என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "உள்பட"
குமாரபாளையம்:
குமாரபாளையம் எதிர்மேடு பகுதியில் வசிப்பவர் குப்புலட்சுமி(வயது 54). கூலி தொழிலாளி. இவர் இரவு சேலம் கோவை புறவழிச்சாலை, எதிர்மேடு, காளியம்மன் கோவில் பகுதியில் தனது மொபட்டில் சென்றார். அப்போது அந்த வழியே வந்த கார் மோதியதில், குப்புலட்சுமி பலத்த காயம் அடைந்தார். இவர் சிகிச்சைக்காக கோவை தனியார் மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டுள்ளார். குமார பாளையம் போலீசார் இது குறித்து வழக்குப்பதிவு செய்து கார் ஓட்டுனர் ஈரோடு, சென்னிமலை ரோட்டை சேர்ந்த மளிகை கடை தொழில் செய்து வரும் கார்த்திகேயன்(31) என்பவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
குமாரபாளையம் அருகே பல்லக்காபாளையம் கொல்லப்பட்டி பகுதியில் வசிப்பவர் கோபி(29), கட்டிட தொழிலாளி. இவர் சேலம், கோவை புறவழிச்சாலை, பல்லக்காபாளையம் கொல்லப்பட்டி பிரிவு சாலையில் மொபட்டில் சென்றார்.
அதே வழியில் வந்த வேன், மோதியதில், கோபி பலத்த காயமடைந்தார். இவர் சிகிச்சைக்காக பவானி தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். குமாரபாளையம் போலீசார் இது குறித்து வழக்குப்பதிவு செய்து, வேன் ஓட்டுனர் ஈரோடு மாவட்டம், பெருந்துறை ரோடு பகுதியைச் சேர்ந்த நாகராஜ், (35) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்