search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "யாகசாலை"

    • யாகசாலையில் வைத்து பூஜிக்கப்பட்ட பவித்திர மாலை பெருமாளுக்கு சாற்றப்பட்டு 8 கால யாகபூஜைகள் நடைபெற்றன.
    • தங்க கருடவாகனத்தில் பெருமாள் எழுந்தருளி மகா பூர்ணாஹூதி, தீபாராதனை நடைபெற்றது.

    சீர்காழி:

    சீர்காழியில் தாடாளன் பெருமாள் கோவில் உள்ளது. 108 திவ்ய தேசத்தலங்களில் 28-வது தலமாக அமைந்துள்ள இந்த கோவிலில் பவித்திர உற்சவம் யாகசாலை பூஜையுடன் தொடங்கியது.

    தொடர்ந்து யாகசாலையில் வைத்து பூஜிக்கப்பட்ட பவித்திர மாலை பெருமாளுக்கு சாற்றப்பட்டு 8 கால யாக பூஜைகள் நடைபெற்றன.

    5-ம் நாள் காலை உதய தங்க கருட சேவையும், சக்கர த்தாழ் வார் தீர்த்தவாரியும் நடை பெற்றது.

    தொடர்ந்து பெருமாளுக்கு சிறப்பு திருமஞ்சனம் செய்யப்பட்டு, தங்க கருடவாகனத்தில் பெருமாள் எழுந்தருளி மகா பூர்ணா ஹூதி, தீபாராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி செய்தனர்.

    விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் ஆதீனம்.ஸ்ரீனிவாசா ச்சாரியார் பட்டாச்சாரியார், பத்ரி நாராயணன் மற்றும் பக்தர்கள் செய்திருந்தனர்.

    • கோவிலை புணரமைக்க துர்கா ஸ்டாலின் முன்னிலையில் பல லட்சம் செலவில் திருப்பணிகள் நடைபெற்றது.
    • 4-ம் கால யாகசாலை பூஜை நிறைவடைந்து புனிதநீர் அடங்கிய கடங்கள் மேள, தாளங்கள் முழங்க புறப்பட்டது.

    சீர்காழி,:

    மயிலாடுதுறைமாவட்டம் சீர்காழி அருகே கீழப்பெரும்ப ள்ளத்தில் உள்ள அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது.

    இக்கோவில் முதல் அமைச்சர் ஸ்டாலினின் மனைவி துர்காஸ்டாலின் குடும்பத்தினருக்கு குலதெய்வ கோயிலாகும்.

    சிதிலமடைந்த இக்கோவில் குடமுழுக்கு நடைபெற்று 12 ஆண்டுகளை கடந்து விட்டதால் கோயில் புண ரமைக்க துர்கா ஸ்டாலின் முன்னிலையில் பல லட்சம் செலவில் திருப்பணிகள் நடைபெற்றது.

    திருப்பணிகள் நிறைவடை ந்து 4 கால யாகசாலை பூஜைகள் தொடங்கியது. 3


    3 யாக குண்டங்கள் அமைக்கப்பட்டு யாகசாலை பூஜை நடைபெற்றது.

    இன்று காலை 4ம் கால யாகசாலை பூஜை நிறைவடைந்து புனிதநீர் அடங்கிய கடங்கள் மேள, தாளங்கள் முழங்க புறப்பட்டது.

    துர்கா ஸ்டாலின், அவரது மகள் செந்தாமரை, மருமகன் சபரீசன், ஸ்டாலின் மைத்துனர் டாக்டர் ராஜமூர்த்தி மற்றும் அவர்களது குடும்பத்தினர் புனித நீர் அடங்கிய கடங்கள் முன்பு கோவிலை வலம் வந்தனர்.

    பின்னர் கோவில் விமான கலசம், ராஜகோபுரம் மற்றும் பரிவார தெய்வங்கள் சன்னதி கலசங்களில் துர்கா ஸ்டாலின் பச்சைக் கொடியை அசைத்து காட்டிட புனித நீர் சிவாச்சாரியார்களால் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது.

    விழாவில் அமைச்சர் மெய்யநாதன், எம்எல்ஏக்கள் நிவேதா முருகன், பன்னீர்செல்வம்,கலெக்டர் லலிதா,

    எஸ்.பி நிஷா மற்றும் பக்தர்கள் தரிசனம் செய்தனர் .

    • வாஸ்து சாந்தி, லட்சுமி ஹோமம், ரக்ஷாபந்தனத்துடன் யாகசாலை பூஜைகள் நடைபெற்றது.
    • சிறப்பு தீபாராதனையில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம், கீழ்வேளூர் அருகே இருக்கை ஊராட்சியில் உள்ள அபிராமி அம்பாள் உடனுறை பீமேஸ்வரர் கோவிலில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. கடந்த 27-ம் தேதி விக்னேஸ்வர பூஜையுடன் தொடங்கியது.‌ தொடர்ந்து வாஸ்து சாந்தி, லட்சுமி ஹோமம், ரக்ஷாபந்தனத்துடன் யாகசாலை பூஜைகள் நடைபெற்றது.

    நேற்று காலை யாகசாலை பூஜையுடன் மகா பூர்ணாஹுதி நடைபெற்றது.பின்னர், சிறப்பு தீபாராதனைக்கு பிறகு கோவில் ராஜகோபுர கலசம் மற்றும் மூலவர் கோபுர கலசங்களுக்கு புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. அதனை தொடர்ந்து புனித நீர் அங்கிருந்த பக்தர்கள் மீது தெளிக்கப்பட்டது.

    தொடர்ந்து நடைபெற்ற சிறப்பு தீபாராதனையில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவில் இருக்கை, பெருந்தலைக்குடி கிராமமக்கள், விழா குழுவினர், பக்தர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    • கும்பாபிஷேகத்திற்கு திருப்பணிகள் நிறைவடைந்து கடந்த திங்கட்கிழமை யாகசாலை பூஜைகள் தொடங்கியது.
    • கடங்கள் புறப்பட்டு விமான கோபுர கலசங்களில் புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது.

    ர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் தருமபுரம் ஆதீனம் சட்டை நாதர் சுவாமி தேவஸ்தானத்துடன் இணைந்த அகிலாண்டேஸ்வரி உடனடியாக அண்டநாத சுவாமி கோயில் உள்ளது.

    இக்கோயில் கும்பாபிஷேகத்திற்கு திருப்பணிகள் நிறைவடைந்து திங்கட்கிழமை யாகசாலை பூஜைகள் தொடங்கியது.

    விழா அன்று நான்காம் கால யாக சாலை பூஜை நடைபெற்றது தொடர்ந்து புனித நீர் அடங்கிய கடங்கள் புறப்பட்டு விமான கோபுர கலசம், சுவாமி, அம்மன் சன்னதிகள் கலசங்களில் புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது.

    இதில் தருமபுரம் ஆதீனம் 27வது குருமஹா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிகர் ஞானசம்பந்த பரமாச்சாரியார் சுவாமிகள் பங்கேற்று பக்தர்களுக்கு அருள் ஆசி வழங்கினார்.

    கும்பாபிஷேக விழாவில் சீர்காழி நகர மன்ற தலைவர் துர்கா பரமேஸ்வரி டாக்டர் முத்துக்குமார் உள்ளிட்ட திரளான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.

    • பரிவார தெய்வங்களான பேச்சி அம்மன், சப்த கன்னிகள் மற்றும் இரட்டை விநாயகர் சன்னதி கலசங்களிலும் புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடந்தது.
    • மாரியம்மனுக்கு மகா அபிஷேகம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் சட்டை நாதர் சுவாமி தேவஸ்தானத்திற்கு உட்பட்ட தொப்படி மாரியம்மன் எனும் சாரடி மாரியம்மன் கோவில் உள்ளது.

    பழமையான இக்கோவிலில் நூறு ஆண்டுக்கு முன்ன தாக கும்பாபிஷேகம் நடைபெற்றதாக கோவில் ஸ்தல வரலாற்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    சிதிலமடைந்த இக்கோ வில் திருப்பணிகள் செய்திட முடிவு செய்யப்பட்டு திருப்பணிகள் தொடங்கி நிறைவு பெற்றது.

    தொடர்ந்து திங்கட்கிழமை விக்னே ஸ்வர பூஜையுடன் முதல் கால யாக சாலை பூஜை கள் தொடங்கியது.

    விழா அன்று நான்கு காலயாக சாலை பூஜை நிறைவடைந்து பூர்ணா ஹூதி மகா தீபாராதனை நடைபெற்றது.

    தொடர்ந்து புனித நீர் அடங்கிய கடங்கள் புறப்பட்டு மேள, தாளங்கள் முழங்க கோவிலை வலம் வந்து தருமபுரம் ஆதீனம் 27 வது குரு மகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞாளனசம்பந்த பரமாச்சாரியார் சுவாமிகள் முன்னிலையில் கோவில் விமான கலசத்தில்புனித நீர் ஊற்றப்பட்டு கும்பா பிஷேகம் நடைபெற்றது.

    தொடர்ந்து பரிவார தெய்வங்களான பேச்சி அம்மன், சப்த கன்னிகள் மற்றும் இரட்டை விநாயகர் சன்னதி கலசங்களிலும் புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடந்தது.

    பின்னர் மாரியம்மனுக்கு மகா அபிஷேகம்செய்து தீபாராதனை காட்ட ப்பட்டது.

    இதில் திருஞானச ம்பந்த தம்பிரான் சுவா மிகள், சொக்கலிங்கம் தம்பிரான் சுவாமிகள், மாணிக்கவாசகர் தம்பிரான் சாமிகள், திருநாவுக்கரசு தம்பிரான் சாமிகள் மற்றும் முன்னாள் நகர் மன்ற தலைவர் கனிவண்ணன் நகர்மன்ற உறுப்பினர் நித்யா தேவி பாலமுருகன், டெம்பிள் டவுன் ரோட்டரி சேர்ந்த வீரபாண்டியன், ரோட்டரி சங்கம் சுசீந்திரன், மகாலிங்கம், திமுகவை சேர்ந்த அண்ணா உட்பட ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.

    • முன்னதாக விக்னேஸ்வர பூஜை கணபதி ஹோமத்துடன் யாகசாலை பூஜையில் தொடங்கியது.
    • கடம் புறப்பாடாகி கோவில் கோபுர கலசத்தில் புனிதநீர் ஊற்றப்பட்டு குடமுழுக்கு நடைபெற்றது.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் தாலுகா தென்னடார் கிழக்கு ஆமைகுளத்து ஐயனார் கோவில் தனி சன்னதியில் ஆஞ்சநேயர் அருள் பாலித்து வருகிறார்.

    இந்த ஆஞ்சநேயர் கோவிலுக்கு குடமுழுக்கு நடைபெற்றது முன்னதாக விக்னேஸ்வர பூஜை கணபதி ஹோமத்துடன் யாகசாலை பூஜையில் தொடங்கியது இதைத்தொடர்ந்து கடம் புறப்பாடு ஆகி ஆஞ்சநேயர் கோயில் கோபுர கலசத்தில் புனிதரின் ஊற்றப்பட்டு குடமுழுக்கு நடைபெற்றது பின்பு ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு ஆஞ்சநேயர் தரிசனம் செய்தனர்.

    • விக்னேஸ்வர பூஜை, கணபதி ஹோமம் போன்ற வழிபாடுகளுடன் யாகசாலை பூஜை தொடங்கியது.
    • கோபுர கலசத்துக்கு புனித நீரால் கும்பாபிஷேகம் நடைபெற்று, பின் பூங்காளம்மனுக்கு அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடைபெற்றது.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம், கீழையூர் ஒன்றியம், கீழப்பிடாகையில் அமைந்துள்ள பூங்காளம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதையொட்டி, விக்னேஸ்வர பூஜை, கணபதி ஹோமம் போன்ற வழிபாடுகளுடன் யாகசாலை பூஜை தொடங்கியது. யாகசாலை பூஜை நிறைவடைந்ததும், மகா பூா்ணாஹுதி, தீபாராதனை நடைபெற்றது.

    பின்னா், கோயிலின் கோபுர கலசத்துக்கு புனித நீரால் கும்பாபிஷேகம் நடைபெற்றது. தொடா்ந்து, பூங்காளம்மனுக்கு மகா அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடைபெற்றது. இதில், திரளான பக்தா்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனா்.

    • முத்தையாசாமி-அய்யனார்சாமி கோவில் கும்பாபிஷேகம் வருகிற 11-ந் தேதி நடக்கிறது.
    • கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கடந்த 2 நாட்க ளாக கோவிலில் சிறப்பு யாகசாலை பூஜைகள் நடந்து வருகின்றன.

    மதுரை

    மதுைர மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள வடகரை கிராமத்தில் முத்தையாசாமி- அய்யனார் சாமி கோவில் உள்ளது. இந்த பகுதியில் பிரசித்தி பெற்ற இக்கோவிலுக்கு விசேஷ நாட்களில் பக்தர்கள் திரண்டு வந்த சாமி தரிசனம் செய்வார்கள்.

    கோவில் திருவிழா வின்போது சுற்று வட்டார கிராம மக்கள் ஏராள மானோர் நேர்த்திக்கடன் செலுத்தி வழிபடுவதுண்டு. இந்த கோவிலில் கும்பாபி ஷேகம் நடத்த நிர்வாகத்தால் முடிவு செய்யப்பட்டு அதற்கான புனரமைப்பு பணிகள் நடந்தன.

    அந்த பணிகள் முடி வடைந்த நிலையில் முத்தை யாசாமி- அய்யனார் சாமி கோவில் கும்பாபிஷேகம் வருகிற 11-ந்தேதி (திங்கட்கி ழமை) நடைபெற உள்ளது. அன்று காலை 9 மணி முதல் 10.30 மணிக்குள் சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் ஓத கோபுர கலசத்திற்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடத்துகின்றனர்.

    இந்த விழாவில் டாக்டர் அய்யம்பெருமாள், ஜெய பிரகாஷ், மோகன், வடகரை செல்வராஜ் (பெரியபூசாரி), தொழில் அதிபர் குமார், மணிநகரம் ராஜாமணி, பங்காளிகள், கிராம கமிட்டியாளர்கள் மற்றும் பக்தர்கள் திரளாக கலந்து கொள்கிறார்கள்.

    கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கடந்த 2 நாட்க ளாக கோவிலில் சிறப்பு யாகசாலை பூஜைகள் நடந்து வருகின்றன.

    • 8-ம் கால யாகசாலை பூஜையில் பல்வேறு ஹோமங்கள் செய்யப்பட்டு பூரணாகுதி, மகா தீபாராதனை நடைபெற்றது.
    • யாகசாலையை தொடர்ந்து கடம் புறப்பாடு கோவிலை சுற்றி வலம் வந்து வேத மந்திரங்கள் முழங்க கும்பாபிஷேகம் நடைபெற்றது.

    தரங்கம்பாடி:

    தரங்கம்பாடி தாலுக்கா செம்பனார்கோயில் அடுத்த கருவாழக்கரை கிராமத்தில் பிரசித்திபெற்ற காமாட்சி அம்மன் கோவிலில் திருப்பணி வேலைகள் செய்யப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதனை முன்னிட்டு கடந்த 16-ம் தேதி அனுக்கை, விக்னேஷ்வர பூஜையுடன் பூர்வாங்க பூஜைகள் நடைபெற்று கடந்த 19-ம்தேதி முதல்கால யாகசாலை பூஜை தொடங்கியது. காமாட்சி அம்மனுக்கு பிரத்தியேகமாக 33 குண்டங்களும்பரிவார தெய்வங்களுக்கு 10 குண்ட ங்கள் என 43 குண்டங்களில் 124 சிவாச்சாரியார்கள் வேதமந்திரங்கள் முழங்க வேத ஆகமம் திருமுறைகள், இசை பாராயணம் செய்யப்பட்டு தினம்தோறும் 96 வகையான ஹோமப் பொருட்களால் யாகசாலை பூஜைகள் நடைபெற்றது.

    நிறைவாக 8-ம் கால யாகசாலை பூஜையில் பல்வேறு ஹோமங்கள் செய்யப்பட்டு பூரணாகுதி, மகா தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து யாகசாலையில் இருந்து கடம் புறப்பாடு கோவிலை சுற்றி வலம் வந்து விமானத்தில் உள்ள கலசத்திற்கு வந்தடைந்தது. இதனை தொடர்ந்து சிவஸ்ரீ சுவாமிநாதன் சிவாச்சா ரியார் தலைமையில் வேத விற்பனர்கள் மந்திரங்கள் ஓத கடத்தில் உள்ள புனித நீரை ஊற்றி கும்பாபிஷேகம் செய்தனர்.

    இதில் திருவாவடுதுறை ஆதீனம் 24-வது குருமகாசந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ அம்பலவாண தேசிக பரமாச்சாரிய சுவாமிகள், வேளாக்குறிச்சி ஆதீனம் 18 -வது குருமகாசந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ சத்திய ஞான மகாதேவ தேசிக பரமாச்சாரிய சுவாமிகள், தொண்டைமண்டல ஆதீனம் சன்னிதானம் திருச்சிற்றம்பல தேசிகர் ஞானப்பிரகாசர் பரமாசாரிய சுவாமிகள், சூரியனார்கோயில் ஆதீனம் 28-வது குருமகாசந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மகாலிங்க தேசிக பரமாச்சாரிய சுவாமிகள், செங்கோல் ஆதீனம் 103 -வது குருமகாசந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ சிவப்பிரகாச தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் முன்னிலையில் நடைபெற்ற கும்பாபிஷேக விழாவில் ஆயிரக்கனக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். இந்நிகழ்ச்சியில் ஒன்றிய குழு தலைவர் நந்தினி, துணைத் தலைவர் மைனர் பாஸ்கர், ஒன்றிய கவுன்சிலர் சக்கரபாணி, ஊராட்சி மன்றத் தலைவர் பழனி, உள்ளிட்ட ஏராமானவர்கள் கலந்து கொன்டனர்.

    • விக்னேஷ்வர பூஜையுடன் தொடங்கி நான்கு கால யாகசாலை பூஜைகள் முடிந்து மஹாபூர்ணாஹுதி மற்றும் மகா தீபாராதனை நடைபெற்றது.
    • புனித நீர் அடங்கிய கடங்கள் மங்கள வாத்தியங்கள் முழங்க ஊர்வலமாக எடுத்து சென்று கோபுர கலசங்களில் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடந்தது.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் அருகே புஷ்பவனம் ஸ்ரீபூர்ணாம்பிகா, ஸ்ரீபுஷ்களாம்பிகா சமேத காஞ்சியப்பர் சுவாமி கோவிலின் கும்பாபிஷேகம் நடந்தது.கும்பாபிஷேகத்தை ஒட்டி கடந்த 13-ந்தேதி விக்னேஷ்வர பூஜையுடன் பூர்வாங்க பூஜைகளும் மூன்று கால யாகசாலை பூஜைகளும் நடந்தது.

    கும்பாபிஷேகத்தன்று நான்காம் கால யாகசாலை பூஜைகள் முடிந்து மஹாபூர்ணாஹுதி மற்றும் மகா தீபாராதனைகளுக்குப் பின்னர் தகட்டூர்ஞானசேகர சிவம், சபரிநாத சிவாச்சாரரியார்கள் தலைமையிலான குழுவினர் பூஜீக்கப்பட்ட கடங்கள் மங்கள வாத்தியங்கள் முழங்க ஊர்வலமாக எடுத்துச் சென்று சுவாமி, அம்பாள், முருகன், சப்தகன்னியர் உப்பட பரிவார சன்னதி கோயில்களின் கோபுர கலசங்களில் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகமும் மூலஸ்தானத்தில் உள்ள சுவாமிக்கும் மகா அபிஷேகமும் நடந்தது.

    பூஜை மற்றும் விழாக்களில் பாடகர் புஷ்பவனம் குப்புசாமி, அனிதா, கோவில் திருப்பணி குருவினர்கள் மேரிகாந்த், அன்பழகன், சிவஞானம், செந்தில்குமார், திராவிடமணி உட்பட பிரமுகர்களும், உள்ளாட்சி பிரதிநிதிகள்,கிராம வாசிகளும் உபயதாரர்களும் கலந்து கொண்டனர். இரவு புஷ்பவனம் குப்புசாமி - அனிதா குழுவினாரின் நிகழ்ச்சி நடந்தது.

    ×