search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அதிகாரி"

    • கல்குவாரி உரிமத்தை ரத்து செய்ய வேண்டும் எனக்கூறி 7-வது நாளாக உண்ணாவிரதப்போராட்டத்தை தொடர்ந்து வருகிறார்.
    • வருவாய் அதிகாரிகள் விவசாயி விஜயகுமார், மற்ற விவசாயிகள் ஆகியோருடன் போராட்டத்தை கைவிடும்படி கேட்டுக்கொண்டனர்.

    மங்கலம் :

    திருப்பூர் மாவட்டம்பல்லடம் ஒன்றியம் ,இச்சிப்பட்டி ஊராட்சி கொத்துமுட்டிபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் விஜயகுமார் (வயது 40).இவர் கடந்த 30-ந்தேதி வீட்டின் முன்பு கூடாரம் அமைத்து உண்ணாவிரதம் இருந்து வருகிறார்.இவர் கொத்துமுட்டிபாளையம் அருகே உள்ள கோடங்கிபாளையம் பகுதியில் செயல்படும் தனியார் கல்குவாரி உரிமத்தை ரத்து செய்ய வேண்டும் எனக்கூறி இன்று 7-வது நாளாக உண்ணாவிரதப்போராட்டத்தை தொடர்ந்து வருகிறார்.

    இந்த நிலையில் வருவாய்த்துறை அதிகாரிகள் , கனிமவளத்துறை அதிகாரிகள், மாசுக்கட்டுபாட்டு வாரிய அதிகாரிகள் உள்ளிட்ட அதிகாரிகள் பல்லடம் ஒன்றியம் ,கொத்துமுட்டிபாளையம் அருகே உள்ள கோடங்கிபாளையம் பகுதியில் உள்ள தனியார் கல்குவாரியில் விதிகளை மீறி கல்குவாரி செயல்படுகிறதா என ஆய்வு செய்தனர். பின்னர் ஆய்வு முடிவடைந்த பின்னர் பல்லடம் தாசில்தார் நந்தகோபால் உண்ணாவிரதப்போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயி விஜயகுமாரிடம் " கல்குவாரியில் ஆய்வு செய்துள்ளோம்.ஆகவே உண்ணாவிரதப்போராட்டத்தை கைவிடும்படி கேட்டுக்கொண்டார். எனினும் பேச்சுவார்த்தையில் சமரசம் அடையாத விஜயகுமார் "கோடங்கிபாளையம்பகுதியில் செயல்படும் தனியார் கல்குவாரி உரிமத்தை ரத்து செய்யும் வரை உண்ணாவிரதப்போராட்டத்தை தொடர்வதாக தெரிவித்தார். தொடர்ந்து 7-வது நாளாக உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்.

    மேலும் விவசாயி விஜயகுமாரின் கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் இன்று தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் மற்றும் விவசாயிகள் இணைந்து கோடங்கிபாளையம் பகுதியில் உள்ள தனியாருக்கு சொந்தமான கல்குவாரியில் குதிக்கும் போராட்டம் நடைபெறும் என அறிவித்திருந்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து இன்று காலை சம்பவ இடத்திற்கு சென்ற வருவாய் அதிகாரிகள் விவசாயி விஜயகுமார், மற்ற விவசாயிகள் ஆகியோருடன் போராட்டத்தை கைவிடும்படி கேட்டுக்கொண்டனர். தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தினர்.  

    • தேர்வு செய்யப்பட்ட இடம், பல காலமாக பாறைக்குழி போன்று உள்ளது.
    • டெண்டர் விடப்பட்டு 3 மாதமாகியும் ஆரம்பக்கட்ட பணி கூட துவங்காமல் இருந்தது.

    அவிநாசி :

    தமிழகத்தில் திருப்பூர், வேலூர், தூத்துக்குடியில் மினி டைடல் பார்க் அமைக்கும் பணி நடந்து வருகிறது. திருப்பூர் மாவட்டம் திருமுருகன்பூண்டி ராக்கியபாளையத்தில் 39 கோடி மதிப்பில் 7 அடுக்கில் மினி டைடல் பார்க் கட்ட அரசு புறம்போக்கில் இருந்த 2 ஏக்கர் நிலம் பெறப்பட்டு, பணி துவக்க டெண்டரும் விடப்பட்டது.

    தேர்வு செய்யப்பட்ட இடம், பல காலமாக பாறைக்குழி போன்று உள்ளது. சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள குடியிருப்புகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர், ஆண்டுக்கணக்கில் அங்கு தேங்கியுள்ளது. அந்த கழிவுநீரை முற்றிலும் வெளியேற்றினால் தான் கட்டுமானப் பணி துவக்க முடியும் என்ற நிலையில், அதற்கான வழி தெரியாமல் கட்டுமான நிறுவனத்தினர் திணறி வந்தனர்.

    இதனால் டெண்டர் விடப்பட்டு 3 மாதமாகியும் ஆரம்பக்கட்ட பணி கூட துவங்காமல் இருந்தது.அந்த இடத்தை பார்வையிட்ட டைடல் பார்க் தலைமை பொறியாளர் மற்றும் அதிகாரிகள், மாநிலத்தின் பிற இடங்களில் கட்டுமானப்பணி துவங்கி வேகமாக நடந்து வரும் நிலையில் இங்கு ஆரம்பக்கட்ட பணி கூட துவங்கப்படாமல் இருப்பது சரியல்ல என அதிருப்தி தெரிவித்தனர்.

    இந்தநிலையில் தேங்கியிருந்த கழிவுநீர் அங்குள்ள வி.ஜி.வி., கார்டன் குடியிருப்புகளின் இடையே உள்ள வடிகால் வழியாக வெளியேற்றப்பட்டது. இதனால் கடும் துர்நாற்றம் எழுந்ததால் குடியிருப்புவாசிகள் அதிர்ச்சியடைந்து கழிவுநீரை வெளியேற்ற ஆட்சேபனை தெரிவித்தனர்.திருமுருகன்பூண்டி நகராட்சி கமிஷனர் முகமது சம்சுதீன், நகராட்சி தலைவர் குமார், இன்ஸ்பெக்டர் ஜெகநாதன் ஆகியோர் மக்களை சமாதானப்படுத்தினர்.

    டைடல் பார்க் கட்டுமானப்பணி மேற்கொள்ளும் நிறுவனத்தினர் கூறுகையில், கட்டுமானப் பணி மேற்கொள்ள உள்ள இடத்தில் தேங்கியுள்ள கழிவுநீரை வெளியேற்றினால் தான் அந்த இடத்தின் வடிவமைப்பை தெளிவாக அறிந்துக் கொள்ள முடியும். அதன் பின்னரே கட்டுமானப் பணிக்கான வடிமைப்பு இறுதி செய்யப்படும் என்றனர்.

    • உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் மாநகராட்சி பகுதிகளில் உள்ள கடைகளில் ஆய்வு மேற்கொண்டனா்.
    • 14 அசைவ உணவகங்கள், 9 பேக்கரிகள், 21 தள்ளுவண்டிகளில் ஆய்வு நடத்தினா்.

    திருப்பூர் :

    திருப்பூா் மாவட்ட உணவுப் பாதுகாப்புத் துறை நியமன அலுவலா் விஜயலலிதாம்பிகை தலைமையிலான உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் மாநகராட்சிப் பகுதிகளில் உள்ள கடைகளில் ஆய்வு மேற்கொண்டனா்.இதில் அவிநாசி சாலை, ஆஷா் நகா், தாராபுரம் சாலை, பி.என்.சாலை, காங்கயம் சாலை உள்ளிட்ட பகுதிகளில் 14 அசைவ உணவகங்கள், 9 பேக்கரிகள், 21 தள்ளுவண்டிகளில் ஆய்வு நடத்தினா்.

    இதில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகளைப் பயன்படுத்திய 3 கடைகளுக்கு தலா ரூ.2 ஆயிரம் அபராதம் விதித்தனா்.மேலும் கெட்டுப்போன கோழி இறைச்சி 4 கிலோ, சாயமேற்றப்பட்ட கோழி இறைச்சி 3 கிலோ ஆகியவற்றை பறிமுதல் செய்து அழித்தனா்.மேலும், சுகாதாரமின்றி செயல்பட்ட 4 உணவகங்களுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டது.

    • ஏற்றுமதியாளர்களுக்கு நிதி இழப்பு ஏற்படாமல் பாதுகாப்பு அளிக்கிறது.
    • இ.சி.ஜி.சி., கிளைகள் மூலம் நாடு முழுவதும் உள்ள ஏற்றுமதியாளர்களுக்கு பகிரப்படும்.

    திருப்பூர் :

    இ.சி.ஜி.சி., எனப்படும் ஏற்றுமதி காப்பீடு குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கம், திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்க அரங்கில் நடந்தது. சங்க செயற்குழு உறுப்பினர் செந்தில்குமார் வரவேற்றார். இதில் சங்க தலைவர் ராஜாசண்முகம் பேசியதாவது:-சிறிய கிராமமாக இருந்த திருப்பூர், இன்று மாவட்டமாக அந்தஸ்து பெற்றுள்ளது.நாட்டின் பின்னலாடை நகராகவும் மாறியுள்ளது.

    தமிழகத்தின் ஏற்றுமதியில், மூன்றாமிடத்தை எட்டிப்பிடித்துள்ளது. பின்னலாடை தொழில் வளர்ச்சியே இதற்கு காரணம்.தொழிலாளராக பணியில் இணைவோர், ஆடை உற்பத்தி நுட்பங்களை கற்றறிந்து, எதிர்காலத்தில் தொழில்முனைவோராக மாறுகின்றனர்.திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் உற்பத்தி, அனைத்து நுணுக்கங்களையும் நன்கு தெரிந்துவைத்துள்ளனர்; ஆனால் ஏற்றுமதி ஆவண தயாரிப்பு, இ.சி.ஜி.சி., போன்ற காப்பீடு அவற்றின் அவசியம் குறித்து போதிய விழிப்புணர்வு இல்லை.

    இ.சி.ஜி.சி., சார்பில் மாதம் ஒரு குறைகேட்பு கூட்டம் நடத்தி ஏற்றுமதியாளர் பிரச்னைகளை கேட்டறியவேண்டும். காப்பீடு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார். இ.சி.ஜி.சி., தென்மண்டல துணை பொதுமேலாளர் சுபாஷ்சாகர் பேசியதாவது:- ஏற்றுமதியாளர்கள் வெளிநாடுகளுக்கு அனுப்பிய பொருட்களுக்கான தொகை, பல்வேறு காரணங்களால், குறித்த நாட்களுக்குள் வர்த்தகர்களிடமிருந்து கிடைக்காமல் போகவாய்ப்பு உள்ளது. இத்தகைய இக்கட்டான சூழல்களில், ஏற்றுமதியாளர்களுக்கு நிதி இழப்பு ஏற்படாமல் பாதுகாப்பு அளிக்கிறது, இ.சி.ஜி.சி., காப்பீடு.உலக அளவில் ஐந்து லட்சத்துக்கும் மேற்பட்ட வர்த்தகர்கள் குறித்த முழு விவரங்கள் இ.சி.ஜி.சி., வசம் உள்ளது. குறிப்பிட்ட ஒரு வர்த்தகர் தொகை வழங்காமல் இழுத்தடிக்கும்பட்சத்தில், அவ்விவரங்கள் இ.சி.ஜி.சி., கிளைகள் மூலம் நாடு முழுவதும் உள்ள ஏற்றுமதியாளர்களுக்கு பகிரப்படும்.

    இ.சி.ஜி.சி., குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும், காப்பீடு சார்ந்த குறைகள், சிக்கல்களை கண்டறிந்து களையும் வகையிலும், ஏற்றுமதியாளர் சங்கத்துடன் இணைந்து மாதம்தோறும் குறைகேட்பு கூட்டம் நடத்தப்படும்.திருப்பூர் பின்னலாடை ஏற்றுமதியாளர்கள் தங்கள் அனைத்து ஆர்டர்களுக்கும், இ.சி.ஜி.சி.,ன் காப்பீடு மூலம் பாதுகாப்பு வளையத்தை ஏற்படுத்திக்கொள்ளவேண்டும்.

    வர்த்தகரிடமிருந்து குறிப்பிட்ட நாட்களுக்குள் தொகை கிடைக்காவிட்டால் உடனடியாக தகவல் தெரிவிக்கவேண்டும். உரிய ஆவணங்களுடன் அணுகினால் வர்த்தகரிடமிருந்து கிடைக்கவேண்டிய தொகை, இ.சி.ஜி.சி., மூலம் சுலபமாக கிடைத்துவிடும்.இவ்வாறு அவர் பேசினார்.இ.சி.ஜி.சி., முடிவில் திருப்பூர் கிளை மேலாளர் ராஜேந்திரன் நன்றி கூறினார்.பின்னலாடை ஏற்றுமதியாளர்கள் பங்கேற்று காப்பீடு சார்ந்த தங்கள் சந்தேகங்களை கேட்டறிந்தனர்.

    • அனைத்து துறை அலுவலா்கள் பங்கேற்ற ஆய்வுக் கூட்டம் கொடுவாயில் நடைபெற்றது.
    • தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் மக்களுக்கான பல்வேறு நலத் திட்டங்களை செயல்படுத்தி வருகிறாா்.

    குண்டடம் :

    திருப்பூா் மாவட்டம், குண்டடம் ஊராட்சி ஒன்றியத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளா்ச்சித் திட்டப் பணிகள் மற்றும் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட கோரிக்கை மனுக்களின் மீதான அனைத்து துறை அலுவலா்கள் பங்கேற்ற ஆய்வுக் கூட்டம் கொடுவாயில் நடைபெற்றது.

    கூட்டத்துக்கு, செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன், ஆதிதிராவிடா் நலத் துறை அமைச்சா் என்.கயல்விழி செல்வராஜ் ஆகியோா் தலைமை வகித்தனா். கூட்டத்தில் அமைச்சா் மு.பெ.சாமிநாதன் பேசியதாவது:-தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் மக்களுக்கான பல்வேறு நலத் திட்டங்களை செயல்படுத்தி வருகிறாா். பொதுமக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் மற்றும் மகளிா் சுகாதார வளாகம், அங்கன்வாடி மையம், ஆரம்ப சுகாதார நிலையம், வீட்டுமனைப் பட்டா, கால்நடை மருத்துவமனை, குடிநீா் வசதி, கோயில் புனரமைப்பு பணிகள், சமுதாயக் கூடம், பொதுக்கழிப்பிடம் கட்டுதல் உள்ளிட்ட அனைத்து வளா்ச்சிப் பணிகளையும் விரைந்து முடிக்க வேண்டும்.

    காவிரி கூட்டுக் குடிநீா் திட்டம் கொடுமுடியை நீராதாரமாக கொண்டு முத்தூா், காங்கயம் வழியாக மேட்டுக்கடை வரையிலும் கொண்டு வர முடிகிறது. வெள்ளக்கோவில், மூலனூா், கொளத்துப்பாளையம், தாராபுரம் நகராட்சி மற்றும் சின்னக்காம்பாளையம் பேரூராட்சி வரையிலும் பெரிய திட்டமாக அப்போதைய முதல்வா் கருணாநிதியால் தொடங்கி வைக்கப்பட்டது. ஆனால் கடந்த காலத்தில் சரியாக பராமரிப்பு பணி நடைபெறாத காரணத்தினால் குடிநீா் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. ஆகவே, குடிநீா் பற்றாக்குறையை நிவா்த்தி செய்யும் வகையில் ஆங்காங்கு ஆழ்துளைக் கிணறு மூலம் தண்ணீா் எடுப்பதற்கும், மின்மோட்டாா் மற்றும் பழுதான குழாய்களை மாற்றி சீரான குடிநீா் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    மாவட்டத்தில் உள்ள சிறிய கிராமங்களிலும் அடிப்படை வசதிகளை மேம்படுத்தவும், இயற்கை வளங்களைப் பாதுகாக்கவும் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இதனடிப்படையில் மாவட்டம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களைப் பெற்று வருகிறோம். பெறப்படும் மனுக்களின் மீது அனைத்துத் துறை அலுவலா்களும் ஒருங்கிணைந்து விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.

    கூட்டத்தில், மாவட்ட கலெக்டர் எஸ்.வினீத், தாராபுரம் வருவாய் கோட்டாட்சியா் குமரேசன், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமையின் திட்ட இயக்குநா் அ.லட்சுமணன், உதவி இயக்குநா் (ஊராட்சிகள்) மதுமதி, மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (வளா்ச்சி) வாணி, குண்டடம் மேற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளரும் யூனியன் கவுன்சிலருமான சந்திரசேகர், மாநில பொதுக்குழு உறுப்பினர் கருணாகரன், குண்டடம் கிழக்கு ஒன்றிய செயலர் சிவசெந்தில்குமார், குண்டடம்-ருத்ராவதி பேரூர் செயலாளர் அன்பரசு, யூனியன் கவுன்சிலர் புங்கந்துறை சண்முகபிரியா உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

    • திருச்செங்கோடு வட்டத்தில் வரகூராம்பட்டி பகுதியில் பட்டேல் நகர் திட்டப்பகுதியில் 848 அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
    • தமிழ்நாடு நகர்புர வாழ்விட மேம்பாட்டு வாரிய மேலாண்மை இயக்குனர் கோவிந்த ராவ் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்டத்தில் ராசிபுரம் வட்டம் அணைப்பாளையம், நாமக்கல் நகராட்சி கொண்டிசெட்டிபட்டி நில வங்கி திட்டப்பகுதி 3, நில வங்கி திட்டப்பகுதி 4, நாமக்கல் திருச்சி ரோடு ரெட்டிப்பட்டி நாகராஜபுரம், குமாரபாளையம் வட்டம் ஆலாம்பாளையம் அன்னை சத்யா நகர் ஆகிய இடங்களில் தமிழ்நாடு நகர்புர வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சார்பில் 1,856 அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டு உள்ளன. திருச்செங்கோடு வட்டத்தில் வரகூராம்பட்டி பகுதியில் பட்டேல் நகர் திட்டப்பகுதியில் 848 அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

    திருச்செங்கோடு வட்டத்தில் வரகூராம்பட்டி பகுதியில் பட்டேல் நகர் திட்டப்பகுதியில் 848 அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டு வரும் பணிகளையும், ராசிபுரம் வட்டத்தில் அணைப்பாளையம், நாமக்கல் நகராட்சி கொண்டிசெட்டிபட்டி நிலவங்கி திட்டம் 3 பகுதிகளில் தமிழ்நாடு நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சார்பில் கட்டப்பட்டுள்ள அடுக்குமாடி குடியிருப்புக ளையும் தமிழ்நாடு நகர்புர வாழ்விட மேம்பாட்டு வாரிய மேலாண்மை இயக்குனர் கோவிந்த ராவ் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    இந்த ஆய்வின்போது கொண்டிசெட்டிபட்டி திட்டப்பகுதியில் வீடுஒதுக்கீடு பெற்று குடியிருந்து வரும் பயனாளிகளிடம் குடிநீர் வசதி, மின்சார வசதி ஆகியவை சீராக பெறப்படுகின்றதா என்றும் மேலும் தேவையான வசதிகள் குறித்தும் கேட்டறிந்தார். அனைத்து குடியிருப்புகளிலும் குடியிருப்போர் சங்கம் அமைத்து அதனை பதிவு செய்திட வேண்டும், அடிப்படை வசதிகளில் ஏதேனும் குறைபாடுகள் ஏற்பட்டால் உடனுக்குடன் வாரியத்தின் மூலம் சீர் செய்து தரப்படும் என்று வாரிய வீடுகளில் குடியிருப்போரிடம் தெரிவித்தார்.

    அதனைத் தொடர்ந்து கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் தமிழ்நாடு நகர்புர வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சார்பில்  அடுக்குமாடி குடியிருப்பு கட்டும் பணிகளின் தற்போதைய நிலை, குடியிருப்பு ஒதுக்கீடுகள், பயனாளிகள் தேர்வு ஆகியவை குறித்து கலெக்டர் ஸ்ரேயா.பி.சிங் முன்னிலையில் துறை அலுவலர்களிடம் ஆய்வு மேற்கொண்டார்.

    இந்த ஆய்வுகளில் ஆர்.டி.ஓ.க்கள் நாமக்கல் மஞ்சுளா, திருச்செங்கோடு இளவரசி, தமிழ்நாடு நகர்ப்புர வாழ்விட மேம்பாட்டு வாரிய தலைமை பொறியாளர் சுந்தரராஜன், மேற்பார்வை பொறியாளர் ரவிக்குமார், நிர்வாகப் பொறியாளர் தனசேகரன் உட்பட அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    • உடுமலை, பொள்ளாச்சி ரோடு சந்திப்பில் வரவேற்பு நிகழ்ச்சி நடத்தப்படுகிறது.
    • சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்கள் சார்பாக நடக்கும் மாநாட்டில் முதல்-அமைச்சர் பங்கேற்கிறார்.

    திருப்பூர் :

    தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகிற 24-ந் தேதி இரவு திருப்பூர் வருகிறார். இதையொட்டி முன்னேற்பாடு குறித்த ஆய்வுக்கூட்டம் திருப்பூர் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்றது. செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி ஆகியோர் தலைமை தாங்கினர். கலெக்டர் வினீத் முன்னிலை வகித்தார். இதில் காவல்துறை, வருவாய்த்துறை உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர்.

    வருகிற 24-ந் தேதி கோவை மாவட்டத்தில் நிகழ்ச்சியை முடித்துவிட்டு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், வடுகபாளையம், மன்றாம்பாளையம், நெகமம் வழியாக திருப்பூர் மாவட்டத்துக்கு இரவு வருகிறார். பல்லடத்தில் உடுமலை, பொள்ளாச்சி ரோடு சந்திப்பில் வரவேற்பு நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. தொடர்ந்து பல்லடம், மங்கலம் வழியாக திருமுருகன்பூண்டி நகராட்சி பகுதியில் பாப்பீஸ் ஓட்டலில் தங்குகிறார். பின்னர் காலையில் அந்த ஓட்டலில் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்கள் சார்பாக நடக்கும் மாநாட்டில் பங்கேற்கிறார்.

    இந்த மாநாட்டில் திருப்பூர், ஈரோடு, கோவை, நாமக்கல், நீலகிரி ஆகிய மாவட்டத்தை சேர்ந்த சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்துறையினர் பங்கேற்கிறார்கள். 25-ந் தேதி காலை 10 மணி முதல் 11.30 மணி வரை நிகழ்ச்சி நடக்கிறது. அதன்பிறகு அங்கிருந்து புறப்பட்டு குன்னத்தூர் வழியாக ஈரோடு செல்கிறார். இதற்கான ஏற்பாடுகள் குறித்து அமைச்சர்கள் ஆலோசனை மேற்கொண்டனர்.

    • கடையின் உரிமையாளர்களுக்கு 2 முறை நோட்டீஸ் வழங்கப்பட்டது.
    • மாநகராட்சி பணியாளர்கள் பொக்லைன் எந்திரம் மூலம் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.

    திருப்பூர் :

    திருப்பூர் பல்லடம் சாலையில் கடைகள் முன்பு ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு இருந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டு வந்தது. எனவே அதனை அகற்ற வேண்டுமென மாநகராட்சி, நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளிடம் கோரிக்கை விடுக்கப்பட்டது. இந்தநிலையில் விதிகளை மீறி போக்குவரத்துக்கு இடைஞ்சலாக உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுமாறு கடையின் உரிமையாளர்களுக்கு 2 முறை நோட்டீஸ் வழங்கப்பட்டது. ஆனால் பலர் ஆக்கிரமிப்புகளை அகற்ற முன்வரவில்லை.

    இதையடுத்து இன்று காலை திருப்பூர் பல்லடம் சாலையில் போக்குவரத்துக்கு இடைஞ்சலாக உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி நடைபெற்றது. வருவாய் கோட்டாட்சியர் பண்டரிநாதன்,தெற்கு தாசில்தார் கோவிந்தராஜ் தலைமையில் மாநகராட்சி பணியாளர்கள் பொக்லைன் எந்திரம் மூலம் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.

    சில கடைக்காரர்கள் தாங்களாகவே முன்வந்து ஆக்கிரமிப்புகளை அகற்றினர். கடைகள் முன்பு வைக்கப்பட்டிருந்த தள்ளுவண்டிகள், பலகைகள் உள்ளிட்ட பல்வேறு ஆக்கிரமிப்பு பொருட்கள் அகற்ற ப்பட்டன. இதனால் திருப்பூர் பல்லடம் சாலையில் பரபரப்பு ஏற்பட்டது. 

    • தரமான விதைகளை வழங்கும் நோக்கில் விதைச்சான்று மற்றும் அங்கக சான்றுத்துறை செயல்படுகிறது.
    • தரமான விதைகளை கொள்முதல் செய்து உரிய ஆவணங்களுடன் விற்பனை செய்ய வேண்டும்.

    உடுமலை :

    விதைச்சான்று மற்றும் அங்கக சான்றுத்துறை சார்பில் விதை விற்பனையாளர்களுக்கான புத்தாக்க பயிற்சி உடுமலையில் நடந்தது. உடுமலை, பொள்ளாச்சி பகுதி விதை விற்பனையாளர்கள், விதை ஆய்வாளர்கள் பங்கேற்றனர். இதில் விதை ஆய்வு துணை இயக்குனர் வெங்கடாசலம் பேசியதாவது:- விவசாயிகளுக்கு தரமான விதைகளை வழங்கும் நோக்கில் விதைச்சான்று மற்றும் அங்கக சான்றுத்துறை செயல்படுகிறது. தற்போது பருவ மழை தீவிரமடைந்துள்ளதால் விவசாயிகள் சாகுபடி செய்ய தரமான விதைகளை வினியோகம் செய்ய வேண்டும்.விவசாயிகள் பயிரிடும் ரகத்திற்கு ஏற்ப, தரமான விதைகளை கொள்முதல் செய்து உரிய ஆவணங்களுடன் விற்பனை செய்ய வேண்டும். ஒவ்வொரு பயிர் ரகத்திற்கும் கண்டிப்பாக பதிவெண் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.

    காலாவதி நிலையிலுள்ள பதிவெண் சான்றிதழ்கள் புதுப்பித்த பிறகே விற்பனை செய்வதோடு அனைத்து விதைக்குவியல்களுக்கும் தனித்தனியாக முளைப்புத்திறன் அறிக்கை பெற்றிருக்க வேண்டும்.விவசாயிகள் தங்களுக்கு தேவையான விதைகளை அருகிலுள்ள அரசு மற்றும் தனியார் விற்பனை நிலையத்தில் வாங்குவதற்கு ஏதுவாக உழவர் செயலியில் விதை விபரங்கள், ஸ்பேக்ஸ் மென்பொருள் இணையதளத்துடன் இணைக்கப்பட்டுள்ளதால் விற்பனையாளர்கள் விதை இருப்பு, விற்பனை விபரங்களை பதிவேற்றம் செய்ய வேண்டும்.விதைச்சட்டத்தின் கீழ் பயிர், ரகம், குவியல் எண், காலாவதி தேதி, பயிர் செய்யும் பருவம் உள்ளிட்ட 14 வகையான விபரங்கள் அச்சிடப்பட்ட விதை பாக்கெட்களை மட்டுமே விற்பனை செய்ய வேண்டும்.

    விதை விற்பனை பதிவேடு, கொள்முதல் பட்டியல் உள்ளிட்ட ஆவணங்கள் கட்டாயம் பராமரிக்க வேண்டும்.விவசாயிகள், விதை விற்பனை நிலையங்களில் மட்டுமே விதை வாங்க வேண்டும். அப்போது தகுந்த பருவத்திற்கு ஏற்றதா, என்பதை உறுதி செய்தும், விற்பனை ரசீதில் கையெழுத்து இட்டு வாங்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.

    • சட்டம், 2014”, பிரிவு 4-ன்படி உரிமம் பெற வேண்டும் .
    • வழிமுறைகள் குறித்து விவரம் அறிய மற்றும் கருத்துருக்கள் சமர்ப்பிக்க அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம்.

    திருப்பூர் :

    திருப்பூர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து தனியார் மற்றும் அரசுப்பள்ளிகள் மூலம் நடத்தப்படும் விடுதிகள் "தமிழ்நாடு பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான விடுதிகள் மற்றும் இல்லங்கள் (நெறிமுறைப்படுத்தும்) சட்டம், 2014", பிரிவு 4-ன்படி உரிமம் பெற வேண்டும் .அவ்வாறு உரிமம் பெறாது நடத்தும் விடுதிகள் மேற்படி சட்டப்பிரிவு 20-ன் கீழ் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். ஆதலால் அனைத்து தனியார் மற்றும் அரசுப்பள்ளிகள் உள்ளிட்ட அனைத்து வகையான விடுதிகளும் உரிமம் பெற்று நடத்திட விடுதி உரிமம் பெறுவதற்கான விண்ணப்பம் மற்றும் வழிமுறைகள் குறித்து விவரம் அறிய மற்றும் கருத்துருக்கள் சமர்ப்பிக்க மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம்.தொடர்புகொள்ள வேண்டிய முகவரி:

    மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு , மாவட்ட ஆட்சியர் வளாகம், தளம்-6, அறை எண் : 627, பல்லடம் ரோடு , திருப்பூர். தொலைபேசி : 0421 - 2971198, குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் (நிறுவனம்)கைபேசி எண் : 6382614880.இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. 

    • வேளாண் வளர்ச்சி திட்டத்தின் தரிசு நிலத்தொகுப்பு குறித்து திருச்செங்கோடு, நாமக்கல், பரமத்தி, கபிலர்மலை ஆகிய வட்டாரங்களில் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டார்.
    • நுண்ணீர் பாசனம், மழை நீரை சேமித்தல் போன்றவைகள் குறித்து விவசாயிகளுக்கு விளக்கமளித்தார்.

    பரமத்தி வேலூர்:

    தமிழ்நாடு விவசாய நிலங்களில் பசுமை போர்வை இயக்கம் திட்டத்தின் கீழ் திருச்செங்கோடு வட்டாரத்தில் மோடமங்கலம் அக்ரஹாரம், அத்திமரத்தூர், எலச்சிப்பாளையம் வட்டாரத்தில் உஞ்சனை, நாமக்கல் வட்டாரத்தில் எர்ணாபுரம் ஆகிய கிராமங்களில் மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டது. இவற்றை குடுமியான்மலை சமிதி-ஸ்டாமின் இயக்குநர், சங்கரலிங்கம் ஆய்வு செய்தார்.

    தமிழ்நாடு மாநில விதை மேம்பாட்டு முகமை, டான்சிடா விதைப்பண்ணை திட்டத்தின் கீழ் எலச்சிப்பாளையம் வட்டாரத்தில் மாவுரெட்டிப்பட்டி கிராமத்தில் பாசிபயறு, நிலக்கடலை விதைப் பண்ணைகளையும், புதுச்சத்திரம் வட்டாத்தில் ச.உடுப்பம், பரமத்தி வட்டாரத்தில் மேல்சாத்தம்பூர், கபிலர் மலை வட்டாரத்தில் பெருங்குறிச்சி ஆகிய கிராமங்களில் உள்ள நிலக்கடலை மற்றும் உளுந்து விதைப்பண்ணைகளையும் ஆய்வு செய்தார்.

    2022-23 ஆண்டு முதல் செயல்படுத்தப்படும் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் தரிசு நிலத்தொகுப்பு குறித்து திருச்செங்கோடு, நாமக்கல், பரமத்தி, கபிலர்மலை ஆகிய வட்டாரங்களில் அவர் ஆய்வு மேற்கொண்டார்.

    ஆய்வின் போது விவசாயிகளுக்கு கோடைஉழவு, சான்று பெற்ற விதைகளை பயன்படுத்துவது, விதை நேர்த்தி செய்தல், நுண்ணூட்ட உரங்கள் பயன்படுத்துதல், பயறு வகை பயிர்களுக்கு டி.ஏ.பி கரைசல் தெளிப்பு,பருவத்திற்கேற்ற பயிர் சுழற்சி, ஊற்றமேற்றிய தொழு உரமிடுதல், உயிர் உரங்களை பயன்படுத்துதல், நுண்ணீர் பாசனம், மழை நீரை சேமித்தல் போன்றவைகள் குறித்து விவசாயிகளுக்கு விளக்கமளித்தார்.

    திருச்செங்கோடு வட்டாரம், புதுச்சத்திரம் வட்டாரம் புதன்சந்தை ஒருங்கிணைந்த வேளாண்மை விரிவாக்க மையங்களில் ஆய்வு செய்து பயிர் சாகுபடி பரப்பு பதிவேடுகள் பராமரித்தல், கிடங்க இருப்பு பதிவேடுகள், விதை முளைப்புத்திறன் பதிவேடுகளை ஆய்வு செய்தார். மேலும் எலச்சிபாளையம் வட்டாரத்தில் வேலகவுண்டம்பட்டியில் புதியதாக கட்டப்பட்ட துணை வேளாண்மை விரிவாக்க மையத்தில் ஆய்வு மேற்கொண்டார்.

    இந்த ஆய்வின் போது நாமக்கல் மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் அசோகன், வேளாண்மை துணை இயக்குநர்கள் ஜெகதீசன் (மத்தியத்திட்டம்) ராஜகோபால் (மாநிலத்திட்டம்) ஆகியோர் உடனிருந்தனர். அந்தந்த வட்டார வேளாண்மை உதவி இயக்குநர்கள், வேளாண்மை அலுவலர்கள், துணைவேளாண்மை அலுவலர்கள், உதவி விதை அலுவலர்கள், உதவி வேளாண்மை அலுவலர்கள் உடனிருந்து ஆய்விற்கான ஏற்பாட்டினை செய்திருந்தனர்.

    • சில கோவில்கள் போதிய பராமரிப்பின்றி பரிதாப நிலையில் உள்ளன.
    • திருப்பணி செய்யாமல் சிதிலமடைந்து வருவது குறித்து பக்தர்கள் வேதனை.

    மடத்துக்குளம் :

    உடுமலை, மடத்துக்குளம் பகுதியில் அமராவதி மற்றும் உப்பாறு படுகையில் பழமை வாய்ந்த கோவில்கள் உள்ளன.இதில் சில கோவில்கள் போதிய பராமரிப்பின்றி பரிதாப நிலையில் உள்ளன.கொழுமம் கரிவரதராஜ பெருமாள் கோவில், கோட்டமங்கலம் வல்லக்கொண்டம்மன் உள்ளிட்ட கோவில்களுக்கு நீண்ட காலமாக திருப்பணி செய்யாமல் சிதிலமடைந்து வருவது குறித்து பக்தர்கள் வேதனை தெரிவித்தனர்.

    இந்நிலையில், கோட்டமங்கலம் வல்லக்கொண்டம்மன் கோவிலில், இந்து அறநிலையத்துறை உதவிப்பொறியாளர் அருள், செயல் அலுவலர் சங்கீதா உள்ளிட்டோர் ஆய்வு செய்தனர். இது குறித்து இந்து அறநிலையத்துறையினர் கூறியதாவது:- பழங்கால கோவில்களை தொன்மை மாறாமல் புதுப்பிக்க சிறப்புக்குழு அமைக்கப்பட்டுள்ளது.தொல்லியல்துறை மற்றும் நிபுணர்களை உள்ளடக்கிய இக்குழுவினர் கோவில்களில் நேரடி ஆய்வு செய்துள்ளனர்.

    அவர்கள் வழங்கும் வழிகாட்டுதல் அடிப்படையில், கொழுமம் கரிவரதராஜ பெருமாள் கோவில், கோட்டமங்கலம் வல்லகொண்டம்மன் கோவிலை புதுப்பிக்க அரசு அனுமதி பெறப்பட்டுள்ளது. திருப்பணிக்காக திட்ட மதிப்பீடு தயாரிக்கும் பணி பல கட்டமாக நடந்து வருகிறது.திட்ட மதிப்பீடு அரசுக்கு சமர்ப்பிக்கப்பட்டு, நிதி ஒதுக்கீடு செய்த பிறகு நன்கொடைதாரர்கள் பங்களிப்புடன் விரைவில் திருப்பணிகள் துவங்கும். கொழுமம் கரிவரதராஜ பெருமாள் கோவிலில், தற்காலிக பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.அனைத்து கோவில்களின் அருகிலும் கோவிலுக்குரிய இடத்தில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர். 

    ×