search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அவதி"

    • சித்திரை வீதிகளில் குடிநீர் வசதி இல்லாததால் பக்தர்கள் அவதிப்படுகின்றனர்.
    • குடிநீர் வசதி செய்து தர வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    மதுரை

    மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு ஆண்டுதோறும் பக்தர்கள் வந்து செல்வார்கள். உள்ளூர் மட்டுமின்றி, பல்வேறு மாவட்டங்கள் மற்றும் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த பக்தர்கள் அனைத்து மாதங்களிலும் கோவிலுக்கு வந்து சாமிதரிசனம் செய்துவிட்டு செல்வார்கள்.

    கோவிலுக்கு சாமி கும்பிட வரும் பக்தர்கள் சித்திரை வீதிகளை சுற்றுவதும், பின்னர் இளைப்பாற அங்கு சிறிது நேரம் அமர்ந்து குடும்பத்துடன் நேரத்தை செலவிடுவதும் வழக்கம். இதனால் சித்திரை வீதிகளில் தினமும் மாலை நேரங்களில் பக்தர்கள் கூட்டம் காணப்படும்.

    ஆனால் நான்கு சித்திரை வீதிகளிலும் குடிநீர் உள்ளிட்ட எந்த அடிப்படை வசதிகளும் இல்லை. இதனால் குழந்தைகளுடன் வரும் தாய்மார்கள், முதியவர்கள் குடிநீரை தேடி அலைய வேண்டிய பரிதாப நிலை ஏற்பட்டுள்ளது.

    இந்தநிலையில் இந்த ஆண்டுக்கான சித்திரை திருவிழா நாளை மறுநாள் (23-ந்தேதி) தொடங்க உள்ளது. அன்றிலிருந்து தொடர்ந்து 12 நாட்கள் திருவிழா நடப்பதால் மீனாட்சி அம்மன் கோலில் பகுதி முழுவதும் விழாக்கோ லம் பூண்டு காணப்படும்.

    விழா நடக்கும் அனைத்து நாட்களும் சுவாமி வீதி உலா உள்ளிட்டவைகளை பார்க்க உள்ளூரை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருவார்கள். இதனால் சித்திரை வீதிகள் உள்ளிட்ட அனைத்து வீதிகளும் பக்தர்கள் கூட்டத்தால் நிரம்பி காணப்படும்.

    ஆயிரக்கணக்கான பக்தர்கள் கூடும் சித்திரை திருவிழா நடக்கும் போது, பக்தர்களுக்கு குடிதண்ணீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை வழங்கவேண்டியது அவசியமானதாகும்.

    தமிழகத்தின் முக்கிய கோவிலாக விளங்கும் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் பக்தர்களுக்கு போதிய அடிப்படை வசதிகள் செய்து தரப்படவில்லை. பழனி, ஸ்ரீரங்கம் உள்ளிட்ட கோவில்களில் இருக்கும் வசதி கூட இங்கு இல்லை என்பது பக்தர்களின் புலம்பலாக இருக்கிறது.

    தற்போது சித்திரை திருவிழா தொடங்க இருப்பதால் வழக்கத்தை விட பக்தர்கள் அதிகளவில் வருவார்கள். எனவே கோவில் மற்றும் மாநகராட்சி நிர்வாகம் நான்கு சித்திரை வீதிகளிலும் குடிநீர் வசதி செய்து தர வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • மதிய வேளையில் சாலையில் இருசக்கர வாகன ஓட்டிகள் சென்றால் அனல்காற்று வீசுகிறது.
    • வெயிலின் உக்கிரத்தில் இருந்து தப்பிக்க, கம்பங்கூழ், சர்பத், நுங்கு, தர்பூசணி, இளநீர் சாப்பிட்டு வருகிறார்கள்.

     திருப்பூர் :

    திருப்பூர் மாநகரில் கடந்த ஒரு வாரமாக பகல் நேரத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது. மதிய வேளையில் சாலையில் இருசக்கர வாகன ஓட்டிகள் சென்றால் அனல்காற்று வீசுகிறது. வெயிலின் கொடுமையில் இருந்து தப்பிக்க குடை பிடித்தபடி நடமாடி வருகிறார்கள். வயதானவர்கள், பெண்கள் மதிய நேரத்தில் வெயிலில் நடமாடுவதை தவிர்த்து வருகிறார்கள். வெயிலின் உக்கிரத்தில் இருந்து தப்பிக்க, கம்பங்கூழ், சர்பத், நுங்கு, தர்பூசணி, இளநீர் சாப்பிட்டு வருகிறார்கள். இதனால் அவற்றின் வியாபாரம் களைகட்டியுள்ளது. நேற்று மாநகரில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. திருப்பூரில் 102 டிகிரி வெயில் நேற்று பதிவானது.

    இரவு நேரத்தில் வீட்டில் மின்விசிறி ஓடினாலும் வெப்பக்காற்று வீசுவதால் மக்கள் அவதியடைந்து வருகிறார்–கள். மேலும் பகல் நேரங்களில் பொதுமக்கள் வெளியே செல்லாமல் வீடுகளிலேயே முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.   

    • கடலூர் திருப்பாதி ரிப்புலியூர் கம்மியம்பேட்டை பகுதியில் ெரயில்வே கேட் உள்ளது.
    • திடீரென்று ெரயில்வே கேட்டில் பழுது ஏற்பட்டதால் சரியான முறையில் ெரயில்வே கேட் மூடவில்லை.

    கடலூர்:

    கடலூர் திருப்பாதி ரிப்புலியூர் கம்மியம்பேட்டை பகுதியில் ெரயில்வே கேட் உள்ளது. இதன் அருகில் திருப்பாதிரிப்புலியூர் ெரயில் நிலையம் உள்ளன. ெரயில்கள் வந்து செல்லும் நேரத்தில் கம்பியம் பேட்டை ெரயில்வே கேட் மூடப்படும். ெரயில்வே கேட் மூடும் சமயத்தில் நீண்ட வரிசையில் வாகனங்கள் அணிவகுத்து நிற்பது வழக்கம். மேலும் கம்மியம்பேட்டை ெரயில்வே கேட் அடிக்கடி பழுது ஏற்படுவதும் வழக்கமாக இருந்து வருகிறது.

    இந்த நிலையில் இன்று காலை மன்னார்குடி - திருப்பதி எக்ஸ்பிரஸ் கடலூர் வழியாக சென்று கொண்டிருந்தது. அப்போது கடலூர் கம்மியம் பேட்டையில் ெரயில்வே கேட்டை மூடும் பணியில் ஊழியர் ஈடுபட்டு வந்தார். திடீரென்று ெரயில்வே கேட்டில் பழுது ஏற்பட்டதால் சரியான முறையில் ெரயில்வே கேட் மூடவில்லை. இதன் காரணமாக தண்ட வாளத்தில் சிக்னல் கிடைக்க வில்லை. சிக்னல் கிடைக்காத தால்ரெயில் டிரைவர் திருப்பாதிரிப்புலியூர் ெரயில் நிலையத்தில் ெரயிலை நிறுத்தினார். இதனை தொடர்ந்து ெரயில்வே கேட் கீப்பர் ெரயில்வே துறை அதிகாரிகளுக்கு தகவல் அளித்ததன் பேரில் ஊழி யர்கள் சம்பவ இடத்திற்கு வந்து ெரயில்வே கேட்டில் ஏற்பட்ட பழுதை நீண்ட போராட்டத்திற்கு பிறகு சரி செய்தனர். அதன் பின்னர் மன்னார்குடி- திருப்பதி எக்ஸ்பிரஸ் ெரயில் சுமார் அரை மண நேரம் தாமதமாக புறப்பட்டு சென்றது  ரெயில்வே கேட் பழுதானதால் கடலூர் கம்மியம்பேட்டை சாலையில் கடும் போக்குவரத்து நெரிசலால் பொதுமக்கள் அவதி அடைந்தனர். மேலும் சென்னை மற்றும் சிதம்பரத்தி லிருந்து வரக்கூடிய அனைத்து கனரக வாகனங்கள் மற்றும் வெளியூருக்கு செல்லக்கூடிய வாகனங்கள் ஜவான் பவன் சாலை, கம்மியம்பேட்டை பாலம், செம்மண்டலம் வழியாக செல்லக்கூடிய வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்தனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

    • விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் தேவேந்திர வீதியில் இந்தியன் வங்கி ஏ.டி.எம்.உள்ளது.
    • அங்கு வந்த வாடிக்கையாளர் ஒருவர் தனது செல்போனால் விளக்கை எரிய விட்டு ஏ.டி.எம்மில் பணம் எடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் தேவேந்திர வீதியில் இந்தியன் வங்கி ஏ.டி.எம்.உள்ளது. இதனை தினமும் 500-க்கும் மேற்பட்டோர் பயன்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில் மின்சாரம் இல்லாததால்ஏ.டி.எம்மில் உள்ள மின்விளக்குகள் எரியாததால் ஏ.டி.எம்மிற்குவரும் வாடிக்கையாளர்கள் மிகவும் அவதிக்கு ள்ளா கினர்.மேலும் அங்கு வந்த வாடிக்கையாளர் ஒருவர் தனது செல்போனால் விளக்கை எரிய விட்டு ஏ.டி.எம்மில் பணம் எடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்த இருளை பயன்ப டுத்தி கொள்ளையர்கள் ஏ.டி.எம்.முக்கு வரும் வாடிக்கையாளர்களிடம் இருந்து பணம் பறிக்கும் அபாயம் உள்ளது. உடனடியாக ஏ.டி.எம். உள்ளே மின் விளக்குகளை சரி செய்ய பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

    • சரியான நேரத்தில் பஸ் இயக்காததால் பள்ளி மாணவிகள் அவதியடைந்துள்ளனர்.
    • மாணவ-மாணவிகள் 10 கிலோமீட்டர் தூரம் சைக்கிளில் சென்று படிக்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.

    ராஜபாளையம்

    ராஜபாளையம் அருகே உள்ள கெருக்கான்பட்டி கிராமம் சாத்தூர் சட்டமன்ற தொகுதியில் உள்ளது. இந்த பகுதியில் 1995-ம் ஆண்டு முதல் காலை 7. 40 மணியளவில் பள்ளி, கல்லூரி மற்றும் வேலைக்கு செல்பவர்களை கருத்தில் கொண்டு பஸ் இயக்கப்பட்டுள்ளது. தற்போது பஸ் இயக்கும் நேரம் மாற்றப்பட்டு காலை 6.15 மணியளவில் இயக்கப்படுவதால் பள்ளி, கல்லூரிக்கு செல்லும் மாணவ-மாணவிகள் 10 கிலோமீட்டர் தூரம் சைக்கிளில் சென்று படிக்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.

    இதுகுறித்து ராஜபாளையம் எம்.எல்.ஏ. தங்கபாண்டியன், சாத்தூர் எம்.எல்.ஏ. ரகுராமன், பணிமனை கிளை மேலாளர் மாரியப்பனிடம் பஸ்சை சரியான நேரத்தில் இயக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தும், பஸ் சரியான நேரத்தில் இயக்கப்படாமல் இருக்கிறது. காலை 6.15 மணிக்கு வரும் பஸ் இந்த பகுதியில் பெயருக்காக இயக்கப்படுவதால் எந்த பயனும் இல்லை. ஆகையால் சரியான நேரத்தில் பஸ் இயக்கப்பட வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    • சிதம்பரத்தை சேர்ந்தவர் ஜெயச்சந்திர ராஜா. ரேஷன் கடையில் விற்பனையாளராக பணியாற்றி வருகிறார். நேற்று சென்று கொண்டிருந்தார்.
    • , மர்ம நபர்கள் சிலர் அவரை வழிமறித்து, பீர் பாட்டிலால் தாக்கியுள்ளனர். இதில் தலையில் படுகாயமடைந்த மீட்டு சிகிச்சைக்காக சிதம்பரம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    கடலூர்:

    சிதம்பரத்தை சேர்ந்தவர் ஜெயச்சந்திர ராஜா. இவர் சிதம்பரம் கூட்டுறவு விற்பனை நிலையத்தில் உள்ள ரேஷன் கடையில் விற்பனையாளராக பணியாற்றி வருகிறார். மேலும் தமிழ்நாடு நியாய விலைக் கடை பணியாளர் சங்கத்தின் மாநில தலைவராகவும் உள்ளார். இந்த நிலையில் நேற்று இரவு வேலை முடிந்து மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். சிதம்பரம் மானாசந்து பள்ளி அருகே சென்ற போது, மர்ம நபர்கள் சிலர் அவரை வழிமறித்து, பீர் பாட்டிலால் தாக்கியுள்ளனர். இதில் தலையில் படுகாயம் அடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக சிதம்பரம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். இதற்கிடையே மாநில தலைவர் தாக்கப்பட்டதை கண்டித்து கடலூர் மாவட்டத்தில் உள்ள ரேஷன் கடைகளை அடைத்து போராட்டத்தில் ஈடுபட விற்பனையாளர்கள் முடிவு செய்தனர் 

    அதன்படி ஏராளமான விற்பனையாளர்கள் விடுப்பு எடுத்து போரா ட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் மாவட்டத்தில் உள்ள ஆயிரத்திற்கும் மேற்பட்ட ரேஷன் கடைகளையும் அடைத்தனர். தொடர்ந்து விற்பனையாளர்கள் போராட்டத்தில் ஈடுபடுவதற்காக சிதம்பரம் சென்றனர். அங்கு கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு திரண்டு மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் மாநிலத் தலைவர் ஜெயச்சந்திர ராஜாவை தாக்கிய மர்ம நபர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும்.  மேலும் விற்பனையாளர்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று கோஷம் எழுப்பினர். இந்த சம்பவத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    • சென்னையில் இ ருந்து அரசு பஸ் 48 பயணிகளை ஏற்றுக் கொண்டு மேல்மலையனூருக்கு வந்து கொண்டிருந்தபோது, திடீரென டீசல் டியூப் கட் ஆகி அரசு பஸ் நடுரோட்டில் நின்றது.
    • பஸ்சில் பயணம் செய்த மேல்மலையனூருக்கு செல்லும் பயணிகள் 48 பேர் நடுரோட்டில் இறக்கிவிடப்பட்டனர்.

    விழுப்புரம்:

    சென்னையில் இ ருந்து அரசு பஸ் 48 பயணிகளை ஏற்றுக் கொண்டு மேல்மலையனூருக்கு வந்து கொண்டிருந்தது. திண்டிவனம் அடுத்த மேல் பேட்டை அருகே அரசு பேருந்து வரும்போது திடீரென டீசல் டியூப் கட் ஆகி அரசு பஸ் நடுரோட்டில் நின்றது. இதனால் பஸ்சில் பயணம் செய்த மேல்மலையனூருக்கு செல்லும் பயணிகள் 48 பேர் நடுரோட்டில் இறக்கிவிடப்பட்டனர்.

    அரை மணி நேரத்துக்கு மேலாக மாற்று பஸ் வர வைக்கப்படாமல் நடுரோட்டில் பெண்கள் மற்றும் குழந்தைகளுடன் பயணிகள் காத்திருந்து அவதிக்கு உள்ளாகியுள்ளனர்.

    • கழிவு நீருடன் மழை நீரும் கலந்து புகுந்ததால் துர்நாற்றம்
    • குடியிருப்புவாசிகளே பொக்ளைன் வரவழைத்து கழிவு நீரை வெளியேற்றினர்

    திருச்சி,

    திருச்சி மாநகராட்சி பகுதியில் பாதாள சாக்கடை மற்றும் புதிய குடிநீர் குழாய்கள் பதிக்கும் பணிகள் நடந்து வருகின்றன. மாநகராட்சி 56-வது வார்டுக்கு உட்பட்ட கருமண்டபம் பகுதியிலும் பாதாள சாக்கடை பணிகள் நடைபெறுகிறது.இந்த நிலையில் திருநகர் மெயின் ரோடு பகுதியில் நடைபெறும் பணிகளுக்காக அப்பகுதியில் உள்ள கழிவு நீர் வடிகால் பகுதியை அடைத்து வைத்தனர். இதனால் கடந்த சில தினங்களாக திருநகர் 5,6,7 கிராஸ் பகுதிகளில் சாக்கடை கழிவு நீர் தேக்கமடைந்தது. இதற்கிடையே நேற்று பெய்த கனமழையின் காரணமாக ஏற்கனவே நிரம்பியிருந்த கழிவு நீருடன் மழை நீரும் சேர்ந்து அப்பகுதி வீடுகளுக்குள் புகுந்து விட்டது.இதனால் குடியிருப்பு வாசிகள் கடும் அவதிக்குள்ளாகினர்.குறிப்பாக குடிநீர் பைப் அமைந்துள்ள பகுதிகளிலும் சாக்கடை நீர் நிரம்பியுள்ளது. இதனால் குடிநீர் பிடிக்க இயலாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.இது தொடர்பாக அப்பகுதி குடியிருப்பு வாசிகள் கூறும்போது,மெயின் ரோட்டில் நடைபெறும் பாதாள சாக்கடை பணிகளுக்காக கழிவு நீர் வடிகால் பகுதியை அடைத்து வைத்துள்ளனர். இதனால் சாக்கடை கழிவுநீர் தேங்கி துர்நாற்றம் வீசுகிறது. இதனால் தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது.இப்போது வீடுகளுக்குள்ளும் கழிவு நீர் வந்துவிட்டது.இன்னும் இந்தபணிகள் இரண்டு வாரத்துக்கு நீடிக்கும் என சொல்லப்படுகிறது.எனவே கழிவு நீரை உடனுக்குடன் அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.அல்லது கழிவுநீரை வேறு வழியில் திருப்பிவிட மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.அதே போன்று அவ்வப்போது எங்கள் பகுதிக்கு குறைந்த அளவே குடிநீர் விநியோகிக்கப்படுகிறது. பெரும்பாலான மக்கள் விலை கொடுத்து தண்ணீர் வாங்கி உபயோகப்படுத்தி வருகின்றனர்.நேற்று பெய்த கனமழையின் போது குடியிருப்பு வாசிகளாகிய நாங்களே ஒரு ஜேசிபி எந்திரத்தை வரவழைத்து ஒரு பகுதியில் சாக்கடை நீரை உடைத்து வெளியேற்றினோம் என்றனர்.

    • அன்பழகன் உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்ததாக தெரிகிறது.
    • வீட்டில் தனியே இருந்த போது மின் விசிறியில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் அடுத்த கரியாப்பட்டினம் அருகே மணக்காடு பிடாரிக்கட்ட ளை பகுதியைச் சேர்ந்தவர் அன்பழகன் (வயது 53). இவர் உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்ததாக தெரிகிறது.

    சம்பவத்தன்று இவர் வீட்டில் தனியே இருந்த போது மின் விசிறியில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    புகாரின் பேரில் கரியாப்பட்டினம் போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு )ராதாகிருஷ்ணன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    • தனியார் பஸ் டிரைவர்கள் மோதியதால் பயணிகள் அவதியடைந்தனர்.
    • பஸ்சை முந்தி சென்று தனது பஸ்சை நிறுத்தியதால் தகராறு ஏற்பட்டது.

    திருமங்கலம்

    திருமங்கலத்தில் வெளியூர் பஸ் நிலையம் மதுரை மெயின் ரோட்டில் இயங்கி வருகிறது. பஸ் நிலையம் எதிரே டவுன் மற்றும் தாலுகா போலீஸ் நிலையங்கள் அமைந்துள்ளன. மேலும் 3 வங்கிகளும் இயங்கி வருகிறது.

    வெளியூர் பஸ் நிலையத்தில் பஸ்களை நிறுத்தி முந்திச் செல்வதில் தனியார் பஸ் டிரைவர்களுக்க அடிக்கடி தகராறு இருந்து வருகிறது. இதனால் பயணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

    நேற்று மதுரை மாட்டுத்தாவணியில் இருந்து சிவகாசிக்கு செல்லும் தனியார் பஸ் திருமங்கலம் வெளியூர் பஸ் நிலையத்தில் பயணிகளை ஏற்றியது. இந்த பஸ்சை கள்ளிக்குடிடய அடுத்துள்ள குராயூரை சேர்ந்த பிச்சை ஓட்டி வந்தார். இந்த பஸ்சுக்கு அடுத்து மற்றொரு தனியார் பஸ் சிவகாசிக்கு மதுரையில் இருந்து வந்தது. இதை சோளங்குருணியை சேர்ந்த டிரைவர் செல்வராஜ்(32) ஓட்டிவந்தார்.

    ஏற்கனவே முன்னால் சென்ற பஸ், திருமங்கலம் பஸ் நிலையத்தில் பயணிகளை ஏற்றிகொண்டிருந்ததை கண்ட பின்னால் வந்த பஸ்சின் டிரைவர் ஆத்திரமடைந்தார். அவர் வேகமாக சென்று ஏற்கனவே நின்று கொண்டிருந்த பஸ்சை முந்தி சென்று தனது பஸ்சை நிறுத்தினார்.

    இதில் பிச்சை ஓட்டி வந்து நிறுத்திய பஸ்சின் முன்பக்க கண்ணாடி உடைந்தது. இது தொடர்பாக பிச்சை மற்றும் 2-வதாக வந்த பஸ் டிரைவர் செல்வராஜ், கண்டக்டர் சிவரக்கோட்டையை சேர்ந்த ஜெயராஜ்(41) ஆகியோர் ஏன் பஸ்சை எடுக்கவில்லை என்று கூறி பிச்சையுடன் தகராறு செய்தனர். 3 பேரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் வெளியூர் பஸ் நிலையத்தில் பயணிகள் அவதிக்குள்ளானார்கள்.

    இதுகுறித்து பஸ் டிரைவர் பிச்சை, தன்னை மற்றொரு பஸ் டிரைவர் செல்வராஜ், கண்டக்டர் ஜெயராஜ் ஆகியோர் இரும்பு ராடு கொண்டு தாக்க முயன்றதாக திருமங்கலம் டவுன் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    போலீஸ் நிலையம் எதிரேயே தனியார் பஸ் டிரைவர்கள் அடிக்கடி தகராறில் ஈடுபடுவது அதிகரித்து வருகிறது. இதனை தடுக்க திருமங்கலம் போலீசார், தனியார் பஸ் டிரைவர்கள், கண்டக்டர்கள் மற்றும் பஸ்ஊழியர்களுக்கு தகுந்த அறிவுரை வழங்க வேண்டும் என்று தன்னார்வ அமைப்பினர், பயணிகள் வலியுறுத்தினர்.

    • இவ்வழியாக சென்று வருவதோடு பாதசாரிகளும் சாலை ஓரத்தில் நடந்து சென்று வருகின்றனர்.
    • தரம் நாளடைவில் பாதிப்பு ஏற்படக்கூடிய நிலை உருவாகியுள்ளது.

    கடலூர்:

    சென்னையில் இருந்து புதுச்சேரி கடலூர் வழியாக நாகப்பட்டினத்திற்கு தினந்தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. இதன் காரணமாக மிக முக்கிய வழித்தடங்களாக இருப்பதால் கடலூர் நகரின் வழியாக 24 மணி நேரமும் வாகனங்கள் போக்குவரத்து இருந்து வருகின்றன. இதில் மிக முக்கியமாக கருதக்கூடிய பாலமாக கடலூர் அண்ணா பாலம் இருந்து வருகின்றன. இந்த பாலம் கெடிலம் ஆறு குறுக்கே இருந்து வருகின்றது. மேலும் கடலூர் நகரின் முக்கிய இணைப்பு பாலமாக செயல்பட்டு வருகிறது. இதன் காரணமாக கடலூர் மக்களின் மிக முக்கிய அத்தியாவசிய பாலமாக இருந்து வருவதால் அனைத்து வாகனங்களும் இவ்வழியாக சென்று வருவதோடு பாதசாரிகளும் சாலை ஓரத்தில் நடந்து சென்று வருகின்றனர். இந்த நிலையில் பாலத்தின் நடுவே தற்போது குண்டு குழியுமாக இருப்பதோடு பாலத்தில் உள்ள இரும்பு கம்பிகள் பெயர்ந்து மேலே வந்துள்ளது. இவ்வழியாக வாகனங்கள் அதிகளவில் சென்று வருவதால் பாலத்தின் தரம் நாளடைவில் பாதிப்பு ஏற்படக்கூடிய நிலை உருவாகியுள்ளது.

    மேலும் பாலத்தில் அதிகளவில் அதிர்வுகள் ஏற்பட்டு வருவதால் நாளுக்கு நாள் சாலையில் பள்ளம் அதிகரித்து வருவதோடு வாகனங்கள் சாலை ஓரத்தில் செல்லும்போது பாதசாரிகள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது. சில நேரங்களில் பாதசாரிகள் மீது வாகனங்கள் மோதி விபத்தும் ஏற்பட்டு வருவதையும் காண முடிகிறது .இந்த நிலையில் கனரக வாகனங்கள் செல்லும் சமயத்தில் அதிக அதிர்வலைகள் ஏற்படும் நேரத்தில் அவ்வழியாக செல்லக்கூடிய வாகன ஓட்டிகள் மற்றும் மக்களுக்கு அதிர்ச்சி ஏற்படக்கூடிய நிலையும் உருவாகி உள்ளது. ஆகையால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மிக முக்கியமாக கருதக்கூடிய அண்ணா பாலத்தை உரிய முறையில் ஆய்வு செய்து பாலத்தின் தரமும் சாலையில் ஏற்பட்டுள்ள குண்டும் குழியுமானதை சரி செய்து உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தும் சாலையின் மேலே உள்ள இரும்பு கம்புகளை சரி செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

    • புதுப்பாளையம் குடியிருப்பு பகுதியில் இருந்து வழிந்தோடி வரும் கழிவுநீர், வெளியேற போதிய வடிகால் சதியில்லாததால், தெற்கு புறத்திலுள்ள இணைப்புச் சாலையில் தேங்கி நிற்கிறது. இதனால், அந்த இடத்தில் சாலை பெயர்ந்து குண்டு குழியுமானதோடு, போக்குவரத்துக்கு பயன்படுத்த முடியாத அளவிற்கு சேறும் சகதியுமாக பழுதடைந்து கிடக்கிறது.
    • இதனால், இப்பகுதியை கடந்து செல்ல முடியாமல், இவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

    வாழப்பாடி:

    சேலம்– உளுந்துார்பேட்டை இடையே தேசிய நெடுஞ்சாலை அமைக்கும் திட்டத்தில், வாழப்பாடி பேரூராட்சிக்கு முத்தம்பட்டியில் இருந்து மத்துார் வரையிலான ஏறக்குறைய 4 கி.மீ., துாரத்திற்கு இருவழி புறவழிச்சாலை அமைக்கப்பட்டது.

    இச்சாலையில் இருந்து, போக்குவரத்து முக்கியத்தும் வாய்ந்த வாழப்பாடி– தம்மம்பட்டி சாலை மற்றும் வாழப்பாடி பேரூராட்சி குடியிருப்பு பகுதிகளையும் இணைக்கும் வகையில், சிங்கிபுரம் ராம்கோ சிமெண்ட் நிறுவன பங்களிப்புடன் தன்னிறைவு திட்டத்தின் கீழ், வாழப்பாடி பேரூராட்சி காமராஜ் நகரில் இருந்து புதுப்பாளையம் வரை, புறவழிச்சாலையின் இருபுறமும் இணைப்புச்சாலை அமைக்கப்பட்டது.

    தம்மம்பட்டி மற்றும் நாமக்கல் மாவட்டம் மங்களபுரம் சாலையில் வரும் அனைத்து வாகனங்களும் இச்சாலை வழியாகவே சேலம்-–உளுந்துார்பேட்டை தேசிய நெடுஞ்சாலையை அடைகின்றன. இதுமட்டுமின்றி, சிங்கிபுரம் சிமெண்ட் தொழிற்சாலைக்கு வரும் கனரக வாகனங்களும், வாழப்பாடி நகர்ப்புற குடியிருப்பு பகுதிக்கு செல்லும் அனைத்து ரக வானங்களும் இந்த இணைப்புச் சாலையிலேயே சென்று வருகின்றன.

    இந்நிலையில், புதுப்பாளையம் குடியிருப்பு பகுதியில் இருந்து வழிந்தோடி வரும் கழிவுநீர், வெளியேற போதிய வடிகால் வசதியில்லாததால், தெற்கு புறத்திலுள்ள இணைப்புச் சாலையில் தேங்கி நிற்கிறது. இதனால், அந்த இடத்தில் சாலை பெயர்ந்து குண்டு குழியுமானதோடு, போக்குவரத்துக்கு பயன்படுத்த முடியாத அளவிற்கு சேறும் சகதியுமாக பழுதடைந்து கிடக்கிறது.

    இதனால், இப்பகுதியை கடந்து செல்ல முடியாமல், இவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இதுமட்டுமின்றி இப்பகுதியில் ஏற்பட்டுள்ள ராட்சத பள்ளத்தில் சிக்கி வாகனங்கள் பழுதடைந்து வருகின்றன. எனவே, பழுதடைந்து கிடக்கும் இணைப்புச் சாலையை சீரமைக்க, தேசிய நெடுஞ்சாலை மற்றும் வாழப்பாடி பேரூராட்சி நிர்வாகமும் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென இப்பகுதி பொதுமக்களிடையே கோரிக்கை எழுந்துள்ளது.

    ×