search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தொடங்கியது"

    • ஈரோடு மாவட்டத்தில் இன்று 1,597 மையங்களில் காலை தடுப்பூசி முகாம் தொடங்கியது.
    • இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு தடுப்பூசி செலுத்தி கொண்டனர்.

    ஈரோடு:

    தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்கும் வகையில் மெகா தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் தமிழகத்தில் 4 -ம் அலையை தடுக்கும் வகையில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) மாபெரும் கொரோனா தடுப்பூசி முகாம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    அதன்படி இன்று ஈரோடு மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனைகள் , அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், நகர்ப்புற சுகாதார மையங்கள் மற்றும் பள்ளிகள் உள்பட 1,597 மையங்களில் காலை 7 மணிக்கு தடுப்பூசி முகாம் தொடங்கியது.

    12 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் முதல் மற்றும் இரண்டாம் தவணை தடுப்பூசிகள் செலுத்தப்பட்டன. இதே போல் 18 வயதுக்கு மேற்பட்ட இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்தி 6 மாதம் கடந்தவர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி இலவசமாக போடப்பட்டது.

    இன்று மட்டும் மாவட்டத்தில் 1.50 லட்சம் பேருக்கு தடுப்பூசி போட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. தடுப்பூசி செலுத்தும் பணியில் மாவட்டம் முழுவதும் 3,196 பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். 70 வாகனங்கள் முகாமிற்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது.

    பொதுமக்கள் சிரமம் இன்றி தடுப்பூசி செலுத்தி கொள்ள பொதுமக்கள் அதிக கூடும் இடங்களான ஈரோடு பஸ் நிலையம், ரெயில் நிலையம் உள்ளிட்ட இடங்களில் தடுப்பூசி முகாம் அமைக்கப்பட்டிருந்தன.

    இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு தடுப்பூசி செலுத்தி கொண்டனர். குறிப்பாக தற்போது 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் பூஸ்டர் தடுப்பூசி இலவசமாக போடப்பட்டு வருகிறது.

    இதனால் இன்று பூஸ்டர் தடுப்பூசியை ஏராளமானோர் ஆர்வத்துடன் போட்டுக்கொண்டனர். 

    • ஈரோடு ரெயில் நிலையம் அருகே பராமரிப்பு பணி நேற்று தொடங்கியது. வரும் ஆகஸ்ட் 13-ந் தேதி வரை 21 நாட்கள் இந்த பராமரிப்பு பணி நடைபெறுகிறது.
    • அதன்படி சேலத்தில் இருந்து ஈரோடு ரெயில் நிலையம் வராமல் நாமக்கல் வழியாக கரூர் செல்லும் வகையில் மாற்று வழி பாதையில் ரெயில்கள் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மைசூர்- மயிலாடுதுறை (16232) செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் பராமரிப்பு பணிகள் நடைபெறும் நாட்களில் ஈரோடு ரெயில் நிலையம் வராமல் நாமக்கல் வழியாக கரூருக்கு செல்லும்.

    ஈரோடு,ஜூலை. 25-

    ஈரோடு ரெயில் நிலையம் அருகே பராமரிப்பு பணி நேற்று தொடங்கியது. வரும் ஆகஸ்ட் 13-ந் தேதி வரை 21 நாட்கள் இந்த பராமரிப்பு பணி நடைபெறுகிறது. இதன் காரணமாக ஈரோடு வழியாக செல்லும் ரயில்கள் மாற்று வழி பாதையில் செல்ல ரெயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.

    அதன்படி சேலத்தில் இருந்து ஈரோடு ரெயில் நிலையம் வராமல் நாமக்கல் வழியாக கரூர் செல்லும் வகையில் மாற்று வழி பாதையில் ரெயில்கள் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மைசூர்- மயிலாடுதுறை (16232) செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் பராமரிப்பு பணிகள் நடைபெறும் நாட்களில் ஈரோடு ரெயில் நிலையம் வராமல் நாமக்கல் வழியாக கரூருக்கு செல்லும்.

    இதேப்போல் மைசூர்- தூத்துக்குடி (16236) எக்ஸ்பிரஸ் ரெயில், வாஸ்கோடகாமா -நாகப்பட்டினம்(17315) எக்ஸ்பிரஸ் ரெயில், ஸ்ரீமதா வைஷ்னோதேவி கற்றா- திருநெல்வேலி (16788) எக்ஸ்பிரஸ் ெரயில், சண்டிகர்- மதுரை (12688) எக்ஸ்பிரஸ் ரயில், ஒக்கா-தூத்துக்குடி (19568) எக்ஸ்பிரஸ் ரயில், காச்சகுடா - மதுரை (17615) எக்ஸ்பிரஸ் ெரயில், தூத்துக்குடி- மைசூர் (16235) எக்ஸ்பிரஸ் ரயில், திருநெல்வேலி- ஸ்ரீ மதா வைஷ்னோ தேவி கற்றா (16787) எக்ஸ்பிரஸ் ரயில், மதுரை- சண்டிகர் (12687), எக்ஸ்பிரஸ் ெரயில், தூத்துக்குடி -ஒக்கா (19567) எக்ஸ்பிரஸ் ெரயில், நாகப்பட்டினம்-வாஸ்கோடகாமா (17316) எக்ஸ்பிரஸ் ெரயில், மதுரை- காச்சகுடா (17616) எக்ஸ்பிரஸ் ெரயில், மயிலாடுதுறை-மைசூர் (16231) எக்ஸ்பிரஸ் ெரயில் ஆகிய ரயில்கள் பராமரிப்பு நாட்களான 24.7.2022 முதல் 13.8.2022 வரை 21 நாட்கள் சேலத்தில் இருந்து நாமக்கல் வழியாக கரூருக்கு மாற்று பாதையில் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதே போல் ஈரோட்டில் இருந்து ஜோலார்பேட்டைக்கு (06846) இயக்கப்படும் சிறப்பு ெரயில் வரும் ஆகஸ்ட் 14-ந் தேதி வரை 22 நாட்களுக்கு ரத்து செய்யப்பட்டுள்ளது. இதே போல் ஜோலார்பேட்டையில் இருந்து ஈரோடுக்கு (06845) இயக்கப்படும் சிறப்பு ெரயில் இன்று முதல் வரும் ஆகஸ்ட் 15-ந் தேதி வரை 22 நாட்களுக்கு ரத்து செய்யப்படுகிறது. இதைப்போல் ஈரோட்டிலிருந்து மேட்டூர் அணைக்கு (06407) இயக்கப்படும் சிறப்பு ெரயில் இன்று முதல் வரும் ஆகஸ்ட் 14-ந் தேதி வரை 21 நாட்களுக்கு ரத்து செய்யப்படுகிறது. இதேபோல் மேட்டூர் அணையில் இருந்து ஈரோட்டுக்கு (06408) இயக்கப்படும் சிறப்பு ெரயில்கள் இன்று முதல் வரும் ஆகஸ்ட் 14-ந் தேதி வரை 21 நாட்களுக்கு முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது. இதுகுறித்து மேலும் விவரங்களுக்கு 0424 - 2284812 என்ற உதவி எண்ணை அழைத்து கூடுதல் விவரங்களை தெரிந்து கொள்ளலாம் என ெரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

    • இன்று மட்டும் மாவட்டத்தில் 1.50 லட்சம் பேருக்கு தடுப்பூசி போட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.
    • இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு தடுப்பூசி செய்து கொண்டனர். குறிப்பாக தற்போது 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் பூஸ்டர் தடுப்பூசி இலவசமாக போடப்பட்டு வருகிறது.

    ஈரோடு:

    தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்கும் வகையில் மெகா தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் தமிழகத்தில் 4 -ம் அலையை தடுக்கும் வகையில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) மாபெரும் கொரோனா தடுப்பூசி முகாம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    அதன்படி இன்று மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனைகள் , அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், நகர்ப்புற சுகாதார மையங்கள் மற்றும் பள்ளிகள் உள்பட 1,597 மையங்களில் காலை 7 மணிக்கு தடுப்பூசி முகாம் தொடங்கியது.

    12 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் முதல் மற்றும் இரண்டாம் தவணை தடுப்பூசிகள் செலுத்தப்பட்டன. இதே போல் 18 வயதுக்கு மேற்பட்ட இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்தி 6 மாதம் கடந்தவர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசியும் போடப்பட்டது. இன்று மட்டும் மாவட்டத்தில்

    1.50 லட்சம் பேருக்கு தடுப்பூசி போட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. தடுப்பூசி செலுத்தும் பணியில் மாவட்டம் முழுவதும் 3,196 பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

    70 வாகனங்கள் முகாமிற்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது. பொதுமக்கள் சிரமம் இன்றி தடுப்பூசி எடுத்துக்கொள்ள பொதுமக்கள் அதிக கூடும் இடங்களான ஈரோடு பஸ் நிலையம், ரெயில் நிலையங்களில் தடுப்பூசி முகாம் அமைக்கப்பட்டிருந்தன. இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு தடுப்பூசி செய்து கொண்டனர்.

    குறிப்பாக தற்போது 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் பூஸ்டர் தடுப்பூசி இலவசமாக போடப்பட்டு வருகிறது. இதனால் இன்று பூஸ்டர் தடுப்பூசியை ஏராளமானோர் ஆர்வத்துடன் போட்டுக் கொண்டனர்.

    • ஆடிப்பண்டிகை சீசன் விற்பனை இந்த வாரம் முதல் தொடங்கி உள்ளது. மொத்த வியாபாரம் 30 சதவீதம் வரையிலும், சில்லரை வியாபாரம் 40 சதவீதம் வரையும் நடந்துள்ளது.
    • கடந்த சில நாட்களாக நூல் விலை குறைந்து வருவதால் ஜவுளிகளின் விலையும் சற்று குறையும் வாய்ப்பு உள்ளது.

    ஈரோடு:

    ஈரோடு ஜவுளி சந்தையானது வாரந்தோறும் செவ்வாய்கிழமை நடை பெறுவது வழக்கமாகும். கடந்த சில வாரங்களாக வெளியூர் மொத்த வியாபாரிகள், உள்ளூர் சில்லரை வியாபாரிகள் வருகை குறைவாக இருந்ததால் வியாபாரம் மந்த நிலையில் இருந்து வந்தது.

    இந்நிலையில் ஆடி பண்டிகையொட்டி இந்த வாரம் முதல் மீண்டும் வெளியூர் வியாபாரிகள் வரத்தொடங்கி உள்ளதாகவும், மொத்த வியாபாரிகள் 30 சதவீதத்தை தாண்டி நடந்ததாகவும், ஒரு சில ரகங்களுக்கு ஆடித்தள்ளுபடி வழங்கப்ப ட்டுள்ளதால் சில்லரை விற்பனை அதிக அளவில் நடந்ததாக வியாபாரிகள் கூறினர்.

    இது குறித்து ஜவுளி சந்தை வியாபாரிகள் தரப்பில் கூறியதாவது:-

    ஆடிப்பண்டிகை சீசன் விற்பனை இந்த வாரம் முதல் தொடங்கி உள்ளது. மொத்த வியாபாரம் 30 சதவீதம் வரையிலும், சில்லரை வியாபாரம் 40 சதவீதம் வரையும் நடந்துள்ளது.

    குறிப்பிட்ட ரெடிமேடு ரகங்களுக்கு ஆடித்தள்ளுபடி வழங்கப்ப ட்டுள்ளதால் சில்லரை வர்த்தகம் அதிகமாக நடந்தது. வேட்டி, சட்டை, பேண்ட், துண்டு, சேலை, சுடிதார், லுங்கி, துண்டு உள்ளிட்டவைகள் அதிக அளவில் விற்பனையானது.

    கடந்த சில நாட்களாக நூல் விலை குறைந்து வருவதால் ஜவுளிகளின் விலையும் சற்று குறையும் வாய்ப்பு உள்ளது.

    இந்த வாரம் ஏற்னவே இருந்த ஜவுளிகளை பழைய விலைக்கு விற்பனை செய்துள்ளோம். அடுத்த வாரத்தில் இருந்து புதிய ரகங்கள் வரும் போது, விலையும் சற்று குறைய வாய்ப்பு உள்ளது. ஆடிப்பண்டிகை வரை தினசரி கடைகளிலும் வியாபாரம் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கிறோம்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • ஈரோடு மாவட்டத்தில் 18 வயது பூர்த்தி அடைந்த 1 லட்சத்து 69 ஆயிரம் பேர் முதல் தவணை தடுப்பூசி செலுத்திக் கொள்ள வில்லை.
    • இன்று மட்டும் மாவட்டத்தில்1.50 லட்சம் பேருக்கு தடுப்பூசி போட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    ஈரோடு:

    தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்கும் வகையில் மெகா தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் தமிழகத்தில் 4-ம் அலையை தடுக்கும் வகையில் இன்று 31-வது மெகா தடுப்பூசி முகாம் நடந்து வருகிறது.

    ஈரோடு மாவட்டத்தில் இதுவரை நடந்து முடிந்த மெகா தடுப்பூசி முகாம் மூலம் பல லட்சம் பேர் தடுப்பூசி செலுத்தி கொண்டு ள்ளனர். இன்னமும் ஈரோடு மாவட்டத்தில் 18 வயது பூர்த்தி அடைந்த 1 லட்சத்து 69 ஆயிரம் பேர் முதல் தவணை தடுப்பூசி செலுத்திக் கொள்ள வில்லை.

    இந்நிலையில் இன்று காலை தடுப்பூசி முகாம் தொடங்கியது. ஈரோடு மாவட்டத்தில் மருத்துவ மனைகள், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், நகர்ப்புற சுகாதார மையங்கள் பள்ளிகள், பொதுமக்கள் அதிகம் கூடும் பஸ் நிலையங்கள், ரெயில் நிலையம் உள்பட 3194 மையங்களில் மெகா தடுப்பூசி முகாம் தொடங்கியது.

    இதில் 12 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் முதல் தவணை தடுப்பூசி மற்றும் 2-ம் தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. இதேபோல் 60 வயது கடந்தவர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசியும் செலுத்தப்பட்டு வருகிறது.

    இன்று மட்டும் மாவட்டத்தில்1.50 லட்சம் பேருக்கு தடுப்பூசி போட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தடுப்பூசி பணிக்காக மாவட்டம் முழுவதும் 4260 பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

    71 வாகனங்கள் முகாமிற்கு பயன்பட்டு வருகிறது. எனினும் பெரும்பாலான மையங்களில் மக்கள் கூட்டம் இன்றி வெறிச்சோடி காணப்படுகிறது.

    • ஈரோடு வேப்பம்பாளையம் ஏ. இ.டி. மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் இன்று பட்டதாரி ஆசிரியர் களுக்கான கவுன்சிலிங் காலை ஆன்லைன் மூலம் தொடங்கியது.
    • அதைத்தொடர்ந்து வரும் 13-ந் தேதி உயர்நிலை பள்ளி தலைமை ஆசிரியர்கள் பதவி உயர்வுக்கான கவுன்சிலிங் நடக்கிறது.

    ஈரோடு:

    தமிழக பள்ளி கல்வித்துறையில் ஏற்கனவே நடந்த இடமாறுதல் கவுன்சி லிங்கில் விடுபட்ட தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளி ஆசிரியர்களுக்கான கவுன்சிலிங் இன்றும், நாளையும் நடக்கிறது.

    ஈரோடு வேப்பம்பாளையம் ஏ. இ.டி. மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் ஆசிரியர் களுக்கான கவுன்சிலிங் நடக்கிறது. அதன்படி இன்று பட்டதாரி ஆசிரியர் களுக்கான கவுன்சிலிங் காலை ஆன்லைன் மூலம் தொடங்கியது. இதற்காக மாவட்டத்தின் பல்வேறு பகுதியிலிருந்து பட்டதாரி ஆசிரியர்கள் வந்திருந்தனர். மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ராமகிருஷ்ணன் பார்வை யிட்டார்.

    இதைத் தொடர்ந்து நாளை இடைநிலை ஆசிரியர்களுக்கு மாவட்டம் விட்டு மாவட்டம் செல்வதற்கான பணியிடை மாறுதல் கவுன்சிலிங் நடக்கிறது. இதைத்தொடர்ந்து வரும் 12-ந் தேதி மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வுக்கான கவுன்சிலிங் நடக்க உள்ளது. உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள், முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் இந்த கவுன்சிலிங்கில் பங்கேற்க தகுதி பெற்றுள்ளனர்.

    அதைத்தொடர்ந்து வரும் 13-ந் தேதி உயர்நிலை பள்ளி தலைமை ஆசிரியர்கள் பதவி உயர்வுக்கான கவுன்சிலிங் நடக்கிறது. பட்டதாரி ஆசிரியர்கள் உதவி தொடக்க கல்வி அலுவலர்கள் இதில் பங்கேற்க தகுதி பெற்றுள்ளனர்.

    தொடர்ந்து 14, 15-ந் தேதி பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வுக்கான கவுன்சிலிங் நடக்கிறது. இதில் இடைநிலை மற்றும் சிறப்பு ஆசிரியர்கள் பங்கேற்க தகுதி பெற்றுள்ளனர்.

    • ஆசனூரில் அமைக்கப்பட்டிருந்த எடைமேடை பயனற்ற நிலையில் இருந்ததை வனத்துறையினர் சீரமைத்து நேற்று முதல் அவ்வழியாக செல்லும் வாகனங்கள் எடை போட்டு அனுப்பி வைத்தனர்.
    • அனைத்து வாகனங்களும் எடை போட்ட பிறகே 16.2 டன் எடையுள்ள வாகனங்கள் மட்டுமே அனுமதிக்கபடும்.

    தாளவாடி:

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தின் அடர்ந்த வனப்பகுதியில் திம்பம் மலைப்பாதை உள்ளது.

    இந்த திம்பம் மலைப்பாதை திண்டுக்கல்- பெங்களூரு தேசிய நெடு ஞ்சாலையில் அமைந்து உள்ளது. தமிழ்நாடு மற்றும் கர்நாடக மாநிலங்களை இணைக்கும் முக்கிய பாதையாக திம்பம் மலை ப்பாதை உள்ளதால் தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வரு கின்றன.

    வனப்பகுதியில் உள்ள வனவிலங்குகள் அவ்வப்போது உணவு மற்றும் தண்ணீர் தேடி திம்பம் மலைப்பாதையை கடப்பது வழக்கம். அவ்வாறு சாலையை கடக்கும் வனவிலங்குகள், அந்த வழியாக செல்லும் வாகனங்களில் அடிபட்டு உயிரிழக்கின்றன.

    இதுகுறித்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் திம்பம் மலைப்பாதையில் இரவு நேர போக்குவரத்துக்கு தடை விதித்து ஈரோடு மாவட்ட கலெக்டர் கடந்த 2019-ம் ஆண்டு பிறப்பித்த உத்தரவை அமல்படுத்த வேண்டும் என இடைக்கால உத்தரவு பிறப்பித்தது.

    மேலும் இந்த வழியாக 16.2 டன் எடையுள்ள வாகனங்கள் மட்டுமே செல்ல வேண்டுமென உத்தரவிடப்பட்டது. இந்த நிலையில் கடந்த 2019-ம் ஆண்டு ஆசனூரில் அமைக்கப்பட்டிருந்த எடைமேடை பயனற்ற நிலையில் இருந்ததை வனத்துறையினர் சீரமைத்து நேற்று முதல் அவ்வழியாக செல்லும் வாகனங்கள் எடை போட்டு அனுப்பி வைத்தனர்.

    நேற்று முதல் சோதனை ஓட்டம் தொடங்கி உள்ளதாக அங்கிருந்த ஊழியர்கள் தெரிவித்தனர். விரைவில் அனைத்து வாகனங்களும் எடை போட்ட பிறகே 16.2 டன் எடையுள்ள வாகனங்கள் மட்டுமே அனுமதிக்கபடும். மற்ற வாகனங்கள் திருப்பி அனுப்பபடும் என தெரிவித்தனர்.

    பிளஸ்-2 தேர்வு முடிவு வெளியானது பி.இ., பி.டெக் என்ஜினீயரிங் படிப்புக்கு விண்ணப்பப்பதிவு தொடங்கியது, சிறப்பு மையங்களில் மாணவ- மாணவிகள் திரண்டனர்.

    சேலம்:

    தமிழ்நாடு அரசு உயர்கல்வித்துறை, தொழில் நுட்ப கல்வி இயக்கத்தின் கீழ் உள்ள என்ஜினீயரிங் கல்லூரிகளில் பி.இ., பி.டெக். போன்ற படிப்புகளில் சேருவதற்கான ஆன்லைன் விண்ணப்பப் பதிவு இன்று தொடங்கியது. இதற்காக மாநிலம் முழுவதும் உள்ள 110 சிறப்பு உதவி மையங்கள் வாயிலாக விண்ணப்பிக்க வழிவகை செய்யப்பட்டிருக்கிறது.

    இதன் அடிப்படையில் சேலம் கருப்பூர் அரசு என்ஜினீயரிங் கல்லூரி நூலக கட்டிட வளாகத்தில் சிறப்பு மையம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. அதுபோல் வனவாசி அரசினர் பாலிடெக்னிக் கல்லூரி, சேலம் தியாகராஜர் பாலிடெக்னிக் கல்லூரியிலும் மாணவர்கள் விண்ணப்பங்களை பதிவேற்ற சிறப்பு மையம் அமைக்கப்பட்டுள்ளது.

    இந்த சிறப்பு மையங்களில் இன்று முதல் காலை கம்ப்யூட்டர் வழியாக விண்ணப்பப் பதிவு தொடங்கியது. குறிப்பாக, காலை 9.30 மணி அளவில் பிளஸ்-2 பொதுத் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டவுடன் சிறப்பு மையங்களில் மாணவ- மாணவிகளின் வருகை அதிகமாக உள்ளது.

    மாநகர் பகுதியில் வசிக்கும் பிளஸ்-2 தேர்ச்சி பெற்ற மாணவ- மாணவிகள் அசல் மற்றும் நகல் கல்வி சான்றுகள், 10, 12-ம் வகுப்பு மதிப்பெண் சான்றுகள், ஆதார்கார்டு, சாதி சான்றிதழ் ஆகியவற்றை எடுத்துக்கொண்டு தங்களது பெற்றோருடன் இந்த மையங்களில் திரண்டுள்ளனர்.

    என்ஜினீயரிங் படிப்புகளில் சேர வேண்டி அவர்கள் வரிசையாக நின்று ஆர்வத்துடன் என்ஜினீயரிங் படிப்புக்கு தங்களது விண்ணப்பங்களை இணையதளத்தில் பதிவேற்றம் செய்து வருகின்றனர்.

    அதுபோல், பிளஸ்-2 தேர்வு முடிவு ெவளியானவுடன் எடப்பாடி, கொளத்தூர் மேட்டூர், மேச்சேரி, ஓமலூர், தாரமங்கலம், நங்கவள்ளி, ஜலகண்டாபுரம், வாழப்பாடி, ஏத்தாப்பூர், ஆத்தூர், தலைவாசல், கெங்கவல்லி, ஏற்காடு, வீராணம், வீரபாண்டி, காகாபாளையம், இடங்கணசாலை, சித்தர் கோவில், மகுடஞ்சாவடி, சங்ககிரி, தேவூர், இளம்பிள்ளை உள்ளிட்ட தொலை தூரத்தில் உள்ள மாணவ- மாணவிகள் பஸ்களில் புறப்பட்டு சிறப்பு மையங்களுக்கு தங்களது பெற்றோருடன் படையெடுத்தபடி உள்ளனர். இதனால் சிறப்பு மையங்களில் கூட்டம் அதிகமாக காணப்படுவதால் டோக்கன் வழங்கப்பட்டு விண்ணப்பதிவு நடைபெற்று வருகிறது.

    இந்த மையங்கள் மாலை 5 மணி வரை செயல்படும். விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் அடுத்த மாதம் (ஜூலை) 19-ந் தேதி ஆகும். விண்ணப்பதாரர்கள் https://tneaonline.org/ என்ற இணையதள முகவரியில் விண்ணப்பப்பதிவை மேற்கொள்ளலாம்.

    • மீனாட்சி அம்மன் கோவிலில் ஆனி ஊஞ்சல் திருவிழா வருகிற 7-ந் தேதி தொடங்குகிறது.
    • 7-ந் தேதி முதல் 11-ந் தேதி வரை இந்த உற்சவம் நடைபெறும்.

    மதுரை

    மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் இந்த ஆண்டு ஆனி உற்சவம் வருகிற ஜூலை 7-ந் தேதி தொடங்குகிறது‌. அன்று முதல் 11ம-ந் தேதி வரை இந்த உற்சவம் நடைபெறும்.

    இந்த நாட்களில் சாய ரட்சை பூஜைக்கு பின்னர் மீனாட்சி- சுந்தரேஸ்வரர் பஞ்ச மூர்த்திகளுடன் புறப்பாடாகி 100 கால் மண்டபத்தில் உள்ள ஊஞ்சல் மண்ட பத்தில் எழுந்தருள் வார்கள். அதனை தொடர்ந்து சுவாமி - அம்பாள் ஊஞ்சல் உற்சவம் நடைபெறும்.

    ஜூலை 5-ந் தேதி இரவு முதல் மறுநாள் அதிகாலை 3 மணி வரை வெள்ளியம்பல நடராஜர், சிவகாமி அம்மனுக்கு ஆறுகால் பீடத்திலும், இதர 4 சபை நடராஜர், சிவகாமி அம்மனுக்கு 2-ம் பிரகாரம் 100 கால் மண்டபத்திலும் ஆனி உத்திர திருமஞ்சனம் நடைபெறுகிறது.

    கால பூஜைகள் முடிந்த பின்னர் 7 மணிக்கு மேல் நடராஜர்- சிவகாமி அம்மன் 4 மாசி வீதிகளில் வீதி உலா வருகின்றனர். ஆனி உத்திர திருமஞ்சனம் அபிஷேகத்திற்கான பொருட்களை 5-ந் தேதி இரவு 7 மணிக்குள் கோவிலில் வழங்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ஜூலை 13-ந் தேதி ஆனி பவுர்ணமி அன்று உச்சிக்கால வேளையில் சொக்கநாதப் பெருமானுக்கு முக்கனிகளை கொண்டு பூஜைகள் நடைபெறும். உற்சவம் முடியும் 13-ந் தேதி வெள்ளி குதிரை வாக னத்தில் பஞ்ச மூர்த்திகள் புறப்பாடு நடக்கிறது.

    விழா நடக்கும் ஜூலை 3-ந் தேதி முதல் 11-ந் தேதி வரை கோவில் மற்றும் உபயதாரர் சார்பாக உபய திருக்கல்யாணம் மற்றும் தங்க ரத உலா ஆகியவை நடைபெறாது.

    மேற்கண்ட தகவலை கோவில் துணை ஆணை யர் அருணாசலம் தெரிவித்துள்ளார்.

    • ஈரோடு மாவட்டத்தில் இன்று 3,194 மையங்களில் கொரோனா தடுப்பூசி முகாம் தொடங்கியது
    • இன்று மட்டும் 1.50 லட்சம் பேருக்கு தடுப்பூசி போட இலக்கு நிர்ணயிக்கப்பட்டு பணிகள் நடந்து வருகிறது. இந்த பணியில் மாவட்டம் முழுவதும் 4,260 ஊழியர்கள் பங்கேற்று வருகின்றனர்.இதற்காக 67 வாகனங்கள் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

    ஈரோடு:

    தமிழகத்தில் கொரோனா பரவலைத் தடுக்கும் பொருட்டு மக்கள் நலனை முதன்மையாக கொண்டு மக்களை தேடி மருத்துவம் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. தமிழகத்தில் கொரோனாவை கட்டுப்படுத்தும் வகையில் மாபெரும் தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டு வருகிறது.

    இந்த முகாமில் 12 வயதிற்கு மேற்பட்ட மாணவர்கள், 18 வயதிற்கு மேற்பட்ட பொதுமக்கள் அனைவருக்கும் முதல் தவணை மட்டும் 2-ம் தவணை, இரு தவணை தடுப்பூசி செலுத்தி க்கொண்டே முன் களப்பணியாளர்கள், மருத்துவ பணியாளர்கள் மற்றும் 60 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பூஸ்டர் தடுப்பூசி இலவசமாக போடப்பட்டு வருகிறது.

    இதன்படி ஈரோடு மாவட்டத்தில் இன்று அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், நகர்ப்புற ஆரம்ப சுகாதார மையங்கள் மற்றும் பள்ளிகள் என மொத்தம் 3,194 மையங்களில் காலை 7 மணிக்கு கொரோனா தடுப்பூசி முகாம் தொடங்கியது.

    இதுபோல் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களிலும் தடுப்பூசி முகாம் நடைபெற்று வருகிறது. ஈரோடு பஸ் நிலையத்தில் நடைபெறும் முகாமில் பொதுமக்கள் ஆர்வத்துடன் பங்கேற்று தடுப்பூசி செலுத்தி கொண்டு வருகின்றனர்.

    குறிப்பாக 2-ம் தவணை தடுப்பூசி செலுத்தி கொள்ளா தவர்கள் பூஸ்டர் தடுப்பூசி போட்டுக் கொள்பவர்கள் ஆர்வத்துடன் பங்கேற்று வருகின்றனர். மாலை 7 மணி வரை இந்த தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது.

    இன்று மட்டும் 1.50 லட்சம் பேருக்கு தடுப்பூசி போட இலக்கு நிர்ணயிக்கப்பட்டு பணிகள் நடந்து வருகிறது. இந்த பணியில் மாவட்டம் முழுவதும் 4,260 ஊழியர்கள் பங்கேற்று வருகின்றனர்.இதற்காக 67 வாகனங்கள் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

    ×