என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "தொழிலாளர்"
- தொழிலாளர் ஊதிய ஒப்பந்தம் குறித்து அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் தொ.மு.ச நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.
- போக்குவரத்து தொழிலாளர்கள் முழு மனதுடன் ஏற்றுக் கொள்ளும் வகையில் சம்பள பேச்சு வார்த்தையின் முடிவுகள் அமையும் என்று தொ.மு.ச. நிர்வாகிகள் தெரிவித்தனர்.
சிவகாசி
தமிழக போக்குவரத்து தொழிலாளர்களுக்கான ஊதிய உயர்வு குறித்த அறிவிப்பு மற்றும் போக்குவரத்து தொழிலாளர்களுக்கான நலத்திட்டங்கள் செயல்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் குறித்து தொழிலாளர் முன்னேற்ற சங்க பேரவையின் தலைவர் மு.சண்முகம் எம்.பி. மற்றும் பேரவையின் பொருளாளர் நடராஜன் ஆகியோருடன் சென்னை தலைமைச் செயலகத்தில் போக்குவரத்து துறை அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர் ஆலோசனை நடத்தினார்.
இந்த ஆலோசனைக்கு பின் தொ.மு.ச. நிர்வாகிகள் சிலரிடம் பேசியபோது, கடந்த அ.தி.மு.க ஆட்சியில் சீரழிக்கப்பட்ட போக்குவரத்து துறையை மறுசீரமைப்பு செய்வதற்காக தமிழக முதல்-அமைச்சர் ஆலோசனைப்படி போக்குவரத்துத்துறை அமைச்சர் மின்னல் வேகத்தில் செயல்பட்டு வருகிறார்.
பொதுவாகவே விடுப்பு எடுக்காமல் நீண்டகாலம் பணிக்கு வராத போக்குவரத்து தொழிலாளர்களின் மீது இதுவரை கடுமையான நடவடிக்கைகள்தான் மேற்கொள்ளப்பட்டு வந்தது. ஆனால் தற்போதைய அமைச்சர் அனைவரையும் வரவழைத்து அவர்களுக்கு கவுன்சிலிங் அளித்து வேலைக்கு திரும்ப வேண்டுகோள் விடுத்து வருகிறார்.
அதுபோலவே போக்குவரத்து தொழிலாளர்களிடம் பிடித்தம் செய்யப்பட்ட பணத்தை கடந்த ஆட்சியாளர்கள் தங்கள் விருப்பத்திற்கு ஏற்றவாறு விரயம் செய்துவிட்டனர். தொழிலாளர்களின் பாதுகாவலனாக எப்போதுமே திகழ்கின்ற தி.மு.க. அரசு தொழிலாளர்களுக்குக் கிடைக்க வேண்டிய பணப்பலன்கள் விரைவாகக் கிடைப்பதற்கான நடவடிக்கைகளில் முழு வீச்சுடன் செயல்பட்டு வருகிறது.
போக்குவரத்து தொழிலாளர்கள் தி.மு.க.வின் மீது வைத்துள்ள நம்பிக்கையை காப்பாற்றுவதற்காக தொ.மு.ச. நிர்வாகிகளுடன் இணைந்து அமைச்சர் சிறப்பாக செயல்பட்டு வருகிறார். போக்குவரத்து தொழிலாளர்கள் முழு மனதுடன் ஏற்றுக் கொள்ளும் வகையில் சம்பள பேச்சு வார்த்தையின் முடிவுகள் அமையும் என்று தொ.மு.ச. நிர்வாகிகள் தெரிவித்தனர்.
- குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.
- 14 வயதுக்குட்பட்ட குழந்தைகளை பணியில் அமர்த்தினால் ரூ.50 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்படும்.
ராமநாதபுரம்
நாளை (12-ந்தேதி) குழந்தைத் தொழிலாளர் முறை எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலகம், அரசு சாரா அமைப்புகள், கடைகள் மற்றும் வர்த்தக நிறுவனங்களில் குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு தின உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.
ராமநாதபுரம் பஸ் நிலையத்தில் இருந்து அரண்மனை வரை விழிப்புணர்வு பேரணி, பிரசாரம் மாவட்ட தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) பாரி தலைமையில் நடந்தது. தொழிலாளர் உதவி ஆய்வாளர்கள், முத்திரை ஆய்வாளர், சைல்டு லைன் அமைப்பினர், மாவட்ட குழந்தைகள் நல அலுவலர் மற்றும் மனிதவள ஆள்கடத்தல் தடுப்புபிரிவு குழுவினர் கலந்து கொண்டனர். கடைகள் மற்றும் வர்த்தக நிறுவனங்களில் 14 வயதுக்குட்பட்ட குழந்தைகளை பணியில் அமர்த்தினால் ரூ.50 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்படும் என்று தொழிலாளர் துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்