என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "மக்கள் தொடர்பு முகாம்"
- மக்கள் தொடர்பு முகாம் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் நடைபெற்றது.
- துறை சார்பாக செய்யப்பட்டு வரும் நலத்திட்டங்கள் குறித்து பட விளக்கங்களுடன் காட்சிப்படுத்தி இருந்தனர்.
திருப்பூர் :
திருப்பூர் 15 வேலம்பாளையம் பகுதியில் மக்கள் தொடர்பு முகாம் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் நடைபெற்றது. இதில் வருவாய் நிர்வாகம் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை, தோட்டக்கலை துறை, தொழிலாளர் நலத்துறை, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை, மகளிர் திட்டம் உள்ளிட்ட பல்வேறு துறைகளின் சார்பில் 172 பயனாளிகளுக்கு 52 லட்சத்து 77 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. திருப்பூர் மாவட்ட கலெக்டர் வினீத் தலைமையில் நடைபெற்ற முகாமில் திருப்பூர் மாநகராட்சி மேயர் தினேஷ்குமார், தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் க.செல்வராஜ். மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் அந்தந்த துறைகளின் சார்பில் அரங்குகள் அமைத்து தங்கள் துறை சார்பாக செய்யப்பட்டு வரும் நலத்திட்டங்கள் குறித்து பட விளக்கங்களுடன் காட்சிப்படுத்தி இருந்தனர்.
- முகாமிற்கு மாவட்ட வழங்கல் அலுவலர் மகாராஜ் தலைமை வகித்தார்.
- பொதுமக்களிடமிருந்து 27 மனுக்கள் பெறப்பட்டது.
பல்லடம் :
பல்லடம் அருகே பருவாய் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் மக்கள் தொடர்பு முகாம் நடைபெற்றது. முகாமிற்கு மாவட்ட வழங்கல் அலுவலர் மகாராஜ் தலைமை வகித்தார்.
பல்லடம் தாசில்தார் நந்தகோபால், பருவாய் ஊராட்சி மன்ற தலைவர் ரவிச்சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தலைமையிடத்து துணை தாசில்தார் சுப்பிரமணியம் வரவேற்றார். இதில் பொதுமக்களிடமிருந்து 27 மனுக்கள் பெறப்பட்டது. அதில் தகுதி வாய்ந்த 21 மனுக்கள் ஏற்கப்பட்டதாகவும் 6 மனுக்கள் பரிசீலனையில் உள்ளதாகவும் தாசில்தார் நந்தகோபால் தெரிவித்தார்.
- மக்கள் தொடர்பு முகாம் நாளை நடக்கிறது.
- மேற்கண்ட தகவலை சிவகங்கை மாவட்ட கலெக்டர் மதுசூதன்ரெட்டி தெரிவித்துள்ளார்.
சிவகங்கை
சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் வட்டம், இளையாத்தங்குடி உள்வட்டம், திருக்கோலக்குடி குரூப், பழைய திருக்கோலக்குடி கிராமத்தில் நாளை (14-ந் தேதி) காலை 10 மணியளவில் மக்கள் தொடர்பு முகாம் நடைபெற உள்ளது.
அரசுத்துறை அலுவலர்களை ஒருங்கிணைத்து அரசின் திட்டங்களை துறை சார்ந்த முதன்மை அலுவலர்களைக் கொண்டு, பொதுமக்களுக்கு திட்டங்கள் குறித்து எடுத்துரைத்து, தகுதிவாய்ந்த பயனாளிகளை பயன்பெறச் செய்வதே இந்த மக்கள் தொடர்பு முகாமின் நோக்கமாகும்.
மேற்கண்ட கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் நடைபெற உள்ள மக்கள் தொடர்பு முகாமில் கலந்து கொண்டு, அரசின் திட்டங்களை பெறுவதற்கான வழிமுறைகளை அறிந்து கொண்டு பயன்பெறலாம்.
மேற்கண்ட தகவலை சிவகங்கை மாவட்ட கலெக்டர் மதுசூதன்ரெட்டி தெரிவித்துள்ளார்.
- தே.சிந்தலச்சேரியில் மக்கள் தொடர்பு முகாம் நாளை நடைபெறுகிறது
- நாளை (14-ந் தேதி) கலெக்டர் முரளிதரன் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் நடைபெற உள்ளது.
தேனி:
தேனி மாவட்டம், உத்தமபாளையம் வட்டம், தேவாரம் உள்வட்டம், தே.மீனாட்சிபுரம் வருவாய் கிராமம் உட்கடை தே.சிந்தலச்சேரியில் நாளை (14-ந் தேதி) கலெக்டர் முரளிதரன் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் நடைபெற உள்ளது.
உத்தமபாளையம் வட்டத்தைச் ேசர்ந்த பொதுமக்கள் அனைவரும் இம்முகாமில் கலந்து கொண்டு, தங்களது கோரிக்கை தொடர்பான மனுக்களை (பட்டா மாறுதல், முதியோர் உதவித்தொகை கோருதல், புதிய குடும்ப அட்டை கோருதல், ஆதிதிராவிடர் நலத்துறை, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை,
விபத்து நிவாரணம், விவசாயத்துறை, போக்குவரத்துத்துறை மற்றும் இதர துறைகள்) மாவட்ட கலெக்டரிடம் நேரில் அளித்து பயனடையுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
- நிகழ்வில் சட்டமன்ற உறுப்பினர் க.சொ.க.கண்ணன் வாழ்த்துரை வழங்கி 126 பயனாளிகளுக்கு ரூ.25லட்சத்து84 ஆயிரத்து 847 மதிப்புள்ள நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.
- முகாமில் 126 மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டன. 24 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.
அரியலூர் :
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் ஒன்றியம், இளையபெருமாள்நல்லூர் கிராமத்தில், முதலமைச்சர் உத்தரவிற்கிணங்க வருவாய் துறை சார்பில் மக்கள் தொடர்பு முகாம் நடைபெற்றது.
முகாமிற்கு மாவட்ட வருவாய் அலுவலர் கலைவாணி தலைமை வகித்தார். உடையார்பாளையம் வருவாய் கோட்டாட்சியர் பரிமளம் வரவேற்றார். நிகழ்வில் சட்டமன்ற உறுப்பினர் க.சொ.க.கண்ணன் வாழ்த்துரை வழங்கி 126 பயனாளிகளுக்கு ரூ.25லட்சத்து84 ஆயிரத்து 847 மதிப்புள்ள நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.
இந்நிகழ்வில் ஒன்றிய செயலாளர், அட்மா வேளாண் குழு தலைவர் மணிமாறன், ஊராட்சி மன்ற தலைவர் வெங்கடேசன், ஒன்றிய குழு உறுப்பினர் சுப்பிரமணியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அரசின் வேளாண்மை துறை, வருவாய்த்துறை, சுகாதாரத்துறை, தோட்டக்கலை துறை, சமூக பாதுகாப்பு திட்டம் உள்ளிட்ட அனைத்து துறை அதிகாரிகளும், கலந்துகொண்டு திட்ட விளக்க உரை நிகழ்த்தினர்.
முகாமில் முதியோர் ஓய்வூதியம், விதவை உதவித் தொகை, இயற்கை மரணம் உதவித்தொகை, பட்டா மாற்றம், தோட்டக்கலைத் துறை வேளாண்மை துறை, வேளாண்மை பொறியியல் துறை ஊரக வளர்ச்சி துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் 177 மனுக்கள் பெறப்பட்டன. இவற்றில் 126 மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டன. 24 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. 27 மனுக்கள் விசாரணையில் உள்ளன. சுய உதவி குழுக்களால் அமைக்கப்பட்டிருந்த கண்காட்சியில் இயற்கை வளம் மிகுந்த காய்கறி, பழங்கள், கீரை வகைகள், சத்தான உணவு வகைகள் உள்ளிட்டவை வைக்கப்பட்டிருந்தன. இவற்றை மாவட்ட வருவாய் அலுவலர், எம்எல்ஏ ஆகியோர் பார்வையிட்டனர்.
இம்முகாமில் வட்ட வழங்கல் அலுவலர் ஜானகிராமன், வட்டார வளர்ச்சி அலுவலர் பிரபாகரன், வட்டார மருத்துவ அலுவலர் மேகநாதன், வேளாண்மை துறை அதிகாரிகள் தோட்டக்கலை துறை அதிகாரிகள் மற்றும் விவசாயிகளும் பொதுமக்களும் கலந்துகொண்டனர். முடிவில் வட்டாட்சியர் ஸ்ரீதர் நன்றி கூறினார்.
- கிழவயல் ஊராட்சியில் மக்கள் தொடர்பு முகாம் நடந்தது.
- தேவகோட்டை கோட்டாட்சியர் பிரபாகரன் தலைமை தாங்கினார்.
சிவகங்கை
சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி தாலுகா எஸ்.புதூர் ஒன்றியம் கிழவயல் ஊராட்சியில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை சார்பில் மக்கள் தொடர்பு முகாம் நடந்தது. தேவகோட்டை கோட்டாட்சியர் பிரபாகரன் தலைமை தாங்கினார். ஊராட்சி மன்ற தலைவர் அருள் பிரசாந்த் முன்னிலை வகித்தார்.
இம்முகாமில் கணினி திருத்தம், முதியோர் ஊக்கத்தொகை வழங்குதல், பட்டா வழங்குதல் போன்ற பலதரப்பட்ட மனுக்கள் கோரிக்கைகளாக கிராம மக்களிடம் பெறப்பட்டது. அதில் உடனடியாக 2 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டது. மீதமுள்ள மனுக்களுக்கு வருவாய் துறையினரால் சம்பந்தப்பட்ட நபர்களிடத்தில் நேரடியாக விசாரணை மேற்கொள்ளப்பட்டு அதற்கும் விரைந்து தீர்வு காணப்படும் என்று உறுதி அளிக்கப்பட்டது. நடைபெற்ற இம்மாமில் ஒன்றிய கவுன்சிலர் சிங்காரம், வட்டாட்சியர் கயல்விழி மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
- 3 லட்சத்து 41 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் 54 பயனாளிகளுக்கு வழங்கப்பட்டது.
- சவுடேஸ்வரி அம்மன் திருமண மண்டபத்தில், மக்கள் தொடர்பு முகாம் நடைபெற்றது.
பல்லடம் :
பல்லடம் அருகே உள்ள கணபதிபாளையம் சவுடேஸ்வரி அம்மன் திருமண மண்டபத்தில், மக்கள் தொடர்பு முகாம் நடைபெற்றது. திருப்பூர் மாவட்ட வழங்கல் அலுவலர் முருகன் தலைமை வகித்தார். தாசில்தார் நந்தகோபால், கணபதி பாளையம் ஊராட்சி மன்றத் தலைவர் நாகேஸ்வரி சோமசுந்தரம், ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் 3 லட்சத்து 41 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் 54 பயனாளிகளுக்கு வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில், பல்லடம் கிழக்கு ஒன்றிய திமுக.
பொறுப்பாளர் சோமசுந்தரம், சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் தமிழ்ச்செல்வன், வேளாண்மை உதவி இயக்குனர் கிருஷ்ணமூர்த்தி. தோட்டக்கலை துறை உதவி இயக்குனர் மோகனா, தீயணைப்பு அலுவலர் சுரேஷ் குமார், மற்றும் அரசு அலுவலர்கள், பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
- மேல்மலையனூர் அருகே மக்கள் தொடர்பு திட்ட முகாமில் 203 பயனாளிகளுக்கு அமைச்சர் செஞ்சி மஸ்தான் நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.
- ஒன்றிய பெருந்தலைவர் கண்மணி நெடுஞ்செழியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.வருவாய் வட்டாட்சியர் கோவர்தன் அனைவரையும் வரேவேற்றார்.
விழுப்புரம்:
மேல்மலையனூர் தாலுக்கா வளத்தி ஊராட்சி யில் மக்கள் தொடர்பு திட்ட முகாம் நடைபெற்றது.மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலு வலர் மகாராணி தலைமை தாங்கினார்.மாவட்ட வருவாய் அலுவலர் பரமேஸ்வரி, ஒன்றிய பெருந்தலைவர் கண்மணி நெடுஞ்செழியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.வருவாய் வட்டாட்சியர் கோவர்தன் அனைவரையும் வரேவேற்றார். அமைச்சர் செஞ்சி மஸ்தான் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு 203 பயனாளிகளுக்கு 7 லட்சத்து 95 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கியதோடு பொது மக்களிடம் மனுக்களை பெற்றார்.
நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர்கள் நெடுஞ்செழியன், சுப்பிரமணியன், சமூக பாதுகாப்பு திட்டதாசில்தார் செல்வகுமார், மண்டல துணை வட்டாட்சியர் நாராயணமூர்த்தி, துணைசேர்மன் விஜயலட்சுமி முருகன், மாவட்ட கவுண்சிலர் செல்வி இராமசரவணன்,ஒன்றிய கவுன்சிலர் கலா நாராயணமூர்த்தி, ஷாகின் அர்ஷத், பெருமாள், சக்தி, யசோதைரை சந்திரகுப்தன், ஜெயந்திஜெயக்குமார், ஊராட்சி மன்ற தலைவர் விஜயலட்சுமி ஜெய்சங்கர், துணைத்தலைவர் கோவிந்தன்,வருவாய்ஆய்வாளர்கள்சுதாகர், ஏழுமலை, தஸ்தகீர்,நிர்வாகிகள் சரவணன், எஸ்.பி.சம்பத், குமார் மணிகண்டன், கந்தவேல், தேவனூர் ஆறுமுகம், பெருவளூர் பாபு, உதயகுமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
- முகாமில் முதியோர் உதவித்தொகை காது மற்றும் வாய் பேசஇயலா–தவர்களுக்கு செல்போன் வழங்கபட்டது.
- வருவாய்த்துறை மூலம் பட்டா மாற்றம் என சுமார் ரூ. 1 கோடியே 50 லட்சம் மதிப்பீட்டில் பயனாளிகளுக்கு மாவட்ட வருவாய் அலுவலர் அங்கை–யற்கண்ணி தலைமையில் நலத்திட்ட உதவிகள் வழ–ங்கப்பட்டது
பெரம்பலூர்:
பெரம்பலூர் மாவட்டம் குன்னம் வட்டம் வயலப்பாடி ஊராட்சிக்கு உட்பட்ட வ.கீரனூர் கிராமம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி வளாகத்தில் மக்கள் தொடர்பு திட்ட முகாம் நடைபெற்றது.
இதில் முதியோர் உதவித்தொகை காது மற்றும் வாய் பேசஇயலாதவர்களுக்கு செல்போன் வழங்கபட்டது.
வேளாண்மைத் துறை மூலம் மருந்து தெளிப்பான் இயந்திரம் வருவாய்த்துறை மூலம் பட்டா மாற்றம் என சுமார் ரூ. 1 கோடியே 50 லட்சம் மதிப்பீட்டில் பயனாளிகளுக்கு மாவட்ட வருவாய் அலுவலர் அங்கையற்கண்ணி தலைமையில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது
மேலும் இந்த முகாமில் குன்னம் வட்டாட்சியர் அனிதா, சமூக நல தாசில்தார் சின்னத்துரை, வேப்பூர் ஒன்றிய துணை தலைவர் செல்வராணி வரதராஜன்,
வடக்கலூர் வருவாய் ஆய்வாளர் ரமேஷ் கண்ணன், மற்றும் கிராம நிர்வாக அலுவலர் கார்த்திக், மனோகரன், தீரன் சின்னமலை, சேஷாத்திரி, ராஜேஷ் கண்ணா, ராஜேஷ்வரி வளர்மன்னன், செந்தில்குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்