். அப்போது அங்கு விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த 350 குட்கா பாக்கெட்டுகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    பின்னர் குட்கா விற்றதாக வியாபாரிகளான கோவை பாப்ப நாயக்கன்பாளையம் அசோகர் வீதியை சேர்ந்த கவுதம் (21) மற்றும் அண்ணாதுரை (50) ஆகிய 2 பேரை கைது ெசய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.2,400-யை பறிமுதல் செய்தனர். பின்னர் அவர்களை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    • விழுப்புரத்தில் ெரயில் நிலையத்தில்வெடிகுண்டு நிபுணர்கள் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.
    • மதுரையில் இருந்து சென்னை செல்லும் எக்ஸ்பிரஸ் ெரயிலிலும் இந்த சோதனை தொடர்ந்தது.

    விழுப்புரம்:

    நாடு முழுவதும் 75- வது சுதந்திர தினத்தை வருகிற 15 -e; தேதி கொண்டாடப்பட உள்ளது. இந்த நிகழ்ச்சிக்கு வெகு விமர்சையாக நடைபெற உள்ளது. இந்த நிகழ்ச்சியில் அந்நிய சக்திகள் ஊடுறுவதை தடுக்க பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.இந்த பாதுகாப்பு விமான நிலையம் ெரயில்நி லையம் முக்கிய நகரங்களில் உள்ள பஸ் நிலையங்கள் உள்பட பல்வேறு முக்கிய இடங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இதேபோல் விழுப்புரம் மாவட்டம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள முக்கிய இடங்களில் போலீஸ் பாதுகாப்பு பணியில் உள்ளனர்.சந்தேகத்திற்கு இடமாக நபர்கள் சென்றால் அவர்களை பிடித்து விசாரணை செய்து வருகின்றனர். குறிப்பாக விழுப்புரம் ெரயில் நிலையத்தில் ரயில்வே போலீசார் மற்றும் ெரயில்வே பாதுகாப்பு படை போலீசார் நேற்று முதல் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    மேலும் ெரயில்வே பாதுகாப்பு படை போலீஸ் இன்ஸ்பெக்டர் அருண் குமார் தலைமையிலான போலீசார் மற்றும் விழுப்புரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அசோகன் விழுப்புரம் மாவட்ட வெடிபொருள் பிரிவு போலீசார் விழுப்புரம் ெரயில் நிலையத்தில் உள்ள அனைத்து நடைபாதை மற்றும் அங்குள்ள அறைகளிலும் சோதனை செய்தனர்.பின்னர் ெரயில்வே நிலையத்திற்கு வரும் பயணிகளை போலீசார் மெட்டல் டிடெக்டர் மூலமாக சோதனை செய்த பின்னரே உள்ளே செல்ல அனுமதிகின்றனர். மேலும் பயணிகள் கொண்டுவரும் பொருட்கள் அனைத்தையும் சோதனை செய்கின்றனர்.

    அதன் பின்னர் இன்று காலை சென்னையிலிருந்து குருவாயூர் செல்லும் ெரயில் விழுப்புரம் வழியாக சென்றது. அப்போது பாதுகாப்பு படை போலீசார் ரயில் முழுவதும் மோப்ப நாயின் உதவியுடன் சோதனை மேற்கொண்டனர்.அதன் பின்னர் மதுரையில் இருந்து சென்னை செல்லும் எக்ஸ்பிரஸ் ெரயிலிலும் இந்த சோதனை தொடர்ந்தது. மேலும் இந்த தொடர் சோதனை வருகிற திங்கட்கிழமை வரை நீடிக்கும் என பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் தெரிவித்தனர். 

    • அவர்களை விசாரித்த போது கொன்னக்குழி விளையைச் சேர்ந்த பிரபீஸ் (வயது 24) சடையால் புதூரை சேர்ந்த அஜித்ராஜ் (31) வர்த்தகநாடார் குடியிருப்பைச் சேர்ந்த சகாயகவின் (24) என்பது தெரிய வந்தது.
    • இவர்கள் சென்னையிலிருந்து கஞ்சா பொட்டலங்களை வாங்கி சிறு சிறு பொட்டலங்களாக பிரித்து வாலிபர்களுக்கும், வியாபாரிகளுக்கும் சப்ளை செய்தது தெரியவந்துள்ளது.

    நாகர்கோவில், ஆக.12-

    குமரி மாவட்டத்தில் கஞ்சா மற்றும் குட்கா புகையிலை விற்பனையை தடுக்க போலீசார் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார் கள்.

    போலீசார் கைது செய்யப்பட்டவர்கள் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கையும் எடுத்து வருகின்றனர். கஞ்சா வழக்குகளில் கைது செய்பவர்களின் வங்கி கணக்குகளும் முடக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தொடர்ந்து மாவட்டம் முழுவதும் போலீசார் தீவிர கஞ்சா சோதனையில் மேற்கொண்டு வருகி றார்கள்.

    மும்பையில் இருந்து நாகர்கோவில் வந்த ெரயிலில் கஞ்சா கடத்தப் படுவதாக ெரயில்வே போலீ சுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து இன்ஸ் பெக்டர் கேத்தரின் சுஜாதா, சப்-இன்ஸ்பெக்டர்கள் ஜோசப், குமார்ராஜ் மற்றும் போலீசார் இன்று அதிகாலை நாகர்கோவில் ெரயில் நிலையத்திற்கு வந்த மும்பை எக்ஸ்பிரஸ் ெரயிலில் அதிரடி சோதனை மேற்கொண்டனர் .

    அப்போது பொதுப் பெட்டி ஒன்றில் கேட்பாரற்று பேக் ஒன்று கிடந்தது. அதை போலீசார் திறந்து சோதனை செய்தனர். அப்போது அதில் 6 கிலோ கஞ்சா இருந்தது தெரியவந்தது. இதையடுத்து கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார் இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டனர். கஞ்சாவை கடத்தி வந்தது யார் என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டது. ஆனால் யாரும் சிக்கவில்லை. இதையடுத்து பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சாவை ெரயில்வே போலீஸ் நிலையத்திற்கு கொண்டு சென்றனர். ஏற்கனவே கடந்த சில நாட்களுக்கு முன்பு ெரயிலில் கடத்திய கஞ்சாவை போலீ சார் பறிமுதல் செய்திருந்த னர் என்பது குறிப்பிடத்தக்க தாகும்.

    இதேபோல் இரணியல் சப்-இன்ஸ்பெக்டர் சுந்தர மூர்த்தி தலைமையிலான போலீசார் வடசேரி பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபர்களை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது அவர்களிடம் 7 கிலோ கஞ்சா இருந்தது தெரியவந்தது.

    இதையடுத்து போலீசார் அவர்கள் 3 பேரையும் போலீஸ் நிலையத்திற்கு சென்றனர். அங்கு அவர்களை விசாரித்த போது கொன்னக்குழி விளையைச் சேர்ந்த பிரபீஸ் (வயது 24) சடையால் புதூரை சேர்ந்த அஜித்ராஜ் (31) வர்த்தகநாடார் குடியிருப்பைச் சேர்ந்த சகாயகவின் (24) என்பது தெரிய வந்தது. இவர்கள் சென்னையிலிருந்து கஞ்சா பொட்டலங்களை வாங்கி சிறு சிறு பொட்டலங்களாக பிரித்து வாலிபர்களுக்கும், வியாபாரிகளுக்கும் சப்ளை செய்தது தெரியவந்துள்ளது.

    கஞ்சா வழக்கில் வேறு யாருக்காவது தொடர்பு உள்ளதா? என்ற கோணத்தி லும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • மும்பையில் இருந்து நாகர்கோவில் வந்த ெரயிலில் கஞ்சா கடத்தப் படுவதாக ரெயில்வே போலீ சுக்கு தகவல் கிடைத்தது.
    • கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார் இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டனர்

    நாகர்கோவில், ஆக.12-

    குமரி மாவட்டத்தில் கஞ்சா மற்றும் குட்கா புகையிலை விற்பனையை தடுக்க போலீசார் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார் கள்.

    அதிரடி சோதனை

    போலீசார் கைது செய்யப்பட்டவர்கள் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கையும் எடுத்து வருகின்றனர். கஞ்சா வழக்குகளில் கைது செய்பவர்களின் வங்கி கணக்குகளும் முடக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தொடர்ந்து மாவட்டம் முழுவதும் போலீசார் தீவிர கஞ்சா சோதனையில் மேற்கொண்டு வருகி றார்கள்.

    மும்பையில் இருந்து நாகர்கோவில் வந்த ெரயிலில் கஞ்சா கடத்தப் படுவதாக ரெயில்வே போலீ சுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து இன்ஸ் பெக்டர் கேத்தரின் சுஜாதா, சப்-இன்ஸ்பெக்டர்கள் ஜோசப், குமார்ராஜ் மற்றும் போலீசார் இன்று அதிகாலை நாகர்கோவில் ெரயில் நிலையத்திற்கு வந்த மும்பை எக்ஸ்பிரஸ் ெரயிலில் அதிரடி சோதனை மேற்கொண்டனர் .

    அப்போது பொதுப் பெட்டி ஒன்றில் கேட்பாரற்று பேக் ஒன்று கிடந்தது. அதை போலீசார் திறந்து சோதனை செய்தனர். அப்போது அதில் 6 கிலோ கஞ்சா இருந்தது தெரியவந்தது. இதையடுத்து கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார் இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டனர். கஞ்சாவை கடத்தி வந்தது யார் என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டது. ஆனால் யாரும் சிக்கவில்லை.

    இதையடுத்து பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சாவை ரெயில்வே போலீஸ் நிலையத்திற்கு கொண்டு சென்றனர். ஏற்கனவே கடந்த சில நாட்களுக்கு முன்பு ரெயிலில் கடத்திய கஞ்சாவை போலீ சார் பறிமுதல் செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்க தாகும்.

    இதேபோல் இரணியல் சப்-இன்ஸ்பெக்டர் சுந்தர மூர்த்தி தலைமையிலான போலீசார் வடசேரி பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபர்களை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது அவர்களிடம் 7 கிலோ கஞ்சா இருந்தது தெரியவந்தது.

    இதையடுத்து போலீசார் அவர்கள் 3 பேரையும் போலீஸ் நிலையத்திற்கு சென்றனர். அங்கு அவர்களை விசாரித்த போது கொன்னக்குழி விளையைச் சேர்ந்த பிரபீஸ் (வயது 24) சடையால் புதூரை சேர்ந்த அஜித்ராஜ் (31) வர்த்தகநாடார் குடியிருப்பைச் சேர்ந்த சகாயகவின் (24) என்பது தெரிய வந்தது. இவர்கள் சென்னையிலிருந்து கஞ்சா பொட்டலங்களை வாங்கி சிறு சிறு பொட்டலங்களாக பிரித்து வாலிபர்களுக்கும், வியாபாரிகளுக்கும் சப்ளை செய்தது தெரியவந்துள்ளது.

    கஞ்சா வழக்கில் வேறு யாருக்காவது தொடர்பு உள்ளதா? என்ற கோணத்தி லும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • திருமங்கலம் அருகே அடுத்தடுத்து நடத்திய சோதனையில் ஒரே நாளில் 7 டன் ரேசன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.
    • வட்டாட்சியர் சிவராமன் ரேசன் அரிசி மற்றும் சரக்கு வாகனத்தை பறிமுதல் செய்தார்.

    திருமங்கலம்

    மதுரை மாவட்டம் திருமங்கலம் - விமான நிலைய சாலையில் உள்ள விடத்தகுளம் சாலையில் ரேசன் அரிசியை குறைந்த விலைக்கு வாங்கி பட்டை தீட்டி அதிக விலைக்கு விற்பதாக அதிகாரிகளுக்கு தகவல் வந்தது.

    இதையடுத்து திருமங்கலம் கோட்டாட்சியர் அபிநயா தலைமையில் வட்டாட்சியர் சிவராமன் குழுவினர் நடவடிக்கையில் ஈடுபட்டு ரேசன் அரிசி பதுக்கி வைத்திருப்பதை கண்டறிந்து பறிமுதல் செய்து வருகிறார்.

    கீழக்கோட்டையில் உள்ள தனியார் அரிசி ஆலையில் நேற்று 3டன் ரேசன் அரிசி பிடிபட்டது. அந்த பரபரப்பு அடங்குவதற்குள் இரவு விடத்தகுளம் சாலையில் அரிசி பதுக்கி வைத்திருப்பதாக வந்த தகவலையடுத்து அங்கு சென்ற கோட்டாட்சியர் அபிநயா, வட்டாட்சியர் சிவராமன் தலைமையிலான குழுவினர் சரக்கு வேனை சோதனையிட்டனர்.

    வட்டாட்சியர் சோதனையிடுவதை அறிந்த சரக்கு வேன் ஓட்டுநர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். சந்தேகம் அடைந்த கோட்டாட்சியர் மற்றும் வட்டாட்சியர் உடன் வந்த வருவாய் துறை அலுவலர்கள் சரக்கு வாகனத்தை சோதனை செய்தபோது அதில் ரேசன் அரிசி மூடைகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

    50 கிலோ எடை உள்ள 80 மூடைகள் இருந்தன. இவற்றின் மொத்த எடை 4 டன் ஆகும். வட்டாட்சியர் சிவராமன் ரேசன் அரிசி மற்றும் சரக்கு வாகனத்தை பறிமுதல் செய்தார். அந்த வாகனம் திருமங்கலம் வட்டாட்சியர் அலுவலகத்திற்கு கொண்டு வரப்பட்டது.

    ஒரே நாளில் அடுத்தடுத்து வட்டாட்சியரின் நடவடிக்கையால் திருமங்கலம் பகுதியில் 7 டன் ரேசன் அரிசி பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் தேரோட்டத்தை முன்னிட்டு கடைகளில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள்அதிரடி சோதனை நடத்தினர்.
    • உணவு பாதுகாப்பு விதிமுறைகளை கடைப்பிடிக்காத 10 கடைகளுக்கும் அபராதம் விதிக்கப்பட்டது.

    ஸ்ரீவில்லிபுத்தூர்

    ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் தேரோட்ட திருவிழா வருகிற 1-ந் தேதி நடக்கிறது.

    இதையொட்டி கோவில் அருகே உள்ள கடைகளில் உணவு பாதுகாப்பு துறை ஆணையர் லால்வேனா உத்தரவுப்படி விருதுநகர் மாவட்ட கலெக்டர் மேகநாதரெட்டி அறிவுறுத்தலின்படி மாவட்ட நியமன அலுவலர் தலைமையில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் சந்திரசேகரன், ராஜமுத்து, ராஜேந்திரன் உட்பட உணவு பாதுகாப்பு அலுவலர்கள் கொண்ட குழு 36 உணவு பொருட்கள் விற்பனை செய்யும் கடைகளில் ஆய்வு செய்தனர்.

    ரோஸ்மில்க்கில் அதிக கலர் சேர்த்த 7 லிட்டர் ரோஸ் மில்க், தடை செய்யப்பட்ட பாலிதீன் கவர்கள் 4 கிலோ, கெட்டுப்போன முந்திரி குருனை 3 கிலோ, பேக்கிங் செய்யப்படாத, தேதி இல்லாத பால்கோவா பாக்கெட்டுகள் 15 கிலோ, தெர்மாகோல் கப் 100 ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. உணவு பாதுகாப்பு விதிமுறைகளை கடைப்பிடிக்காத 10 கடைகளுக்கும் அபராதம் விதிக்கப்பட்டது.


    • கஞ்சா கடத்தலை தடுக்க நடவடிக்கை
    • திடீரென சோதனை மேற்கொண்டதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு

    கன்னியாகுமரி:

    குமரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் உத்தரவின் பேரில் குமரி மாவட்டத்தில் கஞ்சா எங்கிருந்து சப்ளை செய்யப்படுகிறது. யார் சப்ளை செய்கிறார்கள் என பல கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மேலும் அரசு பஸ்சில் கஞ்சா சப்ளை செய்யபடலாம் என ரகசிய தகவல் வந்ததையொட்டி தக்கலை பழைய பஸ் நிலையத்தில் போலீஸ் துணை சூப்பிரண்டு கணேசன் தலைமையில் இன்ஸ்பெக்டர் நெப்போலி யன் சப்-இன்ஸ்பெக்டர் ராஜசேகரன் ஆகியோர் அரசு பஸ்களில் சோதனை நடத்தினர்.

    மேலும் சந்தேகத்துக்கு உள்பட்ட யாராவது பொது மக்களின் பார்வையில் தென்பட்டால் உடனே அருகில் உள்ள காவல் நிலையத்தில் தகவல் தரவும் என காவல் துறை அதிகாரிகள் தெரிவித்தனர். நேற்று அரசு பஸ்களில் திடீரென சோதனை மேற்கொண்டதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • ஆசனூரில் அமைக்கப்பட்டிருந்த எடைமேடை பயனற்ற நிலையில் இருந்ததை வனத்துறையினர் சீரமைத்து நேற்று முதல் அவ்வழியாக செல்லும் வாகனங்கள் எடை போட்டு அனுப்பி வைத்தனர்.
    • அனைத்து வாகனங்களும் எடை போட்ட பிறகே 16.2 டன் எடையுள்ள வாகனங்கள் மட்டுமே அனுமதிக்கபடும்.

    தாளவாடி:

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தின் அடர்ந்த வனப்பகுதியில் திம்பம் மலைப்பாதை உள்ளது.

    இந்த திம்பம் மலைப்பாதை திண்டுக்கல்- பெங்களூரு தேசிய நெடு ஞ்சாலையில் அமைந்து உள்ளது. தமிழ்நாடு மற்றும் கர்நாடக மாநிலங்களை இணைக்கும் முக்கிய பாதையாக திம்பம் மலை ப்பாதை உள்ளதால் தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வரு கின்றன.

    வனப்பகுதியில் உள்ள வனவிலங்குகள் அவ்வப்போது உணவு மற்றும் தண்ணீர் தேடி திம்பம் மலைப்பாதையை கடப்பது வழக்கம். அவ்வாறு சாலையை கடக்கும் வனவிலங்குகள், அந்த வழியாக செல்லும் வாகனங்களில் அடிபட்டு உயிரிழக்கின்றன.

    இதுகுறித்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் திம்பம் மலைப்பாதையில் இரவு நேர போக்குவரத்துக்கு தடை விதித்து ஈரோடு மாவட்ட கலெக்டர் கடந்த 2019-ம் ஆண்டு பிறப்பித்த உத்தரவை அமல்படுத்த வேண்டும் என இடைக்கால உத்தரவு பிறப்பித்தது.

    மேலும் இந்த வழியாக 16.2 டன் எடையுள்ள வாகனங்கள் மட்டுமே செல்ல வேண்டுமென உத்தரவிடப்பட்டது. இந்த நிலையில் கடந்த 2019-ம் ஆண்டு ஆசனூரில் அமைக்கப்பட்டிருந்த எடைமேடை பயனற்ற நிலையில் இருந்ததை வனத்துறையினர் சீரமைத்து நேற்று முதல் அவ்வழியாக செல்லும் வாகனங்கள் எடை போட்டு அனுப்பி வைத்தனர்.

    நேற்று முதல் சோதனை ஓட்டம் தொடங்கி உள்ளதாக அங்கிருந்த ஊழியர்கள் தெரிவித்தனர். விரைவில் அனைத்து வாகனங்களும் எடை போட்ட பிறகே 16.2 டன் எடையுள்ள வாகனங்கள் மட்டுமே அனுமதிக்கபடும். மற்ற வாகனங்கள் திருப்பி அனுப்பபடும் என தெரிவித்தனர்.

    ×