search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கேமரா"

    • கள்ளை கிராமத்தில் கண்காணிப்பு கேமரா அமைக்கப்பட்டது.
    • டி. எஸ்.பி. தொடங்கிவைத்தார்

    கரூர்:

    குளித்தலை அருகே தோகைமலை காவல் சரகத்திற்குட்பட்ட பல்வேறு பகுதிகளில், பல்வேறு குற்ற சம்பவங்கள் நடைபெற்றால் கண்டுபிடிக்க ஏதுவாகவும், குற்ற நடவடிக்கைகளை தடுக்கும் விதமாகவும் குளித்தலை காவல் துணை கண்காணிப்பாளர் ஸ்ரீதர் அறிவுறுத்தல் பெயரில் கள்ளை கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் பயன்பெறும் வகையில் தமிழர் தேசம் மாவட்ட செயலாளர் அருள்ராஜ், தனது சொந்த பொறுப்பில் கிராமத்தில் அனைத்து பகுதிகளிலும் 5 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளனர், இதனை குளித்தலை காவல் துணை கண்காணிப்பாளர் ஸ்ரீதர் கண்காணிப்பு கேமராக்களை தொடங்கி வைத்து பார்வையிட்டு ஆய்வு செய்தார், இதுபோன்று குளித்தலை காவல் கோட்டத்திற்குட்பட்ட அனைத்து பகுதிகளிலும் பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் இது போன்ற கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தினால் இப்பகுதிகளில் குற்ற நடவடிக்கைகள் நடக்காமல் தடுக்கலாம் என கூறினார், கள்ளைப் பகுதியில் சிசிடிவி கேமரா பொருத்தியதற்கு அனைவருக்கும் வாழ்த்துக்களை தெரிவித்தார்,

    உடன் தோகைமலை காவல் ஆய்வாளர் ராஜ்குமார் மற்றும் போலீஸார்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    • ரிசர்வ் வங்கி விதிப்படி 24 மணி நேரமும் ஏ.டி.எம். எந்திரங்களில் பணத்தை பாதுகாப்பாக காவலுடன் வைக்கவேண்டும்.
    • டிஜிட்டல் எழுத்துக்கள் கண்ணுக்கு தெரியாமல் அழிந்தநிலையில் இருக்கின்றன.

    திருத்துறைப்பூண்டி:

    திருவாரூர் மாவட்ட நுகர்வோர்பாதுகாப்பு மையம் கோரிக்கதிருத்துறைப்பூண்டி நகரில் தேசிய மற்றும் தனியார் வங்கி களின்10 ஏடிஎம் எந்திரங்கள் இயங்கி வருகின்றன. வங்கிகளில் நேரடியாக வரும் கூட்டத்தை குறைப்பதற்காக ரிசர்வ் வங்கி ரோடு ஓரங்களில்ஏடிஎம் எந்திரங்களை 24 மணி நேரம் இயக்கி பணம் எடுக்க வசதியாக தேசியதனியார் வங்கிகளை ஏடிஎம் எந்திரங்கள் அமைக்க அனுமதித்துள்ளது.

    ரிசர்வ் வங்கி விதிப்படி 24 மணி நேரமும் ஏடிஎம் இயந்திரங்களில் பணத்தை பாதுகாப்பாக காவலுடன் வைக்கவேண்டும். இதன்படி சிசி டிவியும் கேமராவுடன்அமைக்க ப்பட்டுள்ளது.

    ஆனால் தேசிய மற்றும் தனியார் வங்கிகள் ஏடிஎம்களை முறையாக பராமரி க்கவில்லை.

    இரவு நேரங்களில் பணம் இருப்பதில்லை.

    டிஜிட்டல் எழுத்துக்கள் கண்ணுக்கு தெரியாமல் அழிந்தநிலையில் இருக்கின்றன.

    கோளாறுகளை உடன் சீர் படுத்துவதில்லை.

    அவசரமாக மருத்துவமனை க்குசெல்லும் நோயாளிகள் மற்றும்வெளியூர் பயனாளிகள் ஆகியோர் ஏடிஎம்மில் பணம் எடுக்க இயலாமல் தடுமாறு கின்றனர்.

    இது சம்பந்தமாக திருவாரூர் மாவட்ட நுகர்வோர் பாதுகாப்பு மையத்திற்கு புகாரும் வந்துள்ளது.

    ஆதலால் திருவாரூர் மாவட்ட கலெக்டர் உடனடியாக ஏடிஎம் எந்திரங்களில் ஏற்பட்டுள்ள குறைகளை நீக்கி 24 மணி நேரமும் செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திருவாரூர் மாவட்ட நுகர்வோர் மையம் சார்பாக மாவட்ட தலைவர் வழக்கறிஞர் நாகராஜன் தெரிவித்துள்ளார்.

    • பெரும்பாலான தொழிலாளர்கள் பேருந்தில் பயணம் செய்து வருகின்றனர்.
    • பேருந்துகளுக்கு தற்போது பெரும் சவால் வந்து சேர்ந்துள்ளது.

    திருப்பூர்,

    இந்தியாவில் வேறெந்த மாநிலங்களிலும் இல்லாத வகையில், தமிழ்நாட்டில் மாநிலத்தின் அனைத்து பகுதிகளுக்கும் அரசுப் பேருந்து போக்குவரத்து சேவையை அளித்து வருகிறது. மாநிலத்தில் அடர்ந்த மற்றும் சாலை வசதி இல்லாத மலைப் பகுதியை தவிர்த்து மற்ற அனைத்து பகுதி மக்களும் பொது போக்குவரத்தை பயன்படுத்தி வருகின்றனர்.

    திருப்பூர் தொழில் நகரம் என்பதால் அருகாமையில் உள்ள ஈரோடு, கோவை, கரூர், சேலம்,திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து வேலைக்கு செல்லும் தொழிலாளர்கள் வசதிக்காக ஏராளமான பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு காலையில் வேலைக்கு செல்லும் வகையில் இயக்கப்படும் பேருந்துகள் மூலம் பயணித்து ஏராளமானோர் தங்கள் பணியிடங்களை சென்றடைகின்றனர். தற்போது கோவை மற்றும் ஈரோட்டில் இருந்து கொரோனாக்கு முன்பு இயக்கப்பட்டு வந்த பயணிகள் ரெயில்கள் இதுவரையிலும் இயக்கப்படாததால் பெரும்பாலான தொழிலாளர்கள் பேருந்தில் பயணம் செய்து வருகின்றனர்.

    இந்நிலையில் கோவை, ஈரோடு பகுதிகளில் இருந்து இயக்கப்படும் பல பேருந்துகளும் கடந்த 2018 முதல் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட பி.எஸ்.4 ரக பேருந்துகளாகும். இவற்றின் இருக்கைகள் மிக சொகுசாக அமைக்கப்பட்டு பயணிகள் சுகமாக பயணிக்கும் வகையில் அமைக்கப்பட்டு, பாதுகாப்பு தானியங்கி கதவுகளுடன் கொண்டு வரப்பட்டுள்ளது.

    இந்த வகை பேருந்துகளுக்கு தற்போது பெரும் சவால் வந்து சேர்ந்துள்ளது. பேருந்துகளில் உள்ள இருக்கைகளை சில மர்ம நபர்கள் கூரிய முனை கொண்ட பிளேடு அல்லது பாக்கெட் கத்தி போன்ற பொருட்களால் கிழித்து நாசப்படுத்தி வருகின்றனர். இச்செயல் கோவை கோட்டத்தில் உள்ள அனைத்து பணிமனை பேருந்துகளிலும் நடேந்தேறியுள்ளது. இவ்வாறு கிழிக்கப்படும் இருக்கைகளில் உள்ள ஸ்பான்ச்சையும் சிலர் பிய்த்து எறிவதால் ஒரு கட்டத்தில் அந்த இருக்கையில் அமர முடியாத நிலை ஏற்படுகிறது.

    இச்சம்பவம் குறித்து திருப்பூர் சமூக ஆர்வலர்கள் கூறுகையில்,தொடர்ச்சியாக இருக்கைகள் நாசப்படுத்தும் மர்ம நபர்களால், சேதத்துக்கு தகுந்தாற்போல் தங்கள் சம்பளத்தில் பிடித்தம் செய்யப்படுவதாக ஓட்டுநர் ,நடத்துனர்கள் வருத்தம் தெரிவிக்கின்றனர்.மேலும் பேருந்து பாதுகாப்பு மற்றும் இது போன்ற குற்றச்செயல்களை கண்காணிக்க அரசுப் பேருந்துகளிலும் கண்காணிப்பு கேமராக்களை பொருத்தினால் இது போன்ற செயலில் ஈடுபடும் நபர்களை தடுக்கலாம் என்றனர்.

    ×