search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 231805"

    • 13 ஆயிரம் ஹெக்டர் பரப்பளவில் தென்னை சாகுபடி செய்யப்பட்டுள்ளது.
    • பயிரை சிறப்பாக பராமரிக்க நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்த வேண்டும்.

    குடிமங்கலம் :

    குடிமங்கலம் வட்டாரத்தில் உலக தென்னை தினத்தினை முன்னிட்டு கருத்தரங்கம் நடந்தது.இதில், வேளாண் உதவி இயக்குனர் வசந்தா,ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 2-ந்தேதி உலக தென்னை தினம் கொண்டாடப்படுகிறது. குடிமங்கலம் வட்டாரத்தில் நிகர சாகுபடி பரப்பான, 22 ஆயிரம் ஹெக்டர் பரப்பளவில், 13 ஆயிரம் ஹெக்டர் பரப்பளவில் தென்னை சாகுபடி செய்யப்பட்டுள்ளது.

    தென்னை, வட்டார விவசாயிகளுக்கு வாழ்வாதார பயிராக உள்ளது. நிரந்தர பயிரை சிறப்பாக பராமரிக்க நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்த வேண்டும் என்றார்.மேலும் வட்டார வேளாண் விரிவாக்க மையத்தில் மானிய விலையில் இருப்பிலுள்ள, தென்னை, பருத்தி, பயறு வகை மற்றும் தானிய வகை உரங்கள் , மக்காச்சோளம், கம்பு, உளுந்து, பாசிபயறு, கொண்டைக்கடலை, நிலக்கடலை விதை இருப்பு குறித்தும், வேளாண் துறை சார்பில் செயல்படுத்தப்படும் மானியத்திட்டங்கள் குறித்து பேசினார். பொங்கலூர் அறிவியல் மைய பேராசிரியர் கலையரசன், தென்னையில் தோன்றும் பூச்சி மற்றும் நோய்களை கட்டுப்படுத்தும் முறைகள், வருவாய் அதிகரிக்க தென்னந்தோப்புக்குள் தேனீ வளர்ப்பு முறைகள் குறித்து விளக்கினார்.மாவட்ட வேளாண் துணை இயக்குனர் சுருளியப்பன், தென்னையில் ஊடுபயிராக மகா கனி, மிளகு ஆகியவற்றை சாகுபடி செய்து வருமானத்தை பெருக்கலாம் என்றார்.

    முன்னாள் வேளாண் உதவி இயக்குனர் மகாலிங்கம், தென்னை மரத்திற்கு இட வேண்டிய பேரூட்டம், நுண்ணுாட்ட உரங்களின் அளவு மற்றும் பயன்படுத்தும் முறைகள் குறித்தும், தென்னந்தோப்புக்குள் பசுந்தாள் உரமாக பயன்படும் தக்கை பூண்டு பயிரிட்டு பூக்கும் பருவத்தில் மடக்கி உழுவதால் மண்ணில் அங்கக சத்தின் அளவு அதிகமாவதோடு களையும் கட்டுப்படுத்தப்படும் என்றார்.கருத்தரங்கினை முன்னிட்டு அலுவலக வளாகத்தில், தென்னை சார் பொருட்களைக்கொண்டு கண்காட்சி அமைக்கப்பட்டிருந்தது.

    • தென்னந்தோப்புகளில் இயற்கை உரம் கட்டுவதாக வருபவர்களை தவிர்த்திடுங்கள்.
    • தென்னை மரத்துக்கு பேரூட்ட உரங்கள் மட்டுமல்லாமல், நுண்நூட்ட உரங்களும் மிகவும் அவசியமாகும்.

    உடுமலை :

    உடுமலை பகுதிகளில் தென்னை சாகுபடி பிரதானமாக உள்ளது. போதிய விலை இல்லாதது, வெள்ளை ஈ, கூன் வண்டு தாக்குதல் மற்றும் குரும்பை உதிர்தல் உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளால், தென்னை விவசாயிகள் பாதித்து வருகின்றனர்.இந்நிலையில் இயற்கை விவசாயம் மேற்கொள்ள விவசாயிகள் ஆர்வம் காட்டி வரும் நிலையில், ஒரு சில பகுதிகளில் இயற்கை உரம் மற்றும் மருந்துகளை வேரிலே கட்டுவதன் வாயிலாக, பிரச்னைகளுக்கு முழுமையாக தீர்வு கிடைக்கும், மகசூல் அதிகரிக்கும் என்று ஆசை வார்த்தை கூறுகின்றனர்.

    இது போன்ற நபர்களிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் எனவும் வேளாண் துறை, வேளாண் பல்கலைக்கழகம் பரிந்துரை அடிப்படையில், உர மேலாண்மை மேற்கொண்டால் நல்ல பலன் கிடைக்கும் எனவும், வேளாண் அலுவலகங்களில் இயற்கை உரங்கள், நுண்Èட்டம் விவசாயிகளுக்கு வழங்கப்படுகிறது, என வேளாண்துறை தெரிவித்துள்ளது.இது குறித்து உடுமலை வட்டார வேளாண் உதவி இயக்குனர் தேவி கூறியதாவது:-

    தென்னந்தோப்புகளில் இயற்கை உரம் கட்டுவதாக வருபவர்களை தவிர்த்திடுங்கள். வேளாண்துறை மற்றும் தமிழ்நாடு வேளாண் பல்கலை வழங்கும் பரிந்துரைகளின் படி உரம் இடுவது நல்ல பலனைத்தரும்.தென்னை மரத்துக்கு பேரூட்ட உரங்கள் மட்டுமல்லாமல், நுண்Èட்டஉரங்களும் மிகவும் அவசியமாகும். ஒரு தென்னைக்கு ஆண்டுக்கு பேரூட்டங்களான யூரியா 1.3 கிலோ, சூப்பர் பாஸ்பேட் 2 கிலோ, பொட்டாஷ் சிகப்பு 3.5 கிலோ வழங்க வேண்டும்.அதனை இரண்டாகப்பிரித்து, ஜூன், ஜூலை மற்றும் ஜனவரி - பிப்ரவரி மாதங்களில் இட வேண்டும். பேரூட்டம் வைத்து 2 மாதம் கழித்து தென்னை அரை கிலோ வீதம், ஆண்டுக்கு இரு முறை இட வேண்டும்.தொழு உரம் 50 கிலோ, வேப்பம்புண்ணாக்கு ஒரு கிலோ, டிரைக்கோடெர்மா விரிடி 200 கிராம் இட வேண்டும். இரண்டையும் ஒன்றாக கலந்து வைக்கக்கூடாது.

    அசோஸ்பைரில்லம், பாஸ்போபாக்டீரியா ஏக்கருக்கு ஒரு லிட்டர் வீதம், மக்கிய தொழு உரத்துடன் கலந்து மரத்தின் துார் பாகத்திலிருந்து, 3 அடி துாரத்தில் வட்டம் எடுத்து வைப்பது சிறந்த பலன் தரும். தென்னை நுண்ணுாட்டம் வைப்பதால், பொக்கைக்காய்கள் உருவாதல், குரும்பை உதிர்தல் தடுக்கப்படுகிறது. மகசூல் அதிகரிப்பதுடன் காய் எடையும் அதிகரிக்கும்.சிறப்பான பலன் தரும் தென்னை நுண்ணுாட்டத்தை வேளாண் துறை அலுவலகங்களில் வாங்கி, விவசாயிகள் பயனடையலாம்.இயற்கை உரம் கட்டுவதாக வரும், நபர்கள் குறித்து 99445 57552 என்ற எண்ணில் வேளாண்மை உதவி இயக்குனருக்கு தகவல் தெரிவிக்கலாம்.இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    • குறைந்த பட்ச ஆதார விலையில் கொப்பரை தேங்காய் கொள்முதல் செய்ய இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
    • தென்னை விவசாயிகள் கொப்பரைகளை கொண்டு வந்து குறைந்த பட்ச ஆதார விலையில் விற்று பயன் பெறலாம்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்டத்தில் நடப்பாண்டில் ஒழுங்கு முறை விற்பனைக்கூடம் மூலம் 1000 டன் அரவைக் கொப்பரை ஆதார விலை திட்டத்தில் கொள்முதல் செய்ய இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

    கிலோவிற்கு ரூ.105 என்ற விலையில் இதுவரை 6500 கிலோ தேங்காய் கொப்பரை கொள்முதல் செய்து ரூ.6 லட்சத்து 88 ஆயிரத்து 350 விற்று விவசாயிகளின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது.

    கொப்பரை கொள்முதல் பணி ஜூலை 31-ந்தேதி முடிய உள்ளது. தென்னை விவசாயிகள் கொப்பரைகளை கொண்டு வந்து குறைந்த பட்ச ஆதார விலையில் விற்று பயன் பெறலாம். மேலும் விபரங்களுக்கு 96778 44623 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்று ராமநாதபுரம் விற்பனைக்குழு செயலாளர் ராஜா தெரிவித்துள்ளார்.

    • தென்னை விவசாயிகளை பாதுகாக்கும் வகையில் தென்னை நல வாரியம் மீண்டும் அமைக்க வேண்டும்.
    • மதிப்பு கூட்டிய தென்னை பொருட்கள் உற்பத்தி செய்யும் வகையில் தொழிற்சாலை அமைக்க வேண்டும்.

    திருப்பூர்:

    தி.மு.க., சுற்றுச்சூழல் அணி மாநில செயலாளர் கார்த்திகேய சிவசேனாபதி, முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு அனுப்பியுள்ள மனுவில், முந்தைய தி.மு.க., ஆட்சியின்போது தென்னை நல வாரியம் அமைக்கப்பட்டது. தற்போது ரேஷன் கடைகளில் பாமாயில் விற்பனையாகிறது.அதற்கு பதிலாக தென்னை விவசாயிகளை பாதுகாக்கும் வகையில் தேங்காய் எண்ணெய் வழங்க வேண்டும்.

    தென்னை விவசாயிகளை பாதுகாக்கும் வகையில் தென்னை நல வாரியம் மீண்டும் அமைக்க வேண்டும். காங்கயம் தென்னை வர்த்தக நகராக உள்ளது. தென்னைக்கு இங்கு நிரந்தர கண்காட்சி மையம் அமைக்க வேண்டும். மதிப்பு கூட்டிய தென்னை பொருட்கள் உற்பத்தி செய்யும் வகையில் தொழிற்சாலை அமைக்க வேண்டும்.இவ்வாறு, அவர் அதில் கூறியுள்ளார்.

    ×