search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அகற்றம்"

    • மேலூரில் சாலையோர வாகனங்களால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
    • ஆக்கிரமிப்பை அகற்றுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டது.

    மேலூர்

    மதுரை மாவட்டம் மேலூர் வழியாக சென்னை, திருவண்ணாமலை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், அறந்தாங்கி, காரைக்குடி, சிவகங்கைக்கு போக்குவரத்து நடைபெறுகிறது. வெளி மாவட்டங்களில் இருந்து மதுரை மற்றும் தென் மாவட்டங்களுக்கு மேலூர் பஸ் நிலையம் வழியாக வாகனங்கள் வந்து செல்கின்றன.

    சராசரியாக நாள் ஒன்றுக்கு 300-க்கும் மேற்பட்ட பஸ்கள் மேலூர் வழியாக செல்கிறது. மேலூர் பெரிய கடைவீதி, செக்கடி பஜார் சந்திப்பு முதல் பஸ் நிலையம் வரையிலும், அதே போல் பஸ் நிலையத்தில் இருந்து யூனியன் அலுவலகம் வரையிலும் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

    பஸ் நிலைய பகுதியில் தான் தாலுகா அலுவலகம், மாவட்ட உரிமையியல் நீதிமன்றம், குற்றப்பிரிவு நடுவர் நீதிமன்றம், சப் கோர்ட், காவல் நிலையம், 2 ஆயரத்துக்கும் மேற்பட்ட மாணவிகள் படிக்கும் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி ஆகியவை உள்ளன. மேலூர் பஸ் நிலையம் காலை முதல் இரவு வரை பொதுமக்கள் அதிகம் கூடும் இடமாக உள்ளது.

    அதேபோல காலை மற்றும் மாலை வேளைகளில் பள்ளி நேரங்களில் அழகர் கோவில் ரோடு-பிள்ளையார் கோவில் சந்திப்பில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

    அதேபோல சிவகங்கை சாலை-திருவாதவூர் சாலை சந்திப்பில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. நிலைமை இவ்வாறு இருக்க, இது போதாது என்று மேலூரில் இருந்து மதுரை செல்லும் பஸ் நிறுத்தம் அருகே இருசக்கர வாகனங்கள் மற்றும் பழ வியாபாரம் செய்யும் தள்ளுவண்டிகள் வரிசையாக சாலையிலேயே நிறுத்தப்படுகின்றன.

    இதுகுறித்து போக்குவரத்து காவல்துறையினரிடம் பொதுமக்கள் புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் பாதசாரிகள் ரோட்டை கடப்பது உயிரை கையில் பிடித்துச் செல்ல வேண்டிய அவல நிலையாக உள்ளது. சாலையோர ஆக்கிரமிப்புகளால் மற்றும் நெரிசலால் அடிக்கடி இருசக்கர வாகன விபத்துக்கள் ஏற்படுகின்றன. மேலூரில் ஏற்படும் நெரிசலுக்கு பயந்து சில அரசு பஸ்கள் நகருக்குள் வராமல் பைபாஸ் வழியாக செல்கிறன. இதனால் பயணிகள் உரிய நேரத்தில் பஸ்களில் செல்ல முடியாத அவல நிலை உருவாகி உள்ளது.

    இனிமேலாவது மேலூர் பஸ் நிலையம்-ஆலங்குளம் ரோடு சந்திப்பு, செக்கடி பஜார், சிவகங்கைச் சாலை, பெரிய கடை வீதி ஆகிய இடங்களில் சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்றுவது மட்டுமின்றி போக்குவரத்து நெரிசலை தவிர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

    • குறுவை சாகுபடிக்காக தண்ணீர் திறக்கப்பட்டுள்ள வாய்க்காலில் சிலர் வலைகளை கட்டி மீன்பிடித்து வருகின்றனர்.
    • தண்ணீர் தடைபட்டு தேங்கி செல்வதால் குறுவை வயல்களுக்கு தண்ணீர் பாய்ச்சுவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம்தாலுக்கா தலைஞாயிறு மல்லியனா ருமற்றும் பெரிய வாய்க்கால் பகுதியில் குறுவைசாகுபடி க்காக தண்ணீர் திறக்கப்பட்டு ள்ளது இந்த வாய்க்காலில் சிலர் வலைகளை கட்டி மீன்பிடித்து வருகின்றனர் இதனால் தண்ணீர் தடை பட்டுதேங்கிசெல்வ தால் குறுவை வயல்க ளுக்கு தண்ணீர்பாய்ச்சு வதில் சிரமம் ஏற்பட்டு ள்ளது இக்குறித்துபொது ப்பணித்துறை அதிகாரிகளிடம் விவசாயிகள் ஆற்றின் குறுக்கே உள்ள மீன்பிடி வலைகளை அகற்ற வேண்டும் என கோரிக்கை வைத்தனர் இதனை ஏற்று பொதுப்பணித்துறை அதிகாரிகள் பாசன உதவியாளர்கள் மற்றும் பொதுபணித்துறை பணியா ளர்கள் மல்லியனாறு மற்றும் பெரியவாய்காலில் தண்ணீர் செல்ல தடையாக ஜந்து இடங்களில் வைக்கபட்டிருந்த மீன்பிடி வலைகளை அகற்றினர் மீன்பிடி வலைகளில் அகற்றியதால் தண்ணீர் தற்போது குறுவை சாகுபடிக்கு வேகமாக செல்கின்றன இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

    • மயானத்தில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டது.
    • தாசில்தார் தலைமையில் நடைபெற்றது

    புதுக்கோட்டை:

    ஆலங்குடி அருகே சேந்தாக்குடி ஊராட்சியில் வெள்ளக்கொள்ளை கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் மயானத்திற்காக இடம் உள்ளது. இந்த இடத்தை தனி நபர் ஒருவர் திடீரென்று ஆக்கிரமிப்பு செய்துள்ளார். இது குறித்து ஒரு பிரிவினர் ஆலங்குடி தாசில்தார் அலுவலகத்திற்கு சென்று மயானத்தில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது குறித்து புகார் கூறினார்.

    இதையடுத்து ஆலங்குடி தாசில்தார் செந்தில்நாயகி தலைமையில், வட்ட துணை தாசில்தார் பழனியப்பன், வெண்ணவல்குடி வருவாய் ஆய்வாளர் குப்புசாமி, சேந்தாக்குடி, பாலையூர், வெண்ணவால்குடி கிராம நிர்வாக அதிகாரிகள் சுப உலகநாதன், கார்த்திகையன், கணேசன் மற்றும் அதிகாரிகள் ஆகியோர் அங்கு விரைந்து வந்தனர். பின்னர் மயானத்திற்கு உட்பட்ட இடத்தை அளந்து அடைக்கப்பட்டிருந்த முள்வேலிகள் உள்ளிட்ட ஆக்கிரமிப்புகளை ஆலங்குடி போலீசார் பாதுகாப்புடன் அகற்றினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    • டி.என்.பாளையம் அடுத்த கே.என்.பாளையம் வனச்சோதனை சாவடி முதல் கடம்பூர் வரை பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணியை நடத்தினர்.
    • பொதுமக்களுக்கு பிளாஸ்டிக் பொருட்களை வனப்பகுதியில் வீச வேண்டாம் என்றும் வனத்துறையினர் அறிவுறுத்தி விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

    டி.என்.பாளையம்:

    டி.என்.பாளையம் வனச்சரக மலைப்பகுதியில் யானை, காட்டெருமை, மான், சிறுத்தை, காட்டுப்பன்றி, உள்ளிட்ட வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன.

    கடம்பூர் மலை குடியிருப்பு பகுதிகளுக்கு செல்லும் இரு சக்கர வாகனங்கள் பஸ் உள்பட பல்வேறு வாகனங்களில் செல்லும் பயணிகள் மற்றும் பொதுமக்கள் தாங்கள் பயன்படுத்தும் தண்ணீர் பாட்டில்கள், பிளாஸ்டிக் பொருள்கள் போன்றவற்றை பயன்படுத்திய பிறகு வனப்பகுதிகளில் வீசி செல்கின்றனர்.

    இதை வனப்பகுதியில் வாழும் வனவிலங்குகள் சாப்பிட்டு செரிக்காமல் உடல் பாதிப்பு ஏற்பட்டு உயிரிழப்பும் நிகழ்கிறது, இதனை கருத்தில் கொண்டு வனவிலங்குகளை பாதுகாக்கும் வகையில், டி.என்.பாளையம் வனச்சரகம் சார்பில் பல்லுயிர் பாதுகாப்பு அறக்கட்டளை மற்றும் தமிழ் நாடு சிறப்பு இலக்குப் படை இணைந்து டி.என்.பாளையம் அடுத்த கே.என்.பாளையம் வனச்சோதனை சாவடி முதல் கடம்பூர் வரை பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணியை நடத்தினர்.

    டி.என்.பாளையம் வனச்சரக அலுவலர் கணேஷ் பாண்டியன், நக்சல் தடுப்பு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் சேகர் மற்றும் போலீசார், வனவர், வேட்டை தடுப்பு காவலர்கள் ஆகியோர் இணைந்து பிளாஸ்டிக் கழிவுகளை சேகரித்து கே.என்.பாளையம் பேரூராட்சி அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.

    மேலும், வனச்சாலையை பயன்படுத்தும் வாகன ஓட்டிகள், பஸ் பயணிகள் மற்றும் பொதுமக்களுக்கு பிளாஸ்டிக் பொருட்களை வனப்பகுதியில் வீச வேண்டாம் என்றும் வனத்துறையினர் அறிவுறுத்தி விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

    • தமிழக அரசு திருச்செங்கோடு நகராட்சி பகுதிகளில் உள்ள 5 நீர் நிலைகளை மேம்படுத்த 5 கோடியே 94லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்திருந்தது.
    • நகராட்சி பகுதியில் ஆக்கிரமிக்கப்பட்டு உள்ள இடங்கள் தொடர்ந்து கண்டறியப்பட்டு ஆக்கிரமிப்பு அகற்றம் செய்யப்படும்.

    திருச்செங்கோடு:

    தமிழக அரசு நீர் நிலைகளை மேம்படுத்த உத்தரவிட்டுள்ளது. அதன் அடிப்படையில் திருச்செங்கோடு அம்மன் குளக் கரைகளை மேம்படுத்தி நடைமேடை அமைக்க ரூ 40 லட்சம் ஒதுக்கீடு செய்யப் பட்டுள்ளது. இதற்கான பணிகள் தொடங்கிய நிலையில் குளத்தின் மேற்கு புற கரையில் 32 கடைகள் சாலையை ஆக்கிரமித்து கட்டப் பட்டிருந்தது.

    அதனை அகற்றிக் கொள்ள நகராட்சி நிர்வாகத்தினர் நோட்டீஸ் கொடுத்திருந்தனர் ஆனாலும் யாரும் கடைகளை அகற்றாததால் நகராட்சி ஆணையாளர் கணேசன் மற்றும் நகராட்சி பொறியாளர் சண்முகம் ஆகியோர் நகராட்சி பணியாளர்களுடன் சென்று பொக்லைன் உதவியுடன் கடைகளை அகற்ற முயன்றனர்.

    அப்போது கடை உரிமையாளர்கள் தாங்களாகவே கழட்டி கொள்வதாகவும் இடிக்க வேண்டாம் என கேட்டுக் கொண்டதன் பேரில் கடைகளை அவர்களாகவே அகற்றிக் கொள்ள அனுமதிக்கப்பட்டது இதையடுத்து உடனடியாக கடைகள் அகற்றும் பணி நடந்தது. இது குறித்து நகராட்சி ஆணையாளர் கணேசன் கூறியதாவது:-

    தமிழக அரசு திருச்செங்கோடு நகராட்சி பகுதிகளில் உள்ள 5 நீர் நிலைகளை மேம்படுத்த 5 கோடியே 94லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்திருந்தது. அதன்படி சூரியம்பாளையம் ராஜா கவுண்டம்பாளையம் ஏரிகள், அம்மன்குளம் பெரிய தெப்பக்குளம் மலை அடி குட்டை ஆகியவற்றில் கரைகள் மேம்படுத்தும் பணி தொடங்கி நடந்து வருகிறது .

    இந்த நீர்நிலைகள் தூர்வாரி மேம்படுத்தி பராமரிக்கப்பட இருப்பதால் அம்மான் குளம் பகுதியில் கடந்த 15 வருடங்களுக்கும் மேலாக ஆக்கிரமிப்பில் இருந்த 32 கடைகளை அகற்றி உள்ளோம். மேலும் இதுபோல் நகராட்சி பகுதியில் ஆக்கிரமிக்கப்பட்டு உள்ள இடங்கள் தொடர்ந்து கண்டறியப்பட்டு ஆக்கிரமிப்பு அகற்றம் செய்யப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.

    • நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அதன்படி நெடுஞ்சாலை துறைக்கு சொந்தமான இடத்தில் குடியிருப்பவர் இடத்தை காலி செய்யுமாறு நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் நோட்டீஸ் வழங்கினார்கள்.
    • நாங்கள் உயர்நீதிமன்ற ஆணையை மதிக்கிறோம். அதே சமயம் எங்களது ஏழ்மை நிலையை கருத்தில் கொண்டு மாநில அரசு பரிசீலிக்க வேண்டும்.

    பரமத்தி வேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா ஜேடர் பாளையம் சரளைமேடு பகுதியில் நெடுஞ்சாலை துறைக்கு சொந்தமான இடத்தில் சுமார் 100-க்கும் மேற்ப ட்டோர் வீடு கட்டி குடியிருந்து வருகின்றனர். இந்நிலையில் நெடுஞ்சாலை துறை துறைக்கு சொந்த மான இடத்தில் குடியிருந்த வர்களை வேறு பகுதிக்கு சென்று குடியிருக்குமாறு அறிவுறுத்தினர்.

    இது சம்பந்தமான வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இறுதி தீர்ப்பில் நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான இடத்தில் குடியிருப்பவர்களை அப்புறப்படுத்த நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அதன்படி நெடுஞ்சாலை துறைக்கு சொந்தமான இடத்தில் குடியிருப்பவர் இடத்தை காலி செய்யுமாறு நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் நோட்டீஸ் வழங்கினார்கள்.

    இந்நிலையில் ஆக்கிரமிப்புகளை அகற்றக் கூடாது என கோரி அங்கு குடியிருப்பவர்கள் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்தவர்கள் அ.மு.மு.க.வை சேர்ந்த சுமார் 100-க்கும் மேற்பட்டோர் ஜேடர் பாளையம் நான்கு ரோடு அருகே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    ஆர்ப்பாட்டத்தில் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் தங்கமணி பேசியதாவது:-

    ஜேடர்பாளையம்- பரமத்தி செல்லும் மாவட்ட நெடுஞ்சாலையில் இருபக்கமும் நெடுஞ்சாலை பயன்பாட்டிற்கு போக மீதமுள்ள நிலங்களில் தான் கடந்த 120 ஆண்டுகளாக ஏழை கூலி மக்கள் குடிசை போட்டு தலைமுறை தலைமுறையாய் வாழ்ந்து வருகின்றனர். இவர்களது வீடுகளை காலி செய்திட தனி ஒரு நபர் சுயநலத்திற்காக வழக்கு தொடர்ந்து 2010-ஆண்டு தீர்ப்பும் வழங்கப்பட்டுள்ளது.

    இது குறித்து அரசும், பொதுமக்களும் அறியாத வகையில் வழக்கு நடந்துள்ளது. தற்போது இதே தனிநபர் மீண்டும் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்து தீர்ப்பு பெற்றுள்ளார் .ஆனால் இது குறித்து இப்பகுதி பொதுமக்களின் கருத்துக்களை அறியவும், மாற்று ஆலோசனைகள் மற்றும் தீர்வுக்கு வழிகான ஒரு வழி காட்டவும் இல்லாமல் திடீரென்று தீர்ப்பு கொடுத்து மக்களின் குடிசைகளை இடித்து தரைமட்டம்ஆக்குவது சரியான தீர்வாகாது.

    மேலும் நாங்கள் உயர்நீதிமன்ற ஆணையை மதிக்கிறோம். அதே சமயம் எங்களது ஏழ்மை நிலையை கருத்தில் கொண்டு மாநில அரசு பரிசீலிக்க வேண்டும். மாநில அரசு அவசர, அவசிய வழக்காக மேல்முறையீடு செய்து குடிசைகளை தரைமட்டமாக முடிவை தள்ளி போட வேண்டும். ஆக்கிரமிப்பு அகற்றுவது உண்மை எனில் முறையாக சரியாக அளவீடு செய்து முழுவதையும் அப்புறப்படுத்த வேண்டும்.

    நெடுஞ்சாலை விரிவா க்கம் நடைபெறும் வரை மக்களை வாழ விட வேண்டும் .காலி செய்யும் நிலை வரும் போது அனைவருக்கும் இலவச வீட்டு மனை வீடு கட்டிக்கொள்ள தேவையான பொருளாதார உதவிகள் செய்ய வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார். ஆர்ப்பாட்டத்தை முன்னிட்டு போலீஸ் டி.எஸ்.பி. ராஜா ரணவீரன் தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் சுரேஷ், வீரம்மாள், சப்-இன்ஸ்பெக்டர்கள் மற்றும் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர்.

    • விருதுநகர் 8-வது வார்டு காங்கிரஸ் கவுன்சிலருக்கு கொலை மிரட்டல் விடுத்து வாலிபரை போலீசார் தேடி வருகின்றனர்.
    • கடந்த சில வாரங்களுக்கு முன்பு இவரது வார்டுக்கு உட்பட்ட அகமது நகரில் ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றப்பட்டன.

    விருதுநகர்

    விருதுநகர் நகராட்சியில் 8-வது வார்டு கவுன்சிலராக காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பால்பாண்டி (வயது 42) என்பவர் உள்ளார். கடந்த சில வாரங்களுக்கு முன்பு இவரது வார்டுக்கு உட்பட்ட அகமது நகரில் ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றப்பட்டன.இதில் மண்எண்ணை செல்வம் என்பவரது கடையும் அடங்கும்.

    தங்களது கடையை அகற்றியதற்கு கவுன்சிலர் பால்பாண்டி தான் காரணம் என மண்எண்ணை செல்வ மும், அவரது மகன் சங்கரும் கருதினர்.இந்த நிலையில் நேற்று பால்பாண்டி அதே பகுதியில் உள்ள ஒரு கடையில் நின்றிருந்தார். அப்போது அங்கு வந்த சங்கர் கடையை அகற்றியது தொடர்பாக கவுன்சிலரிடம் வாக்குவாதத்தில் ஈடுப ட்டார்.

    அப்போது தனக்கு கொலை மிரட்டல் விடுத்த தாக சங்கர் மீது கவுன்சிலர் பால்பாண்டி விருதுநகர் மேற்கு போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து சங்கரை தேடி வருகின்றனர்.

    • ரூ.1.50 கோடியில் புதியதாக கட்ட நடவடிக்கை
    • ஜே.சி.பி. எந்திரம் மூலமாக பொதுமக்களுக்கு இடை யூறு இன்றி பணி மேற்கொள்ளப்பட்டது.

    நாகர்கோவில்:

    நாகர்கோவில் கலெக்டர் அலுவலக சாலையில் போக்குவரத்து நெருக்கடியை குறைக்க சாலை விரிவாக்க பணிகள் மேற்கொள்ளப்பட்டது.

    இதைத் தொடர்ந்து கலெக்டர் அலுவலக சாலை இருவழி சாலை யாக மாற்றப்பட்டு உள்ளது. கலெக்டர் அலுவலகத்தின் முன் பகுதியில் உள்ள பழைய ரவுண்டானாவை அகற்றிவிட்டு புதிய ரவுண்டானா மற்றும் கழிவுநீர் ஓடை அமைக்க ரூ.1.50 கோடி நிதி ஒதுக்கப்பட்டது.

    இதற்கான டெண்டர் பிறப்பிக்கப்பட்டு பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. கலெக்டர் அரவிந்த்தின் துரித நடவடிக்கை காரண மாக முதல் கட்டமாக அந்த பகுதியில் உள்ள கேபிள் வயர்கள் மாற்றப்பட்டு கழிவு நீர் ஓடைகள் கட்டும் பணி நடந்தது. நேற்று முன்தினம் ரவுண்டானாவின் தடுப்புச்சுவர்கள் இடித்து அப்புறப்படுத்தப்பட்டு இருந்தது.

    இந்த நிலையில் நேற்று இரவு அந்த பகுதியில் இருந்த ரவுண்டானா அகற்றும் பணி தொடங்கியது. உதவி கோட்ட பொறியாளர் ஜெகன் செல்வராஜ், உதவி பொறியா ளர்கள் மதன்குமார், வித்யா, ஹெப்சிபாய் ஆகியோரது மேற்பார்வையில் பணி விடிய விடிய நடந்தது. இன்று அதிகாலை முடிவடைந்தது. ஜே.சி.பி. எந்திரம் மூலமாக பொதுமக்களுக்கு இடை யூறு இன்றி இந்த பணி மேற்கொள்ளப்பட்டது.

    ரவுண்டானாவில் இருந்த சுதந்திர பொன்விழா நினைவு ஸ்தூபி மற்றும் உயர் கோபுர மின் விளக்குகள் அப்புறப்படுத்தப்பட்டன. இதை தொடர்ந்து அந்த பகுதியில் பள்ளங்கள் தோண்டப்பட்டு கான்கிரீட்டுகள் அமைக்கப் பட்டு உள்ளது.

    அந்த பகுதி முழுவதும் தடுப்பு கம்பிகளால் மூடப்பட்டு உள்ளது. இன்று வழக்கம் போல் வாகன போக்குவரத்து நடந்து வருகிறது. பழைய ரவுண்டானா அகற்றப்பட்ட தையடுத்து புதிய ரவுண்டான அமைக்கும் பணி விரைவில் தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதற்கான நடவடிக்கைகளை ஆர்.பி.ஆர். நிறுவனத்தினர் செய்து வருகின்றனர். என்ஜினீயர் ஆர்.பி. ராகுல் மேற்பார்வையில் பணி நடக்கிறது.

    ரவுண்டானாவின் மாதிரி தோற்றத்தை மணல் மூடைகளால் அமைக்கும் பணி விரைவில் தொடங்கப்பட உள்ளது. பரீட்சார்த்த முறையில் ரவுண்டானா அமைக்கப்பட்ட பிறகு கட்டுமான பணியை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.

    • சிவகங்கையில் பள்ளிக்கூட ஆக்கிரமிப்பை அகற்றி நகராட்சி தலைவர் ஆய்வு செய்தார்.
    • பொதுமக்கள் புகார் தெரிவித்ததால் ஆக்கிரமிப்புகளை கண்டறிந்து அதனை மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.

    சிவகங்கை

    சிவகங்கை நகரில் குண்டூர்ணிக்கரை, கோட்டை முனியாண்டி கோவில், வாரச்சந்தை, செக்கடி ஊரணி கரை ஆகிய இடங்களில் சிலர் ஆக்கிரமிப்பு செய்திருந்தனர். இதுபற்றி பொதுமக்கள் புகார் தெரிவித்ததால் ஆக்கிரமிப்புகளை கண்டறிந்து அதனை மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.

    மேலும் 40 ஆண்டு பாரம்பரிய மிக்க மன்னர் துரைசிங்கம் மேல் நிலைப்பள்ளி பாதையை ஆக்கிரமிப்பு செய்து கட்டப்பட்ட கட்டடிங்களை அளவிடும் பணி மேற்கொண்டு அதன் பாதையை மீட்கவும் நகராட்சி தலைவர் சி. எம். துரை ஆனந்த் நேரில் சென்று நடவடிக்கை எடுத்து பள்ளிக்கு சொந்தமான இடத்தை சர்வேயர் மூலம் அளந்து அளவீடு செய்தார். அப்போது நகராட்சி பொறியாளர் திலகவதி, துப்புரவு அலுவலர் மூர்த்தி மற்றும் நகர்மன்ற உறுப்பினர்கள் அயூப்கான் ராமதாஸ் கார்த்திகேயன் ஆகியோர் உடன் இருந்தனர்.

    • பொதுமக்கள் நலன் கருதி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஆக்கிரமிப்பு கடைகளை அகற்ற கடந்த 1-6-2022 அன்று நோட்டீஸ் கொடுக்கப்பட்டது.
    • நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் பணியாளர்கள் மூலம் கடைகள் முன்பிருந்த ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.

    வீரபாண்டி :

    திருப்பூர் பழைய பேருந்து நிலையத்தில் இருந்து அருள்புரம் வரை பொதுமக்கள் நலன் கருதியும் போக்குவரத்திற்கு இடையூறு இன்றியும், விபத்துக்கள் நடக்காத வண்ணம் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அவினாசி- திருப்பூர்-பல்லடம்-பொள்ளாச்சி - கொச்சின் சாலையில் உள்ள ஆக்கிரமிப்பு கடைகளை அகற்ற கடந்த 1-6-2022 அன்று நோட்டீஸ் கொடுக்கப்பட்டது. 9-6-2022 தேதிக்குள் மேற்படி ஆக்கிரமிப்புகளை தங்கள் சொந்த செலவில் அகற்றி கொள்ள கால அவகாசம் கொடுக்கப்பட்டது.

    கொடுக்கப்பட்ட காலக்கெடு முடிந்த பின்பு ஆக்கிரமிப்பு அகற்றப்படாமல் உள்ள இடங்களில் இன்று 2-7-2022 முதல் போலீஸ் பாதுகாப்புடன் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும் என தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து இன்று நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் பணியாளர்கள் மூலம் கடைகள் முன்பிருந்த ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். ஆக்கிரமிப்பில் அகற்றப்பட்ட பொருட்களை லாரிகளில் ஏற்றி சென்றனர். ஆங்காங்கே தள்ளுவண்டி கடைகள் அமைக்கப்பட்டு இருந்தது அதனையும் அகற்றினர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    பரமத்திவேலூர் சந்தைக்கு செல்லும் வழியில் சாலையோரத்தில் இடையூறாக வைக்கப்பட்ட மூட்டைகளை அகற்ற போலீஸ் இன்ஸ்பெஸ்கடர் உத்தரவிட்டார்.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் பழைய தேசிய நெடுஞ்சாலையிலிருந்து வாரச் சந்தைக்கு செல்லும் வழியில் பழைய இரும்பு கடை உள்ளது.

    இந்த இரும்பு கடை மிகவும் சிறியதாக உள்ளதால் விற்பனை செய்பவர்களிடம் வாங்கப்படும் பழைய இரும்பு மற்றும் பல்வேறு பொருட்களை மூட்டை மூட்டையாக கட்டி தார் சாலை ஓரத்தில் போக்குவரத்துக்கு இடையூறாக அடுக்கி வைத்துள்ளனர்.

    இது குறித்து பலமுறை புகார் செய்தும், எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

    இந்நிலையில் அந்த வழியாக வந்த பரமத்திவேலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் வீரம்மாள் போக்குவரத்துக்கு இடையூறாக அடுக்கி வைக்கப்பட்டுள்ள மூட்டைகளை பார்த்து கடைக்காரரிடம் உடனடியாக மூட்டைகளை அப்புறப்படுத்தி இடையூறு ஏற்படுவதை தடுக்க வேண்டும் என உத்தரவிட்டார்.

    மேலும் சாலை ஓரங்களில் பொருட்களை போட்டு ஆக்கிரமித்து போக்குவரத்துக்கு இடையூறு செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தார்.

    • 27 பேர் வீட்டுக்கான தொகையை அவர்களாகவேசெலுத்தினர்.
    • 6 பேர் தங்கள் வீடுகளைக் காலி செய்து பொருட்களை எடுத்துச் சென்றனர்.

    திருப்பூர் :

    திருப்பூரில் நொய்யல் ஆற்றின் கரை மற்றும் நீர் வழிப்பாதையில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்ற உரிய துறை மூலம் நோட்டீஸ் வினியோகிக்கப்பட்டது.காயிதே மில்லத் நகரில் கரையோரம் உள்ள 108 வீடுகளுக்கு சில மாதம் முன், காலி செய்ய நோட்டீஸ் வழங்கப்பட்டது.இங்கு வசித்தோருக்கு வீரபாண்டியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வீடு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.

    இதில் 27 பேர் வீட்டுக்கான தொகையை அவர்களாகவேசெலுத்தினர்.மேலும் 60க்கும் மேற்பட்டோருக்கு கடனுதவி ஏற்பாடு செய்யப்பட்டது. இவர்களுக்கு வீடு ஒதுக்கப்பட்ட நிலையில்ஆக்கிரமிப்பு வீடுகளை காலி செய்ய அதிகாரிகள் அறிவுறுத்தினர்.அதன்படி போலீஸ் பாதுகாப்புடன் மாநகராட்சி, பொதுப்பணித்துறை, மின் வாரியம், வருவாய் துறையினர் அங்கு சென்றனர்.

    அடுக்குமாடிக் குடியிருப்பில் வீடு ஒதுக்கீடு பெற்ற சிலர் தங்களுக்கு மின் இணைப்பு கிடைக்கவில்லை.வீடு வெள்ளையடிக்க வேண்டும். சுத்தம் செய்ய வேண்டும். தற்போதுள்ள வீடு காலி செய்ய ஆள் மற்றும் வாகன வசதியில்லை என்று கூறினர்.மின் இணைப்பு பெற உடனடியாக அதே இடத்தில் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கவும், ஒரே நாளில் மின் இணைப்பு வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டது.

    ஒரு சிலர் பொருட்களை கொண்டு செல்ல வசதியில்லை என்றபோது அவர்களுக்கு மாநகராட்சி ஊழியர்கள் உதவினர்.வீடு ஒதுக்கீடு பெற்ற 6 பேர் தங்கள் வீடுகளைக் காலி செய்து பொருட்களை எடுத்துச் சென்றனர். அந்த வீடுகள் அடையாளம் காணப்பட்டது.பிற வீடுகளையும் உடனடியாக காலி செய்ய அதிகாரிகள் உரிய அறிவுரை வழங்கினர். அனைத்து வீடுகளும் பொருட்கள் அகற்றி காலி செய்து கொள்ள அதிகாரிகள் சில நாள் அவகாசம் வழங்கினர். அதன் பின் இடித்து அகற்றப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது.

    ×