search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சண்முகையா"

    • சொக்கலிங்கபுரம் கிராமத்தில் உள்ள நூலகத்திற்கு சென்று சண்முகையா எம்.எல்.ஏ. ஆய்வு செய்தார்.
    • புதியதாக கட்டப்பட்டு வரும் அங்கன்வாடி மைய கட்டிடத்தையும் எம்.எல்.ஏ. ஆய்வு செய்தார்.

    ஓட்டப்பிடாரம்:

    ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதி சொக்கலிங்கபுரம் கிராமத்தில் புதியதாக கட்டப்பட்டு வரும் அங்கன்வாடி மைய கட்டிடத்தை சண்முகையா எம்.எல்.ஏ. கட்டிட பணிகள் தரமான முறையில் கட்டப்படுகிறதா என ஆய்வு செய்தார்.

    அப்போது கருங்குளம் ஜூனியர் ஆணையாளர் பாக்கியலீலா, யூனியன் கூடுதல் ஆணையாளர் செல்வி, யூனியன் உதவி பொறியாளர் பொறியாளர் சித்திரைசேகர், யூனியன் மேற்பார்வையாளர் சீனிவாசன், பஞ்சாயத்து தலைவர் ராமலட்சுமி உட்பட பலர் உடன் இருந்தனர்.

    இதனைத் தொடர்ந்து சொக்கலிங்கபுரம் கிராமத்தில் உள்ள நூலகத்திற்கு சென்று சண்முகையா எம்.எல்.ஏ. ஆய்வு செய்தார்.

    அப்போது நூலகத்தில் புத்தகம் இருப்பு குறித்து நூலகரிடம் கேட்டறிந்து கூடுதலாக இளைஞர்களுக்கு போட்டித்தேர்வுக்கான புத்தகங்கள் கிடைக்க வழிவகை செய்யப்படும் எனவும் சண்முகையா எம்.எல்.ஏ. தெரிவித்தார்.

    முன்னதாக ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதி கீழ பூவாணி, மேல பூவாணி ஆகிய கிராமத்திற்கு சென்று மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் பணி புரியும் பெண்களிடம் சண்முகையா எம்.எல்.ஏ. குறைகளை கேட்டறிந்தார்.

    ×