search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 232186"

    • தனியார் பள்ளிக்கூடங்களில் பயன்படுத்தப்படும் 297 வாகனங்களை மஞ்சக்குப்பம் மைதானத்துக்கு வரவழைத்தனர்.
    • டிரைவர்களுக்கும் கண் மற்றும் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது.

    கடலூர்:

    கடலூர் மாவட்டத்தில் தனியார் பள்ளிகளுக்கு மாணவர்களை ஏற்றி க்கொண்டு செல்வதற்கு எதுவாக தனியார் பள்ளிகள் சார்பில் வாகனங்களை பயன்படுத்தி வருகின்றனர். அந்த வகையில் மாணவர்களை ஏற்றிச் செல்வதற்காக கடலூர் வட்டார போக்குவரத்து கழகத்துக்குட்பட்ட 93 பள்ளிக்கூடங்களில் மொத்தம் 297 வாகனங்கள் இயக்கப்படுகின்றன. இந்த நிலையில் பள்ளி வாகனங்கள், மாணவர்கள் பயணம் செய்வதற்கு ஏற்றவாறு உள்ளதா? என்று ஆய்வு செய்வதற்கு வட்டார போக்குவரத்து அதிகாரிகள் முடிவு செய்தனர். அதன்படி கடலூர், நெய்வேலி, பண்ருட்டி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள தனியார் பள்ளிக்கூடங்களில் பயன்படுத்தப்படும் 297 வாகனங்களை மஞ்ச க்குப்பம் மைதானத்துக்கு வரவழைத்தனர். பின்னர் வட்டார போக்குவரத்து அலுவலர் சுதாகர், கோட்டாட்சியர் அதியமான் கவியரசு, துணை போலீஸ் சூப்பிரண்டு (பொறுப்பு)சபியுல்லா ஆகியோர் முன்னிலையில் மோட்டார் வாகன ஆய்வாளர்கள் சோமசுந்தரம், பிரான்சிஸ், விஜய் ஆகியோர் பள்ளி வாகனங்களை ஆய்வு செய்தனர்.

    பின்னர் வட்டார போக்குவரத்து அலுவலர் சுதாகர் கூறுகையில், கடலூர் வட்டார போக்குவரத்து அலுவ லகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள 93 தனியார் பள்ளிகள், 297 வாகனங்களை மாணவர்களை பள்ளி களுக்கு ஏற்றி வருவதற்காக பயன்படுத்துகின்றன. இந்த வாகனங்கள் முறையாக தகுதிச்சான்று பெற்றிருக்கின்றனவா? முதலுதவி அளிக்கும் மருந்து பெட்டகம் உள்ளதா? விபத்து சமயங்களில் மாணவர்கள் அவசரமாக வெளியேற வாகனங்களில் அவசர வழி உள்ளதா? மாணவர்கள் வெளியே தலையை நீட்டுவதை தடுக்க ஜன்னல் கம்பிகள் நெருக்கமாக இருக்கிறதா? டிரைவர் கேபின் தனியாக அமைக்கப்பட்டுள்ளதா? கதவுகளுக்கு பூட்டு உள்ளதா?, வேக கட்டுப்பாட்டு கருவி பொருத்தப்பட்டுள்ளதா?, ஜி.பி.எஸ். கருவியுடன் சி.சி.டி.வி. கேமரா பொருத்த ப்பட்டுள்ளதா? என ஆய்வு செய்கிறோம். இதில் பள்ளி மாணவர்களை ஏற்றி செல்ல எவ்வித தகுதியும் இல்லாத வாகனங்களுக்கு நோட்டீஸ் கொடுக்கப்படும். பின்னர் அந்த பஸ் டிரைவர்கள், ஒரு வாரத்திற்குள் மீண்டும் வாகனத்தை ஆய்வுக்கு உட்படுத்தி, தகுதி சான்றிதழை கொடுத்து மீண்டும் இயக்கலாம் என தெரிவித்தார். முன்னதாக அனைத்து வாகன டிரைவர்களுக்கும் கண் மற்றும் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது.

    • வேப்பூர் அருகே மின்சாரம் தாக்கி சவுண்டு சர்வீஸ் உரிமையாளர் பலியானார்.
    • முருகன் கனகாவின் வீட்டில் நேற்று மைக் செட் மற்றும் டியூப் லைட் கட்டி மின் இணைப்பு கொடுத்தார்.

    கடலூர்:

    வேப்பூர் அடுத்த மங்களூர் காட்டுக்கொட்டகை கிராமத்தைச் சேர்ந்தவர் முருகன் (வயது 45). இவர் சவுண்டு சர்வீஸ் கடை வைத்துள்ளார். அதே ஊரைச் சேர்ந்த கனகாவின் வீட்டில் நேற்று மைக் செட் மற்றும் டியூப் லைட் கட்டி மின் இணைப்பு கொடுத்தார். அப்போது எதிர்பாராத விதமாக முருகன் மீது மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டார்.

    அங்கிருந்த வர்கள் அவரை மீட்டு மங்களூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதித்தனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக வேப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர். இது தொடர்பான புகாரின் பேரில் சிறுபாக்கம் போலீசார் விரைந்து வந்து ஆறுமுகத்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக விருத்தாசலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    • முகாமானது காலை 8 மணி முதல் மதியம் ஒரு மணி வரை நடைபெற்றது.
    • சுமார் 400-க்கும் மேற்பட்டவர்களுக்கு கண் பரிசோதனை செய்யப்பட்டது.

    மதுக்கூர்:

    தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை அருகே மதுக்கூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் மதுரை அரவிந்த் கண் ஆஸ்பத்திரி, மதுக்கூர் அரிமா சங்கம் மற்றும் மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம் ஆகியவை இணைந்து மாபெரும் இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது.

    முகாமிற்கு மதுக்கூர் அரிமா சங்க தலைவர் கோவிந்தராஜ் தலைமை தாங்கினார்.

    முகாமை தொழிலதிபர் எஸ். எஸ்.பி. பிரகாசம் தொடங்கி வைத்தார்.

    முகாமானது காலை 8 மணி முதல் மதியம் ஒரு மணி வரை நடைபெற்றது.

    இதில் கண் புரை, கண்ணீரெழுத்து நோய், குழந்தைகளின் கண் நோய், கிட்ட பார்வை, தூர பார்வை, வெள்ளெழுத்து ஆகியவற்றிற்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

    முகாமில், 4 டாக்டர்கள், 23 செவிலியர்கள் அடங்கிய மருத்துவ குழுவினர் சுமார் 400-க்கும் மேற்பட்ட வர்களுக்குகண்

    பரிசோதனை செய்தனர்.

    அதில் 142 பேர் கண் அறுவை சிகிச்சை க்காக மதுரை அரவிந்த் கண் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

    இதில் அரிமா சங்க நிர்வாகிகள், உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    அனைவரு க்கும் ஆறுதல் பரிசு வழங்கப்பட்டது.

    முடிவில் மதுக்கூர் அரிமா சங்க செயலாளர் பன்னீர்செ ல்வம் நன்றி கூறினார்.

    • நீரிழிவு நோய் 18 வயது மேற்பட்டவர்களுக்கு பெண் சுகாதார தன்னார்வலர்கள் மூலம் பரிசோதனை செய்யப்படுகிறது.
    • ஆரோக்கியமான உணவு முறைகள், எளிய உடற்பயிற்சி முறைகள் பற்றி ஆலோசனை வழங்கினார்.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே நிம்மேலி ஊராட்சியில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறையின் சார்பில் மக்களை தேடி மருத்துவ திட்டத்தின் பயனாளிகள் குறித்து மயிலாடுதுறை கலெக்டர் மகாபாரதி மருத்துவம் குறித்து கேட்டறிந்து நலம் விசாரித்தார் அப்போது நிம்மேலி கிராமத்தில் வசிக்கும் கலியமூர்த்தி (வயது 85) சசிகலா 50 ஆகியோரது வீட்டிற்கு நேரடியாக சென்று மக்களைத் தேடி மருத்துவ திட்டத்தின் கீழ் பணி புரியும் செவிலியர்கள் நேரடியாக வீட்டிற்கு வந்து ரத்த கொதிப்பு சர்க்கரை நோய் குறித்து கண்டறிந்து மருந்து மாத்திரைகள் வழங்குகிறார்களா என கேட்டறிந்தார்.

    தொடர்ந்து அப்பகுதியில் அமைந்துள்ள அங்கன்வாடி மையத்தில் ஆய்வு மேற்கொண்ட கலெக்டர் குழந்தைகளிடம் கலந்துரையாடலில் ஈடுபட்டார்.

    அப்போது கலெக்டர் கூறுகையில் மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின்கீழ் மயிலாடுதுறை மாவட்டத்தில் 73508

    பயனாளிகள் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

    மயிலாடுதுறை மாவட்டத்தில் மக்களின் வீட்டிற்கே சென்று உயர் இரத்த அழுத்தம், நீரிழிவு நோய் 18 வயது மேற்பட்டவர்களுக்கு பெண் சுகாதார தன்னார்வலர்கள் மூலம் பரிசோதனை செய்யப்படுகிறது.

    தொற்றா நோய்கள் அம்மைகளை எதிர்கொள்ளும் விதமாக நோயாளிகளின் இல்லத்திற்கு நேரில் சென்று சில அத்தியாவசியமான சுகாதார சேவைகள் வழங்கப்படுகிறது.

    மேலும், தொடர் கண்காணிப்பு செய்வதன் மூலம் இரண்டு மாதங்களுக்கு நோயாளிகள் பயன்பெறும் விதமாக வீட்டிற்கே சென்று மருந்துகள் வழங்கப்படுகின்றது.

    இரண்டு மாதத்திற்கு ஒருமுறை பெண் சுகாதார தன்னார்வலர்கள் (WHV) நோயாளிகளை அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு மருத்துவர் பரிசோதனை செய்ய பரிந்துரை செய்கின்றனர்.

    இது தவிர, அனைவருக்கும் ஆரோக்கியமான உணவு முறைகள், எளிய உடற்பயிற்சி முறைகள்பற்றி எடுத்துரைத்து ஆலோச னைகள் வழங்குகின்றனர்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    அப்போது மாவட்ட துணை (சுகாதாரம்) இயக்குனர் அஜித்பிரபு குமார், தாசில்தார் செந்தில்குமார்

    வட்டார மருத்துவ அலுவலர் ராஜ்மோகன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் இளங்கோவன் சரவணன் டாக்டர் பத்மபிரியவர்தினி சுகாதார மேற்பார் வையாளர் ராமோகன் சுகாதார ஆய்வாளர் ரவிக்குமார் ஊராட்சி தலைவர் வசந்தி செவிலியர்கள் உடன் இருந்தனர்.

    • தஞ்சாவூர் ரெயில்வே இருப்பு பாதை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
    • வாலிபரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தஞ்சை அரசு மருத்துவகல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை அடுத்த பூதலூர் அருகே உள்ள ரெயில்வே தண்டவாளத்தில் இன்று காலை 42 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் தலை நசுங்கிய நிலையில் பிணமாக கிடந்தார்.

    இதனை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து தஞ்சாவூர் ரெயில்வே இருப்பு பாதை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    இதையடுத்து இன்ஸ்பெக்டர் சாந்தி உத்தரவின்பேரில் சிறப்பு சப்- இன்ஸ்பெக்டர்கள் குமார் ,சுரேஷ் , ஏட்டு சரவணசெல்வம் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பிணத்தை பார்வையிட்டு விசாரித்தனர்.

    ஆனால் இறந்து கிடந்தவர் யார்? எந்த ஊர்? என்ற விபரம் தெரியவில்லை.

    இதையடுத்து அந்த வாலிபரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தஞ்சை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இது குறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து அந்த வாலிபர் தண்டவாளத்தை கடக்க முயலும் போது மயிலாடுதுறையில் இருந்து திருச்சி நோக்கி சென்ற பயணிகள் ரெயிலில் அடிபட்டு இறந்தாரா? அல்லது தற்கொலை செய்து கொண்டாரா ? என்ற பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கரூரில் 17 ஆயிரம் மாணவிகளுக்கு மருத்துவ பரிசோதனை செய்யபட்டது
    • ஒவ்வொரு குழந்தை பிறந்த பின்பும், பிரசவகால பின் கவனிப்பு 48 நாட்கள் வரை கட்டாயம், கிராம சுகாதார செவிலியர்களால் ஆய்வு செய்யப்பட வேண்டும்.

    கரூர்:

    கரூர் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், சுகாதார துறை பணி ஆய்வு கூட்டம் நடந்தது. கலெக்டர் பிரபுசங்கர் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் அவர் பேசும்போது, உதிரம் உயர்த்துவோம் திட்டத்தில் பரிசோதனை செய்யப்பட்ட, 17 ஆயிரம் மாணவியருக்கு வரப்பெற்ற முடிவை வகைப்படுத்தி, அவர்களுக்கு ரத்தசோகை தொடர்பாக சிகிச்சை அளிப்பது, சிசு மரணம் குறித்து ஆய்வு செய்ய வேண்டும்.சிசு இறப்பை முற்றிலும் தவிர்க்க மருத்துவ அலுவலர்களுக்கு அறிவுறுத்த வேண்டும்.ஒவ்வொரு குழந்தை பிறந்த பின்பும், பிரசவகால பின் கவனிப்பு 48 நாட்கள் வரை கட்டாயம், கிராம சுகாதார செவிலியர்களால் ஆய்வு செய்யப்பட வேண்டும்.

    குழந்தைகளுக்கு பிறப்பிலேயே ஏற்படும் நோய்கள் கண்டறிதல் பற்றி ஆய்வு செய்து, பிறவி காதுகேளாமை போன்ற நோய்களை துரிதமாக கண்டறிய வேண்டும். அனைத்து மருத் துவமனைகளிலும் குறைந்தது 3 மாத இருப்புகள் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று பேசினார்.நிகழ்ச்சியில், இணை (மருத்துவ நலப்பணிகள்) இயக்குனர் ரமாமணி, துணை இயக்குனர் (சுகாதார பணிகள்) சந்தோஷ்குமார், கரூர் அரசு மருத்து வமனை மருத்துவ கல்லுாரி முதல்வர் ராஜா உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • சர்க்கரை நோயைக் குறைப்பதற்கு வழி ஏதும் இருக்கிறதா? என்று அறிந்து கொள்ளலாம்.
    • கால் விரல் காயம் ஆறவில்லையென்றால் விரல் எடுக்கிற நிலைமை வருமா? என்று அறிந்து கொள்ளலாம்.

    கேள்வி: சர்க்கரை நோயாளிகளுக்கு புற்றுநோய் உள்ளதா என்று எந்த பரிசோதனை மூலம் தெரிந்து கொள்ளலாம்? (பன்னீர்செல்வம், வேலூர்)

    பதில்: நீரிழிவு நோயாளிகளுக்கு கல்லீரல், கணையம், பெருங்குடல், மார்பகம், கருப்பையகம் (எண்டோமெட்ரியம்) ஆகிய உறுப்புகளில் புற்றுநோய் வரக்கூடிய வாய்ப்பு அதிகம். ஜான் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத்தில் நடத்தப்பட்ட ஒரு ஆய்வில் புற்றுநோய் வரக்கூடிய வாய்ப்பு நீரிழிவு நோயினால் பாதிக்கபட்டவர்களில் ஆண்களுக்கு 19 சதவிகிதம் அதிகமாகவும், பெண்களுக்கு 27 சதவிகிதம் அதிகமாகவும் இருப்பதாக கண்டறியப்பட்டது. புற்றுநோய் கண்டறிய ரத்தத்தில் கீழ்கண்ட டூயுமர் மார்க்கர் பரிசோதனைகளை செய்யலாம்.

    கல்லீரல் புற்றுநோய்: ஏ.எப்.பி. (ஆல்பா பீட்டோ புரோட்டின்), கணையப் புற்றுநோய்: சி.ஏ 19-9, பெருங்குடல் புற்றுநோய்: சி.ஈ.ஏ. (கார்சினோ எம்பிரியானிக் ஆன்டிஜன்), மார்பக புற்றுநோய்: சி.ஏ 15-3, சி.ஏ (27-29), சி.ஏ 125, கருப்பையக புற்றுநோய் (எண்டொமெட்ரியல் கேன்சர்): சி.ஏ 125, ரத்த அணுக்கள் பரிசோதனை (கம்ப்ளீட் ஹீமோகிராம்), எக்ஸ்ரே, அல்ட்ரா சவுண்ட், சி.டி. ஸ்கேன், எலும்பு ஸ்கேன், எம்.ஆர்.ஐ, பெட் ஸ்கேன் (பாசிட்ரான் எமிஸ்ஸன் டோமோகிராபி) போன்ற பரிசோதனைகளையும் மருத்துவர் ஆலோசனை பெற்று புற்றுநோய் உள்ளதா என்பதைக் கண்டறிய பரிசோதனை செய்து பார்க்கலாம்.

    கேள்வி: எனக்கு 5 வருடங்களாக சர்க்கரை நோய் இருக்கிறது. என் கால் கட்டை விரலில் அடிபட்டு காயம் ஆறாமல் இருக்கிறது. இதனால் என் கால் கட்டை விரல் எடுக்கிற நிலைமைக்கு வருமா? (க. நளினி, மாமண்டூர்)

    பதில்: பொதுவாக நீரிழிவு நோயாளிகளுக்கு புண் ஆறாமல் இருப்பதற்கு ரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகமாக இருப்பது ஒரு காரணமாக இருக்கலாம். உங்களுடைய கால் கட்டை விரலில் இழைய அழுகல் (கேங்கரீன்) ஏற்பட்டால் மட்டுமே, வேறு வழியில்லாமல் கால் விரலை அறுவை சிகிச்சையின் மூலம் மருத்துவர் துண்டிக்க நேரலாம்.

    நீரிழிவு நோயாளிகளுக்கு ரத்த சர்க்கரையின் அளவு அதிகமாக இருக்கும்போது நோய் எதிர்ப்பு திறன் குறைந்து தொற்று ஏற்படும். ரத்த நாளங்களில் அடைப்பு ஏற்படுவதால் ரத்த ஓட்டம் குறைந்து கேங்கரீன் உண்டாகும். ஆனால், நீங்கள் ரத்த சக்கரையின் அளவை கட்டுக்குள் வைத்திருந்தால் இதை தடுக்கலாம். புகை பிடிக்கும் பழக்கத்தை விட்டொழிதல், உடல் எடை குறைத்தல் போன்றவையும் கேங்கரீன் வராமல் தடுப்பதற்கு சில வழியாகும். மேலும் புண் ஏற்படும்போது மருத்துவரின் ஆலோசனை பெற்று இன்சுலின் ஊசி செலுத்திக் கொள்ளலாம்.

    ஏனென்றால், இன்சுலின் ரத்த சர்க்கரையின் அளவை கட்டுக்குள் கொண்டு வருவதற்கு மட்டுமின்றி, நோய் எதிர்ப்பு திறனை அதிகரிக்கவும் செய்கிறது. மேலும் இன்சுலின் கெரடினோசைட்ஸ் மற்றும் என்டோதீலியல் செல்களை மற்ற திசுக்களில் இருந்து புண் ஆறாமல் இருக்கும் இடத்திற்கு இடம் பெயரச்செய்து புண் சீக்கிரமாக ஆறுவதற்கு உதவி புரிகிறது

    கேள்வி: எனக்கு 18 வருடமாக சர்க்கரை நோய் உள்ளது. எனக்கு மூட்டு வலி இருப்பதால் வாக்கிங் போக முடியவில்லை. எனவே சர்க்கரை நோயைக் குறைப்பதற்கு வேறு வழி ஏதும் இருக்கிறதா? (கிருஷ்ணசாமி, மேநல்லூர், திருவண்ணாமலை)

    பதில்: உங்களுக்கு மூட்டு வலியால் வாக்கிங் போக முடியாததால் ஆல்டர்நேட்டிவ் எக்ஸர்சைஸ் (மாற்று உடற்பயிற்சி) செய்யலாம். நீங்கள் ஆர்ம் ஸ்விங்க் எக்ஸர்சைஸ் (கைகளை வீசி செய்யும் உடற்பயிற்சி), உடம்பின் மேல் பகுதி உடற்பயிற்சி (அப்பர் பாடி எக்ஸர்சைஸ்), யோகா அல்லது தியானம் செய்யலாம்.

    நீங்கள் வாக்கிங் போயிருந்தால் எரிந்திருக்ககூடிய கலோரிகளை ஈடு செய்ய, குறைந்த கலோரி உணவுகளை சேர்த்துக் கொள்ளலாம். மேலும் நீங்கள் உணவு கட்டுப்பாட்டின் மூலம் ரத்த சராசரியின் அளவை (எச்.பி.ஏ1சி) அதிகமாக்காமல் தடுக்கலாம்.

    கார்போஹைட்ரேட் நிறைந்த உணவுகளை குறைத்து நார்ச்சத்து நிறைந்த உணவுகளை அதிகமாகவும், புரதச்சத்து உணவுகள், காய்கறிகள், குறைந்த கிளைசீமிக் இண்டக்ஸ் உள்ள பழங்கள், கீரைகள, முட்டையின் வெள்ளைக்கரு, மீன், கோழி இறைச்சி ஆகியவற்றை சேர்த்துக் கொள்ளலாம். சிவப்பு இறைச்சி (ஆட்டுக்கறி, மாட்டுக்கறி) போன்றவற்றையும், எண்ணெயில் பொறித்த அல்லது வறுத்த உணவுகள், துரித உணவுகள், நிறைவுற்ற கொழுப்பு நிறைந்த உணவுகளைத் தவிர்க்கலாம்.

    உடல் நலம் தொடர்பான வாசகர்களின் கேள்விகளுக்கு நீரிழிவு நோய் நிபுணர் டாக்டர் வி. சத்ய நாராயணன், எம்.டி., சி. டயாப் (ஆஸ்திரேலியா), காஞ்சிபுரம் பதில் அளிக்கிறார்.

    கேள்விகளை அனுப்ப வேண்டிய முகவரி:

    உங்கள் உடம்புக்கு என்ன?, தினத்தந்தி, 86, ஈ.வி.கே. சம்பத் சாலை, வேப்பேரி, சென்னை-600007.

    மின்னஞ்சல்: doctor@dt.co.in,

    வாட்ஸ் அப்: 7824044499

    • இந்த பஸ் நிலையம் கடந்த 1984 -ம் ஆண்டு கட்டப்பட்டது.
    • பஸ் நிலையத்தை புனரமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து வந்தனர்.

    மேட்டுப்பாளையம்,

    மேட்டுப்பாளையம் பஸ் நிலையம் கடந்த 1984 -ம் ஆண்டு கட்டப்பட்டது. இங்கிருந்து கோவை, திருப்பூர், நீலகிரி, ஈரோடு உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் பஸ்கள் வந்து செல்கின்றன.

    அதேபோல் மேட்டுப்பாளையம் பஸ் நிலையத்தில் இருந்து கோவை, திருப்பூர், நீலகிரி, ஈரோடு, சேலம், திருச்சி, கரூர், சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த பஸ் நிலையத்தில் மேட்டுப்பாளையம் நகராட்சிக்கு சொந்தமான வணிக வளாக கடைகளும் இயங்கி வருகின்றன. நாள்தோறும் மேட்டுப்பாளையம் பஸ்நிலையத்தை பல்லாயிரக்கணக்கான மக்கள் தங்களது அன்றாட பணிக்காகவும், வேலைக்கு செல்வோரும்,பள்ளி, மாணவ,மாணவிகளும் பயன்படுத்தி வருகின்றனர்.

    மேலும் தமிழகம், கேரளா, ஆந்திரா உள்ளிட்ட உள்நாடுகளில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் மேட்டுப்பாளையம் வந்தடைந்த பின்னர் மலைகளின் அரசி ஊட்டிக்கு சென்று வருகின்றனர். இந்தநிலையில் பஸ் நிலையம் கட்டப்பட்டு சுமார் 39 ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில் கட்டிடத்தின் பல பகுதிகள் விரிசல் அடைந்தும், சிதில மடைந்தும்,மேல் பூச்சுகள் இல்லாமல் பொலிவு இழந்தும் காணப்பட்டு வருகிறது.

    மேட்டுப்பாளையம் பஸ் நிலையத்தை புனரமைக்க வேண்டும் என பல்வேறு அரசியல் கட்சியினரும், பொதுநல அமைப்புகளும் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர். அதனையடுத்து தமிழக அரசு மேட்டுப்பாளையம் பஸ் நிலையத்தை புனரமைக்க உத்தரவிட்டது. முதற்கட்டமாக மண் பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. இதனையொட்டி நேற்று திருப்பூர், கோவை பேருந்துகள் நிற்கும் இடங்களில் மண் பரிசோதனை ஆலோசகர்களால் மேற்கொள்ளப்பட்டது. மேட்டுப்பாளையம் பஸ் நிலையம் சுமார் 39 வருடங்களுக்கு இடித்து மீண்டும் புனரமைக்கப்பட உள்ளதால் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    இதுகுறித்து மேட்டுப்பாளையம் நகராட்சி ஆணையர் வினோத் கூறுகையில் பஸ் நிலையத்தை புனரமைக்கும் வகையில் முதற்கட்டமாக மண் பரிசோதனை ஆலோசகர்களால் பஸ் நிலைய பகுதிகளில் மண் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதன் முடிவுகள் ஆலோசகர்களால் அறிவிக்கப்பட்ட பின்னர் மேட்டுப்பாளையம் நகராட்சி அலுவலகத்திற்கு அனுப்பி வைக்கப்படும். அந்த அறிக்கையினை ஆய்வு செய்த பின்னர் பஸ் நிலையத்தை புனரமைக்கும் பணி தொடங்கும் என தெரிவித்தார்.

    • பல்வேறு வகையான பரிசோதனைகள் செய்யப்பட்டு ஆலோசனைகள் வழங்கப்பட்டன.
    • 10 குழந்தைகள் மற்றும் சில பெண்களுக்கு மேல் சிகிச்சைக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.

    தஞ்சாவூர்:

    இந்தியன் ரெட்கிராஸ் சொசைட்டி மற்றும் இந்திய மருத்துவ சங்கம் சார்பில் இன்று உலக சுகாதார தினத்தை முன்னிட்டு தஞ்சாவூர் ராஜப்பா நகரில் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது.

    இம்முகா மினை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தொடங்கி வைத்தார்.

    இந்த மருத்துவ முகாமில் பல்வேறு துறைகளைச் சேர்ந்த டாக்டர்கள் செல்வ வேல், கார்த்திகேயன், ராதிகா மைக்கேல், சிங்காரவேலு, மணிராம் கிருஷ்ணா, உஷா நந்தினி, அமுத வடிவு, ராஜ்மோகன், ரேகா ராஜமோகன், மணிமாறன், விக்ரம் குமார், பாரதி, ராஜசேகர், லியோ ஜோசப், சிஜூ ஜோசப், கௌதம், விஜயபாஸ்கர், சத்யநாராயணன் ஆகியோர் கலந்து கொண்டு 200-க்கும் மேற்பட்ட கட்டிட தொழிலாளர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்தனர். இலவசமாக மருந்து, மாத்திரைகள் வழங்கப்பட்டன.

    மேலும் பல்வேறு வகையான பரிசோத னைகள் செய்யப்பட்டு ஆலோ சனைகள் வழங்கப்பட்டன.

    இதில் 10 குழந்தைகள் மற்றும் சில பெண்களுக்கு மேல் சிகிச்சைக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.

    முன்னதாக உலக சுகாதார தினத்தை முன்னிட்டு "அனைவருக்கும் சுகாதாரம்" என்பதை வலியுறுத்தி இந்தியன் ரெட்கிராஸ் சொசைட்டி சார்பில் பயனாளிகளுக்கு சுகாதார பெட்டகத்தை கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் வழங்கினார்.

    நிகழ்ச்சியில் இந்தியன் ரெட்கிராஸ் சொசைட்டி சுகாதார நலன் ஆலோசகர் டாக்டர் சிங்காரவேலு வரவேற்றார்.

    இந்திய மருத்துவ சங்க தலைவர் டாக்டர் லியோ ஜோசப் மற்றும் இந்தியன் ரெட்கிராஸ் சொசைட்டி இரத்த வங்கி ஆலோசகர் டாக்டர் ராதிகா மைக்கேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் இந்தியன் ரெட்கிராஸ் சொசைட்டி துணை சேர்மன் பொறியாளர் முத்துக்குமார் நன்றி கூறினார்.

    இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை இந்தியன் ரெட்கிராஸ் சொசைட்டி பொருளாளர் ஷேக்நாசர், யூத் ரெட்கிராஸ் ஆலோசகர் ஜெயக்குமார், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் முருகானந்தம், ஜூனியர் ரெட்கிராஸ் ஆலோசகர் பிரகதீஷ் , இந்திய மருத்துவ சங்க செயலாளர் டாக்டர் கார்த்திகேயன் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.

    • வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார்.
    • உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தஞ்சை மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    வல்லம்:

    தஞ்சை அருகே ரெட்டிப்பா ளையம் ஒளிகைத் தெருவை சேர்ந்தவர் குமார் (43).

    கூலித் தொழிலாளி. குமாரின் மனைவி மாரியம்மாள். இவர்கள் இருவருக்கும் குடும்பத் தகராறு ஏற்பட்டுள்ளது.

    இதனால் கடந்த 6 மாதத்திற்கு முன்பு குமாரிடம் கோபித்து கொண்டு மாரிய ம்மாள் வீட்டை விட்டு சென்றுவிட்டார்.இதனால் மனவேதனை யில் குமார் இருந்து வந்துள்ளார்.

    இந்நிலையல் நேற்று மது அருந்திவிட்டு வந்த குமார் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் வீட்டில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார்.

    குமார் தூக்கில் தொங்குவதை பார்த்த அக்கம்பக்கத்தினர் கள்ளப்பெரம்பூர் போலீசில் புகார் செய்தனர்.

    உடனே சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் குமார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் இதுகுறித்து குமாரின் தாய் லட்சுமியம்மாள் கொடுத்த புகாரின் பேரில் கள்ளப்பெரம்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

    • காண்ட்ராக்டர் மற்றும் வாகன டிரைவர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    • பிரேத பரிசோதனைக்காக உடலை சீர்காழி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுக்கா வழுதலைக்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் சுரேந்தர் (வயது 25) கொத்தனார்.

    இவர் வழுதலைகுடியில் இருந்து வடகால் நோக்கி தனது மோட்டார் சைக்கிளில் சென்று உள்ளார்.

    எடமணல் என்ற இடத்தில் சாலையின் குறுக்கே பாலம் கட்டுவதற்காக கொட்டப்பட்டிருந்த ஜல்லியில் வழுக்கி நிலை தடுமாறி கீழே விழுந்தார்.

    அப்போது அந்த வழியாக வந்த வாகனம் மோதியதில் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே சுரேந்தர் பரிதாபமாக உயிரிழந்தார்.

    தகவல் அறிந்த சீர்காழி போலீசார் விபத்தில் உயிரிழந்த சுரேந்தர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சீர்காழி அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் செல்ல முயன்றனர்.

    அப்போது அங்கு திரண்ட சுரேந்திரனின் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் விபத்துக்கு காரணமான கட்டுமான பணி காண்ட்ராக்டர் மற்றும் வாகன டிரைவர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    இதைத் தொடர்ந்து போலீசார் அந்த சாலையில் இருந்த சிசிடிவி பதிவுகளை ஆராய்ந்து எடமணல் பகுதியில் இருந்து புறவழிச் சாலை பணிக்காக மண் ஏற்றிச் சென்ற லாரி தான் விபத்தை ஏற்படுத்தியது என்பதை கண்டறிந்து லாரி ஓட்டுநர் கைது செய்ய நடவடிக்கை எடுக்கபடும் என சாலை மறியலில் ஈடுப்பட்டவர்களிடம் கூறினர்.

    இதைத் தொடர்ந்து அவர்கள் கலைந்து சென்றனர்.

    அதன் பின்னர் உடலை கைப்பற்றி போலீசார் பிரேத பரிசோதனைக்காக சீர்காழி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சுமார் 500-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டு சிகிச்சை பெற்றனர்.
    • மேல் சிகிச்சைக்காக 20-க்கும் மேற்பட்டவர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை மாவ ட்டம், தரங்கம்பாடி தாலுகா, செம்பனார்கோயில், கலைமகள் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் செம்பனார்கோயில் கிங்ஸ் லயன்ஸ் கிளப் சார்பில் எலும்பு மற்றும் மூட்டு மாற்று அறுவை சிகிச்சை இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது.

    இந்த முகாமிற்கு செம்பை கிங்ஸ் லயன்ஸ் கிளப் சாசன தலைவர் கார்த்திகேயன் தலைமை தாங்கினார். செயலர் நந்தகுமார், பொருளாளர் சுதாகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    கலைமகள் நிர்வாக இயக்குனர் என். எஸ்.குடியரசு மருத்துவ முகாமை துவக்கி வைத்தார்.

    இந்த முகாமில் எக்ஸ்ரே, பிசியோதெரபி, நரம்பியல் சிகிச்சை மற்றும் நவீன கருவிகள் மூலம் சுமார் 500க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டு தங்கள் உடலில் உள்ள குறைபாடுகளை பரிசோதனை செய்து சிகிச்சை பெற்றனர்.

    மேல் சிகிச்சைக்காக 20க்கும் மேற்பட்டவர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    இதில் மருத்துவர்கள் மதன்குமார், பிரபு, மக்கள் தொடர்பாளர் நாகராஜ், நாமக்கல் இமயம் மல்டி ஸ்பெஷலிஸ்ட் செவிலியர்கள், ஊழியர்கள் மற்றும் கிளப் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

    ×