search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 231965"

    • விழாவின் முக்கிய நிகழ்வாக பக்தர்கள் பால் குடம், காவடி எடுத்து வீதியுலா வரும் நிகழ்ச்சி நடைபெற்றது.
    • குடமுருட்டி ஆற்றங்கரையிலிருந்து பக்தர்கள் ஏராளமானோர் பால்குடம், அலங்கார காவடிகள் எடுத்து தங்களது வேண்டுதலை நிறைவேற்றி கொண்டனர்.

    பாபநாசம்:

    பாபநாசம் அருகே உள்ள உத்தாணியில் உள்ள முத்து முனியாண்டவர் கோவிலில் 50 ஆம் ஆண்டு ஊரணி பொங்கல்விழா, பால்குட காவடி எடுக்கும் விழா நடைபெற்றது. முக்கிய நிகழ்வாக பக்தர்கள் பால்கு டம், காவடி எடுத்து வீதியுலா வரும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் குடமுருட்டிஆற்றங்க ரையிலிருந்து பெண்கள் உட்பட பக்தர்கள் ஏராளமா னோர் பால்குடம், அலங்கார காவடிகள் எடுத்து பக்தர்கள் தங்களது வேண்டுதலை நிறைவேற்றி கொண்டனர்.

    அதனைத் தொடர்ந்து கன்னிமூல கணபதி, முத்து முனியாண்டவர், தர்ம சாஸ்தா ஐயப்பன் மற்றும் பரிவார தெய்வ ங்களுக்கு சிறப்புஅபிஷேக, ஆராதனையும், மஹா தீபாரதனையும் நடைபெ ற்றது.

    இந்நிக ழ்ச்சியில் உத்தானி மற்றும் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த ஏராளமானபக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடு உத்தாணி கிராமவாசிகள், லாரி தொழிலாளர்கள் சங்கத்தினர், விழா குழுவினர்கள் கிராமவா சிகள் செய்திருந்தனர்.

    • மூலஸ்தானத்தில் 5½ அடி உயரத்தில் லிங்க வடிவத்தில் குகநாதீஸ்வரர் காட்சியளிக்கிறார்.
    • ஆடி கிருத்திகை விழா இன்று கொண்டாடப்படுகிறது.

    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரி ரெயில் நிலைய சந்திப்பில் ஸ்ரீ குகநாதீஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவில் ஆயிரம் ஆண்டுகள் பழமையான கோவில் ஆகும். தஞ்சை பெரிய கோவிலை மாமன்னன் ராஜராஜசோழன் கட்டுவதற்கு முன்பே இந்த கோவிலைகட்டி உள்ளார் என்று வரலாற்றுச் சான்றுகள் கூறுகின்றன.

    இங்கு குகன் என்ற முருகடவுள் சிவன் என்ற ஈஸ்வரனை வழிபட்டதால் இந்த கோவிலுக்கு குகநாதீஸ்வரர் கோவில் என்று பெயர் வர காரணமாயிற்று. இங்கு உள்ள மூலஸ்தானத்தில் 5½ அடி உயரத்தில் லிங்க வடிவத்தில் குகநாதீஸ்வரர் காட்சியளிக்கிறார். அப்படிப்பட்ட வரலாற்று சிறப்பு மிக்க இந்த கோவிலில் வள்ளி, தெய்வானையுடன் சுப்பிரமணியசாமி எழுந்த ருளியுள்ள சன்னதியும் அமைந்து உள்ளது. இங்கு ஆடி கிருத்திகை விழா இன்று கொண்டாடப்படுகிறது.

    இதையொட்டி இன்று காலை 10 மணிக்கு சாஸ்தா சன்னதியில் இருந்து பக்தர்கள் தோளில் காவடி எடுத்து கோவிலை சுற்றி மேளதாளங்கள் முழங்க ஊர்வலமாக வந்தனர். பின்னர் காலை 11 மணிக்கு வள்ளி, தெய்வானையுடன் எழுந்தருளி உள்ள சுப்பிரமணிசாமிக்கு எண்ணெய், பால் தயிர், நெய், விபூதி, சந்தனம், மஞ்சள் பொடி, இளநீர், பன்னீர், தேன், பஞ்சாமிர்தம் மற்றும்புனிதநீரால்சிறப்பு அபிஷேகம் நடந்தது. அதன்பின்னர் 11.30 மணிக்கு அலங்கார தீபாரதனையும் பகல் 12 மணிக்கு பல வண்ணமலர்களால் அல ங்கரிக்கப்பட்ட மயில் வாக னத்தில் சுப்பிரமணிய சுவாமி, வள்ளி, தெய்வானை யுடன் எழுந்தருளி மேளதா ளங்கள் முழங்க கோவிலை சுற்றி வலம் வந்த நிகழ்ச்சி நடந்தது. அதன் பிறகு மதியம் 12.30 மணிக்கு பக்தர்களுக்கு அருட் பிர சாதம் வழங்கப்பட்டது.

    இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை கன்னியாகுமரி ஸ்ரீ குகநாதீஸ்வரர் கோவில் பக்தர்கள் பேரவையினர் செய்துஇருந்தனர்.

    • மாலை 5 மணி முதல் இரவு 11 மணி வரை புஷ்ப அங்கி அலங்காரத்தில் முருகப்பெருமான் அருள்பாலிக்கிறார்
    • இன்று இரவு 11 மணி வரை முருகனை தரிசிக்க சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

    சென்னை வடபழனி ஆண்டவர் கோவிலில், ஆண்டுதோறும் ஆடி கிருத்திகை சிறப்பாக கொண்டாடப்படும்.இந்தாண்டு ஆடி கிருத்திகை சிறப்பு தரிசனம் அதிகாலை 5 மணி முதல் தொடங்கியது.

    நண்பகல் 12 மணி வரை, மூலவருக்கு சந்தன காப்பு அலங்காரம், பிற்பகல் 1 மணி முதல் மாலை 4 மணி வரை, ராஜ அலங்காரம் செய்யப்பட்டது.

    இன்று இரவு 11 மணி வரை வடபழனி முருகனை தரிசிக்க சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மாலை 5 மணி முதல் இரவு 11 மணி வரை புஷ்ப அங்கி அலங்காரத்தில் முருகப்பெருமான் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.

    வடபழனி முருகன் கோவிலில் இன்று பக்தர்கள் காவடி எடுத்தும், அலகு குத்தியும் ஏராளமானோர் முருகனை தரிசிக்க வந்திருந்தனர். பால்குடம் நேர்த்திக்கடன் ஊர்வலமும் நடந்தது. இதனால் கோவிலில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. குடி நீர், சுகாதார வசதிகள் செய்யப்பட்டன.

    அலகு குத்தி வரும் பக்தர்கள், மேற்கு கோபுர வாசல் வழியாக உள்ளே வர ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது. ரூ.50 தரிசன கட்டணத்தில் பக்தர்கள் செல்ல ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. பக்தர்கள் கூட்டத்தை ஒழுங்குபடுத்த தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டிருந்தன. நீண்ட வரிசையில் பக்தர்கள் கோவிலுக்குள் சென்றனர். பக்தர்களுக்காக `கார் பார்க்கிங்' வசதி, வள்ளி திருமண மண்டபம் எதிரில் ஏற்பாடு செய்யப்பட்டது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • படிப்பாதை வழியாக பக்தர்கள் நடந்து சென்று மலைக்கோவிலுக்கு சென்றனர்.
    • பழனி கோவிலின் உப கோவில்களிலும் பக்தர்கள் கூட்டம் அலை மோதியது.

    அறுபடை வீடுகளில் 3ம் படை வீடான பழனி முருகன் கோவிலில் ஆடி கிருத்திகையை முன்னிட்டு இன்று ஏராளமான பக்தர்கள் வருகை தந்தனர். ரோப் கார் பராமரிப்பு பணிகள் காரணமாக இயக்கப்படாததால் மின் இழுவை ரெயில் மூலம் மூலமே பக்தர்கள் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.

    இதனால் அப்பகுதியில் பக்தர்கள் நீண்ட நேரம் காத்திருந்தனர். இதே போல படிப்பாதை வழியாகவும் பக்தர்கள் நடந்து சென்று மலைக்கோவிலுக்கு சென்றனர். கிருத்திகையை முன்னிட்டு அதிகாலை 4.30 மணிக்கு நடை திறக்கப்பட்டு பழனி தண்டாயுதபாணி சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது.

    தரிசனத்துக்காக பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். சுமார் 2 மணி நேரத்துக்கும் மேலாக காத்திருந்த பிறகே சாமி தரிசனம் செய்ய முடிந்தது. உள்ளூர் பக்தர்கள் மட்டுமின்றி வெளியூரைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பால் காவடி, பன்னீர் காவடி, பறவை காவடி, மலர் காவடி எடுத்து ஊர்வலமாக வந்தனர். இதனால் அடிவாரம் பகுதியில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.

    காவடி எடுத்து வந்த பக்தர்கள் பாட்டுப்பாடியும், ஆட்டம் போட்டும் உற்சாகத்தோடு மலைக்கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தனர்.

    மலைக்கோவில் பாரவேல் மண்டபம் மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்டு இருந்தது. அங்கு பக்தர்கள் நெய் தீபம் ஏற்றி வழிபாடு செய்தனர். இதே போல பழனி கோவிலின் உப கோவில்களிலும் பக்தர்கள் கூட்டம் அலை மோதியது.

    • 23-ந்தேதி முதல் 25-ந்தேதி வரை ஆடி கிருத்திகை விழா நடைபெற உள்ளது.
    • ஆடி மாதம் தொடங்கிய நாள் முதலே பக்தர்கள் கூட்டம் அதிகரித்துள்ளது.

    விடுமுறை தினம் மற்றும் ஆடிமாதம் தொடங்கியதை முன்னிட்டு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த பக்தர்கள் திருத்தணி முருகன் கோவிலுக்கு நேற்று காவடி எடுத்து வந்தனர். முன்னதாக மலையடிவாரத்தில் உள்ள சரவண பொய்கை குளம் அருகே சூடம் ஏற்றி வழிப்பட்டு பின்னர் படிகள் வழியாக மலைக்கோவிலுக்கு சென்று முருகப்பெருமானை தரிசனம் செய்தனர்.

    ஞாயிறு விடுமுறை மற்றும் ஆடி மாதம் தொடங்கிய முதல் நாளே மலைக்கோவில் பக்தர்கள் கூட்டம் அதிகரித்துள்ளது. இதனால் பக்தர்கள் பொதுவழியில் ஒரு மணி நேரம் நீண்ட வரிசையில் காத்திருந்து மூலவரை தரிசனம் செய்தனர். வருகின்ற 23-ந்தேதி ஆடிக்கிருத்திகை திருவிழா மற்றும் தெப்பத் திருவிழாவன்று லட்சக்கணக்கான பக்தர்கள் முருகனை வழிப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

    மேலும், வருகின்ற 23-ந் தேதி முதல் 25-ந் தேதி வரை தொடர்ந்து 3 நாட்கள் ஆடி கிருத்திகை விழா மற்றும் தெப்பத்திருவிழாவும் நடைபெற உள்ளது. இதற்காக சரவணப்பொய்கை குளத்தில் இந்தாண்டிற்கான தெப்பம் கட்டும் பணியில் 20-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் மற்றும் தன்னார்வாலர்கள் ஈடுபட்டு வருகின்றனர். முன்னதாக தெப்பம் அமைக்க பயன்படுத்தப்படும் பேரல்களுக்கு வண்ணம் தீட்டபட்டு, தெப்பத்தை கட்டி குளத்தில் மிதக்க விட்டு பரிசோதித்தனர். ஓரிரு நாட்களில் தெப்பம் கட்டும் பணி முழுமை பெறும் என கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    திருவள்ளூரை அடுத்த புட்லூர் அருகே ராமாபுரம் பகுதியில் உள்ள பூங்காவனத்தம்மன் என்கிற அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில் ஆடி மாதம் துவங்கியதை முன்னிட்டு நேற்று 500-க்கும் மேற்பட்ட பக்தர்கள் குவிந்தனர். பெண்கள் விரதம் இருந்து கோவிலில் நீராடி விட்டு, ஈரத்துணியுடன் அம்மனை வணங்கி, பிரகாரத்தை 11 முறை சுற்றி வந்து வழிபட வேண்டும். இவ்வாறு 9 வாரங்கள் செய்வதன் மூலம் திருமணம் மற்றும் குழந்தை பாக்கியம் வேண்டுவோர் பிரார்த்தனை நிறைவேறும் என்பது ஐதீகம். இதனால் நேற்று காலை முதல் தமிழகம் மற்றும் ஆந்திராவில் இருந்து திரளான பெண்கள் கோவிலில் குவிந்தனர். பின்னர், நேர்த்தி கடனை செலுத்தி சுமார் 2 மணி நேரம் நீண்ட வரிசையில் காத்திருந்து அம்மனை வழிபட்டனர்.

    மேலும், வேண்டுதல் நிறைவேற்ற 20-க்கு மேற்பட்ட கர்ப்பிணி பெண்களுக்கு கோவில் வளாகத்திலேயே சீமந்தம் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் திரளான உறவினர்கள் கலந்துகொண்டு கர்ப்பிணி பெண்களுக்கு வளையல் அணிவித்து வாழ்த்தினார். திருவள்ளூர் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் இருந்து பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று அம்மனை வழிபட்டு சென்றனர். அதேபோல திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள அம்மன் கோவில்களில் ஆடி மாத விழா நேற்று நடைபெற்றது.

    • முதல்நாள் காலை காளியம்மனுக்கு வெண்ணாற்றங்கரையில் இருந்து பால் குடம், காவடி எடுத்து மேள, தாளத்துடன் முக்கிய வீதிகள் வழியாக கோயிலை வந்தடைந்தனர்.
    • 2-ம் நாள் காலை மாவிளக்கு பூஜையும், அதனை தொடர்ந்து கிடா வெட்டும் நிகழ்ச்சியும், அதனை தொடர்ந்து மஞ்சள்நீராட்டு விழாவும் நடைபெற்றது.

    அம்மாபேட்டை:

    பாபநாசம் தாலுக்கா, காந்தாவனம் கிராமம் வீரமாகாளியம்மன் கோவில் வைகாசி திருவிழா 3 நாட்கள் நடைபெற்றது. முதல்நாள் காலை காளியம்மனுக்கு வெண்ணாற்றங்கரையில் இருந்து பால் குடம், காவடி எடுத்து மேள, தாளத்துடன் முக்கிய வீதிகள் வழியாக கோயிலை வந்தடைந்தனர்.

    பின்னர் அம்பாளுக்கு சந்தன காப்பு அலங்காரத்துடன் சிறப்பு, அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. இரவு அம்மன் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் வீதியுலாவும் நடைபெற்றது. 2-ம் நாள் காலை மாவிளக்கு பூஜையும், அதனை தொடர்ந்து கிடா வெட்டும் நிகழ்ச்சியும், அதனை தொடர்ந்து மஞ்சள்நீராட்டு விழாவும் நடைபெற்றது. ஏற்பாடுகளை காந்தாவனம் கிராம மக்கள் செய்திருந்தனர்.

    • பக்தர்கள் திரண்டு தரிசனம் செய்தனர்
    • வைகாசி விசாக நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.

    கோவை:

    கோவை மேற்கு மலைத் தொடர்ச்சி பகுதியில் அமைந்துள்ள மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் வைகாசி விசாக நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இதையொட்டி இன்று காலை 6 மணிக்கு கோ பூஜை நடந்தது. 6.30 மணிக்கு மூலவருக்கு பன்னீர், ஜவ்வாது, சந்தனம் உள்பட 16 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து வைரநகைகள் பொறிக்கப்பட்ட தங்க கவச உடை அணிந்த சிறப்பு அலங்காரத்தில் சுவாமி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

    அதிகாலை முதலே பக்தர்கள் கோவிலுக்கு வரத் தொடங்கினார்கள். பக்தர்கள் பால்குடம், காவடி எடுத்து பாதயாத்திரையாக கோவிலுக்கு வந்தனர். பக்தர்கள் கொண்டுவரும் பால்குடங்கள் சுப்பிரமணியசாமிக்கு ம், வள்ளி தெய்வானைக்கும் மூலவருக்கு பால் அபிஷேகம் நடைபெற்றது. மதியம் 12 மணியளவில் கோவில் அலங்கார முன் மண்டபத்தில் வள்ளி தெய்வானையுடன் சுப்பிரமணியர் தங்க மயில் வாகனத்தில் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

    உள்ளூர் மற்றும் வெளியூர் பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் காவடி, பால்குடம் எடுத்து கோவிலுக்கு வந்தனர். கோவில் முன் மண்டபத்தில் பக்தர்கள் காவடி ஆட்டம் நடைப்பெற்றது.‌ தொடர்ந்து மாலை 4 மணிக்கு மூலவருக்கு அபிஷேக தீபாராதனை நடைபெறுகிறது. 6 மணிக்கு தங்க ரதத்தில் சுவாமி வள்ளி தெய்வானையுடன் திருவீதி உலா நிகழ்ச்சியும், இரவு 7 மணிக்கு ராக்கால அபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜை நடைபெறுகிறது.

    விழாவை தொடர்ந்து வடவள்ளி போலீசார் பக்தர்கள் கூட்டத்தை கட்டுப்படுத்தும் விதமாகவும், போக்குவரத்து நெரிசல் இல்லாமல் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய வசதியாக அடிவாரம் பகுதியில் பார்க்கீங் வசதி செய்து கொடுத்தனர். மலைக் கோவிலுக்கு செல்ல 50 வாகனங்கள் என ஒரு மணி நேரத்திற்கு ஒருமுறை அனுப்பி வைத்தனர். அதிகப்படியான பக்தர்கள் கோவில் பஸ்சில் செல்ல காத்து இருந்ததால் நீண்ட வரிசையில் காத்து இருந்து மலைக்கோவிலுக்கு சென்று தரிசனம் செய்தனர்.

    ×