என் மலர்
நீங்கள் தேடியது "குழந்தை கொலை"
- கணவன், மனைவியை போலீசார் கைது செய்தனர்.
- காலையில் கிராம மக்கள் பார்த்து போலீசுக்கு தகவல் கொடுத்தனர்.
செந்துறை:
அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள குழுமூர் காலனி தெருவை சேர்ந்தவர் மதிவண்ணன் (வயது 35). இவர் அப்பகுதி ஓட்டலில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி திவ்யா(27). இவர்களுக்கு 1 ஆண் குழந்தையும் 1 பெண் குழந்தையும் உள்ளது.
இந்த நிலையில் இவர்களது வீட்டு அருகே கடந்த 7-ந்தேதி எரிக்கப்பட்ட குப்பையில் ஆண் குழந்தை உடல் கருகிய நிலையில் இறந்து கிடந்தது. இதுகுறித்து அப்பகுதியை சேர்ந்தவர்கள் செந்துறை போலீஸ் நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர்.
செந்துறை போலீஸ் பொறுப்பு இன்ஸ்பெக்டர் மகாலட்சுமி சம்பவ இடத்திற்கு சென்று குழந்தையின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரியலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டார்.
குழந்தை அன்று இரவு பிறந்த நிலையில் இறந்து கிடந்ததால் அந்த குழந்தை எரித்து கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் போலீசாருக்கு எழுந்தது. இதையடுத்து சம்பவ இடம் அருகே உள்ள வீடுகளில் போலீசார் விசாரணை நடத்தினர்.
திவ்யாவிடம் விசாரணை செய்த போது அதிர்ச்சி தகவல்கள் வெளியாயின. முதலில் போலீசாரிடம் திவ்யா கூறுகையில், தனக்கு கடந்த சில மாதங்களாக மாதவிடாய் சரியாக வந்துள்ளதாகவும் ஆனால் வயிற்றில் கட்டி இருப்பதாக நினைத்து மருத்துவம் செய்து வந்ததாகவும் இந்த நிலையில் அன்றைய தினம் இரவு தனக்கு குழந்தை இறந்து பிறந்தது .
திடீரென குழந்தை பிறந்ததால் சந்தேகப்படுவார்கள் என்று அதிகாலை 5 மணியளவில் எனது உறவினர் ஒருவர் குப்பையை எரித்து கொண்டு இருந்தார். அப்போது யாருக்கும் தெரியாமல் தனக்கு பிறந்த குழந்தையை எரிந்த நெருப்பில் வீசிவிட்டு சென்றதாக நாடகம் ஆடினார்.

அதனைத் தொடர்ந்து போலீசார் அவரை அரியலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்தார்.
சிகிச்சை முடிந்த நிலையில் திவ்யா மற்றும் அவரது கணவர் மதிவண்ணன் ஆகியோரை பிடித்து செந்துறை போலீஸ் இன்ஸ்பெக்டர் குணசேகரன் கிடுக்கிப்பிடி விசாரணை மேற்கொண்டார்.
அப்போது குழந்தையை எரித்து கொலை செய்ததாக போலீசாரிடம் கூறினர். இதையடுத்து கணவன், மனைவியை போலீசார் கைது செய்தனர். கைதான மதிவண்ணன் போலீசில் அளித்து ள்ள வாக்கு மூலத்தில் கூறியிருப்பதாவது:-
எங்களுக்கு ஏற்கனவே 2 குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் திவ்யா 3-வதாக கர்ப்பம் ஆனார். தான் கர்ப்பம் ஆனதை திவ்யா மறைத்து வந்தார். மாதம் ஆக ஆக வயிறு பெரிதாகி விட்டது. அது குறித்து கேட்டதற்கு வயிற்றில் கட்டி உள்ளதாக பொய் கூறினார்.
இந்த நிலையில் அவருக்கு வீட்டில் குழந்தை பிறந்தது. அப்போது அந்த குழந்தையின் முகம் மற்றும் உருவத்தை பார்த்தபோது யாருக்கோ கள்ளக்காதலில் பிறந்த குழந்தை என்று சந்தேகம் அடைந்தேன். இதனால் இருவருக்கும் இடையே அன்று இரவு சண்டை ஏற்பட்டது.
இதில் ஆத்திரமடைந்த நான் குழந்தையை தூக்கி கீழே வீசினேன். இதில் அடிபட்டு குழந்தை அழுதது. அழுகை சத்தம் வெளியே கேட்கக்கூடாது என்பதற்காக திவ்யா துணியால் குழந்தையின் வாயை அடைத்தார்.
இதனால் குழந்தை இறந்து விட்டது. அதன் பிறகு இறந்த குழந்தையை அருகே இருந்த குப்பை தொட்டியில் போட்டு விட்டு வந்து விட்டோம். ஆனால் அந்த குழந்தை பாதி மட்டுமே எரிந்த நிலையில் காலையில் கிராம மக்கள் பார்த்து போலீசுக்கு தகவல் சொல்லிவிட்டனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
கைதான மதிவண்ணன், திவ்யா ஆகிய 2 பேரும் செந்துறை குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். வழக்கை விசாரித்த நீதிபதி ஆக்னஸ் ஜெப கிருபா திவ்யாவை போலீஸ் பாதுகாப்புடன் மருத்துவ மனையில் சிகிச்சை அளிக்கவும் மதிவண்ணனை சிறையில் அடைக்கவும் உத்தரவிட்டார்.
- உறவினர் மேஸ்திரி மாணிக்கம் என்பவருடன் ஜெயசுதாவிற்கு பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் கள்ளகாதலாக மாறியது.
- மாணிக்கத்திற்கு ஏற்கனவே திருமணமாகி நதியா என்ற மனைவியும் ஒரு மகளும் உள்ளனர்.
ஆரணி:
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே சந்தவாசல் காங்கரனந்தல் கிராமத்தை சேர்ந்தவர் ஜெயசுதா (வயது27). இவர் கடந்த 2017ம் ஆண்டு சென்னை தனியார் மருத்துவமனையில் நர்ஸ்சாக பணிபுரிந்து வந்தார்.
அப்போது அதே மருத்துவமனையில் சென்னை பகுதியை சேர்ந்த குணசேகரன் என்பவர் எலக்ட்ரீஷனாக பணிபுரிந்து வந்தார். இருவருக்கும் காதல் ஏற்பட்டது.
கடந்த 2018ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். இதில் ஜெயசுதா கருவுற்ற நிலையில் குணசேகரன் ஜெயசுதா தம்பதியினர் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்தனர்.
தாய் வீடான சந்தவாசல் காங்கரனந்தல் கிராமத்திற்கு ஜெயசுதா வந்தார். பின்னர் ஜெயசுதாவிற்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது.
தனது குழந்தையான ஏனோக்ராஜ்னுடன் தனியாக வாழ்ந்து வந்தார். அப்போது ஜெயசுதாவின் உறவினர் மேஸ்திரி மாணிக்கம் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் கள்ளகாதலாக மாறியது. மாணிக்கத்திற்கு ஏற்கனவே திருமணமாகி நதியா என்ற மனைவியும் ஒரு மகளும் உள்ளனர்.
மாணிக்கம் தன்னுடைய குடும்பத்தினரை கைகழுவி விட்டு கள்ளக்காதலியான ஜெயசுதாவுடன வாழ்ந்து வந்தார். மற்றும் ஜெயசுதாவின் குழந்தையுடன் ஆரணி அருகே சேவூர் கிராமத்தில் தனியாக வீடு எடுத்து குடிபெயர்ந்து வாழ்ந்து வந்தார்.
மாணிக்கம் தினந்தோறும் மது குடித்து விட்டு ஜெயசுதாவிடம் உன் குழந்தை எனக்கு பிறக்கவில்லை உன் முதல் கணவர் குணசேகரனுக்கு பிறந்தது என்று தினந்தோறும் 2 வயது குழந்தை ஏனோக்ராஜை தாக்கியும் கொடுமைபடுத்தியும் சூடு வைத்தும் தண்ணீர் தொட்டில் 2 கால்களை பிடித்து மூழ்கடித்து மற்றும் கட்டையால் தாக்கியும் கொடூரமான முறையில் கொடுமைபடுத்தி வருவதை வழக்கமாக கொண்டுள்ளார்.
மேலும் கடந்த மாதம் 21ந் தேதி மேஸ்திரி மாணிக்கம் வழக்கம் போல் மது குடித்துவிட்டு ஜெயசுதாவிடம் வாக்குவாதம் செய்தார். ஆத்திரத்தில் 2 வயது குழந்தை ஏனோக்ராஜை கட்டையால் தாக்கியுள்ளார்.
இதில் படுகாயமடைந்த குழந்தையை செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
பின்னர் ஆரணி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி குழந்தை பரிதாபமாக இறந்தது.
இச்சம்பவம் குறித்து ஜெயசுதா கொடுத்த புகாரின் பேரில் ஆரணி தாலுகா போலீசார் கொலை வழக்கு பதிவு செய்து மாணிக்கத்தை கைது செய்தனர்.
- சுவாதி தனது கணவரிடம் குழந்தையை ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் செல்லாததால் உடல்நிலை மோசமடைந்து வருவதாக கூறினார்.
- கணவன் மனைவி இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
திருப்பதி:
ஆந்திர மாநிலம் காளஹஸ்தி வாட்டர் ஹவுஸ் நகரை சேர்ந்தவர் முனிராஜா (வயது 22). கூலி தொழிலாளி. இவரது மனைவி சுவாதி (19). தம்பதிக்கு நிகில் என்ற 3 மாத ஆண் குழந்தை இருந்தது. மனைவியின் நடத்தையில் சந்தேகம் அடைந்த முனி ராஜா சுவாதியிடம் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்தார்.
இந்த நிலையில் நிக்கிலுக்கு கடந்த 4 நாட்களாக உடல்நிலை சரி இல்லாமல் இருந்தது. குழந்தையை டாக்டரிடம் அழைத்துச் செல்ல வேண்டும் என சுவாதி கணவரிடம் தெரிவித்தார். ஆனால் அவர் குழந்தையை டாக்டரிடம் அழைத்துச் செல்லாமல் காலம் கடத்தி வந்தார்.
இன்று அதிகாலை சுவாதி தனது கணவரிடம் குழந்தையை ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் செல்லாததால் உடல்நிலை மோசமடைந்து வருவதாக கூறினார். அப்போது கணவன் மனைவி இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
மகன் உயிருடன் இருந்தால்தானே ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் செல்ல கூறுவாய் என ஆத்திரமடைந்து தூங்கிக் கொண்டிருந்த குழந்தையின் 2 கால்களையும் பிடித்து வெளியே தூக்கி வந்து அருகில் இருந்த பாறையில் ஓங்கி அடித்தார். இதில் குழந்தையின் மண்டை உடைந்து ரத்தம் கொட்டியது. இதனை கண்ட சுவாதி கதறி துடித்தார்.
முனிராஜா அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். சுவாதி குழந்தையை தூக்கிக் கொண்டு அங்குள்ள அரசு ஆஸ்பத்திரிக்கு சென்றார்.
ஆஸ்பத்திரியில் குழந்தையை பரிசோதித்த டாக்டர் குழந்தை ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார். இதனை கேட்ட சுவாதி அங்கேயே மயக்கம் அடைந்து விழுந்தார்.
இதையடுத்து டாக்டர்கள் சுவாதிக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர். இதுகுறித்து தகவல் அறிந்த காளஹஸ்தி போலீசார் வழக்கு பதிவு செய்து தலைமறைவாக உள்ள முனிராஜை தேடி வருகின்றனர்.
- ராகுல் ஏன் குழந்தையை கொன்றான் என்ற விவரம் போலீசார் விசாரணைக்கு பிறகு தான் தெரியவரும்.
- குழந்தை தருண் கொலை செய்யப்பட்ட சம்பவம் பற்றி கேள்விப்பட்டதும் அவரது உறவினர்கள் ராசிபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு திரண்டு வந்தனர்.
ராசிபுரம்:
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே உள்ள சீராப்பள்ளி மூப்பனார் கோவில் தெருவை சேர்ந்தவர் கபில் வாசன் (வயது 32). இவரது மனைவி ராஜாமணி (24). இந்த தம்பதிக்கு நவியா ஸ்ரீ (5) என்ற பெண் குழந்தையும், தருண் (2 1/2) என்ற ஆண் குழந்தையும் உள்ளனர்.
கபில்வாசன் அந்த பகுதியில் உள்ள சேகோ ஆலையில் கூலித்தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இவர்கள் அவர்களது உறவினர் தியாகராஜன் என்பவரது வீட்டின் மாடியில் குடியிருந்து வருகின்றனர். கபில்வாசன் வேலைக்கு சென்று விட்டார். வீட்டில் மனைவி ராஜாமணி மற்றும் குழந்தைகள் இருந்துள்ளனர். இதில் குழந்தை தருண் தூங்கிக் கொண்டிருந்திருக்கிறான்.
அப்போது அதே ஊரைச் சேர்ந்த கபில் வாசனின் உறவினர் பாலமுருகன் என்பவரது மகன் ராகுல் (23) என்பவர் நேற்று இரவு கபில் வாசனின் வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது வாலிபர் குடிப்பதற்கு தண்ணீர் கேட்டுள்ளார். ராஜாமணி தண்ணீர் எடுத்து வர உள்ளே சென்றுள்ளார்.
அந்த நேரத்தில் சற்றும் எதிர்பாராத விதமாக தூங்கிக் கொண்டிருந்த குழந்தை தருண் கழுத்தில் வாலிபர் ராகுல் கையால் அடித்தும் காலால் உதைத்தும் நெஞ்சில் அடித்ததாக கூறப்படுகிறது. இதில் குழந்தை தருண் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தான். உடனடியாக குழந்தையை ராசிபுரம் தனியார் ஆஸ்பத்திரியில் காண்பித்துள்ளனர். அங்கு பரிசோதித்த டாக்டர் ஏற்கனவே குழந்தை தருண் இறந்து விட்டதாக தெரிவித்தனர். பிறகு குழந்தை தருணை ராசிபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு வந்து டாக்டரிடம் காண்பித்தனர். அங்கிருந்த டாக்டர்கள் குழந்தை ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
அதன் பேரில் குழந்தை தருண் உடல் ராசிபுரம் அரசு ஆஸ்பத்திரியில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில் நாமகிரிப்பேட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ராகுலை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து நாமகிரிப்பேட்டை போலீஸ் இனஸ்பெக்டர் கணேஷ்குமார் மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
ராகுல் ஏன் குழந்தையை கொன்றான் என்ற விவரம் போலீசார் விசாரணைக்கு பிறகு தான் தெரியவரும். குழந்தை தருண் கொலை செய்யப்பட்ட சம்பவம் பற்றி கேள்விப்பட்டதும் அவரது உறவினர்கள் ராசிபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு திரண்டு வந்தனர். குழந்தையின் உடலை பார்த்து அவரது பெற்றோர்கள் கதறி அழுதது அங்கிருந்தவர்களை கண் கலங்க செய்தது.
- ஹாசினி தவறி விழுந்து இறந்தாரா? அல்லது சுவற்றில் வீசி கொலை செய்யப்பட்டாரா? என்று போலீசார் விசாரித்து வருகின்றனர்.
- தப்பியோடிய சக்திவேல்-ஹேமலதா ஆகியோரை பிடிக்க போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர்.
ஆலங்குளம்:
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அண்ணாநகர் 3-வது தெருவில் கடந்த 6 மாதங்களுக்கு முன்னர், சென்னை பள்ளிப்பட்டு பகுதியை சேர்ந்தவர்கள் என கூறி ஒரு தம்பதியினர் குடியேறினர்.
அவர்கள் சக்திவேல் என்ற திலீப்குமார், ஹேமலதா என்ற பெயரில் ஹாசினி(வயது 2) என்ற குழந்தையுடன் வாடகைக்கு வீடு எடுத்து தங்கினர். பின்னர் அவர்கள் அப்பகுதியில் வேலைக்கு சென்று வந்தனர்.
இந்நிலையில் குழந்தை ஹாசினி வீட்டு சுவரில் அமர்ந்து சாப்பிட்டுக்கொண்டிருந்தபோது தவறி கீழே விழுந்ததாக கூறி, கடந்த மாதம் 31-ந்தேதி நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இதுகுறித்து போலீசார் விசாரித்ததில், விளையாடிக்கொண்டிருந்தபோது ஹாசினி தவறி கீழே விழுந்துவிட்டதாக அந்த தம்பதி தெரிவித்தனர். சுமார் 4 நாட்களாக தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த நிலையில் கடந்த 4-ந்தேதி ஹாசினி உயிரிழந்தார்.
இதனிடையே 3-ந்தேதி மாலை தங்களை பெற்றோர் என கூறி வந்த தம்பதி தலைமறைவாகினர். இதனால் ஆலங்குளம் போலீசாருக்கு சந்தேகம் வலுத்தது. தலைமறைவான 2 பேரும் ஹாசினிக்கு உண்மையான பெற்றோர் தானா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணையை தொடங்கினர்.
இதற்கிடையே ஹாசினியின் உண்மையான தந்தையான பெங்களூருவை சேர்ந்த திலீப்குமார் தகவல் அறிந்து ஆலங்குளத்திற்கு வந்து ஹாசினி உடலை பெற்று அடக்கம் செய்தார். அவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில், ஹேமலதாவுக்கும், அவருக்கும் திருமணமாகி சில காரணங்களால் பிரிந்து வாழ்ந்து வருவதாக தெரிவித்தார்.
- குழந்தை ஜெகநாதன் கடந்த மாதம் விளையாடி கொண்டிருந்த போது வீட்டு மாடி படியில் இருந்து தவறி விழுந்து தலையில் காயம் ஏற்பட்டதாக நந்தினி கூறினார்.
- ஓசூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட குழந்தை டிஸ்சார்ஜ் ஆன நிலையில், கடந்த மாதம் 25-ந் தேதி காலை இறந்தது.
கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே உள்ள ஆலூரைச் சேர்ந்தவர் சக்தி (வயது 30). கட்டிட மேஸ்திரி. இவர் கடந்த 10 மாதங்களுக்கு முன்பு கட்டிட பணியில் ஈடுபட்ட போது தவறி கீழே விழுந்து இறந்துவிட்டார். இவரது மனைவி நந்தினி (25).
இவர்களுக்கு பிரவீன் (6), ஜெகநாதன் (3) என்ற 2 ஆண் குழந்தைகள் உள்ளனர். இதில் பிரவீனை ஓசூர் அருகே உள்ள ஆதரவற்ற குழந்தைகள் இல்லத்தில் நந்தினி சேர்த்து விட்டு குழந்தை ஜெகநாதனுடன் வசித்து வந்தார்.
இந்த நிலையில் குழந்தை ஜெகநாதன் கடந்த மாதம் விளையாடி கொண்டிருந்த போது வீட்டு மாடி படியில் இருந்து தவறி விழுந்து தலையில் காயம் ஏற்பட்டதாக நந்தினி கூறினார். ஓசூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட குழந்தை டிஸ்சார்ஜ் ஆன நிலையில், கடந்த மாதம் 25-ந் தேதி காலை இறந்தது. இதையடுத்து குழந்தையின் உடல் யாருக்கும் தெரியாமல் புதைக்கப்பட்டது.
இந்த நிலையில் தனது பேரன் சாவில் சந்தேகம் உள்ளதாக நந்தினியின் தாயார் வள்ளி அட்கோ போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் நந்தினியிடம் தீவிர விசாரணை நடத்தினர். அப்போது கள்ளக்காதலன் தனது மகனை கொன்றதை நந்தினி ஒப்புக்கொண்டார்.
இதையடுத்து நந்தினியின் கள்ளக்காதலனான ஓசூர் பார்வதி நகரைச் சேர்ந்த ரஞ்சித்குமார் (30) என்பவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் போலீசில் அளித்துள்ள பரபரப்பு வாக்குமூலம் வருமாறு:-
கணவர் இறந்த பிறகு நந்தினி 2 குழந்தைகளுடன் ஓசூர் தேர்பேட்டையில் உள்ள அவரது பெற்றோர் வீட்டிற்கு வந்தார். அப்போது அவளுக்கும், எனக்கும் பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. நான் அடிக்கடி நந்தினியுடன் உல்லாசமாக இருந்து வந்தேன். கடந்த மாதம் 6-ந் தேதி நந்தினி வீட்டிற்கு சென்று அவளுடன் உல்லாசமாக இருந்தேன்.
குழந்தை எங்களின் உல்லாசத்திற்கு இடையூறாக இருந்தது. அதனால் ஆத்திரத்தில் நான் பீர்பாட்டிலால் குழந்தையின் தலையில் தாக்கினேன். இதில் குழந்தைக்கு தலையில் காயம் ஏற்பட்டது. பின்னர் ஒரு நாள் கழித்து குழந்தையை ஓசூர் அரசு ஆஸ்பத்திரியில் நந்தினி சேர்த்தாள். அங்கு குழந்தை படியில் இருந்து விழுந்ததில் காயம் அடைந்ததாக கூறி நாடகமாடினார். பின்னர் தருமபுரி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட குழந்தை 22-ந் தேதி டிஸ்சார்ஜ் ஆனது. அங்கிருந்து வீட்டிற்கு வந்த குழந்தை கடந்த 25-ந் தேதி காலை திடீரென இறந்து விட்டது. பின்னர் உடலை யாருக்கும் தெரியாமல் சுடுகாட்டில் நாங்கள் 2 பேரும் புதைத்து விட்டோம். நந்தினியின் தாய் கொடுத்த புகாரால் நான் சிக்கி கொண்டேன்.
இவ்வாறு அவர் வாக்குமூலத்தில் கூறியுள்ளார்.
- இசக்கியம்மாள் எழுந்து பார்த்தபோது குழந்தையை காணவில்லை.
- மாயமான குழந்தை ஊர் கிணற்றில் சடலமாக மிதந்தது.
களக்காடு:
நெல்லை மாவட்டம் களக்காடு அருகே உள்ள கட்டார்குளத்தை சேர்ந்தவர் ரமேஷ் (வயது 30). ஆட்டோ டிரைவர்.
இவரது மனைவி இசக்கியம்மாள் என்ற இந்து (23). வெவ்வேறு சமூகத்தை சேர்ந்த இருவரும் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்துள்ளனர்.
இசக்கியம்மாளுக்கு கடந்த 7 நாட்களுக்கு முன் 2-வதாக பெண் குழந்தை பிறந்தது. இந்நிலையில் இன்று அதிகாலை ரமேஷ் சவாரிக்காக ஆட்டோவில் சேரன்மகாதேவி சென்று விட்டார்.
இசக்கியம்மாள் எழுந்து பார்த்தபோது குழந்தையை காணவில்லை. இதனால் திடுக்கிட்ட அவர் தனது கணவருக்கு செல்போனில் தொடர்பு கொண்டு குழந்தை மாயமானது பற்றி தகவல் தெரிவித்தார்.
இதற்கிடையே ஆட்டோ ஓட்டி சென்ற ரமேஷ் சேரன்மகாதேவி அருகே சென்றபோது விபத்தில் ஆட்டோ கவிழ்ந்தது. இதனால் அவர் அந்த வழியாக வந்த ஒருவரது மோட்டார் சைக்கிளில் ஏறி வந்து கொண்டிருந்தார்.
குழந்தையை காணவில்லை என்றதும் அவரும் பதறியபடி வீட்டிற்கு வந்தார். உறவினர்களும், அக்கம் பக்கத்தினரும் குழந்தையை தேடினர். இதனிடையே மாயமான குழந்தை ஊர் கிணற்றில் சடலமாக மிதந்தது. இதைக்கண்ட உறவினர்கள் குழந்தையின் சடலத்தை மீட்டனர்.
இதுபற்றி களக்காடு போலீசாருக்கு தகவல் அளித்தனர். இன்ஸ்பெக்டர் ஜோசப் ஜெட்சன், சப்-இன்ஸ்பெக்டர் ரெங்கசாமி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று குழந்தையின் சடலத்தை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.
இதில் குழந்தையின் தாயான இசக்கியம்மாளே குழந்தையை கிணற்றில் வீசி கொலை செய்திருக்கலாம் என்ற அதிர்ச்சி தகவல் வெளியானது.
ஏற்கனவே இவருக்கு கடந்த 2021-ம் ஆண்டு ஆண் குழந்தை பிறந்துள்ளது. அந்த குழந்தையும் பிறந்து 20 நாட்களிலேயே தொட்டிலில் பிணமாக கிடந்துள்ளது. இசக்கியம்மாளுக்கு மனநிலை பாதிப்பு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதற்காக அவர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.
போலீசார் குழந்தையின் சடலத்தை பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்குஅனுப்பி வைத்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். தடயவியல் நிபுணர்களும் வரவழைக்கப்பட்டனர்.
அவர்கள் குழந்தையின் வீடு, அது சடலமாக கிடந்த கிணற்றையும் ஆய்வு செய்தனர். இந்த சம்பவம் களக்காடு பகுதியில் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.
- வீட்டுக்கு தெரியாமல் திருமணம் செய்ததை பெற்றோர் கண்டிப்பார்கள் என்ற காரணத்தால் பெற்ற குழந்தையை தந்தையே கொலை செய்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
- வருணை கைது செய்த போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
சென்னை:
சென்னை தாம்பரத்தை அடுத்த மணிமங்கலம் அருகே காரணை பெரியார் நகரில் வசித்து வருபவர் வருண். இவரது மனைவி விஜயலட்சுமி. இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். வருணின் பெற்றோருக்கு தெரியாமல் இந்த திருமணம் நடந்துள்ளது.
திருமணத்துக்கு முன்பே வருணுடன் நெருங்கி பழகியதால் விஜயலட்சுமி கர்ப்பமாகி இருந்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது பெற்றோர் வருணை அழைத்து பேசி இருவருக்கும் கடந்த ஆண்டு திருமணம் செய்து வைத்தனர். அப்போது வருண் இந்த திருமணத்தில் எனது பெற்றோருக்கு விருப்பம் இல்லை. அவர்கள் வரமாட்டார்கள். பின்னர் பேசி சமாதானம் செய்து கொள்ளலாம் என்று கூறி உள்ளார். வருணின் பெற்றோர் இல்லாமலேயே திருமணம் அரங்கேறி உள்ளது.
இதையடுத்து கடந்த ஆண்டு ஜூலை மாதம் விஜயலட்சுமிக்கு ஆண் குழந்தை பிறந்தது. தனது பெற்றோருக்கு தெரியாமலேயே வருண் இந்த குழந்தையை வளர்த்து வந்தார். திருமணத்துக்கு பின்னர் மாமனார் வீட்டின் ஆதரவுடனேயே வருண் வசித்து வந்த நிலையில் மாமனார் குடும்பத்தினருடன் பிரச்சினை ஏற்பட்டுள்ளது. இதனால் தனது பெற்றோருடன் சென்று விடலாம் என்று வருண் எண்ணியுள்ளார்.
வீட்டுக்கு தெரியாமல் திருமணம் செய்து குழந்தையையும் பெற்றுவிட்டது தெரிந்தால் தனது பெற்றோர் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள் என நினைத்த வருண் தான் பெற்றெடுத்த குழந்தை என்றும் பாராமல் 4 மாத ஆண் குழந்தையை கொலை செய்ய திட்டமிட்டார். இதன்படி கடந்த ஆண்டு நவம்பர் மாதம் குழந்தையை வெளியில் அழைத்துச் சென்ற வருண் வாய், மூக்கை பொத்தி துடிக்க துடிக்க கொலை செய்துள்ளார்.
பின்னர் உடலை சிறிய படுக்கை விரிப்பில் சுற்றி பெரும்பாக்கம் சுடுகாட்டு பகுதிக்கு உடலை தூக்கிச் சென்று புதரில் வீசிவிட்டு எதுவும் தெரியாதது போல இருந்துள்ளார். இதன் பின்னர் மனைவி விஜயலட்சுமியிடம் சென்று, தமது குழந்தை கூடுவாஞ்சேரியில் எனது தோழி மகாலட்சுமியின் வீட்டில் உள்ளது. எங்கள் வீட்டுக்கு சென்று நாம் காதலிக்கும் விஷயத்தை முதலில் சொல்வோம். குழந்தையை பற்றி எதுவும் கூறிவிடாதே என்று கண்டிப்புடன் தெரிவித்துள்ளார். விஜயலட்சுமியும் இதனை சரி என கேட்டுவிட்டு அமைதியாக இருந்தார்.
இதன் பின்னர் விஜயலட்சுமியை அழைத்துக் கொண்டு தனது பெற்றோரை பார்க்க சென்ற வருண், இவர்தான் எனது காதலி, எங்களுக்கு திருமணம் செய்து வையுங்கள் என்று கூறியுள்ளார். இதனை நம்பி வருணின் பெற்றோரும் திருமணம் செய்து வைத்துள்ளனர்.
இதனை தொடர்ந்து விஜயலட்சுமி, வருணிடம் குழந்தையை வாங்கிக் கொண்டு வந்து விடலாம். நான் உங்கள் வீட்டில் பேசி சமாதானம் செய்கிறேன் என்று தெரிவித்துள்ளார். ஆனால் வருணோ குழந்தை இருக்கும் இடம் பற்றி முன்னுக்குப்பின் முரணாக பேசி வந்துள்ளார். இதனால் சந்தேகம் அடைந்த விஜய லட்சுமி, தனது கணவரின் தோழியான மகாலட்சுமியின் வீட்டை தேடி கண்டுபிடித்து நேரில் போய் விசாரித்தார்.
அப்போது மகாலட்சுமி, விஜயலட்சுமியிடம் உங்கள் குழந்தையை 4 மாதங்களுக்கு முன்பே வருண் அழைத்து சென்று விட்டார். 3 நாட்கள் மட்டுமே எனது வீட்டில் குழந்தை இருந்தது என்று கூறி குண்டை தூக்கி போட்டுள்ளார்.
இதனை தொடர்ந்தே விஜயலட்சுமி உஷாராகி மணிமங்கலம் போலீசில் புகார் செய்தார். தாம்பரம் கமிஷனர் அமல்ராஜ் உத்தரவின் பேரில் உதவி கமிஷனர் ரவி மற்றும் மணிமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார்.
வருணிடம் நடத்தப்பட்ட தீவிர விசாரணையில் 4 மாத குழந்தையை கொலை செய்து உடலை முட்புதரில் வீசியதை ஒப்புக்கொண்டார். இதையடுத்து உடல் வீசப்பட்ட இடத்துக்கு வருணை அழைத்துச் சென்ற போலீசார் சம்பவ இடத்தில் இருந்து எலும்புக் கூடுகள் சிலவற்றை மீட்டுள்ளனர். குழந்தையின் உடலை சுற்றி வீசிய சிறிய படுக்கையும் கையில் அணிவிக்கப்பட்டிருந்த சிறிய வளையத்தையும் போலீசார் கைப்பற்றியுள்ளனர். வருணை கைது செய்த போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
வீட்டுக்கு தெரியாமல் திருமணம் செய்ததை பெற்றோர் கண்டிப்பார்கள் என்ற காரணத்தால் பெற்ற குழந்தையை தந்தையே கொலை செய்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
- அனுஷா தொட்டிலில் 2 கரடி பொம்மைகளை வைத்து விட்டு ஒன்றும் தெரியாதது போல் தூங்கினார்.
- அனுஷாவின் நடத்தையில் மாற்றங்களை கண்ட போலீசார் அவரை பிடித்து விசாரணை நடத்தினர்.
திருப்பதி:
ஆந்திர மாநிலம், நெல்லூர் மாவட்டம், குற்றால மடுகு பகுதியை சேர்ந்தவர் மனைவி அனுஷா. தம்பதிக்கு கிருத்திகா என்ற 4 வயது மகளும், லட்சுமி ஹாரிகா என்ற 18 மாத குழந்தையும் இருந்தனர். மணிகண்டன் ராய்ப்பூரில் ஓட்டல் நடத்தி கொண்டு அங்கேயே தங்கி உள்ளார்.
அனுஷா தனது பெற்றோர் வீட்டில் தங்கி இருந்து நெல்லூரில் உள்ள தனியார் கல்லூரியில் எம்.சி.ஏ. 2-ம் ஆண்டு படித்து வந்தார்.
கணவர் ஓட்டல் நடத்தி வருவதால் அவமானமாக கருதிய அனுஷா கல்லூரி படிப்பை முடித்தவுடன் தனது கணவரை விவாகரத்து செய்து விட்டு, ஐதராபாத் சென்று நல்ல சம்பளத்தில் வேலை செய்யும் ஒருவரை திருமணம் செய்து கொண்டு உல்லாச வாழ்க்கை வாழ வேண்டும் என எண்ணினார். இதனால் தனது மூத்த மகள் கிருத்திகாவை கணவரிடம் ஒப்படைத்து விட்டார். 1½ வயது குழந்தையை என்ன செய்வது என்று யோசித்து வந்தார்.
இந்த நிலையில் கடந்த 3-ந்தேதி நள்ளிரவு தொட்டிலில் தூங்கிக் கொண்டிருந்த தனது குழந்தையை கழுத்தை நெரித்து கொலை செய்தார். உடலை வீட்டின் பின்புறம் உள்ள கால்வாயில் வீசினார்.
பின்னர் அனுஷா தொட்டிலில் 2 கரடி பொம்மைகளை வைத்து விட்டு ஒன்றும் தெரியாதது போல் தூங்கினார்.
பொழுது விடிந்ததும் தூக்கத்தில் இருந்து எழுந்த அனுஷா தொட்டிலில் இருந்த குழந்தையை யாரோ கடத்திச் சென்று விட்டதாகவும் குழந்தைக்கு பதிலாக கரடி பொம்மைகளை வைத்து சென்றதாகவும் பெற்றோரிடம் தெரிவித்தார்.
இதுகுறித்து நெல்லூர் போலீசில் புகார் செய்தனர். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் அனுஷாவின் நடத்தையில் மாற்றங்களை கண்ட போலீசார் அவரை பிடித்து விசாரணை நடத்தினர்.
முதலில் குழந்தை திருடு போனதாக போலீசாரிடம் தெரிவித்த அனுஷா பின்னர் போலீசார் அவர்களது பாணியில் விசாரித்தபோது குழந்தையை கொலை செய்து கால்வாயில் வீசியதை ஒப்புக்கொண்டார்.
இதையடுத்து கால்வாயில் வீசப்பட்ட குழந்தை உடலை போலீசார் மீட்டனர். அனுஷாவை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
- நந்தினி அதே கிராமத்தில் தன்னார்வலராக வேலை செய்து வந்தார். கருத்து வேறுபாடு காரணமாக கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு நடந்து வந்தது.
- குழந்தை சிகிச்சை பலன் இன்றி பரிதாபமாக இறந்தது. இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருப்பதி:
ஆந்திர மாநிலம், சத்ய சாயி மாவட்டம், கொண்டம்பள்ளி ஹரிபுரத்தை சேர்ந்தவர் ரமணா, இவரது மனைவி நந்தினி. தம்பதியின் மகன்கள் அன்விஷ் ரெட்டி, தன்விஷ் (வயது 2).
நந்தினி அதே கிராமத்தில் தன்னார்வலராக வேலை செய்து வந்தார். கருத்து வேறுபாடு காரணமாக கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு நடந்து வந்தது.
இந்த நிலையில் நேற்று முன்தினம் மீண்டும் தகராறு ஏற்பட்டது.
வாழ்க்கையில் விரக்தி அடைந்த நந்தினி தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தார்.
தான் மட்டும் தற்கொலை செய்து கொண்டால் குழந்தைகள் அனாதையாகிவிடும் என்று எண்ணிய நந்தினி தனது 2 மகன்களுடன் ஊருக்கு வெளியே உள்ள கிணற்றிற்கு சென்றார்.
தனது 2 வயது மகன் தன் விஷ்சை கிணற்றில் தூக்கி வீசினார். கிணற்றில் வீசப்பட்ட குழந்தை தண்ணீரில் மூழ்கிய படி உயிருக்கு போராடியது இதனை கண்ட நந்தினி தற்கொலை செய்து கொள்வதற்கு பயந்து கத்தி கூச்சலிட்டார்.
அருகில் இருந்தவர்கள் ஓடிவந்து தண்ணீரில் தத்தளித்த குழந்தையை மீட்டு வெளியே கொண்டு வந்தனர். சிகிச்சைக்காக அங்குள்ள ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.
ஆனால் குழந்தை சிகிச்சை பலன் இன்றி பரிதாபமாக இறந்தது. இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- கழிவறையில் இன்று காலை பிறந்து ஒரே நாளே ஆன ஆண் சிசு கொலை செய்யப்பட்டு கிடந்தது.
- கடந்த 2 நாட்களில் அரசு ஆஸ்பத்திரி மகப்பேறு பிரிவில் எத்தனை பெண்களுக்கு குழந்தை பிறந்தது என்ற விவரம் சேகரிக்கப்பட்டு வருகிறது.
திண்டுக்கல்:
திண்டுக்கல் அரசு மருத்துவக்கல்லூரி, புதிய கட்டிடத்தில் தலைமை மருத்துவமனையுடன் இணைந்து செயல்பட்டு வருகிறது. இங்கு 24 மணிநேர அவசர சிகிச்சை பிரிவு செயல்படுகிறது. இதில் 20 படுக்கைகள் கொண்டு சிகிச்சை பிரிவு உள்ளது. முற்றிலும் குளிரூட்டப்பட்ட இந்த பிரிவில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் 24 மணிநேரமும் நோயாளிகள் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.
இங்குள்ள கழிவறையில் இன்று காலை பிறந்து ஒரே நாளே ஆன ஆண் சிசு கொலை செய்யப்பட்டு கிடந்தது. கழிவறையை சுத்தம் செய்ய சென்ற துப்புரவு பணியாளர்கள் இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து மருத்துவமனை கண்காணிப்பாளர் மற்றும் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் சம்பவ இடத்திற்கு வந்து சிசுவின் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.
தொப்புள்கொடி கூட அறுக்கப்படாத ஆண் சிசு உடலில் பலத்த காயங்களுடன் இறந்து கிடந்தது. இதுகுறித்து நகர் வடக்கு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் ராஜசேகர், அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் அமுதா தலைமையிலான போலீசார் அங்கு வந்து விசாரணை மேற்கொண்டனர். ஆஸ்பத்திரியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமிரா மூலம் சிசுவை கொன்றது யார் என விசாரணை நடத்தப்பட்டு வருகின்றது.
மேலும் கடந்த 2 நாட்களில் அரசு ஆஸ்பத்திரி மகப்பேறு பிரிவில் எத்தனை பெண்களுக்கு குழந்தை பிறந்தது என்ற விவரம் சேகரிக்கப்பட்டு வருகிறது. தவறான தொடர்பில் குழந்தை பிறந்ததால் அதனை கொலை செய்து கழிவறையில் வீசிச்சென்றிருக்கலாம் என்று போலீசார் சந்தேகம் அடைந்துள்ளனர். மேலும் இறந்த சிசுவின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் திண்டுக்கல் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
- குழந்தை சுவற்றில் அடித்து கொலை செய்யப்பட்டு கிடந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
- கடந்த 2 நாட்களாக அரசு ஆஸ்பத்திரியில் பிறந்த குழந்தைகள் மற்றும் அதன் தாய்மார்கள் விவரம் சேகரிக்கப்பட்டது.
திண்டுக்கல்:
திண்டுக்கல் அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் அவசர சிகிச்சை பிரிவில் உள்ள கழிவறையில் ஒரு ஆண் சிசு இறந்த நிலையில் கிடந்தது. இது குறித்து நகர் வடக்கு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர். அப்போது குழந்தை சுவற்றில் அடித்து கொலை செய்யப்பட்டு கிடந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனையடுத்து அரசு ஆஸ்பத்திரி மகப்பேறு பிரிவில் குழந்தை ஏதேனும் காணாமல் போய் உள்ளதா? என விசாரணை நடத்தப்பட்டது.
கடந்த 2 நாட்களாக அரசு ஆஸ்பத்திரியில் பிறந்த குழந்தைகள் மற்றும் அதன் தாய்மார்கள் விவரம் சேகரிக்கப்பட்டது. இதில் எந்த குழந்தையும் மாயமாகவில்லை என உறுதி செய்யப்பட்டது.
இந்தநிலையில் அவசர சிகிச்சை பிரிவில் இருந்த சி.சி.டி.வி. கேமிரா காட்சிகள் ஆராயப்பட்டது. அதில் நைட்டி அணிந்த ஒரு பெண் துண்டில் குழந்தையை சுற்றி உட்கார்ந்து இருந்தார். இரவு 11 மணி அளவில் அவர் கழிவறைக்கு சென்று 20 நிமிடங்கள் கழித்து வெளியே வந்த காட்சி பதிவாகி இருந்தது.
ஆனால் அவருக்கு திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் பிரசவம் நடக்க வில்லை. வெளியில் குழந்தை பெற்று அதனை அரசு ஆஸ்பத்திரியில் உள்ள கழிவறையில் வீசி சென்றது உறுதியானது.
அந்த புகைப்படத்தின் அடிப்படையில் குழந்தையை வீசி சென்றது யார்? என்று விசாரணை நடத்தி வருகின்றனர்.