என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "ஒருவர் பலி"
- கோவை நோக்கி வந்த கார் மீது நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டது.
- விபத்தால் அந்தப் பகுதியில் சுமார் 20 நிமிடம் போக்குவரத்து பாதித்தது.
பல்லடம்:
கோவை காட்டூர் பகுதியை சேர்ந்தவர்கள் மூர்த்தி ( வயது 51),டேவிட் ராஜ் (33), சுரேஷ் (36) , வெள்ளிமலை (33) ஆகிய 4 பேரும் ஜீப்பில் கோவையில் இருந்து பல்லடம் நோக்கி வந்து கொண்டிருந்தனர். ஜீப்பை வெள்ளிமலை ஓட்டி வந்தார். கோவை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் பல்லடம் அருகே உள்ள பெரும்பாளி என்ற இடம் அருகே சென்ற போது முன்னாள் சென்ற வாகனத்தை முந்த முயன்றதாக கூறப்படுகிறது. அப்போது எதிரே பல்லடத்தில் இருந்து கோவை நோக்கி வந்த கார் மீது நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டது.
இதில் ஜீப்பில் வந்த 4 பேருக்கும், எதிரே வந்த காரில் பயணம் செய்த உடுமலையை சேர்ந்த திராவிடமணி (69) ,அவரது மனைவி மீனாட்சி (56) ,மகள் கிருத்திகா (29,)ஆகியோருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது. விபத்து குறித்து தகவல் அறிந்த பல்லடம் போலீசார் சம்பவ இடம் வந்து விபத்தில் சிக்கியவர்களை மீட்டு பல்லடம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு மூர்த்தி (51) ஏற்கனவே இறந்து விட்டதாக டாக்டர்கள் கூறினர்.
பலத்த காயமடைந்த மற்றவர்களுகுகு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக திருப்பூர் தனியார் மருத்துவமனையிலும் கோவை தனியார் மருத்துவமனையிலும் சேர்த்தனர். இந்த விபத்தால் அந்தப் பகுதியில் சுமார் 20 நிமிடம் போக்குவரத்து பாதித்தது.
- தேனி மாவட்டம் கூடலூரில் நடந்த விபத்தில் ஒருவர் பலியானார். 5பேர் காயமடைந்தனர்
- கூடலூர் விபத்தில் ஒருவர் பலி
கூடலூர்:
கோவையில் இருந்து குமுளிக்கு பெரியகுளம் பணிமனையை சேர்ந்த அரசு பஸ் சென்றது. பஸ்சை ஜெயமங்கலத்தை சேர்ந்த பழனிச்சாமி (வயது50) என்பவர் ஓட்டினார். கண்டக்டராக சசிகுமார் (48) பணியில் இருந்தார். பஸ்சில் 25க்கும் மேற்பட்ட பயணிகள் பயணம் செய்தனர்.
இன்று காலை கூடலூர் வழியாக குமுளிக்கு சென்று கொண்டிருந்தது. பைபாஸ் சாலை அருகே விரிவாக்க பணிகள் நடைபெற்று வருகிறது. அரசு பஸ் எதிர்பாராத விதமாக சாலையோர தடுப்பில் மோதி கவிழ்ந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த பயணிகள் அலறினர். சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஒன்று கூடி மீட்பு பணியில் ஈடுபட்டனர்.
இதில் இடிபாடுகளில் சிக்கி கூடலூரை சேர்ந்த கூலித்தொழிலாளி மாயி என்ற கிருஷ்ணமூர்த்தி (50) சம்பவ இடத்திலேயே பலியானார். மேலும் காயம் அடைந்த பயணிகள் கம்பம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர்.
இதில் கூடலூரை சேர்ந்த வீராசாமி (60), பெருமாள் (66), மாடசாமி (56), திருப்பூரை சேர்ந்த மலர்விழி, காளியம்மாள் ஆகிய 5 பேரும் படுகாயம் அடைந்ததால் தேனி க.விலக்கு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
இந்த சம்பவம் குறித்து கூடலூர் தெற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்