என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "ஓவேலி"
- ஓவேலி பேரூராட்சியில் சுற்றுலாபயணிகளை ஈர்க்க நடவடிக்கை
- செல்பி மையம் அமைக்கப்பட்டது
ஊட்டி:
ஓவேலி பேரூராட்சி சாா்பில் சந்தனமலை முருகன் கோவில் வளாகத்தில் குடிநீா் ஆதராங்களும், காந்தி நகா் பகுதியில் குப்பை கொட்டும் இடம் சுத்தம் செய்யப்பட்டு செல்பி எடுக்கும் மையமாக மாற்றப்பட்டுள்ளது.
இந்த நிகழ்ச்சிகளுக்கு செயல் அலுவலா் ஹரிதாஸ் தலைமை தாங்கினார். பேரூராட்சி தலைவா் சித்ராதேவி, துணைத் தலைவா் சகாதேவன் மற்றும் உறுப்பினா்கள் மற்றும் பணியாளா்கள் கலந்துகொண்டனா். சந்தனமலை முருகன் கோவில் வளாகத்தை சுத்தம் செய்து மரக்கன்றுகளை நட்டனா்.
- சீபுரம் பள்ளியில் தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
- திடக்கழிவு மேலாண்மை, நகரின் தூய்மை, பிளாஸ்டிக் பயன்பாடுகளைத் தவிா்த்தல் குறித்து விவாதம் நடைபெற்றது.
ஊட்டி:
கூடலூரை அடுத்துள்ள ஓவேலி பேரூராட்சியில் தூய்மை நகரங்களுக்கான மக்கள் இயக்கம் விழிப்புணா்வு நிகழ்ச்சிகள் ஓவேலி அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது.
இதில் திடக்கழிவு மேலாண்மை, நகரின் தூய்மை, பிளாஸ்டிக் பயன்பாடுகளைத் தவிா்த்தல் குறித்து விவாதம் நடைபெற்றது. தொடா்ந்து நடைபெற்ற நிகழ்ச்சியில் பெற்றோா், ஆசிரியா் மற்றும் மாணவா்களுக்கு பொது சுகாதாரம், மக்கும் குப்பை, மக்காத குப்பைகளைப் பிரித்தல் குறித்து விழிப்புணா்வு துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டன.
இதையடுத்து, சீபுரம் பள்ளியில் தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இதில் பேரூராட்சி மன்றத் தலைவா் சித்ரா தேவி, செயல் அலுவலா் ஹரிதாஸ் உள்பட கலந்து கொண்டனா்.
ஊட்டி:
நீலகிரி மாவட்டம், ஓவேலி பேரூராட்சியில் உள்ள பாலவாடி, காந்திநகா், பாரதி நகா், ஆரூட்டுப்பாறை, எல்லமலை ஆகிய பகுதிகளில் தூய்மை குறித்த விழிப்புணா்வு உறுதிமொழி ஏற்கப்பட்டது. தொடா்ந்து மக்கும் குப்பை, மக்கா குப்பை குறித்து பொதுமக்களுக்கு செயல் விளக்கம் அளிக்கப்பட்டது. இதையடுத்து, விழிப்புணா்வுப் பேரணி நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு பேரூராட்சி மன்றத் தலைவா் சித்ரா தேவி தலைமை வகித்தாா்.துணைத் தலைவா் க.சகாதேவன், செயல் அலுவலா் சி.ஹரிதாஸ் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்