search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தொழிலாளர்"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • கனடாவில் வேலை செய்துவரும் இந்தியர்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது.
    • நிரந்தர குடியுரிமை பெற்ற வெளிநாட்டவர்களின் எண்ணிக்கையையும் குறைக்க கனடா அரசு திட்டமிட்டு வருகிறது.

    கனடாவுக்குக் குடிபெயரும் தற்காலிக வெளிநாட்டு ஊழியர்களின் எண்ணிக்கையைக் குறைக்க அந்நாட்டு அரசு முடிவெடுத்துள்ளது. இது அதிகப்படியாக கனடாவில் வேலை செய்துவரும் இந்தியர்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது.

    குறைந்த வருமானம் கொண்ட வேலைகளுக்காகக் கனடாவில் தற்காலிகமாக குடிபெயரும் வெளிநாட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் கனேடியர்களுக்கு வேலை வாய்ப்புகள் குறைந்துள்ளதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.

    எனவே கனேடிய நாட்டவர்களுக்கு முக்கியமாக இளைஞர்களுக்கு அதிக வேலைவாய்ப்பை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த முடிவை அரசு எடுத்துள்ளதாக அந்நாட்டு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ நேற்றைய தினம் அறிவித்தார்.

      

    தொழிலாளர் பற்றாக்குறையை நிரப்பவும், குறைந்த ஊதியத்தில் வெளிநாட்டவர்கள் வேலைக்கு வருவார்கள் என்பதாலும் கடந்த 2022 ஆம் ஆண்டில் கொண்டுவரப்பட்ட தற்காலிக வெளிநாட்டு பணியாளர் திட்டத்தின் கீழ் அதிகம் பேர் அங்கு தற்காலிகமாக குடியேறி வருகின்றனர். இந்த நிலையில்தான் இதன்மூலம் கடந்த ஆண்டுகளில் மக்கள் தொகை அதிகரித்து, வீட்டு வசதி மற்றும் மற்ற சேவைகளுக்கு தட்டுப்பாடு ஏற்படும் நிலை உருவாகும் என்ற நோக்கத்தில் அந்த திட்டத்தில் திருத்தம் செய்து குடிபெயர்வோரை தடுக்கும் முடிவை அரசு எடுத்துள்ளதாக தெரிகிறது.

     

    இதைத்தவிர்த்து நிரந்தர குடியுரிமை பெற்ற வெளிநாட்டவர்களின் எண்ணிக்கையையும் குறைக்க கனடா அரசு திட்டமிட்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. 

    • ஐஸ் கிரீமை சாப்பிட துவங்கியதும் அதில் மனித விரல் இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.
    • அந்த விரல் யாருடையது என்ற கேள்வி பெரும் மர்மமாகவே இருந்து வரும் நிலையில் தற்போது அதற்கான விடை கிடைத்துள்ளது.

    மும்பையைச் சேர்ந்த பெண் ஒருவர் கடந்த வாரம் ஆன்லைனில் யுமோ பிராண்டு ஐஸ் கிரீமை ஆர்டர் செய்திருந்தார். ஆர்டர் செய்த ஐஸ் கிரீமை சாப்பிட துவங்கியதும் அதில் மனித விரல் இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். அதை மருத்துவரான அவரது சகோதரர்  வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் வெளியிடவே விஷயம் பூதாகரமாக மாறியது. இந்த சம்பவம் தொடர்பாக புனேவை சேர்ந்த சம்பந்தப்பட்ட ஐஸ் கிரீம் நிறுவனத்தின் மீது காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்திருந்தனர்.

    ஐஸ் கிரீம் உற்பத்தியாளரின் தயாரிப்பு ஆலைக்கு சீல் வைத்து உரிமத்தை ரத்து செய்தனர். ஐஸ் கிரீமில் கிடந்த மனித விரல் தடயவியல் சோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அந்த விரல் யாருடையது என்ற கேள்வி பெரும் மர்மமாகவே இருந்து வரும் நிலையில் தற்போது அதற்கான விடை ஓரளவு கிடைத்துள்ளது.

     

    அதாவது ஐஸ் கிரீம் ஆலையில் வேலை பார்த்து வந்த ஒருவர் சமீபத்தில் ஆலையில் நடந்த விபத்தில் தனது விரலை இழந்துள்ளார் என்று போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. அந்த நபரின் டி.என்.ஏ மாதிரிகள் சேகரிக்கப்பட்டு பரிசோதனைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. பரிசோதனையில் விரலில் உள்ள டி.என்.ஏ.வும் அந்த நபரின் டி.என்.ஏவும் ஒத்துபோகும் பட்சத்தில் இந்த மர்மத்துக்கு முழுமையான விடை கிடைக்கக்கூடும்.  

    • அகில இந்திய மாநாட்டில் வலியுறுத்தல்
    • தீபாவளி போனஸ் வழங்க தமிழக அரசை கேட்டுக் கொள்ளப்பட்டது

    கன்னியாகுமரி :

    அகில இந்திய கட்டுமான உழைக்கும் பெண்கள் மாநாடு கன்னியாகுமரியில் நடந்தது. அகில இந்திய தலைவர் ஹேமலதா தலை மை தாங்கி, மாநாட்டை தொடங்கி வைத்து பேசி னார். மாநில பொருளா ளர் ரூபி கொடியேற்றி வைத்தார். இந்த மாநாட்டில் அகில இந்திய பொதுச்செய லாளர் ஜோசப், முன்னாள் எம்.பி. பெல்லார்மின், முன்னாள் எம்.எல்.ஏ. லீமாரோஸ் உள்பட பலர் கலந்துகொண்டு பேசினர். முடிவில் மாநாட்டு வர வேற்பு குழு பொருளாளர் வேலம் நன்றி கூறினார்.

    மாநாட்டில் கட்டுமான பெண் தொழிலாளர்களுக்கு 55 வயதில் ஓய்வூதியம் வழங்க வேண்டும். கட்டுமான தொழிலாளர்களுக்கு ஓய்வூதியத்தை ரூ.3 ஆயிரமாக உயர்த்தி வழங்க அரசை கேட்டுக் கொள்ளப்பட்டது. கட்டுமான பெண் தொழிலா ளர்களுக்கு பணியிடத்தில் உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும். கட்டுமான பெண் தொழிலாளர்களுக்கு சமவேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும். கட்டுமான தொழிலாளர்களுக்கு தீபாவளி போனஸ் வழங்க தமிழக அரசை கேட்டுக் கொள்ளப்பட்டது என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட் டன

    • அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தினர் மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
    • 100 நாட்கள் வேலை தருவதை உறுதி செய்ய வேண்டும் போன்ற கோரிக் கைகளை வலியுறுத்தி கண்டன கோஷங்களில் எழுப்பினார்கள்.

    திருவாடானை

    திருவாடானை நான்கு ரோடு சந்திப்பு சாலை பகு தியில் அகில இந்திய விவ சாய தொழிலாளர் சங்கத் தின் சார்பில் மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டத்தின் ஒரு பகுதியாக தாலுகா தலைவர் அருள்சாமி தலை மையில் மாவட்ட தலைவர் கலையரசன், தாலுகா செய லாளர் சேதுராமன், தாலுகா பொருளாளர் நாகநாதன் ஆகியோர் முன்னிலையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    ஆர்ப்பாட்டத்தில் 100 நாள் வேலை திட்டத்திற்கு போதுமான நிதியை வழங்க வேண்டும், வேலைக்கான சம்பளத்தை 15 நாட்களுக் குள் வழங்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும், வேலை திட்டத்தில் பணி செய்பவர்க ளுக்கு 100 நாட்கள் வேலை தருவதை உறுதி செய்ய வேண்டும் போன்ற கோரிக் கைகளை வலியுறுத்தி கண் டன கோஷங்களில் எழுப்பி னார்கள்.

    ஆர்ப்பாட்டத்தில் தாலுகா நிர்வாகிகள் ரத்தி னம், முருகன், சகாயமாதா, சித்திரவேல் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • குழந்தை தொழிலாளர் முறையை முற்றிலும் அகற்ற சமுதாயத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்துவேன்.
    • குழந்தை தொழிலாளர் அற்ற மாநிலமாக மாற்ற என்னால் இயன்றவற்றை செய்வேன்.

    கும்பகோணம்:

    தமிழ்நாடு அரசு போக்கு வரத்து கழகம் கும்பகோணம் கோட்டம் சார்பில் குழந்தை தொழிலாளர் முறையை அகற்றுவதற்கான உறுதிமொழி ஏற்கப்பட்டது.

    நிகழ்ச்சிக்கு தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக கும்பகோணம் கோட்ட மேலாண் இயக்குனர் ராஜ்மோகன் தலைமை தாங்கினார். இந்திய அரசமைப்பு விதிகளின்படி கல்வி பெறுவது குழந்தைகளின் அடிப்படை உரிமை . எனவே 14 வயதுக்கு ட்பட்ட குழந்தைகளை ஒருபோதும் எந்தவித பணிகளிலும் ஈடுபடுத்த மாட்டேன்.

    குழந்தைகள் பள்ளிக்கு செல்வதை ஊக்குவிப்பேன் . குழந்தை தொழிலாளர் முறையினை முற்றிலுமாக அகற்றிட சமுதாயத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்துவேன்.

    தமிழகத்தை குழந்தை தொழிலாளர் அற்ற மாநிலமாக மாற்ற என்னால் இயன்றவற்றை செய்வேன் என உறுதியளிக்கிறேன் என போக்குவரத்து கழக அதிகாரிகள், தொழிலாளர்கள், பணியாளர்கள் உறுதிமொழி ஏற்றனர்.

    இதில் பொது மேலாளர் முகமது நாசர், முதுநிலை துணை மேலாளர் கோவிந்தராஜன், முதன்மை தணிக்கை அலுவலர் சிவகுமார் மற்றும் துணை மேலாளர்கள், உதவி மேலாளர்கள், டிரைவர்கள், கண்டக்டர்கள் தொழில்நுட்ப பணியாளர்கள், அலுவலக பணியாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • குழந்தை தொழிலாளர் முறையை அகற்றுவதில் இந்தியாவில் முன்னோடி மாநிலமாக தமிழ்நாடு திகழும்.
    • 2025-க்குள் மயிலாடுதுறையை குழந்தை தொழிலாளர் இல்லா மாவட்டமாக மாற்ற வேண்டும்.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் அலுவலககூட்ட ரங்கில் குழந்தை தொழி லாளர் முறையினை அகற்று வதற்காக உறுதிமொழி மாவட்ட கலெக்டர் மகாபாரதி தலைமையில் அனைத்து துறை அலுவலர்கள் எடுத்து கொண்டனர்.

    இதைத் தொடர்ந்து கலெக்டர் பேசியதாவது:-

    குழந்தைத் தொழிலாளர் முறையினை அகற்றுவதில் தமிழ்நாடு இந்தியாவில் முன்னோடி மாநிலமாக திகழும் நிலையில் முதல்-அமைச்சரின் ஆணைக்கிணங்க 2025-ம் ஆண்டுக்குள் மயிலாடுதுறை மாவட்டத்தை குழந்தைத் தொழிலாளர் இல்லாத மாவட்டமாக மாற்ற அனைவரும் உறுதி ஏற்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.

    முன்னதாக குழந்தைத் தொழிலாளர் முறை எதிர்ப்பு கையெழுத்து இயக்கத்தை முதல் கையொப்பமிட்டு மாவட்ட கலெக்டர் துவக்கி வைத்தார்.

    நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சித்தலைவரின் நேர்முக உதவியாளர் (பொது) நரேந்திரன் , மயிலாடுதுறை தொழிலாளர் உதவி ஆணையர் ஞானபிரகாசம், குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் ரேகா ஆகியோர் கலந்து கொண்டனர்.

    • அமைப்பு சாரா தொழிலாளர் நல வாரியம் மூலம் சிறப்பு உறுப்பினர் சேர்க்கை முகாம் நடந்தது.
    • 50-க்கும் மேற்பட்ட அமைப்பு சாரா தொழிலாளர்கள் நல வாரிய உறுப்பினராக தங்களை பதிவு செய்து பயனடைந்தனர்.

    கீழக்கரை

    ராமநாதபுரம் மாவட்டம்,ராமநாதபுரம் ஒன்றியம் சித்தூர் ஊராட்சிக்குட்பட்ட வன்னிவயல் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் தமிழ்நாடு கட்டுமானம் மற்றும் அமைப்புசாரா தொழிலாளர் நல வாரியத்தின் சமூக பாதுகாப்பு திட்டத்தின் மூலம் சிறப்பு உறுப்பினர் சேர்க்கை முகாம் ஊராட்சி மன்ற தலைவர் ஜெயசித்ரா நவநீதகிருஷ்ணன் ஏற்பாட்டில் நடைபெற்றது.

    தொழிலாளர் நலத்துறை துணை ஆணையர் குண சேகரன்,கிராம நிர்வாக அலுவலர் காமேஸ்வரன் உள்ளிட் டோர் கலந்து கொண்டு இந்த சிறப்பு முகாமினை துவக்கி வைத்தனர்.

    இந்த முகாமில் 50-க்கும் மேற்பட்ட பதிவு செய்யாத அமைப்பு சாரா தொழிலாளர்கள் நல வாரிய உறுப்பினராக தங்களை பதிவு செய்து பயனடைந்தனர்.

    • தொழிலாளர்கள் நல வாரியத்தில் கட்டாயம் பதிவு செய்து கொள்ள வேண்டும்.
    • கலெக்டர் ஜெயசீலன் வலியுறுத்தினார்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்ட கலெக்டர் ஜெயசீலன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தமிழ்நாட்டில் உள்ள அமைப்பு சாரா தொழில்க ளில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களின் பணி நிலைமைகளை ஒழுங்கு படுத்தவும் அவர்களுக்கு சமூகபாதுகாப்பு அளிக்க வும், தமிழ்நாடு அரசு 1982-ஆம் ஆண்டில் தமிழ்நாடு உடலுழைப்பு தொழிலா ளர்கள் (வேலை மற்றும் பணி நிலைமைகள் முறை படுத்துதல்) சட்டத்தினை இயற்றியது.

    அதன்படி தமிழ்நாடு அரசின் கீழ் கட்டுமான தொழிலாளர் நலவாரியம் மற்றும் உடலுழைப்பு தொழிலாளர் நலவாரியம் உட்பட 18 அமைப்புசாரா தொழிலாளர் நலவாரி யங்கள் செயல்பட்டு வருகிறது. பட்டாசு மற்றும் தீப்பெட்டி தொழிலில் ஈடுபடும் தொழிலாளர்க ளுக்கான தனி நலவாரியமாக தமிழ்நாடு பட்டாசு மற்றும் தீப்பெட்டி தொழிலாளர்கள் நலவா ரியம் அமைக்கப்பட்டு 1.1.2021 முதல் செயல் படுத்தப்பட்டு வருகிறது.

    மேற்படி 18 அமைப்பு சாரா தொழிலாளர் நலவா ரியங்களின் நலத்திட்டங்கள் முறையே கல்வி உதவித்தொ கை, திருமண உதவித்தொ கை, மகப்பேறு உதவித்தொ கை, கண்கண்ணாடி உதவித்தொகை, இயற்கை மரண உதவித்தொகை, விபத்து மரண உதவித்தொ கை, பணியிடத்து விபத்து மரண உதவித்தொகை, விபத்து ஊன உதவித்தொ கை, ஓய்வூதியம் மற்றும் குடும்ப ஓய்வூதியம் உதவித்தொகை ஆகிய நலத்திட்டங்களுக் கான உதவித்தொகைகள் மாவட்ட தொழிலாளர் உதவி ஆணையர் (சமூக பாதுகாப்புத் திட்டம்) அலுவலகங்களின் மூலம் செயல்படுத்தப்படு கிறது.

    பட்டாசு மற்றும் தீப்பெட்டி தொழிலில், பணிபுரியும் இ.எஸ்.ஐ. மற்றும் பி.எப். பிடித்தம் செய்யப்படாத அமைப்பு சாரா தொழிலாளர்களை உடனடியாக பட்டாசு மற்றும் தீப்பெட்டி தொழி லாளர் நலவாரியத்தில் கட்டாயமாக உறுப்பினராக சேர்க்குமாறு வேலை யளிப்ப வர்களுக்கு மாவட்ட ஆட்சியர் அவர்கள் உத்தர விட்டுள்ளார்.

    தற்போது மேற்படி வாரியத்தில் பதிவுபெற்ற உறுப்பினர்களுக்கு விபத்து மரண உதவித்தொகைரூ.2 லட்சமாக உயர்த்தப் பட்டுள்ளது.

    மேலும் பட்டாசு மற்றும் தீப்பெட்டி தொழில் உற்பத்தியாளர்கள் தங்களிடம் பணிபுரியும் அமைப்புசாரா தொழிலா ளர்களுக்கு பங்களிப்புத் தொகை ஒவ்வொரு தொழிலாளிக்கும் தலாரூ.200 வீதம் 'செயலா ளர், தமிழ்நாடு பட்டாசு தீப்பெட்டி தொழிலாளர்கள் நலவாரியம் என்ற பெயரில் வரைவோலை எடுத்து படிவம் வி-ன் படியான தொழிலாளர் விவரப் பட்டியலை விருதுநகர் தொழிலாளர் உதவி ஆணையருக்கு அனுப்ப வேண்டும்.

    விருதுநகர் மாவட்டத்தில் பட்டாசு மற்றும் தீப்பெட்டி தொழிலில் ஈடுபடும், இ.எஸ்.ஐ., பி.எப். பிடித்தம் செய்யப்படாத அமைப்பு சாரா தொழிலா ளர்களை பட்டாசு மற்றும் தீப்பெட்டி தொழிலாளர்கள் நலவா ரியத்தில் உறுப்பினராக சேர்ப்பதற்கு தொழிலாளர் துறையில் tnuwwb.tn.gov.in இணையதள முகவரியில் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படு கிறார்கள்.

    இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    • மண் பாண்டங்கள் உற்பத்தி செய்யும் தொழிலில் 25க்கும் அதிகமான குடும்பத்தினர் ஈடுபட்டு வருகின்றனர்.
    • அகல் விளக்குகள் தயாரிப்புக்கு, பிரத்யேகமான மண் தேவையாகும்.

    உடுமலை :

    உடுமலை அருகே புக்குளம், மரிக்கந்தை, பூளவாடி, பள்ளபாளையம், சாளையூர் உட்பட பல கிராமங்களில் பாரம்பரியமாக மண் பாண்டங்கள் உற்பத்தி செய்யும் தொழிலில் 25க்கும் அதிகமான குடும்பத்தினர் ஈடுபட்டு வருகின்றனர்.அகல் விளக்குகள் தயாரிப்புக்கு, பிரத்யேகமான மண் தேவையாகும். இவ்வகை மண் கோவை மாவட்டம் கிணத்துக்கடவு கோதவாடி குளத்திலும், திருப்பூர் மாவட்டம் கொழுமம் கோதையம்மன் குளத்தில் மட்டுமே கிடைக்கிறது.

    தொழிலாளர்கள் கூறுகையில், கோதவாடி குளத்தில் கிடைக்கும் மண் மட்டுமே, மண்பாண்டங்கள் மற்றும் அகல் விளக்கு தயாரிப்புக்கு உகந்ததாகும்.ஆனால், அங்கிருந்து மண் எடுத்து வர பல்வேறு விதிமுறைகளை வருவாய்த்துறையினர் தெரிவிக்கின்றனர். ஏற்கனவே வாகன வாடகை உட்பட காரணங்களால், மண் எடுத்து வர செலவாகிறது. ஒவ்வொரு முறையும் வாகனத்தோடு சென்று வருவாய்த்துறை தடை விதிப்பதால் ஏமாற்றத்துடன் திரும்பி வர வேண்டியுள்ளது.

    கடந்த சில ஆண்டுகளுக்கு முன் நீர்நிலைகளில் இருந்து மண்பாண்ட தொழிலாளர்கள் விலையில்லாமல், களிமண், வண்டல் மண், சவுடு மண், சரளை மண் எடுத்து கொள்ள அனுமதித்து, விலையில்லாமல் பெற்று கொள்ளலாம் என அறிவிப்பு வெளியிடப்பட்டது.இந்த அறிவிப்பு முறையாக செயல்படுத்தப்படவில்லை. உள்ளூர் வருவாய்த்துறை அதிகாரிகள், மண்பாண்ட தொழிலாளர்களுக்கு நேரடியாக அனுமதிச்சீட்டு வழங்க வேண்டும்.இதே போல் கோதையம்மன் குளத்திலும் மண் எடுப்பதற்கான அனுமதி அளிக்கப்பட்டால் தங்கள் வாழ்வாதாரம் பாதுகாக்கப்படும்.இது குறித்து திருப்பூர் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.  

    • 2023 மார்ச் மாதத்தில் இந்தியா முழுவதும் 13.40 லட்சம் உறுப்பினர்களை சேர்த்துள்ளது என்பது தெரிய வந்துள்ளது.
    • 2022-2023 நிதியாண்டில் 1.39 கோடி உறுப்பினர்களை சேர்த்துள்ளது.

    சேலம்:

    சேலம் இரும்பாலையில் இந்திய அரசின் ெதாழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்நிறுவனம், பணியாளர்களுக்கு சமூக பாதுகாப்பு நலன்களை வழங்கும் முதன்மையான அமைப்பாகும்.

    கடந்த 20-ந் தேதியன்று வெளியிடப்பட்ட ஊழியர் வருங்கால வைப்பு நிதி நிறுவனத்தின் தற்காலிக ஊதியத் தரவின்படி, 2023 மார்ச் மாதத்தில் இந்தியா முழுவதும் 13.40 லட்சம் உறுப்பினர்களை சேர்த்துள்ளது என்பது தெரிய வந்துள்ளது.

    மார்ச் மாதத்தில் சேர்க்கப்பட்ட 13.40 லட்சம் உறுப்பினர்களில், சுமார் 7.58 லட்சம் புதிய உறுப்பினர்கள் முதல் முறையாக ஊழியர் வருங்கால வைப்பு நிதியில் இணைந்துள்ளனர்.

    புதிதாக இணைந்த உறுப்பினர்களில், 2.35 லட்சம் உறுப்பினர்கள் 18-21 வயதுக்குட்பட்டவர்கள் ஆவர். 1.94 லட்சம் உறுப்பினர்கள் 22-25 வயதுடையவர்கள் ஆவர். புதிதாக சேர்க்கப்பட்ட உறுப்பினர்களில் 18-25 வயதுடையவர்கள் 56.60 சதவீதம் ஆவர்.

    2.57 லட்சம் பெண்கள் பதிவு

    பாலின வாரியான ஊதியத் தரவுகள்படி, 2023 மார்ச் மாதத்தில் 2.57 லட்சம் பெண்கள் பதிவு செய்யப்பட்டுள்ளனர். உறுப்பினர் சேர்க்கையின் அடிப்படையில், மகாராஷ்டிரா, தமிழ்நாடு, கர்நாடகா, ஹரியானா மற்றும் குஜராத் ஆகிய 5 மாநிலங்கள் முன்னிலையில் உள்ளன.

    தமிழ்நாடு 2-வது இடம்

    மொத்த உறுப்பினர்களில் இந்த மாநிலங்கள் 58.68 சதவீதம் பங்கு வகிக்கின்றன. இதில் மகாராஷ்டிரா 20.63 சதவீதம் உறுப்பினர்களுடன் முதலிடத்திலும், தமிழ்நாடு மாநிலம் 10.83 சதவீதம் உறுப்பினர்களுடன் 2-ம் இடத்திலும் உள்ளது.

    2022-2023 நிதியாண்டில் 1.39 கோடி உறுப்பினர்களை சேர்த்துள்ளது. முந்தைய நிதியாண்டான 2021-2022 உடன் ஒப்பிடும்போது 13.22 சதவீதம் உறுப்பினர்கள் புதிதாக சேர்ந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த தகவலை வருங்கால வைப்பு நிதி நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளது.

    • கடலூர் கிழக்கு மாவட்ட பாரதிய ஜனதா கட்சி சார்பில் பண்ருட்டி பஸ் நிலையத்தில் சுமை தூக்கும் தொழிலாளர்களுக்கு சீருடை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
    • பொதுசெயலாளர் ஜீவா வினோத்குமார் கலந்து கொண்டு சுமை தூக்குவோர் சங்கத் தலைவரிடம் சீருடைகளை வழங்கினார்.

    கடலூர்:

    உழைப்பாளர்கள் தினத்தை முன்னிட்டு கடலூர் கிழக்கு மாவட்ட பாரதிய ஜனதா கட்சி சார்பில் பண்ருட்டி பஸ் நிலையத்தில் சுமை தூக்கும் தொழிலாளர்களுக்கு சீருடை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.  இதில் கடலூர் கிழக்கு மாவட்ட பாரதிய ஜனதா கட்சி பொது செயலாளர் ஜீவா வினோத்குமார் கலந்து கொண்டு சுமை தூக்குவோர் சங்கத் தலைவரிடம் சீருடைகளை வழங்கினார். இதில் கடலூர் மாவட்ட பாரதிய ஜனதா கட்சி வர்த்தக பிரிவு தலைவர் அசோக் ராஜ், மாவட்ட தொழில் பிரிவு தலைவர் அழகு முருகன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    • தினசரி சம்பளமாக 265 ரூபாய் நிர்ணயம் செய்யப்பட்டு ஊரக வளர்ச்சி முகமை மூலம் வழங்கப்படுகிறது
    • தினமும் 40 ஆயிரம் பேர் வரை பணி செய்வர்.

    தாராபுரம் :

    திருப்பூர் மாவட்டத்தில் நகர்ப்புறம் தவிர்த்து அவிநாசி, பல்லடம், பொங்கலூர், தாராபுரம், உடுமலைப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் விவசாயத் தொழில் தான் பிரதானம்.தென்னை, வாழை, கரும்பு, பருத்தி, சோளம், நிலக்கடலை என அந்தந்த பகுதியின் மண், மழை வளத்துக்கேற்ப பயிர் சாகுபடியில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர்.

    சமீப ஆண்டுகளாக விவசாய நிலங்களில் உழவு செய்வது, களை எடுப்பது, உரமிடுவது, தண்ணீர் பாய்ச்சுவது, விளைபொரு ட்களை அறுவடை செய்வது, சந்தைக்கு கொண்டு செல்வது உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள விவசாய தொழிலாளர்கள் கிடைப்பதில்லை என்ற குற்றச்சாட்டு நிலவி வருகிறது. இதற்கு 100 நாள் வேலை உறுதியளிப்பு திட்டம் தான் முக்கிய காரணம் என விவசாயிகள் கூறுகின்றனர். கிராமங்களில் கல், மண் வரப்பு, தென்னை மரங்களை சுற்றி அகழி எடுப்பது, உரக்குழி அமைப்பது, குளம், குட்டையோரம் மரக்கன்று நடுவது, சாலையோரம் உள்ள புதர் செடிகளை வெட்டுவது, நர்சரி பராமரிப்பு உள்ளிட்ட வேலைகளில் 100 நாள் திட்ட பணியாளர்கள் ஈடுபடுகின்றனர். அவர்களுக்கு தினசரி சம்பளமாக 265 ரூபாய் நிர்ணயம் செய்யப்பட்டு ஊரக வளர்ச்சி முகமை மூலம் வழங்கப்படுகிறது. அவர்களுக்கு கூடுதலாக 50 நாள் வேலை நாள் உயர்த்தப்படும் என சமீபத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

    இது குறித்து திருப்பூர் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அலுவலர்கள் கூறுகையில், 100 நாள் திட்டத்தில், ஊராட்சிகளில் வேலை அதிகமுள்ள சமயங்களில் தினமும் 40 ஆயிரம் பேர் வரை பணி செய்வர் என்றனர். கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் ஈஸ்வரன் கூறுகையில், 100 நாள் திட்டத்தில் பல இடங்களில் பணிகள் முறைப்படி நடப்பதில்லை.100 நாள் வேலை உறுதியளிப்பு திட் டத்தின் கீழ் மேற்கொள்ளப்படும் கட்டுமானப்பணி, சாலை அமைத்தல் போன்ற கடினமான பணிகள், தனியாருக்கு கான்ட்ராக்ட் விடப்பட்டு, உடல் உழைப்பு தொழிலாளர்கள் மூலமே மேற்கொள்ளப்படுகிறது.

    ஆனால் அவர்களுக்கு வழங்கப்படும் சம்பளம் 100 நாள் திட்ட தொழிலாளர்களின் பெயரில் வழங்கப்படுகிறது. விவசாய தொழிலாளர் பற்றாக்குறைக்கு முக்கிய காரணம் 100 நாள் திட்டம் தான். எனவே 100 நாள் திட்ட பணியாளர்களை விவசாய தொழிலில் முழுமையாக ஈடுபடுத்த வேண்டும்.

    அரசு வழங்கும் சம்பளத்துக்கு நிகரான சம்பளம் வழங்க விவசாயிகளும் தயாராக உள்ளனர். இதன் மூலம், தொழிலாளர்களுக்கும் கூடுதல் வருமானம் கிடைக்கும். விவசாயமும் செழிக்கும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

    ×