என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "மகாகும்பாபிஷேகம்"
- அரியலூர் ஆலந்துறையார் கோவிலில் மகாகும்பாபிஷேகம் நடைபெற்றது
- 37 ஆண்டுகளுக்கு பிறகு நடந்தது
அரியலூர்,
ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் அரியலூர் மிகப்பெரிய சமஸ்தானமாக இருந்து வந்தது.சோழர்கால பேரரசிற்கு பிறகு அரியலூர் ஜமீன்தார்கள் ஆட்சி செய்து வந்தனர். சுமார் 600ஆண்டுகளுக்கு முன்பு ஸ்ரீவிஜயஒப்பில்லாத மழவராயர் ஆட்சிக்காலத்தில் ஸ்ரீஅருந்தவநாயகி உடனுறை ஸ்ரீஆலந்துறையார் கோவில் கட்டப்பட்டது. 1808 ஆம் ஆண்டுக்கு பின்னர் 1986 ஆம் ஆண்டு கும்பாபிஷேகம் நடைபெற்றதை கோவில் கல்வெட்டுக்கள் மூலம் அறியமுடிந்தது.
தமிழக அரசின் இந்துசமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இக்கோவில் இருந்து வருகிறது. இந்துசமய அறநிலையத்துறை, ஓம்நமசிவாய திருப்பணிக்குழு, ஸ்ரீநரசிம்மா டிரஸ்ட் இணைந்து பொதுமக்கள் பங்களிப்போடு அஷ்டபந்தன மகாகும்பாபிஷேகம் இன்று நடைபெற்றது. கிராம சாந்தி, வாஸ்து சாந்தி, கணபதி ஹோமம், நவகிரக ஹோமம், தீப விளக்கு பூஜை, மகாலெட்சுமி ஹோமம், நான்கு கால பூஜைகளுடன் தீபாராதனை நடைபெற்றது. ராஜகோபுரம், சுவாமி, அம்பாள் மற்றும் அனைத்து விமான கலசத்திற்கும் புனிதநீரால் அபிஷேகம் செய்யப்பட்டடு மகாகும்பாபிஷேகம் நடைபெற்றது.
விழாவையொட்டி பக்தர்களுக்கு அன்னதானம், இனிப்பு பொங்கல், பிரசாதங்கள்,குடிநீர் வழங்கப்பட்டது. இதையடுத்து சுவாமிக்கு திருக்கல்யாண உற்சவ நிகழ்ச்சி நடைபெற்றது. கும்பாபிஷே விழாவில் அரியலூர் நகரம், சுற்றுவட்டார கிராம பொதுமக்கள், சிவதொண்டர்கள் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
- நல்லூர்பாளையம் ஊத்துகாட்டுமாரியம்மன்கோவிலில் மண்டல பூஜை நடந்தது.
- மண்டல பூஜையில்முன்னாள் அமைச்சர் எம்.சி.சம்பத் கலந்துகொண்டுசாமி தரிசனம்செய்து பக்தர்களுக்கு அருள்பிரசாதம் வழங்கினார்.
கடலூர்:
பண்ருட்டி, நல்லூர்பாளையத்தில் அமைந்துள்ளது ஊத்துகாட்டு மாரிஅம்மன்கோவில்.இங்குஏராளமானபொருள்செலவில்திருப்பணிசெய்யப்பட்டு மகாகும்பாபிஷேம்நடந்தது.இதனை முன்னிட்டு தினமும்மண்டல பூஜை நடந்து வருகிறது. நேற்று நடைபெற்ற மண்டல பூஜையில்முன்னாள் அமைச்சர் எம்.சி.சம்பத் கலந்துகொண்டுசாமி தரிசனம்செய்து பக்தர்களுக்கு அருள்பிரசாதம்வ ழங்கினார்.
நல்லூர் பாளையம் தங்கராசு, ஒன்றிய செயலாளர் என்.டி.கந்தன்,மண்டலபூஜை உபயதாரர் தொரப்பாடி பேரூராட்சி முன்னாள்துணை தலைவர் கனகராஜ் பஞ்சாயத்துதலைவர்சிவசந்திரன்,ஆகியோர்வரவேற்றனர்பண்ருட்டி நகர செயலாளர் தாடி முருகன்,பண்ருட்டி நகர துணை செயலாளர் மோகன் பண்ருட்டி (வ)ஒன்றிய செயலாளர்சி வாமற்றும்ஊர் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்