search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "உழவர் சந்தை"

    • 1832 விவசாயிகள் மொத்தம் 5 லட்சத்து 99 ஆயிரத்து 818 கிலோ காய்கறிகளை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர்.
    • காய்கறிகளை பொதுமக்கள் 68ஆயிரத்து 336 பேர் வாங்கி பயனடைந்தனர்.

    உடுமலை :

    தமிழ்நாடு அரசு வேளாண் விற்பனை துறையின் சார்பில் உடுமலை கபூர் கான் வீதியில் செயல்பட்டு வரும் உழவர் சந்தைக்கு, உடுமலை தாலுகாக்களில் உள்ள விவசாயிகள் தங்களது விலை நிலங்களில் விளையும் காய்கறிகளை அதிகாலை காலையிலேயே சந்தைக்கு கொண்டு வந்துகொண்டு வந்து விற்பனை செய்து வருகின்றனர். உடுமலை உழவர் சந்தையில் கடந்த மாதம் மட்டும் 1832 விவசாயிகள் மொத்தம் 5 லட்சத்து 99 ஆயிரத்து 818 கிலோ காய்கறிகளை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர். இந்த காய்கறிகள் மொத்தம் ரூ. 1 கோடியே 63 லட்சத்து 46 ஆயிரத்து 620 விற்பனையானது .

    இந்த காய்கறிகளை பொதுமக்கள் 68ஆயிரத்து 336 பேர் வாங்கி பயனடைந்தனர். கடந்த மே மாதத்துடன் ஒப்பிடுகையில் ஜூன் மாதம் உழவர் சந்தைக்கு காய்கறிகளை விற்பனைக்கு கொண்டு வந்த விவசாயிகள் எண்ணிக்கை 31 பேர் குறைவாக இருந்த நிலையில் காய்கறிகள் வரத்து 365 கிலோ அதிகமாக இருந்தது. அதனால் காய்கறிகளின் மொத்த விற்பனை தொகை ரூ. 4 லட்சத்து 815 கூடுதலாக இருந்தது. காய்கறிகள் வாங்குவோர் எண்ணிக்கையும் கடந்த மே மாதத்தை விட ஜூன் மாதம் 1600 பேர் கூடுதலாக வந்திருந்தனர்.

    • தற்போது உழவர் சந்தையில் மொத்தம் 71 கடைகள் உள்ளது. இவற்றில் 58 கடைகள் செயல்பட்டு வருகின்றன. மீதம் உள்ள 13 கடைகள் அமைக்க விவசாயிகளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி இந்த மாத இறுதிக்குள் அனைத்து கடைகளும் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட உள்ளது.
    • தோட்டக்கலை துறையின் கீழ் உள்ள குன்னூர் உணவு பதப்படுத்தும் நிலையத்தில் தயாரித்த ஜாம், ஜெல்லி, ஸ்குவாஸ் மற்றும் ஊறுகாய் ஆகியவை குறைந்த விலையில் விற்பனை செய்யப்பட உள்ளது.

    தஞ்சாவூர்:

    தஞ்சை நாஞ்சிக்கோட்டை சாலையில் உள்ள உழவர் சந்தையில் பராமரிப்பு பணிகள் முடிந்து மீண்டும் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

    இதனை தொடர்ந்து தோட்டக்கலை துறை தஞ்சாவூர் வட்டார உதவி இயக்குநர் முத்தமிழ்ச்செல்வி உழவர் சந்தையில் சார்பில் ஆய்வு செய்து டான்ஹோடா விற்பனை நிலையம் அமைய உள்ள இடத்தையும் பார்வையிட்டார்.

    அப்போது அவர் கூறியதாவது:-தஞ்சை உழவர் சந்தையில் விரைவில் தோட்டக்கலை சார்பில் டான்ஹோடா விற்பனை நிலையம் அமைய உள்ளது.

    இந்த விற்பனை நிலையத்தில் மாடித்தோட்டம் அமைப்பதற்கான பாலித்தீன் பைகள், மண்புழு உரங்கள், உயிர் உரங்கள், காய்கறி விதை பொட்டலங்கள், அழகு செடிகள் வளர்ப்பதற்கான தொங்கும் கூடைகள், செடிகளை வெட்டுவதற்கான கத்தரிக்கோல் மற்றும் தோட்டக்கலை துறையின் கீழ் உள்ள குன்னூர் உணவு பதப்படுத்தும் நிலையத்தில் தயாரித்த ஜாம், ஜெல்லி, ஸ்குவாஸ் மற்றும் ஊறுகாய் ஆகியவை குறைந்த விலையில் விற்பனை செய்யப்பட உள்ளது. இதனை பொதுமக்கள் அனைவரும் பயன்பெற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

    உழவர் சந்தையில் வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அறிவுறுத்தலின்படி ஒவ்வொரு வாரம் சனிக்கிழமையும் உழவர் சந்தையை சுற்றியுள்ள காய்கறி சாகுபடி செய்யும் கிராமங்களில் தோட்டக்கலை மற்றும் வேளாண் விற்பனை துறை அலுவலர்கள் இணைந்து விவசாயிகளிடையே கலந்துரையாடி உழவர் சந்தை குறித்தும் தோட்டக்கலை துறை திட்டங்கள் குறித்தும் விளக்கி கூறி, தோட்டக்கலை விளைபொருட்களை சந்தைபடுத்துவதற்கு உழவர் சந்தையை பயன்படுத்திக்கொள்ள அறிவுறுத்தப்பட்டது.

    தற்போது உழவர் சந்தையில் மொத்தம் 71 கடைகள் உள்ளது. இவற்றில் 58 கடைகள் செயல்பட்டு வருகின்றன. மீதம் உள்ள 13 கடைகள் அமைக்க விவசாயிகளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி இந்த மாத இறுதிக்குள் அனைத்து கடைகளும் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதையடுத்து தோட்டக்கலை துணை இயக்குனர் கலைச்செல்வன் அறிவுறுத்தலின் பேரில் வேங்கராயன் குடிகாடு கிராமத்தில் தோட்டக்கலை உதவி அலுவலர் குடியரசன், வேளாண் விற்பனை துறையின் வேளாண்மை உதவி அலுவலர்கள் அமரேசன், மோனிஷா ஆகியோர் விவசாயிகளிடையே விழிப்புணர்வு உண்டாக்கும் வகையில் காய்கறிகள், பழங்கள், கீரைகள் ஆகியவற்றை சந்தைபடுத்தவும் உழவர் சந்தையில் கடைகள் அமைக்கவும் அடையாள அட்டை வழங்கினர்.

    • உழவர் சந்தைகளுக்கு காய்கறி வரத்து அதிகரிக்க ஆலோசனை
    • நுகர்வோர்களுக்கு குறைந்த விலையில் நிறைந்த நீடித்த நஞ்சில்லா காய்கறிகள் கிடைக்க வழி

    கன்னியாகுமரி:

    உழவர் சந்தைகளில் காய்கறி வரத்து அதிகரிப்பதற்காகவும் நுகர்வோர்களின் எண்ணிக்கையை உயர்த்தும் பொருட்டும் விவசாயிகளின் இல்லங்களில் மகிழ்ச்சி அதிகரிப்பதற்காகவும் தோட்டக்கலை மலைப் பயிர்கள் துறை, சென்னை இயக்குநரகத்தின் கூடுதல் இயக்குநர் கண்ணன், கன்னியாகுமரியில் தோட்டக்கலை- மலைப்பயிர்கள் துறை அதிகாரிகள், வேளாண் விற்பனை மற்றும் வணிகத்துறை, மாவட்ட மற்றும் வட்டார அதிகாரிகளுடன் கள ஆய்வு மேற்கொண்டார்.

    வட்டார வாரியாக விவசாயிகள் தேர்வு செய்யப்பட்டு காய்கறி சாகுபடி செய்து காய்கறி வரத்தினை அதிகரிக்கவும், அரசு தோட்டக்கலைப்பண்ணை விளை பொருட்களுக்கான தனி அங்காடி ஒதுக்கப்பட்டு காய்கறி விதைகள், கண்கவர் அலங்கார செடிகள், பூந்தொட்டிகள், உயிர் உரங்கள், தேனீ மகத்துவ மையத்திலிருந்து தயாரிக்கப்படும் தேன் மற்றும் இதர பண்ணை விளைபொருட்களையும் விற்பனை செய்யப்படும் விற்பனை மையத்தினையும் அவர் பார்வையிட்டார்.

    தேசிய தோட்டக்கலை இயக்கம் மற்றும் மாநில அபிவிருத்தி திட்டத்தின் மூலம் உழவர் சந்தையினை சுற்றியுள்ள வட்டாரங்களில் காய்கறி பரப்பினை அதிகரிப்பதன் மூலம் உழவர் சந்தைகளுக்கு காய்கறி வரத்து அதிகரிக்கவும் ஆலோசனை கூறினார்.

    தோட்டக்கலைத் துறை மற்றும் வேளாண் விற்பனை மற்றும் வணிகத்துறை அதிகாரிகள் ஒன்றிணைந்து கள ஆய்வு நடத்துவதன் மூலம் உழவர் சந்தைகளுக்கு வரும் விவசாயிகளின் எண்ணிக்கை கணிசமாக உயர்வதோடு மட்டுமல்லாமல் நுகர்வோர்களுக்கு குறைந்த விலையில் நிறைந்த நீடித்த நஞ்சில்லா காய்கறிகள் கிடைக்க வழி பிறக்கும் என அறிவுரை வழங்கப்பட்டது.

    வடசேரி மற்றும் மயிலாடி உழவர் சந்தைகளில் நடைபெற்ற இந்த ஆய்வு கூட்டத்தில் நோட்டக்கலை துணை இயக்குநர் ஷீலாஜான் மற்றும் தோட்டக்கலை உதவி இயக்குநர்கள், வேளாண் அலுவலர்கள், உதவி தோட்டக்கலை அலுவலர்கள், உதவி வேளாண் அலுவலர்கள் உட்பட அனைத்து அதிகாரிகளும் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • மார்க்கெட்டுக்கு அருகில் உழவர் சந்தை அமைக்கப்பட்டால், அங்குள்ள வியாபாரிகளின் தொழில் பாதிக்கப்படும்.
    • பேரூராட்சிக்கு குப்பை வரி, வாடகை கட்டணம் என சுமார் ரூ.1 கோடி வருவாய் கிடைத்து வருகிறது. உழவர் சந்தை அமைத்தால் வருவாய் இழப்பு ஏற்படும்.

    ஊட்டி:

    கோத்தகிரி பேரூராட்சி அலுவலக கூட்ட அரங்கில், மாதாந்திர மன்ற கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு பேரூராட்சி தலைவர் ஜெயகுமாரி தலைமை தாங்கினார். துணைத்தலைவர் உமாநாத், செயல் அலுவலர்(பொறுப்பு) சதாசிவம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    கூட்டத்தில், மார்க்கெட் அருகே பேரூராட்சிக்கு சொந்தமான சுமார் 1 ஏக்கர் நிலத்தை புதிய உழவர் சந்தை அமைப்பதற்காக வேளாண் வணிக துறை கேட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. அதை வழங்க எதிர்ப்பு தெரிவித்து மன்ற உறுப்பினர்கள் கூறும்போது, மார்க்கெட்டுக்கு அருகில் உழவர் சந்தை அமைக்கப்பட்டால், அங்குள்ள வியாபாரிகளின் தொழில் பாதிக்கப்படும்.

    மார்க்கெட்டில் உள்ள கடைகளில் இருந்து பேரூராட்சிக்கு குப்பை வரி, வாடகை கட்டணம் என சுமார் ரூ.1 கோடி வருவாய் கிடைத்து வருகிறது. உழவர் சந்தை அமைத்தால் வருவாய் இழப்பு ஏற்படும். எனவே முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றனர்.

    பின்னர் 15-வது வார்டு உறுப்பினர் கணபதி பேசும்போது, போக்குவரத்து போலீஸ் நிலையத்தில் இருந்து அரசு கருவூலம் செல்லும் சாலையோரத்தில் பேரூராட்சியின் முறையான அனுமதியை பெறாமல் பொது நடைபாதைக்கு நடுவே தனியார் மூலம் நுழைவு வாயில் அமைக்கப்பட்டு உள்ளது. அதை அகற்ற வேண்டும் என்றார்.

    இதற்கு பெரும்பாலான உறுப்பினர்கள் ஆதரவு தெரிவித்ததால் நுழைவு வாயிலை அகற்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. வரவு, செலவு கணக்கு மேலும் கோத்தகிரி நகருக்கு குடிநீரை வினியோகம் செய்யும் ஈளாடா தடுப்பணையில் இருந்து கோத்தகிரி சக்தி மலைப்பகுதிக்கு குடிநீர் குழாய்கள் அமைப்பது, அளக்கரை கூட்டு குடிநீர் திட்டத்தின் கீழ் இயங்கும் மின்மோட்டார்கள் மின்னழுத்த குறைபாடு காரணமாக அடிக்கடி பழுதாவதை தடுக்கும் வகையில் புதிய மின் மாற்றி அமைப்பது, கோத்தகிரி கார்சிலி பகுதியில் இருந்து செல்வபுரம் செல்லும் சாலையை ரூ.1 கோடி செலவில் புதுப்பிப்பது, பொதுப்பணித்துறையால் அரசு குடியிருப்பு கட்ட சக்திமலையில் 16 சென்ட் நிலம் ஒதுக்கீடு செய்வது என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. தொடர்ந்து கடந்த மாத வரவு, செலவு கணக்குகள் தாக்கல் செய்யபட்டது. முடிவில் பேரூராட்சி அலுவலர் ராஜேஷ் நன்றி கூறினார்.

    • தினசரி சந்தை காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை மட்டுமே வியாபாரம் செய்ய வேண்டும்
    • உழவர் சந்தையில் விவசாயிகளுக்கு தேவையான அத்தியாவசிய வசதிகள் எதுவும் இல்லை என புகார்.

    திருப்பூர் :

    திருப்பூர்-பல்லடம் சாலை தென்னம்பாளையம் பகுதியில் உழவர் சந்தை செயல்பட்டு வருகிறது . இங்கு திருப்பூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து விவசாயிகள் நூற்றுக்கணக்கானோர் வந்து தங்கள் தோட்டங்களில் விளைவித்த காய்கறிகளை விற்பனை செய்து வருகின்றனர்.

    இந்த நிலையில் உழவர் சந்தைக்கு வெளிப்புறமாக பல்லடம் சாலையில் இரண்டு கிலோ மீட்டர் தூரத்திற்கு வியாபாரிகள் சாலையோரமாக கடை அமைத்து காய்கறிகளை வியாபாரம் செய்வதால் உழவர் சந்தைக்கு வரும் வாடிக்கையாளர்கள் சாலையோரங்களில் வாங்கி செல்வதால் விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்ப டுவதாகவும் , அதேபோல் உழவர் சந்தைக்கு அருகாமையில் உள்ள தினசரி சந்தை காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை மட்டுமே வியாபாரம் செய்ய வேண்டும் என்ற விதி உள்ள நிலையில் 8 மணிக்கு முன்பாக உழவர்சந்தை நேரத்திலேயே செயல்படுவதாலும் விவசாயிகளின் வியாபாரம் பாதிக்கப்படுவதாகவும் மேலும் உழவர் சந்தையில் விவசாயிகளுக்கு தேவையான அத்தியாவசிய வசதிகள் எதுவும் இல்லை என குற்றம் சாட்டி தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பில் விவசாயிகள் இன்று கோரிக்கைகளை வலியுறுத்தி காய்கறிகளை சாலையில் கொட்டி போரா ட்டத்தில் ஈடுபட போவதாக அறிவித்திருந்தனர்.

    இதனையடுத்து விவசாயிகள் மற்றும் விவசாய சங்க நிர்வாகிகள் உழவர் சந்தைக்கு வந்திருந்தனர். இதனை கேள்விப்பட்டு நள்ளிரவிலேயே மாநகராட்சி அலுவலர்கள் , வேளாண்மைத்துறை அதிகாரிகள் மற்றும் காவல்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி சாலையோரம் கடை அமைக்காத வகையில் நடவடிக்கை மேற்கொ ள்ளப்படும் எனவும் உழவர் சந்தையின் வசதிகள் குறித்து கோட்டாட்சியர் தலைமையில் பேச்சு வார்த்தை நடத்தப்படும் என தெரிவித்தனர்.

    இதனையடுத்து விவசாயிகள் போராட்ட த்தை கைவிட்டு கலைந்து சென்றனர். தொடர்ந்து கோரிக்கைகள் நிறைவேறாத பட்சத்தில் அடுத்த கட்ட போராட்டம் அறிவிக்கப்படும் எனவும் விவசாயிகள் தெரிவித்தனர்.

    • பண்ருட்டியில் தரமில்லாமல் கட்டிடம் கட்டும் பணி வேல்முருகன் எம்.எல்.ஏ.வின் அதிரடி நடவடிக்கையால் நிறுத்தப்பட்டது.
    • 10 கோடி செலவில் கட்டப்பட்டு வரும் குளிர்பதன கிடங்கு பணி மற்றும் தட்டாஞ்சாவடியில் உள்ள உழவர் சந்தைக்கு கூடுதல் கட்டிடம் கட்டும் பணியினை நேரில்பார்வையிட்டார்.

    கடலூர்:

    பண்ருட்டி நகராட்சி பகுதியில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சி பணிகளை வேல்முருகன் எம்.எல்.ஏ.நேற்று ஆய்வு செய்தார்.

    அப்போது பண்ருட்டி டைவர்ஷன் ரோட்டில் உள்ள ஒழுங்குமுறை விற்பனை கூட வளாகத்தில் ரூ. 10 கோடி செலவில் கட்டப்பட்டு வரும் குளிர்பதன கிடங்கு பணி மற்றும் தட்டாஞ்சாவடியில் உள்ள உழவர் சந்தைக்கு கூடுதல் கட்டிடம் கட்டும் பணியினை நேரில்பார்வையிட்டார்.

    கட்டிடம் கட்டுவதற்கு பயன்படுத்தப்படும் இரும்பு மற்றும் கட்டுமான பொருட்கள் தரம் இல்லாமல் இருப்பது குறித்து கேட்டார். ஒப்பந்தகாரர் அரசு விதிகளுக்கு உட்பட்டு இரும்பு மற்றும் கட்டுமான பொருள்கள் பயன்படுத்தவில்லை என்பதால்தரமில்லாமல் கட்டப்படும் கட்டிங்களை கட்டப்படுவதை நிறுத்த உத்தரவிட்டார்.

    ஆய்வின் போது நகரமன்ற தலைவர் ராஜேந்திரன், ஆணையாளர் மகேஷ்வரி, துணை தலைவர் சிவா ஆகியோர் உடன் இருந்தனர்.

    ×