search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இயக்கம்"

    • தஞ்சாவூரிலிருந்து இரவு 7. 40 மணிக்கு புறப்பட்டு ஹூப்ளிக்கு மறுநாள் காலை 12:30 மணிக்கு சென்றடையும்.
    • ஏப்ரல் 25-ம் தேதி வரை முதல் கட்டமாக இயக்கப்பட இருக்கிறது.

    தஞ்சாவூர்:

    கர்நாடக மாநிலத்தின் வடக்கு பகுதிகளான ஹுப்ளி பெல்காம் உள்ளிட்ட இடங்களில் இருந்து தஞ்சை மாவட்டம் கும்பகோணம் பகுதியில் உள்ள கோவில்களுக்கு பெருவாரியானயாத்திரிகர்கள் தினந்தோறும் வந்து தரிசித்து செல்கிறார்கள்.

    அதேபோல் டெல்டா மாவட்டத்திலிருந்து கர்நாடகப் பகுதிகளில் வர்த்தகத் தொடர்பு இருந்து வருகிறது.

    இதையடுத்து தஞ்சாவூர்- கும்பகோணம் ரெயில் பாதை அகல பாதையாக மாற்றப்பட்ட 2004-ம் ஆண்டு முதல் கும்பகோணத்தில் இருந்து பெல்காம் வரை நேரடி ரெயில் இயக்க வேண்டும் என தஞ்சாவூர் மாவட்ட ரெயில்வே உபயோகிப்பாளர்கள் சங்கம் கோரிக்கை விடுத்து வந்தது.

    இதேப்போல் பலரும் கோரிக்கை விடுத்தனர்.

    இதனை ஏற்று கர்நாடக மாநிலம் ஹூப்ளியில் இருந்து திருச்சி வழியாக தஞ்சாவூர் வரை சிறப்பு ரெயில் ஒன்றினை தென் மத்திய ரெயில்வே இயக்க அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

    இந்த ரெயில் வாரந்தோறும் திங்கட்கிழமைகளில் இரவு 8:25 மணிக்கு ஹூப்ளியில் புறப்பட்டு தாவனகரே, தும்கூர் ,கிருஷ்ணராஜபுரம், பைப்பனஹள்ளி (பெங்களூரு), சேலம், கரூர், திருச்சி, பூதலூர் வழியாக தஞ்சாவூருக்கு மறுநாள் செவ்வாய்க்கிழமை மதியம் 2.15 மணிக்கு வந்தடையும்.

    மறு மார்க்கத்தில் இந்த ரெயில் வாரந்தோறும் செவ்வாய்க்கிழமைகளில் தஞ்சாவூரிலிருந்து இரவு 7. 40 மணிக்கு புறப்பட்டு அதே வழியாக ஹூப்ளிக்கு மறுநாள் காலை 12:30 மணிக்கு சென்றடையும். இந்த சிறப்பு ரயில் மார்ச் 20 ஆம் தேதி முதல் ஏப்ரல் 25ஆம் தேதி வரை முதல் கட்டமாக இயக்கப்பட இருக்கிறது.

    மேற்கண்ட தகவலை தஞ்சாவூர் மாவட்ட ரெயில்வே உபயோகிப்பாளர்கள் சங்க செயலாளர் கிரி தெரிவித்துள்ளார்.

    • போதைக்கு எதிராக பொதுமக்களிடம் நடத்தப்பட்டது
    • நான்கு இடங்களில் நடைபெற்றது

    ஆலங்குடி, 

    புதுக்கோட்டை மாவட்டத்தில் இந்திய ஜன நாயக வாலிபர் சங்கம் சார்பில் ஒவ்வொரு தாலுகாவாக போதைக்கு எதிராக போதை கலாச்சாரத்தால் சீரழியும் சமூகத்தை மீட்டெடுக்க ஒரு கோடி கையெழுத்து இயக்கம் தொடங்கி நடத்தி வந்தனர். இந்நிலையில் ஆலங்குடி பகுதியில் வல்லத்திராரக்கோட்டையில் தொழிலதிபர் ராமச்சந்திரன், ராஜஜெயரஞ்சன், திருவரங்குளம் தெற்கு ஒன்றிய செயலாளர் வடிவேல், வேங்கிடகுளம் மற்றும் திருவரங்குளம் ஒன்றிய குழு தலைவர் வள்ளியம்ம, மேற்கு ஒன்றிய செயலாளர் தங்கமணி, வட்டார வளர்ச்சி அலுவலர் கோகுலகிருஷ்ணன், ஆலங்குடி மருத்துவர் பெரியசாமி ஆகியோர் தலைமையில் நான்கு இடத்தில் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது. அனைத்து இடங்களிலும் அரசு அதிகாரிகள் மற்றும் முக்கியஸ்தர்கள், பொதுமக்கள் அனைவரிடமும் மேல தாளங்கள் முழங்க நடன இயக்கத்துடன் அந்தந்த பகுதிகளில் சுமார் 2 மணி நேரம் ஒலி பெருக்கி வாகனத்தில் வந்த இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் பொதுமக்களிடம் கையெழுத்துக்களை பெற்றனர்.

    போதை பொருட்களை கட்டுபடுத்திட காவல்துறையினருக்கு வலியுறுத்தல்

    பெரம்பலூர்:

    போதையற்ற தமிழ்நாட்டை உருவாக்கக்கோரி, இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் பெரம்பலூரில் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது. பெரம்பலூர் புதிய பேருந்து நிலையத்தில், மாவட்ட தலைவர் சரவணன் தலைமையில் நடைபெற்ற கையெழுத்து இயக்கத்தினை, மாநில செயலாளர் கருணாகரன் கையெழுத்துயிட்டு துவக்கி வைத்தார். இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் சக்திவேல், மாவட்ட பொருளாளர் அறிவழகன், மாவட்ட துணைச் செயலாளர் வேல்முருகன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் பிரியா, மாவட்ட துணைத் தலைவர் ராமு, மாவட்ட செயற்குழு துரை, மாவட்ட குழு உறுப்பினர்கள் சடையப்பன், அருண், ஒன்றிய குழு உறுப்பினர்கள் மணிகண்டன், காசிராஜன், ரவிச்சந்திரன், கார்த்திக் ராஜா, சிஐடியூமாவட்ட செயலாளர்அகஸ்டின் உள்ளிட்ட ஏராளமானவர்கள்கலந்து கொண்டு கையெழுத்திட்டனர். தமிழக அரசின் தடை செய்யப்பட்ட போதைப் பொருட்களை புதுக்கோட்டை, பெரம்ப லூர் மாவட்டத்தில் காவல்து றையினர் முழு வீச்சில் கட்டுப்படுத்திட வலியுறுத்தியும், போதைக்கு எதிராக பொதுமக்களிடம் பெறப்படும் கையெழுத்துக்களை மாவட்ட கலெக்டரிடம் கொடுத்து, முதல்வருக்கு அனுப்ப உள்ளதாக அவர்கள் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் தெரிவித்தனர்.

    • மானாமதுரை வழியாக மதுரை-ராமேசுவரத்துக்கு கூடுதலாக பஸ்கள் இயக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    • இதனால் ஏராளமான பயணிகள் குழந்தைகளுடன் பஸ்நிலை யத்தில் காத்திருக்கும் நிலை உள்ளது.

    மானாமதுரை

    சிவகங்கை மாவட்டம் மானாமதுரை வளர்ந்து வரும் பெரியநகராட்சி ஆகும். மாவட்டத்திலேயே மானாமதுரையில் இரவு பகலாக பஸ் வசதி உள்ளது. அதிகாலை முதல் இரவு வரை நகர பஸ்கள் வசதிகள் உள்ளது.

    தற்போது ராமேசுவரம் வரை ரெயில்கள் செல்லாத தால் மதுரையில் இருந்து வெளிமாநில பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் அதிக அளவில் பஸ்சில் செல்கின்ற னர். இதனால் மதுரை-ராமேசுவரம் இடையே உள்ள திருப்புவனம், மானாமதுரை, பரமக்குடி பகுதி பயணிகளுக்கு போதுமான பஸ்கள் இல்லாமல் அவதிப்பட்டு நீண்ட நேரம் காத்திருந்து நின்று கொண்டே பயணம் செய்யும் நிலையில் உள்ளது.

    இதில் குறிப்பாக மதுரை எம்.ஜி.ஆர். பஸ் நிலையத்தில் வரும் பஸ்கள் திருப்புவனம், மானாமதுரை பயணிகளை ஏற்ற மறுக்கின்றனர். இதனால் ஏராளமான பயணிகள் குழந்தைகளுடன் பஸ்நிலை யத்தில் காத்திருக்கும் நிலை உள்ளது. மிகபெரிய பஸ்நிலையமாக உள்ள மானாமதுரையில் இருந்து மதுரை வரை நேரடியாக பஸ் வசதி பலவருடமாக கிடையாது.

    தற்போது ராமேசு வரத்தில் இருந்து வரும் பஸ்களும் அதிக அளவில் பயணிகளுடன் வருவதால் மானாமதுரை பயணிகள் மற்றும் கல்லூரிக்கு செல்லும் மாணவ-மாணவிகள், பணியாளர்கள் காத்திருந்து மதுரை செல்லும் நிலை உள்ளது.

    இதேபோல் காலை 10 மணி வரை மானாமதுரை யில் இருந்து சிவகங்கை செல்லும் பஸ்களிலும் பயணிகள் படிக்கட்டில் தொங்கிக் கொண்டு செல்லும் நிலை உள்ளது.

    கூட்டநெரிசலை தடுக்கும் வகையில் மதுரையில் இருந்து மானாமதுரை வழியாக ராமேசுவரம் வரை கூடுதல் பஸ்களையும், மானாமதுரை பயணிகளின் நீண்டகால கோரிக்கையான மானாமதுரை-மதுரை இடையே இரவு பகலாக 4 வேளைகளில் நேரடியாக பஸ்வசதியும், இங்கிருந்து தென் மாவட்டங்களுக்கு நேரடியாக பஸ்கள் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மானா மதுரை பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • பவுர்ணமி மற்றும் தைப்பூசத்திருவிழாவை முன்னிட்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் சிறப்பு பேருந்துகள் தொடக்கப்பட்டுள்ளது.
    • சேலத்தி லிருந்து திருவண்ணாமலைக்கும் ஆகிய இடங்களில் நாளை முதல் வருகிற 6-ந்தேதி வரை சிறப்பு பேருந்துகள் இயக்கம் செய்யப்படவுள்ளது.

    சேலம்:

    தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகம் சேலம் நிர்வாக இயக்குனர் பொன்முடி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது:-

    பவுர்ணமி மற்றும் தைப்பூசத்திருவிழாவை முன்னிட்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் சேலம் மூலமாக சேலத்திலிருந்து ஈரோடு, காங்கேயம் வழியாக பழனிக்கும், நாமக்கல்லில் இருந்து கரூர் வழியாக பழனிக்கும், சேலத்திலிருந்து காளிப்பட்டிக்கும், ராசிபுரத்தி லிருந்து காளிப்பட்டிக்கும், திருச்செங்கோட்டி லிருந்து காளிப்பட்டிக்கும், சங்ககிரியிலிருந்து காளிப்பட்டிக்கும், எடப்பாடி யிலிருந்து காளிப்பட்டிக்கும், எடப்பாடி யிலிருந்து பழனிக்கும், நாமக்கல்லில் இருந்து கபிலர்மலைக்கும், திருச்செங்கோட்டிலிருந்து கபிலர்மலைக்கும், வேலூரிலிருந்து கபிலர்மலைக்கும், சேலத்திலிருந்து வடலூ ருக்கும், சேலத்தி லிருந்து திருவண்ணாமலைக்கும் ஆகிய இடங்களில் நாளை முதல் வருகிற 6-ந்தேதி வரை சிறப்பு பேருந்துகள் இயக்கம் செய்யப்படவுள்ளது. ஆகவே பயணிகள் அனைவரும் பயண நெரிசலை தவிர்த்து பயணம் செய்திடும்படி கேட்டுக்கொள் ளப்படுகிறது. இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.

    • ராமநாதபுரம் மாவட்டத்திற்கு சிறப்பு ரெயில்கள் இயக்க வேண்டும் என்று நவாஸ் கனி எம்.பி. கோரிக்கை விடுத்துள்ளனர்.
    • ராமநாதபுரம் மாவட் டத்தை சேர்ந்த மக்கள் சென்னை, பெங்களூர் உள்ளிட்ட பல்வேறு பகுதி களில் பணியாற்றி வருகின்றனர்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் நாடாளு மன்ற உறுப்பினரும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் மாநில துணைத் தலைவருமான நவாஸ் கனி தெற்கு ரெயில்வே பொது மேலாளருக்கு விடுத்துள்ள கோரிக்கையில் கூறியிருப்ப தாவது:-

    ராமநாதபுரம் மாவட் டத்தை சேர்ந்த மக்கள் சென்னை, பெங்களூர் உள்ளிட்ட பல்வேறு பகுதி களில் பணியாற்றி வரு கின்றனர். தமிழர்களின் பாரம்பரிய விழாவான பொங்கல் பண்டிகைக்கு அனைவரும் சொந்த ஊருக்கு வந்து கொண்டாட வேண்டும் என்ற எண்ண த்தில் ஆண்டு தோறும் வந்து செல்கின்றனர்.

    அவர்கள் கூட்ட நெரிசலின்றி எளிதாக வந்து செல்லும் வகையில் சென்னை மற்றும் பெங்களூரில் இருந்து சிறப்பு ரெயில்கள் இயக்கிட தெற்கு ரயில்வே உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    சென்னை எழும்பூரில் இருந்து ராமேசுவரம் வரை யிலும், பெங்களூருவில் இருந்து சேலம் வழியாக ராமேசுவரம் வழியிலும் இரு மார்க்கமும் சிறப்பு ரெயில்கள் இயக்கிட உரிய நடவடிக்கை எடுத்திட ஆவண செய்யுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

    இவ்வாறு அதில் கோரிக்கை விடுத்துள்ளார்.

    • தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக சேலம் கோட்டம் மூலம் நேற்று முதல் 14-ந் தேதி வரை சிறப்பு பேருந்து இயக்கப்பட்டு வருகிறது.
    • சேலம் மற்றும் திருவண்ணாமலைக்கும் என 400 சிறப்பு பேருந்து இயக்கப்பட்டு வருகிறது.

    சேலம்:

    தமிழகம் முழுவதும் வருகிற 15-ந் தேதி பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக சேலம் கோட்டம் மூலம் சேலம், நாமக்கல், தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் இருந்து பல்வேறு வழித்தடங்களில் பயணிகள் பொங்கல் பண்டிகையை கொண்டாட சொந்த ஊர்களுக்கு செல்வதற்கு ஏதுவாக நேற்று முதல் 14-ந் தேதி வரை சிறப்பு பேருந்து இயக்கப்பட்டு வருகிறது.

    சென்னையிலிருந்து சேலம், நாமக்கல், தர்மபுரி,

    கிருஷ்ணகிரி, ஓசூருக்கு சிறப்பு பேருந்து இயக்கப்படு கிறது. பெங்களூருவில் இருந்து சேலம், ஈரோடு, தர்மபுரி, திருவண்ணா மலை, வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரிக்கும், ஓசூரிலிருந்து சேலம், திருச்சி, மதுரை, திருவண்ணா மலை, தர்மபுரி, கிருஷ்ணகிரிக்கும், சேலத்திலிருந்து மதுரை, திருச்சி, சிதம்பரம், கடலூர், திருவண்ணாமலை, வேலூர், கள்ளக்குறிச்சி, விருத்தாசலம் மற்றும் விழுப்புரத்திற்கும், கோவை, திருப்பூரிலிருந்து சேலம் மற்றும் திருவண்ணாமலைக்கும் என 400 சிறப்பு பேருந்து இயக்கப்பட்டு வருகிறது.

    மேலும், பண்டிகையை கொண்டாடி விட்டு திரும்ப ஏதுவாக, 16-ந் தேதி முதல் 18-ந் தேதி வரை சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி, ஓசூர் ஆகிய ஊர்களிலிருந்து சென்னைக்கும், சேலம், ஈரோடு, தர்மபுரி, திருவண்ணா மலை, வேலூர், திருப்பத்தூர் கிருஷ்ணகிரி ஆகிய ஊர்களிலிருந்து பெங்களூருக்கும், சேலம், திருச்சி, மதுரை, திருவண்ணாமலை, தர்மபுரி, கிருஷ்ணகிரி ஆகிய ஊர்களிலிருந்து ஓசூருக்கும், மதுரை, கோவை, திருச்சி, சிதம்பரம், திருப்பூர், கடலூர், திருவண்ணாமலை, வேலூர், கள்ளக்குறிச்சி, விருத்தாசலம், விழுப்புரம் ஆகிய ஊர்களிலிருந்து சேலத்திற்கும், சேலத்திலிருந்து கோவை மற்றும் திருப்பூருக்கும் 400 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளது.

    சேலம், நாமக்கல், தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் இருந்து அனைத்து முக்கிய நகரங்களுக்கும் சிறப்பு பேருந்துகள் கூடுதலாகவும் மற்றும் புறநகர் வழித்தட பேருந்துகள் மூலம் கூடுதல் நடைகளும் இயக்கப்படவுள்ளது. அனைத்து நேரங்களிலும் பயணிகள் தேவைக்கேற்ப கூடுதல் நகரப்பேருந்து வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நேற்று (12-ந் தேதி) முதல் 18-ந் தேதி வரை பயணிகள் கூட்டத்திற்கு ஏற்ப இரவு முழுவதும் டவுன் பஸ்கள் இயக்கப்படுகிறது.

    • சென்னை, மதுரை,கோவை,திருச்சி, போன்ற பெருநகரங்களில் இருந்து இந்த பேருந்துகள் மாநிலத்தின் முக்கிய ஊர்களுக்கு இயக்கப்படும்.
    • அசோகன்(மேற்கு), ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் லோகுபிரசாத் உள்பட பலர் உடனிருந்தனர்.

    பல்லடம்:

    பல்லடம் அருகே உள்ள அலகுமலையில் தனியார் பள்ளி விழாவில் கலந்துகொண்ட போக்குவரத்து துறை அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 16 ஆயிரத்து200 பேருந்துகள் வருகிற 15,16,17 ஆகிய 3 நாட்கள் இயக்கப்படும். சென்னை, மதுரை,கோவை,திருச்சி, போன்ற பெருநகரங்களில் இருந்து இந்த பேருந்துகள் மாநிலத்தின் முக்கிய ஊர்களுக்கு இயக்கப்படும். தீபாவளி பண்டிகையின் போது எவ்வாறு அரசு போக்குவரத்து கழகங்கள் மூலம் பொதுமக்களுக்கு குறை இல்லா பேருந்து வசதி செய்து தரப்பட்டதோ அதே போல் பொங்கல் பண்டிகைக்கு பேருந்து வசதி செய்து தர வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.

    அதன்படி போக்குவரத்து கழக அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.தீபாவளி பண்டிகையின் போது சில ஆம்னி பேருந்துகள் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதாக எழுந்த புகாரின் பேரில் அதிக கட்டணம் வசூலித்த 4 தனியார் ஆம்னி பேருந்து நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது. தற்போதும் அதிக கட்டணம் வசூலிக்க கூடாது என்று தனியார் ஆம்னி பேருந்து நிறுவனங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. பேட்டியின் போது உடன் திருப்பூர் தெற்கு சட்டமன்ற உறுப்பினர் க,செல்வராஜ், பொங்கலூர் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் வக்கீல் எஸ்.குமார்,திருப்பூர் மாநகர தி.மு.க. தெற்கு செயலாளர் டி.கே.டி.நாகராஜ், ஒன்றிய தி.மு.க. செயலாளர்கள் பாலுசாமி(கிழக்கு), அசோகன்(மேற்கு), ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் லோகுபிரசாத் உள்பட பலர் உடனிருந்தனர்.

    • பவுர்ணமியை முன்னிட்டு வருகிற 6,7-ந் தேதிகளில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சேலம் கோட்டம் சார்பாக சேலத்திலிருந்து திருவண்ணாமலை மற்றும் சதுரகிரிகு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளன.
    • சேலத்தி–லிருந்து சதுரகிரிக்கு மதுரை வழியாகவும் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட–வுள்ளது.

    சேலம்:

    சேலம் கோட்ட தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழக நிர்வாக இயக்குனர் பொன்முடி வெளி–யிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    பவுர்ணமியை முன்னிட்டு வருகிற 6,7-ந் தேதிகளில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சேலம் கோட்டம் சார்பாக சேலத்திலிருந்து திருவண்ணாமலை மற்றும் சதுரகிரிகு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளன.

    திருவண்ணாமலைக்கு அரூர், ஊத்தங்கரை வழியாகவும், திருவண்ணா–மலைக்கு கள்ளக்குறிச்சி வழியாகவும், சேலத்தி–லிருந்து சதுரகிரிக்கு மதுரை வழியாகவும் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட–வுள்ளது. எனவே, இந்த வழித்–தடங்களில் இயக்கப்படும் சிறப்பு பஸ்களை பயணிகள் அனைவரும் பயன்படுத்தி பயண நெரிசலை தவிர்த்து இனிய பயணம் செய்திடும்படி கேட்டுக ்கொள்ளப்படுகிறது.

    இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளார்.

    • பரமத்தி வேலூர் தாலுகா பொத்தனூர் தேர்வுநிலை பேரூராட்சியில் வாரந்தோறும் நடைபெற்று வரும் நகரங்களின் தூய்மைக்கான மக்கள் இயக்கம் நடைபெற்றது.
    • பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி உறுதிமொழி எடுத்தல், டெங்கு ஒழப்பு பணிகள் மேற்கொள்ளுதல் போன்ற அத்தியாவசிய பணிகள் மேற்கொள்ளப்பட்டது

    பரமத்தி வேலூர்:

    சென்னை பேரூராட்சி களின் இயக்குநரின் அறி வுரைகளின்படி, நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூர் தாலுகா பொத்தனூர் தேர்வுநிலை பேரூராட்சியில் வாரந்தோறும் நடைபெற்று வரும் நகரங்களின் தூய்மைக்கான மக்கள் இயக்கம், நம்ம ஊரு சூப்பரு திட்டங்களின்படி பொத்தனூர் பேரூ ராட்சிக்குட்பட்ட 13,14 வார்டு பகுதிகளில் பேரூ ராட்சி தலைவர் கருணாநிதி தலைமையில், செயல் அலுவலர் கணேசன் முன்னிலையில் பேரூராட்சி இளநிலை உதவியாளர் ஜெயசேகர், துப்புரவு மேற்பார்வையாளர் குணசேகரன், அலுவலக பணியாளர்கள், பேரூராட்சி உறுப்பினர்கள், அனைத்து தூய்மைப் பணியாளர்கள், சுய உதவிக்குழு உறுப்பி னர்கள் உட்பட 80-க்கும்

    மேற்பட்டவர்கள் ஒன்றாக இணைந்து பொது சுகாதாரப்பணிகளான, செடி,கொடி,முட்புதர்கள் அகற்றுதல், மழைநீர் வடிகால் சுத்தம் செய்தல், தெருக்களை சுத்தம் செய்தல், குடிநீர் பைப்லைன் பழுதுகள் சரி செய்தல், தெருமின்விளக்குகள் மற்றும் மின் இணைப்புகள், மரக்கன்றுகள் நடுதல், சுவரொட்டிகள் அகற்றுதல், விளம்பர பதாகைகள் அகற்றுதல், பொது மக்களுக்கு குப்பைகள் தரம் பிரித்து வழங்குதல் போன்ற பணிகளும், இதுகுறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி உறுதிமொழி எடுத்தல், டெங்கு ஒழப்பு பணிகள் மேற்கொள்ளுதல் போன்ற அத்தியாவசிய பணிகள் மேற்கொள்ளப்பட்டது

    • ரூ.8 கோடி செலவில் தாமிரபரணி, திருவள்ளுவர் என்ற அதிநவீன சொகுசு படகுகளை சுற்றுலா துறை வாங்கி பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகத்துக்கு வழங்கியது.
    • இவை இயக்கப்படாமல் கடல் உப்பு காற்றினால் துருப்பிடித்து பாழாகும் நிலையில் படகு துறையில் கடந்த 2 ஆண்டுகளாக முடங்கி கிடக்கிறது.

    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரி கடல்நடுவில் அமைந்துள்ள பாறையில் சுவாமி விவேகானந்தர் நினைவு மண்டபமும், அதன் அருகில் உள்ள மற்றொரு பாறையில் 133 அடி உயர திருவள்ளுவர் சிலையும் எழுப்பப்பட்டுள்ளது.

    இவற்றை சுற்றுலா பயணிகள் பார்வையிட தமிழக அரசு நிறுவனமான பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகம் படகு போக்குவரத்தை நடத்தி வருகிறது. இதற்கிடையில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு ரூ.8 கோடி செலவில் தாமிரபரணி, திருவள்ளுவர் ஆகிய பெயர்களை தாங்கிய அதிநவீன சொகுசு படகுகளை சுற்றுலா துறை வாங்கி பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகத்துக்கு வழங்கியது.

    இந்த 2 அதிநவீன படகுகளும் விவேகானந்த மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலைக்கு இயக்கப்படாமல் கடல் உப்பு காற்றினால் துருப்பிடித்து பாழாகும் நிலையில் படகு துறையில் கடந்த 2 ஆண்டுகளாக முடங்கி கிடக்கிறது.

    சொகுசு படகுகளை கன்னியாகுமரியில் இருந்து வட்டக்கோட்டை வரை கடலில் சுற்றுலா பயணிகள் உல்லாச பயணம் சென்று வர பயன்படுத்த வேண்டும் என்று தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ.மற்றும் பல்வேறு அமைப்புகள் சார்பில் கோரிக்கை விடுத்து வந்தனர்.

    அதன் பயனாக இந்த 2 அதிநவீனசொகுசு படகுகளையும் வருகிற 17-ந்தேதி முதல் படகு சவாரி நடத்த பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகம் முடிவு செய்துள்ளது. இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது.

    • பொங்கல் பண்டிகையையொட்டி சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுகிறது.
    • மேற்கண்ட தகவலை மதுரை கோட்ட ரெயில்வே அலுவலகம் தெரிவித்துள்ளது.

    மதுரை

    பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பயணிகள் வசதிக்காக, சென்னையில் இருந்து நாகர்கோவில், திருவனந்தபுரத்துக்கு சிறப்பு ரெயில்களை இயக்க தென்னக ரெயில்வே முடிவு செய்துள்ளது.

    அதன்படி தாம்பரத்தில் இருந்து ஜனவரி 13-ந் தேதி இரவு 7.30 மணிக்கு புறப்படும் ரெயில் (வண்டி எண் 06041) அடுத்த நாள் காலை 7.10 மணிக்கு நாகர்கோவில் செல்லும். மறுமார்க்கத்தில் நாகர்கோவிலில் இருந்து ஜனவரி 16-ந் தேதி மாலை 5.10 மணிக்கு புறப்படும் ரெயில் (வண்டிஎண்06042) அடுத்த நாள் காலை 7.30 மணிக்கு தாம்பரம் சேரும். இந்த ரெயில் வள்ளியூர், நெல்லை, கோவில்பட்டி, சாத்தூர், விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருச்சி, விருத்தாச்சலம், விழுப்புரம், செங்கல்பட்டில் நின்று செல்லும்.

    அதே போல தாம்பரத்தில் இருந்து ஜனவரி 12-ந் தேதி இரவு 9 மணிக்கு புறப்படும் ரெயில் (06021) அடுத்த நாள் காலை 9 மணிக்கு நெல்லை செல்லும். மறு மார்க்கத்தில் நெல்லையில் இருந்து ஜனவரி 13-ந் தேதி மதியம் 1 மணிக்கு புறப்படும் ரெயில் (06022), அடுத்த நாள் அதிகாலை 3.20 மணிக்கு எழும்பூர் செல்லும். இந்த ரெயில்கள் செங்கல்பட்டு, விழுப்புரம், விருத்தாசலம், திருச்சி, புதுக்கோட்டை, காரைக்குடி, சிவகங்கை, மானாமதுரை, அருப்பு க்கோட்டை, விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டியில் நின்று செல்லும்.

    கொச்சுவேலியில் இருந்து ஜனவரி 17-ந் தேதி காலை 11.40 மணிக்கு புறப்படும் ரெயில் (06044) அடுத்த நாள் காலை 6.20 மணிக்கு தாம்பரம் செல்லும். மறு மார்க்கத்தில் தாம்பரத்தில் இருந்து ஜனவரி 18-ந் தேதி காலை 10.30 மணிக்கு புறப்படும் ரெயில் (06043), அடுத்த நாள் அதிகாலை 3.20 மணிக்கு கொச்சுவேலி செல்லும்.

    இந்த ரெயில்கள் திருவ னந்தபுரம், குழித்துறை, நாகர்கோவில் டவுன், வள்ளியூர், நெல்லை, கோவில்பட்டி, சாத்தூர், விருதுநகர், அருப்பு க்கோட்டை, மானாமதுரை, சிவகங்கை, காரைக்குடி, புதுக்கோட்டை, திருச்சி, தஞ்சாவூர், கும்பகோணம், மயிலாடுதுறை, சிதம்பரம், கடலூர், துறைமுகம் சந்திப்பு, விழுப்புரம், செங்கல்பட்டில் நின்று செல்லும்.

    தாம்பரத்தில் இருந்து ஜனவரி 16-ந் தேதி இரவு 10.30 மணிக்கு புறப்படும் ரெயில் (06043), அடுத்த நாள் காலை 9 மணிக்கு நெல்லை செல்லும். மறு மார்க்கத்தில் நெல்லையில் இருந்து ஜனவரி 17-ந் தேதி இரவு 10.30 மணிக்கு புறப்படும் ரெயில் (06058) அடுத்த நாள் காலை 9.20 மணிக்கு தாம்பரம் செல்லும்.

    இந்த ரெயில்கள் செங்கல்பட்டு, விழுப்புரம், விருத்தாசலம், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டியில் நின்று செல்லும். மேற்கண்ட தகவலை மதுரை கோட்ட ரெயில்வே அலுவலகம் தெரிவித்துள்ளது.

    ×