search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 232838"

    • மின்வேலிக்கு அருகேயுள்ள கம்பத்திலிருந்து திருட்டுத்தனமாக மின் இணைப்பு கொடுப்பதற்காக கொக்கி போட்டுள்ளார்.
    • பன்றியை பிடிக்க மின்வேலி அமைத்த வாலிபர் தானே மின்சாரம் பாய்ந்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    மத்தூர்:

    கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அருகேயுள்ள கொல்லப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் ரஞ்சித்குமார் (வயது 30). இவர் சாமல்பட்டி அருகேயுள்ள மாந்தோப்பு பகுதியில் காட்டு பன்றியை வேட்டையாட இன்று சென்றுள்ளார்.

    அங்கு பன்றிகளை பிடிப்பதற்காக மின்வேலி அமைத்துள்ளார். இந்நிலையில் அந்த மின்வேலிக்கு அருகேயுள்ள கம்பத்திலிருந்து திருட்டுத்தனமாக மின் இணைப்பு கொடுப்பதற்காக கொக்கி போட்டுள்ளார்.

    அப்போது எதிர்பாராத விதமாக ரஞ்சித்குமார் மீது மின்சாரம் பாய்ந்தது. இதில் சம்பவ இடத்திலேயே உடல் கருகி ரஞ்சித்குமார் உயிரிழந்தார்.

    இதுகுறித்து தகவல் அறிந்த சாமல்பட்டி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து ரஞ்சித்குமாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஊத்தங்கரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பன்றியை பிடிக்க மின்வேலி அமைத்த வாலிபர் தானே மின்சாரம் பாய்ந்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • டி.வி. அருகே இருந்த மின்சார பெட்டியை குழந்தை தொட்டபோது மின்சாரம் தாக்கி மயங்கி விழுந்தது.
    • மாதவரம் பால்பண்ணை போலீஸ் இன்ஸ்பெக்டர் சங்கர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.

    சென்னை:

    சென்னையை அடுத்த மாதவரம் பால்பண்ணை, மாத்தூர் எம்.எம்.டி.ஏ. 3-வது பிரதான சாலை 87-வது தெருவைச் சேர்ந்தவர் சாம்சன். இவர், தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார்.

    இவருடைய மனைவி புஷ்பராணி. இவர்களுக்கு 7 மாதத்தில் ஆண் குழந்தை இருந்தது. நேற்று காலை சாம்சன் வேலைக்கு சென்றுவிட்டார். நேற்று மாலை குழந்தை வீட்டின் அறையில் விளையாடிக்கொண்டிருந்தது. புஷ்பராணி, சமையல் அறையில் வேலை செய்து கொண்டிருந்ததாக தெரிகிறது.

    அப்போது டி.வி. அருகே இருந்த மின்சார பெட்டியை குழந்தை தொட்டபோது மின்சாரம் தாக்கி மயங்கி விழுந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த புஷ்பராணி, அக்கம் பக்கத்தினர் உதவியுடன் குழந்தையை மீட்டு மணலியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக சென்னை எழும்பூர் அரசு குழந்தைகள் நல ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

    அங்கு பரிசோதித்த டாக்டர்கள், குழந்தை வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

    குழந்தையின் உடலை பார்த்து பெற்றோர் கதறி அழுத காட்சி பார்க்க பரிதாபமாக இருந்தது. இது குறித்து மாதவரம் பால்பண்ணை போலீஸ் இன்ஸ்பெக்டர் சங்கர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.

    • இவர் இன்று காலை 7 மணிக்கு வீட்டில் இருந்த துணிகளை காய வைப்பதற்காக மெத்தைக்கு எடுத்து சென்றார்.
    • இது தொடர்பாக விக்கிரவாண்டி போலீசார் புகார்பேரில் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

    விழுப்புரம்:

    விக்கிரவாண்டி அருகே கப்பியாம்புலியூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பாபு ராஜேந்திரன் இவருடைய மனைவி சரோஜா (வயது 53). இவர் இன்று காலை 7 மணிக்கு வீட்டில் இருந்த துணிகளை காய வைப்பதற்காக மெத்தைக்கு எடுத்து சென்றார். அப்பொழுது படிக்கட்டில் இருந்த மின்சார எர்த் ஒயர் மீது கால் பட்டு மின்சாரம் தாக்கியதில் மயங்கி கீழே விழுந்தார் உடனடியாக வீட்டில் இருந்தவர்கள் அவரை முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக கொண்டு சேர்த்தனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர் இவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தகவல் தெரிவித்தார். இது தொடர்பாக விக்கிரவாண்டி போலீசார் புகார்பேரில் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

    • பிரேத பரிசோதனை முடிவில் யானை மின்சாரம் பாய்ந்து உயிர் இழந்தது தெரிய வந்தது.
    • ஜீரகள்ளி வனத்துறையினர் விவசாயி மாதேவனை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப்பகுதியில் ஏராளமான காட்டு யானைகள் உள்ளன. தாளவாடி மலைப்பகுதியில் உள்ள ஜீரகள்ளி வனச்சரகம், மல்லன்குழி வனப்பகுதியில் 50-க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் ஒரே பகுதியில் முகாமிட்டுள்ளன.

    இந்நிலையில் கடந்த 9-ந் தேதி மல்லன் குழி கிராமத்தில் விவசாயி மாதேவா என்பவரது விவசாய தோட்டத்திற்கு அருகே அரசு புறம்போக்கு நிலத்தில் பள்ளத்தின் அருகே ஒரு காட்டு யானை இறந்து கிடப்பதை அப்பகுதி விவசாயிகள் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

    இதுகுறித்து உடனடியாக ஜீரகள்ளி வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வனத்துறையினர் யானை உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.இதில் இறந்தது சுமார் 35 முதல் 40 வயது மதிக்கத்தக்க பெண் யானை என்பது தெரிய வந்தது. பெண் யானை உடல் நலக்குறைவால் இறந்ததா? அல்லது வேறு ஏதாவது காரணமா? என்பதை கண்டறிய வனத்துறையினர் கால்நடை மருத்துவர் மூலம் யானையின் உடலை பிரேத பரிசோதனை செய்வதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டனர். பிரேத பரிசோதனை முடிவில் யானை மின்சாரம் பாய்ந்து உயிர் இழந்தது தெரிய வந்தது.

    இதனைத் தொடர்ந்து வனத்துறையினர் விசாரணை நடத்தியதில் அருகே உள்ள விவசாய நிலத்தின் உரிமையாளர் மாதேவா அவரது தோட்டத்தில் வன விலங்குகள் புகாமல் இருக்க அமைத்திருந்த மின் வேலியில் உயர் அழுத்தம் மின்சாரம் பாய்ச்சியதும், காட்டு யானை அந்த மின்வேலியில் சிக்கி உயிரிழந்திருப்பதும் தெரிய வந்தது. இதைத் தொடர்ந்து ஜீரகள்ளி வனத்துறையினர் விவசாயி மாதேவனை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். பின்னர் அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.

    • ‘மாண்டஸ்’ புயல் காரணமாக பலத்த காற்று வீசியதால் அந்த பகுதியில் சென்ற உயர்மின் அழுத்த மின்கம்பிகள் தாழ்வாக சென்றன.
    • பசுமாற்றின் வயிற்றில் இருந்த கன்றுவும் மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழந்தது தெரியவந்தது.

    திருவள்ளூர்:

    திருவள்ளூர் அடுத்த பெருமாள்பட்டு அருகே உள்ள கோவில்குப்பம் ஓசூர் அம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த தேவேந்திரன் (வயது 45), வடிவேலு (35), மஞ்சுளா (34), மோனிஷா (27) ஆகியோருக்கு சொந்தமான 6 பசுமாடுகளும் நேற்று அப்பகுதியில் உள்ள வயலில் மேய்ந்து கொண்டிருந்தது.

    'மாண்டஸ்' புயல் காரணமாக பலத்த காற்று வீசியதால் அந்த பகுதியில் சென்ற உயர்மின் அழுத்த மின்கம்பிகள் தாழ்வாக சென்றன. வயலில் மேயந்து கொண்டிருந்த பசுமாடுகள் மீது அங்கு தாழ்வாக தொங்கி கொண்டிருந்த உயர்மின்அழுத்த மின்கம்பிகள் உரசியது.

    இதில் வயலில் மேய்ந்து கொண்டிருந்த 6 பசுமாடுகளும் ஒன்றன் பின் ஒன்றாக மின்சாரம் தாக்கி அதே இடத்தில் பரிதாபமாக செத்தன. இதில் கருவுற்று இருந்த ஒரு பசுமாடும் அடங்கும். அந்த பசுமாற்றின் வயிற்றில் இருந்த கன்றுவும் மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழந்தது தெரியவந்தது.

    இதனால் அந்த பகுதியில் உடனடியாக மின்சாரம் துண்டிக்கப்பட்டது. அந்த மாடுகளின் உரிமையாளர்கள் சம்பவ இடத்துக்கு வந்து மின்சாரம் தாக்கி இறந்து கிடந்த தங்கள் பசு மாடுகளை பார்த்து கண்ணீர் விட்டு அழுதார்கள். இதுபற்றி செவ்வாப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

    • வடுகந்தாங்கல் பஸ் நிறுத்தம் அருகே மார்க்கபந்து டிஜிட்டல் பேனர் கட்டும் பணியில் ஈடுபட்டார்.
    • அந்த வழியாக செல்லும் மின் கம்பியில் பேனரின் பின்பக்கம் பொருத்தப்பட்டிருந்த இரும்புச்சட்டம் உரசியது.

    வேலூர்:

    வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் அருகே உள்ள வடுகந்தாங்கல் கிராமத்தை சேர்ந்தவர் மார்க்கப்பந்து (வயது 54). இவர் பஞ்சாயத்து தலைவராக இருந்தார். தற்போது தி.மு.க. ஊராட்சி செயலாளராக பதவி வகித்து வந்தார். இவருடைய மனைவி மாலா ஒன்றிய கவுன்சிலராக உள்ளார்.

    நேற்று அந்தப் பகுதியில் மாற்றுக்கட்சியினர் தி.மு.க.வில் இணையும் நிகழ்ச்சி நடந்தது. இதில் அமைச்சர் துரைமுருகன் பங்கேற்பார் என அறிவிக்கப்பட்டது.

    இதற்காக அமைச்சர் துரைமுருகனை வரவேற்று கொடி தோரணங்கள் கட்டினர்.

    நேற்று மாலை வடுகந்தாங்கல் பஸ் நிறுத்தம் அருகே மார்க்கபந்து டிஜிட்டல் பேனர் கட்டும் பணியில் ஈடுபட்டார். அப்போது அந்த வழியாக செல்லும் மின் கம்பியில் பேனரின் பின்பக்கம் பொருத்தப்பட்டிருந்த இரும்புச்சட்டம் உரசியது. அதில் பாய்ந்த மின்சாரம் தாக்கியதில் தூக்கி வீசப்பட்ட மார்கபந்து மயங்கி விழுந்தார். அவருக்கு உதவியாக இருந்த அதே பகுதியை சேர்ந்த கார்த்திகேயன் என்பவருக்கும் காயம் ஏற்பட்டது. அங்கிருந்தவர்கள் மார்க்கபந்துவை மீட்டு வேலூர் தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    அங்கு பரிசோதித்த டாக்டர்கள் மார்க்கபந்து ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    காயமடைந்த கார்த்திகேயன் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து கே.வி‌.குப்பம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மார்க்கபந்துவுக்கு 2 மகன், ஒரு மகள் உள்ளனர்.

    மின்சாரம் தாக்கி தி.மு.க. பிரமுகர் பலியான சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • ரங்கநாதன், தனது மனைவியை காப்பாற்ற முயன்றார். அவர் மீதும் மின்சாரம் பாய்ந்தது.
    • தூக்கி வீசப்பட்டதில் கிருஷ்ணவேணி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

    மத்தூர்:

    கிருஷ்ணகிரி மாவட்டம், சிங்காரபேட்டை அடுத்துள்ள மிட்டப்பள்ளி வன்னியர் நகர் பகுதியை சேர்ந்தவர் ரங்கநாதன். இவரது மனைவி கிருஷ்ணவேணி (வயது52).

    இவர் இன்றுகாலை வீட்டில் துணிகளை துவைத்தார். பின்னர் அந்த துணிகளை காய வைப்பதற்காக மொட்டை மாடிக்கு சென்றார்.

    அங்கு கட்டப்பட்டு இருந்த கம்பியின் மீது துணிகளை காய போட்டார். அப்போது வீட்டின் அருகில் சென்று கொண்டிருந்த மின்சார கம்பி மீது ஈரத்துணிபட்டதாக தெரிகிறது. இதனால் மின்சாரம் எதிர்பாராதவிதமாக கிருஷ்ணவேணி மீது பாய்ந்தது.

    இதனை அறிந்த ரங்கநாதன், தனது மனைவியை காப்பாற்ற முயன்றார். அவர் மீதும் மின்சாரம் பாய்ந்தது. இதில் தூக்கி வீசப்பட்டதில் கிருஷ்ணவேணி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

    இது குறித்து சிங்காரபேட்டை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். மின்சாரம் தாக்கி இறந்த கிருஷ்ணவேணியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஊத்தங்கரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • துணி காய வைத்த கம்பியில் இருந்து கலையரசி மீது மின்சாரம் தாக்கியது. இதில் தூக்கி வீசப்பட்ட கலையரசி அலறி துடித்து பரிதாபமாக இறந்தார்.
    • அவரது அலறல் சத்தம் கேட்டு வீட்டிலிருந்த அவரது கணவர் மற்றும் மகன் கிரீஸ்வரன் அங்கு ஓடிவந்தனர்.

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை அடுத்த சடையனோடை பகுதியை சேர்ந்தவர் உத்தராசு. இவர் திருவண்ணாமலை அரசு கலைக்கல்லூரியில் சிறப்பு பேராசிரியராக வேலை செய்து வருகிறார்.

    இவரது மனைவி கலையரசி (வயது 45). இவரும் திருவண்ணாமலை அரசு கலைக்கல்லூரியில் கணினி பேராசிரியையாக வேலை செய்து வந்தார்.

    இந்த நிலையில் நேற்று கல்லூரி விடுமுறை என்பதால் வீட்டில் இருந்த கலையரசி துணிகளை துவைத்து வீட்டிலிருந்த கம்பியில் காய வைத்தார். நேற்று மாலை காய வைத்த துணிகளை எடுக்க முயன்றார்.

    அப்போது துணி காய வைத்த கம்பியில் இருந்து கலையரசி மீது மின்சாரம் தாக்கியது. இதில் தூக்கி வீசப்பட்ட கலையரசி அலறி துடித்து பரிதாபமாக இறந்தார். அவரது அலறல் சத்தம் கேட்டு வீட்டிலிருந்த அவரது கணவர் மற்றும் மகன் கிரீஸ்வரன் அங்கு ஓடிவந்தனர்.

    அப்போது அவர்களையும் மின்சாரம் தாக்கியது. அவர்களது அலறல் சத்தத்தை கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து உடனடியாக மின்சாரத்தை துண்டித்து படுகாயம் அடைந்த உத்தராசு அவரது மகனை மீட்டு சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இதுகுறித்து தகவல் அறிந்த மங்களம் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து கலையரசி பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. 

    • சாலையில் அறுந்து கிடந்த மின் கம்பியை மிதித்த ஒரு நாய் மற்றும் ஒரு மாடு மின்சாரம் தாக்கி இறந்து கிடந்தது.
    • போலீசார் சம்பவ இடம் சென்று மின்வாரிய ஊழியர்கள் மூலம் மின் இணைப்பை துண்டித்தனர்.

    கொளத்தூர்:

    கொளத்தூர் கங்கா தியேட்டர் அருகே நேற்று நள்ளிரவு ஒரு மணி அளவில் சாலையில் அறுந்து கிடந்த மின் கம்பியை மிதித்த ஒரு நாய் மற்றும் ஒரு மாடு மின்சாரம் தாக்கி இறந்து கிடந்தது.

    இதுகுறித்து கொளத்தூர் போலீசுக்கு தகவல் வந்தது. போலீசார் சம்பவ இடம் சென்று மின்வாரிய ஊழியர்கள் மூலம் மின் இணைப்பை துண்டித்தனர்.

    பொதுமக்கள் நடமாட்டம் இல்லாததால் நல்ல வேளையாக பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

    • மின்வாரிய ஊழியரிடம் தன்னுடைய மின் கட்டணத்தை அபராதத்துடன் செலுத்தி விட்டேன். ஆகையால் மின் இணைப்பு கொடுங்கள் என கேட்டுள்ளார்.
    • அப்பகுதியை சேர்ந்த மின்வாரிய ஊழியர் தற்பொழுது தான் விடுமுறையில் இருப்பதால் உடனடியாக வர முடியாது ஒரு வாரம் வரை ஆகும் என்றார்.

    தொப்பூர்:

    தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி ஒன்றியம் கோணங்கிஹள்ளி ஊராட்சிக்கு உட்பட்ட அண்ணாநகர் பகுதியை சேர்ந்தவர் முனுசாமி (வயது 35). பட்டதாரியான இவர் தன்னுடைய இரண்டு ஏக்கர் விவசாய நிலத்தில் ஆழ்துளை கிணறு அமைத்து விவசாயம் செய்து வந்தார். இவருடைய மனைவி செல்வி. இவர்களுக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர்.

    இந்த நிலையில் முனுசாமி தன்னுடைய விவசாய நிலத்திற்கு விவசாயத்திற்கான பூந்தோட்ட மின் இணைப்பு பெற்று பயன்படுத்தி மாதா மாதம் மின்கட்டணம் செலுத்தி வந்துள்ளார்.

    இந்நிலையில் தொடர் மழையின் காரணமாக கடந்த மூன்று மாத காலமாக மின் மோட்டாரை அதிகளவில் பயன்படுத்தாமல் பூந்தோட்ட மின் இணைப்பிற்கு மின் கட்டணம் செலுத்தாமல் இருந்துள்ளார்.

    அதனால் மின்வாரிய ஊழியர்கள் முனுசாமியின் தோட்டத்தில் இருந்த மின் இணைப்பினை கடந்த 20 நாட்களுக்கு முன் துண்டித்துள்ளனர். பின்னர் தன்னுடைய மின் இணைப்பிற்கான கட்டணம் மற்றும் அபராத தொகை உள்ளிட்ட அனைத்தையும் செலுத்தியுள்ளார்.

    மின்வாரிய ஊழியரிடம் தன்னுடைய மின் கட்டணத்தை அபராதத்துடன் செலுத்தி விட்டேன். ஆகையால் மின் இணைப்பு கொடுங்கள் என கேட்டுள்ளார். அதற்கு அப்பகுதியை சேர்ந்த மின்வாரிய ஊழியர் தற்பொழுது தான் விடுமுறையில் இருப்பதால் உடனடியாக வர முடியாது ஒரு வாரம் வரை ஆகும் என்றார்.

    இதனால் விவசாயி முனுசாமி மின்சார டிரான்ஸ்பார்மர் இயக்கத்தை நிறுத்திவிட்டு தன்னுடைய விவசாய நிலத்தில் உள்ள மின்கம்பத்தில் ஏறி மின் இணைப்பினை கொடுக்க முயற்சித்துள்ளார்.

    அப்போது அந்த மின் இணைப்புக்கு மேலே உள்ள எச்.டி. இணைப்பை கவனிக்காததால் முனுசாமி மீது மின்சாரம் பாய்ந்தது. இதில் மின் கம்பத்திலிருந்து தூக்கி வீசப்பட்டதில் கீழே விழுந்து அவர் காயம் அடைந்துள்ளார்.

    உடனடியாக அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்ததாக தெரிவித்துள்ளனர்.

    இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பானுமதி மின்சார கேட்டை பூட்டுவதற்காக அதன் மீது கை வைத்தார். அப்போது அவரை மின்சாரம் தாக்கியது.
    • போலீசாரும், மின் ஊழியர்களும் அங்கு விரைந்து வந்தனர். மின் ஊழியர்கள் மின்சார இணைப்பை துண்டித்தனர்.

    சென்னை:

    சென்னை கோடம்பாக்கம் ரத்தினம்மாள் தெருவில் உள்ள கிஷன் பவுண்டேஷன் என்ற அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தவர் மூர்த்தி (வயது78) வருமான வரித்துறை அதிகாரியாக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவரது மனைவி பானுமதி (76). இவர் தடய அறிவியல் துறை ஐ.ஜி.யாக பணியாற்றி ஓய்வு பெற்றவர்.

    இந்த குடியிருப்பில் மொத்தம் 6 வீடுகள் உள்ளன. இதில் கணவன்-மனைவி இருவரும் கீழ் தளத்தில் வசித்து வந்தனர். மற்ற வீடுகள் அவர்களின் உறவினர்களுக்கு சொந்தமானவை. அவர்கள் வெளிநாடுகளில் வசிப்பதால் இங்கு வீடுகளை வாடகைக்கு விட்டிருந்தனர்.

    மூர்த்தி-பானுமதி தம்பதிக்கு குழந்தை இல்லை. எனவே இருவரும் அந்த வீட்டில் தனியாக வசித்து வந்தனர். தினமும் இரவில் இந்த தம்பதியே வீட்டின் வெளிப்புற கேட்டை பூட்டுவது வழக்கம்.

    நேற்று இரவு 10.30 மணியளவில் மூர்த்தியும், பானுமதியும் வீட்டில் வெளி கேட்டை பூட்டுவதற்காக சென்றனர். அப்போது மின்சார கேட்டில் உள்ள விளக்குகளுக்கு செல்லும் வயரில் மின்கசிவு ஏற்பட்டு இரும்பு கேட் மீது மின்சாரம் பாய்ந்து கொண்டிருந்தது.

    அதை அறியாத பானுமதி மின்சார கேட்டை பூட்டுவதற்காக அதன் மீது கை வைத்தார். அப்போது அவரை மின்சாரம் தாக்கியது. இதில் அவர் கேட்டிலேயே தொங்கிக் கொண்டிருந்தார்.

    இதனால் பதறி துடித்த மூர்த்தி, மனைவியை காப்பாற்றுவதற்காக அவரை பிடித்து இழுத்தார். அப்போது அவரையும் மின்சாரம் தாக்கியது. இருவரும் அலறி துடித்தபடி கேட்டிலேயே தொங்கிக் கொண்டிருந்தனர்.

    அப்போது பக்கத்து வீட்டு காவலாளி ஓடி வந்து பார்த்தார். அவர் சுதாரித்துக்கொண்டு விலகி நின்றபடி கூச்சல் போட்டு அனைவரையும் அழைத்தார். அப்போது எதிர்ட்டில் வசித்தவர் கீழே இறங்கி ஓடி வந்தார்.

    அவர் முன்எச்சரிக்கையாக இரும்பு கேட்டை லேசாக தொட்டார். அப்போது ஷாக் அடித்ததால் உடனே கையை எடுத்துக்கொண்டார்.

    இதுபற்றி உடனடியாக போலீசாருக்கும், மின்வாரிய ஊழியர்களுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசாரும், மின் ஊழியர்களும் அங்கு விரைந்து வந்தனர். மின் ஊழியர்கள் மின்சார இணைப்பை துண்டித்தனர்.

    பின்னர் போலீசார் கணவன்-மனைவி இருவரையும் பார்த்தபோது அவர்கள் இருவரும் மின்சாரம் தாக்கி பரிதாபமாக பலியாகி இருப்பது தெரியவந்தது.

    இதையடுத்து போலீசார் அவர்களின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக அசோக் நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள்.

    இதுபற்றி அந்த குடியிருப்பில் வசிப்பவர்கள் கூறுகையில், இந்த குடியிருப்பில் நீண்ட நாட்களாகவே மின்சார பிரச்சினை இருந்து வருகிறது. பல நேரங்களில் மின்கசிவு ஏற்பட்டு வருகிறது. இதை சரிசெய்ய சொல்லி பலமுறை புகார் அளித்தோம்.

    ஆனால் அவர்கள் வந்து சரிசெய்யவில்லை. பல நேரங்களில் மின் வாரியத்துக்கு போன் செய்தால் போனையும் எடுப்பதில்லை' என்று குற்றம்சாட்டினர்.

    குடியிருப்பில் அடுக்குமாடி மின்சாரம் தாக்கி கணவன்-மனைவி பலியான சம்பவம் கோடம்பாக்கம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • திருமண நிகழ்ச்சிக்காக அலங்கார மின் விளக்குகள் கட்டப்பட்டிருந்தன.
    • அவனது பெற்றோர் மற்றும் உறவினர்கள் சிறுவனின் உடலை பார்த்து கதறி அழுதனர்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே பிரம்ம குண்டம் பகுதியை சேர்ந்தவர் சஞ்சீவ்காந்தி அவரது மகன் தர்ஷன் (வயது 7). சஞ்சீவ்காந்தியின் வீட்டின் அருகே நடந்த திருமண நிகழ்ச்சிக்காக அலங்கார மின் விளக்குகள் கட்டப்பட்டிருந்தன. அங்கு தர்ஷன் மற்ற சிறுவர்களுடன் விளையாடிக் கொண்டிருந்தபோது எதிர்பாரதவிதமாக மின்சாரம் தாக்கியதில் அவன் பரிதாபமாக இறந்தான். இதை அறிந்து ஓடி வந்த அவனது பெற்றோர் மற்றும் உறவி னர்கள் சிறுவனின் உடலை பார்த்து கதறி அழுதனர். இதுகுறித்து வடபொ ன்பரப்பி போலீசார் வழக்கு ப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ×