search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அல்லு அர்ஜுன்"

    • இயக்குனர் சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா நடிப்பில் உருவான படம் புஷ்பா.
    • இப்படம் ரஷ்யாவின் மாஸ்கோவில் சமீபத்தில் படக்குழு முன்னிலையில் திரையிடப்பட்டது.

    இயக்குனர் சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற திரைப்படம் 'புஷ்பா'. இப்படத்தின் கதாநாயகியாக ராஷ்மிகா மந்தனா நடித்திருந்தார். செம்மரக்கட்டை கடத்தலை மையமாக கொண்டு எடுக்கப்பட்ட இந்த படம் தெலுங்கு மொழியில் உருவாக்கப்பட்டு தமிழ், இந்தி மலையாளம், கன்னடம் உள்ளிட்ட இந்திய மொழிகளில் வெளியாகி ரூ.350 கோடி வரை வசூலை ஈட்டியது. இப்படத்தின் இரண்டாம் பாகம் தற்போது உருவாகி வருகிறது. விறுவிறுப்பாக நடைபெற்று வரும் இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து அடுத்த ஆண்டு படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளனர்.

     

    புஷ்பா படக்குழு

    புஷ்பா படக்குழு

    'புஷ்பா' படம் ரஷ்ய மொழியில் கடந்த டிசம்பர் மாதம் 8ஆம் தேதி வெளியானது. இப்படத்தின் சிறப்பு காட்சிகள் ரஷ்யாவின் மாஸ்கோவில் 01.12.2022 அன்று படக்குழு முன்னிலையில் திரையிடப்பட்டது. இதற்காக இயக்குனர் சுகுமார், நடிகர்கள் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா மற்றும் இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் மாஸ்கோவிற்கு சென்றிருந்தனர். இது தொடர்பான புகைப்படங்கள் வெளியாகி இணையத்தில் வைரலானது.

     

    புஷ்பா

    புஷ்பா

    இந்நிலையில் புஷ்பா திரைப்படம் ரஷ்யாவில் வசூல் சாதனை நிகழ்த்திவருவதாக படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது. அதன்படி இப்படம் ரஷ்யாவில் 25 நாட்களை கடந்து 774 திரைகளில் 10 மில்லியன் ரூபல்ஸ் வசூலித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த போஸ்டர் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

    • இயக்குனர் சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா நடிப்பில் உருவான படம் புஷ்பா.
    • இப்படம் ரஷ்யாவின் மாஸ்கோவில் இன்று படக்குழு முன்னிலையில் திரையிடப்பட்டது.

    இயக்குனர் சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற திரைப்படம் 'புஷ்பா'. இப்படத்தின் கதாநாயகியாக ராஷ்மிகா மந்தனா நடித்திருந்தார். செம்மரக்கட்டை கடத்தலை மையமாக கொண்டு எடுக்கப்பட்ட இந்த படம் தெலுங்கு மொழியில் உருவாக்கப்பட்டு தமிழ், இந்தி மலையாளம், கன்னடம் உள்ளிட்ட இந்திய மொழிகளில் வெளியாகி ரூ.350 கோடி வரை வசூலை ஈட்டியது. இப்படத்தின் இரண்டாம் பாகம் தற்போது உருவாகி வருகிறது. விறுவிறுப்பாக நடைபெற்று வரும் இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து அடுத்த ஆண்டு படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளனர்.

     

    இந்நிலையில் 'புஷ்பா' படம் ரஷ்ய மொழியில் டிசம்பர் மாதம் 8ஆம் தேதி வெளியாகவுள்ளது. அதற்கான டிரைலர் வெளியாகி பலரின் கவனத்தை ஈர்த்தது. இப்படத்தின் சிறப்பு காட்சிகள் ரஷ்யாவின் மாஸ்கோவில் இன்று (01.12.2022) படக்குழு முன்னிலையில் திரையிடப்பட்டது. இதற்காக இயக்குனர் சுகுமார், நடிகர்கள் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா மற்றும் இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் மாஸ்கோவிற்கு சென்றுள்ளனர். அங்கு எடுத்துக் கொண்ட புகைப்படத்தை ராஷ்மிகா தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.

    மேலும் ரஷ்யாவின் 24 நகரங்களில் நடைபெற இருக்கும் ஐந்தாவது இந்தியத் திரைப்பட விழாவின் தொடக்க நாளில் 'புஷ்பா' திரைப்படம் திரையிடப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.

    • அல்லு அர்ஜுன் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான ‘புஷ்பா’ திரைப்படம் பெரும் வரவேற்பை பெற்றது.
    • இப்படத்தின் இரண்டாம் பாகம் தற்போது உருவாகி வருகிறது.

    இயக்குனர் சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற திரைப்படம் 'புஷ்பா'. இப்படத்தின் கதாநாயகியாக ராஷ்மிகா மந்தனா நடித்திருந்தார். செம்மரக்கட்டை கடத்தலை மையமாக கொண்டு எடுக்கப்பட்ட இந்த படம் தெலுங்கு மொழியில் உருவாக்கப்பட்டு தமிழ், இந்தி மலையாளம், கன்னடம் உள்ளிட்ட இந்திய மொழிகளில் வெளியாகி ரூ.350 கோடி வரை வசூலை ஈட்டியது.


    புஷ்பா

    இப்படத்தின் இரண்டாம் பாகமான 'புஷ்பா-தி ரூல்' படத்தின் படப்பிடிப்பு ஆகஸ்ட் மாதம் பூஜையுடன் தொடங்கியது. இந்நிலையில் இந்த படத்தின் சண்டைக்காட்சி ஒன்று பேங்காக்கில் பெரிய அளவில் படமாக்கப்படவுள்ளதாகவும் இதன் படப்பிடிப்பு நவம்பர் மாதம் இரண்டாவது வாரம் தொடங்க இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. 'புஷ்பா' முதல் பாகத்தின் வெற்றியைத் தொடர்ந்து இரண்டாம் பகத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    • தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் வெளியான படம் புஷ்பா.
    • இப்படத்தின் இரண்டாம் பகத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.

    இயக்குனர் சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற திரைப்படம் 'புஷ்பா'. இப்படத்தின் கதாநாயகியாக ராஷ்மிகா மந்தனா நடித்திருந்தார். செம்மரக்கட்டை கடத்தலை மையமாக கொண்டு எடுக்கப்பட்ட இந்த படம் தெலுங்கு மொழியில் உருவாக்கப்பட்டு தமிழ், இந்தி மலையாளம், கன்னடம் உள்ளிட்ட இந்திய மொழிகளில் வெளியாகி ரூ.350 கோடி வரை வசூலை ஈட்டியது.


    புஷ்பா

    இப்படத்தில் இடம்பெற்ற 'ஊ சொல்றியா மாமா...' என்ற பாடலுக்கு சமந்தா கவர்ச்சி நடனம் ஆடியிருந்தார். இந்த பாடல் தற்போது வரை ரசிகர்கள் பலரின் முணுமுணுப்பாக இருந்து வருகிறது. இதைத்தொடர்ந்து 'புஷ்பா-தி ரூல்' படத்தின் படப்பிடிப்பு ஆகஸ்ட் மாதம் தொடங்கியது. இதிலும் முதல் பாகத்தில் இருந்தது போல் சமந்தாவின் பாடல் காட்சி ஒன்று இருக்கும் என்று கூறப்பட்டது.


    புஷ்பா

    இந்நிலையில், 'புஷ்பா-தி ரூல்' படத்தில் சமந்தா இடம் பெறவில்லை என்று தகவல் வெளியாகியுள்ளது. அதாவது, புஷ்பா இரண்டாம் பாகத்தில் நடிகை சமந்தாவிற்கு பதிலாக தமன்னா இடம்பெறவுள்ளதாகவும் அவரிடம் படக்குழு பேச்சு வார்த்தை நடத்தி வருவதாகவும் சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதை படக்குழு இதுவரை உறுதிப்படுத்தவில்லை.

    • தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகர் அல்லு அர்ஜுன்.
    • இவர் தனது குடும்பத்துடன் பொற்கோவில்லு சென்று வழிபாடு நடத்தியுள்ளார்.

    இயக்குனர் சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற திரைப்படம் 'புஷ்பா'. இப்படத்தின் கதாநாயகியாக ராஷ்மிகா மந்தனா நடித்திருந்தார். செம்மரக்கட்டை கடத்தலை மையமாக கொண்டு எடுக்கப்பட்ட இந்த படம் தெலுங்கு மொழியில் உருவாக்கப்பட்டு தமிழ், இந்தி மலையாளம், கன்னடம் உள்ளிட்ட இந்திய மொழிகளில் வெளியாகி ரூ.350 கோடி வரை வசூலை ஈட்டியது.


    குடும்பத்துடன் அல்லு அர்ஜுன்

    இதைத்தொடர்ந்து இப்படத்தின் இரண்டாம் பாகமான 'புஷ்பா-தி ரூல்' படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்து வருகிறது.


    குடும்பத்துடன் அல்லு அர்ஜுன்

    இந்நிலையில், அல்லு அர்ஜுன் மனைவி சினேகா ரெட்டியின் பிறந்தநாளை முன்னிட்டு அமிர்தசரஸில் உள்ள பொற்கோவிலுக்கு குடும்பத்துடன் சென்று சிறப்பு வழிபாடு நடத்தினார். இது தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. 

    • அல்லு அர்ஜுன் நடிப்பில் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் வெளியான புஷ்பா படம் வசூலை அள்ளியது.
    • இவர் தற்போது விளம்பரங்களில் நடிக்க வாங்கிய சம்பளம் குறித்த புதிய தகவல் வெளியாகி உள்ளது.

    நடிகர் - நடிகைகள் சினிமாவோடு சேர்த்து விளம்பர படங்களில் நடித்தும் சம்பாதிக்கிறார்கள். அதுவும் வெற்றி படங்களில் நடித்தவர்களுக்கு விளம்பர பட உலகில் நல்ல மார்க்கெட் உள்ளது. அவர்களுக்கு கேட்ட தொகையை கொடுத்து தங்கள் பொருட்களை விளம்பரப்படுத்தும் படங்களில் நடிக்க வைக்க பெரிய நிறுவனங்கள் வரிசை கட்டுகின்றன.

     

    அல்லு அர்ஜுன்

    அல்லு அர்ஜுன்

    தற்போது தெலுங்கு பட உலகில் அல்லு அர்ஜுன் அந்த நிறுவனங்கள் பார்வையில் இருக்கிறார். அல்லு அர்ஜுன் நடித்து தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் திரைக்கு வந்த புஷ்பா படம் வசூலை அள்ளியது. இதன் இரண்டாம் பாகமும் தயாராகி வருகிறது.

    அல்லு அர்ஜுன்

    அல்லு அர்ஜுன்

     

    புஷ்பா படத்தில் நடித்த பிறகு இந்தியா முழுவதும் பிரபலமான நடிகராக அல்லு அர்ஜுன் உயர்ந்துள்ளதால் 5 விளம்பர படங்களில் நடிக்க வெவ்வேறு கம்பெனிகள் அவரை அணுயுள்ளன. இந்த ஐந்து விளம்பரங்களுக்கும் சேர்த்து அல்லு அர்ஜுன் ரூ.45 கோடி சம்பளம் வாங்கி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. ஒரு விளம்பரத்துக்கு ரூ.9 கோடி வரை அவர் வாங்கி இருப்பதாக கூறப்படுகிறது. முன்பெல்லாம் இந்தி நடிகர்களுக்குத்தான் இதுபோல் அதிக விளம்பர படங்களில் நடிக்க வாய்ப்புகள் வரும் என்பது குறிப்பிடத்தக்கது.

    • தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் புஷ்பா 2 திரைப்படம் தயாராகிறது.
    • புஷ்பா 2 படத்தின் படப்பிடிப்பு இன்று தொடங்கவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

    இயக்குனர் சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற திரைப்படம் 'புஷ்பா'. இப்படத்தின் கதாநாயகியாக ராஷ்மிகா மந்தனா நடித்திருந்தார். செம்மரக்கட்டை கடத்தலை மையமாக கொண்டு எடுக்கப்பட்ட இந்த படம் தெலுங்கு மொழியில் உருவாக்கப்பட்டு தமிழ், இந்தி மலையாளம், கன்னடம் உள்ளிட்ட இந்திய மொழிகளில் வெளியாகி ரூ.350 கோடி வரை வசூலை ஈட்டியது. இப்படத்தின் இரண்டாம் பாகமான 'புஷ்பா-தி ரூல்' படத்தின் படப்பிடிப்பு ஆகஸ்ட் மாதம் தொடங்க உள்ளதாக கூறப்பட்டது.

     

    புஷ்பா 2

    இந்நிலையில் புஷ்பா படத்தின் இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் தொடங்கவுள்ளது. இதனை புஷ்பா படத்தின் தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ் சமூக வலைத்தளத்தில் அறிவித்துள்ளது.

    • லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ஜூன் 03-ஆம் தேதி வெளியான திரைப்படம் 'விக்ரம்'.
    • இப்படத்தில் சிறப்பு தோற்றத்தில் சூர்யா நடித்திருந்தார்.

    மாநகரம், கைதி, மாஸ்டர், விக்ரம் படங்களை இயக்கி தமிழ் சினிமாவில் தனக்கான இடத்தை பிடித்தவர் லோகேஷ் கனகராஜ். இவர் இயக்கத்தில் உருவாகி ஜூன் 03-ஆம் தேதி வெளியான 'விக்ரம்' திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. இப்படத்தில் கமல்ஹாசன் கதாநாயகனாக நடிக்க விஜய் சேதுபதி, பகத் பாசில், நரேன், சூர்யா உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்துள்ளனர். ரசிகர்களின் பெரும் எதிர்ப்பார்ப்பில் வெளியான இப்படம் அனைவரையும் கவர்ந்து விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

    அல்லு அர்ஜுன்

    அல்லு அர்ஜுன்

    இதனை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் விஜய்யின் 'தளபதி 67' படத்தை இயக்கவுள்ளதாக கூறப்படுகிறது. இப்படத்தை தொடர்ந்து பிரபல தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் நடிக்கும் படத்தை லோகேஷ் இயக்கவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இப்படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிற்து.

    இதற்குமுன் தெலுங்கில் முன்னணி நடிகர்களான ராம்சரண், ஜூனியர் என்டிஆர் மற்றும் பிரபாஸ் ஆகியோரிடம் லோகேஷ் கனகராஜ் படம் குறித்த கதை விவாதத்தில் ஈடுப்பட்டதாக கூறப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    ×